புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_m10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_m10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_m10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_m10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_m10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10 
4 Posts - 5%
Rutu
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_m10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_m10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_m10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_m10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_m10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10 
2 Posts - 2%
manikavi
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_m10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_m10ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 04, 2013 3:33 am

சில நாட்களுக்கு முன்னால் நான் படித்த, என் காதில் விழுந்த தகவல்கள் இவை: நமது வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் எண்ணிக்கை 1,76,547. தொகை ரூ.31,000 கோடி. கடந்த 25 ஆண்டுகளில் ரூ.50 கோடிக்கு மேல் நடந்த ஊழல்களின் எண்ணிக்கை 61. தொகை ரூ.13,000 கோடி.

சென்னை புறநகர்ப் பகுதியான மாதவரத்தில் சொத்து வரி ஒரு சதுர அடிக்கு ரூ. 4.30 சொத்து வரி இவ்வளவு அதிகமாக இருந்தாலும், அந்த இடங்களுக்குச் செல்வதற்குச் சாலைகள் ஏதும் கிடையாது என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள். நான் நேரில் சென்று பார்க்கவில்லை. சென்னை போட் கிளப் சாலையில் சொத்து வரி சதுர அடிக்கு ரூ. 4. அண்ணா நகரில் சதுர அடிக்கு ரூ. 1.25.

அண்ணா நகரில் இருக்கும் எனது சகோதரியின் வீட்டில் வேலை செய்யும் பெண் கூவத்துக்கு அருகில் இருக்கும் குடிசை ஒன்றில் வசிக்கிறார். குடிசையின் பரப்பு ஒன்பதுக்கு எட்டு சதுர அடி. கழிப்பறை வசதி கிடையாது. வாடகை ரூ.3,000. சதுர அடிக்கு வாடகை ரூ. 40-க்கும் மேல். இணையத்தில் தேடினால், அண்ணா நகரில் நடுத்தரக் குடும்பத்தினருக்கான வீடுகள் மாதம் ரூ.20,000-த்துக்கு வாடகைக்குக் கிடைக் கின்றன. 1,000 சதுர அடி. இரண்டு படுக்கை அறைகளுடன். சதுர அடிக்கு வாடகை ரூ. 20.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி 10% உயர்ந்திருக்கிறது. ஓய்வுபெற்ற ஊழியர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் செலவு ரூ.18,000 கோடிக்கும் மேல். இந்த வருடம் மட்டும் 18% உயர்ந்திருக்கிறது. மொத்த செலவு ரூ. 34,000 கோடிக்கும் மேல். மாநில அரசு ஊழியர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் செலவு ரூ.70,000 கோடிக்குக் குறையாது. அரசுக்குப் பணத் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்தத் தகவல்கள் நமக்குத் தெரிவிப்பது என்ன? வங்கி ஊழல்களில் இழந்த பணத்தில் 25%தான் மீட்க முடியும் என்று சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதைவிடப் பெரிய ஊழல்களில் எந்தத் தொகையையும் மீட்க முடியாமலேயே போகலாம். குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் நாடகம் ஆமையே ஆச்சரியப்படும் வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உதாரணமாக: ஹர்ஷத் மேத்தா ஊழல் நடந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. அவர் கடவுளைச் சந்திக்க 12 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சென்று விட்டார். வழக்குகள் இன்னும் தொடர்கின்றன.

ஊழல் நம் மீது நடத்தப்படும் மிகப் பெரிய வன்முறை என்பதில் நம்மைப் போன்ற நடுத்தர மக்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. அரசு பேரூழல் செய்பவர்களின் தரப்பில் இருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறோம். ஆனால், நமது வட்டத்துக்கு வெளியே இயங்குபவர்கள் மீது நடக்கும் மறைமுகமான வன்முறைகளைப் பற்றி நமக்கு எந்தப் பிரக்ஞையும் கிடையாது. மாறாக, அரசு அவர்களுக்காகக் கொண்டுவரும் திட்டங்களைப் பற்றி நாம் தொடர்ந்து கடுமையாக விமரிசனம் செய்துவருகிறோம். பணத்துக்காக அரசு வீட்டுவரியை 50 பைசா உயர்த்தினால் புரட்சி வெடிக்கும் என்று பயமுறுத்துகிறோம். போட் கிளப்பில் வாழ்பவர்களுக்கு அண்ணா நகரில் இருப்பவர்களைப் பற்றிக் கவலை கிடையாது. அண்ணா நகரில் இருப்பவர்களுக்கு மாதவரத்தில் நடப்பது என்ன என்பது தெரியாது. அருகில் இருக்கும் குடிசைகளில் வாடகை என்ன என்பதுபற்றிய புரிதல் கிடையாது. ஆனால், வீட்டு வேலை செய்பவர் சம்பளம் அதிகம் கேட்டால் உலகம் அழிந்துவிடுமோ என்ற அச்சம்.

இந்திய மக்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பல நிலைகளில், பல பரிமாணங்களில் இயங்குகின்றன. அரசு அதிக மாறுதல்களை விரும்புவதாகத் தெரியவில்லை. மிக்க வசதி படைத்தவர்க ளுக்கு அரசும் அரசு இயந்திரங்களும் மிகுந்த முனைப்போடு உதவி செய்கின்றன. மேல் நடுத்தர வகுப்பினர்களிடம் அரசுக்குப் பரிவு இருக்கிறது. ஊடகங்கள் அவர்கள் பக்கம் இருக்கின்றன. கீழ் நடுத்தர மக்கள் சார்பிலும் ஊடகங்கள், தொழிற்சங்கங்கள் குரல் கொடுக்கத் தயாராக இருக்கின்றன. தொழிற்சாலைகளில் வேலை செய்யும் மக்களுக்கென்று தனியான அடையாளம் ஏதும் இன்று இருப்பதாகத் தெரியவில்லை. ஊக்கத்தொகை, மிகை நேரக் கூலி போன்ற அதிக வருவாய்களை எதிர்பார்த்துக் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இவர்க ளுக்கும் கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். மேற்கூறிய அனைவரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் நமது மக்கள்தொகையில் 25% அல்லது 30% இருப்பார்கள்.

இவர்கள் எல்லோரும் இயங்குவது ஒரு தளத்தில் என்று வைத்துக்கொண்டால், மற்றொரு தளத்தில், பெரிய ஆதரவு ஏதும் இல்லாமல், அரசு மிகுந்த தயக்கத்தோடு தரும் சிறிய சலுகைகளை எதிர்பார்த்துக்கொண்டு, அவற்றால் மகிழ்ச்சியைப் பெறலாம் என்ற கனவோடு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பவர்கள் நமது நாட்டின் பெரும் பகுதியினர்.

நமது தளத்துக்குள் உராய்வுகள் இருந்தாலும், கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ஏழைகளாகவே, அதிக எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தால் நமக்கு ஆதாயம். அரசுக்கும் அதிகத் தொல்லைகள் இல்லை.

நம்மில் பலருக்கு - அரசு ஊழியர்கள் உட்பட - இந்தியாவில் அரசு நிர்ணயித்திருக்கும் சராசரி தினக்கூலி என்ன என்பதுபற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. கிராமங்களில் வேலை செய்யும் பயிற்சி பெறாத தொழிலாளி ஒருவரது சராசரித் தினக்கூலி 2012-ல் ரூ. 145. இது 2004-ல் ரூ. 70. எட்டு வருடங்களில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. தினக்கூலியாக வேலை செய்பவருக்கு மாதம் அதிகபட்சமாக 25 நாட்கள்தான் வேலை கிடைக்கும். எனவே, அவரது சராசரி மாதக் கூலி ரூ. 3,750.

இனி, அரசுக் கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவரை எடுத்துக் கொள்்வோம். 2004-ல் அவரது சம்பளம் சுமார் ரூ. 15,000. 2012-ல் குறைந்தது ரூ. 50,000. எட்டு வருடங்களில் மூன்று மடங்குக்கும் மேல் உயர்ந்திருக்கிறது. அரசுக் கல்லூரி ஆசிரியர் தினக் கூலி வேலை செய்பவரைவிட 13 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார். இது எங்கள் அறிவுக்குக் கொடுக்கும் விலை என்று சொல்பவர்களுக்கு அமெரிக்காவின் உதாரணத்தைக் காட்டலாம். அமெரிக்காவில் குறைந்தபட்ச ஊதியம் ஆண்டுக்குச் சுமார் 15,000 டாலர்கள். அங்கு கல்லூரி ஆசிரியர்களின் (Assistant Professors) ஆண்டு சராசரி ஊதியம் 55,000 டாலர்கள். வித்தியாசம் நான்கு மடங்குக்கும் குறைவுதான். நியூயார்க்கில் துப்பரவுத் தொழிலாளரின் ஆண்டு வருமானம் ஆரம்பத்தில் 33,000 டாலர்கள். ஐந்து வருடங்களில் 70,000 டாலர்களாக உயர்கிறது. சென்னையில் துப்புரவுத் தொழிலாளரின் தினக்கூலி ரூ. 235.

அகவிலைப்படி ஆண்டுக்கு 18% உயர்த்தியிருப்பது போதாது என்று சொல்லும் எனது நண்பர்களில் பலர், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் சோம்பேறிகளை உருவாக்கிவிட்டது என்று என்னுடன் வாதிடுகிறார்கள்.

ஏற்றத்தாழ்வுகள் மாறாமல் இருந்தால்தான் நமக்கு வசதி. நாம் எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை!

பி.ஏ. கிருஷ்ணன், கட்டுரையாளர், எழுத்தாளர். பொதுத்துறை நிறுவன நிர்வாக இயக்குநர் (ஓய்வு)



ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Oct 04, 2013 1:17 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக