புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாண்டிய நாடு - திரைவிமர்சனம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் படமாக ‘ஆரம்பம்’ வெளியாக, இரண்டாவது படமாக வெளிவந்துள்ள படம் விஷாலின் தயாரிப்பில், சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாண்டிய நாடு’.
தொடர்ந்து வெற்றிப் படங்களாக தந்து தன்னை ஒரு முன்னணி இயக்குநராக அடையாளம் காட்டிக் கொண்ட இயக்குநர் சுசீந்திரன் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘ராஜபாட்டை’ படத்தில் மட்டும் சற்றே சறுக்கினார். இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு அண்மையில் வெளியான ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற படத்தில் தனது திறனை மீண்டும் நிரூபித்தார்.
இப்போது, மற்றொரு வித்தியாச படைப்பாக ‘பாண்டிய நாடு’ படத்தைத் தந்து மற்றுமொருமுறை தனது திறனை நிரூபித்துள்ளார் சுசீந்திரன்.
மதுரையைக் குறிக்கும் பெயர்தான் ‘பாண்டிய நாடு’. வழக்கமான குண்டர் கும்பல்களுக்கிடையிலான கதைதான் அடிப்படை என்றாலும், அந்த குண்டர் கும்பல் பிரச்சனையில் நியாயமான அரசு அதிகாரிகளும், ஒரு சாதாரண குடும்பமும் எப்படி சிக்கிக் கொண்டு அல்லல்படுகின்றார்கள் என்பதைப் படம் விரிவாக எடுத்துக் காட்டுகின்றது.
ஒரே வித்தியாசம் என்னவென்றால், படத்தின் கதாநாயகனான விஷாலுக்கு வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லை. கடைசி வரை சண்டைக்குப் பயப்படும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார். பதட்டப்படும் நேரத்தில் திக்குவாய் வந்துவிடுபவராக வரும் விஷால் அந்த காட்சிகளில் உண்மையிலேயே திக்குவாய்க்காரர் போல், அளவுக்கதிகமாக நடிக்காமல் கச்சிதமாக தனது நடிப்பை வழங்கியிருக்கின்றார்.
இறுதிவரை சண்டைக்குப் பயப்படும் விஷால் கடைசிக் காட்சியில் கூட வழக்கமான நாயகர்கள் போல பாய்ந்து விசுவரூபம் எடுக்காமல், தடுமாறித் தடுமாறி இயல்பாக எதிரிகளைக் கையில் கிடைத்ததை எடுத்து மட்டும் அடிக்கின்றார். இந்த துணிச்சலுக்காக இயக்குநரையும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த விஷாலையும் பாராட்டலாம்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாதான் படத்தின் மையம்! தனது மகனுக்கு நேர்ந்த கொடுமையை, அநியாயத்தைக் கண்டு கொதிக்கும் - ஆனால் எதுவும் செய்ய முடியாத தள்ளாத வயது தந்தையை நமது கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.
மகனை இழந்த சோகத்தையும், மகனைக் கொன்றவனைப் பழிவாங்க புறப்படும் தந்தையாகவும், தனது மற்றொரு பரிமாணத்தை காட்டியிருக்கின்றார்.
இதோ, இன்னொரு தந்தை கதாபாத்திரங்களுக்கான நடிகர் தயார்!
படத்தின் கதை
அண்மையில் மதுரை வட்டாரத்தில் கிரானைட் கல் உற்பத்தி ஆலையொன்றில் அனுமதிக்கு மீறி கிரானைட் கல் எடுக்கப்பட்டு அதனை ஒரு அரசு அதிகாரி அம்பலப்படுத்திய செய்தியை மையமாக வைத்து ‘பாண்டிய நாடு’ எடுக்கப்பட்டிருக்கின்றது.
இடையிடையே, தமிழகத்தின் முந்தைய ஆட்சியின்போது ஒரு அரசியல் தலைவரின் மகன் பற்றிய சர்ச்சைகளும் படத்தைப் பார்க்கும்போது நமக்கு வந்து போகின்றன.
மதுரையின் தாதா – அந்த நகரையே ஆட்டிப் படைக்கும் தலைவன் – காலமாகிவிட, அந்த இடத்திற்கு வர அந்த தாதாவின் இரண்டு கையாட்கள் போட்டியில் இறங்குகின்றார்கள். அந்தப் போட்டியில் பல தலைகள் உருளுகின்றன.
இரண்டு கையாட்களில் ஒருவனை மற்றொருவன் கொன்றுவிட்டு மதுரையின் நிழல் உலக ஆட்சியைக் கைப்பற்ற, அவனது கட்டளைகளை மீறும் அரசாங்க அதிகாரியான விஷாலின் அண்ணனை திட்டமிட்ட கார் விபத்தில் கொன்றுவிடுகின்றார்கள் வில்லன்கள்.
அதனைத் தெரிந்து கொள்ளும் தந்தை பாரதிராஜா செய்வதறியாமல் தவிக்கின்றார். பணத்தைத் திரட்டி, கூலிக்கு கொலை செய்யும் ஒருவனை வில்லனைக் கொல்ல அணுகுகின்றார்.
இன்னொரு பக்கம், அண்ணனுக்கு நேர்ந்த அநியாயத்தைத் தெரிந்து கொள்ளும் விஷால் அதே வில்லனைக் கொல்ல, நண்பன் சூரியுடன் சேர்ந்து திட்டங்கள் தீட்டுகின்றார்.
வில்லனைக் கொல்ல பாரதிராஜாவால் நியமிக்கப்படும் கூலிப் படையினர் தங்களின் முயற்சியில் சொதப்பிவிட, தன்னை கொலை செய்ய திட்டமிட்ட பாரதிராஜாவைக் கண்டுபிடித்துக் கொல்ல வில்லன் தனது கோஷ்டியை ஏவி விடுகின்றான்.
ஒரு கட்டத்தில் தனது தந்தையின் முயற்சி பற்றி தெரிந்து கொள்ளும் விஷால் அடுத்து என்ன செய்கின்றார், வில்லனை எப்படி எதிர்கொள்கின்றார் என்பதை ஒரு பரபரப்பான நாவலைப் போன்று விறுவிறுப்பாக சொல்லி, படத்தின் இரண்டாவது பகுதியைக் கொண்டு செல்கின்றார் சுசீந்திரன்.
படத்தின் சிறப்பம்சங்கள்
எதிர்நீச்சல் படத்தில் தனது மகளை ஓட்டப்பந்தய வீராங்கனையாக காண விரும்பும் அப்பாவித் தந்தையாக வந்த ஷரத் லோஹிட்டாஷ்வா என்ற புதுநடிகர், இந்தப் படத்தின் மைய வில்லனாக விசுவரூபமெடுத்து கலக்கியிருக்கின்றார்.
இனி தமிழ்ப்படங்களுக்கு புதிய வில்லன் முகம் ஒன்று கிடைத்தாகிவிட்டது.
தொய்வில்லாத திரைக்கதையும், இடைவேளைக்குப் பின்னர் கூடும் பரபரப்பும் மர்மமும் படத்தின் மற்ற சிறப்பம்சங்கள்.
படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் திணிக்கப்படாமல் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. சூரி நகைச்சுவைப் பகுதிக்காக சேர்க்கப்பட்டிருந்தாலும், தனியாக நகைச்சுவை என்ற பெயரில் எதுவும் செய்யாமல் படத்தின் கதையோட்டத்தோடு இணைந்து பயணித்திருக்கின்றார்.
பல இடங்களில் கதாபாத்திரங்களின் சாதாரண பேச்சுக்களே திரையரங்கில் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன. குறிப்பாக விஷாலின் அண்ணன் மகளாக வரும் அந்த பள்ளிச் சிறுமி பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றார்.
படத்தின் இன்னொரு பலம் பாரதிராஜா!
வயதான – ஆனால் தனது மகனுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு குமுறும் தந்தையாக – வில்லனைப் பழிவாங்குவதற்கு அலையும் தந்தையாக – சிறந்த நடிப்பை பாரதிராஜாவிடம் இருந்து கொண்டு வந்திருக்கின்றார் சுசீந்திரன். இறுதிக் காட்சியில் தனது இளைய மகன் விஷாலைப் பற்றித் தெரிந்து கொண்டு பெருமிதத்தை முகத்தில் தேக்கிக்காட்டுவது பாரதிராஜா நடிப்பின் உச்சம்!
கதாநாயகி இலட்சுமி மேனன் ஆசிரியை பாத்திரத்திற்கு பாந்தமாக பொருந்தியிருக்கின்றார். அவரது அதிர்ஷ்டம் அடுத்தடுத்து அவருக்கு வெற்றிப் படங்களாகவே அமைகின்றன.
ஓரிரு பாடல்களும் இசையும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. எல்லா பாடல்களையும் கவிப் பேரரசு வைரமுத்து மதுரை மணம் கமழ எழுதியிருக்கின்றார். ‘ஒத்தக் கடை’ பாட்டு இனி கொஞ்ச நாட்களுக்கு நேயர் விருப்பமாக வானொலி அலைவரிசைகளில் உலா வரும்.
படத்தின் குறைகள்
விஷாலின் கதாபாத்திரத்தில் வித்தியாசத்தைக் கொண்டு வந்து துணிச்சலைக் காட்டியிருக்கும் இயக்குநர், மற்ற காட்சிகளில் வாய்ப்பிருந்தும் வித்தியாசத்தைக் காட்ட முயற்சிக்காமல் பின்வாங்கியுள்ளார்.
குறிப்பாக, கதாநாயகியை வழக்கம்போல் வர்ணித்துப் பாடுவது, கும்பலோடு சேர்ந்து கதாநாயகன் பாடுவது, முக்கால் வாசிப் படத்தில் முக்கியமான திருப்பத்தைப் பரபரப்பாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் நேரத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் காதல் பாட்டு பாடுவது, என சில வழக்கத்தனமான சினிமாத்தனங்களை இயக்குநர் ஏனோ தவிர்க்க முயற்சிக்கவில்லை.
அவற்றையும் தவிர்த்திருந்தால் படம் இன்னும் தரமானதாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில், வித்தியாசமான விஷால், நடிப்பில் கலக்கும் பாரதிராஜா, பரபரப்பான, விறுவிறுப்பான திரைக்கதை, நேர்த்தியான இயக்கம் – இவற்றுக்காக கண்டிப்பாக பார்க்க வேண்டிய வெற்றிப் படைப்பு ‘பாண்டிய நாடு’.
-இரா.முத்தரசன்
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
போட்டி ஆரம்பம்
பாண்டிய நாடு - 'தி இந்து' விமர்சனம்
ஒத்தை ஆளாக ஐம்பதுபேரை அடிப்பது, மொத்தமுள்ள 60 காட்சிகளில் 30 காட்சிகளில் பஞ்ச் டயலாக் பேசுவது, கோதுமை நிற அழகிகள் தேடிவந்து காதலிப்பது போன்ற காட்சிகள் நிரம்பிய மசாலா படங்களுக்கு நடுவே நேர்த்தியான ஒரு வணிகப் படம் பாண்டிய நாடு.
அமைதியாக, எந்த வம்புக்கும் போகாமல் இருக்கும் நாயகன், யாரும் எதிர்பாராத தருணத்தில் பொங்கியெழுவார். சர்வ சக்தி வாய்ந்த வில்லனை அனாயாசமாகப் பந்தாடி, ரசிகர்களின் இயலாமைக்கு உளவியல் தீனிபோடுவார். இந்த மாதிரியான கதா பாத்திரங்கள் விஷாலுக்கு புதிதல்ல. ஆனால் பாண்டிய நாடு இந்த வழக்கமான கதையைப் போலித்தனம் இல்லாத உணர்ச்சிகள், மிகையற்ற சித்தரிப்பு என்று நம்பகமான விதத்தில் சொல்லியிருக்கிறது. நாயகனின் அப்பாவும் ஹீரோவின் பயணத்தில் இணைந்துகொள்வது புதுமை. அப்பாவுக்குத் தெரியாமல் நாயகனும், நாயகனுக்குத் தெரியாமல் அப்பாவும் வில்லனுக்கு விரிக்கும் வலையும், அதனால் நகரும் திரைக்கதையும் அதைவிடப் புதுமை.
மதுரையில் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற கல்யாணசுந்தரத்தின் (பாரதிராஜா) மூத்த மகன் கனிம வளத்துறை அதிகாரி. இளைய மகன் செல்போன் கடை வைத்திருக்கும் சிவகுமார் (விஷால்). சிவா சரியான பயந்தாங்கொள்ளி. அந்த ஊரின் அரசுப்பள்ளி ஆசிரியையான மலர் புடவையில் நடந்து போனால் கடமையில் தவறும் பல கண்களுக்கு மத்தியில், மலரை நெருங்கிக் காதல் சொல்வதில் மட்டும் தைரியம் காட்டுகிறார்.
இதற்கிடையில் 60 அடி கிரானைட் எடுக்க அனுமதி கொடுத்த இடத்தில் 300 அடி ஆழத்துக்கு அபகரித்துவிடுகிறார்கள். சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரி என்ற முறையில் தட்டிக் கேட்டு நடவடிக்கை எடுக்கும் விஷாலின் அண்ணனைச் சாலை விபத்துபோல பாவனை செய்து கொலை செய்துவிடுகிறார்கள். இந்தச் சதியை அறிந்து கொதிக்கும் அப்பா பழிவாங்கத் துடிக்கிறார். அப்பாவின் திட்டம் பற்றி எதுவும் அறியாத சிவாவும் அண்னனுக்காகப் பழிவாங்கக் களம் இறங்குகிறான்.
அப்பா வில்லன் கையில் சிக்கிக்கொள்ள, அப்பாவைக் காப்பாற்றி வில்லனை அழிக்க வேண்டிய நெருக்கடி சிவாவுக்கு. அதை எப்படிச் செய்கிறான் என்பதை சுவாரஸ்யமாகவும் நம்பும் விதத்திலும் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன். வழக்கமாக மாஸ் ஹீரோக்கள் பண்ணும் சூர சம்ஹார உத்திகள் எதுவும் இல்லாமல் புத்திசாலித்தனத்துடன் நாயகன் காய் நகர்த்துவதும் யூகிக்க முடியாத க்ளைமாக்ஸும் படத்தை யதார்த்தமான ஆக்ஷன் படமாக்கியிருக்கிறது.
மூக்கு வலிக்கும் அளவுக்கு மசாலா நெடி அடிக்கும் படங்களுக்கு மத்தியில் ரசிகர்களின் ரசனைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் மதிப்பளித்துப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். செல்லரித்த தமிழ் ஹீரோயிசத்தை இந்த மாதிரிப் படங்கள் வழியாகவே வழிக்குக் கொண்டுவர முடியும்.
சிவகுமார் கதாபாத்திரத்தில் விஷால் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். லட்சுமி மேனன் தோற்றமும் நடிப்பும் அழகு. ஆனால் குத்தாட்டம் அவருக்குப் பொருந்தவில்லை.
பாரதிராஜா தனது வழக்கமான வசன உச்சரிப்புக்களைத் துறந்துவிட்டு, கதாபாத்திரமாக மாறிப் பேசியிருப்பது ஆறுதல். மகனை இழந்த ஒரு நடுத்தட்டு அப்பாவுக்கான தவிப்புடன் அலைபாயும்போதும் கூலிக்கொலைகாரர்களைத் தேடும்போதும் நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார்.
இமான் மதுரை மணத்துடன் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையிலும் இயக்குநர் விருப்பத்துக்கேற்ப அடக்கி வாசித்து கதையின் போக்குக்கு உதவியிருக்கிறார்.
அதிரடி ஆக்ஷன் ஹீரோ என்ற பிம்பம் இருக்கிறது விஷாலுக்கு. போதிய ரசிகர்கள் பலமும் உண்டு. ஆனால் தனது ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நிஜமான உணர்ச்சிகளுக்கும், யதார்த்ததுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் துணிச்சலாக நடித்ததோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார். சினிமா இயக்குனரின் ஊடகம் என்று ஹீரோக்கள் முழுமையாக நம்பினால் மட்டுமே பாண்டிய நாடு போன்ற ஆக்ஷன் படங்கள் சாத்தியம்.
தி இந்து விமர்சனக் குழு தீர்ப்பு:
வழக்கமான கதையையும் புத்திசாலித்தனமும் நம்பகத்தன்மையும் கலந்த விறுவிறுப்பான படமாகத் தர முடியும் என்பதைக் காட்டும் பாண்டிய நாடு எல்லாத் தரப்பினரையும் கவரும்.
ஒத்தை ஆளாக ஐம்பதுபேரை அடிப்பது, மொத்தமுள்ள 60 காட்சிகளில் 30 காட்சிகளில் பஞ்ச் டயலாக் பேசுவது, கோதுமை நிற அழகிகள் தேடிவந்து காதலிப்பது போன்ற காட்சிகள் நிரம்பிய மசாலா படங்களுக்கு நடுவே நேர்த்தியான ஒரு வணிகப் படம் பாண்டிய நாடு.
அமைதியாக, எந்த வம்புக்கும் போகாமல் இருக்கும் நாயகன், யாரும் எதிர்பாராத தருணத்தில் பொங்கியெழுவார். சர்வ சக்தி வாய்ந்த வில்லனை அனாயாசமாகப் பந்தாடி, ரசிகர்களின் இயலாமைக்கு உளவியல் தீனிபோடுவார். இந்த மாதிரியான கதா பாத்திரங்கள் விஷாலுக்கு புதிதல்ல. ஆனால் பாண்டிய நாடு இந்த வழக்கமான கதையைப் போலித்தனம் இல்லாத உணர்ச்சிகள், மிகையற்ற சித்தரிப்பு என்று நம்பகமான விதத்தில் சொல்லியிருக்கிறது. நாயகனின் அப்பாவும் ஹீரோவின் பயணத்தில் இணைந்துகொள்வது புதுமை. அப்பாவுக்குத் தெரியாமல் நாயகனும், நாயகனுக்குத் தெரியாமல் அப்பாவும் வில்லனுக்கு விரிக்கும் வலையும், அதனால் நகரும் திரைக்கதையும் அதைவிடப் புதுமை.
மதுரையில் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற கல்யாணசுந்தரத்தின் (பாரதிராஜா) மூத்த மகன் கனிம வளத்துறை அதிகாரி. இளைய மகன் செல்போன் கடை வைத்திருக்கும் சிவகுமார் (விஷால்). சிவா சரியான பயந்தாங்கொள்ளி. அந்த ஊரின் அரசுப்பள்ளி ஆசிரியையான மலர் புடவையில் நடந்து போனால் கடமையில் தவறும் பல கண்களுக்கு மத்தியில், மலரை நெருங்கிக் காதல் சொல்வதில் மட்டும் தைரியம் காட்டுகிறார்.
இதற்கிடையில் 60 அடி கிரானைட் எடுக்க அனுமதி கொடுத்த இடத்தில் 300 அடி ஆழத்துக்கு அபகரித்துவிடுகிறார்கள். சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரி என்ற முறையில் தட்டிக் கேட்டு நடவடிக்கை எடுக்கும் விஷாலின் அண்ணனைச் சாலை விபத்துபோல பாவனை செய்து கொலை செய்துவிடுகிறார்கள். இந்தச் சதியை அறிந்து கொதிக்கும் அப்பா பழிவாங்கத் துடிக்கிறார். அப்பாவின் திட்டம் பற்றி எதுவும் அறியாத சிவாவும் அண்னனுக்காகப் பழிவாங்கக் களம் இறங்குகிறான்.
அப்பா வில்லன் கையில் சிக்கிக்கொள்ள, அப்பாவைக் காப்பாற்றி வில்லனை அழிக்க வேண்டிய நெருக்கடி சிவாவுக்கு. அதை எப்படிச் செய்கிறான் என்பதை சுவாரஸ்யமாகவும் நம்பும் விதத்திலும் சொல்லியிருக்கிறார் சுசீந்திரன். வழக்கமாக மாஸ் ஹீரோக்கள் பண்ணும் சூர சம்ஹார உத்திகள் எதுவும் இல்லாமல் புத்திசாலித்தனத்துடன் நாயகன் காய் நகர்த்துவதும் யூகிக்க முடியாத க்ளைமாக்ஸும் படத்தை யதார்த்தமான ஆக்ஷன் படமாக்கியிருக்கிறது.
மூக்கு வலிக்கும் அளவுக்கு மசாலா நெடி அடிக்கும் படங்களுக்கு மத்தியில் ரசிகர்களின் ரசனைக்கும் புத்திசாலித்தனத்துக்கும் மதிப்பளித்துப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். செல்லரித்த தமிழ் ஹீரோயிசத்தை இந்த மாதிரிப் படங்கள் வழியாகவே வழிக்குக் கொண்டுவர முடியும்.
சிவகுமார் கதாபாத்திரத்தில் விஷால் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். லட்சுமி மேனன் தோற்றமும் நடிப்பும் அழகு. ஆனால் குத்தாட்டம் அவருக்குப் பொருந்தவில்லை.
பாரதிராஜா தனது வழக்கமான வசன உச்சரிப்புக்களைத் துறந்துவிட்டு, கதாபாத்திரமாக மாறிப் பேசியிருப்பது ஆறுதல். மகனை இழந்த ஒரு நடுத்தட்டு அப்பாவுக்கான தவிப்புடன் அலைபாயும்போதும் கூலிக்கொலைகாரர்களைத் தேடும்போதும் நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார்.
இமான் மதுரை மணத்துடன் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையிலும் இயக்குநர் விருப்பத்துக்கேற்ப அடக்கி வாசித்து கதையின் போக்குக்கு உதவியிருக்கிறார்.
அதிரடி ஆக்ஷன் ஹீரோ என்ற பிம்பம் இருக்கிறது விஷாலுக்கு. போதிய ரசிகர்கள் பலமும் உண்டு. ஆனால் தனது ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நிஜமான உணர்ச்சிகளுக்கும், யதார்த்ததுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் துணிச்சலாக நடித்ததோடு தயாரிக்கவும் செய்திருக்கிறார். சினிமா இயக்குனரின் ஊடகம் என்று ஹீரோக்கள் முழுமையாக நம்பினால் மட்டுமே பாண்டிய நாடு போன்ற ஆக்ஷன் படங்கள் சாத்தியம்.
தி இந்து விமர்சனக் குழு தீர்ப்பு:
வழக்கமான கதையையும் புத்திசாலித்தனமும் நம்பகத்தன்மையும் கலந்த விறுவிறுப்பான படமாகத் தர முடியும் என்பதைக் காட்டும் பாண்டிய நாடு எல்லாத் தரப்பினரையும் கவரும்.
தினமலர் விமர்சனம்
மதுரை பின்னணியில் விஷால் நடித்த படங்கள் தோற்றதில்லை, ஆதலால் காதல் செய்வீர் வெற்றிக்குப்பின் உடனடியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், இயக்குநர் இமயம் பாரதிராஜா உணர்ச்சிபூர்வமான அப்பா கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தீபாவளி அன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் பாண்டிய நாடு.
அமைச்சர் (மத்திய அமைச்சரா...? மாநில அமைச்சரா...?) ஒருவர் பின்னணியில் இருக்க மதுரை நகரையே அல்லோல, கல்லோலப்படுத்தும் தாதா சிம்மக்கல் ரவி. மதுரையில் எந்த பிஸினஸை யார் செய்தாலும் இவருக்கு, லாபத்தில் 50 சதவிகிதத்தை கமிஷனாக கொடுத்து விட வேண்டும். 10 லட்சத்திற்கு மேல் பத்திரப்பதிவு நடந்தால் சிம்மக்கல் ரவிக்கு சில சதவிகிதங்கள் கமிஷனாக போயே தீர வேண்டும் என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் 150 பேருந்துகளுக்கும், சில பல கிரானைட் குவாரிகளுக்கும் இதுமாதிரி சம்பாதித்த பணத்தில் சொந்தக்காரராக இருக்கும் சிம்மக்கல் ரவி, அவ்வளவு சம்பாதித்த பின்பும் கொலை, கொள்ளை என தனது தாதா சாம்ராஜ்யத்தை விடுவதாக இல்லை.
இந்நிலையில் அரசு அனுமதித்த 80 மீட்டருக்கும் கீழாக 200-300 மீட்டர்கள் சிம்மக்கல் ரவியின் கிரானைட் குவாரியில் பள்ளங்கள் தோண்டி கற்கள் எடுக்கப்படுவதால் தினமும் நான்கு ஊழியர்கள் உயிர் இழக்கும் வேதனை தாங்க முடியாமல், அத்துறை அரசு அதிகாரியான விஷாலின் அண்ணனும் ஓய்வு பெற்ற மின் இலாகா ஊழியர் பாரதிராஜாவின் மூத்த மகனுமான சோமசுந்தரம் எனும் நாகராஜ், சிம்மக்கல் ரவியின் கல்குவாரிகளை மூட சொல்கிறார். இதில் கடுப்பாகும் ரவி, அவரை தனது பேருந்தால் விபத்து ஏற்படுத்தி போட்டுத்தள்ளி விட்டு, நான் தான் உன் மகனை கொன்றேன், உன்னால் முடிந்ததை பார் என மகனை இழந்து வாடும் பாசக்கார தந்தை பாரதிராஜாவிடம் சவுடாலும் விடுகிறார். இதை தூர இருந்து கவனிக்கும் அமைதியான சுபாவம் கொண்ட விஷால், வெகுண்டெழுகிறார். அண்ணனை கொன்றவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி களம் இறங்குகிறார்.
இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் பாரதிராஜாவும் தன் சேமிப்பு பணம், மூத்த பிள்ளையின் இறப்புக்குப்பின் அரசு தந்த பணம் என எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து 30 லட்சத்தில் ஒரு கூலிப்படையை ஏவி, மூத்தமகனை கொன்ற சிம்மக்கல் ரவியை தீர்த்துக்கட்ட நாள் குறிக்கிறார். இறுதியில் சிம்மக்கல் ரவியையும், அவனது ஆட்களையும் கொன்று குவித்தது விஷாலா? பாசக்கார பாரதிராஜா அனுப்பிய ஆட்களா? எனும் மீதிக்கதையுடன், பள்ளி ஆசிரியை பாப்பா எனும் லட்சுமி மேனனுடன், சிவக்குமார் எனும் விஷாலின் இளமை, இனிமை சொட்டும் காதலையும், கல்யாணத்தையும் கலந்துகட்டி பாண்டிய நாடு படத்திற்கு சுபம் போடுகிறார் இயக்குநர் சுசீந்திரன்!
விஷால், திக்குவாயாக மாறும் சிவக்குமாராக பின்னி பெடலெடுத்திருக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகளிலும், ஆடல், பாடல் காட்சிகளிலும் கூட அப்படியே! அண்ணன் பெண்ணிடம் அவர் காட்டும் செல்லமாகட்டும், அப்பா பாரதிராஜாவிடம் காட்டும் மரியாதையாகட்டும், அண்ணனிடம் காட்டும் அந்நியோனியமாகட்டும், காமெடி சூரியிடம் காட்டும் நட்பாகட்டும், லட்சுமி மேனனிடம் காட்டும் நெருக்கமாகட்டும் எல்லாவற்றிலும் நச் சென்று நடித்து, தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு கூடுதல் மதிப்பு சேர்த்திருக்கிறார் மனிதர். பலே, பலே!
டீச்சர் பாப்பா - லட்சுமி மேனன் தொழுநோயாளிகளிடம் காட்டும் இறக்கத்திலாகட்டும், மாணவர்களிடம் காட்டும் பாசத்திலாகட்டும், விஷாலிடம் தன் வீட்டு உரிமையாளரின் மகன் என்று தெரிந்து காட்டும் ஆரம்ப அன்பிலாகட்டும், அதன்பின் காட்டும் காதலில் ஆகட்டும் எல்லாவற்றிலும் தேர்ந்தெடுத்த நடிகையாக மிளிர்ந்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளில் தான் ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஆணாகவும் தெரியாமல், பெண்ணாகவும் தெரியாமல் ஒருமாதிரி தெரிகிறார். உடம்பையும், உணவையும் குறைக்கணும் அம்மணி!
பாசக்கார தந்தையாக பாரதிராஜா, நிச்சயம் படம்பார்க்கும் எல்லோரது அப்பாக்களையும் ஏறக்குறைய பிரதிபலித்து இருக்கிறார். ஏதோ சில அரசியலால் இந்த மனுஷருக்கு, இயக்கத்திற்காக இதுவரை கிடைக்காத தேசியவிருது இப்பாத்திரத்திற்காக கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!
விஷால், பாரதிராஜா மாதிரியே சோனுவாக வரும் விக்ராந்த், டவுட் - சூரி, சோமசுந்தரம் - நாகராஜ், வில்லன் சரத் எனும் சிம்மக்கல் ரவி, ஹரிஷ் - பரணி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!
கிரானைட் குவாரி, மதுரை அமைச்சர், தாதாயிஸம் என கரண்ட் மேட்டரை கையில் எடுத்து அதை கலர்புல் கமர்ஷியல் படமாக தந்திருக்கும் சுசீந்திரன் - சூப்பரிந்திரன்!
ஆகமொத்தத்தில், மதியின் மதிநுட்பமான ஒளிப்பதிவு, டி.இமானின் மிரட்டும் இசை, ஆண்டனியின் கோர்வையான அழகிய படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் சுசீந்திரனின் எழுத்து இயக்கத்தில், பாண்டிய நாடு - பலே நாடு என சொல்ல வைக்கின்றன!
மதுரை பின்னணியில் விஷால் நடித்த படங்கள் தோற்றதில்லை, ஆதலால் காதல் செய்வீர் வெற்றிக்குப்பின் உடனடியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், இயக்குநர் இமயம் பாரதிராஜா உணர்ச்சிபூர்வமான அப்பா கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தீபாவளி அன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் பாண்டிய நாடு.
அமைச்சர் (மத்திய அமைச்சரா...? மாநில அமைச்சரா...?) ஒருவர் பின்னணியில் இருக்க மதுரை நகரையே அல்லோல, கல்லோலப்படுத்தும் தாதா சிம்மக்கல் ரவி. மதுரையில் எந்த பிஸினஸை யார் செய்தாலும் இவருக்கு, லாபத்தில் 50 சதவிகிதத்தை கமிஷனாக கொடுத்து விட வேண்டும். 10 லட்சத்திற்கு மேல் பத்திரப்பதிவு நடந்தால் சிம்மக்கல் ரவிக்கு சில சதவிகிதங்கள் கமிஷனாக போயே தீர வேண்டும் என ஏகப்பட்ட பில்-டப்புகளுடன் 150 பேருந்துகளுக்கும், சில பல கிரானைட் குவாரிகளுக்கும் இதுமாதிரி சம்பாதித்த பணத்தில் சொந்தக்காரராக இருக்கும் சிம்மக்கல் ரவி, அவ்வளவு சம்பாதித்த பின்பும் கொலை, கொள்ளை என தனது தாதா சாம்ராஜ்யத்தை விடுவதாக இல்லை.
இந்நிலையில் அரசு அனுமதித்த 80 மீட்டருக்கும் கீழாக 200-300 மீட்டர்கள் சிம்மக்கல் ரவியின் கிரானைட் குவாரியில் பள்ளங்கள் தோண்டி கற்கள் எடுக்கப்படுவதால் தினமும் நான்கு ஊழியர்கள் உயிர் இழக்கும் வேதனை தாங்க முடியாமல், அத்துறை அரசு அதிகாரியான விஷாலின் அண்ணனும் ஓய்வு பெற்ற மின் இலாகா ஊழியர் பாரதிராஜாவின் மூத்த மகனுமான சோமசுந்தரம் எனும் நாகராஜ், சிம்மக்கல் ரவியின் கல்குவாரிகளை மூட சொல்கிறார். இதில் கடுப்பாகும் ரவி, அவரை தனது பேருந்தால் விபத்து ஏற்படுத்தி போட்டுத்தள்ளி விட்டு, நான் தான் உன் மகனை கொன்றேன், உன்னால் முடிந்ததை பார் என மகனை இழந்து வாடும் பாசக்கார தந்தை பாரதிராஜாவிடம் சவுடாலும் விடுகிறார். இதை தூர இருந்து கவனிக்கும் அமைதியான சுபாவம் கொண்ட விஷால், வெகுண்டெழுகிறார். அண்ணனை கொன்றவர்களை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி களம் இறங்குகிறார்.
இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் பாரதிராஜாவும் தன் சேமிப்பு பணம், மூத்த பிள்ளையின் இறப்புக்குப்பின் அரசு தந்த பணம் என எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து 30 லட்சத்தில் ஒரு கூலிப்படையை ஏவி, மூத்தமகனை கொன்ற சிம்மக்கல் ரவியை தீர்த்துக்கட்ட நாள் குறிக்கிறார். இறுதியில் சிம்மக்கல் ரவியையும், அவனது ஆட்களையும் கொன்று குவித்தது விஷாலா? பாசக்கார பாரதிராஜா அனுப்பிய ஆட்களா? எனும் மீதிக்கதையுடன், பள்ளி ஆசிரியை பாப்பா எனும் லட்சுமி மேனனுடன், சிவக்குமார் எனும் விஷாலின் இளமை, இனிமை சொட்டும் காதலையும், கல்யாணத்தையும் கலந்துகட்டி பாண்டிய நாடு படத்திற்கு சுபம் போடுகிறார் இயக்குநர் சுசீந்திரன்!
விஷால், திக்குவாயாக மாறும் சிவக்குமாராக பின்னி பெடலெடுத்திருக்கிறார். ஆக்ஷ்ன் காட்சிகளிலும், ஆடல், பாடல் காட்சிகளிலும் கூட அப்படியே! அண்ணன் பெண்ணிடம் அவர் காட்டும் செல்லமாகட்டும், அப்பா பாரதிராஜாவிடம் காட்டும் மரியாதையாகட்டும், அண்ணனிடம் காட்டும் அந்நியோனியமாகட்டும், காமெடி சூரியிடம் காட்டும் நட்பாகட்டும், லட்சுமி மேனனிடம் காட்டும் நெருக்கமாகட்டும் எல்லாவற்றிலும் நச் சென்று நடித்து, தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு கூடுதல் மதிப்பு சேர்த்திருக்கிறார் மனிதர். பலே, பலே!
டீச்சர் பாப்பா - லட்சுமி மேனன் தொழுநோயாளிகளிடம் காட்டும் இறக்கத்திலாகட்டும், மாணவர்களிடம் காட்டும் பாசத்திலாகட்டும், விஷாலிடம் தன் வீட்டு உரிமையாளரின் மகன் என்று தெரிந்து காட்டும் ஆரம்ப அன்பிலாகட்டும், அதன்பின் காட்டும் காதலில் ஆகட்டும் எல்லாவற்றிலும் தேர்ந்தெடுத்த நடிகையாக மிளிர்ந்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளில் தான் ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஆணாகவும் தெரியாமல், பெண்ணாகவும் தெரியாமல் ஒருமாதிரி தெரிகிறார். உடம்பையும், உணவையும் குறைக்கணும் அம்மணி!
பாசக்கார தந்தையாக பாரதிராஜா, நிச்சயம் படம்பார்க்கும் எல்லோரது அப்பாக்களையும் ஏறக்குறைய பிரதிபலித்து இருக்கிறார். ஏதோ சில அரசியலால் இந்த மனுஷருக்கு, இயக்கத்திற்காக இதுவரை கிடைக்காத தேசியவிருது இப்பாத்திரத்திற்காக கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!
விஷால், பாரதிராஜா மாதிரியே சோனுவாக வரும் விக்ராந்த், டவுட் - சூரி, சோமசுந்தரம் - நாகராஜ், வில்லன் சரத் எனும் சிம்மக்கல் ரவி, ஹரிஷ் - பரணி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!
கிரானைட் குவாரி, மதுரை அமைச்சர், தாதாயிஸம் என கரண்ட் மேட்டரை கையில் எடுத்து அதை கலர்புல் கமர்ஷியல் படமாக தந்திருக்கும் சுசீந்திரன் - சூப்பரிந்திரன்!
ஆகமொத்தத்தில், மதியின் மதிநுட்பமான ஒளிப்பதிவு, டி.இமானின் மிரட்டும் இசை, ஆண்டனியின் கோர்வையான அழகிய படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் சுசீந்திரனின் எழுத்து இயக்கத்தில், பாண்டிய நாடு - பலே நாடு என சொல்ல வைக்கின்றன!
சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
வழக்கம் போல வில்லன் ஒரு தாதா. ஹீரோவோட அண்ணன் ஒரு கல்குவாரி பிரச்னையில வில்லனுக்கு குறுக்கே வர்றார். தற்செயலா நடந்த விபத்து மாதிரி செட் பண்ணி வில்லன், ஹீரோவோட அண்ணனை போட்டுத்தள்ளிடறாங்க. ஹீரோ எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். ரொம்ப பயந்த சுபாவம். ஆல்ரெடி தன் நண்பன் ஒருத்தன் கூட சேர்ந்து மறைமுகமாக வில்லனை எதிர்க்கிறார். நண்பனையும் வில்லன் கொன்னுடறான். இப்போ ஹீரோ பழி வாங்கணும். ஆனா இவர் ஒரு சாதா ஆள். அதனால பிளான் பண்ணி வில்லனைப்போட்டுத்தள்ளமுயற்சிக்கிறார்.
ஹீரோவோடஅப்பா வீட்டுக்குத்தெரியாம ஒரு ரவுடியை செட் பண்ணி வில்லனை தீர்த்துக்கட்ட பிளான் போடறார். வில்லனுக்கு ஹீரோ அப்பாவை அடையாளம் தெரிஞ்சுடுது. இப்போ ஹீரோ தன் அப்பாவையும் காப்பாற்றி, வில்லனையும் போட்டுத்தள்ளணு. இதை எப்படி செஞ்சார் என்பதே மிச்ச மீதிக்கதை. இந்த ஆக்சன் பிளாக் எல்லாம் லேடீஸ்க்கு ஒத்து வராது என்பதால் ஓப்பனிங்க்ல ஹீரோ - ஹீரோயின் ரொமான்ஸ் காட்சிகள்.
ஹீரோவாக புரட்சித்தளபதி விஷால். இது அவருக்கு சொந்தப்படம், எஸ் தயாரிப்பாளரும் இவரே. எல்லா விஷால் படங்களையும் போலவே இதிலும் இவர் பயந்த சுபாவம் உள்ள, அப்பாவியான பக்கத்து வீட்டுப்பையன் போன்ற தோற்றம் உள்ள ஆள். பின்பாதியில் இவர் போடும் ஃபைட் காட்சிகள் பொறி பறக்குது. டாய், டூய் என கத்தல்கள் ஏதும் இல்லாமல், பஞ்ச் டயலாக்ஸ் ஏதும் பேசாமல் அடக்கி வாசித்திருக்கிறார்.
ஹீரோயின், லட்சுமிமேனன். ஹீரோவுடன் இவர் குறும்புப்பேச்சு பேசும் காட்சிகள் அழகு. பாடல் காட்சிகளில் இவர் காட்டும் செயற்கையான உற்சாகமும், பொருந்தாத குத்தாட்ட ஸ்டெப்பும் மைனஸ். ஆனால் இவர் தன் உடலை வெளிப்படுத்தாமல் அணியும் உடைகள், கேமரா கோணம் எப்படி வைத்தாலும் கண்ணியம் மாறாத தோற்றம் தரும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் அபாரம்.
பாரதிராஜா ஜீன்ஸில் கம்பீரமாக வருபவர் கதாபாத்திரத்தின் தன்மை கருதி இதில் சாதா நடுத்தர அப்பாவாக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனின் இறப்புக்கு கதறும் காட்சியில் அழுகை நடிப்பு அற்புதம்.
வில்லனாக வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன் மாதிரி இருக்கிறார். மிரட்டலான தோற்றம். விக்ராந்த் சில சீன்கள் வந்தாலும் நல்லா பண்ணி இருக்கார். புரோட்டா சூரி, ஹீரோவுக்கு நண்பனாக வந்து 6 காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
சி.பி.கமெண்ட் : பாண்டியநாடு - அண்ணனைக்கொன்ற ரவுடியைப்பழி வாங்கும் மாமூல் கதை. முன் பாதி சுமார், பின் பாதி ஸ்பீடு. பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் இருக்கு.
வழக்கம் போல வில்லன் ஒரு தாதா. ஹீரோவோட அண்ணன் ஒரு கல்குவாரி பிரச்னையில வில்லனுக்கு குறுக்கே வர்றார். தற்செயலா நடந்த விபத்து மாதிரி செட் பண்ணி வில்லன், ஹீரோவோட அண்ணனை போட்டுத்தள்ளிடறாங்க. ஹீரோ எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். ரொம்ப பயந்த சுபாவம். ஆல்ரெடி தன் நண்பன் ஒருத்தன் கூட சேர்ந்து மறைமுகமாக வில்லனை எதிர்க்கிறார். நண்பனையும் வில்லன் கொன்னுடறான். இப்போ ஹீரோ பழி வாங்கணும். ஆனா இவர் ஒரு சாதா ஆள். அதனால பிளான் பண்ணி வில்லனைப்போட்டுத்தள்ளமுயற்சிக்கிறார்.
ஹீரோவோடஅப்பா வீட்டுக்குத்தெரியாம ஒரு ரவுடியை செட் பண்ணி வில்லனை தீர்த்துக்கட்ட பிளான் போடறார். வில்லனுக்கு ஹீரோ அப்பாவை அடையாளம் தெரிஞ்சுடுது. இப்போ ஹீரோ தன் அப்பாவையும் காப்பாற்றி, வில்லனையும் போட்டுத்தள்ளணு. இதை எப்படி செஞ்சார் என்பதே மிச்ச மீதிக்கதை. இந்த ஆக்சன் பிளாக் எல்லாம் லேடீஸ்க்கு ஒத்து வராது என்பதால் ஓப்பனிங்க்ல ஹீரோ - ஹீரோயின் ரொமான்ஸ் காட்சிகள்.
ஹீரோவாக புரட்சித்தளபதி விஷால். இது அவருக்கு சொந்தப்படம், எஸ் தயாரிப்பாளரும் இவரே. எல்லா விஷால் படங்களையும் போலவே இதிலும் இவர் பயந்த சுபாவம் உள்ள, அப்பாவியான பக்கத்து வீட்டுப்பையன் போன்ற தோற்றம் உள்ள ஆள். பின்பாதியில் இவர் போடும் ஃபைட் காட்சிகள் பொறி பறக்குது. டாய், டூய் என கத்தல்கள் ஏதும் இல்லாமல், பஞ்ச் டயலாக்ஸ் ஏதும் பேசாமல் அடக்கி வாசித்திருக்கிறார்.
ஹீரோயின், லட்சுமிமேனன். ஹீரோவுடன் இவர் குறும்புப்பேச்சு பேசும் காட்சிகள் அழகு. பாடல் காட்சிகளில் இவர் காட்டும் செயற்கையான உற்சாகமும், பொருந்தாத குத்தாட்ட ஸ்டெப்பும் மைனஸ். ஆனால் இவர் தன் உடலை வெளிப்படுத்தாமல் அணியும் உடைகள், கேமரா கோணம் எப்படி வைத்தாலும் கண்ணியம் மாறாத தோற்றம் தரும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் அபாரம்.
பாரதிராஜா ஜீன்ஸில் கம்பீரமாக வருபவர் கதாபாத்திரத்தின் தன்மை கருதி இதில் சாதா நடுத்தர அப்பாவாக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனின் இறப்புக்கு கதறும் காட்சியில் அழுகை நடிப்பு அற்புதம்.
வில்லனாக வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன் மாதிரி இருக்கிறார். மிரட்டலான தோற்றம். விக்ராந்த் சில சீன்கள் வந்தாலும் நல்லா பண்ணி இருக்கார். புரோட்டா சூரி, ஹீரோவுக்கு நண்பனாக வந்து 6 காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
சி.பி.கமெண்ட் : பாண்டியநாடு - அண்ணனைக்கொன்ற ரவுடியைப்பழி வாங்கும் மாமூல் கதை. முன் பாதி சுமார், பின் பாதி ஸ்பீடு. பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் இருக்கு.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|