புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோதிடம் 100% உண்மை. சவால்!
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
First topic message reminder :
சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர். ஆனால் இன்றுவரை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்பது தான் உண்மை! அவர்கள் சோதிடர்களைக் குறை கூறுகிறார்களா? அல்லது சோதிடத்தையே குறை கூறுகிறார்களா என்பது அவர்களின் விமர்சன முழக்கத்தில் இருந்து தெளிவாக எனக்குப் புரியவில்லை!!
சிறுவயதில் எனக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது, நான் மிகவும் தொந்தரவாக உணர்ந்தேன். அதனால் எனது பெற்றோர்களின் முயற்சியால் நான் மருத்துவ மனைக்கு சென்றேன். அவர்கள் எண்ணன்னோவோ சோதித்துவிட்டு, ஒரு பக்க அளவில் புரியாத கதை வசனத்தை எழுதிக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஒரு மருந்துக் கடையில் கொடுத்தேன். (எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று என்னவென்றால். எழுதிக் கொடுக்கும் மருந்துகளை ஏன் அந்த மருத்துவரே கொடுக்கக் கூடாது என்பது தான்? யாராவது மருத்துவம் படித்தவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்!...) பிறகு அவரும் அதை திருப்பித் திருப்பி பார்த்து விட்டு மருந்து மாத்திரைகளைக் கொடுத்தார்... நானும் அதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்தேன் ஒருவாரத்திற்குப் பிறகு ஜலதோஷம் சரியாகிவிட்டது.
மீண்டும் ஒருநாள் அதே ஜலதோஷம்! நான் மருத்துவமனைக்கு போகவில்லை. ஆனால் அதே ஒருவாரத்தில் அது சரியாகி விட்டது! என்ன ஆச்சரியம்?.... எனக்கு அப்போது தான் மருத்துவத்தின் மகத்துவம் புரிந்தது. அதாவது நாம் ஒரு நோய்க்காக மருத்துவ மனைக்கு சென்று மருந்து சாப்பிட்டு விட்டால், அந்த நோய் எப்போது வந்தாலும் அந்த மருந்து உள்ளே இருந்து கொண்டு அதே கால கட்டத்திற்குள் வந்த நோயை அடித்து விரட்டிவிடும்" என்று. அதனால் நான் இப்போதெல்லாம் மருத்துவமனைக்கே செல்வதில்லை. ஆனால் அதன் பிறகு காய்ச்சல், தலைவலி, பல் வலி, என்று எத்தனையோ நோய்கள் வந்திருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலங்களில் அந்த நோய்களெல்லாம் சரியாகிவிட்டன...
மனித உடல் கூறு என்பது ஒரு அற்புதமான ரகசியம்! அதில் இல்லாத மருந்துகளும் கிடையாது! வராத நோய்களும் கிடையாது. எந்த நோய்க்கான மருந்து நமது உடம்பிற்குள் இருக்கிறதோ, அந்த நோய் மட்டும் தான் நமக்கு வருகிறதாம். இதை நான் சொல்லவில்லை. மருத்துவம் தான் சொல்கிறது!! (யாரும் ஆதாரம் கேட்டுவிடாதீர்கள் இது கிண்டல் ) சாதாரண நோய்களெல்லாம் சிறிது நேரம் படுத்துத் தூங்கினால் சரியாகிவிடுமாம். மிகப்பெரிய நோய்களுக்குத் தான் மருந்தே கிடையாதே பிறகு ஏன் நாம் கவலைப் படவேண்டும். "தூங்கினால்" அல்லது "தாங்கினால்" எல்லாம் சரியாகிவிடும்!!
சரி இப்போது தலைப்பிற்கு செல்வோம்...
"சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர்.... ஆனாலும் கடவுளைப் போல இந்த சோதிடத்தையும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் ஒப்பிடுவதெல்லாம் அறிவியல்! அறிவியல்! அறிவியல்!! (ஒருவேளை அவர்களெல்லாம் அறிவியல் மேதைகளாக இருப்பார்களோ என்னவோ...)
அறிவியல் என்பது ஒன்றும் வானத்தில் இருந்து திடீரென்று குதித்ததில்லை. மனிதன் சொல்லிக் கொடுத்ததைத் தான் அது திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!!
அப்படியென்றால் கிளி ஜோசியம் போல, இது கிளி அறிவியலாக இருக்குமோ...
சரி, நான் இப்போது மருத்துவமனைக்கு செல்கிறேன்....
என்னை ஒரு நாள் முழுதும் பரிசோதித்துக் கொள்ளட்டும்.....
(அறிவியல் மிகச்சிறந்த சக்தி வாய்ந்தது அல்லவா? அதனால் இந்த ஒருநாள் போதும் என்று நினைக்கிறேன்)
எந்த (அறிவியல்)மருத்துவராவது எனக்கு என்ன நோய் இருக்கிறது? அது எதனால் வந்தது? அது எப்போது தீரும்? அதன் பிறகு எனக்கு அந்த நோய் வராமல் செய்ய முடியுமா? போன்ற விவரங்களை எழுத்து மூலம் அளிப்பார்களா?
குற்றவாளி என்று தெரிந்தே அவருக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களைப் பார்த்து யாராவது இது போன்ற ஒரு குற்றச்சாட்டை வைக்க முடியுமா?
2000 ரூபாய் கொடுத்தால் பெயிலில் விடும் சட்டம் ஏமாற்று வேலை என்பதை இவர்களால் பகிரங்கமாக சொல்ல முடியுமா?
அப்படி சொன்னால் மறுநாளே போராட்டம், வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று புரட்சி வெடிக்கும்.
வக்கீல்களைப் அழைத்து வந்து ஏன் இப்படி பொய்யாக வாதிடுகிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?
அரசியல் வாதிகளை அழைத்து வந்து ஏன் மக்களுக்கு சேவை செய்ய லஞ்சம் கேட்கிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?
சோதிடர்களை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? அவர்களால் எதிர்த்துப் போராட்டம் செய்ய முடியாது... அவர்கள் எல்லாம் ஏழைகள் என்பதற்காகவா? சோதிடம் பொய்யேன்று எதைவைத்து முடிவு செய்தீர்கள்? சோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்?
சோதிடர்கள் பணம் வாங்குகிறார்கள் என்பது தான் உங்களின் தவிப்புக்குக் காரணமா? எங்கே எந்தத் தொலைக்காட்சியாவது பணம் வாங்காமல் நிகழ்ச்சி நடத்துவார்களா? எந்த மருத்துவராவது பணம் வாங்காமல் மருத்துவம் பார்ப்பார்களா? எந்த வழக்கறிஞராவது பணம் வாங்காமல் வழக்கு நடத்துவார்களா?
தான் படித்தக் கல்வியை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் சம்பளம் கேட்கும் போது... எனக்கு ஒட்டத் தெறிந்த வாகனத்தை லைசென்ஸ் எடுத்துத் தான் ஒட்டவேண்டும் என்று ஓட்டுனர் உரிமம் வாங்கச் சொல்லும் போது.... அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு ரோடு டாக்ஸ் கட்டச்சொல்லும் போது... இந்த நாட்டில் வாழ்வதற்கு வீட்டுவரி, காட்டுவரி, வருமான விரி என்று இப்படிப் பல வழிகளில் பணத்தைப் பிடுக்கிக் கொண்டிருக்கும் போது....
நேர்மையான வழியில்... தனது உழைப்பிற்குத் தகுந்த கூலியை சோதிடர்கள் கேட்பது மட்டும் எப்படி ஏமாற்று வேலையாகும். அவர்களும் சொல்லித்தானே கேட்கிறார்கள்? அல்லது உங்கள் பாக்கெட்டில் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்களா? அல்லது என்னிடம் சோதிடம் பார்த்தே ஆகவேண்டும் என்று உங்களைக் கட்டாயப் படுத்துகிறார்களா? பேச வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக கண்டதையும் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அதற்கு வேறு பெயர் உண்டு!!
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியை நாம் இப்போது தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை சோதிடம் பல காலங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறது. சோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு "பூமிகாரகன்" என்று பெயர். அதாவது ஒருவன் ஜாதகத்தில் செவ்வாய் கிரகமானது வலுவாக இருந்தால் அவனுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கிறது என்று பொருள். சோதிடம் சொன்ன இந்தத் தகவலை வைத்துக்கொண்டு தான் இந்த அறிவியல் ஆராய்ச்சியே மேற்கொண்டிருக்கிறது!!
சோதிடர்களாக இருந்தாலும் கூட இதற்கு பதில் சொல்லலாம். (இதில் எல்லாமே புரிந்து விடும்!!)
"இதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்பது போன்ற முட்டாள் தனமான பதிலை யாரும் சொல்ல முயற்சிக்க வேண்டாம். எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அதைப் பற்றி விமர்சனம் செய்வது அறியாமையிலும் அறியாமை!!
இப்போது சவாளுக்கு வருகிறேன்...
என்னிடம் 2 கோடி ரூபாய் கொடுத்தீர்களேயானால் 85 வருடங்கள் முழுமையான ஆராய்ச்சி செய்து உங்களின் முற்பிறப்பில் இருந்து மறுபிறப்பு வரை எல்லா விவரங்களையும் மிகத் துள்ளியமாக கணித்து உங்களிடம் என்னால் சொல்ல முடியும்!! அப்படி இல்லை என்றால் மறு நிமிடமே எனது தோல்வியை ஒத்துக் கொண்டு நான் என் உயிரை விடவும் தயார்!!
சவால்!!
யாருக்கு துணிச்சலும், தைரியமும் இருக்கிறது?
குறிப்பு: தெரிந்த நோயைக் குணப்படுத்த பல கோடிவரை வசூல் செய்யும் அறிவியலை விட, தெரியாத பல தகவல்களுக்காக 2 கோடி கேட்கும் எனது சோதிடக் கலை சிறந்ததுதான்!!
"அந்தப்பார்வை"
சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர். ஆனால் இன்றுவரை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியவில்லை என்பது தான் உண்மை! அவர்கள் சோதிடர்களைக் குறை கூறுகிறார்களா? அல்லது சோதிடத்தையே குறை கூறுகிறார்களா என்பது அவர்களின் விமர்சன முழக்கத்தில் இருந்து தெளிவாக எனக்குப் புரியவில்லை!!
சிறுவயதில் எனக்கு ஜலதோஷம் பிடித்திருந்தது, நான் மிகவும் தொந்தரவாக உணர்ந்தேன். அதனால் எனது பெற்றோர்களின் முயற்சியால் நான் மருத்துவ மனைக்கு சென்றேன். அவர்கள் எண்ணன்னோவோ சோதித்துவிட்டு, ஒரு பக்க அளவில் புரியாத கதை வசனத்தை எழுதிக் கொடுத்தார்கள். அதைக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஒரு மருந்துக் கடையில் கொடுத்தேன். (எனக்கு இன்றுவரை புரியாத ஒன்று என்னவென்றால். எழுதிக் கொடுக்கும் மருந்துகளை ஏன் அந்த மருத்துவரே கொடுக்கக் கூடாது என்பது தான்? யாராவது மருத்துவம் படித்தவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்!...) பிறகு அவரும் அதை திருப்பித் திருப்பி பார்த்து விட்டு மருந்து மாத்திரைகளைக் கொடுத்தார்... நானும் அதையெல்லாம் சாப்பிட்டுப் பார்த்தேன் ஒருவாரத்திற்குப் பிறகு ஜலதோஷம் சரியாகிவிட்டது.
மீண்டும் ஒருநாள் அதே ஜலதோஷம்! நான் மருத்துவமனைக்கு போகவில்லை. ஆனால் அதே ஒருவாரத்தில் அது சரியாகி விட்டது! என்ன ஆச்சரியம்?.... எனக்கு அப்போது தான் மருத்துவத்தின் மகத்துவம் புரிந்தது. அதாவது நாம் ஒரு நோய்க்காக மருத்துவ மனைக்கு சென்று மருந்து சாப்பிட்டு விட்டால், அந்த நோய் எப்போது வந்தாலும் அந்த மருந்து உள்ளே இருந்து கொண்டு அதே கால கட்டத்திற்குள் வந்த நோயை அடித்து விரட்டிவிடும்" என்று. அதனால் நான் இப்போதெல்லாம் மருத்துவமனைக்கே செல்வதில்லை. ஆனால் அதன் பிறகு காய்ச்சல், தலைவலி, பல் வலி, என்று எத்தனையோ நோய்கள் வந்திருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலங்களில் அந்த நோய்களெல்லாம் சரியாகிவிட்டன...
மனித உடல் கூறு என்பது ஒரு அற்புதமான ரகசியம்! அதில் இல்லாத மருந்துகளும் கிடையாது! வராத நோய்களும் கிடையாது. எந்த நோய்க்கான மருந்து நமது உடம்பிற்குள் இருக்கிறதோ, அந்த நோய் மட்டும் தான் நமக்கு வருகிறதாம். இதை நான் சொல்லவில்லை. மருத்துவம் தான் சொல்கிறது!! (யாரும் ஆதாரம் கேட்டுவிடாதீர்கள் இது கிண்டல் ) சாதாரண நோய்களெல்லாம் சிறிது நேரம் படுத்துத் தூங்கினால் சரியாகிவிடுமாம். மிகப்பெரிய நோய்களுக்குத் தான் மருந்தே கிடையாதே பிறகு ஏன் நாம் கவலைப் படவேண்டும். "தூங்கினால்" அல்லது "தாங்கினால்" எல்லாம் சரியாகிவிடும்!!
சரி இப்போது தலைப்பிற்கு செல்வோம்...
"சோதிடம் பொய்யேன்றும், ஏமாற்று வேலை என்றும், அதை நம்பாதீர்கள் என்றும் அரைத்த மாவையே பல காலங்களாக அரைத்துப் பார்க்கின்றனர் பலர்.... ஆனாலும் கடவுளைப் போல இந்த சோதிடத்தையும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் ஒப்பிடுவதெல்லாம் அறிவியல்! அறிவியல்! அறிவியல்!! (ஒருவேளை அவர்களெல்லாம் அறிவியல் மேதைகளாக இருப்பார்களோ என்னவோ...)
அறிவியல் என்பது ஒன்றும் வானத்தில் இருந்து திடீரென்று குதித்ததில்லை. மனிதன் சொல்லிக் கொடுத்ததைத் தான் அது திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!!
அப்படியென்றால் கிளி ஜோசியம் போல, இது கிளி அறிவியலாக இருக்குமோ...
சரி, நான் இப்போது மருத்துவமனைக்கு செல்கிறேன்....
என்னை ஒரு நாள் முழுதும் பரிசோதித்துக் கொள்ளட்டும்.....
(அறிவியல் மிகச்சிறந்த சக்தி வாய்ந்தது அல்லவா? அதனால் இந்த ஒருநாள் போதும் என்று நினைக்கிறேன்)
எந்த (அறிவியல்)மருத்துவராவது எனக்கு என்ன நோய் இருக்கிறது? அது எதனால் வந்தது? அது எப்போது தீரும்? அதன் பிறகு எனக்கு அந்த நோய் வராமல் செய்ய முடியுமா? போன்ற விவரங்களை எழுத்து மூலம் அளிப்பார்களா?
குற்றவாளி என்று தெரிந்தே அவருக்கு வக்காலத்து வாங்கும் வக்கீல்களைப் பார்த்து யாராவது இது போன்ற ஒரு குற்றச்சாட்டை வைக்க முடியுமா?
2000 ரூபாய் கொடுத்தால் பெயிலில் விடும் சட்டம் ஏமாற்று வேலை என்பதை இவர்களால் பகிரங்கமாக சொல்ல முடியுமா?
அப்படி சொன்னால் மறுநாளே போராட்டம், வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று புரட்சி வெடிக்கும்.
வக்கீல்களைப் அழைத்து வந்து ஏன் இப்படி பொய்யாக வாதிடுகிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?
அரசியல் வாதிகளை அழைத்து வந்து ஏன் மக்களுக்கு சேவை செய்ய லஞ்சம் கேட்கிறீர்கள் என்று எந்தத் தொலைக்காட்சியாவது நிகழ்ச்சி நடத்த முடியுமா?
சோதிடர்களை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்? அவர்களால் எதிர்த்துப் போராட்டம் செய்ய முடியாது... அவர்கள் எல்லாம் ஏழைகள் என்பதற்காகவா? சோதிடம் பொய்யேன்று எதைவைத்து முடிவு செய்தீர்கள்? சோதிடர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று எதை வைத்து கூறுகிறீர்கள்?
சோதிடர்கள் பணம் வாங்குகிறார்கள் என்பது தான் உங்களின் தவிப்புக்குக் காரணமா? எங்கே எந்தத் தொலைக்காட்சியாவது பணம் வாங்காமல் நிகழ்ச்சி நடத்துவார்களா? எந்த மருத்துவராவது பணம் வாங்காமல் மருத்துவம் பார்ப்பார்களா? எந்த வழக்கறிஞராவது பணம் வாங்காமல் வழக்கு நடத்துவார்களா?
தான் படித்தக் கல்வியை சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் சம்பளம் கேட்கும் போது... எனக்கு ஒட்டத் தெறிந்த வாகனத்தை லைசென்ஸ் எடுத்துத் தான் ஒட்டவேண்டும் என்று ஓட்டுனர் உரிமம் வாங்கச் சொல்லும் போது.... அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு ரோடு டாக்ஸ் கட்டச்சொல்லும் போது... இந்த நாட்டில் வாழ்வதற்கு வீட்டுவரி, காட்டுவரி, வருமான விரி என்று இப்படிப் பல வழிகளில் பணத்தைப் பிடுக்கிக் கொண்டிருக்கும் போது....
நேர்மையான வழியில்... தனது உழைப்பிற்குத் தகுந்த கூலியை சோதிடர்கள் கேட்பது மட்டும் எப்படி ஏமாற்று வேலையாகும். அவர்களும் சொல்லித்தானே கேட்கிறார்கள்? அல்லது உங்கள் பாக்கெட்டில் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்களா? அல்லது என்னிடம் சோதிடம் பார்த்தே ஆகவேண்டும் என்று உங்களைக் கட்டாயப் படுத்துகிறார்களா? பேச வாய்ப்புக் கிடைக்கிறது என்பதற்காக கண்டதையும் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அதற்கு வேறு பெயர் உண்டு!!
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியை நாம் இப்போது தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை சோதிடம் பல காலங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறது. சோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு "பூமிகாரகன்" என்று பெயர். அதாவது ஒருவன் ஜாதகத்தில் செவ்வாய் கிரகமானது வலுவாக இருந்தால் அவனுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கிறது என்று பொருள். சோதிடம் சொன்ன இந்தத் தகவலை வைத்துக்கொண்டு தான் இந்த அறிவியல் ஆராய்ச்சியே மேற்கொண்டிருக்கிறது!!
சோதிடம் பொய்யேன்று வாதிடும் யாருக்காவது முழுமையான சோதிடம் தெரியுமா? அப்படித் தெரிந்தால் "சக்ராதி ஜடனேக" என்பதற்கு என்ன பொருள் என்று கூறுங்கள் பார்ப்போம்!!
சோதிடர்களாக இருந்தாலும் கூட இதற்கு பதில் சொல்லலாம். (இதில் எல்லாமே புரிந்து விடும்!!)
"இதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை" என்பது போன்ற முட்டாள் தனமான பதிலை யாரும் சொல்ல முயற்சிக்க வேண்டாம். எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அதைப் பற்றி விமர்சனம் செய்வது அறியாமையிலும் அறியாமை!!
இப்போது சவாளுக்கு வருகிறேன்...
என்னிடம் 2 கோடி ரூபாய் கொடுத்தீர்களேயானால் 85 வருடங்கள் முழுமையான ஆராய்ச்சி செய்து உங்களின் முற்பிறப்பில் இருந்து மறுபிறப்பு வரை எல்லா விவரங்களையும் மிகத் துள்ளியமாக கணித்து உங்களிடம் என்னால் சொல்ல முடியும்!! அப்படி இல்லை என்றால் மறு நிமிடமே எனது தோல்வியை ஒத்துக் கொண்டு நான் என் உயிரை விடவும் தயார்!!
சவால்!!
யாருக்கு துணிச்சலும், தைரியமும் இருக்கிறது?
குறிப்பு: தெரிந்த நோயைக் குணப்படுத்த பல கோடிவரை வசூல் செய்யும் அறிவியலை விட, தெரியாத பல தகவல்களுக்காக 2 கோடி கேட்கும் எனது சோதிடக் கலை சிறந்ததுதான்!!
"அந்தப்பார்வை"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
///எத்தனையோ பேர் எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தை இல்லாமல் இருக்கிறார்களே///
கோழி முட்டை அனைத்துமே குஞ்சு பொரிப்பதில்லையே? அதுபோலத்தான் மனிதர்களில் சிலருக்கு இயற்கையாகவோ, அல்லது அதிகமான மது, புகைப் பழக்கத்தாலோ ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடிவதில்லை. அதற்காக மருத்துவத்துறையை ஒன்றுக்கும் உதவாத ஜோதிடத்துடன் தாங்கள் தொடர்புபடுத்துவதை குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது.
///ஆகாயத்தில் இத்தனை கோள்கள் இருக்கிறது என்றும், அதற்கு இதுதான் பெயர் என்றும் முதலில் சொன்னதே இந்த சோதிடம் தானே///
இதைச் சொன்னதற்காக இன்று எந்த ஜோதிடன் வரலாற்றில் இடம் பிடித்துள்ளான். விடை பூஜ்யம்.
///என்னைப் பொறுத்தவரை அமெரிக்கா எப்போதும் எனக்குக் கீழே தான் இருக்கிறது!!!///
இது மற்றவர்களின் உண்மையான திறமையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததைக் குறிக்கிறது.
///நீங்கள் சோதிடம் பொய் என்று கூறுகிறீர்களா? அப்படியென்றால் நான் கேட்டிருக்கும் கேள்விக்கு கண்டிப்பாக பதில் அளிக்கவும்!///
கேள்வியா? எங்கே? எங்கே?
கோழி முட்டை அனைத்துமே குஞ்சு பொரிப்பதில்லையே? அதுபோலத்தான் மனிதர்களில் சிலருக்கு இயற்கையாகவோ, அல்லது அதிகமான மது, புகைப் பழக்கத்தாலோ ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடிவதில்லை. அதற்காக மருத்துவத்துறையை ஒன்றுக்கும் உதவாத ஜோதிடத்துடன் தாங்கள் தொடர்புபடுத்துவதை குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது.
///ஆகாயத்தில் இத்தனை கோள்கள் இருக்கிறது என்றும், அதற்கு இதுதான் பெயர் என்றும் முதலில் சொன்னதே இந்த சோதிடம் தானே///
இதைச் சொன்னதற்காக இன்று எந்த ஜோதிடன் வரலாற்றில் இடம் பிடித்துள்ளான். விடை பூஜ்யம்.
///என்னைப் பொறுத்தவரை அமெரிக்கா எப்போதும் எனக்குக் கீழே தான் இருக்கிறது!!!///
இது மற்றவர்களின் உண்மையான திறமையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததைக் குறிக்கிறது.
///நீங்கள் சோதிடம் பொய் என்று கூறுகிறீர்களா? அப்படியென்றால் நான் கேட்டிருக்கும் கேள்விக்கு கண்டிப்பாக பதில் அளிக்கவும்!///
கேள்வியா? எங்கே? எங்கே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அப்பா... எத்தனை கேள்விகள்? திறமையானவர் தான் நீங்கள்!!
உங்கள் கேள்விகளில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை!
ஆமா... அது சமஸ்கிருத வார்த்தை என்று நான் எப்போது சொன்னேன்? அல்லது அது சமஸ்கிருதம் தான் என்பதை உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? உங்களுக்கு தமிழ் தெரியுமா?
புரியவில்லை அல்லது தெரியவில்லை என்றால் அது சமஸ்கிருதமா?
தயவு செய்து கற்பனையில் பேசாதீர்கள்!!
2 கோடி சவால் காமெடியாக சொன்னேன் என்பதற்காக அதை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்! அதில் நிறையா அர்த்தம் இருக்கிறது! (சில காரணங்களுக்காக அந்தக் காமெடி செய்ய வேண்டிய கட்டாயம்) அறிவியல் ஆராய்ச்சி என்பது நீங்கள் நினைப்பது போல தூங்கி எழும் விஷயம் அல்ல.
சோதிடம் என்பது அறிவியல்!!
பூமி உருண்டை என்பது எவ்வளவு காலங்களுக்குப் பின்னால் கண்டறியப் பட்டது என்று தெரியுமா உங்களுக்கு?
நண்பரே, உங்கள் அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது, பூமி உருண்டை எப்போது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் தெரியாது.
இது அறிவியல் என்றால் பால அரிஸ்ட்ட யோகம் இன்றைக்குப் பொருந்துமா ? ஜோதிடத்தில் சொல்லப்பட்ட எல்லாப் பாவங்களும், யோகங்களும் இந்த யுகத்தில் ஒத்து வருமா ? பலிக்குமா ?
ஒருவன் தவறு செய்தால் நாடு கடதப்படுவான் ?இதற்கு கூறும் கிரக நிலைகளும் , வெளிநாட்டுக்கு இன்று வேலைக்கு செல்பவர் கிரக நிலையும் ஒன்றா , வேறு வேறா ? வெளிநாட்டு வேலை செல்வது ஜோதிட சாஸ்திரப்படி யோகமா? தோசமா ?
இந்த சந்தேகத்தை தீருங்கள், உங்கள் இரண்டு கோடியை பற்றி பிறகு விவாதிக்கலாம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அரைகுறை அலம்பல்கள் எல்லாத் துறையிலும் இருக்கின்றனர்என்று ஒத்துக்கொண்டதற்க்கு நன்றி. எனக்குத் தெரிந்தவரை ஜோதிடமே ஒரு முளு அலம்பல் என்றுதான் கூறுவேன்.T.N.Balasubramanian wrote:எவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லையோ அவனுக்கு எல்லாமே சூன்யம் தான் . ஜோதிடத்தை அறிவியலாக பார்த்து ,கற்று தேர்ந்த நிபுணர்களிடம் உரையாடினால், அதிசய தக்க விஷயங்கள் கிடைக்கும் என்பது என் கருத்து. அரைகுறை அலம்பல்கள் எல்லாத் துறையிலும் இருக்கின்றனர்.அவர்களால் நன்மையை தவிர தீமையே அதிகம் விளைகிறது.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:எவனுக்கு தன்மீதே நம்பிக்கை இல்லையோ அவனுக்குத்தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்க முடியும் என்பது என் கருத்து.
ரமணியன்.
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
சதாசிவம் wrote:
நண்பரே, உங்கள் அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது, பூமி உருண்டை எப்போது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் தெரியாது.
இது அறிவியல் என்றால் பால அரிஸ்ட்ட யோகம் இன்றைக்குப் பொருந்துமா ? ஜோதிடத்தில் சொல்லப்பட்ட எல்லாப் பாவங்களும், யோகங்களும் இந்த யுகத்தில் ஒத்து வருமா ? பலிக்குமா ?
ஒருவன் தவறு செய்தால் நாடு கடதப்படுவான் ?இதற்கு கூறும் கிரக நிலைகளும் , வெளிநாட்டுக்கு இன்று வேலைக்கு செல்பவர் கிரக நிலையும் ஒன்றா , வேறு வேறா ? வெளிநாட்டு வேலை செல்வது ஜோதிட சாஸ்திரப்படி யோகமா? தோசமா ?
இந்த சந்தேகத்தை தீருங்கள், உங்கள் இரண்டு கோடியை பற்றி பிறகு விவாதிக்கலாம்.
உங்களுக்குத் தமிழ் தெரியுமா என்று கேட்டதற்கு மட்டும் மன்னித்து விடுங்கள் நண்பரே! ஆனால் அப்படிக் கேட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது அதை நான் பின்பு கூறுகிறேன்...
பிறகு சோதிடம் பொய் என்பதை மட்டும் எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?பூமி உருண்டை எப்போது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் தெரியாது.
பால அரிட்டம் என்பது யோகம் இல்லை! மற்றும் அது எல்லாக் காலங்களிலும் பொருந்தும்!!இது அறிவியல் என்றால் பால அரிஸ்ட்ட யோகம் இன்றைக்குப் பொருந்துமா ? ஜோதிடத்தில் சொல்லப்பட்ட எல்லாப் பாவங்களும், யோகங்களும் இந்த யுகத்தில் ஒத்து வருமா ? பலிக்குமா ?
பால அரிட்டம் என்பது என்ன என்று தெரிந்திருந்தால் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் நண்பரே...
சோதிடம் என்பது "டிரையல் வெர்ஷன்" இல்லை. அது எல்லா யுகத்திலும் நிலைத்து நிற்கும். சோதிடத்தை நீங்கள் என்ன இப்போது "தேடியா"க் கண்டு பிடித்தீர்கள்...?
நான் தவறு செய்தால் என்னை அமெரிக்காவிற்கு கடத்தி விடுவார்களா? முதலில் நாடு கடத்துவது என்றால் என்ன என்று எனக்கு விலக்குங்கள் நண்பரே...ஒருவன் தவறு செய்தால் நாடு கடதப்படுவான் ?இதற்கு கூறும் கிரக நிலைகளும் , வெளிநாட்டுக்கு இன்று வேலைக்கு செல்பவர் கிரக நிலையும் ஒன்றா , வேறு வேறா ? வெளிநாட்டு வேலை செல்வது ஜோதிட சாஸ்திரப்படி யோகமா? தோசமா ?
பிறகு நான் உங்களுக்கு சோதிடத்தைப் பற்றி விளக்குகிறேன்.
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
முட்டையிலேயே கூமுட்டைகள் இருக்கும் போது, சோதிடர்களிலும் அப்படிப் பட்டவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்..? அதைத்தானே நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இன்று போலி மருத்துவர்கள் எவ்வளவோ நிறைந்திருக்கிறார்கள், அதற்காக நான் என்ன மருத்துவம் சுத்தப் பொய் என்றா கூறினேன். மருத்துவம் பார்க்காமல் இருந்தாலும் வியாதி கொஞ்ச காலத்தில் கண்டிப்பாக சரியாகி விடும் என்பதுதான் என் வாதமே... கால அவகாசம் இல்லை என்பவர்கள் மற்றும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள், உயிருக்குப் பயந்த கோழைகள் மருத்துவத்தை நாடி வியாதியின் கொடூரத்தை மறைத்துக் கொண்டு நடமாடலாம்... ஆனால் வியாதியின் தன்மையை எந்த மருத்துவத்தாலும் அடியோடு அழிக்க முடியாது!!கோழி முட்டை அனைத்துமே குஞ்சு பொரிப்பதில்லையே? அதுபோலத்தான் மனிதர்களில் சிலருக்கு இயற்கையாகவோ, அல்லது அதிகமான மது, புகைப் பழக்கத்தாலோ ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடிவதில்லை. அதற்காக மருத்துவத்துறையை ஒன்றுக்கும் உதவாத ஜோதிடத்துடன் தாங்கள் தொடர்புபடுத்துவதை குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது.
வரலாற்றில் இடம் பிடிக்கவில்லை என்று யார் சொன்னது? கின்னஸ் புத்தகத்தில் எழுதினால் தான் அது வரலாறா? அல்லது அமெரிக்கன் ஏற்றுக் கொண்டால் தான் வரலாறா? நீங்கள் சொன்ன இந்தப் பூஜ்ஜியம் தான் எல்லாவற்றின் ஆரம்பம்!இதைச் சொன்னதற்காக இன்று எந்த ஜோதிடன் வரலாற்றில் இடம் பிடித்துள்ளான். விடை பூஜ்யம்.
உலக உருண்டையில் நமக்குக் கீழே அமெரிக்கா இருக்கிறது என்பதற்காக அவ்வாறு கூறினேன். இதையெல்லாமா இப்படி மேற்கோள் காட்டுவது? என்னா வில்லத்தனம்...///என்னைப் பொறுத்தவரை அமெரிக்கா எப்போதும் எனக்குக் கீழே தான் இருக்கிறது!!!///
இது மற்றவர்களின் உண்மையான திறமையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததைக் குறிக்கிறது.
=======================================================================
குறிப்பு: எனக்கு எத்தனையோ முறை கடுமையான நோய்களெல்லாம் வந்திருக்கிறது. எழுந்து நடமாடக் கூட முடியாத நிலையும் வந்திருக்கிறது. சாப்பிடும் சாப்பாடு கூட உடனே வாந்தியாக வெளிவந்திருக்கிறது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பயந்து என்னை வீட்டை காலி செய்து கொள்ளக் கூட சொன்னார்கள். ஆனால் இந்த சிங்கம் எதற்கும் அசைந்து கொடுக்க வில்லை! 18 நாட்கள் வரை படுத்த படுக்கையிலேயே இருந்தேன். ஒரு மாத்திரை கூட விழுங்கியது கிடையாது!
காசு பணம் இல்லாமல் இல்லை... என் குடும்பத்திலும் கூட ஒருவர் மருத்துவர் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்தது...!!
ஏன் மருத்துவமனைக்கு செல்ல வில்லையென்றால்? என் சோதிடப்படி என் மரணம் ஆயுதத்தினால் அல்லது அதற்கு நிகராக என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் இந்த வியாதியெல்லாம் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை!
நான் என்ன இப்போது செத்தா போய் விட்டேன்?
எச்சரிக்கை: யாரேனும் இவ்வாறு முயற்சி செய்து இறந்து விட்டால் அதற்கு இவன் தான் காரணம் என்று வழக்கு சோடிக்க முயலவேண்டாம்! அதனால் இதை யாரும் பின்பற்றவேண்டிய கட்டாயமும் இல்லை!!
(ஒன்றுமே தெரியாத, விதண்டா வாதமாகவே பேசும் அறிவிழிகள் நிறைய பேர் தேவையில்லாமல் இப்படியெல்லாம் செய்வார்கள். அதற்காகவே இந்த எச்சரிக்கை! நான் எப்போதும் தரமானவர்களோடு மட்டுமே வாதம் செய்வதுண்டு!)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மேலே மேற்கோள் காட்டியிருப்பது ஒரு தந்தை, தனது மகனிடம் கூறிய தாரக மந்திரம்!"எதை தீர்க்க முடியாதோ அதைத் தாங்கித்தான் ஆகவேண்டும்"
இதை ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? அவர் யார்? என்பதை தகுந்த ஆதாரத்தோடு பிறகு நான் இங்கே சமர்ப்பிக்கின்றேன். பத்திரிக்கையில் வரும் ராசி பலனைப் படித்து விட்டால், நாமும் ஒரு சோதிடன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலருக்கு அது நல்ல சான்றாக அமையும்!
"சோதிடத்தால் எதையும் அறிய முடியாது" என்று நினைக்கும் அறிவியல் மேதைகளுக்கும் அது சான்றாகும்!
அதுவரை சோதிடம் பற்றி கொஞ்சமாவது தெரிந்தவர்கள் தங்களது வாதத்தைத் தொடரலாம்! தரமானவர்கள் மட்டும்!
ஏனென்றால் எனக்கு அநாகரீகமான வார்த்தைகளை எப்படி தரமாக பேசுவது என்றும் தெரியும்!!! இந்த விளையாட்டை தமிழ் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
RaRa3275 wrote:நீங்க சிரிப்பு போலீசா?...இல்ல...சீரியஸ் போலீசா?...
புரியவே இல்ல...
என் சோதிடப் படி என்னை யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதாம் நண்பா! நன்றி!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
என் சோதிடப் படி என்னை யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதாம் நண்பா! நன்றி!
ஆனால் இப்பொழுது புரிந்து விட்டது........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|