புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
68 Posts - 53%
heezulia
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
15 Posts - 3%
prajai
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
9 Posts - 2%
jairam
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_m10பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறாமையின் வெளிப்பாடா பொசசிவ்னஸ்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 2:16 am



‘பொறாமை என்பது கோழைகளின் கோபம்’ என்றார் ஓஷோ. ரத்த உறவுகளாகவே இருந்தாலும் பொறாமை இல்லாமல் இருக்காது. அதன் அளவு வேண்டுமானால் வேறுபடலாமே தவிர, பொறாமை அறவே இல்லை என்பதை ஏற்க முடியாது. அண்ணன் - தம்பிக்கி டையே... அக்கா - தங்கைக்கிடையே... நண்பர்களுக்கிடையே... மேலதிகாரிக்கும் ஊழியருக்கும் இடையே... இப்படி எல்லா இடங்களி லும், எல்லார் மனங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற உணர்வு பொறாமை. ரத்த பந்தங்களுக்கிடையிலேயே பொறாமை இருக்கும் என் கிற போது, சம்பந்தமே இல்லாத வேறு வேறு சூழலில் பிறந்து, வளர்ந்து, வாழ்க்கையில் இணைகிற இருவருக்கிடையே அது இருக்காதா என்ன?

‘பொறாமை’ என்று சொன்னால் கொஞ்சம் கடுமையாகத் தெரியலாம். ‘பொசசிவ்னஸ்’ என்கிற போது, அதன் கடுமை மாறிப் போ கும். காதலிக்கிற போதும், கல்யாணத்துக்குப் பிறகும் ஆணும் பெண்ணும் பல வழிகளில் பொசசிவ்னஸை வெளிப்படுத்துகிறார்கள். அது பொறாமையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. அதாவது, தன் துணையின் மீது அதீத ஆர்வம் காட்டுகிற துணைக்கு நிச்ச யம் அங்கே பொறாமை இருக்கும்.

நம்முடைய சமுதாயத்தில் பொறாமை கொள்ளக் காரணங்களுக்கா பஞ்சம்?

மனைவி தன்னைவிட நல்ல வேலையில் இருந்தாலோ, அதிகம் சம்பாதித்தாலோ, அழகாக இருந்தாலோ கணவருக்குத் தன்னையும் அறியாமல் பொறாமை தலைதூக்கும். அதன் வெளிப்பாடாக, மனைவி வேலைக்குப் போவதைத் தடுப்பார்கள். மனைவியுடன் வெளியே செல்வதை விரும்ப மாட்டார்கள். இப்படி இல்லாமல், சில நேரங்களில் பொறாமை தெளிவாகத் தெரியாமல், வெறும் கோபமாகவும் வெளிப்படலாம். தம்பதிக்கிடையே காரணங்களே இல்லாமல் பிரச்னைகள் வெடிக்கும். பொறாமைப்படுவோருக்கு மட் டுமே அது புரியும்.

அதை எதிர்கொள்வோருக்குக் காரணம் தெரியாது. இருவருக்கும் இடையில் அன்பு குறைந்து, வெறுப்பு அதிகரித்து, ஒருகட்டத்தில் உறவே ஆட்டம் காணவும் அந்தப் பொறாமை காரணமாகும். அரிதாக சில சந்தர்ப் பங்களில் அந்தப் பொறாமையின் விளைவாக, ஆத்திரம் உச்சத்துக்குப் போய், அடி, உதை என வன்முறையில் இறங்கவும்,அதையும் தாண்டி கொலை, தற்கொலை என அத்துமீறவும் கூடும்.

பொறாமை என்பது பல நேரங்களில் உண்மையாக இல்லாமல், அப்படி நினைப்பவரின் தனிப்பட்ட உணர்வாக இருக்கலாம். நம்மு டைய துணை, நம்மைத் தவிர வேறு யாராலும் ஈர்க்கப்படக் கூடாது என்கிற ஆழ்மன பயம் பதிந்து போயிருக்கும். யதார்த்தமோ அப்படி இருக்காது. திருமணத்துக்குப் பிறகும் ஆண்-பெண் இருவரின் நட்புகளும் உறவுகளும் தொடரத்தான் செய்யும். அதன் விளை வாக, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்கிற விதிமுறைகள் துணையின் மீது திணிக்கப்படும்.

அதாவது, துணையை அப்படிக் கட்டுப்படுத்தி, கைக்குள் வைத்திருக்கும் போதுதான் நமக்குள் ஒரு பாதுகாப்பான, நிம்மதியான உணர்வு ஏற்படும். ஆணோ, பெண்ணோ - யாருக்கும் நட்பென ஒன்று நிச்சயம் இருக்கும் என்பது இயல்பு. திருமணத்துக்குப் பிறகும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள ஒரு பக்குவம் வேண்டும். அதைத் தவிர்த்து, ‘எனக்குப் பிடிக்கலை... நீ உன் நட்பை விட்டு விலகி னாதான் என் மனசு நிம்மதியாகும்’ எனக் கட்டுப்படுத்த நினைப்பது முழுக்க முழுக்க பொறாமையின் வெளிப்பாடு மட்டுமே.

பொறாமை யின் காரணமாக துணையைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், அதை ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்வதுதான் இதிலி ருந்து மீள முதல் வழி. பொறாமை என்கிற உணர்வு உண்டாக, நமது எண்ணமும் நம்பிக்கையும்தான் அடிப்படை. அதை மாற்றிக் கொண்டாலே பொறாமை காணாமல் போய் விடும். உதாரணத்துக்கு, ‘என் மனைவி வேலைக்குப் போறா... நிறைய சம்பாதிக்கிறா... அதனால அவளுக்குத் திமிரு’ என்கிற எண்ணம் பல ஆண்களுக்கு இருக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அவர்களது மனைவிகளுக்கு உண்மையிலேயே அப்படி எந்தத் திமிரும் இருக்காது. கணவர்களின் கற்பனையாக மட்டுமே இருக்கும்! சில பெண்களுக்கு தனது அழகிலும் ஆளுமையிலும் தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். அது காலம் காலமாக சிந்தனையில் உறைந்து போனதன் விளைவாக, திருமணத்துக்குப் பிறகு, தனது கணவர், இன்னொரு பெண்ணிடம் லேசாக சிரித்துப் பேசினாலே, பொறாமை எட்டிப் பார்க்கும்.

‘நான் அவளை மாதிரி அழகில்லை. எனக்கு அவளைப் போல பர்சனாலிட்டி இல்லை...’ என வார்த்தைகளில் விஷம் கக்கி, பைசா பெறாத விஷயத்தைப் பெரிதாக்கி, பிரச்னையை உண்டு பண்ணுவார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, சந்தேகமாக உருவெ டுத்து, ஒரு கட்டத்தில் பிரிவுக்குப் பாதை காட்டலாம். அதற்காக எல்லா பொறாமைகளையும் சந்தேகங்களையும் அர்த்தமற்றவை என ஒதுக்கவும் முடியாது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 2:17 am


உங்கள் துணை, உங்கள் மீது பொறாமை கொள்கிறாரா?

அதன் பின்னணி என்ன என ஆராயுங்கள். துணையின் பொறாமையில் நியாயம் இருப்பது தெரிந்தால், உங்களை சரி செய்து கொள்ளப் பாருங்கள். அர்த்தமற்ற காரணங்களால் உண்டாகும் பொறாமையை எப்படிக் கையாளலாம்?

ஒரு உதாரணத்துடன் பார்ப்போமா?

உலக அழகி ஐஸ்வர்யா ராயை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா? திருமணத்துக்கு முன், ஐஸ்வர்யாவை அவரது அழகுக் காகவும் ஆளுமைக்காகவும் ரசித்த மக்கள், திருமணத்துக்குப் பிறகும் அப்படியேதான் ரசிக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங் கள்... திருமணத்துக்குப் பிறகு என் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என ஐஸ்வர்யாவை, அபிஷேக் வெளியே விடாமல் வீட்டுக்குள் சிறை வைத்திருந்தால், அந்த இருவருக்கும் இடையிலான காதல் காணாமல் போயிருக்காதா? அவர்களது உறவு அர்த்தமற் றதாகி இருக்காதா? அபிஷேக் அப்படிச் செய்யாமல், ஐஸ்வர்யா தனது மனைவியாக அமைந்ததைப் பாராட்டுதலோடும் பெருமையோ டும் ஏற்றுக்கொண்டதுதான் அவர்களது அன்யோன்யத்தின் அடிப்படை.

உலகமே கொண்டாடும் ஒரு உன்னத மனுஷி, தனது மனைவி என்பதில் அவருக்கு அளவுகடந்த கர்வம் கூட இருக்கக்கூடும். அதே அணுகுமுறைதான் நமக்கெல்லாமும் அவசியப்படுகிறது. காதலிக்கிற போது எந்த அழகுக்காக ஒரு பெண்ணிடம் நீங்கள் மயங்கினீர் களோ, எதற்காக போராடி அவரைக் கல்யாணம் செய்தீர்களோ, அந்த அழகை, கல்யாணத்துக்குப் பிறகும் கொண்டாடப் பழகுங்கள். கல்யாணத்துக்கு முன் உங்கள் மனைவியை நீங்கள் ரசித்தது போல, கல்யாணத்துக்குப் பிறகு மற்றவர்களின் பார்வையும் அவரை அப் படித்தான் ரசிக்கும்.

அதற்காக உங்கள் மனைவியை சந்தேகப்படுவதோ, அவர் மீது பொறாமை கொள்வதோ எந்த வகையில் நியாயம்? பெண்களுக்கும் இதே அட்வைஸ்தான். காதலிக்கிற போதோ, திருமணத்துக்கு முன்போ உங்கள் துணையின் நகைச்சுவை உணர்வையும் எல்லோரிட மும் கலகலப்பாகப் பேசிப் பழகும் குணத்தையும் ரசித்திருப்பீர்கள். திருமணத்துக்குப் பிறகு அவர் அப்படி இருப்பதை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் போவது ஏன்? தன் துணை தன்னைவிட்டு விலகி விட்டால்? இந்தப் பயம்தான் இருவரின் பொறாமை உணர்விலும் மறைந்திருக்கிற காரணம்.

பயத்தை முதலில் தூக்கி எறியுங்கள்.பொறாமையை பாராட்டாக மாற்றப் பழகுங்கள்.பொறாமையைத் தவிர்த்து விருப்பமாக பார்க்கப் பழகுங்கள். உங்களுக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையை நன்றியுடன் நோக்க முயற்சி செய்யுங்கள்!

நம் ஒவ்வொருவருக்கும் நமது பெற்றோர், சுற்றம், உறவுகள் என நாம் வளர்கிற சூழல் சில பயிற்றுவிப்புகளைத் தருகிறது. உதாரணத் துக்கு அமெரிக்காவில் பிறந்து வளர்கிற குழந்தைக்கு விவாகரத்து என்பது சர்வசாதாரணமான நிகழ்வாகத் தோன்றலாம். நம்முடைய சூழலில் அதைப் பற்றிய பார்வையே வேறு. இந்தப் பயிற்றுவிப்புகள் நமக்கு சில நம்பிக்கைகளை உருவாக்குகின்றன. சிறியதாகவோ, பெரியதாகவே பல நம்பிக்கைகளுடன் வாழ்கிறோம்.

அவற்றில் பெரும்பாலானவை நிரூபிக்கப்படாதவையாகவும் இருக்கலாம். அந்த நம்பிக்கைகள் நமக்கொரு மனப்போக்கை ஏற்படுத்தும். பெண்கள் என்றால் அடக்க, ஒடுக்கமாகத்தான் இருக்க வேண்டும் என சில ஆண்கள் நினைப்பதுகூட அத்தகைய மனப்போக்கின் அடிப்படை யில்தான். அந்த மனப்போக்கானது உணர்வுகளை உருவாக்கும். உணர்வுகள் நமது நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும். நட வடிக்கைகள்தான் நமது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் விளைவுகளுக்குக் காரணம்.

பயிற்றுவிப்பில் தொடங்கி, நடவடிக்கைகள் வரை எல்லாமே பாசிட்டிவாக இருந்துவிட்டால், உறவுகளுக்கிடையில் பிரச்னைகள் முளைக்கவே வாய்ப்பில்லை. பயிற்றுவிப்பை மாற்றுவதென்பது அத்தனை எளிதல்ல. ஆனாலும், அதன் மூலம் உருவாகக்கூடிய நம் பிக்கைகளை நாம் மனது வைத்தால் மாற்றிக் கொள்ளலாம்.

பாசிட்டிவான நம்பிக்கை, பாசிட்டிவான மனப்போக்கைத் தரும். பாசிட்டிவான மனப்போக்கு, நல்ல உணர்வுகளை உண்டாக்கும். உணர்வுகள் அழகானால், நடவடிக்கைகளில் நாகரீகம் வரும். அது நல்ல விளைவுகளுக்கும் வழி காட்டும். பொறாமைக்குக் காரண மாக கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பேசிய அத்தனையிலிருந்தும் விடுபடவும் இதுவே தீர்வு!

மனஸ்வினி @ குங்குமம்தோழி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 23, 2013 10:37 am

நல்ல உதாரணங்களுடன் கூடிய தகவல் 
நன்றி புன்னகை



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 4:12 pm

காதலிக்கிற போது எந்த அழகுக்காக ஒரு பெண்ணிடம் நீங்கள் மயங்கினீர் களோ, எதற்காக போராடி அவரைக் கல்யாணம் செய்தீர்களோ, அந்த அழகை, கல்யாணத்துக்குப் பிறகும் கொண்டாடப் பழகுங்கள். கல்யாணத்துக்கு முன் உங்கள் மனைவியை நீங்கள் ரசித்தது போல, கல்யாணத்துக்குப் பிறகு மற்றவர்களின் பார்வையும் அவரை அப் படித்தான் ரசிக்கும். அதற்காக உங்கள் மனைவியை சந்தேகப்படுவதோ, அவர் மீது பொறாமை கொள்வதோ எந்த வகையில் நியாயம்? wrote:
அதானே!

மிக மிக அற்புதமான வரிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக