புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
11 Posts - 4%
prajai
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_m10கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு அங்கியிலும் கருப்பு ஆடுகள்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 16, 2013 8:13 am

தொழில் நேர்மை எல்லாத் துறைகளிலும் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாகஅநீதியை அம்பலப்படுத்த வேண்டிய சட்டத் துறையிலேயே இத்தகைய நேர்மையின்மை புகுந்துவிட்டது. இதற்கு அடிப்படைக் காரணம் படித்தவர்கள் மத்தியில் நாணயத்தையும், நேர்மையையும்விட, பதவியும் பணமும்தான் பிரதானம் என்கிற மனப்போக்கு மேலெழுந்து விட்டதுதான்.
-
அண்மையில், "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சி.பி.ஐ. தரப்பில் வாதிடும் வழக்குரைஞர் ஏ.கே. சிங் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்குக் காரணம், இவர் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய "எதிரி'யான (குற்றஞ்சாட்டப்பட்டவர்)"யுனிடெக்' நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திராவிடம், சி.பி.ஐ.-க்கு கிடைத்துள்ள தகவல்கள், அவரைக் குறுக்குவிசாரணை செய்வதற்கான கிடுக்கிப்பிடி போடும் கேள்விகள் குறித்து விவரித்துள்ளதாகத் தெரியவந்திருப்பதுதான்.
-
இருவரும் பேசியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு தற்போது தடயவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, இந்த வழக்கில் மற்றொரு"எதிரி'யான ஷாகித் பல்வாவுடன் சி.பி.ஐ. வழக்குரைஞர் பேசியுள்ளார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இப்போதைய கவலையெல்லாம் சி.பி.ஐ. வழக்குரைஞர் கட்சி மாறியது எப்போது? இதுவரை நடைபெற்ற வழக்கின் போக்கில் இது எந்த அளவுக்குபாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான்.
-
அரசு வழக்குரைஞர்கள்"எதிரி'க்கு ஆதரவாக மாறக் காரணம், அரசு தரும் சம்பளம் குறைவு என்பதாக ஒரு கருத்துநிலவுகிறது. "எதிரி'யின் வழக்குரைஞர் ஒரு மணி நேரத்துக்கு சில லட்சங்கள் சம்பளம் வாங்கும்போது, இவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் குறைவு என்பதாகவும் கூறப்படுகிறது. சம்பளம் குறைவு என்பதற்காக விலைபோய்விடுவதா? பணத்தைவிட பதவியின் கௌரவம் முக்கியம் என்பதுகூடவா இந்த மெத்தப் படித்த மேதாவிகளுக்கும், அதிகாரம் படைத்த பொறுப்பில் இருப்பவர்களுக்கும் தெரியாமல் போய்விட்டது?
-
ரூ.1.76 லட்சம் கோடி வரை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், "எதிரி'கள் எத்தகைய பணக்காரர்களாக இருப்பார்கள் என்பதும், இவர்கள் மிக அதிக சம்பளம் கொடுத்து வழக்குரைஞர்களை நியமிப்பார்கள் என்பதும் தெரிந்த ஒன்றுதானே? அவர்களுக்கு இணையாக அரசு வழக்குரைஞர்களுக்கும் சம்பளம் கேட்பது நியாயமாகுமா?
புலனாய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கும்கூட சம்பளம் குறைவுதான். அவர்களும் விலைபோவது என்றால், என்ன ஆதாரங்கள் கிடைக்கும்? உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தைவிடஅதிகமாக வழக்குரைஞர்கள்"2ஜி' அலைக்கற்றை வழக்கில் சம்பாதிக்கக்கூடும். அதற்காக, நீதிபதிகளும் விலைபோனால் என்ன ஆகும்?
-
மக்கள் பணம் கொள்ளை போகிறது, அவ்வாறு கொள்ளையடித்தவர்களை சட்டத்தின் கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்கிற தார்மிக ஆத்திரமும், கடமை உணர்வும் இல்லாதவர்களால் புலனாய்வும் செய்ய முடியாது, வழக்காடவும் முடியாது. சம்பளம் குறைவு என்பது ஒரு காரணம் அல்ல. தொழில் நேர்மையை மறக்கும் அளவுக்குப் பேராசை அதிகம் உள்ளவர்களை இதுபோன்ற பதவிகளில் அமர்த்துவதால் ஏற்படும் பாதிப்பு இது. இதற்குக் காரணம் அவர்களுக்குப் பரிந்துரைத்த அல்லது பதவி வாங்கிக் கொடுத்த அரசியல்வாதியாகத்தான் இருக்க முடியும்.
-
இதுபோல, எதிர்மனுதாரரின்"மறைமுக' வழக்குரைஞராக மாறும் அரசு வழக்குரைஞர்கள் சரியாக வாதிடவில்லை என்று விலக்கப்படுவது உண்டே தவிர,தற்போது வழக்குரைஞர் ஏ.கே.சிங் - சஞ்சய் சந்திரா உரையாடல் பதிவுபோல, யாரும் சிக்கியது இல்லை. இந்த விவகாரத்திலும், இது உண்மை என்று தடயவியல் ஆய்வில் தெரியவந்தால், இவர்மீது எத்தகைய நடவடிக்கையை "பார் கவுன்சில்' மேற்கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இந்த விவகாரம், "2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீடு என்பதால் இந்திய அளவில் பேசப்படுகிறது. ஆனாலும் சாதாரண நிலைகளில், அரசு சாராத வழக்குகளிலும்கூட இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடும். நீதியை நிலைநாட்ட வேண்டியவர்கள் விலைபோக நேர்வதும், சட்டத்தின் ஓட்டைகளைத் திறந்துவிட்டு குற்றவாளிகளைத் தப்ப விடுவதும் அரசு வழக்குரைஞர்களின் சாமர்த்தியமாகக் கருதப்பட்டால், அது மிக மோசமான விளைவுகளுக்கு வழிகோல நேரிடும்.
தப்பாட்டம் ஆடும் வீரருக்கு "மஞ்சள் அட்டை' காட்டவும், களத்தைவிட்டு வெளியேற்றவும் விளையாட்டுப் போட்டிகளில்"ஆட்டநடுவர்' இருப்பதைப்போல, தொழிலுக்குக் களங்கம் விளைவிக்கும் வழக்குரைஞர்களை, அவர்களது வாதத்தை வைத்தே அடையாளம் காணவும், கருப்புப் பட்டியலில் சேர்க்கவும்"பார் கவுன்சிலால்' மட்டுமே முடியும்.
- வழக்குரைஞர்கள் எதிர்க்கட்சியினருடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது தொழில் தர்மம் அல்லஎன்பது பார் கவுன்சிலின் விதிகளில் ஒன்று. ஏ.கே. சிங் அந்த தர்மத்தை மீறியிருக்கிறார் என்பது தெளிவு.
கருப்பு அங்கிக்குள் புகுந்துவிட்ட கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு, நீதித்துறைக்கு வலிமை சேர்க்க வேண்டிய "பார் கவுன்சில்' பார்வையாளராக மாறிடாமல், இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளிவைக்காவிட்டால், நேர்மையும், தொழில் தர்மமும் உள்ள பெருவாரியான வழக்குரைஞர்கள் அனைவருக்குமே களங்கம் கற்பிக்கப்படும் சூழல் உருவாகும். பார் கவுன்சிலில் அரசியல் கலக்காமல் இருப்பதும், அரசுவழக்குரைஞர்கள் நியமனங்களில் அரசியல்வாதிகளின் தலையீடு தவிர்க்கப்படுவதும்தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
-
வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும்
பொய்யகலத் தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்ஙணும் மேலோர்! -பாரதியார்
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 16, 2013 8:53 am

பாரதியார் சொன்னது போல் இன்று பொய்யகலத் தொழில் செய்து பிறர் போற்றிட வாழ்பவர் குறைந்து கொண்டே வருகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வையகம் காப்பவ ரேனும் - சிறு
வாழைப் பழக்கடை வைப்பவரேனும்
பொய்கலந்து தொழில் செய்தே - பிறர்
தூற்றிட வாழ்பவர் எங்ஙணும் கீழோர்!!!




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக