புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
4 Posts - 4%
prajai
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
1 Post - 1%
Rutu
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
1 Post - 1%
bala_t
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
1 Post - 1%
Pradepa
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
28 Posts - 3%
sugumaran
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
18 Posts - 2%
prajai
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
5 Posts - 0%
Rutu
குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_m10குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:36 pm

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) TN_120430134507000000

வாக்கிய பஞ்சாங்கப்படி, குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் இதையொட்டி ஏற்படும் பலன்களைக் காணலாம்.

நற்பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம்.

சுமாரான பலன் பெறும் ராசிகள்: மிதுனம், தனுசு, கும்பம், மீனம்.

பரிகார ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம்.

தெரிந்து கொள்வோம் குருவை!

சொந்த வீடு - தனுசு, மீனம்
உச்சராசி - கடகம்
நீச்சராசி - மகரம்
திசை - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
நிறம் - மஞ்சள்
வாகனம் - யானை
தானியம் - கொண்டைக்கடலை
மலர் - வெண்முல்லை
வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
நிவேதனம் - கடலைப்பொடி சாதம்
உலோகம் - தங்கம்
இனம் - ஆண்
உறுப்பு - தசை
நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகைகிரகம் - புதன், சுக்கிரன்
மனைவி - தாரை
பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்
பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
தகுதி -ராஜகிரகம்
வழிபாட்டுபலன் -நல்லபிள்ளைகள், புத்திசாலித்தனம், கவுரவம்

குரு ஸ்லோகம்

குருபிரம்மா குரு விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷõத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரு காயத்ரி

விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்

வியாழநோக்கம் வந்தாச்சா: குரு இருக்கும் ராசியைவிட அவர் பார்க்கும் இடங்களுக்கே பலம் அதிகம். இதனையே குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவர். நவக்கிரகங்களில் குரு மட்டுமே பூர்ணசுபகிரகம் ஆவார். இவருக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உண்டு. ரிஷபத்தில் இருந்து 5,7,9 பார்வைகளால் கன்னி, விருச்சிகம்,மகர ராசிகளைப் பார்க்கிறார். இந்த ராசியினர் ஓராண்டுகாலத்திற்கு குருவின் பார்வையால் அனுகூலம் பெறுவர். இதை அடிப்படையாகக் கொண்டே ஜாதகம் பார்க்கும்போது, வியாழநோக்கம் வந்தாச்சா? என்று கேட்கும் வழக்கம் ஏற்பட்டது. ராசி, லக்னத்தை குரு பார்க்கும் போது தான் ஒருவருக்கு வாழ்வில் திருமணயோகம் உண்டாகும். திருமணம் மட்டுமின்றி, குழந்தைப்பேறு, நல்ல குடும்பம், செல்வம், பொன்பொருள்சேர்க்கை, ஆன்மிக சிந்தனை ஆகிய நற்பலன்களை குருபகவானே தருகிறார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:38 pm

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) TN_120430135237000000

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1)-நல்லநேரம் பொறந்தாச்சு!
ஏப்ரல் 30,2012



கல்யாண யோகம் வந்தாச்சு! 80/100

லட்சிய நோக்குடன் செயல்படும் மேஷராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் உள்ளார். ராசிக்கு பாக்ய, விரய ஸ்தான அதிபதியாக உள்ள குரு தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் இடம்பெறுவது சிறப்பாகும். ரிஷபத்தில் உள்ள குரு 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே எதிரி, ஆயுள் பலம், தொழில் ஸ்தானங்களை பார்க்கிறார். பணவரவு புதிய இனங்களில் வந்துசேரும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தம்பி, தங்கை உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பர். வீடு, வாகனத்தில் தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவதற்கும் யோகமுண்டு. புத்திரர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் மீதான பாசமும் அதிகரிக்கும். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்களால் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆயுள் ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால் உடல்பலம் கூடும். தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து வந்த பகையுணர்வு நீங்குவதோடு உதவியும் கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமண முயற்சி எளிதில் நிறைவேறும். திட்டமிட்டபடி மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெறுவர். மற்ற தொழிலதிபர்களும் விறுவிறுப்புடன் செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய கிளை துவங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் அதிக லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கு விற்பனை கூடுவதுடன் அடிக்கடி வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவர்.

பணியாளர்கள்: அரசு துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு பணிகளைக் குறித்த காலத்தில் முடிப்பர். பதவி உயர்வு, விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை அனைத்தும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் கடமையாற்றி குறித்த காலத்தில் பணிகளைச் செய்து முடிப்பர். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகை பெறுவர். எதிர்பார்த்த கடனுதவி தேவையான சந்தர்ப்பத்தில் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத்தேவைக்கான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். உறவினர்களில் மத்தியில் அந்தஸ்து கூடும். சுபவிஷயங்களைத் தலைமையேற்று நடத்துவர். அவரவர் தகுதிக்கேற்ப ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபம் கிடைக்கும்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து தரத்தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைத்து வரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகநேரம் ஒதுக்கி அக்கறையுடன் படிப்பர். படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: அனைவரிடமும் இன்முகத்துடன் நடந்து கொள்வர். சமூகநலனில் அக்கறையுடன் ஈடுபட்டு மக்கள் செல்வாக்கு காண்பர். தாராள செலவில்தொண்டர்கள் மத்தியில் சுய அந்தஸ்தை உயர்த்துவர். நீண்டநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு தலைமையின் ஆதரவால் கிடைக்கப் பெறுவர்.

விவசாயிகள்: விவசாயப்பணிகளை விரைந்து நிறைவேற்ற பணவசதி குறைவின்றிக் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு. நவீன உழவுக்கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால் தாராள பணவரவும், குடும்பத்தில் சுபநிகழ்ச்சியும் உண்டாகும். செல்ல வேண்டிய தலம்: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

பரிகாரப்பாடல்:
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

குரு வக்ர பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குரு வக்ரகதி பெறுகிறார். ஏற்கனவே குருவால் ஏற்படும் நற்பலன்கள் வக்ரகாலத்தில் இன்னும் கூடுதல் நன்மையாக மாறும். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அமையப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள்,வியாபாரிகள், பணியாளர்கள் முன்னேற்றம் பெறுவதோடு தாராள பணவரவும் கிடைக்கப் பெறுவர். எதிர்கால நலன்கருதி சேமிக்கவும் வாய்ப்புண்டு. உறவினர்களின் ஒத்துழைப்பால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். மறைமுக எதிரிகள் பலமிழந்து போவர். வெற்றி தேவதையின் அருள்பார்வை கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டாகும். நீண்டகாலமாக வாங்க நினைத்த ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். உற்சாகத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:40 pm

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) TN_120430135835000000

பிள்ளையால் சாதகம் வேலையில் பாதகம் 55/100

ஆடம்பர வாழ்வில் நாட்டம் மிக்க ரிஷபராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசியில் இடம் பெற்றுள்ளார். ராசியில் குருபகவான் அமர்வது ஜென்மகுரு என்கிற நிலையாகும். இதனால் மனக்குழப்பமும், செயல் தடுமாற்றமும் அவ்வப்போது தலைதூக்கும். ராசியில் அமர்ந்த குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணியம், புத்திரம், ஏழாம் இடமான மனைவி, நட்பு, ஒன்பதாம் இடமான பிதா, சவுபாக்ய வாழ்வு ஆகிய இடங்களை பார்க்கிறார். குருவின் பார்வை பதியும் ராசிகளின் வழியாக உங்கள் நற்பலன் கிடைக்கும். குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். வாகன பயணத்தில் மிதவேகத்தைப் பின்பற்றுவது அவசியம். புத்திரர் உங்களின் சிரமத்தை அறிந்து உதவி செய்ய முன்வருவர். அவர்களின் ஒத்துழைப்பு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை காண்பர். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக சோர்வு அடிக்கடி உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு சொத்தின் பேரில் கடன் பெறவும், சொத்துக்களை விற்கவும் நிர்ப்பந்தமான சூழ்நிலை உருவாகும். பிறர் பொருளை பாதுகாப்பது, ஜாமின் கொடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்து போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் செயல்பாடுகளில் தாமத நிலையை எதிர்கொள்வர். மற்ற தொழிலதிபர்களும் கடின உழைப்பால் தடைகளைத் தகர்த்தெறிய முற்படுவர். லாபத்தை தக்கவைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும். அளவான உற்பத்தியில் சீரான லாபம் காண்பர். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மட்டும் மேற்கொள்வது நல்லது.தொழிலாளர்களின்ஒத்துழைப்பு கிடைக்கும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் சுமாரான விற்பனையால் மிதமான லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளும் மறைமுகப் போட்டிகளைச் சந்திப்பர். சகவியாபாரிகளின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. மாற்றுத்திட்டம் மூலம் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெற முற்படுவர். அனுபவசாலிகளின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவர். தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமதநிலையைச் சந்திப்பர். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலைமை சீராகும். சக பணியாளர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது நல்லதல்ல. முக்கிய தேவைகளை நிறைவேற்ற கடன் பெற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சலுகை பெறுவதில் பொறுமை மிக அவசியம். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப ஆதாயம் கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியை குறித்தநேரத்தில் முடிக்க இயலாமல் அவதிப்படுவர். நிர்ணயித்த காலத்திற்குள் முடிக்க முடியாமல் அவப்பெயர் காண்பர். நிர்வாகத்தினரிடம் மோதல் போக்கைத் தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வு, சலுகை பெறுவதில் நிதானம் அவசியம். குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலை அடைவர்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் வெளிவட்டார பழக்கவழக்கம் குறைப்பதால் மட்டுமே படிப்பில் தேர்ச்சி பெறமுடியும். மற்ற துறை மாணவர்களும் படிப்பில் மந்தநிலை காண்பர். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள் பெற்றோர் அறிவுரையை ஏற்பது எதிர்கால நலனுக்கு வழிவகுக்கும்.

அரசியல்வாதிகள்: மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிவரும். சமூகப்பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். அதிகாரிகளிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர்.

விவசாயிகள்: விவசாயப்பணிகளைச் செய்ய தேவையான பணம் பெறுவதில் சுணக்கம் உண்டாகும். மிதமான மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் உண்டு.

பரிகாரம்:சிவபெருமானை வழிபடுவதால் தொழில் தடைகள் நீங்குவதோடு லாபமும் அதிகரிக்கும்.

செல்லவேண்டிய தலம்: மதுரை மீனாட்சியம்மன் கோயில்

பரிகாரப்பாடல்: மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே.

வக்ர கால பலன்: ராசிநாதன் சுக்கிரனுக்கு பகை கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் இன்னொருபகை கிரகமான குருபகவான் 10.10.2012 முதல் 6.2.2013 வரை வக்ரகதி பெறுகிறார். இந்த நாட்களில் அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றுவதில் கூட தாமதம் உண்டாகும். குடும்பச் செலவுக்கு திண்டாட நேரிடும். கையிருப்பு கரைவதோடு சிலருக்கு கடன் வாங்கும் நிர்பந்தமும் உண்டாகும். வேண்டாத சிந்தனைகளால் கவலை அதிகரிக்கும். பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள நேரிடும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழிலதிபர், வியாபாரிகளுக்கு விடாமுயற்சி தேவைப்படும். அரசு தொடர்பான அனுகூலம் பெற வாய்ப்பில்லை. பணியாளர்கள் ஓரளவே சலுகை பெறுவர். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது அவசியம். இல்லாவிட்டால் வீண்விரயம் தான். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பதால் பிரச்னையைத் தவிர்க்கலாம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:42 pm

உடல்நிலை திருப்தி மனநிலை அதிருப்தி 65/100

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) TN_120430140524000000

பிறர் கருத்தை மதித்து நடக்கும் மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் குருபகவான் உள்ளார். கடந்த பெயர்ச்சியில் ஆதாய இடத்தில் இருந்து தாராள பணவரவு, அளப்பரிய நன்மைகளை வழங்கினார். குருவின் இப்போதைய பெயர்ச்சி நடைமுறை வாழ்வில் சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். இருப்பினும் குருபார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக அனுகூல பலன்களைப் பெறுவீர்கள். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு நான்காம் இடமான வீடு, வாகனம், ஆறாம் இடமான பிணி, சத்துரு, எட்டாம் இடமான ஆசை நிறைவேறுதல் ஆகியவற்றை பார்க்கிறார். விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியைத் தக்கவைக்க முடியும். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர். புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலைவாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வ சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு. உடல் நிலை திருப்திகரமாக இருக்கும். இதனால் சிரமம் குறைந்து நடைமுறை வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு. கணவன், மனைவி தங்களுக்குள் கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவர். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். மன அமைதியை பாதுகாக்க தியானம், தெய்வ வழிபாடு ஆகியவை உதவும்.

தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். மற்ற தொழிலதிபர்களும் விடாமுயற்சியுடன் குறுக்கீடுகளை முறியடித்து முன்னேறுவர். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறைச் செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் போட்டியைச் சந்திப்பதால் சுமாரான லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கும் இந்த நிலையே தொடரும். சகவியாபாரிகளின் செயல்பாட்டால் அதிருப்தி கொள்வர். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்க வைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். சிலர் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சகபணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதத்தில் ஈடுபடுவது கூடாது. சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணிச்சுமை காரணமாக குளறுபடியான மனநிலைக்கு ஆளாவர். விருப்பமில்லாத பணி மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். செலவில் சிக்கனம் தேவை. குடும்ப பெண்கள் கணவரின் கருத்துக்கு மதிப்பளிப்பது அவசியம். இல்லாவிட்டால் குடும்ப அமைதிக்கு வழியில்லை. செலவினங்களை வகைப்படுத்தி திட்டமிடுதலுடன் செலவழிப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் மந்தநிலைக்கு உள்ளாவர். கணவர், தோழியர் வகையில் எதிர்பார்த்த உதவி குறைந்த அளவில் கிடைக்கும்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் படிப்புச் செலவுக்கான பணத்தைப் பெறுவதில் தாமதநிலை அடைவர். கவனச்சிதறல் காரணமாக தரத்தேர்ச்சி விகிதம் குறையும். மற்ற துறை மாணவர்களும் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம். சக மாணவர்களின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.

அரசியல்வாதிகள்: பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். தரவாளர்களின் விருப்பங்களை நிறைவேற்ற அதிக பணம் செலவாகும். அதிகாரிகளிடம் இதமாகப் பேசி மென்மையுடன் அணுகுவது நல்லது. தங்களின் லாபத்திற்காக எதிரிகள் சமரச முயற்சிக்கு முன் வருவர். சூழ்நிலைக்கு ஏற்ப ஆராய்ந்து செயல்படுவது அவசியம்.

விவசாயிகள்: பயிர் வளர்ப்பில் நடைமுறைச் செலவு கூடும். மாற்று பயிர் வளர்ப்புத் திட்டங்களை செயல்படுத்துவதால் ஓரளவு லாபம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைக்கும் லாபம் குடும்பத்தேவையை நிறைவேற்ற உதவும். நிலம் தொடர்பான பிரச்னையில் சமரச முயற்சிக்கு வாய்ப்புண்டு.

பரிகாரம்: லட்சுமிநரசிம்மரை வழிபடுவதால் குடும்பத் தேவை நிறைவேறும் விதத்தில் வருமானம் கூடும்.

செல்ல வேண்டிய தலம்: விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் லட்சுமிநரசிம்மர் கோயில்

பரிகாரப்பாடல்: ஆடிப் பாடி அகம் கரைந்து
இசை பாடிப் பாடி கண்ணீர் மல்கி
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ்வாணுதலே.

வக்ர கால பலன்: ராசிநாதன் புதனுக்கு பகை கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான்10.10.2012 முதல் 6.2.2013 வரை வக்ரகதி பெறுகிறார். இதனால் மற்றவர்களின் செயல்பாடு கண்டு மனவருத்தத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் பேச்சை விரும்பி நடந்தவர்கள் கூட விலகிச் செல்ல வாய்ப்புண்டு. குடும்பச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லும். திட்டமிடுதல் இல்லாமல் அன்றாடப்பணிகளில் சிரமத்திற்கு உள்ளாவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கடின அலைச்சல் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் மீதான நம்பிக்கை குறையும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடு அதிருப்தி தரும். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகரிப்பதோ, புதிய முயற்சி மேற்கொள்வதோ கூடாது. வியாபாரிகள் வாடிக்கையாளர் அதிருப்திக்கு ஆளாகலாம் கவனம். பணியாளர்கள் லுகை பெறுவதில் தாமதம் உண்டாகும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:43 pm

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) TN_120430141142000000

வீட்டில் மகிழ்ச்சி பணியில் புத்துணர்ச்சி 85/100

வசீகரிக்கும் குணத்தால் பிறரை ஈர்க்கும் கடகராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் மிகுந்த ஆதாய பலன்களைத் தரும் வகையில் உள்ளார். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு மூன்றாம் இடமான புகழ், தைரியம், ஐந்தாம் இடமான புத்திர, பூர்வ புண்ணியம், ஏழாம் இடமான நட்பு, களத்திர ஸ்தானங்களை பார்க்கிறார். கடந்த காலங்களில் இருந்து வந்த சிரமம் அனைத்தும் அடியோடு நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். உங்களைப்புறக்கணித்த சொந்தபந்தம் வலிய வந்து உறவு கொண்டாடுவர். மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை தாராளச் செலவில் நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் செல்வாக்கு கூடும். புத்திரர் நன்கு படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர். வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகமுண்டு. உடல் ஆரோக்கியத்துடன் திகழும். மூத்த சகோதரர்கள் முக்கிய தருணங்களில் தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்துவர். குடும்ப ஒற்றுமை சிறந்தோங்கும். எதிர்கால தேவை கருதி சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கணிசமாக அளவில் கையிருப்பு உயரும். வெளியூர் பயணத்தை லாபநோக்கில் நடத்தி வெற்றி காண்பீர்கள். திருமண வயதினருக்கு வியாழ நோக்கம் அமைவதால் திருமணம் விரைவில் கைகூடும்.

தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் விறுவிறுப்புடன் செயல்பட்டு பொருள் உற்பத்தியைப் பெருக்கி லாபம் காண்பர். மற்ற தொழிலதிபர்களுக்கும் பன்மடங்கு ஆதாயம் உயரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வர். நவீன எந்திரங்களின் மூலம் தொழிலை நவீனமயமாக்குவர். தொழிலாளர்கள் நிறுவன வளர்ச்சியில் அக்கறை கொள்வர்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயத்தை உயர்த்துவர். போட்டி குறைந்து விற்பனை இலக்கை எளிதில் எட்ட இயலும். புதிதாகக் கிளை தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் திறமையை வெளிப்படுத்துவர். நிர்வாகத்தினரின் ஆதரவால் பதவி உயர்வு, பாராட்டு கிடைக்கும். பணிச்சுமையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர். எதிர்பார்த்த சலுகைகள் படிப்படியாக கிடைக்கத் தொடங்கும். சக பணியாளர்களிடம் நட்புக்கரம் நீட்டுவர். பணியிடத்தில் சுதந்திர உணர்வுடன் பணியாற்றுவர். அதிகாரிகளின் மத்தியில் செல்வாக்கு கூடும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு பணியை செவ்வனே நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், பிற சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். குடும்ப பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு கணவர், உறவினர்களிடம் செல்வாக்கு காண்பர். குடும்ப செலவுக்கான பணவசதி தாராளமாக கிடைத்து வரும். அவரவர் தகுதிக்கேற்ப பொன், பொருள் சேர்க்கை கிடைக்கும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் முன்னேற்றமும், நல்ல லாபமும் காண்பர்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்விவளர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்களும் தரத்தேர்ச்சி பெறுவர். சக மாணவர்கள் மத்தியில் நற்பெயர் உருவாகும். ஆரம்ப,மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் படிப்பிற்காக அதிக நேரம் ஒதுக்குவர். படிப்புக்கான பணவசதி சீராகக் கிடைக்கும். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். படிப்பு முடித்துவிட்டு, வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: இதுநாள்வரை செய்து வந்த சமூகப்பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு தாமாக வந்து சேரும். ஆதரவாளர் மத்தியில் செல்வாக்கு கூடும். அதி காரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் பணிக்கு புத்திரர்களாலான உதவிகளைச் செய்வர். எதிரிகள் தாமாக விலகிச் செல்வர். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும் . வழக்குவிவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

விவசாயிகள்: விவசாயப்பணி சிறப்பாக நடைபெறும். அமோக விளைச்சலும், அதன்மூலம் அபரிமிதமான லாபமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் கிடைக்கும். நிலம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். சுமூகத்தீர்வால் நிலப்பிரச்னை நல்லவிதமாகத் தீரும்.

பரிகாரம்: ராமரை வழிபடுவதால் வாழ்வில் அனுகூலமான பலன்கள் பன்மடங்கு உயரும்.

செல்ல வேண்டிய தலம்: கும்பகோணம் ராமர் கோயில்.

பரிகாரப்பாடல்: நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்.

வக்ர கால பலன்: உங்கள் ராசிநாதன் சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் சம அந்தஸ்து உள்ள கிரகமான குருபகவான் 10.10.2012 முதல் 6.2.2013 வரை வக்ரகதி அடைகிறார். இந்த நிலை, உங்கள் வாழ்வில் புதிய சாதனைகளை உருவாக்க உதவும். நீண்டநாள் எதிர்பார்ப்பு கூட நிறைவேறும். திட்டமிட்டிருந்த பணிகளை உற்சாகத்துடன் செயல்படுத்துவீர்கள். பணவரவும் திருப்திகரமான வகையில் கிடைக்கும். சமூகத்தில் பேச்சுக்கு மதிப்பிருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி தாராள பணச் செலவில் நடந்தேறும். தொழிலில் அதிர்ஷ்டகரமான வாய்ப்பின் மூலம் வருமானம் கூடும். குடும்பத்தினர்களின் தேவைகளை நிறைவேற்றி சந்தோஷம் காண்பீர்கள். தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணியாளர்கள் புதிய பதவி, பொறுப்பு, பாராட்டுகளைப் பெற்று மகிழ்வர். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமையுடன் இருப்பர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:44 pm


குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) TN_120430143626000000
பத்தாமிட குருவால் பணியில் கவனம் 55/100

துணிச்சலுடன் வாழ்வை எதிர்நோக்கும் சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்த குருபகவான் பெயர்ச்சியாகி இப்போது பத்தாம் இடத்தில் உள்ளார். கடந்த காலங்களில் அளப்பரிய நற்பலன்களை குருவருளால் பெற்றீருப்பீர்கள். பத்தாம் இடத்தில் அமர்வால் குரு, உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவார். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு இரண்டாம் இடமான தனம், குடும்பம், நான்காம் இடமான தாய், வீடு, வாகனம், ஆறாம் இடமான கடன், பிணி, வழக்கு ஸ்தானங்களை பார்க்கிறார். பத்தில் குரு பதவிக்கு இடர் என்பது ஜோதிட சாஸ்திர மொழி என்றாலும் சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் குரு அமர்வதால் கஜ கேசரி யோக பலனைத்தரும். எனவே, நன்மையும் சிரமமும் கலந்த பலன் வாழ்வில் உண்டாகும். தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்துவிடுவீர்கள். தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தில் தேவையான நடைமுறை மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். புத்திரர் வேண்டாத நட்பும், பிடிவாத குணமும் கொண்டு செயல்படுவர். இதமான அணுகுமுறையால் அவர் களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்துவீர்கள். ஆன்மிகம் நாட்டம் அதிகரிக்கும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவீர்கள். உடல்நலனில் அக்கறை ஏற்படும். எதிரியால் இருந்து வந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும். கடன் தொந்தரவை ஓரளவு சரிக்கட்டுவீர்கள். தம்பதியர் ஒற்றுமை உணர்வுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்கள் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பர். ஆடம்பர எண்ணத்துடன் அதிக பயன் தராத பொருள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் ஏற்படும் குறுக்கீடுகளை மாற்றுத்திட்டத்தின் மூலம் முறியடிக்க முயல்வீர்கள். தொழில் சார்ந்த பயணத்தை அடிக்கடி மேற்கொள்வீர்கள்.

தொழிலதிபர்கள்: ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ்,இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார,மின்னணு உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் உற்பத்தி தரத்தை உயர்த்துவதில் குறுக்கீடுகளைச் சந்திப்பர். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வர். நிர்வாக நடைமுறைச்செலவு அதிகரிக்கும். கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது நல்லதல்ல. புதிய தொழில் முயற்சியை இப்போதைக்கு தவிர்ப்பது அவசியம்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மின்சார, மின்னணு பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் விற்பனை இலக்கை எட்டுவதில் தாமதத்தை சந்திப்பர். புதிய உத்திகளின் மூலம் வியாபாரத்தை மேம்படுத்த முயற்சிப்பர். சகவியாபாரிகளின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். விரிவாக்கம், புதிய தொழில் முயற்சிகளை அடுத்த குருபெயர்ச்சிக்குப் பிறகு செய்வது நல்லது.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணிசார்ந்த புதிய விஷயங்களை புரிந்து கொள்வதில் தயக்கம் கொள்வர். சகபணியாளர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். நிர்வாக அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது மிக அவசியம். திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே நிர்ணயித்த காலவரையறைக்குள் பணியிலக்கை எட்ட முடியும். பணவரவு சீராக இருக்கும். பணிச்சுமையால் வருத்தம் ஏற்பட்டாலும், உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகையில் சில கிடைக்கும். பணியிடத்தில் பணி தவிர்த்த பிறவிஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியில் குளறுபடிகளை எதிர்கொள்வர். துறை சார்ந்த அனுபவசாலியின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவர். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். பதவி உயர்வு, சலுகை பெறுவதில் தாமதம் உண்டாகும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். தாய்வழி உறவினர்களின் சீர்முறையால் சந்தோஷ வாழ்வு உண்டாகும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் சுமாரான உற்பத்தி, விற்பனை காண்பர். பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் பாராட்டும் விதத்தில் படிப்பர். மற்ற துறை மாணவர்களும் கல்வியில் வளர்ச்சி காண்பர். படிப்புக்கான பண வசதி சீராக கிடைக்கும். வெளிவட்டார விஷயங்களில் ஈடுபாடு குறையும். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேற்றம் காண்பர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகள்: ஆதரவு மனப்பாங்குடன் நடந்த சிலரே உங்களின் எதிரியாக மாறிவிடுவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். புத்திரர், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகளின் மறைமுக சூழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் ஓரளவே சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும்.

விவசாயிகள்: விவசாயப்பணிகளை நிறைவேற்ற அதிகச் செலவும், சிரமும் ஏற்படும். மிதமான மகசூலும், அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற லாபம் குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். நில விவகாரம் சமரச முயற்சியால் தீர்ந்துவிடும். நிலம் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். அனுகூலத் தீர்வு கிடைக்கும்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் தொழில் சார்ந்த பிரச்னை அனைத்தும் நீங்கி லாபம் பெருகும்.

செல்ல வேண்டிய தலம்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில்.

பரிகாரப்பாடல்: அருமறை முதல்வனை ஆழிமாயனைக்
கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனை
திருமகள் தலைவனை தேவ தேவனை
இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.

வக்ர கால பலன்: உங்கள் ராசிநாதன் சூரியனுக்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான் 10.10.2012 முதல் 6.2.2013 வரை வக்ரகதி பெறுகிறார். இதனால் மனதில் எதிர்மறை எண்ணம் உருவாகலாம் கவனம். தொழிலில் ஆர்வம் குறையும். வெளியூர் பிரயாணம் செய்ய ஆசைப்படுவீர்கள். ஆடம்பரம் மேலோங்கும். செலவு அதிகரிப்பதால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்கத் தயங்குவீர்கள். வீடு வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை செய்து முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் நிர்வாகச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவர். வியாபாரிகளுக்கு கடின உழைப்பு தேவைப்படும். பணியாளர்களுக்கு சலுகை ஓரளவே கிடைக்கும். பூர்வ சொத்தை விற்று கடன் அடைக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். தம்பதியர் பொறுப்புடன் நடந்து குடும்ப நலன் காத்திடுவர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:46 pm

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) TN_120430145125000000

சொத்து வாங்குவீங்க! சுகமாய் இருப்பீங்க! 75/100

தகுந்த திட்டத்துடன் செயல்புரிந்து வெற்றிபெறும் கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான ரிஷபத்தில் குருபகவான் மிகுந்த அனுகூலத்துடன் உள்ளார். கடந்தகாலத்தில் இருந்த குருவின் அமர்வு வாழ்வில் பலவித கஷ்டங்களை தந்தது. இப்போதைய அமர்வு உங்கள் மாற்றத்தை உருவாக்கும். குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசியையும் ராசிக்கு மூன்றாம் இடமான புகழ், தைரியம், ஐந்தாம் இடமான பூர்வ புண்ணியம், புத்திரம் ஆகிய ஸ்தானங்களையும் பார்க்கிறார். இதனால் உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்கிற தியும், புதிய நம்பிக்கையும் ஏற்படும். ஓடிப்போகிறவருக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்பது ஜோதிட சாஸ்திர மொழி. தப்பு செய்து விட்டு, ஓடிப்போனாலும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்று இதற்கு பொருள் சொல்வார்கள். அந்தளவுக்கு பாதுகாப்பை இந்த பெயர்ச்சி காலம் தரும். உங்கள் வாழ்வில் ஓடி ஓடி உழைத்து முன்னேற புதிய வாய்ப்பு வாசல்கதவைத் தட்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதால், நன்மையும் தாராள வருமானமும் கிடைக்கும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். தம்பி, தங்கைகளுக்கு திட்டமிட்ட திருமண நிகழ்ச்சி நல்லபடியாக நடக்கும். வீடு, வாகன வகையில் செய்ய இருந்த மாற்றம் சிறப்பாக நிறைவேறும். புத்திரர்கள் செயல்திறனை வளர்த்து படிப்பு, பணி, தொழிலில் முன்னேற்றம் காண்பர். வேலையில்லாத குழந்தைகளுக்கு தகுந்த பணி கிடைக்கும். சொத்துவாங்க யோகம் உண்டு. பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர்.

தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், லாட்ஜ், ஓட்டல், ரியல் எஸ்டேட், மருத்துவமனை, அச்சகம் நடத்துவோர், ஆட்டோமொபைல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, காகிதம், கட்டுமானப்பொருள், தோல், கண்ணாடிப்பொருள் உற்பத்தி செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட லாபம் குறைவாக இருக்கும். ஏழரைச் சனிகாலம் என்பதால் அவ்வப்போது ஏற்படும் தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும். பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். தொழிலதிபர் சங்கங்களில் சிலருக்கு பதவி பொறுப்பு கிடைக்கும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, கட்டுமானப் பொருள், கண்ணாடி, பர்னிச்சர், ஸ்டேஷனரி, காகிதம், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மின்சார, மின்னணு சாதனங்கள் வியாபாரம் செய்பவர்கள் விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அதிக லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். புதிய நிறுவனங்களில் அதிக சரக்கு கொள்முதல் செய்வீர்கள். பிற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இவர்களை விட குறைந்த லாபம் கிடைக்கும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அன்றாடப் பணிகளை எளிதாக நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, நல்ல சம்பளம், பிற சலுகைகள் பெறுவர். அனுபவசாலிகள், தந்தையின் ஆலோசனையை ஏற்று நடப்பதால் பணியில் உயரிய பலன்களைபெறுவீர்கள்.

பெண்கள்:பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை எளிதாக புரிந்து செயல்படுவர். பணி இலக்கு திட்டமிட்ட காலத்தைவிட சீக்கிரம் நிறைவேறும். பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரை அனுசரித்து நடந்து நற்பெயர் பெறுவர். குடும்பச் செலவுக்கான பணவசதி தாராளமாகக் கிடைக்கும். மகிழ்ச்சிகர வாழ்வுமுறை தொடர்ந்திடும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவு உண்டு. இளம்பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், தொழில்நுட்பம், ஆசிரியர் பயிற்சி, ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், வங்கியியல், வணிகவியல், கலை, அறிவியல் மாணவர்கள் படிப்பில் சிறந்த முன்னேற்றம் பெறுவர். ஆசிரியர்களின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். மற்ற துறை மாணவர்களும் தரத்தேர்ச்சி பெறுவர். ஆரம்ப, நடுநிலை மாணவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மாநில ராங்க் பெற முயற்சிக்கலாம். சக மாணவர்கள் படிப்பில் உதவுவர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். சுற்றுலா பயணத்திட்டம் நல்லவிதமாக நிறைவேறும்.

அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களிடம் எதிர்பார்த்த நன்மதிப்பு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். புத்திரர்கள் உங்கள் பணி சிறக்க உதவி புரிவர். எதிரியை வெல்லும் திறன் அறிவீர்கள். கூடுதல் சொத்து கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மதிப்பைப் பெற்று திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு காண்பர். சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும்.

விவசாயிகள்: விவசாயப்பணிகள் சிறப்பாக நடக்கும். மகசூல் உயர்ந்து கூடுதல் லாபம் பெற்றுத்தரும். கால்நடை வளர்ப்பிலும் பலன் உண்டு.

பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் தைரியம், மங்கல நிகழ்வு உண்டாகும்.

செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம்

பரிகாரப்பாடல்: பச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்அரங்கமா நகருளானே!

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை, உங்கள் ராசிநாதன் புதனுக்கு பகை கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான் வக்ரகதி பெறுகிறார். இதனால், மனதில் புத்துணர்வும், செயல்களில் நேர்த்தியும் ஏற்படும். பணவரவு பெற கிடைக்கிற வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்தி நன்மை பெறுவீர்கள். சமூகத்தில் உயரிய அந்தஸ்தும், புதியவர்களின் நட்பும் கிடைக்கும். புத்திரர்களுக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்பு நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். உறவினர் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். பணியில் உள்ளவர்கள், எதிர்பார்த்த பதவி பொறுப்பு கிடைக்கப் பெறுவர். உடல்நலம் சீராக இருக்கும். பூர்வ சொத்தில் திருப்திகர பணவரவும், கூடுதல் சொத்து சேர்க்கையும் உண்டு. கணவன், மனைவி பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவர். வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த நன்மை வந்து சேரும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:48 pm

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) TN_120430145848000000

சிரமப்படுத்துறதுக்கே வந்துட்டாரு அஷ்டமக்குரு! 55/100

நன்றி மறவாத குணமுள்ள துலாம் ராசி அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான ரிஷபத்தில் பெயர்ச்சியாகி அனுகூலக்குறைவான தன்மையில் உள்ளார். அஷ்டம ஸ்தான குரு வாழ்வில் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வைக்கும். ஏழரைச்சனியின் பிடியிலும் சிக்கியுள்ள நேரம் இது. மனதில் இனம் புரியாத தயக்கம், கலக்கம் போன்றவை தருவார். இருப்பினும் குருவின் பார்வை பதிகிற இடங்களின் வழியாக நல்ல பலன் வந்து சேரும். குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 12ம் இடமான வெளியூர் பயணம், சுபச்செலவு, ராசிக்கு 2ம் இடமான பணவரவு, குடும்ப ஒற்றுமை, 4ம் இடமான வீடு, வாகனம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். இந்த சமயத்தில் பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு அதிகரிக்கும். சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். தம்பி, தங்கைகள் அவர்களுடைய சுயலாபத்தையே பார்ப்பார்கள். வீடு, வாகன வகையில் எல்லாம் நல்லபடியாகவே இருக்கும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வாழ்வு சிறக்க உதவுவர். புத்திரர்கள் படிப்பில் தரத்தேர்ச்சி பெறுவர். அவர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும். உடல்நிலை பாதிக்கப்படலாம். உயரமான கட்டடங்களில் பணி செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். படி, லிப்டில் ஏறும் போது கவனம். தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் கவனம். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப மகிழ்ச்சி பாதுகாத்திடுவர். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் திருமணம், படிப்புச்செலவு உள்ளிட்ட சுபச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் புதிய அனுபவமும் நன்மையும் பெற்றுத்தரும். வாகன போக்குவரத்தில் மிதவேகமும் கூடுதல் கவனமும் அவசியம்.

தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். தளராத முயற்சியால் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். ஓட்டல், மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், டிராவல்ஸ், லாட்ஜ், பால்பண்ணை, அரிசி ஆலை, காகிதம், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல், மின்சார உபகரணம், ஜவுளி, மினரல் வாட்டர், குளிர்பானம், படகு, வலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் உற்பத்தி இலக்கை எட்டுவதில் தாமதம் அடைவர். மற்றவர்களுக்கும் இதே நிலையே. குறைந்த லாபம் பெறும் வகையிலான ஒப்பந்தங்களே கையெழுத்தாகும். தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சிலருக்கு தொழில் தாக்குப்பிடிக்கும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பால் பொருட்கள், கண்ணாடி, அழகுசாதனம், குளிர்பானம், காய்கறி, பூ, இறைச்சி, கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் உரிய விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மற்றவர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும். லாபம் சுமார். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். பிறருக்காக எந்த வகையிலும் ஜாமீன் தரக்கூடாது. சுயதொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இது உகந்த சூழ்நிலை அல்ல.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் வேலையில் சிரமம் குறுக்கிடும். நிர்வாகத்தின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கம்பெனி, அலுவலக நடைமுறைகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடி உருவாகப்பெறுவர். ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். இரவல் பொருள் கொடுக்க, வாங்கக்கூடாது. குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாடு காரணமாக, செலவுகளை கட்டுப்படுத்தும் விதம் குறித்து கவலைகொள்வர். கணவர், குடும்ப உறுப்பினர்களின் உதவி மனதுக்கு ஆறுதல் தரும். தாய்வழி சீர்முறை கிடைத்து மகிழ்வீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் குறைந்த உற்பத்தி, சுமாரான விற்பனை காண்பர். நடைமுறைச்செலவு அதிகரிக்கும். இயன்றவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், கம்ப்யூட்டர், மாடலிங், தொழில்நுட்பம், ஆசிரியர், சட்டம், ஜர்னலிசம், மேனேஜ்மென்ட், லைப்ரரியன், கலைத்துறை, வணிகத்துறை, ஓவியம், இசை, நடனம் பயிலும் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும். உரிய பயிற்சியும், கூடுதல் அக்கறையுமே தரத்தேர்ச்சியை தக்கவைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கத்தையும், வாகனத்தில் செல்வதையும் பெருமளவில் குறைப்பது நல்லது. படிப்பிற்கான பணவசதி கிடைக்க தாமதமாகும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.

அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் மாறுபட்ட நிகழ்வுகள் குறுக்கிடும். பொது விவகாரங்களில் ஒதுங்கிப் போவதால் சிரமம் தவிர்க்லகாம். ஆதரவாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மதிப்பு குறையும். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று உங்களை நீங்களே ஆறுதல்படுத்திக் கொள்ளுங்கள். அதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான், அரசுத்தொடர்பான காரியங்களை சாதிக்க முடியும். எதிரிகள் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளை தவிர்ப்பதால் நன்னிலை பெறலாம். புத்திரர்கள் அரசியல் பணிக்கு உதவுவர்.

விவசாயிகள்: கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு உண்டு. கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனதுக்கு நம்பிக்கை தரும்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் கஷ்டம் குறைந்து நன்மை வளரும்.

செல்ல வேண்டிய தலம்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில்

பரிகாரப்பாடல்: விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம்
தண்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரனுக்கு பகை கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான் வக்ரகதி பெறுகிறார். இதனால் மனதில் குழப்ப சிந்தனை அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மீதான நம்பிக்கையில் அதிருப்தி கொள்வீர்கள். வாகன போக்குவரத்தில் மிதவேகமும், பராமரிப்பு பணியில் தகுந்த கவனமும் பின்பற்றுவது நல்லது. உங்கள் சொல்லுக்கு வரவேற்பு கிடைக்கிற இடங்களில் மட்டும் பேசுங்கள். புத்திரர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். அவர்களது படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் பாதிக்கப்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடைய புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். பணியாளர்கள், சக பணியாளர்களை அனுசரித்து செயல்படுவது மட்டுமே நன்மை பெற உதவும். பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிக்க கூடாது.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:49 pm

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) TN_120430150900000000


ஏழரையின் தாக்கத்தை ஏழாமிட குரு குறைப்பார் 70/100


உலக நிகழ்வுகளை அறிவதில் ஆர்வமுள்ள விருச்சிகராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான ரிஷபத்தில் மிகுந்த அனுகூலமாக உள்ளார். ஏழரைச் சனியின் ஆரம்பக்கட்டத்தில் சில சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கும் நீங்கள், இந்த சமயத்தில் அவற்றில் இருந்து ஓரளவு விடுபடுவீர்கள். கடந்த காலத்தில் இருந்த செயல் சுணக்கம் மாறி சுறுசுறுப்பு பெறுவீர்கள். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 11ம் இடத்தில் பதிவதால் ஆதாய பணவரவு உண்டு. 7ம் பார்வை ராசியில் பதிவதால் மனத்துணிவு, தெளிவான சிந்தனைத்திறன் ஏற்படும். 9ம் பார்வை ராசிக்கு 3ம் இடத்தில் பதிவதால் புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் அன்பு வளரும். தம்பி, தங்கைகள் வாழ்வில் முன்னேறி உங்களுக்கும் உதவிகரமாக செயல்படுவர். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு. புத்திரர்கள் குடும்பத்தின் பாரம்பரிய பெருமையைக் காத்திடும் வகையில் நற்செயல்களைச் செய்வர். படிப்பில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பிலும் கவுரவமான நிலையை அடைவர். பூர்வசொத்தில் பெறும் வருமானத்தின் அளவு உயரும். உடல்நலம் சிறந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நிர்பந்தம் தரும் கடன்களை பெருமளவில் சரிசெய்வீர்கள். சந்திரனுக்கு ஏழில் குரு அமர்ந்து கெஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இதனால் தொட்டது துலங்கும். புதிய பதவி, அளப்பரிய நற்பலன் எளிதாக வந்துசேரும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுடன், இணைந்து ஆலோசனை செய்து குடும்பவாழ்வு சிறக்க பாடுபடுவர். நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உபரி வருமானம் உண்டு. இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும்.

தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், ஓட்டல், லாட்ஜ், டிராவல்ஸ், நிதி, கல்வி நிறுவனம், மருத்துவமனை நடத்துவோர், காகிதம், இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், பட்டாசு, மின்சார, மின்னணு சாதனங்கள், தோல் தொழிலில் உள்ளவர்கள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி அதிகரித்து தொழிலில் சிறப்பு ஏற்படும். மற்ற தொழில் செய்வோருக்கும் தாராள லாபம் உண்டு. தொழிலதிபர் சங்கங்களில் பதவி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிப்பீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயண வாய்ப்பு நிறைவேறும். புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் துவங்கலாம்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஸ்டேஷனரி, மளிகை, அரிசி, எண்ணெய், பட்டாசு, மருந்து, தீப்பெட்டி, கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மினரல் வாட்டர் வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகி லாபம் உயரும். வியாபார சங்கங்களில் சிலருக்கு கவுரவமான பதவி வரும். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட அதிக லாபமும் முந்தைய பாக்கி வசூலாவதுமான நற்பலன் நடக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி பணிகளை செவ்வனே நிறைவேற்றுவீர்கள்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திறமையாகச் செயல்படுவர். பணிகளை வேகமாக நடித்து பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சலுகைகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்வீர்கள்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் திறமையைப் பயன்படுத்தி பணிக்கு பெருமை சேர்த்திடுவர். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கப்பெறுவர். குடும்பசெலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனையில் வியத்தகு இலக்கை அடைவர். உபரி வருமானம் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண வாழ்வு கைகூடும்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், ஆசிரியர், மேனேஜ்மென்ட், வணிகம், கலை, ஜர்னலிசம், தொழில்நுட்ப மாணவர்கள் ஞாபகத்திறன் சிறந்து உயர்ந்த தேர்ச்சி அடைவர். மற்ற துறை மாணவர்களுக்கும் பாராட்டும், பரிசும் கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலை மாணவர்களுக்கும் படிப்பு சிறப்பாக இருக்கும். சக மாணவர்களும், ஆசிரியர்களும் தேவையான உதவி புரிவர். படிப்பை முடித்தவர்களுக்கு கவுரவமான வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: கடந்தகால குறைபாடுகளைச் சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை உருவாகும். எதிர்பார்த்த பதவி தானாக வந்துசேரும். அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை கவனமுடன் கேட்டு நிறைவேற்றித்தருவர். எதிரிகள் வியந்து போகிற அளவில் உங்கள் செயல்பாடுகளின் தரம் அமையும்.புத்திரர்களால் அரசியலில் உதவி உண்டு.

விவசாயிகள்: விவசாயப்பணி சிறந்து அபரிமிதமான மகசூல்வரும். கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் உண்டு.கூடுதல் நிலம் வாங்க அனுகூலம் உண்டு.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் தொழில் சிறந்து சமூக அந்தஸ்து உயரும்.

செல்ல வேண்டிய தலம்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்.

பரிகாரப்பாடல்:
புத்தியும் பலமும் தூயபுகழோடு
துணிவும் நெஞ்சில்
பத்தியும் அச்சமிலாப் பணிவும்
நோயில்லா வாழ்வும்
உத்தமஞானச் சொல்லின் ஆற்றலும்
இம்மை வாழ்வில்
அத்தனை பொருளும் சேரும்
அனுமனை நினைப்பவர்க்கே.

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 6.2.2013 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய்க்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில் குருபகவான் வக்ரகதி பெறுகிறார். இதனால் உங்கள் செயல்திறனில் சற்று சரிவு ஏற்படும். விலகிச் சென்ற உறவினர் விரும்பி வந்து நட்பு கொள்வர். இயன்ற அளவில் சமூகப்பணியிலும் ஈடுபடுவீர்கள். பணவரவு அதிகம் பெற புதிய வழி ஏற்படும். குடும்பத்தில் நடத்த வேண்டிய சுபநிகழ்ச்சி சீரும், சிறப்புமாக நிறைவேறும். புதிய வீடு, வாகனம் விரும்பியபடி வாங்குவீர்கள். உடல்நலம் நல்லவிதமாக இருக்கும். புத்திரர்களின் செயல்திறன் வளரும். புகழ்பெறும் வகையிலான செயல்களைச் செய்வீர்கள். எதிரிகள் உங்கள் வளர்ச்சி கண்டு விலகி ஓடுவர். தொழில், வியாபாரத்தில் வளம் சிறந்து அதிக அளவு லாபத்தை பெற்றுத் தரும். பணியில் உள்ளவர்கள் உயர்பதவி, பொறுப்பு எளிதில் கிடைக்கப் பெறுவர். பயணங்களின் போது பாதுகாப்பு நடைமுறையில் கவனம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 08, 2012 7:51 pm

அயர வைப்பார் ஆறாமிட குரு 60/100

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) TN_120430151443000000

புகழ்பெறுவதில் கூடுதல் விருப்பமுள்ள தனுசு ராசி அன்பர்களே!

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ளார். குருவின் ஆறாம் இட அமர்வு உங்கள் வாழ்வியல் நடைமுறையில் சில சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். இருப்பினும் குருவின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக நல்ல பலன்களும் ஏற்படும். ரிஷபத்தில் உள்ள குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு பத்தாம் இடமான தொழில், 12ம் இடமான கூடுதல் செலவு, இரண்டாம் இடமான குடும்பம், வாக்கு, பணவரவு ஆகிய இடங்களை பார்க்கிறார். பணரவரவு குறையும் என்பதால், குடும்பத்தேவைகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். கடன் வாங்கும் சூழலும் ஏற்படலாம். அதே நேரம் பணவரவுக்கான நல்ல வாய்ப்புகளும் தேடி வரும் என்பதால், அதைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் நிதிநிலை பற்றி கவலைப்பட வேண்டி வராது. தைரிய சிந்தனையும், மனதில் நம்பிக்கையும் வளரும். அவ்வப்போது உடல்நல பாதிப்பு வரலாம் என்பதால் பணிகளில் தாமதம் ஏற்படும். வீடு, வாகன வகையில் இருக்கிற வசதியை காத்துக் கொண்டாலே போதுமானது. தாய்வழி உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்வர். அவர்களிடம் வாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. புத்திரர்கள் தொந்தரவு தராத வகையில் நல்ல குணத்துடன் நடந்துகொள்வர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து குடும்பச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் நடந்துகொள்வர். தம்பதியர் ஒற்றுமையுடன் குடும்பநலன் காத்திடுவர். நண்பர்களிடம் எதிர்பார்க்கிற உதவி கிடைக்கும். உறவினர் குடும்ப சுபநகிழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்கிற சூழ்நிலையும் அதனால் கூடுதல் செலவும் ஏற்படும். வெளியூர் பயணம் புதிய அறிமுகங்களை பெற்றுத்தரும்.

தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், அச்சகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர், ரியல் எஸ்டேட், ஓட்டல், லாட்ஜ், டிராவல்ஸ், மருத்துவமனை நடத்துவோர், கட்டுமானப்பொருள், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, ஆட்டோமொபைல் தொழில் செய்வோர் பல்வேறு குளறுபடிகளை எதிர்கொள்வர். பணவரவு பெறுதில் தாமதம் இருக்கும். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட ஓரளவுக்கு நல்ல நிலை இருக்கும். கலங்காமல், உற்சாகத்துடன் செயல்படுவதால் தொழில் சிரமங்கள் விலகும். புதிய தொழில்நுட்பங்களை தொழிலில் பயன்படுத்துகிற கட்டாய சூழ்நிலை உருவாகும். புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள் எதிர்வரும் காலங்களில் முயற்சிக்கலாம்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல் உதிரிபாகம், தோல் பொருட்கள், பிளாஸ்டிக், கண்ணாடி, பூஜைப் பொருள், ஸ்டேஷனரி விற்பனை செய்பவர்கள் வியாபாரத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டாலும், சுமாரான விற்பனையும் அதற்கேற்ற லாபமுமே கிடைக்கும். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட லாபம் சுமாராகவே இருக்கும். நீண்டகால பாக்கிகள் வருவது இழுத்தடிக்கும். வியாபாரத்தைத் தக்க வைக்க சிறிதளவு கடன் பெறுவீர்கள். சரக்கு
கிட்டங்கிகளில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணி இலக்கை நிறைவேற்றுவதில் ஏற்படுகிற குளறுபடியால் சஞ்சலம் கொள்வர். பணி சார்ந்த அனுபவசாலிகளின் ஆலோசனை பெற்று பணியை விரைந்து முடிக்கலாம். சம்பளம், சலுகையில் தற்போதைய நிலை தொடரும். ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு பணி வாய்ப்பு குருவருளால் கிடைக்கும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். அனுபவசாலிகளின் உதவியைக் கேட்டே பணிகளை முடிக்க வேண்டியிருக்கும். இதனால் ஏற்படும் தாமதத்தால், அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரும். சலுகைகளைக் கேட்பதில் நிதானம் வேண்டும். குடும்பப் பெண்கள் பாசத்துடன் செயல்பட்டு குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெறுவர். வீட்டுச்செலவுக்கு தேவையான பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், சிக்கனம் பின்பற்ற வேண்டும். சுயதொழில் புரியும் பெண்கள் ஏற்கனவே பெற்ற ஆர்டர்களுக்கு பொருள்களை தருவதில் இழப்பு ஏற்படும். கூடுமானவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் பணஇழப்பு வராமல் தவிர்க்கலாம்.

மாணவர்கள்: இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், கம்ப்யூட்டர், ஆசிரியர், ஜர்னலிசம், வணிக, கலைத்துறை, மேனேஜ்மென்ட், கேட்டரிங் துறை மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதால் மட்டுமே எதிர்பார்த்த தரதேர்ச்சி இலக்கை அடையலாம். மற்ற துறை மாணவர்கள் இவர்களை விட சற்று கவனமாகப் படிப்பர். ஆரம்ப, மேல்நிலை மாணவர்கள் ஒரு நிமிஷத்தைக் கூட வீணாக்காமல் படித்தால் தான் உயர் மார்க் பெறலாம். நண்பர்களுடன் சேர்ந்து சுற்றும் பழக்கம் மேலோங்கும், தவிர்க்கவும். படித்து முடித்தவர்களுக்கு சுமாரான சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: கடந்தகாலத்தில் பெற்ற புகழை தக்கவைக்க அதிக வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நடைமுறை செலவு அதிகரிக்கும். ஆதரவாள்ரகளின் எதிர்பார்ப்பை ஓரளவே நிறைவேற்ற முடியும். பொது விவகாரங்களில் கலந்துகொள்வதை தவிர்ப்பது சட்ட சிக்கல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். அதிகாரிகளுடன் சமரசமாக நடந்து கொள்ள வேண்டும். எதிரிகளின் தொந்தரவு கூடும். முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அதை பாதுகாப்பதில் அதிக கவனம் கொள்ள வேண்டும்.

விவசாயிகள்: நடைமுறைச்செலவு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் சுமாரான வருமானமே உண்டு. விளைபொருட்களுக்கு தகுந்த விலை இல்லாததால் சிறு நஷ்டத்தை சந்திக்க இடமுண்டு.

பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் மனதைரியம், தொழில் சிறப்பு ஏற்படும்.

செல்ல வேண்டிய தலம்: சமயபுரம் மாரியம்மன் கோயில்.

பரிகாரப்பாடல்: இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுளிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே!

வக்ர கால பலன்: 10.10.2012 முதல் 27.2.2013 வரை உங்கள் ராசிநாதன் குருவுக்கு நட்பு கிரகமான சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரத்தில், குருபகவான் வக்ரகதி பெறுகிறார். இதனால் திட்டமிட்ட செயல்கள் நிறைவேற கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். இடம், பொருள் அறிந்து பேசுவதால் மட்டுமே தொந்தரவு அணுகாமல் தவிர்க்கலாம். வீடு, வாகனத்தில் தேவையான பராமரிப்பு பணிபுரிந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். புத்திரர்கன் படிப்புக்கு கடன் வாங்க வேண்டி வரும். உடல்நிலையில் பாதிப்பு வரலாம். கவனம். எதிரிகள் ஏளனமாக பேசுவர். கண்டு கொள்ள வேண்டாம். தம்பதியர் குடும்ப நலன் காப்பதில் கூடுதல் அக்கறை கொள்வர். தொழில் வளர்ச்சி இலக்கு நிறைவேற கடும் உழைப்பைக் கொடுப்பது அவசியம். பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பணியில் உள்ளவர்கள் நேரம் தவறாமையை பின்பற்றுவது மட்டுமே நற்பெயர் பெற உதவும். வெளியூர் பயணம் எதிர்பார்த்த நன்மையைத் தரும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக