புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
68 Posts - 45%
heezulia
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
5 Posts - 3%
prajai
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
4 Posts - 3%
jairam
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
2 Posts - 1%
Jenila
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
9 Posts - 4%
prajai
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
6 Posts - 3%
Jenila
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
2 Posts - 1%
jairam
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_m10பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Sep 11, 2012 4:49 pm

பார்வை தெரியாதவர்கள் பாதை காட்டுகிறார்கள்..!

இளையான்குடியில் எத்தனையோ சாதனையாளர்கள் பார்வையிலும், மக்களின் பார்வையிலும், கவனத்திலும் தங்களுடைய செயல்பாடுகளை பதிவு செய்தார்கள். செய்து வருகிறார்கள். அவர்களில் நம் கவனத்திற்கு வராமல் சப்தமில்லாமல் மட்டுமல்லாது பார்வையில்லாமலும் தங்களின் திறமைகளை நிரூபணம் செய்து வருகிற நண்பர்கள் இவரின் சாதனைகளை நம் இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யவே இவர்களின் அறிமுகம்.

ஒருவர் பிறவியிலே பார்வை இழந்தவர் முகமது ஹக்கீம் மர்ஹூம் தென்மலைக்கான் முகமது ஆரிப் அவர்களின் மகன். சாலைகிராமம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

மற்றொருவர் திருப்புவனத்தைச் சேர்ந்த முகமது ஷபி, இளையான்குடி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர். இவர் எட்டு வயதில் ஏற்பட்ட மூளைக் காய்ச்சலால் பார்வை இழந்தவர்.

எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற்ற எத்தனையோ பலர் கல்வி கற்க ஆர்வமில்லாமல் பிறகு பொருளாதாரம் முற்றிலும் இழந்தவர்களாக விரக்தியில் நாட்களை கழித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்தியில் இறைவனின் மிகப்பெரும் கொடையான பார்வையை இழந்தும் கூட, மாணவப் பருவத்தில் பல வகையான துன்பங்களையும், பொருளாதார கஷ்டங்களையும் சந்தித்து படித்து இன்று பார்வை இழந்தவர்களாக எத்தனையோ பேர்களுக்கு பாதை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ஒரு சேர தென்மலைக்கான் தெருவில் உள்ள ஹக்கீம் வீட்டில் சந்தித்தோம்…!

இனி அவர்களுடன் …

உங்களின் குழந்தைப் பருவம் பற்றி?

அப்துல் ஹக்கீம் : நான் பிறக்கும் பொழுதே எனக்கு பார்வை கிடையாது. பார்வையிழந்த நான் குழந்தை பருவம் முதல் 13 வயது வரை வீட்டிலேயே எனது குடும்பத்தினர் அரவணைப்பில் பள்ளிக்கு போகாமல்தான் இருந்தேன்.

முகமது ஷபி : நான் பிறந்து மூன்று வயது வரை இந்த உலகத்தை ரசித்தவன், மூன்றாவது வயதில் ஏற்பட்ட மூளைக் காய்ச்சலால் எனக்குப் பார்வை இல்லாது போனது.

நீங்கள் எப்படி கல்வி கற்றீர்கள் ..?

அப்துல் ஹக்கீம் : நான் பிறந்து 13 வயது வரை பள்ளிக்குப் போகவில்லை. எனது அம்மாவின் தகப்பனார் தங்கக்கம்பி அப்துல் காசிம் அவர்கள் என்னை பள்ளியில் சேர்த்துவிட மிகுந்த ஆர்வம் காட்டி பள்ளியில் சேர்த்தார். பள்ளிப் படிப்பை முடித்து சென்னை கிருஸ்டியன் கல்லூரியில் B.A., முடித்து NIVH ல் ஒரு வருட சிறப்பு பயிற்சியும் கற்றுள்ளேன். 2002- ல் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 2003-ல் B.Ed., முடித்தேன். பிறகு 2007 லிருந்து ஆசிரியராகப் பணிபுரிகிறேன்.

முகமது ஷபி : நான் 8 வயதில் மூளைக்காய்ச்சல் மூலம் பார்வை இழந்ததால் அடுத்த மூன்று வருடம் படிக்க முடியவில்லை. பிறகு படிக்க ஆரம்பித்தேன். மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் B.A., முடித்து 2007-ல் சென்னை திருவள்ளுவர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் B.Ed., முடித்தேன். 2010 லிருந்து இளையான்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

உங்களின் குடும்ப சூழல் பற்றி ?

அப்துல் ஹக்கீம் : எனது தகப்பனார் தென்மலைக்கான் முகமது ஆரிபு அவர்கள் மலேசியாவில் இருந்தாலும் குடும்ப சூழல் சற்று சிரமமாகத்தான் இருந்தது. எனது தகப்பனார் இறந்த பிறகு நிலைமை இன்னும் மோசமானது. இந்நிலையில் இளையான்குடியில் கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் எனது அண்ணன் இப்ராஹிம் அவர்கள் எங்கள் குடும்பத்தை திறமையுடன் வழி நடத்தினார். எனது கல்விக்கும் இந்த உயர்விற்கும் முழு காரணம் எனது தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து என்னையும் எனது குடும்பத்தையும் காத்த எனது அண்ணன் தான்.

முகமது ஷபி : திருப்புவனத்தில் உள்ள ஏழை குடும்பம் எனது குடும்பம். எனது தகப்பனார் கீரை வியாபாரம் செய்து வந்தார். அந்த வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் நகர்ந்தது. நான் சிறு பிள்ளையாக இருக்கும்போதே எனது தகப்பனார் இறந்து விட்டார். தொடர்ந்து கஷ்டம் இருந்தாலும் எனது தாயாரின் உதவியால் படித்து வளர்ந்தேன்.

உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியவர்கள் பற்றி ?

அப்துல் ஹக்கீம் : பலர் உதவியிருந்தாலும் எனது தாய், அவரின் தகப்பனார், தங்கக்கம்பி அப்துல் காசிம் இவர்களுக்கு மேலாக எனது அண்ணன் முகமது இபுராஹிம் ஆகியோர். எனது மனைவியும் 10 ஆண்டுகளாக என்னுடன் நிழலாக இருந்து வருகிறார்.

முகமது ஷபி : எனது குடும்ப நண்பர் கேசவராஜ் இவரும் பார்வையற்றவர். பேராசிரியர் முகமது கான், மற்றும் ராஜேஸ்வரி இவர்கள் எனது முன்னேற்றத்தின் படிக்கற்கள். தற்பொழுது என் மனைவி ஆஷா தான் எல்லாவகையில் என்னை ஊக்கமளித்து உற்சாகமூட்டுகிறார்.

கல்வி தவிர பிற துறைகளில் ஆர்வம் உண்டா ?

அப்துல் ஹக்கீம் : செஸ் விளையாட்டில் சாதித்து இருக்கிறேன். மாநில அளவில் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற செஸ் போட்டியில் வென்றுள்ளேன்.

முகமது ஷபி : 2010 ஆம் ஆண்டு மதுரை, திருநெல்வேலி மாவட்ட செஸ் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். இது தவிர கிரிக்கெட்டிலும் ஆர்வம் உண்டு.

கல்வித்துறையில் உங்களின் சாதனை என்ன ?

அப்துல் ஹக்கீம் : 2010 ம் ஆண்டு 10- ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நான் நடத்திய சமூக அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதிய 149 மாணவர்களும் 100 சதவீத வெற்றி பெற்றது எனக்கு பெருமையாக உள்ளது. இதுபோன்ற பல சாதனைகளைத் தொடர விரும்புகிறேன்.

முகமது ஷபி : நான் வேலைக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. கண்டிப்பாக இறைவன் உதவியால் இன்னும் சாதிப்பேன். சாதனைக்குப் பிறகு உங்களை இன்ஷா அல்லாஹ் சந்திப்பேன்.

இந்த சமூகத்திற்கும், இளைஞர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது ?

ஊனமுற்றவர்களை புறக்கணிக்காதீர்கள், அவர்கள் உள்ளங்களிலும் உணர்வுகள் வாழ்கின்றன…! இளைஞர்களே … முயற்சி செய்யுங்கள்… இன்றைய காலத்தில் உங்களின் முதல் முதலீடே முயற்சியும் உழைப்பும் தான் என்றனர்

இருவரும் ஒரே குரலில்

இருவரையும் வாழ்த்தி விடை பெற்றோம் .

- ஆசிரியர் குழு

நன்றி : இளையான்குடி மெயில் – ஜனவரி 2012



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக