புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
83 Posts - 55%
heezulia
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_m10இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தூதர் கரியவாசத்தைக் கைது செய்க!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 27, 2013 4:36 pm

இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில்...

இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம், தன்னுடைய மின்னஞ்சல் மூலம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களக் கொடியோருக்கு ஆதரவாகவும், இந்தியாவில் உள்ள ஒரிசா, வங்காளம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்று, அக்கிரமமான ஆலகால விடம் தோய்ந்த ஒரு அறிக்கையை, மார்ச் 19 ஆம் தேதி தயாரித்து, கொழும்பில் உள்ள ஊடக மையத்தின் மூலம், இந்தியாவில் உள்ள ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பி உள்ளார்.

அதில், சிங்களவர்கள் இந்தியாவின் கலிங்கம், வங்கம் பகுதிகளின் பூர்வீக மக்கள் என்றும், சிங்கள மொழி, சமஸ்கிருதம், இந்தி மொழியோடு தொடர்பு உள்ளது என்றும், ஈழத்தமிழர்கள் வெறும் 12 சதவீதம்தான் என்றும், அவர்களின் பயங்கரவாதத்தை ஒடுக்கிய இராஜபக்சே அரசைப் பாராட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். சிங்கள அரசன் ஸ்ரீ விஜயன், ஒரிசாவில் இருந்து வந்தவன் என்றும், இந்தியாவின் புத்த மதத்தை சிங்களர்கள் பின்பற்றுவதாகவும் எனவே தமிழ்நாடு தவிர்த்த இந்திய மக்கள் சிங்களர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ இன்று அனுப்பி உள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டு உள்ளார்.

இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதர் கரியவாசம், தன் அதிகார வரம்பை மீறி, இராஜீய உறவுகளின் எல்லைகளைத் தாண்டி, இந்தியாவில் வாழ்கிற ஒரிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநில மக்களிடம் தமிழர்களுக்கு எதிராகக் குரோதத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தும் நோக்கில், நச்சுக் கருத்துகளை விதைத்து உள்ளார். சிங்களர்களின் அரசனான ஸ்ரீ விஜயன் கலிங்கம் எனும் ஒரிசாவில் இருந்து வந்தவன் என இலங்கையின் மகாவம்சம் நூல் தெரிவிக்கிறது என்கிறார். இந்த மகாவம்சம் எனும் நூல், அபாண்டப் பொய்களும், அருவறுக்கத்தக்க ஆபாசக் கற்பனைக் கதைகளும் கொண்டது ஆகும்.

குறிப்பிடப்படும் ஸ்ரீ விஜயனின் தாயும் தகப்பனும், கதையின்படி உடன் பிறந்த அண்ணன் தங்கை ஆவார்கள். அவர்களின் தந்தை தாய் இருவரும், காட்டில் இருந்த ஒரு சிங்கத்திற்கும் கலிங்க தேசத்து அரச குமாரிக்கும் பிறந்தவர்கள் என்பதுதான் கரியவாசம் சுட்டிக்காட்டும் பூர்வீகம் ஆகும்.

ஆனால், இலங்கைத் தூதர் ஓர் உண்மையை மறைக்க முடியவில்லை. அதுதான் இலங்கைத் தீவில் தமிழர்கள்தான் பூர்வீகக் குடிமக்கள் எனும் உண்மை ஆகும்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வரலாற்றின் வைகறை முதல் சுதந்திரமான அரசுகள் அமைத்து, உயர்ந்த நாகரிகத்துடன் வளமாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், ஐரோப்பியர் வருகையால் ஆட்சியை இழந்தனர். பிரித்தானியர் 1948 இல் வெளியேறியபோது, சிங்கள இனவாத அரசின் கீழ் ஈழத்தமிழர்கள் உரிமை இழந்தனர்.

ஈழத் தமிழ் மக்களை சிங்கள இராஜபக்சே அரசு இனப்படுகொலை செய்வதற்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முழு உதவியும் தந்து உடந்தையாகச் செயல்பட்டது.

ஈழத் தமிழருக்கு நீதி கேட்க, வீரமிக்க 22 தமிழ் இளைஞர்கள் நெருப்பில் குளித்து மரணத் தீயை அரவணைத்து உயிர்த் தியாகம் செய்து பற்ற வைத்தத் தணல் இன்று தமிழகத்தில் இலட்சோப இலட்சம் மாணவர்கள், இளைஞர்கள் நெஞ்சத்தில் அணைக்க முடியாத கிளர்ச்சித் தீயாகக் கொளுந்துவிட்டு எரிகிறது.

சிங்கள மொழி, சமஸ்கிருதம் இந்தி மொழி வழி வந்தது என்றும், இந்த உறவோடு, இந்திய மக்கள் தமிழ்நாடு தமிழர் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு, சிங்களருக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார். எவ்வளவு அகம்பாவத்தோடும், திமிரோடும் இலங்கைத் தூதர், தமிழருக்கு எதிராக வட இந்திய மக்களைத் தூண்டிவிடப் பார்க்கிறார்?

சிங்கள அரசு நடத்திய இனக்கொலை யுத்தத்துக்கு ஆயுத உதவி செய்ததை இந்தியப் பிரதமரே குறிப்பிட்டு, 2008 அக்டோபர் 2 இல் எனக்கு எழுதிய கடிதத்தில், இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்திய அரசு, சிங்கள அரசுக்கு இராணுவ உதவி செய்தது என்று ஒப்புக்கொண்டு எழுதி இருந்தீர்கள்.

2004 ஆம் ஆண்டு முதல், உங்களிடம் நேரிலும், கடிதங்கள் மூலமாகவும் பலமுறை மிகுந்த கவலையோடும், அச்சத்தோடும் தெரிவித்ததை நான் இப்போது நினைவுபடுத்துகிறேன். சிங்களனுக்கு உதவியாக, ஈழத் தமிழருக்கு எதிராக இந்த இந்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்தால், தமிழகத்தின் இளைஞர்கள் அதனை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இந்திய ஒருமைப்பாடு உடைந்து சிதறும் விபரீதத்தைத் தடுக்கவே முடியாது.

இன்று அத்தகைய நியாயமான கோபமும், ஆவேசமும்தான் தமிழக மக்கள், குறிப்பாக மாணவர்கள், இளம் தலைமுறையினர் இதயங்களில் நெருப்பைக் கக்கும் கேள்விகளாக ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.

கேரளக் கடலில் இரண்டு இந்திய மீனவர்களைச் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான, இரண்டு இத்தாலியக் கடற்படை வீரர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வரவில்லை என்பதற்காக, இத்தாலித் தூதர் டேனியல் மன்சினியை இந்தியாவுக்குள் சிறை வைப்பதுபோல் நடவடிக்கை எடுத்தீர்கள்.

ஏறத்தாழ 584 தமிழக மீனவர்களை நமது கடலிலும், பன்னாட்டுக் கடலிலும் தாக்கிப் படுகொலை செய்த சிங்களக் கடற்படையை, இலங்கை அரசைக் கண்டித்து, இந்திய அரசு ஒரு வார்த்தைகூட முனு முனுக்காதது ஏன்?

தமிழக மீனவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா? தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இன்னும் இருக்கிறதா? அல்லது இல்லையா? எனும் கேள்விகள் பூதாகாரமாக தமிழ் மக்கள் மனதில் எழுந்துவிட்டன.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு இதனால் ஆபத்து தலைக்குமேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை உங்களுக்கு எச்சரிக்க வேண்டியது எனது கடமை ஆகும்.

இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் வேட்டு வைக்க முனைந்து உள்ளதால், இந்தியக் குற்றவியல் சட்டம் 124ஏ பிரிவின் கீழ் இலங்கைத் தூதர் மீது உடனடியாக வழக்குப்போட்டு கைது செய்து, சிறையில் அடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில், இந்திய அரசு மேற்கொள்ளும் செயல்பாடுதான், நாட்டின் ஒற்றுமைக்கு, காலம் விடுத்து உள்ள அறைகூவலுக்குப் பதிலாக அமையும் என்பதை வரலாறு பதிவு செய்யும்.

- இவ்வாறு, வைகோ தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nandri - dinamani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக