புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
29 Posts - 34%
prajai
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
3 Posts - 4%
Jenila
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
1 Post - 1%
M. Priya
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
1 Post - 1%
jairam
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
7 Posts - 5%
prajai
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
6 Posts - 4%
Jenila
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
4 Posts - 3%
Rutu
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
2 Posts - 1%
Baarushree
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
1 Post - 1%
jairam
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Kavithai:::Kavithai


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 5:23 pm

"தா... டீ "



அவலை நினைத்து
உரலை இடித்த
கதைப் போல,

உள்ளத்துள்
என்னை நினைத்து
ஏன்டி
விரலை கடித்த படி ?

.......

இப்படி இருக்குமா?
அப்படி இருக்குமா?
எப்படியிருக்கும்...... ? என
கனவுகளாய் நானும்
எத்தனைக் காலம்
சுமந்துத் திரிவது
பாதி காதலை..!

எதிர்வரும் என்...
'ம்... ஊஹும்' ...சரியல்ல
நம்...சந்ததிக்கு
'எது காதல்' என
எடுத்துரைக்கும் கடமை
எனக்கிருக்கிறது.

அதற்காகவேனும்
தா...டீ..!
உன்னிடமுள்ள
மீதி காதலை...!

முதலில்
முழுமைப் பெறட்டும்
நம் காதல்.
பின்
செழுமைப் பெறட்டும்
நம் வாழ்வு!
..........................................................


விழாக்காலம்


அறிவிப்பது என்னவோ
அம்மனுக்குத் திருவிழா
என்று.
அம்மனுக்குத்தான் தெரியும்
விழா யாருக்கென்று!

'என்னை ஒருமுறைப்
பாரேன்' என்று
அம்மனும் கூட
கண் சிமிட்டாமல்
உன் கண்
பார்த்துக் கொண்டிருக்க,

ஒற்றைக் கண்ணை
உருட்டி சிமிட்டி
உதட்டில் சிறிதாய்ப்
புன்னகைத் திரட்டி
கட்டை விரலை
முத்தமிட்டு
கலவரம் மூட்டுகிறாய்
காதல் கள்ளி.

உன்
தோழியிடமாவது
சொல்லி விட்டாயா?
நான்
'தோழனாய்' இருந்து
'காதலன்'
ஆகிவிட்டேன் என்று!
..............................................................

வழித்துணை




என்
வாழ்வின் உயர்விற்குக்
காரணியாய் நீயிருந்தாய் .
வாழ்வின் பயணத்திற்கும்
வழித்துணையாய் நீ வருவாய்

எனத் திளைத்திருந்த
மணித்துளியில்...
என்ன நிகழ்ந்ததோ ,
நஞ்சு என அறிந்தே
கஞ்சி போல் குடித்து
என்னை ஏங்க விட்டுத்
தூங்கி விட்டாய்
நிரந்தரமாய்....

மண் உண்டுப் போயிருக்கும்
என்னை மறைத்து வைத்த
உன் இதயத்தை.
என்னச்சொல்லி நான் தேற்ற
உன்னைச் சுமக்கும்
என் இதயத்தை ...?

ஆன்மா உன்னைத்
தேடும்போதெல்லாம்
துறவியாய் - உன்
துயிலறை வருகிறேன்.

உன்
மடிமீது அமரும் நினைவில்
நீ படுத்துறங்கும்
மண்மேடு மீதமர்ந்து
மாண்டு மீள்கிறேன் ...

உனைத் தனியாய்த்
தூங்கவிட்டு திரும்பி
நான் வருகையில்
எனக்குத் துணையாய்
உன் துயர நினைவுகள்...
......... ...........!

இன்று ...நான்
இன்பமாய் வாழ்வதாய்
எல்லோரும் எண்ணுகிறார்கள்
என்றாலும்,

நான்
நடமாடும் கல்லறை
கண்ணே!

..........................................................

புரியாத புதிர்




கடவுள்
மனித உருவில்
எப்போதாவது ஒருமுறை
காட்சியளிப்பார்
எனச் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும்
வாரந்தவறாமல்
வெள்ளி தோறும்
காட்சியளிப்பது

ஏனென்றும் புரியவில்லை
எப்படியென்றும் தெரியவில்லை ...!?
................................................................

ஏன் ?



உன்னை நினைத்து
நான் அணைத்து
உறங்கும் தலையணை

என்னைப் பிரிந்து
தனித்திருக்க மறுத்து
உன்னைப்போன்றே
அடம்பிடிக்கிறதே
ஏன்?

................................................


உதிரும் மேகம்





மோதி
உடைந்து
ஒளிர்ந்து
கிளர்ந்து
மேகம்
உதிரத் தொடங்கியதும்,
வருடத்துவங்கி விடுகிறது

உன்
நினைவுகள் ...!


.............................................


மழை





பெரும் மழை என்றில்லை
தொடர்த்தூறல் என்றாலும்
உன்னை நினைவூட்டாமல்
பொழிந்து விட்டுப்போக
இன்னும்,
பழகிக் கொள்ளவில்லை

மழை ...!
...................................................


மீள்பார்வை




உலகம் சுழலும்
இத்தனை பரபரப்பிலும்
உனக்காக ஒதுக்கி
நான் தனித்திருக்கும்
தருணங்கள்

பின்னோக்கி
நிதானித்துச் சுழலும்
நினைவின் நொடிகளைத்
துரிதப்படுத்த
விரும்பவில்லை
மனம் ...!

..........................................


கனவு




எந்தத் தடயமும்
விட்டுச் செல்லாமல்
எப்படி முடிகிறது உன்னால் ...?

எந்தன்
இரவுகளுக்குள்
வந்துச் செல்ல...!

.................................................


காதலும் கல்யாணமும்



இனி ...
வருடாவருடம்
'கல்யாண நாள்' வரும்.
நீயும் கொண்டாடுவாய்
அவனுடன்.


இனியும்
வருடாவருடம்
'காதலர் தினமும்' வருமே!
நான் யாருடன்...?


..................................................


குழந்தைக் காதலி


உண்ணக் கொடுத்த
கஞ்சிக் கிண்ணத்தை
கவிழ்த்துக் கொட்டி

கண் காது மூக்கு
கை கால் வாயெனப் பூசி
விரல்களைச் சப்பி
விளையாடும்
குழந்தையைப் போல்

காதல் நிரம்பிய - என்
நெஞ்சக் கிண்ணத்தைக்
கவிழ்த்துக் கொட்டி
விளையாடுகிறாய்
நீ!

கேட்டால் ...
காதலில் இன்னும்
குழந்தை நான் என
குதித்தாடுகிறாய்...!

.................................................


என்ன இது?


உன் பெயரையும்
என் பெயரையும்
ஒன்றாக்கி எழுதியிருந்தேன்
நாட்குறிப்பில்.


விருந்துக்கு வந்த - என்
அத்தைமகள்
விபத்தாய் அதைப்
பார்த்துவிட்டு
பற்றவைத்து விட்டாள் - அவள்
அத்தையிடம். (என் அம்மா)

முதலில் அக்கா,
பின் அம்மா, அண்ணா
ஏன் தம்பியுங்கூட !

என்னைச் சுற்றி
அரண் போல் நின்று
அரம் போல் அறுத்தார்கள்

"என்ன இது ?" ,எனக் கேட்டு.

'என்ன அது' , என்று
உண்மையாகவா தெரிந்திருக்காது...?


.............................................



அமுத கனி





காதல் தோல்வி
கசப்பானதொரு
அனுபவம் தான்.

ஆனாலும்
சுகமானது.

உண்ணும்போது
சிறிதாய்க் கசந்தாலும்,
எண்ணும்போது
இனிக்கும்
நெல்லிக்கனி போல...!


...............................................


அவளுக்குத் திருமணம்


உனைச் சுமந்த
கருவறை
இனி என்னுள்
எதற்கு ?

உனைப்
பிரிதல் என்பதும்
இறப்பு தான்
எனக்கு.

உன்னால்
வேண்டுமானால் முடியலாம்
உள்ளே என்னையும்
கணவனாய் வேறொருவனையும்
சுமக்க .

என்னால் முடியாது
எடுத்துக் கொண்டுப் போ
உன்னை உன்னோடு .

..................................................



யாரேனும் சொல்லுங்கள் ...



எதிர்ப்பார்த்தே நிகழ்ந்ததுதான்
என்றாலும்,

விபத்தால் உறுப்பிழந்த
எனக்கு
இழப்பீடு தருவதுதானே
நியாயம்.?

அவளின் விழிகள்
வீசிய ஒளியால்
இழந்து தவிக்கிறேன்
இதயத்தை !

யாரேனும்
எடுத்துச் சொல்லுங்கள்
அவளிடம்.
நியாயத்தை !

...................................................


அந்த நாள் முதல்...


காற்றோடு பேசுகிறேன்
காற்றில் தேடுகிறேன்


இப்பொழுதெல்லாம்
புவிஈர்ப்பு விசைக்கு என்னை
பிடிப்பதில்லை
ஆகாச வானுக்கும்
அப்படித்தான் போலும்!

மரக்கிளையில் காகங்கள்
இலைமறைவில் குயில்கள்
அதனதன் மொழியில் - என்
அந்தரங்கம் பற்றியே
பேசுவது போல் ...

மாமர நிழலில்
நானிருந்தாலும்
தொலைதூரத் தென்னை
எனக்காய்
சாமரம் வீசுவது போல்...

உனைக்காண
காத்திருக்கும் நேரத்தில்
என் கடிகாரத்தின்
நொடிமுள் கூட
மணிமுள் வேகத்தில்
சுழல்வது போல்...

எல்லாம்
காதல்
வந்த நாள் முதல்...!



...........................................
ஏன்?


"உறங்கும் போது
ஒளிந்து வந்து
முத்தமிட வேண்டாம்
ஒருநொடி பயந்து போகிறேன்
தெரியுமா ?", என்கிறாய்.

நான்
உன் வீட்டிற்குள்
புகுந்ததை உணர்ந்ததும்
படிப்பதை நிறுத்திவிட்டு
உறங்குவதைப் போல்

நீ
நடிப்பதை மட்டும்
ஏன் என்று
சொல்லிவிடு...!



.............................................
ஞாபகங்கள் ...

சிற்றிடையில்
சின்னதாய்ச்
சீண்டினேன்.

காதருகில் வந்து
நாயே என்றாய்.

அய்யய்யோ ...
நாயளவு நன்றியெல்லாம்
என்னிடம் இல்லை என்றேன்.

முறைத்துச்
சிரித்தாய்.

மூவிரண்டு ஆண்டுகள்
முடிந்த பின்னும்
மங்காத பிம்பங்களாய்
மனக்கண்ணில்...!



...................................................
என்ன இது ?




வெறும் நட்பென்று
ஒப்புக்கொள்ள மனமுமில்லை.

பெருங்காதல் என்று
சொல்லித்திரிய துணிவுமில்லை.

எதுவென்று புரியாமல்
ச்ச் ச்சே ...
என்ன அவஸ்தை இது..!?


.........................................................

நெடுங்காதல்


ஒதுக்கப்பட்ட நபர் போல்
ஊருக்கு வெளியே உள்ள
புங்க மரத்தடியில்
ஒற்றையாய் அமர்ந்திருந்தேன்.

சிறகு உதிர்ந்த
ஈசல் போல்
சிதறிக் கிடந்தது
புங்க மரத்துப் பூக்களும்

எப்போதோ
நாம்
சிரித்துப் பேசியச் சொற்களும் ...!



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 20, 2009 5:28 pm

இப்படி இருக்குமா?
அப்படி இருக்குமா?
எப்படியிருக்கும்...... ? என
கனவுகளாய் நானும்
எத்தனைக் காலம்
சுமந்துத் திரிவது
பாதி காதலை..!

எதிர்வரும் என்...
'ம்... ஊஹும்' ...சரியல்ல
நம்...சந்ததிக்கு
'எது காதல்' என
எடுத்துரைக்கும் கடமை
எனக்கிருக்கிறது.

அதற்காகவேனும்
தா...டீ..!
உன்னிடமுள்ள
மீதி காதலை...!

வலிகளை மிக உணர்ச்சி பூர்வமாக காட்டுகிறது. பதிவிற்கு நன்றி மீனு!



Kavithai:::Kavithai Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 5:35 pm

நன்றி பாடகன்



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 20, 2009 6:55 pm

உனைத் தனியாய்த்
தூங்கவிட்டு திரும்பி
நான் வருகையில்
எனக்குத் துணையாய்
உன் துயர நினைவுகள்...




உனைக்காண
காத்திருக்கும் நேரத்தில்
என் கடிகாரத்தின்
நொடிமுள் கூட
மணிமுள் வேகத்தில்
சுழல்வது போல்...


மீனு, இந்த கவிதைகள் அனைத்துமே வெகு சிறப்பு. நன்றி.
..........கா.ந.கல்யாண்

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 6:59 pm

மீனு. வாழ்த்துக்கள்....... இவ்வளவு அழகான கவிதையெல்லாம் உங்களுக்கு மட்டும்தான் கிடைக்குமா அன்பு மலர்



Kavithai:::Kavithai Eegaraitkmkhan
Kavithai:::Kavithai Logo12
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 20, 2009 7:02 pm

Kavithai:::Kavithai 677196 Kavithai:::Kavithai 677196 Kavithai:::Kavithai 677196



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 10:35 pm

mdkhan wrote:மீனு. வாழ்த்துக்கள்....... இவ்வளவு அழகான கவிதையெல்லாம் உங்களுக்கு மட்டும்தான் கிடைக்குமா அன்பு மலர்

ஆமா..இவளவு அழகான கவிதைகளை..தேடு போயி ..அழகா சுடுவதால்..இவளவு அழகான கவிதைகள் கிடைக்கிறது கான் ஒன்னும் புரியல



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக