புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
13 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
215 Posts - 52%
ayyasamy ram
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
17 Posts - 4%
prajai
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
8 Posts - 2%
jairam
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யாருக்குச் சொந்தம்? Poll_c10யாருக்குச் சொந்தம்? Poll_m10யாருக்குச் சொந்தம்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாருக்குச் சொந்தம்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 19, 2012 11:19 am




ஆலமரத்திற்கு அடியில் இருந்த மேடையின் மீது உத்தமசீலர் அமர்ந்திருந்தார். மக்கள் அவருக்கு முன்பாக கூடி நின்றனர். அந்தக் கிராமத்தின் நீதிபதி அவர்தான்.

இன்று வீரமுத்து தொடுத்த வழக்கிற்காக, ஊர் கூடியிருந்தது. வீரமுத்து பேசினான்...

"ஐயா, வணக்கம். என் வீட்டிற்கும், பக்கத்து வீடான சோலையம்மாள் வீட்டிற்கும் இடையே ஒரு பெரிய வேப்பமரம் உள்ளது. அது எனக்குச் சொந்தமானது. அதை வெட்டப் போகிறேன் என்று சொன்னால் சோலையம்மாள் சண்டைக்கு வருகிறாள். என் மரத்தை வெட்ட எனக்கு அனுமதி தர வேண்டும்''

படபடவென வீரமுத்து சொல்லி முடிக்க, நீதிபதி உத்தமசீலர், சோலையம்மாளைப் பார்த்து, "நீ என்ன சொல்ல விரும்புகிறாய்''

என்றார்.நீதிபதியை வணங்கிய சோலையம்மாள், "ஐயா நான் சிறுமியாக இருக்கும்போது அந்த வேப்பமரக்கன்றை நட்டு, நாள் தவறாமல் நீர் ஊற்றி வளர்த்தேன். இப்பொது மரம் பெரிதாகிவிட்டதால் அது எங்கள் இரண்டு வீட்டிற்கும் இடையில் இருப்பது போன்ற தோற்றத்தை தருகிறது. உண்மையில் அது எனக்குச் சொந்தமான மரம்தான். அந்த மரத்தால் யாருக்கும் எந்தத் தீமையும் இல்லை. அதை வெட்ட வேண்டாம்'' என்று சொல்லி முடித்தாள்.

நீதிபதி சில சந்தர்ப்பங்களில் அந்த மரத்தை பார்த்திருக்கிறார். தனது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள இருவரிடமும் மாறிமாறி கேள்விகள் கேட்டார். இருவருமே மரம் தனக்குத்தான் சொந்தம் என்று கூறிவிட்டனர்.

"நீங்கள் இருவருமே மரத்துக்கு சொந்தம் கொண்டாடுவதால் மரத்தை வேரோடு வெட்டிவிட உத்தரவிடுகிறேன். வெட்டியபின் ஆளுக்குப் பாதி பிரித்துக் கொள்ளுங்கள்'' என்றார் நீதிமான் உத்தமசீலர்.

இதைகேட்ட வீரமுத்து மகிழ்ச்சி அடைந்தான். "ஐயா, இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். தாங்கள் நல்ல முறையில் தீர்ப்பு கூறினீர்கள்'' என்றான். வெட்டிய மரத்தில் பாதி தனக்கு வந்துவிட்டால் அதைவிற்று நிறைய பணமாக்கிவிடலாம் என்று கனவு கண்டான் அவன்.

ஆனால் சோலையம்மாள், கவலையுடன் பேசினாள், "ஐயா எனக்கு மரம் வேண்டாம். வீரமுத்து அண்ணனே மரத்தை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் மரத்தை வெட்டிவிட வேண்டாம்'' என்று கண்களில் நீர்மல்க கையெடுத்துக் கும்பிட்டாள்.

"ஏன் இப்படிச் சொல்கிறாய், பிரச்சினைக்குரிய மரத்தை அகற்றிவிடுவதுதானே நல்லது,

அதனால் உனக்கும் பாதி மரம் கிடைக்கிறதல்லவா?'' என்று கேட்டார் நீதிபதி.

"ஐயா, நான் கூறப்போவதை சற்று பொறுமையுடன் கேளுங்கள். நான் சிறுவயதிலிருந்தே என் குழந்தை மாதிரி அந்த மரத்தை வளர்த்து வருகிறேன். இந்த மரத்தால்தான் பிரச்சினை என்றாலும் அதை வெட்ட என் மனம் அனுமதிக்கவில்லை.

இந்த மரத்தை நம்பி எத்தனையோ குருவிகள், குஞ்சுகள் வாழ்கின்றன. எத்தனையோ பெரியவர்கள் இளைப்பாறிப் போகிறார்கள். எத்தனையோ சின்னஞ்சிறுசுகள் நிழலில் விளையாடி மகிழ்கிறார்கள்.

எல்லோருக்கும் தன்னலம் பாராது சுத்தமான காற்றைத் தருகிறது. பலருக்குப் பயன்படும் மரத்தை எங்கள் பிரச்சினைக்காக வெட்டிவிடக்கூடாது. எனக்கு பயன்தராவிட்டாலும்,

வீரமுத்து அண்ணனே பலனை அனுபவிக்கட்டும். ஆனால் மரத்தை மட்டும் வெட்டக்கூடாது என்று உத்தரவிடுங்கள்'' என்று மன்றாடினாள்.

ஒரு நிமிடம் அந்த இடம் அமைதியில் மூழ்கியது. லேசாக சிரித்துக் கொண்டே நீதிபதி பேசினார்...

"மரம், சோலையம்மாளுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளிக்கிறேன். பெத்தவங்களுக்குதான் பிள்ளையின் அருமை தெரியும் என்பார்கள். அதேபோல மரத்தை வளர்த்தவர்களுக்குத்தான் மரத்தின் அருமை தெரியும். ஆனால் மரத்தை வெட்டி லாபமடைய நினைக்கும் வீரமுத்து மரத்துக்குச் சொந்தக்காரனாக இருக்க முடியாது. பொய்யான வழக்குத் தொடுத்த அவன், ஊர்ப் பொது இடத்தில் 5 மரக்கன்றுகளை நட்டு ஒரு வருடம் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன்'' என்றார் உத்தமசீலர்.

அனைவரும் உத்தமசீலரின் தீர்ப்பை ஆமோதித்தனர். சோலையம்மாள் மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தாள்.

- டி.ஜானகி



யாருக்குச் சொந்தம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 19, 2012 11:23 am

சூப்பருங்க அருமையான தீர்ப்பு ....
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Jul 19, 2012 1:40 pm

ஒரு குழந்தைக்கு இருவர் தாய் என சொல்லி சாலமனிடம் முறையிட்ட கதையாக உள்ளது. நல்ல தீர்ப்பு. அன்பின் வெளிப்பாட்டில்தான் உண்மை பொதிந்திருக்கும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சிவா அவர்களே.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 19, 2012 5:24 pm

சபாஷ் சரியான தீர்ப்பு.. அருமையிருக்கு

பகிர்வுக்கு நன்றி.... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 19, 2012 7:53 pm

பழைய மொந்தையில் புதிய கள்.

இருப்பினும் நன்றாக உள்ளது அன்பு மலர்



யாருக்குச் சொந்தம்? 154550யாருக்குச் சொந்தம்? 154550யாருக்குச் சொந்தம்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” யாருக்குச் சொந்தம்? 154550யாருக்குச் சொந்தம்? 154550யாருக்குச் சொந்தம்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jul 19, 2012 7:59 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:ஒரு குழந்தைக்கு இருவர் தாய் என சொல்லி சாலமனிடம் முறையிட்ட கதையாக உள்ளது. நல்ல தீர்ப்பு. அன்பின் வெளிப்பாட்டில்தான் உண்மை பொதிந்திருக்கும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சிவா அவர்களே.

அதானே சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 8:50 pm

நல்ல தீர்ப்பு சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 19, 2012 11:23 pm

ஒரு கொய்யா மரத்தை சிறுவயதில் இருந்தே நான் எட்டு - பத்து வருடங்கள் வளர்த்தேன் நிறைய பழங்களும் தந்தது. அனைவரும் உண்டனர் இதை பலவருடங்களாக பொருக்க முடியாத எனது சித்தி, சித்தப்பாவின் சாவில் இந்த மரம் ஏதோ ஒருபக்கம் சாய்திருப்பதால் தான் வீட்டுக்கு கெட்டது வந்துவிட்டது அதனால் அவர் இறந்துவிட்டார் என பழியை தூக்கி போட, மிகுந்த மனபாரத்துடனும், அழுகையுடனும் அந்த மரத்தை வெட்டி சாய்த்தேன். வயதில் சிறுவனாக இருந்ததால் என்னால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த கதையை படித்தவுடன் எனக்கு என் கொய்யா மரம் தான் நினைவுக்கு வந்தது சிவா.. சோகம்

எட்டாம் வகுப்பு படிக்கையில் வளர்க்க ஆரம்பித்தது.... பல முறை புடிங்கி போட்டிருக்கிறார்கள்.. ஒருமுறை சித்தி அதை வேரோடு பிடுங்கி போட்டுவிட நான் அதை தேடி அலைந்து பிறகு மைதானத்தில் உள்ள ஒரு குப்பை குவியலில் இருந்தது கண்டு அதை எடுத்து அனைத்துக்கொண்டேன். பிறகு வந்து மீண்டும் நட்டு (வேர் இருந்ததால் பிழைத்தது) வளர்த்தேன்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 20, 2012 7:23 am

சோகம் சோகம் சோகம்

அன்றைக்கு உங்களுக்கோர் சாலமோன் இல்லாமல் போயிட்டாரே சோகம்

உலகில் உள்ள அனைத்து சித்திகளும் இப்படித்தான் இருப்பார்கள் போல இருக்கு...

எனக்கும் இந்த சித்தியின் பாதிப்புகள் இருந்திருக்கு ... சோகம்



யாருக்குச் சொந்தம்? 154550யாருக்குச் சொந்தம்? 154550யாருக்குச் சொந்தம்? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” யாருக்குச் சொந்தம்? 154550யாருக்குச் சொந்தம்? 154550யாருக்குச் சொந்தம்? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 20, 2012 7:25 am

சார்லஸ் mc wrote: சோகம் சோகம் சோகம்



எனக்கும் இந்த சித்தியின் பாதிப்புகள் இருந்திருக்கு ... சோகம்
சித்தி சீரியல் பாத்த பாதிப்பா சார்லஸ் ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக