புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
56 Posts - 50%
heezulia
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
12 Posts - 2%
prajai
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
9 Posts - 2%
Guna.D
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
4 Posts - 1%
jairam
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_m10மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2012 9:08 pm



“எங்க ஊர்ல தினமும் ஆறு மணிநேரம். உங்க ஊர்ல?’ என விளையாட்டாகப் பேசிக்கொண்ட கட்டத்தைத் தாண்டி, மக்கள் குமுறும் நிலைக்கு வந்துவிட்டார்கள். விவசாயம், மருத்துவம், படிப்பு, தொழில் என அஸ்திவாரங்கள் அனைத்தும் ஆட்டம் கண்டுவிட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ள மின்தடைக்கு என்னதான் தீர்வு?

தமிழகத்தின் மின்சாரத் தேவை 9500 மெகாவாட். இதில் ஏறக்குறைய 7000 மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது. இந்த மின்சாரப் பற்றாக்குறையை புள்ளிவிவரத்தை மக்கள் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போயிருப்பார்கள். இந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்யவே முடியாதா?

தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்க நாலே வழிகள்தான். முதல் வழி, மத்திய அரசுத் தொகுப்பில் நமது பங்காக நெய்வேலி, எண்ணூர், கல்பாக்கம், ராமகுண்டம் போன்ற இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களிலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய 3130 மெகாவாட் மின்சாரம். இதில் நமக்கு ஏறக்குறைய 2000 மெகாவாட் தான் கிடைக்கிறது. பல வருடங்களாகியும் புதுப்பிக்கப்படாத யூனிட்கள், தொழில்நுட்பக் கோளாறுகள், தொலைதூரத்திலிருந்து மின்சாரம் எடுத்து வருவதில் உள்ள பிரச்னைகள் என இந்தப் பற்றாக்குறைக்குப் பல காரணங்கள். புலிக்காட்டில் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கிய அனல்மின் நிலையத்தை ஏறக்குறைய புதுப்பித்ததுதான் மின்சார உற்பத்தியில் தமிழக அரசு எடுத்து வைத்த கடைசி அடி. நிலக்கரி பற்றாக்குறை, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற காரணங்களால் அனல் மின்நிலையங்களை இனி வலியுறுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

அடுத்த வழி, நீர்மின் நிலையங்கள், காற்றாலைகள் போன்ற மரபுசாரா மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரம் பெறுவது. நினைத்த நேரத்தில் எல்லாம் நீர்மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து விட முடியாது. மேட்டூர், பாபநாசம், சோலையாறு, கோடையாறு போன்ற நீர் மின்நிலையங்களுக்கு உட்பட்ட நீர்தேக்கங்களில் விவசாயத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும்போதுதான் மின்உற்பத்தி செய்ய முடியும். பவானி அணைக்கு உட்பட்ட குந்தா நீர்மின் நிலையம் மட்டுமே நீர்ப்பாசனத்தை நோக்கமாகக் கொள்ளாமல் இயங்குகிறது. இது வருடத்தில் மூன்று மாதங்கள் இயங்கினாலே அதிகம். இதன் மூலம் சொற்ப மின்சாரமே கிடைக்கிறது. காற்றாலைகளிலிருந்து கிடைக்கும் மின்சாரம் சீசன் சமாசாரம்தான். காற்றுள்ளபோதுதான் தூற்றிக் கொள்ள முடியும். ஆக, மரபுசாரா மின் உற்பத்தியாளர்களையும் இந்த நிமிடம் நம்ப முடியாது.

மூன்றாம் வழி, தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துகொண்ட ஜிஎம்ஆர், பிள்ளைப்பெருமாள் நல்லூர் (பிபிஎன்), சாமல்பட்டி பவர், மதுரை பவர் உள்ளிட்ட தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிலிருந்து மின்சாரம் பெறுவது. இவற்றில் பிபிஎன் நிறுவனம் 2006 -லேயே ஒரு யூனிட் மின்சாரத்தை ஏறக்குறைய 17 ரூபாய்க்கு வாரியத்துக்கு விற்பனை செய்தது. இது வாரியமே மின்சாரம் உற்பத்தி செய்தபோது ஆன உற்பத்தி விலையை விட மிக மிக அதிகம். இதைத் தவிர, வாரியம் பிபிஎன்னுக்கு நிலைக்கட்டணமாக ஒரு நாளைக்கு 94 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும். இதுபோன்ற மின் உற்பத்திநிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடாத நாட்களிலும் வாரியம் இந்த நிலைக்ட்டணத்தைக் கொடுத்தாக வேண்டும். காலப்போக்கில் பெரும் கடன்சுமைக்குத் தள்ளப்பட்ட மின்வாரியம் இந்த நிறுவனங்களுக்குப் பணம் கொடுக்காததால், இவை கடந்த இரு வாரங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. மின் தடையைச் சமாளிக்க அரசு அதிகக் கட்டணத்தில் மின்சாரம் வாங்கி, மக்களுக்கு விநியோக செய்ய முடியாது.

இதே பாணியில் மாநில அரசு சில நிற்பனை நிறுவனங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கும் சந்தைக் கொள்முதல் நான்காம் வழி. இதில் அப்போதைய சந்தை நிலவரத்தைப் பொருத்து மின்சாரத்தில் விலை நிர்ணயிக்கப்படும். இந்த வழி தனியார் கொள்முதலைப் போலவே வாரித்துக்கு அதிகப்படியான செலவு வைக்கும். மொத்தத்தில், மின்தடையைச் சமாளிக்க அரசு இப்போது எங்கிருந்தும் மின்சாரத்தை வாங்க முடியாது.

சரி, மின்தடையை அரசு எப்படித்தான் எதிர்க்கொள்வது? மின்தடைக்கு மின்தடைதான் தீர்வு என்கிறார் ஓய்வுபெற்ற மின்துறை பொறியாளரான சா.காந்தி. மின்தடை புதுசா வந்த பிரச்னை இல்லை. தமிழகத்தில் 1983களில் 85 சதவீத மின்தடை இருந்தது. குறைவான அளவு மின்சாரம் இருந்தாலும், அதைச் சரியாகத் திட்டமிட்டு, தேவையைப் பொறுத்து பகிர்ந்துகொடுத்து பிரச்னை பெரிசாகாமல் அப்போ பார்த்துக்கிட்டாங்க. நாம இப்போது அதைத்தான் செய்யணும். அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தகூடிய வணிக வளாகங்கள், திரையரங்கு வளாகங்கள், கனரகத் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் போன்றவற்றுக்குத் தற்போது 20 சதவீத மின்தடை அமலில் இருக்கு. அதை 40 சதவீதமா உயர்த்தினால், வீடுகள், மருத்துவமனைகள், சிறு தொழில் நிறுவனங்கள் போன்றவற்றுக்கான மின்தடை குறையும். ஆனால், பணம் படைத்த சக்திகள் லாபி பண்ணி இதைச் செய்ய விடாமல் தடுத்திடறாங்க என்கிறார் காந்தி.

மின்சாரத்தை டிரான்மிஷன் பண்றப்போ வீணாகிற மின்சாரத்தின் அளவு வெளிநாடுகளில் 4 சதவீதம்தான். நம்மூர்ல அரசால் வெளிப்படையா அறிவிக்கப்படுற மின்சார இழப்பு 9 சதவீதம். உண்மையான மின்விரயத்தின் அளவு 25 சதவீதம் இருக்கும். காற்றாலைகள் அதிக மின்சார உற்பத்தி செஞ்சா கூட, அதை வாங்கி இருப்பில் வச்சுக்கிறதுக்கான தொழில்நுட்ப வசதி வாரியத்திடம் இல்லை. வீடுகளிலும் அலுவலகங்களிலும் மின்சாரத்தைச் சிக்கனமா பயன்படுத்துறதைப் பற்றி நம்மாளுங்க யோசிச்சதே இல்லை. அதன் பலனைத்தான் இப்போ அனுபவிக்கிறோம். மக்கள் சூரிய ஒளி மூலமாக மின்சாரத்தில் ஹீட்டர், லைட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த அரசு ஊக்குவிக்கணும் என்பது இந்திய நுகர்வோர் சங்கத்தின் அறக்காவலர் தேசிகன் சொல்லும் தீர்வு.

சென்னை பிரசிடென்சி கால்லூரியின் பொருளாதாரத் துறை பேராசிரியர் ஜோசப் துரையிடம் கேட்டபோது, ஒரு வருடத்தின் மின்சாரத் தேவை இவ்வளவுதான்னு கணக்கிட்டு, ஒரு பவர் ப்ளாண்ட்டைத் திறக்க குறைந்தபட்சம் மூன்று வருஷம் ஆகுது. அதை முடிக்குறத்துக்குள் மின்சாரத் தேவை பல மடங்கு அதிகமாகிடுது. மின்சார உற்பத்தித் திட்டங்களைத் திட்டமிடுறப்போ நீண்ட கால நோக்கத்தோடு யோசிக்கணும். சென்னை போன்ற அதிகளவு நகரமயமாக்கலுக்கு உள்ளாகிற இடங்களில் மின்சாரத் தேவை வேகமா அதிகரிக்கும். நகரமயமாக்கத்தில் மின்சார சிக்கனத்தை அரசும் மக்களும் மறந்திடக் கூடாது. வணிகக் கட்டிடங்களும் அபார்ட்மெண்ட்களும் கட்டப்படுறப்போ மின்சாரத்தைக் குறைவா பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கணும். இருப்பில் இருக்கும் மின்சாரத்தை வீடுகள், தொழில் வளாகம், விவசாய நிலம்னு தேவைக்குத் தகுந்த மாதிரி புத்திசாலித்தனமா பகிர்ந்து கொடுக்கிறதுதான் இப்போதைய முக்கியத்தேவை என்கிறார்.

வளர்ந்த குஞ்சுகளைத் தொலைவில் வைத்து வளரும் குஞ்சுகளைப் பக்கத்திலேயே வைத்தும் பராமரிக்கிற தாய்ப் பறவையைப் போல ஒவ்வொரு தரப்பின் தேவையை உணர்ந்து மின்தடையை அமல்படுத்துவதில்தான் தமிழக அரசின் வெற்றி இருக்கிறது.

- ஆனந்த் செல்லையா





மின்வெட்டு - இருட்டில் வாழ்க்கை! - எப்போது தீரும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 12:12 am

சில நாடுகளில் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தை
வீட்டிலேயே உற்பத்தி செய்ய சோலார் சப்சிடி தருகிறார்கள்
அதுபோல் நாம் நாட்டிலும் செய்தால் ஓரளவு சமாளிக்கலாம்




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 12:14 pm

நமது நாட்டிலும் பாங்குகளில் சோலார் பவர் பிளாண்ட் ஆரம்பிக்கிறதுக்கு எளிதாக லோன் கிடைக்கிந்த்றது ஆனால் மக்களிடம் தான் அதற்கு விளிபுணர்வு இல்லை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 28, 2012 12:30 pm

சிவா wrote:மூன்றாம் வழி, தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்துகொண்ட ஜிஎம்ஆர், பிள்ளைப்பெருமாள் நல்லூர் (பிபிஎன்), சாமல்பட்டி பவர், மதுரை பவர் உள்ளிட்ட தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிலிருந்து மின்சாரம் பெறுவது.
இவர்கள் எங்கிருந்து , என்ன technology உபயோகித்து மின்சாரம் தயாரிக்கிறார்கள்?? தனியாரால் முடிவது என் அரசாங்கத்தால் முடியாது ?


சிவா wrote:வளர்ந்த குஞ்சுகளைத் தொலைவில் வைத்து வளரும் குஞ்சுகளைப் பக்கத்திலேயே வைத்தும் பராமரிக்கிற தாய்ப் பறவையைப் போல ஒவ்வொரு தரப்பின் தேவையை உணர்ந்து மின்தடையை அமல்படுத்துவதில்தான் தமிழக அரசின் வெற்றி இருக்கிறது.
இதே போல பொதுமக்களும் நமது மாநிலத்தின் பிரச்சினையை நமது பிரச்சினையாக கருதி இந்த சிக்கலை ஒற்றுமையுடன் எதிர்நோக்கி வெற்றிபெறவேண்டும்.

பகவதி , கொலவெறி சொல்வது போல மரபு சாரா எரிசக்தி உற்பத்தி முறைகளை குறைந்தபட்சம் சிறு சிறு உபயோகத்துக்காவது பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Feb 28, 2012 3:59 pm

இவர்கள் எங்கிருந்து , என்ன technology உபயோகித்து மின்சாரம் தயாரிக்கிறார்கள்?? தனியாரால் முடிவது என் அரசாங்கத்தால் முடியாது ?


அது அரசாங்கத்தால் முடியும் ஆனால் உடனே முடியாது , அதற்கு திட்டங்கள் தீட்டபாடுள்ளண இந்த ஆண்டு முடிவுக்குள் மூளுவதுமாக சரிசெய்யபடும் உடன்குடியில் 1000எம்‌டபில்யு திறன் கொண்ட ஒரு அனல் மின் நிலையம் ஆரம்பம் ஆகி கொண்டிருக்கிறது மேலும் சிவா அண்ணா வேறு ஒரு பதில் கூறி இருந்தால் ஜூலை மாததுக்குள் இரண்டு புதிய மின் நிலையங்கள் மூலம் 1000எம்‌டபில்யு மின்சாரம் வலங்கபடுமென்று

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக