புதிய பதிவுகள்
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
21 Posts - 70%
ayyasamy ram
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
9 Posts - 30%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
4 Posts - 4%
Rutu
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
3 Posts - 3%
prajai
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
3 Posts - 3%
Baarushree
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
2 Posts - 2%
Jenila
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
2 Posts - 2%
viyasan
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_m10நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 20 Jun 2013 - 2:46



உள்ளடங்கிய கிராமம் அது. அங்கே, ஏதோ பேருக்கு அமைக்கப்பட்டதுபோல் கருங்கல் சுவரும் விமானமும் உடைய கோயில்.

முன்மண்டபத்தில் வெயிலுக்காக ஒதுங்கியிருக்கும் சில பெரியவர்கள். ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டு இருக்கும் சிறுவர்கள்.

அர்த்த மண்டபம், சாவகாச மண்டபத்தைத் தாண்டினால் கருவறை உள்ளே ஓர் ஊஞ்சல் கிரீடம், நெற்றியில் நாமம், விழித்த விழிகள், முறுக்கிய மீசை, வெளித் தெரியும் கடித்த பற்களுடன் கழுத்தளவு உருவம் கொண்டு அதில் ஆடிக்கொண்டிருக்கிறது கூத்தாண்டவராகிய அந்தத் தெய்வம்.

வேறு சன்னதியோ பரிவார மூர்த்தியோ கோயிலில் இல்லை. உள்ளூரில் இருப்பவர்கள் ஒருவேளை பூஜை செய்து விட்டுச் செல்வார்கள்.

இத்தனை அமைதியாய் இருக்கும் இந்தக் கோயிலுக்கு எப்போதாவது வெளியூரில் இருந்து பக்தர்கள் வருவார்கள். பெரும்பாலும் அவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டு, கூத்தாண்டவராகிய அரவானை வேண்டி, நோய் குணமானதும் நேர்த்திக் கடனை செலுத்திவிட்டுச் செல்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

மாத உற்சவங்கள் கிடையாது. ஆனால் வருடத்திற்கு ஒருமுறை சித்திரையில் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழாவின்போது அந்தக் கிராமமே களைகட்டியிருக்கும். சித்திரை அமாவாசைக்கு இரண்டு, மூன்று நாட்கள் முன்பாக காப்புக் கட்டி, கூழ்வார்த்து, கோயிலில் மகாபாரதம் படிப்பார்கள்.

சித்ராபௌர்ணமியன்று அரவானை கணவனாக ஏற்று கோயில் அர்ச்சகர் கையால் திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்வார்கள். அன்றிரவு பொங்கல் வைத்து கும்மியடித்து ஆட்டம் பாட்டமுமாக மகிழ்ச்சியாக கழியும். அடுத்த நாள், அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் அரவான் சிலை வைக்கப்பட்டு களத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் தலை பலி கொடுக்கப்படும். களப்பலியானதும், திருநங்கைகள் முன் நாள் கட்டிக் கொண்ட மாங்கல்யச் சரடுகளை அறுத்து, வளையல் உடைத்து, ஒப்பாரி வைத்து வெள்ளைப் புடைவை உடுத்தி பூவழித்து, பொட்டழித்து விதவை கோலம் பூணுகிறார்கள். அரவான் கூத்தாடியபடியே போர்க் களத்தில் எதிரிகளை அழித்ததால் கூத்தாண்டவன் எனப்பட்டான்.

யார் இவன்? மகாபாரத இதிகாசப் பாத்திரம் அரவான். வாழ்ந்து தெய்வமாகி நின்று அருள் செய்பவன். அர்ச்சுனனுக்கும் நாக கன்னி உலூபிக்கும் மகனாகப் பிறந்தவன். மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்காக களப்பலியாக இரண்டு நிபந்தனைகள் விதித்து முன் வந்தவன் அவன்.

நிபந்தனை: தான் களப்பலியாவதற்கு முன் திருமணம் புரிந்து குடும்ப வாழ்வை ஒருநாளாவது அனுபவிக்க வேண்டும். தான் பலியானாலும் தன் கண்களால் மகாபாரத யுத்தத்தைக் காண வேண்டும்.

மணம்: மறுநாள் சாகப்போகும் மணமகனை கைப்பிடிக்க எந்தப் பெண்ணும் முன்வராத நிலையில் கண்ணனே அழகிய மோகினி வடிவில் வந்து அரவானைக் கைப்பிடித்தார். அன்றைய இரவு குடும்ப வாழ்வு துவங்கி முடிந்தது. மறுநாள் தன் உடலில் இருந்து 32 இடங்களில் தசைகளைக் கழித்து காளிக்குப் படைத்தான். பின்னர் உடல் நலிவுற்று மயங்கிச் சரிந்தான். திரௌபதி வேண்டிக் கொண்டதால் தன் பலத்தில் நான்கில் ஒரு பகுதியை காளிதேவி அரவானுக்கு வழங்கினாள். இதனால் அவன் உடல் வலுபெற்று மகாபாரதப் போரில் மீண்டும் போரிடத் துவங்கினான். 8ம் நாளில் மாயப்போரும், ஆயுதப் போரும் செய்தான்.

அலம்பாசுரன் என்னும் அசுரன் அவனது சிரத்தை வஞ்சகமாக அறுத்தான். துண்டான சிரம் துள்ளித் துள்ளிக் குதித்து கூத்தாடி போரில் எதிரிகளைக் கொன்று குவித்தது.

கொடுத்த இரண்டாவது வரத்தை நிறைவேற்றுவதற்காக கிருஷ்ணன் அரவானின் தலையைப் பிடித்து நிறுத்தி, “நடைபெறப் போகும் மகாபாரதப் போரை இங்கிருந்து பார்! இன்று முதல் நீ தெய்வமாகி நிலைபெற்று இருப்பாய்!’ என ஆசிர்வதித்தார்.

மகாபாரதப் போர் முடிந்தது. அரவான் தெய்வநிலை பெற்றான். கண்ணன் கருட பகவான் மூலம் அரவானின் சிரசை எடுத்து சரபங்க நதியில் விடக் கூறினார். சிரசு மிதந்து திருப்பதி வழியாக திருக்கோயிலூரை அடுத்த பெண்ணை ஆற்றை அடைந்து கரை ஒதுங்கியது. அந்த பகுதி சந்திரகிரி நாடாகும். அங்கு அரவானின் சிரசு குழந்தை வடிவம் பெற்றது. சந்திரகிரி மன்னனால் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்து, அவனது எதிரியான “கூத்தாசுரன்’ என்பவனை அழித்து மன்னனுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்து மீண்டும் சிரசுத் தன்மை அடைந்தது. அது கண்டு கலங்கிய மன்னனைத் தேற்றி ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி சமீபம் மக்கள் குறைதீர்க்க காட்சி தருவேன். அன்று கண்னன் திருநங்கை வடிவெடுத்து என்னை வந்து மணப்பான். நானும் சிரஞ்சீவியாய் இருந்து வழிபடுவோர் அனைவருக்கும் அருள்வேன். என இல்லற வழ்வு கூத்தாக முடிந்தது. இவையெல்லாம் அந்த கூத்தனாகிய மாயன் அருளால் நிகழ்ந்தது. எனவே அந்த கூத்தன் பெயராலேயே என்னை அழைக்க நானும் இவ்வூரில் நிலை பெறுவேன் எனக் கூறினான் அரவான்.

அரவக் கன்னியாகிய உலூபிக்கு மகனாகப் பிறந்ததால் அரவான் என அழைக்கப்பட்டவன், பலருக்கு உதவியதால், கூத்தன் என்ற பெயரோடு ஆண்டவன் என அடைமொழி பெற்று கூத்தாண்டவன் ஆனான். கூத்தாண்டவன் குடி கொண்ட அகம் கூவாகம் எனப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் திருவிழா சித்திரா பௌர்ணமியை ஒட்டி பதினெட்டு நாட்கள் இத்திருக்கோயிலில் கொண்டாடப்படும். இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலகின் சில பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் இவ்விழாவில் கலந்து கொள்வர்.

இதனால் தாங்கள் மகிழ்வாக இருப்பதாகவும், தங்களுக்கு ஆண்டு முழுவதும் நல்லது நடப்பதாகவும், வாழ்வில் வளங்கள் சேர்வதாகவும் திருநங்கைகள் கருதுகின்றனர்.

குமுதம் பக்தி



நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக