புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_c10ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_m10ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_c10 
11 Posts - 50%
heezulia
ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_c10ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_m10ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_c10ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_m10ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_c10ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_m10ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_c10ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_m10ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_c10ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_m10ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 24, 2012 2:22 pm

கசக்கிப் பிழியும் கார்ப்பரேட் நிறுவன பணிச்சுமையால் கணவன் மனைவி இடையே இணக்கமான நிலை மறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது உண்மைதான் என்று கூறும் வகையில் அமைந்திருந்தது நீயா நானாவில் பேசியவர்களின் கருத்து.

தமிழ்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகைக்குப் பின்னர் கை நிறைய சம்பளம்... கார்... சொந்த வீடு என இளம் வயதிலேயே இன்றைக்கு பலரும் செட்டில் ஆகிவிட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பதனால் சமூகத்தில் என்னுடைய மதிப்பு அதிகரிக்கிறது என்பது ஒரு சிலர் கூற்று.

இது வசதியாக இருக்கிறது என்று ஒரு சிலர் கருதினாலும் கார்ப்பரேட் கலாச்சாரம் சிலருக்கு புழுக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த புழுக்கம் ஏற்படுத்திய மன உளைச்சல் தாங்காமல் வேலையை விட்டவர்கள் அதிகம். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களும், வேலை பார்த்து அந்த சிரமம் தாங்காமல் வேலையை விட்டவர்களும் விஜய் டிவியில் இந்த வாரம் ஞாயிறு இரவு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.

நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் கிடைக்கும் வசதியும், ஐந்து இலக்கச் சம்பவமும் ஆச்சரியமளிக்கக் கூடியதுதான். சில மாதங்களிலேயே தன்னுடைய தேவைகள் எளிதில் நிறைவேறும் என்று கூறினர் ஒரு தரப்பினர். ஆனால் கார்ப்பரேட் நிறுவன வேலை என்பது புழுக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் குடும்பம், குழந்தைகளை கூட கவனிக்க முடியாது. பணத்தின் பின்னர் ஓடவேண்டியிருப்பதால் மனைவி குழந்தைகளைக்கூட மறக்கவேண்டியிருக்கிறது என்றனர் மற்றொரு தரப்பினர்.

நிகழ்ச்சியில் பேசிய ஒருவர், தனக்கு மாதம் இரண்டு லட்சம் ரூபாய் தர தயாராக இருந்த கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிவிட்டு விவசாயம் பார்ப்பதாக கூறினார். அதேபோல் கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிய ஒரு தம்பதியினர் பேசியது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், கார்ப்பரேட் நிறுவனப் பணிச்சூழல் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக கணவரிடம் இருந்து ஒரு முத்தம் கூட பெறமுடியாது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஒரு மனைவி. இதன் காரணமாகவே அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக விவசாயத்தொழில் செய்வதாக கூறினார்.

வொய்ட் காலர் ஜாப் என்ற கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிவிட்டு விவசாயத்தை தொட்டேன். இப்போது என்னுடைய உடைகள்தான் அழுக்காகியிருக்கிறது. ஆனால் என்னுடைய மனம் வெள்ளையாக இருக்கிறது என்றார் அவர். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனால் விவாகரத்துக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிச்சயமாகின்றன என்று கார்ப்பரேட் பணியினால் குடும்பங்கள் பிளவுபடுவதைக்கூறினார் ஒருவர்.

நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சிறப்பு விருந்தினர் திரு சோம. வள்ளியப்பன், கார்ப்பரேட் நிறுவனங்களினால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு என்று தெரிவித்தார். நாம் எந்த அளவிற்கு நேரத்தை பிரித்து பணி புரிகிறோம். விடுமுறையை எவ்வாறு திட்டமிட்டு செலவிடுகிறோம் என்பதைப் பொருத்து கார்ப்பரேட் நிறுவனங்களில் மகிழ்ச்சியாக பணிபுரியும் என்றும் கூறினார் அவர்.

நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு சிறப்பு விருந்தினர் திருமுருகன் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஜனநாயகம் என்பது கிடையாது என்று குற்றம் சாட்டினார். அதைவிட முக்கியமான விசயம் கார்ப்பரேட் நிறுவனங்களில் மனிதநேயம் என்பதை பார்க்க முடியாது. பணியாளர்களின் சத்துக்களை உறிஞ்சிவிட்டு கடைசியில் சக்கையாக துப்பிவிடும் என்று கூறினார். அடிப்படை கோட்பாடு என்பதையும் எதிர்பார்க்க முடியாது என்றார் திருமுருகன். நிறுவனம் கார்ப்பரேட். இங்கே மனிதநேயம் கிடையாது என்றார்.

கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்ல அமைப்பு இருக்கிறது. ஆனால் அதில் பணிபுரியும் மனிதர்கள்தான் அந்த அமைப்பினை உடைக்கின்றனர். இதுதான் பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகிறது என்று கூறினார் நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத். எந்த பணியாக இருந்தாலும் அதில் சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இரண்டையும் சமாளித்து திறம்பட பணிபுரிபவர்கள் ஒருசிலர்தான்.

கார்ப்பரேட் நிறுவனங்களில் கிடைக்கும் வசதிக்காக சிலர் காலம் முழுவதும் சிலர் அங்கு பணிபுரிகின்றனர். கடைசி வரைக்கும் பணத்தின் பின்னால் ஓட வேண்டிய அவசியமில்லை என்று நினைப்பவர்கள் அதிலிருந்து வெளியேறிவிடுகின்றனர். உங்க அனுபவம் எப்படி? நீங்க என்ன நினைக்கிறீர்கள் ..........

ஒன்இந்தியா தமிழ்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 24, 2012 2:33 pm

இந்த நீயா நானாவே பல கார்பரேட் நிறுவனங்களின் விளம்பரத்தால்த்தான் நடக்கிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Dec 24, 2012 3:38 pm

பணம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது அதை சம்பாதிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது சம்பாதிக்க வேண்டும் ஆனால் பணத்துக்காகவே மற்றைய சந்தோஷங்களை தியாகம் செய்வது மிக மிக முட்டாள்தனமானது. பேராசை பெரும் நட்டம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.



நேர்மையே பலம்
ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   5no
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Dec 24, 2012 4:00 pm

முத்தத்தை விடுங்க ... சிலர் சத்தத்தை கூட கேட்க முடியவில்லை . மனைவி மாலை வருவதற்குள் கணவனை இரவு ஷிப்ட்க்கு கேப் (கார்)வந்து அள்ளி செல்கிறது . மறுநாள் கணவன் வீடு திரும்பும் பொழுது எஞ்சியிருப்பது நேற்று இரவு சமைத்து பிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவு மட்டுமே ...இதற்கிடையில் குழந்தையை எந்த ஷிப்டில் வீட்டில் பார்த்துகொள்வார்கள் என்பது ?????

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 24, 2012 6:43 pm

பல இடங்களில் மிக வருத்தமான செயல்கள் நடக்கத்தான் செய்கிறது.தெளிவான சிந்தனை மக்களுக்கே தேவை

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 24, 2012 11:59 pm

சூப்பருங்க நல்ல பதிவு ஆனால் வேறு வழி ? சோகம்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Dec 25, 2012 3:10 am

கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவோரின் கவனத்திற்கு
1. கல்யாணத்திற்கு முன்னும், கல்யாணத்திற்கு பிறகு ஒரு குழந்தை பிறக்கும் வரையிலும்
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி புரியலாம். கணவன் மனைவி இருவரும் நல்ல சம்பாத்தியம் ஈட்டலாம். இருவரும் ஒவ்வொரு வார இறுதியிலும் சுற்றுலா சென்று தேன்நிலவு கொண்டாடலாம்.
2. ஒரு குழந்தை பிறந்ததும் மனைவி மட்டும் வேலையை விட்டுவிட்டு, கிட்டத்தட்ட ஒரு வருடம் தன் பெற்றோர் வீட்டில் தங்கி இருக்கலாம். அம்மா வீட்டில் உள்ளபோது, கணவனின் வேலைபளு பெண்களுக்கு அவ்வளவாகத் தெரியாது.
3. அடுத்தபடியாக கணவனும் ஓரளவு சம்பாதித்ததும் கார்ப்பரேட் வேலைக்கு டாட்டா காட்டிவிட்டு, மனஉளைச்சல் தராத, பகல் நேரம் மட்டும் செய்வதுபோல் உள்ள வேறு வேலையை தேடிக்கொண்டு இன்பமாக வாழலாம்.
4. பணமும் ஓரளவு இருக்கும். மன அமைதியான வாழ்க்கையும் கிடைக்கும்.
(POM POM = Plenty Of Money , & Peace Of Mind )




ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!   425716_444270338969161_1637635055_n
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 25, 2012 10:37 am

ச. சந்திரசேகரன் wrote:கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவோரின் கவனத்திற்கு
1. கல்யாணத்திற்கு முன்னும், கல்யாணத்திற்கு பிறகு ஒரு குழந்தை பிறக்கும் வரையிலும்
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி புரியலாம். கணவன் மனைவி இருவரும் நல்ல சம்பாத்தியம் ஈட்டலாம். இருவரும் ஒவ்வொரு வார இறுதியிலும் சுற்றுலா சென்று தேன்நிலவு கொண்டாடலாம்.
2. ஒரு குழந்தை பிறந்ததும் மனைவி மட்டும் வேலையை விட்டுவிட்டு, கிட்டத்தட்ட ஒரு வருடம் தன் பெற்றோர் வீட்டில் தங்கி இருக்கலாம். அம்மா வீட்டில் உள்ளபோது, கணவனின் வேலைபளு பெண்களுக்கு அவ்வளவாகத் தெரியாது.
3. அடுத்தபடியாக கணவனும் ஓரளவு சம்பாதித்ததும் கார்ப்பரேட் வேலைக்கு டாட்டா காட்டிவிட்டு, மனஉளைச்சல் தராத, பகல் நேரம் மட்டும் செய்வதுபோல் உள்ள வேறு வேலையை தேடிக்கொண்டு இன்பமாக வாழலாம்.
4. பணமும் ஓரளவு இருக்கும். மன அமைதியான வாழ்க்கையும் கிடைக்கும்.
(POM POM = Plenty Of Money , & Peace Of Mind )

சூப்பருங்க அருமையிருக்கு



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 25, 2012 11:23 am

balakarthik wrote:இந்த நீயா நானாவே பல கார்பரேட் நிறுவனங்களின் விளம்பரத்தால்த்தான் நடக்கிறது
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக