புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
31 Posts - 36%
prajai
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
3 Posts - 3%
Jenila
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
2 Posts - 2%
jairam
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
7 Posts - 5%
prajai
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
6 Posts - 4%
Jenila
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
4 Posts - 3%
Rutu
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_m10குழந்தைகளுக்காகப் பேசுவோம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்காகப் பேசுவோம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 10, 2013 3:48 pm

இந்த உலகம் நமது குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதா? நமது குழந்தைகள் நமது குடும்பங்களில், பள்ளிகளில், சமூகத்தின் பல மட்டங்களில் பாதுகாப்புடன் இருப்பதாகவே நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கை நியாயமானது. நமது குழந்தைகள் அவர்களுக்குத் தீங்கிழைக்கும் சக்திகளிடமிருந்து பாதுகாப்பாகவே உள்ளனர் என்பது பலரின் நம்பிக்கை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயம்பத்தூரில் உள்ள குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர்களின் சங்கம், குழந்தைகளுக்குத் தீங்கிழைத்தலைத் தடுக்கும் ஒரு விழிப்புணர்வை அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்த முடிவுசெய்து களமிறங்கியது. சில வழக்குரைஞர்கள் இந்த நிகழ்வில் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அந்த சமயம் பள்ளி அரசுத் தேர்வு அறிவிப்பு வெளியாகியிருந்ததால் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே அந்த விழிப்புணர்வில் பங்கேற்றனர். பதினோரு வயதிலிருந்து பதின்மூன்று வயது வரை இருந்த மாணவர்கள் மத்தியில் பாலியல் தீங்கிழைத்தல் குறித்து உரையாடும் சூழலில் தயங்கியபடியே "குழந்தைகளுக்குத் தீங்கிழைத்தல் என்றால் என்ன?" என்ற கேள்வியைக் கேட்டோம். மாணவர்கள் பெரும்பாலும் "குழந்தைகளைக் கெடுப்பது" எனப் பதிலளித்தனர். அடுத்த கேள்வியாக "குழந்தைகளை யார் கெடுப்பார்கள்?" என்றபோது அவர்கள் "தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், திருடர்கள், கொள்ளைக்காரர்கள்" என்றே பதிலளித்தனர். வெவ்வேறு மாறுபட்ட சுழல்,வேறுபட்ட பகுதிகளில் இருந்த பள்ளிகளிலும் இந்த பதிலே பரவலாக வந்தது. குழந்தைகளின் மனநிலை சமூகத்தின் பொதுப்புத்தி மனநிலைதான். நாமும் இதைத்தான் நம்புகிறோம். குழந்தைகளுக்குத் தீங்கிழைக்கக்கூடியவர்கள் குற்றப் பின்புலம் உள்ள வெளி நபர்கள் என்றும் தீங்கிழைக்கப்படும் குழந்தைகள் பெண் குழந்தைகள் மட்டும் என்பதும் நமது நம்பிக்கை. உண்மையில் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்களால் நிகழ்த்தப்படுகின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடும் அந்த மனிதர்கள் குழந்தைகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும் உள்ளார்கள். குழந்தைகளின் குடும்ப உறவினர்கள், குடும்ப நண்பர்கள் என அவர்கள் நம்பும் ‘நல்ல’மனிதர்களாலும்கூட பாலியல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆண், பெண் இரு குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த 2007-ல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம், 12,500 குழந்தைகளை 13 மாநிலங்களில் சந்தித்து அவர்களுக்கு நிகழும் பாலியல் பாதிப்புகள் குறித்துக் கேட்டது. அதில் பாதிக்கப்பட்ட முக்கால்வாசிக் குழந்தைகள் தங்களின் பாதிப்பை வெளியே சொல்லவில்லை என்றும் வெறும் 3% குழந்தைகள் பாதிப்பைப் பெற்றோர் மற்றும் காவல்துறைக்குத் தெரிவித்ததாகவும் கூறினர். பாதிக்கப்பட்டதில் 31% குழந்தைகள் தங்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களால் பாதிப்படைந்ததாகக் கூறியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இந்தக் கொடுமைக்கு எதிராக குரல்கொடுக்காத அமைதியினால்தான் இந்தப் பாதிப்பு எழுவதாக மத்திய அமைச்சர் ரேணுகா செளத்ரி குறிப்பிட்டார்.

உலகில் அதிக குழந்தைகள் உள்ள நாடாக மட்டுமின்றி, குழந்தைகள் அதிக அளவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் நாடும் நம் நாடே. குழந்தைகளுக்கான தேசியச் செயல்திட்டம் 2005 ஒவ்வொரு 155 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாவதாகக் கூறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசியக் குற்றப்பதிவுத் துறையின் கணக்கின்படி 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக 48,338 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இதில் தமிழகத்தின் பங்கு 1,486 என்றும் சொல்கிறது. இரண்டில் ஒரு குழந்தை ஏதேனும் ஒரு வகையில் பாலியல் வன்முறையைத் தனது குழந்தைப் பருவத்தில் எதிர்கொள்கிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் மூவரில் ஒருவர் குழந்தை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். பல சமயம் இந்த வன்முறை, வழக்காகப் பதிவாவதில்லை என்பதால், இந்த எண்ணிக்கை இன்னமும் கூடுதலாக இருக்கக்கூடும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மனித உரிமை ஆணையமும், மத்தியக் காட்சி ஊடகத் துறையான பிரச்சார் பாரதியும், ஐ.நா. குழந்தைகள் நிதியமான யுனிசெஃப்புடன் இணைந்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான பயிலரங்கை நடத்தியது. அதில் நாடு முழுவதுமிருந்து 20 பெண்களும் 22 ஆண்களும் பங்கேற்றனர். இவர்கள் காவல் துறை, நீதித் துறை, ஊடகம் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த, முக்கியமான நபர்கள். குழந்தைகளின் மீது நிகழும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள்பற்றி இவர்களுக்கு விளக்கப்பட்டது. இறுதியில் பங்கேற்பாளர்களிடம் அவர்களின் சிறு வயதில் இதுபோல ஏதேனும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலை அவர்கள் எதிர்கொண்டிருக்கின்றார்களா என்று கேட்கப்பட்டது. வந்திருந்த 42 பங்கேற்பாளர்களில் 32 பேர் சிறு வயதில் இதுபோன்ற ஒரு கசப்பான நிகழ்வை எதிர்கொண்டிருப்பதாகக் கூறினர். அவர்களின் உள்ளத்தில் ஆறாத வடுவாக உறுத்தும் பாதிப்பாகவே அது இருந்துவந்திருக்கிறது.

பாலியல் தீங்கினை எதிர்கொண்ட அனைவருக்கும், உரிய உளவியல் ஆலோசனை, சிகிச்சை போன்றவை இல்லாதபோது, அவர்களின் வாழ்நாள் முழுவதும் அந்தப் பாதிப்பு ஒரு முள்ளைப் போலத் தைத்துக்கொண்டே இருக்கும். இது சமூகத்தில் எங்கும் பரவியுள்ள தீமை. நமது சமூகத்தின் ஒழுக்கம் சார்ந்த கற்பிதங்கள் மற்றும் ஆன்மிகம், பழமையான சமூகக் கட்டமைப்புகள் இதை வெளிப்படையாகவும் ஆரோக்கியமான முறையிலும் விவாதிக்கத் தடையாகின்றன. ஆனால், குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை பெரும் பிரச்சினையாக மாறிவரும் சூழலில், இதுகுறித்த எச்சரிக்கை உணர்வைக் குழந்தைகளிடம் ஏற்படுத்தியாக வேண்டும். அவர்கள் உடலை, உடல்நலம் சார்ந்த காரணங்கள் தவிர, மற்ற காரணங்களுக்காக, பெற்றோரும் மருத்துவரும்கூட தொடக் கூடாத இடங்களில் தொடக் கூடாது என்பதைக் கூற வேண்டியுள்ளது. அப்படி யாரேனும் தொட முற்படும்போது ‘தொடக் கூடாது’என்று சொல்லக் கூடிய துணிவையும் அந்தச் சூழலிலிருந்து ஓடிவந்துவிடக் கூடிய தைரியத்தையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதுடன், பிறரை உதவிக்கு அழைப்பதையோ அல்லது அதுபற்றி தங்களின் நம்பிக்கைக்கு உரிய பெரியவர்களிடம் சொல்வதையோ குழந்தைகளுக்குப் பழக்கவும் வேண்டும். குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை வெளிப்படுத்த முற்படும்போது, பல சமயம் பெரியவர்கள் தங்களின் வேலைப்பளு மற்றும் அலட்சியத்தால் அவர்களை உதாசீனப்படுத்தி அவர்களை மெளனமாக்கிவிடுகிறோம். குழந்தைகள் பாதிப்படைவதைப் பெரியவர்கள் அறியும்போது, குழந்தைகளுக்குப் பாதுகாப்பும் நம்பிக்கையும் வழங்குவதற்குப் பதிலாக, குழந்தைகளைக் கோபப்படவோ அல்லது குற்றம்சாட்டவோ கூடாது. நமது நடவடிக்கைகள் குழந்தைகளைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.

நாம் நம்புகின்ற அளவு குழந்தைகளுக்கு நமது சமூகம் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்த்துபவைதான் அன்றாடம் நாம் கேள்விப்படும், குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை குறித்த செய்திகள். இதுகுறித்து ஆரோக்கியமான விவாதத்தைத் துவங்க வேண்டும். அந்த ஆரோக்கியமான, அறிவியல்பூர்வமான சில விவாதங்கள் குழந்தைகளுக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துவதோடு குற்றவாளிகளுக்குத் தயக்கத்தையும் ஏற்படுத்தும்.

பள்ளிகள் ,குடும்பங்கள் என எங்கும் இதுநாள் வரை குழந்தைகளிடம் பேசக் கூடாத செய்திகள் என்று கருதி நம் மீது திணிக்கப்பட்ட மெளனத்தை நாம் உடைக்க வேண்டிய தருணம் இது.

ச. பாலமுருகன், எழுத்தாளர், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்!



குழந்தைகளுக்காகப் பேசுவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82018
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 10, 2013 4:03 pm

குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு
நம்மை சேர்ந்தது என்று ஒவ்வொரு பெற்றோரும்,
மற்றோரும் உணர வேண்டும்.
அந்த பொறுப்புடன் நடந்து நல்லவைகளை
கற்பிக்க வேண்டும்.
--

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 10, 2013 4:05 pm

குழந்தைகளுக்காகப் பேசுவோம் 103459460  சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Oct 10, 2013 10:24 pm

குழந்தைகளுக்காகப் பேசுவோம் 3838410834 குழந்தைகளுக்காகப் பேசுவோம் 103459460 குழந்தைகளுக்காகப் பேசுவோம் 1571444738 



குழந்தைகளுக்காகப் பேசுவோம் 224747944

குழந்தைகளுக்காகப் பேசுவோம் Rகுழந்தைகளுக்காகப் பேசுவோம் Aகுழந்தைகளுக்காகப் பேசுவோம் Emptyகுழந்தைகளுக்காகப் பேசுவோம் Rகுழந்தைகளுக்காகப் பேசுவோம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக