புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
3 Posts - 5%
prajai
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
2 Posts - 4%
Rutu
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
1 Post - 2%
சிவா
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
1 Post - 2%
viyasan
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
2 Posts - 13%
Rutu
நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_m10நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:31 pm

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் DuCbdq56TleS8988PkDh+p78

தென்கயிலாயம் எனப்படும் பொதிகை மலையில், சிவபூஜையில் ஈடுபட்டிருந்தார் அகத்திய மாமுனி. இது சிவ கட்டளை. 'தெற்கில் இருந்துகொண்டு, சில காலம் தவத்தில் ஈடுபடு!’ என்பது சிவனாரின் உத்தரவு. அனுதினமும் சிவபூஜையில் திளைத்திருந்த அகத்தியருக்கு, ஒருநாள் அப்படியரு ஆசை எப்படித்தான் வந்ததோ..?!

'என் சிவனே... அடுத்த யுகம் குறித்தும், அந்த யுகத்தில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகளின் நிலை குறித்தும் அறிய விரும்புகிறேன். தாங்கள் உபதேசம் செய்து அருளுங்கள்’ என வேண்டினார் அகத்தியர். 'அவ்வளவுதானே... உன் சீடன் திருவூல முனிவர் அமர்ந்து தவம் செய்யும் தலத்துக்கு வா! அங்கே உபதேசம் நிகழும்’ என அருளினார் சிவனார்.

அதன்படி, திருவூல முனிவர் அமர்ந்து தவம் செய்யும் திருஉளம்பற்றி எனும் ஊருக்கு வந்தார் அகத்தியர். குருநாதரைக் கண்டதும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் திருவூல முனிவர். அதன் பின்பு, ஓங்கார சொரூபினியாக, சிவ உபதேசத்துக்காக வந்தருளினாள் உமையவள். அவளைக் கண்டதும், இருவரும் விழுந்து நமஸ்கரித்தார்கள்.

''உங்களுடன் எனக்கும் இங்கே உபதேசம் கிடைக்கப் போகிறது. அப்படி உபதேசம் மட்டும் கிடைத்துவிட்டால், இதோ... இங்கே இருந்தபடி அனைவருக்கும் கல்வியையும் ஞானத்தையும் வழங்கச் சித்தமாக உள்ளேன்'' என்று அருளினாள் தேவி.

அவளின் எண்ணப்படியே, சிவபெருமான் குருவாக இருந்து மனைவி உமையவளுக்கும், அகத்திய மாமுனிவருக்கும், திருவூல முனிவருக்கும், பின்னர் இன்னும் பல முனிவர் பெருமக்களுக் கும் உபதேசம் செய்து அருளியதோடு, அனைவருக்கும் ரிஷபாரூடராகக் காட்சி தந்து அருள்பாலித்தார். இத்தனை மகத்துவமான சம்பவங்கள் நிறைந்த திருஉளம்பற்றி கிராமம், திருநெல்வேலிக்கு அருகில் இருக்கிறது. அந்த ஊர் தென் திருவாரூர் என்றும், இடைகால் என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில், பஞ்ச குரு திருத்தலங்கள் எனப் போற்றப் படுபவை, மதுரைக்கு அருகில் உள்ள தென் திருப்புவனம், திருப்புடைமருதூர், அத்தாளநல்லூர், அரிகேசவநல்லூர் மற்றும் தென் திருவாரூர் எனப்படும் இடைகால் ஆகியவை. குருவாக இருந்து உபதேசம் செய்ததால், பஞ்ச குரு தலங்களில் ஒன்று எனப் போற்றப்படும் இடைகால் சிவாலயத்துக்கு வந்து எவர் வேண்டினாலும், அவர்கள் ஞானமும் யோகமும் அமையப் பெறுவார்கள் என்பது ஐதீகம்!

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ளது இடைகால் இங்கே அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்- ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி. அம்பாளின் திருநாமம்- ஸ்ரீசிவகாமி அம்பாள்.

சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் நேர்த்தியுடன் அமைக்கப்பட்ட ஆலயம் இது. நெல்லைச் சீமை என்பது பாண்டிய நாட்டுக்குள் இருக்கிற பகுதிதான் என்றாலும், இந்தப் பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட சிவாலயம் இது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:32 pm

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் 53R7JvkARTejEsfRDruM+p78a

ராஜராஜ சோழன், தில்லையம்பதியில் இருந்து திருமுறைப் பாடல்களின் ஓலைச்சுவடிகளை உலகுக்கு அளித்தான்; அதேபோல், அவனுடைய மைந்தன் ராஜேந்திர சோழனும் இங்கே, இந்தத் தியாகராஜ ஸ்வாமி கோயிலில் வேத விற்பன்னர்களை வரவழைத்து, சிறப்பு பூஜைகள் செய்து, தென்பாண்டி தேசத்தில் திருமுறைகளைப் பரப்பினான் என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு.

இத்தனைப் பெருமைகள் கொண்ட ஆலயம், இன்றைக்கு வழிபாடுகளும் பூஜைகளும் இல்லாமல், சர்வ அலங்காரங்களும் வீதியுலாக்களும் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது என்பதுதான் வேதனை. ஐப்பசி அன்னாபிஷேகமும், திருக்கார்த்திகை தீபமும், ஆனிப் பெருந்திருவிழாவும், மார்கழித் திருவாதிரையும் கோலாகலமாக நடைபெற்ற ஆலயத்தில், இன்றைக்கு ஒருகால பூஜை நடப்பதற்குக்கூட வழியோ வசதியோ இல்லை என்பதுதான் கொடுமை.

''தென் திருவாரூர்னு போற்றப்படுகிற இடைகால் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி கோயில், ஒருகாலத்தில் பிரசித்தி பெற்ற கோயிலா இருந்திருக்கு. இங்கே நடைபெறும் விழாக்கள்ல கலந்துக்கறதுக்காக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, முக்கூடல், கடையம், தென்காசின்னு பல ஊர்களிலேருந்தும் மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்திருக்காங்க. ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசனம் பண்ணிட்டு, சந்தோஷமாப் போயிருக்காங்க. அன்னாபி ஷேகத்தின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நடக்குமாம். அதேபோல, திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்னிக்கிக் கோயிலும் ஊருமாச் சேர்ந்து ஒளி வெள்ளத்துல மிதக்குமாம்.

ஆனா, கொஞ்சநாள் முன்பு வரைக்கும் ஸ்வாமிக்கு விளக்கேத்தக்கூட எண்ணெய் இல்லாத நிலை இருந்துச்சு. ஒருகால பூஜைகூட செய்யமுடியாம இருந்துது. அன்பர்களின் உதவியோடு, இப்ப ஒரு கால பூஜை நடக்குது; விளக்கேத்தவும் ஓரளவு எண்ணெய் கிடைக்குது. ஆனால், கோயில் திருப்பணிகள் முடிஞ்சு, சீக்கிரமே கும்பாபிஷேகம் நடந்து, கோயில் பழைய கலகலப்புக்குத் திரும்பணும்கறதுதான், இடைகால் மக்களோட நெடுங்காலத்துக் கனவு, ஆசை எல்லாமே!'' என்கிறார் கோயில் திருப்பணியில் ஈடுபட்டு வரும் ரவிச்சந்திரன்.

நெல்லைச் சீமையில் உள்ள தென் திருவாரூர் எனப்படும் கோயிலில், பழையபடி வீதிகளில் தேரோட வேண்டாமா? ஸ்ரீதியாகராஜ ஸ்வாமியும் ஸ்ரீசிவகாமி அம்பாளும் சர்வ அலங்காரத்துடன் இடைகால் கிராமத்தை வலம் வரவேண்டாமா? முக்கியமாக, கோயிலானது சீரமைக்கப்பட்டுப் பழைய பொலிவுக்கு வந்தால்தானே, அந்தக் காலம் போல இன்றைக்கும் பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து தரிசித்துச் செல்வார்கள்?

ஸ்ரீஅகத்தியருக்கு அருளிய தலத்தை அழகுபடுத்துவது நம் கடமை அல்லவா? திருமுறைகளை தென்பாண்டி நாட்டில் பரப்புவதற்கு அடித்தளமிட்ட ஆலயத்தில், வேத கோஷங்கள் மீண்டும் முழங்குவதற்கு நம்மால் முடிந்த உதவிகளை, திருப்பணிக்குச் செய்ய வேண்டாமா?

ஸ்ரீசிவகாமி அம்பாளுக்கு ஆனியில் எப்போதும்போல் விமரிசையாக விழா நடக்கவும், புதுப்புது வஸ்திரங்களும் நைவேத்தியங்களுமாக சந்நிதியே களை கட்டவும் வேண்டுமல்லவா? அதற்கு ஒவ்வொரு சிவனடியாரும் தன்னால் இயன்றதைச் செய்தால்தானே சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில் பொலிவு பெறும்; கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெறும்?!

இடைகால் ஈசனுக்கு, அவன் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு நம்மால் முடிந்ததைச் செய்து, திருப்பணியில் பங்கேற்போம். ஒரு குறைவும் இல்லாமல், அவன் அருளால் அவன் தாள் பணிந்து, நிம்மதியும் நிறைவுமாக வாழ்வோம்.

எங்கே இருக்கிறது?

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலுக்கு அருகில் உள்ளது இடைகால். திருநெல்வேலியில் இருந்து முக்கூடல் வழியாகச் செல்லும் பேருந்தில் பயணித்தால், சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது இடைகால் விலக்கு பேருந்து நிறுத்தம். திருநெல்வேலியில் இருந்து கடையம் வழியே பாபநாசம் செல்லும் பேருந்துகள், இடைகால் ஊருக்குள்ளேயே செல்லும்.

விகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 06, 2013 9:09 pm

விகடனுக்கும் சிவா அவர்களுக்கும் நன்றி ! மூட நம்பிக்கையையும் தமிழர் வரலாற்றையும் பிரித்தறியவேண்டும் என்று எனது பல புராண ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ளேன் ! அவ்வகையில் தியாகராஜரின் இந்தத் தலம் குறிப்பிடத்தக்கது !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 06, 2013 11:20 pm

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் 103459460 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 07, 2013 3:11 pm

பகிர்வுக்கு நன்றி.. அருமையான தகவல்கள்...



அன்புடன் அமிர்தா

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Aநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Mநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Iநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Rநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Tநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் Hநெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக