புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
3 Posts - 2%
bala_t
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
280 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
5 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 2 of 84 Previous  1, 2, 3 ... 43 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 18, 2013 9:34 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (11)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


”அது என் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின்
அது என் உருபுகெடக் குகரம் வருமே” (வேற்றுமை மயங்கியல் 11)

அஃதாவது, என் தம்பி - வேற்றுமைத் தொகை ;இதற்கு விரி- எனது தம்பி.

இத் தொகை உயர்திணைக்கு உரியது ஆதலால் ‘அது’வுக்குப் பதிலாகக் ’கு’வரும் என்பதே மேலைத் தொல்காப்பிய நூற்பாவிற்குப் பொருளாகும்.

இவ் விதிப்படி, என் தம்பி √

எனக்குத் தம்பி √

எனது தம்பி × - என ஆகும்.

ஆனால் இவ்விதி ,மேலே காட்டியவாறு ,தொகைச் சொல்லுக்கு மட்டுமே பொருந்தும்; தொடருக்குப் பொருந்தாது!

என் மனைவி வந்தாள் √

எனது மனைவி வந்தாள் √

எனக்கு மனைவி வந்தாள் ×

-ஏனெனில்,முதல் இரு எடுத்துக்காட்டுக்கள் மனைவியின் இயல்பான வருகையைக் குறிக்கின்றன;பேசுவோனது கருத்தைத் தெளிவாகவும் கூறுகின்றன;ஆனால் மூன்றாம் தொடர், ‘யாரோ ஒரு பெண் அப்போதுதான் மணமுடித்து அவனுக்கு மனைவியாக அமைந்தாள்’ என்ற பிழையான கருத்தை நல்கிவிடுகிறது!


குமணனது மகன் தந்தான் - நமக்குத் தந்தவன் குமணனின் மகன் என்ற பொருள் இங்கு தெளிவாக உள்ளது.
குமணனுக்கு மகன் தந்தான் – மகன் நமக்குத் தரவில்லை, குமணனுக்கே தந்தான் என்ற பொருளல்லவா வருகிறது?


இதிலிருந்து உயர்திணையாக இருந்தாலும், தொடராயின், ‘அது’வுக்குப் பதிலாகக் ‘கு’கரம் சேர்க்க இயலாது என்பது விளங்குகிறது அல்லவா?

தொல்காப்பியர் வகுத்த விதி ,தனித் தொகைச் சொல்லுக்கு மட்டுமே பொருந்தும் , தொடருக்குப் பொருந்தாது என்பது விளங்குகிறது அல்லவா?
* * *


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 19, 2013 10:33 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (12)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியர் ,வலித்தல் விகாரம், மெலித்தல் விகாரம் என்ற இரு விகாரங்களைத் தெரிவிக்கிறார் :-

”அந்நாற் சொல்லும் தொகுக்குங் காலை
வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்
... ... ...
நாட்டல் வலிய என்மனார் புலவர் “ (எச்சவியல் 7)

தொல்காப்பியரே ஒரு நூற்பாவில் (வினையியல் 6 ), ‘குற்றியலுகரம்’ என்பதற்குப் பதிலாகக் ‘குன்றியலுகரம்’ என்று எழுதி மெலித்தல் விகாரம் காட்டுகிறார்!

ஆனால் இந்த விகாரங்கள் செய்யுளில் மட்டுமே வரக்கூடிய ‘செய்யுள் விகாரங்கள்’ என்றே பலரும் பாடம் நடத்துகின்றனர்!

இது சரியல்ல!

வழக்கிலும் இவ் விகாரங்கள் பயிலுகின்றன! :-

1. இரும்புச் சட்டியை ‘இருப்புச் சட்டி’ என்பதுண்டு; இது வலித்தல் விகாரம்.

2. கரும்புச் சாற்றைக் ‘கருப்பஞ் சாறு’ எனவும் கூறுவர் ; இதுவும் வலித்தல் விகாரம்.

3. உழுந்தம் பருப்பு, ‘உழுத்தம் பருப்பு’ என்றும் எழுதப்படுகிறது; இதுவும் வலித்தல் விகாரம்.
4. ஈத்தம் பழத்தை ‘ஈந்தம் பழம்’ எனும்போது அது மெலித்தல் விகாரம்.

5.சத்தடி இல்லாமல் என்பதே ‘சந்தடி இல்லாமல்’ என்றானது! இது மெலித்தல் விகாரம்.

6. சித்தன் என்ற இயற்பெயர் ‘சிந்தன்’ எனவும் வழங்கக் காண்கிறோம் ;மெலித்தல் விகாரம்தான் இது.

7. குத்தவைத்தான் = உட்கார்ந்தான் ; தன்வினைச் சொல் . இதுவே மெலித்தல் விகாரமாகிக் ‘குந்த வைத்தான்’ எனப் பிறவினையில் பயிலுகிறது.

8. தண்ணீர்ப் பத்தல் என்பதே ‘தண்ணீர்ப் பந்தல்’ ஆனது! இதுவும் மெலித்தல் விகாரம்.

‘நீர்ப் பத்தல் ’ என்று சங்க இலக்கியத்தில் வருகிறது ; நீர் வைத்திருக்கும் பெரிய பாண்டம் என்பது பொருள்; பழங்காலத்தில் அதை வைத்து அதிலிருந்து வழிப்போக்கர்களுக்கு நீர் கொடுத்தார்கள்; அத் தண்ணீர்ப் பத்தலே பிறகு ‘தண்ணீர்ப் பந்தல்’ ஆனது! நாம் நினைப்பதுபோல கிடுகால் வேயும் பந்தலால் ‘தண்ணீர்ப் பந்தல்’ என்ற பெயர் வரவில்லை!


இந்த ஆய்வால் வலித்தல் மெலித்தல் விகாரங்கள் செய்யுளில் மட்டுமல்லாது வழக்கிலும் வருவனவே என்பது பெறப்படுகிறதல்லவா?


* * *

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 19, 2013 10:53 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (12)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

தொல்காப்பியர் ,வலித்தல் விகாரம், மெலித்தல் விகாரம் என்ற இரு விகாரங்களைத் தெரிவிக்கிறார் :-

”அந்நாற் சொல்லும் தொகுக்குங் காலை
வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்
... ... ...
நாட்டல் வலிய என்மனார் புலவர் “ (எச்சவியல் 7)

தொல்காப்பியரே ஒரு நூற்பாவில் (வினையியல் 6 ), ‘குற்றியலுகரம்’ என்பதற்குப் பதிலாகக் ‘குன்றியலுகரம்’ என்று எழுதி மெலித்தல் விகாரம் காட்டுகிறார்!

ஆனால் இந்த விகாரங்கள் செய்யுளில் மட்டுமே வரக்கூடிய ‘செய்யுள் விகாரங்கள்’ என்றே பலரும் பாடம் நடத்துகின்றனர்!

இது சரியல்ல!

வழக்கிலும் இவ் விகாரங்கள் பயிலுகின்றன! :-

1. இரும்புச் சட்டியை ‘இருப்புச் சட்டி’ என்பதுண்டு; இது வலித்தல் விகாரம்.

2. கரும்புச் சாற்றைக் ‘கருப்பஞ் சாறு’ எனவும் கூறுவர் ; இதுவும் வலித்தல் விகாரம்.

3. உழுந்தம் பருப்பு, ‘உழுத்தம் பருப்பு’ என்றும் எழுதப்படுகிறது; இதுவும் வலித்தல் விகாரம்.
4. ஈத்தம் பழத்தை ‘ஈந்தம் பழம்’ எனும்போது அது மெலித்தல் விகாரம்.

5.சத்தடி இல்லாமல் என்பதே ‘சந்தடி இல்லாமல்’ என்றானது! இது மெலித்தல் விகாரம்.

6. சித்தன் என்ற இயற்பெயர் ‘சிந்தன்’ எனவும் வழங்கக் காண்கிறோம் ;மெலித்தல் விகாரம்தான் இது.

7. குத்தவைத்தான் = உட்கார்ந்தான் ; தன்வினைச் சொல் . இதுவே மெலித்தல் விகாரமாகிக் ‘குந்த வைத்தான்’ எனப் பிறவினையில் பயிலுகிறது.

8. தண்ணீர்ப் பத்தல் என்பதே ‘தண்ணீர்ப் பந்தல்’ ஆனது! இதுவும் மெலித்தல் விகாரம்.

‘நீர்ப் பத்தல் ’ என்று சங்க இலக்கியத்தில் வருகிறது ; நீர் வைத்திருக்கும் பெரிய பாண்டம் என்பது பொருள்; பழங்காலத்தில் அதை வைத்து அதிலிருந்து வழிப்போக்கர்களுக்கு நீர் கொடுத்தார்கள்; அத் தண்ணீர்ப் பத்தலே பிறகு ‘தண்ணீர்ப் பந்தல்’ ஆனது! நாம் நினைப்பதுபோல கிடுகால் வேயும் பந்தலால் ‘தண்ணீர்ப் பந்தல்’ என்ற பெயர் வரவில்லை!


இந்த ஆய்வால் வலித்தல் மெலித்தல் விகாரங்கள் செய்யுளில் மட்டுமல்லாது வழக்கிலும் வருவனவே என்பது பெறப்படுகிறதல்லவா?


* * *



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 20, 2013 10:28 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (13)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகென
உள்ளுறுத்து இறுவதை உல்ளுறை உவமம் (அகத்திணையியல் 48)

-இதுவே ‘உள்ளுறை’ பற்றிய தொல்காப்பியர் இலக்கணம்!

இந்த ‘உள்ளுறை’ பற்றி விளக்கி விளக்கி , அப்போதும் விளங்கவைக்க இயலாமல் ஓய்ந்துபோனவர்கள் பலர்!

வேறு ஒன்றுமில்லை! ‘உள்ளுறை’ என்பது ,நம்மூர்ச் ‘சாடை பேசுதல்’ ! அவ்வளவுதான்!

நேரடியாகக் கூறாமல், மறைவாகக் (சாடையாக) குறிப்பிடுவதே ‘சாடை பேசுதல்’ !

அதுபோல , நேரடியாகக் கூறாது உள்ளுக்குள்ளே ஒன்றை மறைத்துக் கூறுவதே ‘உள்ளுறை’ !

ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்றில், “ பெற்ற குட்டியைத் தாய் முதலை சாப்பிடும் ! அப்படிப்பட்ட முதலைகள் இருக்கக்கூடிய ஊர்தானே நம் தலைவன் ஊர் ?” என்று தலைவி கூறுவாள்; இதில், தலைவி மறைமுகமாகக் கூறுவது,“ அந்தத் தாய் முதலைபோல இரக்கமில்லாக் கொடுமனம் கொண்டவரல்லவா நம்மைவிட்டுப் பிரிந்த தலைவன்?” என்பதுதான்!

கிராமங்களில் மூதாட்டிகள் சாடை பேசுதலில் வல்லவர்கள்! அவர்கள்தான் வல்லவர்கள் என்றால், அதனைப் புரிந்துகொள்ளும் திறமைகொண்டவர்களாகவும் குறைந்த வயதுப் பெண்கள் இருக்கின்றனர்!

“சேவல்தான் கோழியை விரட்டும் ! நான் பார்த்திருக்கிறேன்! இங்கு கோழியல்லவா சேவலை விரட்டுகிறது? – ஒரு கிழவி கூறுவாள்! “இவ் வீட்டில் மருமகள் கை ,மகன் கையைவிட ஓங்கியுள்ளது” என்பதைச் சாடையாகத் (உள்ளுறையாக) தெரிவிக்கிறாள் கிழவி!


“பால் பாத்திரத்தை நல்லாக் கழுவுடா ! பால் நல்லா இருந்தாலும் ,பாத்திரம் நல்லா இல்லைனா கெட்டுடும்!” –மூதாட்டி சாடை பேசுவாள்! “என் மகன் நல்லவந்தான் ;மருமகள்தான் அவனைக் கெடுத்துவிட்டான்!” என்பதையே அவள் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாள்!

இச் சாடைகளை எல்லாம் கவனித்துக்கொண்டே வருவாள் மருமகள்; நேரம் வரும்போது பிடிபிடி என்று பிடித்துவிடுவாள்! பல குடும்பங்களில் பர்க்கிறோமல்லவா?

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே நம் முன்னோர்களிடம் சாடை பேசுதல் இருந்திருக்கிறது என்பதற்கு மேலே நாம் பார்த்த தொல்காப்பிய வரிகளே சான்று!

முடிக்கும் முன் ,ஒன்றை நான் குறிப்பிடவேண்டும்!

“தொல்காப்பியர், கற்பனையாகப் புலவர்கள் எழுதிய பாடல்களுக்குத்தான் விதிகள் வகுத்தார்” – என்று ஓரிருவர் எழுதியுள்ளனர்! இது மிகவும் தவறானது!

“பழந்தமிழர் வாழ்க்கைதான் தொல்காப்பியத்திற்கு அடிப்படை! கற்பனைப் பாடல்கள் அல்ல!” – என்பதற்கு இந்த நமது ஆய்வே சான்று!
* * *


ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Jan 20, 2013 3:42 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்
படிக்கப் படிக்க சுவாரஸ்யம்

நல்ல பதிவிற்கு நன்றிகள் கோடி.




[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 21, 2013 9:52 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (14)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” (மெய்ப்பாட்டியல் 3)

-என்று எட்டு வகை மெய்ப்பாடுகளைத் (Physical manifestation of emotions)தொல்காப்பியர் கூறுகிறார்!

இவற்றில்,‘நகை’யை ,நகைச்சுவை என்று குறிக்கலாம்! சிரிப்பது படுசுவையாக உள்ளதே!
ஆனால் அழுகையை?

ஒருவர் அழுதுகொண்டிருக்கும்போது ,“இவர் பிரமாதமாக அழுகிறார்!” என்று சொன்னால் ? தர்ம அடி விழும்!

ஆனால் அழுகையை ‘அவலச் சுவை’ என்று பலரும் எழுதக் காண்கிறோம்!

அவர்கள் எழுதியது தவறா ? அப்படியானால் ‘சுவை’ என்றால் என்ன பொருள் ?

-வினாக்கள் எழுகின்றன!

உணவு தரும் நாச்சுவை,மகிழ்வு அடிப்படையில் எழும் சுவை! நாமறிந்ததே! நாமறியாச் சுவைபற்றித் தொல்காப்பியர் எங்கும் விளக்கியுள்ளாரா?

தொல்காப்பியர் மூன்று இடங்களில்(நூற்பா-563,899,1096) ‘சுவை’ என்ற சொல்லை எழுதுகிறார்;‘உருசி’ ,‘நுகர்ச்சி’ என்ற பொருள்களில்தான் அவை வருகின்றனவே அல்லாமல் ‘மெய்ப்பாடு’என்ற பொருளில் வரவில்லை.

இளம்பூரணர் நமக்குக் கைகொடுக்கிறார்! ‘சுவை’என்பதன் பொருளை, “ ‘சுவை’ என்பது ,காணப்படு பொருளாற் காண்போரகத்தின் வருவதோர் விகாரம்” (மெய்ப்பாட்டியல் 1 உரை) என விளக்குகிறார்!

அஃதாவது, ஒருத்தி அழுதுகொண்டிருக்கும்போது அவளிடத்திலே நடக்கும் வெளிப்பாடு, ‘மெய்ப்பாடு’ எனப்படும். அதற்குப் பெயர் ‘அழுகை மெய்ப்பாடு’ என்பதே;‘அழுகைச் சுவை’ அல்ல! ஆனால், அவள் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த நம் மனத்தில் எழுகிறதல்லவா ஒரு மாறுதல்(விகாரம்) அதற்குப் பெயர் ‘சுவை’!

‘சுவை’என்றால் ‘மகிழ்ச்சி’என்பது பொருள் அல்ல! மனவிகாரம்தான் ‘சுவை’!

‘மனவிகாரம்’ என்பது மகிழ்ச்சிக்கு உரியதாகவும் இருக்கலாம்,துயரத்திற்கு உரியதாகவும் இருக்கலாம்!

மெய்ப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பேசினால் ,எழுதினால் அந்த அணி (Figure of speech) ‘சுவையணி’ எனப்படும்; இந்த விளக்கத்தைத் தந்தது தண்டியலங்காரம்(68) ஆகும்!

தண்டியலங்காரத்தின்படி ‘சுவை’க்கு ‘மெய்ப்பாடு’ அடிப்படையாக உள்ளதை உணரலாம்!

நம் மனத்தில் அவலம் (வருத்தம்) பிறக்கும்போது ஏற்படும் மனவிகாரமே ‘அவலச் சுவை’!

ஐயங்கள் நீங்கிற்றா?
* ** *


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 9:57 pm

தமிழறிவை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும் பதிவு நன்று அய்யா




ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 22, 2013 12:57 am

தொடத் தொடத் தொல்காப்பியம்
சுடச் சுடப் பலகாரம்

நன்றிகள்.




[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 22, 2013 9:01 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (15)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33


தொல்காப்பியம் தமிழ்ச் சமுதாயத்தில் உள்ள பதரப்பட்டவர்களையும் உள்ளடக்கி இலக்கணம் வகுத்துள்ளது !

வணிகர்களை உள்ளடக்கிய ஒரு விதி :-

“எப்பொரு ளாயினும் அல்லது இல்லெனின்
அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்” (கிளவியாக்கம் 34)

அஃதாவது, “நல்லெண்ணெய் இருக்கிறதா?” என்று ஒரு கடையில் கேட்டால் ,கடைக்காரர் “இல்லை” என்ற பதிலைச் சொல்லக்கூடாது! வளரவேண்டிய கடையில் ‘இல்லை’ என்ற ஒலி ஒலிக்கக்கூடாது!

பிறகு , கேட்பவனுக்கு என்ன பதில் சொல்வது ?

“கடலை எண்ணெய் தவிர வேறு இல்லை” என்று கூறவேண்டும்!
முதலில் இருக்கும் பொருளைக் குறிப்பிட்டுவிட்டுக் கடைசியில் ‘அது தவிர வேறு இல்லை’ என்ற தொடரைச் சேர்த்துக் கூறவேண்டும்!

- இதுதான் தொல்காப்பிய விதி !

வணிகர்களின் இப் பழக்கம் தொல்காப்பியர் காலத்துக்கும் முன்பே இருந்தது என்பதை நாம் அறிதல் நலம்!

தொல்காப்பியரின் மேலை விதி சுட்டியது போலத் தமிழ் வணிகர்கள் கூறிவந்ததை, “என்னய்யா? உப்பு இருக்கிறதா என்றால் பருப்பு இருக்கிறது என்கிறாயே?” என்று கேலிசெய்வர்!

குறிப்பாகக் கேட்ட கேள்விக்கு உண்டு இல்லை என்ற பதிலை எதிர்நோக்கும் அவசர நிர்வாகம் பெருகிய நாளில்,இப்படிக் கேலிசெய்யும் பழக்கம் தோன்றியது!

வணிகர்களிடம் மட்டும்தான் ‘இல்லை என்று கூறக்கூடாது’
எனும் பழக்கம் இருந்ததா?


இல்லை! குடும்பங்களிலும் அப் பழக்கம் இருந்தது!

“இந்தா புள்ளே! அவ புளி கேட்டா , வாங்கித் தருகிறேன்னு சொல்லுவியா, இல்லைங்கிறியே?” –மாமியார் இரைவாள்! “நிறைந்த வீட்டில் இல்லைனே சொல்லக்கூடாது!” –அறிவுரை கூறுவாள்!

பல வீடுகளில் இன்றும் இச் சத்தத்தைக் கேட்கலாம்!

தமிழர்களிடம் வேரோடிப்போயிருந்த ஒரு நேர்மறைப் (Positve approach) பண்பின் அடையாளம் இது!

அதைத்தான் தொல்காப்பியம் பதிவு செய்துள்ளது!

* ** *




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 22, 2013 11:23 pm

தொடத் தொடத் தொல்காப்பியம்
இல்லை எனாத இனிய வாக்கியம்

நன்றிகள் கோடி.




[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 84 Previous  1, 2, 3 ... 43 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக