புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
by ayyasamy ram Today at 8:49 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
Page 1 of 1 •
விநாயகர் சதுர்த்தி பூஜையையொட்டி சென்னை மாநகரில் பூஜிக்கப்பட்ட 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாக நடந்தது.
விநாயகர் சிலை ஊர்வலம்
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை மாநகரில் உள்ள தெருமுனைகள், முக்கிய சந்திப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன.
5-வது நாளான நேற்று, பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்து முன்னணி சார்பில் திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கடற்கரையில் 2 கிரேன்கள்
சென்னை மாநகரில் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், தாம்பரம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலிருந்தும் விநாயகர் சிலைகள் மேள தாளங்கள் முழுங்க ஊர்வலமாக பட்டினப்பாக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
வழியில் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் காண்பித்தும் பூஜை செய்தனர். பட்டினப்பாக்கத்தில் தனியாருக்கான 110 டன் எடை தூக்கும் கிரேனும், சென்னை துறைமுகத்துக்குச் சொந்தமான 75 டன் எடைகளை தூக்கும் அளவிலான ஒரு கிரேன் உட்பட 2 கிரேன்கள் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
சிறிய சிலைகளை பக்தர்களே கடலில் கரைத்தனர்.
பெரிய சிலைகள் கிரேன்கள் மூலம் தூக்கப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. இப்படி ஒவ்வொரு சிலையாக கரைக்கும் பணி நள்ளிரவு வரை நடந்தது. இந்துமுன்னணி, பாரதீய ஜனதா கட்சி, விஸ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, பாரத இந்து முன்னணி, சிவசேனா, பாரத் மாதா, ருத்ரசேனா போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களுடன், தனியார் சிலைகளும் கரைக்கப்பட்டன.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
சிலை கரைக்கும் பணியை கடலோர பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டரில் ரோந்து வந்து கண்காணித்தனர். போலீசார் குதிரைப்படை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு படை மற்றும் நீச்சல் வீரர்களையும் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
பட்டினப்பாக்கத்தில் திருவல்லிக்கேணி துணை-ஆணையர் சரவணன் தலைமையில் 10 உதவி-ஆணையர்கள், 43 இன்ஸ்பெக்டர்கள், 171 சப்-இன்ஸ்பெக்டர்கள், 93 மார்சல் போலீசார்கள், 678 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பாரத் இந்து முன்னணி
பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் முன்பு இருந்து புறப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை பாரத் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் கோபால் சசிகுமாரன் தொடங்கி வைத்தார். அதேநேரத்தில் கொளத்தூர் பகுதியில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை பாரத் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் எம்.வசந்தகுமாரும், கொடுங்கையூர் பகுதியில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை பாரத் இநëது முன்னணி மாநிலச் செயலாளர் ராமபூபதியும் தொடங்கி வைத்தனர்.
கொளத்தூர் மற்றும் கொடுங்கையூரில் இருந்து புறப்பட்டு வந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம், பட்டாளம் வந்தடைந்ததும், அங்கு வாகனங்களில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
பட்டாளம் அங்காளம்மன் கோவில் தெருவில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம், டிமலஸ் ரோடு சந்திப்பு, சால்ட் குவார்ட்டர்ஸ், யானைகவுனி பாலம், வால்டாக்ஸ் ரோடு, முத்துசாமி பாலம், கொடிமரச்சாலை, போர் நினைவுச் சின்னம், காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, லூப் சாலை, சீனிவாசபுரம் பஸ் நிறுத்தம் வழியாக பட்டினப்பாக்கம் கடற்கரையைச் சென்றடைந்தது.
கொருக்குப்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் லாரி, மினிவேன் போன்றவற்றில் ஏற்றி வைத்தியநாதன் மேம்பாலம் வழியாக காசிமேடு செல்ல முடிவு செய்யப்பட்டது.
எதிர்ப்பு
கொருக்குப்பேட்டை நேதாஜி நகர் 3-வது தெருவில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில், 5 அடி உயரத்தில் வைக்கப்பட்டு இருந்த 2 விநாயகர் சிலைகளையும் எடுத்தும் செல்லும் வழியில் மசூதி இருப்பதால், அதன் வழியாக எடுத்து செல்லக்கூடாது எனக்கூறி அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் பாதையை மறித்து மோட்டார் சைக்கிளையும், ஆட்டோவையும் நிறுத்தி வைத்தனர்.
அப்போது இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு நேதாஜி நகர் 3-வது தெரு வழியாக கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வழியை மறித்து மோட்டார் சைக்கிள், ஆட்டோக்களை நிறுத்தி வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, கூச்சல் போட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதைதொடர்ந்து அங்கு போலீஸ் இணை கமிஷனர் செந்தாமரை கண்ணன், போலீஸ் துணை கமிஷனர்கள் மகேஷ்பாபு, அன்பு ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் 300-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமரசம் செய்தனர்
இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர், கடலில் கரைப்பதற்காக மணலி சாலையில் விநாயகர் சிலைகளுடன் காத்திருந்த அனைத்து லாரிகளையும் நேதாஜி நகர் 3-வது தெருவிற்கு கொண்டு வந்தனர். இதனால் அங்கு 1000-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் குவிந்தனர்.
இதையடுத்து இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், நேதாஜி நகர் 3-வது தெருவில் வைக்கப்பட்டு இருந்த 2 விநாயகர் சிலைகளை மட்டும் மசூதி இருக்கும் தெரு வழியாக கொண்டு செல்லப்படும் என கூறினார்கள். பின்னர் அந்த 2 சிலைகள் இருந்த லாரிகளில் வந்த இந்து முன்னணி அமைப்பினரை கீழே இறக்கி விட்டனர். அந்த லாரிகளில் விநாயகர் சிலைக்கு பாதுகாப்பாக போலீசார் ஏறிக்கொண்டு புறப்பட்டு சென்றனர்.
லாரிகளில் இருந்த 2 விநாயகர் சிலைகளையும் பாதுகாப்புடன் மசூதியை கடந்து மணலி நெடுஞ்சாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு இந்து முன்னணி அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் அந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக காசிமேடு கொண்டு செல்லப்பட்டன.
இதையடுத்து 3-வது தெருவுக்கு கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் இருந்த 20-க்கும் மேற்பட்ட வண்டிகள் நேதாஜி நகர் 1-வது, 2-வது தெரு வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காசிமேடு மீன்பிடி துறைமுக கடலில் கரைக்கப்பட்டன.
செங்குன்றம் - திருவொற்றியூர்
மீஞ்சூர், கொளத்தூர், சோழவரம், செங்குன்றம், எண்ணூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் வைத்து வழிபட்ட 35 பெரிய விநாயகர் சிலைகள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபட்ட 100-க்கும் மேற்பட்ட சிறு விநாயகர் சிலைகள் நேற்று லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு எண்ணூர், ராமகிருஷ்ணாநகர் அருகே ராட்சத கிரேன் மூலம் கடலில் கரைத்தனர். இதற்காக மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதேபோல் திருவொற்றியூர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த 8 பெரிய விநாயகர் சிலைகளும், வீடுகளில் வைத்து வழிபட்ட 50-க்கும் மேற்பட்ட சிறிய விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை அருகே கடலில் கரைக்கப்பட்டது.
5,500 சிலைகள்
சென்னை நகரில் நேற்று 3 அடி முதல் 13 அடி உயரம் உள்ள 1500 சிலைகள் உள்பட 5,500 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
#849771அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
#849791- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
முன்பெல்லாம் சென்னையில் இப்படியெல்லாம் இல்லை. மும்பையில் நடப்பதை டிவி யில் பார்த்து, பார்த்து நம் உறவுகளுக்கும் பக்தி அதிகமாகிவிட்டது என்றே எண்ணத்தோன்றுகிறது
Re: சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
#849793Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:முன்பெல்லாம் சென்னையில் இப்படியெல்லாம் இல்லை. மும்பையில் நடப்பதை டிவி யில் பார்த்து, பார்த்து நம் உறவுகளுக்கும் பக்தி அதிகமாகிவிட்டது என்றே எண்ணத்தோன்றுகிறது
முன்பு போல் என்று பார்த்தால், நாம் இன்னும் சைக்கிளில் சென்று குடிசை வீட்டில் தான் அண்ணா வாழ வேண்டும். மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை. அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன: விநாயகர் ஊர்வலம் அமைதியாக நடந்தது
#849857எங்கோ கண்காணாத தேசத்தில் நடப்பதை போல இங்கும் செய்பவர்கள் இருக்கும் போது ஒரே நாட்டில் உள்ள ஒரே மதத்தை சார்ந்தவர்கள் அதுபோல செய்வது எந்த தவறும் இல்லை.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:முன்பெல்லாம் சென்னையில் இப்படியெல்லாம் இல்லை. மும்பையில் நடப்பதை டிவி யில் பார்த்து, பார்த்து நம் உறவுகளுக்கும் பக்தி அதிகமாகிவிட்டது என்றே எண்ணத்தோன்றுகிறது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|