புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:15

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 17:14

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 17:14

» https://www.facebook.com/Peak8CBD/
by Guest Today at 17:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:05

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 15:41

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 12:26

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 11:29

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 11:05

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 10:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:00

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 8:28

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Today at 0:37

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Today at 0:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:29

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:45

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 19:53

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:37

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 13:56

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 13:54

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 13:50

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 13:48

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 13:47

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 13:45

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed 17 Apr 2024 - 23:32

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed 17 Apr 2024 - 22:50

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:13

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:04

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:48

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:24

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:22

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:19

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:14

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 12:50

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed 17 Apr 2024 - 2:20

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue 16 Apr 2024 - 21:44

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon 15 Apr 2024 - 9:53

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 20:05

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 17:09

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 14:47

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:58

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:29

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 19:31

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 15:56

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:46

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:42

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:29

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
50 Posts - 49%
ayyasamy ram
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
3 Posts - 3%
prajai
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
3 Posts - 3%
manikavi
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
2 Posts - 2%
Rutu
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
1 Post - 1%
Kavithas
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
216 Posts - 42%
heezulia
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
18 Posts - 4%
sugumaran
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
6 Posts - 1%
manikavi
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
4 Posts - 1%
prajai
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_m10முருகவேள் பன்னிரு திருமுறை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகவேள் பன்னிரு திருமுறை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue 23 Apr 2013 - 19:59

சிவபெருமானுக்குப் பன்னிரு திருமுறை இருப்பது போல முருகவேள் பன்னிரு திருமுறை என்று ஒரு திருமுறைத் திரட்டு உண்டு தெரியுமா என்று சொன்னால் பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அதைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள்.

விவரம் தானே, கேளுங்கள் :

திருப்பரங்குன்றம் திருப்புகழ் - முதல் திருமுறை
திருச்செந்தூர் திருப்புகழ் - இரண்டாந் திருமுறை
திருவாவினன்குடி திருப்புகழ் - மூன்றாந் திருமுறை
திருவேரகம் (சுவாமிமலை) திருப்புகழ் - நான்காந் திருமுறை
குன்றுதோறாடல் திருப்புகழ் - ஐந்தாந் திருமுறை
பழமுதிர்சோலை திருப்புகழ் - ஆறாந் திருமுறை
பொதுத் திருப்புகழ் பாடல்கள் - ஏழாந் திருமுறை
கந்தரலங்காரம் - கந்தரந்தாதி - எட்டாந் திருமுறை
திருவகுப்பு - ஒன்பதாந் திருமுறை
கந்தரனுபூதி - பத்தாந் திருமுறை
நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர்,முதலானவர்கள் பாடல்கள் - பதினோராந் திருமுறை
முருகனடியார்கள் வரலாறு ஆகிய சேய்த்தொண்டர் புராணம் - பன்னிரண்டாந் திருமுறை


இவ்வாறாக முருகவேள் பன்னிரு திருமுறை வகுக்கப் பட்டிருக்கிறது. வகுக்கப் பட்டிருக்கிறதா?

வகுத்தவர் யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? வகுத்தவர் வேறு யாரும் இல்லை, திருப்புகழ் ஏடுகளை வாழ்நாளெல்லாம் தேடித் தேடி தொகுத்துப் பதிப்பித்த தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்கள் தாம்!

அது சரி! இங்கு கூறப்படுகிற பதினோராந் திருமுறை வரை பாடிய புலவர்கள், மன்னிக்கவும், செம்புலப் புலவர்கள் முன்னமேயே நாடறிந்த செம்புலப் புலவர்கள். அருணகிரிநாதர், நக்கீரர்,பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடனார் இவர்கள் எல்லாம் நாடறிந்த செம்புலப் புலவர்கள் அல்லவா?

ஆனால் சேய்த்தொண்டர் புராணம் என்ற முருகவேள் பன்னிரண்டாந் திருமுறை பாடிய செம்புலப் புலவர் யார்? அது ஒரு பெரிய கதை!

தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் மேற்படி முருகவேள் நூல்களை எல்லாம் வகுத்துக் கொண்டு வந்திருக்கிறார். இறுதியில் சிவபன்னிரு திருமுறையில் பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணம் இருப்பது போல முருகனடியார்கள் புராணம் ஒன்று இருந்தால் அல்லவா முருகவேள் பன்னிரு திருமுறை நிறைவு பெறும் ?

சேய் ஆகிய முருகனது தொண்டர்கள் புராணம், அதாவது சேய்த்தொண்டர் புராணம் யார் பாடுவது? இந்தக் கவலை தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளைக்கு வந்து விட்டது. அவரே நல்ல பாக்கள் புனையும் வல்லமை படைத்தவர் தாம். இருந்தாலும் அதில் அவருக்கு ஒரு தயக்கம் இருந்தது போலும்!

இப்படித் தான் ஒரு பாண்டியன் ஒரு நல்ல பொருள் நூலுக்காகக் கவலைப்பட்டான் என்பது வரலாறு. புலவர்கள் கடும்பஞ்சமான வற்கடத்தின் காரணமாக பாண்டிநாட்டை விட்டு அயல்நாடுகளுக்குச் சென்று மீண்டும் மழையால் நாடு தழைத்த போது பாண்டி நாட்டிற்கு வந்தனராம். ஆனால் தொல்காப்பியத்தில் கூறப்படும் பொருளதிகாரம் மட்டும் கிடைக்கவில்லையாம். எழுத்தும், சொல்லும், பொருளதிகாரத்திற்கு அல்லவா ஏற்பட்டன? அப்பொருளதிகாரம் இன்றேல் எதுவும் இன்று என்று அவன் கவலைப் பட்டபோது பொருள் நூலான இறையனார் களவியல் என்ற நூல் மதுரைச் சொக்கனின் பீடத்தில் எழுந்ததாம். மகிழ்ந்த மன்னன் இந்நூலுக்கு உரை வேண்டுமே என்று கவலையுற்றானாம். மீண்டும் இறைவன் கருணை புரிய உருத்திரசன்மன் என்ற ஊமைக் குழந்தை தேர்வு செய்ய இறையனார் களவியல் உரையாகிய நக்கீரர் உரை கிடைத்தது என்பர்.

இவ்வாறு நல்ல நூலுக்காக நல்லவர்கள் கவலைப்படும் போதெல்லாம் அதைக் கூட்டிக் காட்டித் தருவது இறைவனது இயல்பல்லவா?

அது போல தணிகைமணியாரின் தணியாத கவலையைத் தணிக்க வேண்டி இறைவன் ‘சுந்தரர் உலா’ என்ற ஒரு நூலை அவருக்குக் காட்டி அருளினான். ‘சுந்தரர் உலா’ எழுதியவர் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார்.

சுந்தரர் உலா நூலைப் படித்த பிள்ளைவாள் அதில் சொக்கிப் போனார். நூலின் நடையும், அழகும், சுவையும், பொருளும் நூலாசிரியரான சொக்கலிங்கனார் ஒரு வரகவி என்பதை உறுதி செய்தது. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை முடிவு செய்து விட்டார்! சேய்த்தொண்டர் புராணம் பாட வல்ல வரகவி சொக்கலிங்கனாரே என்று அசைவில்லாத நம்பிக்கை பூண்டு தான் முன்பின் பார்த்தறியாத சொக்கலிங்கனாருக்குக் கடிதம் மூலம் தமது வேண்டுகோளை விடுத்தார். தொண்டுக்கென்றே பிறந்த சொக்கலிங்கனாரும் உடனே அப்பணியை ஏற்று ஓராண்டில் நிறைவேற்றித் தந்தார். பணி தொடங்கியது 1941-ஆம் ஆண்டு. 1942 - ல் மிக அழகிய முறையில் பத்திச்சுவை நனி சொட்டச் சொட்ட சேய்த்தொண்டர் புராணம் தமிழ்நாட்டின் தவப்பயனாய் முகிழ்த்துவிட்டது.

இந்நிகழ்வுகளில் கூர்ந்து கவனித்தால் ஓருண்மை திருவருள் அதில் ஒளித்து வைத்துள்ளது புரியும். தேனூர் வரகவி சொக்கலிங்கனார் தீவிர மணிவாசகப் பித்தர். அவர் மணிவாசகர் உலா பாடியிருந்தால் அதில் வியப்பில்லை. ஆனால் அவர் பாடி வெளியிட்டதோ ‘சுந்தரர் உலா’. சுந்தரர் திருத்தொண்டத்தொகை பாடுவதற்காகவே அவதரித்தவர் என்று பெரியபுராணம் கூறுகிறது. அது போல் சொக்கலிங்கனார் பின்னால் ‘சேய்த்தொண்டத் தொகை’ பாடுவதற்கென்றே சுந்தரரிடம் ஆசியும் ஆற்றலும் பெறவே போலும் ‘சுந்தரர் உலா’ பாடியருளினார். இந்தத் திருவருளைப் புரிந்து கொண்டு தான் போலும் தணிகைமணியார் இவரிடம் சேய்த் தொண்டர் புராணம் பாடப்பணிந்து வேண்டினார்.

இவ்வாறாக மதுரைச் சொக்கலிங்கம் நல்லதொரு வேண்டுகோளுக்கு இரங்கி களவியல் நூல் அருளியது போல, தேனூர் சொக்கலிங்கம் நல்லதொரு வேண்டுகோளுக்கு இணங்கி சேய்த் தொண்டர் புராணம் அருளினார்.

தேனூரின் சொக்கனும் தென்மதுரைச் சொக்கனும்
ஆனால் இருவரும் ஒவ்வுவரே - மானே
ஒருவன் களவியல் நூல் சேய்த்தொண்டர் நூலை
ஒருவன் உவந்தளித்த தால்.

என்று பாடிப் பரவ வேண்டும் என்று தோன்றுகிறது.

பெரியபுராணம் பாடிய சேக்கிழாரும் ஓராண்டில் அதனை முடித்தார் என்று அறிகிறோம். அதே போல தேனூர் சொக்கலிங்கனாரும் சேய்த் தொண்டர் புராணத்தை ஓராண்டில் முடித்திருக்கிறார்.

சேக்கிழாருக்கு இல்லாத பல முட்டுப்பாடுகள் தேனூர் சொக்கலிங்கனாருக்கு உண்டு. சேக்கிழாருக்கு பெரிய புராண அடியார்கள் பற்றிய குறிப்புகளைக் கொடுக்க சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியும் இருந்தன.

தேனூராருக்கு இவை இரண்டும் இல்லை. அதோடு சேக்கிழார் முதலமைச்சராய் இருந்ததால் தனக்குக் கிடைத்த அடியார்களைப் பற்றிய தகவல்களை ஊர் ஊராகச் சென்று சரி பார்த்துக் கொள்ளும் வசதி இருந்தது. தேனூராருக்கு அதுவும் இல்லை.

எனவே முருகனடியார்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதை இவரே செய்ய வேண்டி இருந்தது. அதன்பின் சேய்த்தொண்டத்தொகை ஒன்றும், சேய்த்தொண்டர் திருவந்தாதியும் பாடி அவற்றை விரித்து சேய்த்தொண்டர் புராணத்தை 3333 பாடல்களில் பாட வேண்டி இருந்தது. ஆக, எல்லாத் தகவல்களும் இவருக்கு முருகன் இதயத்தில் திருவடி பதித்து பத்தியையும், மூளையில் திருவடி பதித்து பாடும் ஆற்றலையும் ஊட்டிட இவர் அருளியது தான் இந்த சேய்த்தொண்டர் புராணம் என்னும் போது நமது கண்கள் வியப்பால் அகல விரிகின்றன!

சேய்த்தொண்டத் தொகை பாடி அதன்பின் சேய்த்தொண்டர் புராணம் பாடுங்கள் என்று இவருக்குக் குறிப்பு கொடுத்ததும் தணிகை மணி செங்கல்வராய பிள்ளை தாம் என்று அறிகிறோம். இவையெல்லாம் முருகனருளால் தான் நடை பெறுகின்றன என்பதற்கு இலை மறை காய் மறையாகப் பல சான்றுகள் கிடைக்கின்றன.

(செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு.மு.பெ.ச அவர்கள் எழுதியது.)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக