புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
34 Posts - 52%
heezulia
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
28 Posts - 43%
mohamed nizamudeen
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
17 Posts - 2%
prajai
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
9 Posts - 1%
Jenila
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
4 Posts - 1%
jairam
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவுண்டர்கள் வரலாறு Poll_c10கவுண்டர்கள் வரலாறு Poll_m10கவுண்டர்கள் வரலாறு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவுண்டர்கள் வரலாறு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:12 am

கவுண்டர்கள் வரலாறு 390920_112859545497693_112766615506986_68174_1706357659_n

கொங்கு வேளாள கவுண்டர்களின் வரலாறு, கொங்கு மண்டல வரலாற்றோடு தொடர்புடையதாகும்.

அரசர்கள் - சங்க கால தமிழகத்தின் சேர நாடு தான் கொங்கு மண்டலம். சங்க கால சேரர்கள், கரூரை தலைநகராக கொண்டு மேற்கு தமிழகத்தை ஆண்டு வந்தனர். கரூர் சேரர்களின் வழிதோன்றல்களாக கொங்கு வேளாள கவுண்டர்கள் கருதப்படுகின்றனர். கொங்கு மண்டல சதகம் எனும் நூல், மேற்கு கங்கா அரசாங்கம் முதன் முதலாக கொங்கு மண்டலத்தில் தான் நிறுவப்பட்டது என குறிப்பிடுகிறது. அந்த அரசினை நிறுவியவர்கள் கவுண்டர்களே என்பது மங்கல வாழ்த்தில் உள்ள கங்கா குலம் என்ற குறிப்பின் மூலம் தெரிய வருகிறது.

சிற்றரசர்கள் - காளிங்கராயர் ( லிங்கராய கவுண்டர் ) என்பவர் வீர பாண்டியனுடைய தளபதி ஆவார். இவர் நொய்யல் ஆற்றையும் பவானி ஆற்றையும் இணைத்து கொங்கு பகுதியை வளமாக்கியவர்.விசயமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு கங்க அரசின் பிரதிநிதியாக ஈரோடு பகுதியை ஆண்ட கொங்குவேள் என்னும் சிற்றரசர், கவுண்டர் இனத்தை சேர்ந்தவர். தகடூரை ஆண்ட சத்தியபுத்திர அதியமான் வம்சத்தினர், கவுண்டர் இனத்தின் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர். சங்க கால வேளிர்கள் சிலரும் இதில் அடங்குவர்.

பாளையக்காரர்கள் - பதினாறாம் நூற்றாண்டில், தமிழகம் பல்வேறு பாளையங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மேற்கு தமிழகத்தில் பல்வேறு பாளையங்களை கவுண்டர்கள் ஆண்டு வந்தனர். அவற்றுட் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோப்பண்ண மன்றாடியார் (பொள்ளாச்சி பகுதி)
சமத்தூர் வானவராயர்
ஊத்துக்குளி ஜமீன்
பழையகோட்டை பட்டக்காரர் (காங்கேயம் மன்றாடியார் - தீரன் சின்னமலை)
குமாரமங்கலம் ஜமீன் (திருச்செங்கோடு பகுதி)
கொங்கணாபுரம் ஜமீன் (சங்ககிரி பகுதி)
சங்கராண்டாம்பாளையம் வேணானுடையார் (பழனி/தாராபுரம் பகுதி).

சரித்திர வீரர்கள்

கொங்கு மண்டலத்தில் காணப்படும் நடுகற்கள், பல்வேறு தலைவர்களின் வீரத்தினை பறைசாற்றினாலும், கவுண்டர்கள் மத்தியில் இரண்டு வீர சம்பவங்களே நீங்கா இடம் பெற்றுள்ளன. ஒன்று அண்ணன்மார் சுவாமி கதை. மற்றொன்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீரன் சின்னமலை நடத்திய சுதந்திரப் போர்.

அண்ணமார் சுவாமி - அண்ணமார் எனப்படும் பொன்னர் - சங்கர் என்ற இரண்டு சகோதரர்களின் வாழ்க்கையே அண்ணமார் சுவாமி கதையாகும். பொன்னரும் சங்கரும் எவ்வாறு தங்கள் இராச்சியத்தை அமைத்தனர், வேட்டுவத் தலைவனின் சதிக்கு எதிராக எவ்வாறு தாக்கு பிடித்தனர், தங்கள் நாட்டை காக்க எவ்வாறு போராடினர் என அண்ணமார் சுவாமி கதை விவரிக்கின்றது. தங்கள் நாட்டையும், தங்கள் இனத்தையும் காக்க பொன்னர் - சங்கர் நடத்திய வீரப் போரினை போற்றும் விதமாக இன்றும் இவர்களை தெய்வமாக கொங்கு வேளாள கவுண்டர்கள் வழிபடுகின்றனர்.

தீரன் சின்னமலை - இவரது இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர் என்பதாகும். காங்கேய பகுதி பாளையக்காரரான இவர், இரண்டாவது பாளையப் போரில், பல்வேறு பாளையங்களுக்கு தலைமை தாங்கி ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர் புரிந்தார். மைசூர் அரசன் திப்பு சுல்தானுக்கு, தனது படைகளுடன் உதவி புரிந்தார். ஓடாநிலையில் கோட்டை கட்டி, கொங்கு நாட்டை ஆண்டார். 1801ல் காவேரி கரையில் நடந்த போரிலும், 1802ல் ஓடாநிலையில் நடந்த போரிலும், 1804ல் அரச்சலூரில் நடந்த போரிலும், ஆங்கிலேயரை தோற்கடித்து வெற்றி கொண்டார். பழனி பகுதியில் கொரில்லாப் போர் மேற்கொண்டிருந்த போது, சமையல்காரனால் காட்டி கொடுக்கப்பட்டு, சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்படும் போது கூட, நீ என்னடா என்னை தூக்கிலிடுவது என வெள்ளையரை தள்ளி விட்டு, தன்னைத் தானே தூக்கிலிட்டு கொண்ட தீரன் சின்னமலையை தங்கள் இனத்தின் மாவீரனாக கவுண்டர்கள் கருதுகின்றனர்.

அரசியல் பலம்

கொங்கு மண்டல அரசியலில், கவுண்டர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயங்களில் ஒன்றான கவுண்டர்கள், தமிழக அரசியலில் தங்களுக்கு உரிய பங்கினை தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சியில் பெற்று வந்துள்ளனர். தற்போதைய தமிழக அமைச்சரவையில் கவுண்டர் சமுதயாத்திற்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் பெரிய சமுதாயம் இவர்களே. பொது பணித்துறை, விவசாயத் துறை, தொழிற்துறை, வருவாய்த் துறை, உயர் கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து துறை போன்ற முக்கிய அமைச்சகங்களை கவுண்டர்கள் நிறுவகித்து வருகின்றனர். மத்திய அரசிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில், திமுக சார்பில் கவுண்டர்களுக்கு ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது போக, கவுண்டர்கள் தங்களுக்கு என சொந்த கட்சிகளை வைத்துள்ளனர். ஈஸ்வரன் தலைமையில் கொங்குநாடு முன்னேற்ற கழகமும், தனியரசு தலைமையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையும் கவுண்டர்களின் நலனுக்காக இயங்கி வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் மாநில மற்றும் மத்திய அரசில் கவுண்டர்களுக்கான உரிய பங்கினை பெற்றுத் தருவதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.



கவுண்டர்கள் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:13 am

தொழில்கள்

தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக கொங்கு மண்டலம் விளங்கி வருகிறது. அமெரிக்க, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் மேற்படிப்பு படித்துவிட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, திருப்பூர், சேலம் மற்றும் நாமக்கல் போன்ற கொங்கு மாவட்டங்களில் பல்வேறு தொழில்களில் கவுண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் தலைமுறை தொழிலதிபர்களான இவர்கள் , தமிழக அரசிற்கு ரூ.40000 கோடி (தமிழக அரசு வருவாயில் சுமார் 40%) வருமானத்தை ஏற்றுமதி மூலமாக பெற்று தருகின்றனர்.

கவுண்டர்களின் தொழிற் திறனுக்கு உதாரணமாக திருப்பூர் மற்றும் நாமக்கல் பகுதிகளை குறிப்பிடலாம். பின்னலாடை தலைநகரம் என்று வருணிக்கப்படும் திருப்பூர் பகுதியில் இருந்து மட்டும் ரூ.12000 கோடி ஏற்றுமதி நடக்கிறது. திருப்பூரில் உள்ள பெரும்பாலான நூற்பாலைகள், சாய பட்டறைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் கவுண்டர் சமுதாயத்திற்கு சொந்தமானவை. வறண்டு கிடந்த நாமக்கல் பகுதியை, தொழிற்நகரமாக மாற்றிய பெருமை கவுண்டர்களையே சேரும். நாமக்கல் பகுதியில் உள்ள லாரி பாடி பில்டிங் தொழிற்கூடங்கள், கோழிப் பண்ணைகள் கவுண்டர்களால் நிறுவப்பட்டவை. தங்களுடைய அயராத உழைப்பினால், ஜவுளித்துறை, பின்னலாடை, கனரக மற்றும் ஆட்டோமொபைல் பாகங்கள், கல்வி நிறுவனங்கள், முட்டை மற்றும் மஞ்சள் ஏற்றுமதி போன்ற துறைகளில் கவுண்டர்கள் இன்று உலகத் தலைவர்களாக வளர்ந்துள்ளனர்.

கல்வி

இந்திய சுதந்திரத்தின் போது கவுண்டர்கள், முன்னேறிய வகுப்பினராக வரையறுக்கப்பட்டிருந்தனர். ஆனால், கிராமங்களிலே கல்வி கூடங்கள் அதிக அளவில் இல்லாததாலும், தரமற்று இருந்ததாலும் கவுண்டர்களால் நகர பகுதிகளில் இருந்தவர்கள் பெற்ற கல்வியினை பெற இயலவில்லை. ஆதலால், 1970 களின் ஆரம்பங்களில் மாநாடுகள் நடத்தி, தங்களை பிற்பட்ட வகுப்பினராக வரையறுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்ட தமிழக அரசு, அவர்களை பிற்பட்ட வகுப்பினராக அறிவித்தது. இன்று கவுண்டர்கள் ஓரளவு கல்வி அறிவு பெற்றுள்ளனர். ஆனால், கிராமப்புற மாணவர்கள் இன்றும் உயர் கல்வி நிலையங்களில் இடம் பிடிக்க கஷ்டப்படுகின்றனர். ஆதலால், கவுண்டர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பண்பாடு மற்றும் கலாசார பழக்க வழக்கங்கள்

குலதெய்வ வழிபாடு, கூட்டம் மற்றும் பங்காளி முறை

கொங்கு வேளாள கவுண்டர்கள் தனது குலத் தொழிலான விவசாயத்தை பெருக்க பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டி இருந்தது, ஆகையால் அண்ணன் தம்பி மற்றும் அக்காள் தங்கை உறவுகள் மாறிவிடாமல் இருக்க அதாவது உறவு மாறி தனது தங்கையை அல்லது அண்ணன் போன்ற உறவு முறை உள்ளவர்களை திருமணம் செய்யாமல் இருக்கவும் உரிய உறவுமுறை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு கூட்ட முறையை உருவாக்கினர். இதற்கு தங்களது தந்தையர் பெயரை வைத்தனர். அதாவது செல்லன் கூட்டத்தார் செல்லன் வழிவந்தவர்கள். உலகத்தில் உள்ள அனைத்து செல்லன் கூட்டத்தை சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பி உறவு முறை உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் செல்லன் என்ற ஒருவரின் வழிதோன்றல் ஆகும். ஆகவே ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் பெண்ணெடுத்து கொள்ள மாட்டார்கள். ஒரே கூட்டத்தை சேர்த்தவர்களே பங்காளிகள் ஆவர். கவுண்டர்கள் மற்ற இனத்தினரைப் போல் பொதுவான தெய்வத்தை மட்டும் வணங்காமல் தாங்கள் எவ்வழி வந்தனரோ - அதாவது தங்கள் ஆதி தாய் தந்தையரை மட்டுமே குலதெய்வமாக வணங்குகின்றனர். இதுவே இவர்களுக்கு குலதேய்வமாகும். இங்கு வருடம் ஒருமுறையேனும், ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்கள், தங்கள் குலதெய்வ கோவிலுக்கு வந்து ஆதி தாய் தந்தையரை வணகுவதுடன் தனது உறவுகளை சந்தித்து செல்கிறார்கள்.



கவுண்டர்கள் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:15 am

திருமண முறை

கவுண்டர்களின் திருமணங்கள் விமர்சையாக நடக்கும். பிறமொழிக் கலப்பு இன்றியே கொங்கு வேளாளர் மணவினைகள் காலங்காலமாய் நிகழுகின்றன. இந்தச் சிறப்பைத் தமிழகத்தின் பிறபகுதித் திருமணங்களில் காணுதல் அருமை. கொங்கு வேளாள இனத்தை சேர்ந்த 'அருமைப்பெரியவர்' என்பவர் திருமணத்தை நடத்துவார். இவரை அருமைக்காரர் என்றும் அழைப்பர். அருமைக்காரர் ஆவதற்கு சில சடங்குகள் உள்ளன, அவர் திருமணமானவராகவும் குழந்தை பேறு உள்ளவராவும் இருக்க வேண்டும். அவரவர் தேவைக்கேற்ப கொங்கு சிவபிராமணர்களையும், குலகுருக்களையும் மங்கிலியம் என்ற தாலிபூட்டும் பொழுது வைப்பதாக கொங்கு மங்கல வாழ்த்திலுள்ளது.

கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

கொங்கு மங்கலவாழ்த்து

நல்ல கணபதியை நாளும் தொழுதக்கால்
அல்லல்வினை எல்லாம் அகலுமே - சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.

என்று அப்பாடல் தொடங்கும். கொங்கு வேளாளரின் திருமணம் மூன்று நாட்களும், பெண் வீட்டிலும் நடக்கும்.

முதல் நாள் (நாள் விருந்து) - இதை சோறாக்கி போடுதல் என்றும் கூறுவர். இன்று மணமக்களின் உறவினர்கள் மணமக்கள் வீடுகளுக்கு வந்து விருந்து வைப்பார்கள். இச்சடங்கு மணமகன் மற்றும் மணமகள் இருவர் வீட்டிலும் நடக்கும். விருந்துக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் உறவினர்களே வாங்கி வருவர். நாள்விருந்தன்றே வீட்டில் பந்தலிடுவார்கள்.

இரண்டாம் நாள் (கலியாண நாள் அல்லது முகூர்த்த கால்) - இன்று நாள் விருந்தன்று கட்டிய பந்தலில் வாழை, தென்னங்குருத்தோலை முதலியவற்றை கட்டுவர். அருமைப்பெரியவருடன் மூவர் சென்று முகூர்த்த கால் வெட்டி வருவர். முகூர்த்த காலாகப் பால் மரத்தில் முக்கொம்பு கிளை வெட்டப்படும். பொதுவாக ஆல மரம், அரச மரம், பாலை மரங்களில் இது வெட்டப்படும். காலை முதல் மாலை வரை விருந்து நடைபெரும். ஆனால் மணமக்கள் அன்று காலை முதல் விரதம் இருப்பர்.

இரவில் மங்கல நீராடிய பின்னரே மணமக்கள் விரத உணவு உண்பர். இரவு விருந்துக்குப் பின் பச்சைப் பந்தலில் சனி மூலையில் காலையில் வெட்டி வந்திருந்த முகூர்த்தக்காலை நடுவார்கள். நவதானியங்களை காசுடன் சேர்த்து அதில் முடிச்சிட்டு செஞ்சாந்து, மஞ்சள் பூசி முகூர்த்தக்காலில் வைப்பர். முகூர்த்தக்காலிட்டப்பின்னரே மற்ற சடங்குகளை செய்வர்.

இரண்டாம் நாள் (கங்கணம் கட்டுதல் ) - அருமைப்பெரியவர் கணுவில்லாத விரலி மஞ்சளை எடுத்து அதை மஞ்சள் தோய்த்த நூலில் கட்டி விநாயகர் முன்பு வைத்து அதற்கு தூப தீபம் காட்டி மணமக்களின் வலது கையில் கட்டி விடுவார்.

இரண்டாம் நாள் (நிறைநாழி செய்தல்) - வட்ட வடிவிலான இரும்புப் படியில் நெல்லை நிறைத்து, நூல் சுற்றிய இரட்டைக்கதிரை அதில் பதித்து வைப்பர். இது நிறைநாழி எனப்படும். இதனை ஒரு பேழையில் வைப்பர், அருமைக்காரர் செய்யும் ஒவ்வொரு பூசையின் போதும் இதனை எடுத்து சுற்றிக்காட்டுவார்.

இரண்டாம் நாள் (இணைச்சீர்) - இது மணமகன் வீட்டில் மட்டும் நடைபெறும் முக்கியச் சடங்காகும். மணமகனின் சகோதரி இதில் முக்கிய பங்கு வகிப்பவர். இவர் மணப்பெண் போல அலங்கரிக்கப்பட்டிருப்பார், இவர் சும்மாட்டின் மீது மூங்கில்களால் வேயப்பட்ட பேழைமூடியை சுமந்து வருவார். இதனுல் தாலியும் குழவிக்கல்லும் இருக்கும். சொம்பு நீரைக் கொடுத்து அருமைக்காரி இவரை அழைத்து வருவார். அருமைக்காரர் வெற்றிலை பாக்கு கொடுத்து மடியில் கட்டிக்க சொல்லுவார். பின் கூறைச்சேலையை கொசுவ மடிப்பில் மடித்து ஒரு புறத்தை மணமகன் கக்கத்திலும் மறுபுறத்தை சகோதரி கையிலும் அருமைக்காரர் கொடுப்பார். இணைச்சீரின் போது இணைச்சீர்காரி (சகோதரி) கொண்டு வரும் கூறைப்புடவையை தான் முகூர்த்தத்தின் போது மணப்பெண் அணிந்து வரவேண்டும்.

மணமகன் மணமகள் வீடு செல்லும் முன் நாட்டார் கல்லை மேள தாளங்கள் முழங்க வலம் வந்து மரியாதை செலுத்துவார். தாயை வணங்கி சீர் கூடையுடன் சுற்றம் சூழ ஊர்வலமாக மணமகள் ஊரை அடைந்து அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தங்குவர். மணமகன் வீட்டார் பிள்ளையார் கோயிலில் தங்கியிருப்பதை அறிந்த மணமகள் வீட்டார் தங்கள் சுற்றம் சூழ மேள தாளங்களுடன் சென்று மணமகன் வீட்டாரை வரவேற்று, மணவீடு அருகே அமைந்துள்ள மணமகன் அறையில் மணமகனை தங்க வைப்பர்.

மூன்றாம் நாள் (முகூர்த்தம்) - இதை தாலி கட்டு என்றும் அழைப்பர். அருமைக்காரர் வாழ்த்து பாடி தாலியை எடுத்துக் கொடுக்க, மணமகன் மணமகள் கழுத்தில் 3 முடிச்சுப்போட்டு மங்கல் நாணை கட்டுவார்.

குலம் அல்லது கூட்டம் பட்டியல்

கொங்கு வேளாளர் கூட்டப் பிரிவுகள் (அல்லது குலப்பிரிவுகள்) நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளது. ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது.



கவுண்டர்கள் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:16 am

சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கொங்கர், கொங்கு நாடு பற்றிய குறிப்புகள் வருகின்றன.

‘கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்து’ – புறநானூறு

‘ஒளிறுவாள் கொங்கர்’ – குறுந்தொகை

‘ஆகெழு கொங்கர் நாடு – பதிற்றுப்பத்து

‘கொங்கர் படுமணி ஆயம் – அகநானூறு

போன்ற பல சங்கப் பாடல்கள் கொங்குக் குறுநில மன்னார்கள், கொங்கர் கால்நடைச் செல்வம், கொங்கர் போர்த்திறன் ஆகியவைகளை மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

கொங்குநாட்டுக் குறுநில மன்னர்கள் அத்தி, அதியமான், ஆய், ஈர்ந்தூர்கிழான் தோயன் மாறன், ஏற்றை, ஓரி, கங்கன், கட்டி, கடிய நெடு வேட்டுவன், குமணன், கொடுமுடி, கொண்கானங் கிழான், தாமான் தோன்றிக்கோன், நன்னன், பழையன், புன்றுறை, பேகன், விச்சிக்கோ ஆகியோர் புலவரால் பாடப்பட்ட புகழ் உடையோராக விளங்கியுள்ளனர்.

சேரன் செங்குட்டுவன் தனக்குச் சமமான அரசனாகக் கொங்கு நாட்டு இளங்கோசரை மதித்திருக்கின்றான். நூற்றுவர் கன்னர், இலங்கைக் கயவாகு, மாளுவ வேந்தர், சோழன் பெருங்கிள்ளி ஆகியோர் போலக் கொங்குநாட்டு மன்னனையும் நட்பாகக் கொண்டுள்ளான். இதனைச் சிலப்பதிகாரம் மூலம் நாம் அறிகின்றோம்.

வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட கால நாகரிகத்தை விளக்கும் தொல்பொருட்கள் கொங்கு நாட்டில் தான் மிகுதியாக உள்ளன. வரலாற்றை விளக்கும் கல்வெட்டுகளும், செப்பேடுகளும், சிறப்பான ஓலைப் பட்டயங்களும், சிற்பச் செல்வமும், வாழ்வியல் வளமும் கொண்டு விளங்குவது கொங்குநாடு.

பன்னிரண்டு ஆறுகளில் 90 இடங்களில் அணை தேக்கி காடு கொன்று, நாடாக்கி, குளம் தொட்டு, வளம்பெருக்கி, கோயிலோடு குடி மக்களுக்காக ஊர்கள் ஏற்படுத்தியவர்கள் கொங்கு மக்கள். தமிழகம் புகுந்த அன்னியர் அனைவரிடமும் முதல் தாக்குதல் பெற்றுத் துன்புற்றாலும் நாணல் போல் வளைந்து கொடுத்து மீண்டும் தலை நிமிர்ந்தது கொங்கு நாடு. இங்கு குளம் குட்டைகளிளெல்லாம் பொன்னெடுத்தனர். ‘ பொன்படு குட்டம்’ என்று கல்வெட்டுக் கூறும்.

தில்லைப் பொன்னம்பலத்திற்கு எத்துணையோ பேர் பொன்வேய்ந்தாலும் முதலில் பொன் வேய்ந்த ஆதித்தன் கொங்கு நாட்டுப் பொன்னைக் கொண்டு பொன் வேய்ந்தான் என்று சைவத் திருமுறை கூறுகிறது. பொன் நாடுதான் கொங்கு நாடாயிற்று. கொங்கு என்ற சொல்லுக்கே பொன் என்ற பொருள் உண்டு.

வீரத்திற்குக் கட்டியும் கூறும் நடுகற்கள் இங்கு மிகுதி. பேரரசுச் சோழர் பெரும்படையில் ‘கொங்க வாளார்’ படை தனிச் சிறப்பு வாய்ந்தது.

அளவு கருவிகட்குக் கூட ‘கொங்கு நாழி’, கொங்கு முறம்’ என்று பெயர் வைத்து மகிழ்ந்தவர்கள் கொங்கு மக்கள். கொங்கின் மீது பற்றுக் கொண்ட காரணத்தால் ஒரு புலவர்:

‘கொங்கதின் மண்ணே சுகம்தரும் அலால் – வேறு
கோருவோர் அறிவு குறையும்’

என்று பாடினார்.

‘கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்’.



கவுண்டர்கள் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:17 am

கொங்கு வேளாளர் குலங்கள்

கொங்கு வேளாளர் குலங்கள் 60, 90 என வளர்ந்து தற்போது 141 ஆகியுள்ளன. அழகுமலைக் குறவஞ்சி 18ம் நுற்றாண்டுக்குரியது. இதில் 141 குலங்கள் பற்றி பட்டியல் அமைந்துள்ளது. மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம். அவை,

அகினி

அந்துவ‌ன்

அன‌ங‌ன்

அழகன்

ஆடை

ஆதி

ஆதித்ர்ய கும்பன்

ஆதிரை

ஆந்தை

ஆரியன்

ஆவ‌ன்

இந்தரன்

ஈன்சென்

உவனன்

என்னை

ஓதாலர்

ஒழுக்கர்

கடுந்துவி

கண்ணன்

கம்பன்

கருன்கண்ணன்

கலிஞி

கன்னாந்தை

கனவாலன்

காடன்

காடை

காரி

காவலன்

கிளியன்

கீரன்

குண்குலி

குண்டலி

குமராந்தை

குயிலன்

குருப்பன்

குழயான்

குனியன்

குனுக்கன்

கூரை

கொட்டாரர்

கொட்ராந்தை

கோடரஙி

கோவர்

கோவேந்தர்

கௌரி

சத்துவராயன்

சனகன்

சாத்தாந்தை

செங்க‌ன்னன்

செங்குன்னி

செம்பூத்தான்

செம்பொன்

செம்வன்

செல்லம்

செல்லன்

செவ்வயன்

சேடன்

சேரலன்

சேரன்

சேவடி

சிலம்பன்

சுரபி

சூரியன்

சூலன்

சோதி

சோமன்

செளரியன்

தவளையன்

தளிஞ்சி

தன்டுமன்

தனக்கவன்

தனவந்தன்

தனசயன்

தூரன்

தேமான்

தேவேந்தரன்

தொரக்கன்

தோடை

நந்தன்

நாரை

நீருன்னி

நீலன்

நெட்டைமணியன்

நெய்தாலி

நெரியன்

ப்ரம்மன்

பஞ்சமன்

படுகுன்னி

பதுமன்

பயிரன்

பரத‌ன்

பவளன்

பன்னன்

பன்னை

பனங்காடன்

பனையன்

பாண்டியன்

பாதாரய்

பாம்பன்

பாமரன்

பாலியன்

பானன்

பிள்ளன்

புதன்

புன்னை

பூச்சாதை

பூசன்

பூதியன்

பெரியன்

பெருங்குடி

பைதாலி

பொடியன்

பொருள்தந்தான்

பொன்னன்

மணியன்

மயிலன்

மழ்உழகர்

மாடை

மாதமன்

மாதுலி

மாவலர்

மீனவன்

முக்கண்ணன்

முத்தன்

முழுகாதன்

முனைவீரன்

மூரியன்

மூலன்

மெதி

மொய்ம்பன்

வணக்கன்

வாணன்

விரதன்

விரைவுளன்

வில்லி

விளியன்

விளோசனன்

வெந்தை

வெந்துவன்

வெளம்பன்

வெளையன்



கவுண்டர்கள் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 5:19 am

கொங்கு நாட்டின் இருபத்துநாலு பகுதிகள்

1. Poondurai Nadu (பூந்துறைநாடு) – Erode (ஈரோடு) & Thiruchancode (திருச்செங்கோடு)

2. Thenkarai Nadu (தென்கரைநாடு) – Dharapuram (தாராபுரம்) & Karur (கரூர்)

3. Kangeya Nadu (காங்கேயநாடு) – Dharapuram (தாராபுரம்) & Kankeyam (காங்கேயம்)

4. Pongalur Nadu (பொங்களுர்நாடு) – Palladam (பல்லடம்) & Dharapuram (தாராபுரம்)

5. Arayai Nadu (ஆறைநாடு) – Kovai (கோவை) & Avanasi (அவனாசி)

6. Varakka Nadu (வாரக்கநாடு) – Palladam (பல்லடம்) & Pollachi (பொள்ளாச்சி)

7. Thiruvavinankudi Nadu (திருவாவினன்குடிநாடு) – Palladam (பல்லடம்) & Pollachi (பொள்ளாச்சி)

8. Mana Nadu (மணநாடு) – South-West region of Karur Taluk (தென்மேற்கு கரூர்)

9. Thalaiyur Nadu (தலையுர்நாடு) – South & West regions of Karur (தென்மேற்கு கரூர்)

10. Thataiyur Nadu (தட்டையூர்நாடு) – Kuliththalai Taluk (குளித்தலை)

11. Poovaniya Nadu (பூவாணிநாடு) – Omalur & Dharmapuri Taluks (ஓமலூர் & தர்மபுரி)

12. Araya nadu (அரையநாடு) – Erode & Namakkal (ஈரோடு & நாமக்கல்)

13. Oduvanga Nadu (ஒடுவங்கநாடு) – Gobi Taluk (கோபி)

14. Vadakarai Nadu (வடகரைநாடு) – Bhavani Taluk (பவானி)

15. Kilakku Nadu (கிழக்குநாடு) – Karur & Kulithalai Nadu (கரூர் & குளித்தலை)

16. Nallurukka Nadu (நல்லுருக்கநாடு) – Udumalaipettai (உடுமலைபேட்டை)

17. Vallavandi Nadu (வாழவந்திநாடு) – Namakkal Northern part, Karur (வட நாமக்கல் & கரூர்)

18. Anda Nadu (அண்டநாடு) – Palani Taluk, Eastern Part (கிழக்கு பழனி)

19. Venkala Nadu (வெண்கலநாடு) – Karur Taluk, Eastern Part (கிழக்கு கரூர்)

20. Kavadikka Nadu (காவடிக்கநாடு)- Pollachi Taluk (பொள்ளாச்சி)

21. Anamalai Nadu (ஆனமலைநாடு) – Pollachi South-West (தென்மேற்கு பொள்ளாச்சி)

22. Rasipura Nadu (ராசிபுரநாடு) – Salem, Rasipuram, Kollimalai (சேலம், ராசிபுரம் & கொல்லிமலை)

23. Kangikovil Nadu (காஞ்சிக்கோவில்நாடு) – Gobi,Bhavani (கோபி & பவானி)

24. Kurumbu Nadu (குறும்புநாடு) – Erode (ஈரோடு)

https://www.facebook.com/KonguSonthankal



கவுண்டர்கள் வரலாறு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 11, 2012 11:01 am

பகிர்வுக்கு நன்றி சிவா அவர்களே .
தூரன்
புன்னகை புன்னகை புன்னகை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கவுண்டர்கள் வரலாறு 1357389கவுண்டர்கள் வரலாறு 59010615கவுண்டர்கள் வரலாறு Images3ijfகவுண்டர்கள் வரலாறு Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக