புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_m10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_m10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_m10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_m10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_m10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10 
17 Posts - 4%
prajai
கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_m10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_m10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_m10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10 
9 Posts - 2%
jairam
கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_m10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_m10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_m10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_m10கனவுகள் தொலையும் தருணம்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகள் தொலையும் தருணம்..


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Aug 11, 2012 12:40 pm

கனவுகள் தொலையும் தருணம்.. 549703_473820865969502_712141110_n

கனவுகள் தொலையும் தருணம்..
-----------------------------------------------------

அந்த அம்மாவுக்கு ஒரு 56 வயசுருக்கும். நெற்றியில் சின்னதா ஒரு நாமக்கோடு.. என்னநேரமும் சிரித்த முகமாக இருப்பார். அவருக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மகன் பிறந்து இரண்டு மாத சிறுவனாக இருக்கையில் அவரின் கணவர் திடீரெனக் காலமாகிவிட்டார்.

இளம் வயதிலே கணவரை இழந்து நிராதரவாக இருந்தவருக்குப் பால்வாடியில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் வேலை கிடைத்தது. அந்த வருமானத்தில் இரண்டு பையன்களையும் கஷ்டப்பட்டு வளர்த்தார். அயனாவரத்தில் இருபது வருடங்களாக ஒரு சின்ன வீட்டில் வாடகைக்கு இருந்து வந்தார்கள்.

மூத்த மகனுக்குத் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கல்பாக்கத்தில் வேலைப்பார்க்கிறார். இரண்டாவது மகனுக்கு ஓராண்டுக்கு முன் தான் திருமணமாகியிருந்தது. அவர் பெயர் ராமமூர்த்தி. சிறியளவிலான விளம்பர நிறுவனம் ஒன்றை தனியாக நடத்தி வந்தார். அவரது மனைவியும் வேலைக்குச் செல்பவர் என்பதால் ஓரளவுக்குப் பணம் வரத்துவங்கியிருந்தது. அதனால் ஒரு நல்ல வீட்டுக்குப் போகலாம் என நினைத்து கடந்த அக்டோபரில் தான் எங்கள் ஃப்ளாட்டில் வாடகைக்குக் குடிவந்திருந்தார்கள். எங்களின் எதிர் வீடு தான் அவர்களுடையது.

மூவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால் எப்போதாவது தான் அவர்களைப் பார்க்க முடியும். அதிசயமாகப் பார்த்துக்கொள்வது என்றாலும் அந்தச் சந்திப்பு அந்நியத்தன்மையற்றதாக இருக்கும். அன்பாகப் பேசுவார்கள். ராமமூர்த்திக்கு கடவுள் பக்தி அதிகம். நெற்றியில் குங்குமம், கையில் சிகப்பு கயிறு என்று பக்தி மணமாக இருப்பார். மாலை நேரங்களில் பைக்கில் கணவனும் மனைவியும் சந்தோசமாகக் கோவிலுக்குச் செல்வதைக் கவனித்திருக்கிறேன்.

அவர் மனைவி தற்போது எட்டுமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனால் அவர்கள் வீட்டில் சந்தோசம் நிறைந்திருந்தது. ராமமூர்த்தி மனைவி மீது அதிகப் பாசம் வைத்திருந்தார். அப்படித் தாங்குவார். அடிக்கடி உறவினர்கள் வந்து அந்தப் பெண்ணுக்கு விருந்து சடங்குகளை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

அப்படியான ஒரு தருணத்தில், ``இனி என்னம்மா.. ரெண்டு வருசத்துல எனக்கு ரிட்டயர்ட் ஆகிரும்.. அப்புறம் ரெண்டு பசங்கக்கிட்டயும் மாறி மாறி இருந்து அவங்க புள்ளைங்கள பார்த்துட்டு சந்தோசமா இருந்துருவேன்..” என்று அந்தம்மா என் மனைவியிடம் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார்..

ஆனால் ...........................................

செவ்வாய் கிழமை (7-8-12) இரவு நல்ல தூக்கத்திலிருந்த போது திடீரெனக் காலிங்க் பெல் சத்தம். எழுந்து மணி பார்த்தேன். புதன் அதிகாலை மூன்றரை மணி. இந்நேரத்துக்கு யாரு என்று கதவை திறந்து பார்த்தேன்.

``அய்யோ என் குழந்தைக்கு என்னாச்சுனு தெரியலையே’’ என்று அரற்றியபடி நின்றிருந்தார் அந்தம்மா. அருகில் அறிமுகமில்லாத இளைஞர் ஒருவர் நின்றுக்கொண்டிருந்தார்.

``என்னம்மா ஆச்சு’’ என்று நான் பதற்றமாகக் கேட்க, ``அய்யோ.. என் குழந்தைக்கு அக்ஸிடண்ட் ஆயிடுச்சாம்ப்பா.. கேட் சாவி கொடுப்பா..’’ என்றார் அழுதுக்கொண்டே. நான் அதிர்ச்சியாகிப்போய்ச் சாவியை எடுத்துக்கொடுத்துவிட்டு, ``நானும் வர்றேன்..’’ என்று சட்டையப்போட்டுக்கொண்டு கிளம்ப,

இப்போது அந்த இளைஞர் என்னைத் தனியாக அழைத்துச்சென்று, `` சார்.. பைக் ஆக்ஸிடண்ட்.. ராமமூர்த்தி ஸ்பாட் அவுட்.. அந்தம்மாக்கிட்ட இன்னும் விசயத்தைச் சொல்லல”என்றார். கேட்டதும் எனக்குப் பக்குனு நெஞ்சடைச்சுப்போச்சு..

மகனுக்கு கை காலில் அடிப்பட்டிருக்கும் போல என்ற நம்பிக்கையில் அந்தம்மா இளைஞருடன் கிளம்பி சென்றார். பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் என் மனைவிக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. அதிகப் பழக்கமில்லாத எங்களுக்கே இந்தச் செய்தி தாங்க முடியாத அதிர்ச்சியாக இருக்கையில் அவர்களின் நிலையை யோசித்தே பார்க்க முடியவில்லை.

விளம்பர ஆர்டர் ஒன்றை அவசரமாக முடிக்க வேண்டிய காரணத்தால் 12 மணி வரை நண்பர்களோடு இருந்து வேலையை முடித்து விட்டு, தாயார் வீட்டுக்குச் சென்றிருந்த மனைவியிடம் வீட்டுக்குச் செல்கிறேன் என்று போனில் தகவல் சொல்லி விட்டு நண்பர்களிடமிருந்து விடைப்பெற்று வெளியே வந்திருக்கிறார்.

அரும்பாக்கம் இந்தியன் ஹாஸ்பிட்டல் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த போது வேகமாக வந்த பைக்காரன் ( ? வேறு வாகனமாகவும் இருக்கலாம்) ஒருவன் இவரின் வண்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டான். ஆள் நடமாட்டமில்லாத நள்ளிரவு நேரமென்பதால் உதவிக்குக் கூட ஆளில்லாமல் அடிவயிறு மற்றும் தலையில் ஏற்பட்ட காயத்துடன் உயிருக்குப் போராடியிருக்கிறார். சில நிமிடங்களில் அந்த வழியில் பின்னாடியே வந்த நண்பர்கள் யாரோ விழுந்துக்கிடக்கிறார்கள் என்று அருகே சென்று பார்க்க.. அது ராமமூர்த்தி என்பது தெரிய வந்திருக்கிறது. ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்து போயிருந்தது.. என்று மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்த நண்பர்கள் சொன்னார்கள்.

ராமமூர்த்தியின் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார்.. வளைகாப்பு நிகழ்வு நடத்த தேதி குறித்து வைத்திருந்தார்கள்.. இளம் வயதிலே விதவையாகி பையன்களுக்காக வாழ்ந்து கடைசிக் காலத்தில் மகன்களின் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற அந்தம்மாவின் ஆசை என ஒட்டுமொத்தமாக அவர்களின் எல்லாக் கனவும் காலியாகிப்போனது ஒரு சின்ன விபத்தில். இப்போது அவர்கள் தங்களது வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து துவங்க வேண்டும்.

மனைவி, தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை எப்படி இருக்கும் என உயிர்போகும் அந்தக் கடைசி நிமிடங்களில் அந்த மனிதன் எதைப்பற்றியெல்லாம் யோசித்திருப்பான்.. என்று யோசித்தால் அவ்வளவு ஆற்றாமையாக இருக்கிறது..

கர்ப்பமாக இருப்பதால் தகவலை மறு நாள் காலை தான் அவரின் மனைவியிடம் சொல்லியிருக்கிறார்கள்.. அதிர்ச்சியில் அவர் மயங்கி விழுந்து.. அழுது அழுது கண்ணி வற்றிப்போயிருக்கிறார்.

அந்தம்மா, `` அப்பா இல்லாத புள்ளையா வளரணும்னு நீ வாங்கிட்டு வந்த அதே வரத்தை உன் பிள்ளைக்கும் கொடுத்துட்டுப் போய்ட்டியேடா மூர்த்தி” என்று சொல்லி அழுதபோது அவர்களுக்கு நாம் என்ன ஆறுதல் சொல்லி தேற்றிவிட முடியும்..

இப்படிச் சாலை விபத்துகள் குறித்து நாளிதழ்களில் தினமும் எத்தனையோ செய்திகள் இடம்பெறுகின்றன. நமக்குத் தெரியாதவர்கள் என்றால் அது வெறும் செய்தி நமக்கு.. அதே நாம் அறிந்தவர்கள் என்றால் எத்தனை அதிர்ச்சியடைகிறோம்..

ஒவ்வொரு விபத்திலும் பலியாகும் ஒவ்வொருத்தர் பின்னாடியும் இப்படிப் பல கதைகள் இருக்கும். குறைந்த பட்சம் சாலை விபத்துகளை எங்குப் பார்த்தாலும், பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உதவ வேண்டும் என்பதை நம் கடமையாகக் கொள்ளவேண்டும்.

சாலைகளில் பைக் ரேஸ் போகும் புண்ணியவான்களே உங்களின் போதைக்கு அப்பாவிகளின் உயிரை பலிகடாவாக்காதீர்கள். ரேஸ் நடத்துவதற்கு என்று தனியாக இடமிருக்கிறது. அங்கு உங்கள் சாகஸங்களைக் காட்டுங்கள்..

ராமமூர்த்தியை இடித்துவிட்டு தப்பிச்சென்ற அந்தப் நபர் நினைத்துக்கொள்ளலாம்.. தன்னை யாரும் பார்க்கவில்லை என்று.. ஆனால் சாகும் வரை உனது மனசாட்சி விடாது துரத்தும்.. சோகம்




செந்தில்குமார்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 11, 2012 2:02 pm

மிகவும் நெகிழ்வான பகிர்வு.
எத்தனை ஆசைவுடன் இருந்திருப்பார்.! சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக