புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_c10'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_m10'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_c10 
21 Posts - 66%
heezulia
'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_c10'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_m10'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_c10'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_m10'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_c10 
63 Posts - 64%
heezulia
'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_c10'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_m10'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_c10'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_m10'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_c10'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_m10'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Nov 16, 2011 5:42 pm


'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி?









சிவில்
சர்வீசஸ் தேர்வு மற்றும் எல்லா போட்டித் தேர்வுகளிலும் இடம்பெறும்
'நேர்முகத் தேர்வு' (Interview) எனப்படும் 'பெர்சனாலிட்டி டெஸ்ட்' என்னும்
தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும் இந்த பதிவு..

"நான் சொல்லிகிட்டே இருக்கேன்.  நீ வேறு எங்கோயோ பார்த்துகிட்டு இருக்கிறாய்.  நான்  சொல்றத நீ கேட்கறியா! இல்லையா!"

'தாய் சொல் கேட்காத வவ்வால் தலைகீழாகத் தொங்கும்', 'சொல்புத்தி வேண்டும்
இல்லையென்றால் சுயபுத்தி வேண்டும்.  இவை இரண்டும் இல்லையென்றால்,
வாழ்க்கையில் முன்னேற முடியாது..' இப்படிப்பட்ட விமர்சனங்களெல்லாம்
ஒருவரைப்பார்த்து மற்றவர் சொல்கிறார் என்றால் கேட்பவர் கவனக்குறைவு உள்ளவர்
என்று அர்த்தம் கொள்ளலாம்.

இந்தச் சூழல்களை மாற்றி தகவல்களை கூர்ந்து கவனிப்பதற்கு உதவும் வகையில் பல எளிய வழிமுறைகள் இருக்கின்றன.  அவ்வறுள் சில


1. உடல் அசைவுகள் (Body Language) கவனியுங்கள்

ஒருவர் பேசும்போது அவருடைய முக பாவனை (Facial Expression) எப்படி
இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அவர் சிரித்துக்கொண்டு பேசுகிறாரா?
 கோபத்தில் பேசுகிறாரா? நிதானமாக பேசுகிறாரா? எரிச்சலுடன் பேசுகிறாரா?
அன்புடன் பேசுகிறாரா? என்பதை அவரது முகத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

'Face is the Index of mind" என்றது ஆங்கிலத்தில் பிரபலமான கருத்தாகும்.
 அதாவது, 'ஒரு மனிதனின் முகம், அவரது மனதின் பிரதிபலிப்பாக அமைந்துவிடும்.
 இதன்மூலம் நம் மனதின்  தன்மையை மற்றவர்கள் எளிதில் அறிந்துகொள்வார்கள்'
என்பது அதன் உட்கருத்தாகும்.

'அவன் என்னைப் பார்த்து 'ஏய்' என்றுதான் சொன்னான்.  அவன் அந்த வார்த்தையை
சொல்லும்போது அவன் முகமே சரியில்லை' என்று சிலர் வருத்தப்படுவதை இன்றும்
காணலாம்.

இங்கு, வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதில் முக
அசைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு
விளங்கும். சில நேரங்களில் வார்த்தைகளால் விவரிக்க வந்த கருத்தைவிட,
ஒருவரது உடல் அசைவுகள் கொடுக்கும் கருத்துக்கள் விரிவான விளக்கம் அதிகமாகவே
இருக்கும்.

முக பாவணையைப்போலவே ஒருவர் நிற்கும் விதம், நடக்கும் விதம், வார்த்தைகளை
உபயோகிக்கும் முறை, கை, கால், கண் அசைவுகள் ஆகிய உடலிலுள்ள பாகங்களின்
அசைவுகளும் தகவல்களுக்கு வெவ்வேறு அர்த்தங்களை தெரிவிக்கின்றன.

எனவே 'உடல் அசைவுகள்' பற்றி தெரிந்துகொண்டு, கேட்கும்போதே தகவல்களின்
அர்தத்ததை புரிந்துகொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  வெறும்
வார்த்தைகளை மட்டும் கேட்டு அர்த்தம் கொண்டால் முழுமையான அர்தத்தை
புரிந்துகொள்ள இயலாது.  அதே நேரத்தில் ஒருவரது உடல் அசைவுகளையும்,
கருத்தில் கொண்டு வார்த்தைகளுக்கு அர்த்தம் கொள்ளும்போது அந்தத் தகவலை
முழுமையாக புரிந்துகொள்ள இயலும்.  சிலவேளைகளில் மவுனங்களே வார்த்தைகளாக
மாறி பதில்களைத் தெரிவிக்கும்.

'நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே நீ சினிமாவுக்கு ஒருகிறாயா' என்று கேட்டான் நண்பன். ராஜேஷ் அமைதியாக நின்றான்.

'மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி.  ராஜேஷ் 'எஸ்' சொல்லிவிட்டான்' என்றுசொன்னான் நண்பன்.

இப்படி சொல்லாத வார்த்தைகளுக்கு கூட அர்த்தம் கண்டுகொள்பவர்கள் உண்டு.

ஒருவர் ஒரு தகவலைத் தரும்போது சுவாரஸ்யம் இல்லாமல் அந்தத் தகவலை கேட்பதை தவிர்க்க வேண்டும்.

எனவே பெர்சனாலிட்டியை வளர்த்துக்கொள்ள விரும்புவர்கள் உடல் அசைவுகளில் அதிக கவனம் செலுத்தி தகவல்களைப் பெறுவது நல்லது.

2. மனதை ஒருமுகப்படுத்த பயிற்சி தேவை

மனம் எதைப் பற்றி அதிக ஆர்வம் செலுத்துகிறதோ அதைப்பற்றி தகவல்களை அதிகம்
தெரிந்துகொள்வதற்கு பலரும் கவனம் செலுத்துவார்கள்.  அதனை கூர்ந்து
கவனிப்பார்கள்.  ஒருதவகைல் கூர்ந்து கவனிப்பதற்கு அடிப்படைத்தேவையாக அமைவது
'மனதை ஒருமுகப்படுத்துதல்' (Concentration of mind)ஆகும்.  இதற்கு ஒலிகள்
(Sounds) மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
ஒலியின் தன்மைக்கு ஏற்ப கூர்ந்து கவனிக்கும் தன்மை உருவாகும்.

வீட்டில் முன் அறையில் பலரோடு அரட்டை அடிக்கும் ஒலி அதிகமாக இருந்தாலும்,
தனது குழந்தையின் அழுகைச் சத்தம் தாய்க்கு மட்டும் தனியாக கேட்டுவிடுகிறது
அல்லவா?

வகுப்பறையில் ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நட்டும்போதுகூட சில மாணவர்கள்
அதனை கவனிப்பதற்கு தயாராக இருப்பதில்லை.  அந்த ஆசிரியர் மீதுள்ள கோபம்,
அந்த ஆசிரயருக்கு ஒன்றும் தெரியாது என்ற எண்ணம், அவருக்கு ரசிக்கும்படி
பேசத் தெரியாது என்னும் கருத்து, இந்தப் பாடம் அறுவை என்கின்ற சிந்தனை -
போன்றவையெல்லாம் மாணவ - மாணவிகள் பாடத்தை கவனமாக கேட்பதற்கு தடையாக
அமைந்துவிடுகிறது.  இங்கு மாணவர்கள் கூர்ந்து கவனிப்பதற்கு தடையாக இருப்பது
அவர்களது மனநிலைதான் என்பதை புரிந்துகொண்டு நல்ல சிந்தனையை
வளர்த்துக்கொண்டால் மனதை எளிதாக ஒருமுகப்படுத்தலாம். இதன்மூலம்
பெர்சனாலிட்டியை நன்றாக வளர்த்துக்கொள்ளலாம்.

3. கருத்தைக் கவனியுங்கள்

தம்மோடு பேச வருபவர்கள் எந்தவிதமான கருத்தை சொல்வதற்காக வருகிறார்கள் என்று
கவனிக்க வேண்டும்.  அவர்கள் பேச்சின் 'உட்பொருள்' அல்லது 'உட்கருத்து'
(Content)  எது? என்பதை கண்டறிவதற்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மாறாக,
நம்மோடு பேச வந்தவர்களின் சொல்லும்விதத்தை (Delivery of Speech) கவனிப்பதை
குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பேச்சுப போட்டியின் நடுவராக இருப்பவர் பேசுபவரின் கருத்துக்கு
முக்கியத்துவம் கொடுத்து எந்த அளவுக்கு கவனிக்கிறாரோ அதேபோன்றே
உட்கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கவேண்டும்.  புத்திக்கூர்மை
சற்று குறைந்தவர்கள் தான் பேச்சின் கருத்தை கவனிக்காமல் சொல்பவரைப்
பார்த்து கிண்டலடிப்பார்கள்.

'பெருசா பேச வந்துட்டான்.  அவன் மூஞ்சியைப் பார்', 'மீச முளைக்காத
பயலெல்லாம பேசுற பேச்சைப் பாரு' என்று நேரடியாகவே பேச்சில் இடம்பெற்ற
கருத்துக்கள் பற்றி ஆராய்வதற்குப் பதில் பேசுபவரின் உடலிலுள்ள குறைபாடுகளை
வைத்து விமர்சனம் செய்வது கவனத்தை சிதறடிக்கும் செயலாகும்.

எனவே பேச்சிலுள்ள கருத்தை ஆழ்ந்து கவனித்து ஒரு முடிவுக்கு வருவது நல்லது.

4. 'காது - வாய் உறவு' களை தெளிவுபடுத்துங்கள்

காது- வாய் உறவு - 2.1 விகிதம் (Ratio)அளவில் அமையுமாறு பார்த்துக்கொள்ள
வேண்டும்.  அதாவது ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு காதுகள் இருக்கின்றன. ஆனால்
ஒரே ஒரு வாய்தான் இருக்கிறது.

இதன் அர்த்தம் என்னவென்றால் கேட்பது இரண்டு மடங்காக இருந்தால் பேசுவது ஒரு மடங்காக இருக்கட்டும் என்பை உணர்த்துவதற்குத்தான். 'குறை குடம் கூத்தாடும்' என்பார்கள்.

எனவே அறிவைப் பெருக்க வேண்டுமென்றால் பேச்சைக் குறைத்து தகவல்களை கவனித்துக் கேட்பதற்கு அதிக நேரம் ஒதுக்கவது நல்லது.

5. திறந்த மனதோடு கேளுங்கள்

'அவள் என்ன பேச்சு பேசுகிறாள்?', 'அவன் இந்த வார்த்தையை பேசிவிட்டாள்'
என்றெல்லாம் எண்ணி பேசுபவர் பற்றிய 'எதிர்மறை உணர்வுகளை' (Negative
Emotitons) வளர்த்துக் கொள்பவர்கள் உண்டு.

ஆனால் அதேவேளையில் வார்த்தைகள் என்பது கருத்துக்களை தெரிவிப்பதற்குத்தான்
என்று எண்ணி பிறரின் பேச்சைக் கவனிப்பவர்கள் பேச்சின் முழு
கருத்துக்களையும் கவனிக்க வாய்ப்புள்ளது.  திறந்த மனதோடு எந்த கவனச்
சிதறல்களும் இல்லாமல், பிறரின் பேச்சைக் கவனித்தால் பேச்சிலுள்ள அத்தனை
கருத்துக்களையும் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளெல்லாம் பிறரின் பேச்சை கூர்ந்து
கவனிக்கவும், அதன்மூலம் நல்ல தகவல்களை மனதில் பதிவைத்து பெர்சனாலிட்டி
என்ப்படும் ஆளுமைத் தன்மையை சிறந்த முறையில் வளர்த்துக் கொள்ள உதவும்.



'பெர்சனாலிட்டி'யை வளர்த்துக்கொள்வது எப்படி? D3WA6lYChQhjAAAAAElFTkSuQmCC

http://www.thangampalani.com/2011/10/how-to-improve-your-personality.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக