புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
3 Posts - 3%
prajai
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
2 Posts - 2%
manikavi
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
2 Posts - 2%
சிவா
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
1 Post - 1%
Barushree
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
214 Posts - 42%
heezulia
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
18 Posts - 4%
sugumaran
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
6 Posts - 1%
prajai
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
4 Posts - 1%
manikavi
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_m10புதுப்பெண்...! புதிய உறவு...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுப்பெண்...! புதிய உறவு...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 10:41 am

பல துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கும் பெண்கள், அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் மட்டும் சோதனைகளை வெல்ல முடியாமல் துவண்டு போகிறார்கள்.

எல்லாப் பெண்களின் குடும்பச் சூழலும் ஒரே மாதிரி அமைவதில்லை. வெவ்வேறு சூழலில் வளர்ந்த பெண்கள் ஒரு புதிய சூழலுக்கு தள்ளப்படும்போது சற்று திகைத்துப் போகி றார்கள். புது மனிதர்கள், புது உறவுகள், புதிய வழக்கங்கள் என்று எல்லாம் புதிதாக உருவெடுக்கும்போது அவளும் புதிதாக மாற முயற்சிக்கிறாள்.

சில குடும்பங்களில் அதற்கான அவகாசம் கூட அளிக்கப்படுவதில்லை. திருமண உறவு அவள் மீது திணிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம். இந்நிலையில் சோர்வடையும் பெண் இதிலிருந்து மீள முயலும் போது பல்வேறு பிரச்சினைக்கு ஆளாகிறாள். இதனால் மனநலமும், உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. இது குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கும்.

மணப் பெண் புதிய உறவுகளை அன்பால் வெல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். பொறுமையின் சிகரங்களாக இருந்த பெண்களை இன்று குமுறும் எரிமலை களாக மாற்றிவிட்டது இன்றைய வாழ்க்கை சூழல். அவர்களுடைய கல்வி அவர்களுக்கு சம்பாதிக்க கற்றுக் கொடுத்ததே தவிர, மணவாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள கற்றுத் தரவில்லை.

வெளியுலக பிரச்சினைகளை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொண்டு ஜெயிக்கலாம். ஆனால் குடும்ப வாழ்க்கை என்று வரும்போது பொறுமையாகத்தான் எதையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த பொறுமை பிந்தைய நாட்களில் நிச்சயம் பல நன்மைகளை ஏற்படுத்தித் தரும். பொறுமை ஏமாளித்தனமோ, கோழைத்தனமோ அல்ல. பொறுத்தவர் பூமியாள்வார் என்பது உண்மை.

ஒரு பெண் தன் நேசத்தால் புதிய உறவுகளை அணுக வேண்டும். புதிய உறவுகள் உங்களை புரிந்து ஏற்றுக்கொள்ளும் வரை அமைதி காக்க வேண்டும். இது நல்ல குடும்ப வாழ்க்கைக்கான அஸ்திவாரமாக அமையும்.

உறவுகள் ஒருவேளை தவறாக புரிந்து கொண்டு செயல்படத் துவங்கினால் தவறுகளை புரிய வைக்க பொறுமை ஒன்று தான் துணை. ஆத்திரமான பேச்சுக்கள், கோபம், தாபம் எல்லாம் குடும்பத்தை சீர்குலைக்கவே உதவும். என் தகுதிக்கு எனக்கு புத்தி சொல்ல இவர்கள் யார்? என்ற அகங்காரம் தலைதூக்கினால் ஆபத்து. அதனால் ஒட்டுமொத்த உறவுகளும் போகப்போக உங்களுக்கு தூரமாகி விடும் அபாயம் உண்டு.

அன்பு என்பது ஒருவரின் இதயத்தை பிரகாசமாக்கும். அந்த பிரகாசம் உங்கள் வாழ்க்கை யில் பிரதிபலிக்கும். முகத்துக்கு நேராக நடக்கும் சச்சரவுகளுக்கு உங்கள் அமைதியையே பங்களிப்பாக கொடுத்துப் பாருங்கள். உங்களை எதிர்த்தவர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அந்த சிந்தனையே உங்களைப் பற்றிய பல உண்மைகளை புலப்படுத்தும்.

பல பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் அன்பிற்கு இருக்கிறது. அதன் வல்லமையை நீங்கள் உணர்ந்து மற்றவர்களுக்கு புரிய வையுங்கள். அன்பு என்ற பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்படாத மனிதர்களே இருக்க முடியாது.

குடும்ப வாழ்வின் வெற்றி என்பதே - புதிய உறவுகளின் மனநிறைவில் தான் அடங்கி யிருக்கிறது. திருமணம் என்பது ஒருநாள் விழா. அதன் பிறகு வாழும் வாழ்க்கையில்தான் ஒரு பெண்ணின் பெருமை அடங்கி இருக்கிறது. வாழ்க்கையை அழகாக வடிவமைக்க அன்பை விட சிறந்த சாதனம் எதுவும் இல்லை. குடும்ப வாழ்க்கையை வடிவமைப்பதில் பெண்களுக்குத்தான் பெரும் பங்கு இருக்கிறது.

ஆண்களுக்கு சரிநிகர் சமானம் என்பதில் பெருமிதம் கொள்ளும் பெண்கள், ஏனோ குடும்ப வாழ்க்கையை மட்டும் கோட்டை விட்டு விடுகிறார்கள். அந்த காலத்தில் கல்வி யறிவு இல்லாத பெண்கள் சாதித்ததைக் கூட இந்த கால படித்த பெண்களால் சாதிக்க முடிவதில்லை.

புதிய உறவுகளை அவர்களுடைய பேச்சு நடவடிக்கைகள் மூலம் மனதில் உள்ளதை புரிந்து கொள்ள முற்படுங்கள். எந்தப் பிரச்சினையை எப்படி அணுகினால் தீர்வு கிடைக் கும் என்று யோசித்து செயல்படுங்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுங் கள். கூடுமானவரை ஒருவரைப் பற்றி மற்றவரிடம் பேசாதீர்கள். யாரையும் குறை கூறிப் பழக்கப்படாதீர்கள். உங்கள் குறை நிறைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களைப்பற்றின தவறான அபிப்ராயங்களை தவிர்க்கும். உங்கள் கடமைகளை உணர்ந்து செய்யுங்கள். அது மற்றவர்கள் முன் உங்களை உயர்த்திக்காட்டும். யாரைப் பற்றியும் முதுகுக்குப்பின்னால் பேசாதீர்கள்.

மற்றவர்களுடைய பலவீனங்களை புரிந்து கொள்ளுங்கள். அதேநேரம் எந்த சந்தர்ப்பத் திலும் அதை சுட்டிக்காட்டி மனதை புண்படுத்தாதீர்கள். மற்றவர்கள் அன்பை வெளிப்படுத் தாத போதும் அதை நீங்கள் வெளிப்படுத்துங்கள். நியாயமான காரணங்களுக்காக நீங்கள் கோபப்படுவதாக இருந்தாலும் அதை அளவோடு நிறுத்திக் கொண்டு, உங்கள் பக்க நியாயத்தை பொறுமையாக வெளிப்படுத்துங்கள்.

விஷயம் எதுவாக இருந்தாலும் பொறுமையை கடைபிடியுங்கள். பொறுமை மட்டுமே உங்களை சிந்திக்க வைக்கும். அன்பு உங்களை சுற்றியுள்ள உறவுகளை பலப்படுத்தும். அதுவே உங்கள் குடும்ப வாழ்க்கையை வளப்படுத்தும்.

அன்பால் உலகையே வென்றிருக்கிறார் புத்தர். உங்கள் இனிய குடும்பத்தை அன்பால் வெல்ல உங்களால் முடியாதா? முயற்சி செய்யுங்கள் பெண்களே. இதை ஒரு சவாலாக ஏற்று செயல்படுங்கள். அன்பு வெற்றி பெற்றால் வாழ்க்கை வசப்படும்.

தினதந்தி



புதுப்பெண்...! புதிய உறவு...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 09, 2012 12:31 pm

சரியா சொன்னிங்க தம்பி.................. நன்றி நன்றி

எனக்கு சின்ன வயசுல கல்யாணமாகி ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
யார்கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியாது ஏதாவது தப்பு செய்துட்டு திட்டினா அழுதுகிட்டு நிப்பேன்......... சோகம்

எதுவுமே சொல்லி தராம எங்கம்மா விரட்டி விட்டுட்டாங்க..... அநியாயம்

கஷ்டப்பட்டது நானு.....என்ன தான் நல்லது செய்தாலும் அதிலும் ஏதாவது குறை கடைசி வரை ........... சோகம்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 09, 2012 12:34 pm

ஜாஹீதாபானு wrote:சரியா சொன்னிங்க தம்பி.................. நன்றி நன்றி
எனக்கு சின்ன வயசுல கல்யாணமாகி ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
யார்கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியாது ஏதாவது தப்பு செய்துட்டு திட்டினா அழுதுகிட்டு நிப்பேன்......... சோகம்
எதுவுமே சொல்லி தராம எங்கம்மா விரட்டி விட்டுட்டாங்க..... அநியாயம்
கஷ்டப்பட்டது நானு.....என்ன தான் நல்லது செய்தாலும் அதிலும் ஏதாவது குறை கடைசி வரை ........... சோகம்
பாவம் பானு நீங்க , உங்களை மாதிரி நிறைய பெண்கள் சிறுவயதில் திருமணம் ஆகி , உடனே புகுந்த் வீட்டில் செட் ஆக முடியாமல் திண்டாடியவர்கள் ஏராளம்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 09, 2012 12:37 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:சரியா சொன்னிங்க தம்பி.................. நன்றி நன்றி
எனக்கு சின்ன வயசுல கல்யாணமாகி ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
யார்கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியாது ஏதாவது தப்பு செய்துட்டு திட்டினா அழுதுகிட்டு நிப்பேன்......... சோகம்
எதுவுமே சொல்லி தராம எங்கம்மா விரட்டி விட்டுட்டாங்க..... அநியாயம்
கஷ்டப்பட்டது நானு.....என்ன தான் நல்லது செய்தாலும் அதிலும் ஏதாவது குறை கடைசி வரை ........... சோகம்
பாவம் பானு நீங்க , உங்களை மாதிரி நிறைய பெண்கள் சிறுவயதில் திருமணம் ஆகி , உடனே புகுந்த் வீட்டில் செட் ஆக முடியாமல் திண்டாடியவர்கள் ஏராளம்

இதனால் முதல் பெண் குழந்தையை இழந்தேன் ராஜா............. சோகம்

இப்போது நினைத்தாலும் அழுகை வரும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 09, 2012 12:40 pm

அட போங்கப்பா இதெல்லாம் நாங்க கடைபிடித்தால் அவ கிடக்கிற லூசு அப்படின்னு பட்டம் கிடைக்கும்.
இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஒரு உதாரணம் சொல்றேன். எனக்கு கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகுது ஒரு தீபாவளிக்கு கூட எனக்கு புகுந்த வீட்டுல இருந்து எதுவும் கிடைத்தது இல்லை.ஆனா நான் மட்டும் இங்க இருந்து பணம் அனுப்புவேன். ஆனா இளைய மருமகளுக்கு 2000 ரூபாய்ல புடவை எடுப்பாங்க. அந்த பொண்ணு ஏன் அத்தை எனக்கு மட்டும் எடுக்கரிங்களே, அக்காவுக்கு எடுக்கலியே, ஏதாச்சும் அக்கா நினைச்சுக்க போறாங்க என்று சொல்லும்போது அந்த லூஸ்க்கு அப்படி எல்லாம் யோசிக்க தெரியாது என்பதுதான் பதிலா வந்துச்சாம்.இது மாதிரி நிறைய நிகழ்வுகள்.
நான் எல்லாவற்றையும் பொறுமையா வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன். எனக்கு என்று ஒரு காலம் வரும் என்று
இந்த மாதிரி பாரபட்சம் காமிக்கும்போது எங்க இருந்து பாசம்,அன்பு எல்லாம் வரும்?



புதுப்பெண்...! புதிய உறவு...! Uபுதுப்பெண்...! புதிய உறவு...! Dபுதுப்பெண்...! புதிய உறவு...! Aபுதுப்பெண்...! புதிய உறவு...! Yபுதுப்பெண்...! புதிய உறவு...! Aபுதுப்பெண்...! புதிய உறவு...! Sபுதுப்பெண்...! புதிய உறவு...! Uபுதுப்பெண்...! புதிய உறவு...! Dபுதுப்பெண்...! புதிய உறவு...! Hபுதுப்பெண்...! புதிய உறவு...! A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 09, 2012 12:41 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா இதெல்லாம் நாங்க கடைபிடித்தால் அவ கிடக்கிற லூசு அப்படின்னு பட்டம் கிடைக்கும்.
இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஒரு உதாரணம் சொல்றேன். எனக்கு கல்யாணம் ஆகி 8 வருஷம் ஆகுது ஒரு தீபாவளிக்கு கூட எனக்கு புகுந்த வீட்டுல இருந்து எதுவும் கிடைத்தது இல்லை.ஆனா நான் மட்டும் இங்க இருந்து பணம் அனுப்புவேன். ஆனா இளைய மருமகளுக்கு 2000 ரூபாய்ல புடவை எடுப்பாங்க. அந்த பொண்ணு ஏன் அத்தை எனக்கு மட்டும் எடுக்கரிங்களே, அக்காவுக்கு எடுக்கலியே, ஏதாச்சும் அக்கா நினைச்சுக்க போறாங்க என்று சொல்லும்போது அந்த லூஸ்க்கு அப்படி எல்லாம் யோசிக்க தெரியாது என்பதுதான் பதிலா வந்துச்சாம்.

இப்படி செய்யும் போது தான் ரொம்ப கோவம் வரும் சுதா........... என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 09, 2012 12:43 pm

ஜாஹீதாபானு wrote:இதனால் முதல் பெண் குழந்தையை இழந்தேன் ராஜா............. சோகம் இப்போது நினைத்தாலும் அழுகை வரும்
அன்பு மலர் நாளை உங்கள் மகளுக்கோ , மருமகளுக்கோ இந்த நிலை வாராமல் பார்த்து கொள்ளுங்கள் பானு , சில வருடங்களில் இந்நிலை மாறிவிடும். அதை விட்டுவிட்டு எனக்கு பண்ணினார்கள் நானும் பண்ணுவேன் என்று சில அதிபுத்திசாலிகளை போல செய்தால் சங்கிலிதொடர் போல தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Apr 09, 2012 12:55 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:இதனால் முதல் பெண் குழந்தையை இழந்தேன் ராஜா............. சோகம் இப்போது நினைத்தாலும் அழுகை வரும்
அன்பு மலர் நாளை உங்கள் மகளுக்கோ , மருமகளுக்கோ இந்த நிலை வாராமல் பார்த்து கொள்ளுங்கள் பானு , சில வருடங்களில் இந்நிலை மாறிவிடும். அதை விட்டுவிட்டு எனக்கு பண்ணினார்கள் நானும் பண்ணுவேன் என்று சில அதிபுத்திசாலிகளை போல செய்தால் சங்கிலிதொடர் போல தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.
அப்படி செய்யமாட்டேன் ராஜா...........அவர்கள் செய்ததை நான் செய்தால் அப்புறம் அவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் நான் ஆண்டவனிடத்தில் பதில் சொல்லவேண்டும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 09, 2012 12:58 pm

ஜாஹீதாபானு wrote:அப்படி செய்யமாட்டேன் ராஜா...........அவர்கள் செய்ததை நான் செய்தால் அப்புறம் அவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் நான் ஆண்டவனிடத்தில் பதில் சொல்லவேண்டும்
உங்கள் பதில் , பெருமையாக இருக்கிறது நன்றி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 09, 2012 12:59 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:இதனால் முதல் பெண் குழந்தையை இழந்தேன் ராஜா............. சோகம் இப்போது நினைத்தாலும் அழுகை வரும்
அன்பு மலர் நாளை உங்கள் மகளுக்கோ , மருமகளுக்கோ இந்த நிலை வாராமல் பார்த்து கொள்ளுங்கள் பானு , சில வருடங்களில் இந்நிலை மாறிவிடும். அதை விட்டுவிட்டு எனக்கு பண்ணினார்கள் நானும் பண்ணுவேன் என்று சில அதிபுத்திசாலிகளை போல செய்தால் சங்கிலிதொடர் போல தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.
அதி புத்திசாலிகள் இந்த மாதிரி செய்ய மாட்டார்கள் ராஜா. சாதாரணமாக மனிதன் செய்யும் காரியம் தான் இது.
பெண்களுக்கும் மனம் என்று இருக்கிறது. கல்யாணம் ஆகி வரும்போது உன் அப்பன் என்னத்த செய்ஞ்சான்
என்று கேக்கும் மாமியார்களும் . பேச கூடாத வார்த்தை எல்லாம் பேசி மனதை நோகடிக்கும் மாமியார்கள் நிறைய பேர் இருக்கதானே செய்கிறார்கள்.எல்லாவற்றையும் பேசி மனம் நொந்து போன பிறகு இதெல்லாம் மனசுல வச்சுக்க கூடாது என்றால் எப்படி? நாளைக்கு நமக்கு மருமகள் தயவு தேவைப்படும்போது மட்டும் அவகிட்ட போய் நின்னா அவ எப்படி செய்வா?அவளும் மனுஷி தானே.



புதுப்பெண்...! புதிய உறவு...! Uபுதுப்பெண்...! புதிய உறவு...! Dபுதுப்பெண்...! புதிய உறவு...! Aபுதுப்பெண்...! புதிய உறவு...! Yபுதுப்பெண்...! புதிய உறவு...! Aபுதுப்பெண்...! புதிய உறவு...! Sபுதுப்பெண்...! புதிய உறவு...! Uபுதுப்பெண்...! புதிய உறவு...! Dபுதுப்பெண்...! புதிய உறவு...! Hபுதுப்பெண்...! புதிய உறவு...! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக