புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
3 Posts - 2%
jairam
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
2 Posts - 1%
சிவா
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
1 Post - 1%
Manimegala
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
1 Post - 1%
Poomagi
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
16 Posts - 4%
prajai
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
7 Posts - 2%
jairam
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
3 Posts - 1%
Rutu
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_m10திருமண வரம் தரும் வள்ளிமலை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வரம் தரும் வள்ளிமலை!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 09, 2012 11:38 am

விரைவில் திருமணம் கைகூட மிகவும் சுலபமாக பரிகாரம், வள்ளி மலைக்குச் சென்று வழிபாடு செய்வது தான். வள்ளிக்கும், முருகனுக்கும் திருமணம் நடந்த இடம் வள்ளிமலை.

காட்பாடியிலிருந்து 21 கி.மீ. தொலைவில் வள்ளி மலை உள்ளது. வேலூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களிலிருந்தும் வள்ளிமலை செல்ல பஸ் வசதி உள்ளது.

மலையடிவாரத்தில் சரவணப் பொய்கை என்னும் திருக்குளத்தைக் கடந்து சென்றதும், அழகான அடிவாரக் கோயில். ஆறு திருமுகங்களுடன் வள்ளி தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கும் முருகப்பெருமனைக் கண்குளிர தரிசனம் செய்கிறோம். “முருகா முருகா’ என்று சொல்லியபடி 445 படிகள் ஏறி மலை உச்சிக் கோயிலுக்குச் செல்கிறோம். அத்தனை படிகளும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற வேண்டுமானால் அவன் அருளைப் பெற வேண்டும். தடைகள் விலகப் போகின்றன என்னும் நம்பிக்கை நமது மனத்தில் உறுதியாக உள்ளதால் படி ஏறும் களைப்பு தெரியவில்லை. மாறாக உற்சாகம்தான் மேலிடுகின்றது.

அங்கு வரும் பக்தர்கள் ஊரிலிருந்து கிளம்பும்போது தேனும், தினை மாவும் வாங்கிக் கொண்டு வருகின்றனர். வள்ளி மலையில் முருகனுக்கும் வள்ளி-தெய்வானைக்கும் தேன்-தினை மாவு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

வள்ளி தினைப்புனை காத்த இடம் இது. முருகனுக்கு தேனும், தினை மாவும் வள்ளி கொடுத்த இடம் இது. இங்குள்ள குமரிச் சுனையில் வள்ளியம்மை மஞ்சள் அரைத்துக் குளித்தார். சூரிய ஒளியே படாமல் ஒரு குகைக்குள் இந்த சுனை உள்ளது. ஒரு வெள்ளை நிறத் துணியை இந்தச் சுனை நீரில் முக்கி எடுத்துக் கல்லில் உரசினால் அது மங்சள் நிறமாக மாறிவிடும். இந்த மலையில் பல குகைகளும் நீர்ச்சுனைகளும் உள்ளன.

வள்ளியை மணந்து கொள்ள முருகன் செய்த லீலைகள் அனைவரும் அறிந்தவை. இந்த மலை மீது ஏறி நின்றதும் கந்தன் வேங்கை மரமாக மாறியதும் கிழவன் வேடத்தில் வந்து தாகம் என்றதும் பிறகு மோகம் என்றதும் நினைவுக்கு வராமலா இருக்கும்?

படியேறி மலை உச்சிக்குச் சென்றதும் இடப்பால் கல்லினால் ஆன த்வஜஸ்தம்பம் உள்ளது. ஆலயத்தினுள் நுழைகிறோம். “ஓம்’ என்னும் பிரணவ வடிவத்தில் ஆலயப் பிரகாரம் அமைந்துள்ளது. பாறைகளைக் குடைந்து செய்து குடவரைக் கோயில் இது. இக்கோயில் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் வெளிச்சம் இருக்காது. இரண்டாவது பகுதி சற்று உயரமாகவும் வெளிச்சமாகவும் உள்ளது. மூன்றாவது கட்டு மூலவர் சந்நதி உள்ள பகுதி. தினைப் புனை காத்த வள்ளி பறவைகளை விரட்டும் கோலத்தில் உள்ள காட்சியை நுழைவாயில் அருகே கற்சிற்பத்தில் காணலாம்.

மலை உச்சிக் கோயிலில் முருகன் ஒரு திருமுகமும் இரு திருக்கரங்களும் கொண்டு அபயஹஸ்தத்துடன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். இருபுறமும் வள்ளி தெய்வானை தேவியருடன் அருட்காட்சி அருளும் முருகனைக் கண்டு மகிழ்கிறோம். எடுத்துச் சென்ற தேனையும் தினை மாவையும் அர்ச்சனைப் பொருட்களுடன் சேர்த்து குருக்களிடம் கொடுக்கிறோம். நமது பெயர் நட்சத்திரம், ராசி, கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி சங்கல்பம் செய்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்கிறார் ஆலய குருக்கள். தேனும், தினை மாவும் நைவேத்தியம் செய்து மற்ற பிரசாதங்களுடன் நம்மிடம் கொடுக்கிறார் அர்ச்சகர்.

யாருக்குத் திருமணம் தாமதமாகிறதோ அவர்கள் வீடு திரும்பியதும் காலையில் முருகனை வேண்டித் துதித்து அந்தத் தேனையும் தினை மாவையும் தினமும் சிறிதளவு உட்கொண்டால் வெகு விரைவில் திருமணம் நடைபெறும்.

மூலவர் சந்நிதியை வலம்வரும்போது விசாலாட்க்ஷி - காசி விஸ்வநாதர் நந்திகேஸ்வரர் ஆகிய சந்நிதிகளை வழிபடுகிறோம். பெருமாள் கோயில்களில் உள்ளது போல் இங்கும் சடாரி சாதிக்கின்றனர். திருமாலின் இரு கண்களிலிருந்து தோன்றியவர்கள்தாம் வள்ளியும், தெய்வானையும். முருகன் மணம் புரிந்து கொள்வதற்காக பெருமாளைக் குறித்து வள்ளி இங்கு தவம் புரிந்ததன் காரணம் பற்றி சடாரி சாதிக்கும் வழக்கம் இங்கு பின்பற்றப்படுகிறது.

வள்ளியும், முருகனும் இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டு திருத்தணிக்குச் சென்று அங்கு தங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன. மூலவரான முருகப் பெருமானுக்கு எதிரில் சதுர வடிவிலான கல் ஜன்னல் ஒன்று உள்ளது. அதன் அருகில் ஒரு பாதாளக் குகை உள்ளதாம். அது திருத்தணி வரை செல்லுமாம். இந்த செவிவழிச் செய்தியை உள்ளூர் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

திருப்புகழ் சுவாமிகள் என்று அழைக்கப்படும் வள்ளமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் சமாதி இக்கோயிலுக்கு 2 கி.மீ. தொலைவில் உள்ளது. அவருடைய பூர்வாஸ்ரமம் பெயர் அர்த்தநாரி. அவர் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியையும், மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளையும் தரிசனம் செய்தார். அவ்விருவரும் வள்ளி மலைக்குச் சென்று திருப்புகழைப் பாடி உலகெங்கும் பரப்பு என்று அருள்வாக்கு அளித்தனர். “சாதாரண சமயல்காரரான எனக்கு ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் கிடையாது. இசைஞானமும் கிடையாது. என்னால் எப்படி இதைச் செய்ய முடியும்?’ என்று நினைத்துக் கொண்டே வள்ளி மலைக்கு சுவாமிகள் வந்தாராம். ஒரு சிறுமி வடிவில் வள்ளி நேரில் வந்து திருப்புகழை இசையோடு கற்பித்து ஞானோபதேசம் செய்தாளாம். இந்த அதிசயம் வள்ளிமலையில் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்றது. அருணகிரிநாதரின் திருப்புகழை உலகறியச் செய்தவர் வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள். அருணகிரிநாதர் இத்தலத்திற்கு மொத்தம் 11 திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார்.

மலை உச்சிக் கோயிலில் இருந்து வள்ளிமலை சுவாமிகளின் சமாதிக்குச் செல்லும் பாதை சற்று கரடுமுரடாகத்தான் இருக்கும். வாழ்க்கை ஸ்மூத்தாக அமையவும் திருமணம் விரைவில் நடைபெறவும் அருள்புரியும் தலமல்லவா இது? எனவே பாதை எப்படி உள்ளது என்பதைப் பொருட்படுத்தாமல் திருப்புகழ் சுவாமிகளின் சமாதியிலும் வழிபாடு செய்து விட்டு மனநிறைவுடன் இல்லாம் திரும்புகிறோம்.

உங்கள் இல்லத்திலும் விரைவில் கெட்டி மேளம் கொட்டட்டும். தேனினும் இனிய மணவாழ்க்கை அமையட்டும்.

- ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்

மங்கையர்மலர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Feb 16, 2012 12:26 pm

வள்ளிமலை எங்கள் ஊரின் அருகாமையில் தான் உள்ளது
மேலும் தகவலுக்கு http://murugan.org/centers/vallimalai.htm



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருமண வரம் தரும் வள்ளிமலை! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Feb 16, 2012 12:29 pm

எங்கள் ஊரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் தான் வள்ளிமலை உள்ளது..
அங்கு தேரோட்டம் வெகு சிறப்பாக இருக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருமண வரம் தரும் வள்ளிமலை! Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக