புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_m10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_m10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_m10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_m10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_m10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 
17 Posts - 4%
prajai
 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_m10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_m10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_m10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 
9 Posts - 2%
jairam
 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_m10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 
4 Posts - 1%
Jenila
 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_m10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 
4 Posts - 1%
Rutu
 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_m10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_m10 இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 8:24 am



விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை அவர் எச்சரித்துள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டிற்கு இடையே போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்ற கேமரூன், அங்குள்ள தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, வெள்ளிக்கிழமை அன்று இரவே அந்நாட்டு அதிபர் ராஜபட்சவை அவர் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்கு பின்னர் இலங்கைத் தலைநகர் கொழும்பில் கேமரூன் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமையன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு, போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவை குறித்த சுதந்திரமான மற்றும் நம்பத்தகுந்த விசாரணை உள்பட அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் நாங்கள் வெளிப்படையாகப் பேசினோம்.

விசாரணை நடத்த கெடு: அப்போது நான், அதிபர் ராஜபட்சவிடம், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து, மார்ச் மாதத்திற்குள் நம்பத்தகுந்த, பாரபட்சமற்ற மற்றும் சுதந்திரமான உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகக் கூறினேன்.

அப்படி நடைபெறவில்லை என்றால், இந்த விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தும்படி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை எங்கள் நாடு அணுகும் என்றும், அதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன் என்றும் அவரிடம் (ராஜபட்சவிடம்) தெரிவித்தேன். போரினால் வட மாகாணத்தில் இருந்து இடம் பெயர்ந்த தமிழர்களை அவர்களின் பகுதியில் மறுகுடியமர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தேன்.

கால அவகாசம் ஏன்?: போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தற்போதுதான் இலங்கை மீண்டு வருவதாகவும், எனவே சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு தங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் என்னிடம் அதிபர் ராஜபட்ச கேட்டுக் கொண்டார். நானும் அவரது நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டேன்.

போர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதியில் என்ன நடைபெற்றது என்பது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இல்லையெனில் சர்வதேச விசாரணைக்கு நான் வலியுறுத்த நேரிடும் என்று தெரிவித்தேன். வட அயர்லாந்தில் செயல்படும் தீவிரவாதிகளால் பிரிட்டன் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு இருப்பதையும், அங்கு பிரிட்டன் அரசு எவ்வாறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதையும் நான் அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

ராஜபட்ச ஏற்கவில்லை: பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் இருவரும் வெளிப்படையாக பேசினோம். ஆனால் என்னுடைய கருத்துகள் அனைத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தபோதிலும், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மறுசீரமைக்க கிடைத்த வாய்ப்பாக இதனை கருதும்படி நான் அவரிடம் தெரிவித்தேன்.

காமன்வெல்த் மாநாட்டிற்கு சில நாடுகளின் தலைவர்கள் (இந்தியா, கனடா, மோரிஷியஸ் பிரதமர்கள்) வராதது குறித்தும், நான் வந்ததும் குறித்தும் என்னிடம் நீங்கள் (பத்திரிக்கையாளர்கள்) கேட்கிறீர்கள். நான் இங்கு வந்ததால்தான், எனது கருத்துக்களை வலியுறுத்த முடிந்தது.

இலங்கையில் பத்திரிகைகளுக்கு முழு சுதந்திரம் தேவைப்படுகிறது. பத்திரிகைகளை சுதந்திரமாக செயல்பட இலங்கை அரசு அனுமதிக்கும் என்று நம்புகிறேன்.

வடக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனுடனான எனது சந்திப்பு நல்ல முறையில் அமைந்திருந்தது. இந்த சந்திப்பின்போது, வடக்கு மாகாண மக்களின் நலன்களுக்காக அவருடன் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறினேன். யாழ்ப்பாணத்திற்கு நான் சென்றதன் நோக்கம், உலகத்தின் ஆதரவை அப்பகுதி மக்களுக்கு தெரிவிப்பதே ஆகும்.

விடுதலைப் புலிகள்: பயங்கரமான மற்றும் அச்சமூட்டும் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாவதை யாரும் விரும்பவில்லை.

யாழ்ப்பாணத்தில் என்னை சந்தித்து குறைகளை தெரிவித்தவர்களுக்கு எதிராக பழிவாங்கும் செயலில் இலங்கை அரசு ஈடுபடாது என்று கருதுகிறேன். ஏனெனில் அடுத்து அவர்கள் (இலங்கை அரசு) என்ன செய்யப் போகிறார்கள் என்பதை உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார் கேமரூன்.

இலங்கை நிராகரிப்பு

பிரிட்டன் பிரதமர் கேமரூனின் வேண்டுகோளை இலங்கை அரசு உடனடியாக நிராகரித்து விட்டது. கேமரூனின் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த சில நிமிடங்களிலேயே இலங்கை அமைச்சர்கள் ஹிமல் ஸ்ரீபலா டி சில்வா, கெகலியெ ரம்புகவெல்லி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது:

காமன்வெல்த் அமைப்பு என்பது, சர்வதேச போலீஸ் அமைப்பு கிடையாது. விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனின் வலியுறுத்தலை நிராகரிக்கிறோம். எந்த நாடும் தங்களது முடிவை எங்கள் நாட்டின் மீது திணிக்க முடியாது.

எங்கள் நாட்டின் மீது படிந்திருந்த ஏகாதிபத்திய நிழலை (பிரிட்டனின் காலனியாதிக்கம்) முழுவதுமாக அகற்றி விட்டோம். மீண்டும் எங்கள் நாட்டின் மீது அந்த நிழலை படிய விட மாட்டோம். இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நிராகரிக்கிறோம். இதுகுறித்து எங்கள் நாடு ஏற்கெனவே விசாரணை நடத்தி முடித்து விட்டது. இதுதொடர்பாக சில குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்திருக்கிறது. வட அயர்லாந்து புனரமைப்பு பற்றி பேசத் தேவையில்லை. ஏனெனில், வட அயர்லாந்தை பிரிட்டன் ஏமாற்றி விட்டது என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

ராஜபட்ச நிராகரிப்பு


போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்ற பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனின் வலியுறுத்தலை இலங்கை அதிபர் ராஜபட்ச நிராகரித்து விட்டார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த அவர், இலங்கை அரசுக்கு தனது சொந்த விசாரணையின்மீது நம்பிக்கை இருப்பதாகவும், விசாரணையை நடத்தி முடிப்பதற்கு இலங்கைக்கு சிறிது கால அவகாசம் தரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் நிர்பந்தம் செய்வதால் எதுவும் நடைபெற்று விடாதென்றும், வலியுறுத்துவது அல்லது உத்தரவிடுவதை விட்டுவிட்டு, காத்திருப்பதுதான் சிறந்தது என்றும் ராஜபட்ச கூறினார். மேலும், கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு, ஒருவர் மற்றவர் மீது கற்களை வீசக் கூடாதென்றும் டேவிட் கேமரூனை ராஜபட்ச மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

இதேபோன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர்கள் ஹிமல் ஸ்ரீபால டி சில்வா, கெகலியெ ரம்புகவெல்லி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூனின் கருத்தை நிராகரித்தனர். எந்தவொரு நாடும் தங்களது முடிவை இலங்கையின் மீது திணிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக