புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
3 Posts - 3%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Pradepa
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
18 Posts - 2%
prajai
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
5 Posts - 0%
Rutu
உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_m10உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி


   
   

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 5:28 am

First topic message reminder :

உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Uyir

பழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நினைத்தார்கள். சாப்பிடுவது, தூங்குவது மாதிரி அதுவும் ஒரு விஷயம். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசிய பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது.

இல்லறத்தில் ஆண், பெண் இடையே இருக்கும் உறவு, ஒளிவு மறைவில்லாதது. அன்பு செலுத்துவது, உண்மையாக இருப்பது, மரியாதை தருவது என எதுவுமே ஒன்வே டிராஃபிக் இல்லை. செக்ஸிலும் இப்படித்தான்... அது இருவரின் தேவைகளையுமே முழுமையாக பூர்த்தி செய்யும்படி அமைய வேண்டும் என்றனர் ரிஷிகள். ‘பெண் என்பவகள் ஆணுக்கு படுக்கையில் சந்தோஷம் தருவதற்காகப் படைக்கப்பட்டவகள் இல்லை. அந்த உறவில் சுகம் தேடும் உரிமை அவளுக்கும் இருக்கிறது. அந்த இன்பம் கிடைக்காதபட்சத்தில் அவகள் திருமண உறவுக்கு வெளியில் அதைத் தேட தயங்க மாட்டாகள். அதனால் குடும்பத்தில் மட்டுமில்லை... சமூகத்திலும் பிரச்னைகள் உருவாகும்’ என்பது அந்த ரிஷிகள் சொன்ன வாக்கு.

முடிவாக அவர்கள் சொன்ன நீதி... ‘இந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை!’ நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது மதிப்புக்குரிய முன்னோர் காட்டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எறிந்து, "பாலுணர்வு" என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி, "ஒருவனுக்கு ஒருத்தி" என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது "டேக் இட் ஈஸி" கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.

இதிலிருந்து மீண்டு வர என்ன வழி? நமது பாரம்பரிய ஞானத்தின் வேர்களைத் தேடி, செக்ஸ் தொடர்பான சிக்கல்களுக்கு அறிவியல்ரீதியான தீர்வுகளைக் காணும் முயற்சி தான் இந்தத் தொடர். மிகுந்த கண்ணி யத்தோடும், அளவற்ற ஜாக்கிரதை உணர்வோடும் இந்தத் தொடரை அணுகியிருக்கிறார் தன் ஆராய்ச்சிகளின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.

இந்தத் தொடரைப் படிக்கும் எவரும் "உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை" என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொகள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.

அது ஒரு பெட்ரூம்... பகட்டான அலங்காரங்களோ, திகட்ட வைக்கும் ஆடம்பர வசதிகளோ இல்லாத மிகச் சாதாரணமான பெட்ரூம். ஆனாலும் அது சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டது. வெறும் பத்து ஆண்டுகளில் பத்தாயிரம் முறை பலபேர் வந்து பரவசமான கலவி இன்பத்தை அனுபவித்த படுக்கை அறை என்ற பெருமையை அது பெற்றது.

தங்கள் காதல் மனைவியைக் கட்டியணைத்தபடி வந்த அன்புக் கணவர்கள், கேர்கள் ஃபிரெண்டை முத்தமிட்டபடி நுழைந்த டீன்ஏஜ் காதலர்கள், தனியாக அறைக்குகள் நுழைந்து காத்திருந்து முன்பின் அறிமுகமில்லாத பெண்களை துணையாகத் தேடிக் கொண்டவர்கள், ‘வயது எங்கள் உணர்ச்சிகளுக்கு அணை போடவில்லை’ என்று நிரூபிக்கும் விதமாக தங்கள் மனைவியோடு வந்து அந்தப் படுக்கையைப் பயன்படுத்திக் கொண்ட கிழவர்கள், ‘எங்களுக்கு ஜோடியே தேவையில்லை’ என்ற படி தனி ஆட்களாக வந்து சுய இன்பத்தில் பரவசப்பட்டவர்கள்... இப்படி பலவிதமான மனிதர்களை அந்த அறை பத்து ஆண்டுகளில் பார்த்திருக்கிறது.

வெளிச்சம், இருட்டு என்ற வித்தியாசம் எல்லாம் அவர்களில் பலருக்கு இல்லை. ஒரேநாளில் வெவ்வேறு நேரங்களில் விதம்விதமான உணர்வுகளுடன் அந்த அறைக்கு பல ஜோடிகள் வந்தன. படுக்கை விரிப்பை மாற்றக்கூட அவகாசம் தராமல், அடுத்தடுத்து பத்து ஜோடிகள் வந்து போனதும் நடந்திருக்கிறது.
இவ்வளவு பிஸியான அந்த அறை.. ஒரு நட்சத்திர ஹோட் டலின் ‘தேனிலவு சூட்’ அல்லது ஏதாவது குளிர்பிரதேச சுற்றுலா தல ரிஸார்ட்ஸாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைத்தீர்கள்.

ஸாரி... அது தப்பு. அந்த அறை, ஒரு மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடம். அங்கு இப்படி பத்தாயிரம் தடவை பலர் பரவச நிலையை அனுபவித்தது, ஓர் ஆராய்ச்சிக்காக! அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் இருக்கும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி... அதில் இருக்கும் மகப்பேறு மற்றும் பெண்கள்நலப் பிரிவில்தான் நடந்தது இந்த ஆராய்ச்சி.

‘இதில் போய் என்ன ஆராய்ச்சி!’ என முகத்தைச் சுளிப்பவர்கள், தவறாமல் அடுத்த பாராவுக்கு போங்கள்.

இந்த வித்தியாசமான ஆராய்ச்சி நடந்தது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால்... ‘இருண்ட கண்டம்’ என பெயர்பெற்று மர்மப் பிரதேசமாக இருந்த ஆப்பிரிக்க கண்டத்தைக்கூட மனித இனம் அலசி ஆராய்ந்து விட்ட நேரம் அது. எங்கோ தொலைதூரத்தில் இருந்தபடி மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை
வகைப்படுத்தி பெயர் வைக்கும் அளவுக்கு அறிவியல் அப்போது உச்சத்தில் இருந்தது.

ஆனால், அப்போதும் புரியாத புதிராக இருந்தது, ஆண்பெண் நிகழ்த்தும் அந்தரங்க உறவின் அர்த்தங்கள். அந்த உறவின்போது எந்தெந்த உறுப்புகளுக்குகள் என்னவிதமான மாற்றங்கள் நிகழ்கின்றன? ஒட்டுமொத்த உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன? புதிய உயிரை உருவாக்கி அடுத்தடுத்த தலைமுறைகளை உலகுக்கு படைக்கும் ஆதார சக்தி எப்படி ஆணிடமிருந்து பெண்ணுக்குப் பரிமாறப்படுகிறது? பிரபஞ்சத்தை சிருஷ்டித்ததாகக் கூறப்படும் கடவுகள், ஒவ்வொரு ஜீவனையும் உயிர் கொடுத்து உருவாக்கும் பணியை மட்டும் ஏன் அந்தந்த ஜீவராசிகளிடமே கொடுத்தார்? அந்த உறவு என்பது வெறுமனே உயிர்களை உருவாக்க மட்டும்தானா? மனித இனத்தை எடுத்துக் கொண்டால், இதில் ஆணின் பங்கு என்ன... பெண்ணின் பங்கு என்ன? சுருக்கமாக சொல்லப் போனால் ஆண்களும், பெண்களும் இதை ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்? இந்த உறவில் பலபேருக்கு நாட்டம் இல்லாமல் போவதற்கும், சிலர் மட்டும் எப்போதும் இதே நினைப்புடன் வெறியோடு திரிவதற்கும் காரணம் என்ன? பலபேருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவதற்கு என்ன காரணம்?



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:27 am

நாகரிகம் அடைந்த மக்கள் என்றில்லை... பழங்குடியினரிடம்கூட இந்தப் பழக்கம் இருந்தது. உதாரணமாக தென் ஆப்பிரிக்காவில் வாழும் ஜூலு இன மக்கள். சிறுவர், சிறுமி களுக்கு வேட்டை மற்றும் போர்பயிற்சி தரும் போது கூடவே சுய இன்பம் செய்வது எப்படி என்றும் அப்பாஅம்மாவே கற்றுத் தருவார்கள். ‘பெரியவர்களாகித் திருமணம் நடந்ததும் இந்தப் பழக் கத்தை மறந்துவிட வேண்டும்’ என கண்டிப்போடு அட்வைஸ் செய்வார்கள்.

மருத்துவரீதியாக இதுபற்றி தவறான நம்பிக்கையை விதைத்தவர், நவீன மருத்துவ முறையின் தந்தை என புகழப்படும் ஹிப்போகிரேடஸ். அவரது காலத்தில் விந்தணு முதுகுத் தண்டில் சுரப்பதாக மருத்துவர்கள் நம்பிவந்தார்கள். ‘‘தொடர்ந்து ஒரு நபர் சுய இன்பத்தில் ஈடுபட்டு தனது செக்ஸ் திரவத்தை வீணாக்கி வந்தால், அவருக்கு முதுகெலும்பில் இருக்கும் திரவம் தீர்ந்து போய்விடும். அப்புறம் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு அவரது மனநிலை பாதிக்கப்படும்’’ என்றார் அவர். ‘சுய இன்பம் பாவம்’ என்ற மத நம்பிக்கை, ‘இது உடல்நலத்துக்கு கேடு’ என்ற மருத்துவ நம்பிக்கையாக மாறியது அப்போதுதான்!

அதன்பிறகு வந்த டாக்டர்கள் இதே ரூட்டில் தங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு இஷ்டத்துக்கு கதைவிட்டனர். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவிட் சர்லாந்து டாக்டர் டிஸ்ஸாட் என்பவர் சுய இன்பத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு என்னென்ன நோய்கள் வரும் என பெரிய பட்டியலே போட்டார். ‘ஆண்கள் இதில் ஈடுபட்டால் நரம்புத் தளர்ச்சி வந்து பைத்தியம் பிடிக்கும். காக்காவலிப்பு வரும். முகத்தில் பரு வரும். மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். கண்கள் உள்ளே போய்விடும். கண்களுக்குக் கீழே கருவளையம் விழும். கன்னங்கள் ஒடுங்கி நாக்கு வெளியில் தள்ளிவிடும். பெண்களுக்கு இதைவிட பயங்கரமான விளைவுகள் ஏற்படும்... தலைமுடி கொட்டி வழுக்கை விழும். மாதவிலக்கின் போது வலி கடுமையாக இருக்கும். குழந்தை பிறக்கும்போதும் பயங்கர வலி இருக்கும். குழந்தை செத்துப் பிறக்கும். கடும் வயிற்றுவலி ஏற்பட்டு கர்ப்பப்பை, பெண்குறி வழியாக வெளியில் வந்துவிடும்.’

இப்படி ஹோட்டல் மெனு கார்டு ரேஞ்சுக்கு இவர் பட்டியல் போட, மற்ற டாக்டர்கள் இதைவிட ஒருபடி மேலே சொல்ல வேண்டிய நிலை வந்தது.
இப்படி கற்பனையான விளைவுகளைச் சொல்லி, ‘சுய இன்பத்தைக் குணப்படுத்த’ இவர்கள் தந்த சிகிச்சைகள் பயங்கரமானவை.

சுய இன்பம் அனுபவித்தால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி டாக்டர்கள் வெளியிடும் பட்டியல் நீண்டுகொண்டே போக, பெற்றோர் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. பலரும் ரகசியமாகத் தங்கள் பிள்ளைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தனர். இது நோய் என்று அறிவித்த பிறகு, இதற் கான சிகிச்சை என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும் அல்லவா? டாக்டர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினர்.

டாக்டர்கள் முதலில் குறிவைத்தது, உணவுப் பழக்கத்தை! அமெரிக்காவில் பிரபலமாக இருந்த டாக்டர் கார்கன் ‘நியூயார்க் மெடிக் கல் டைம்ஸ்’ பத்திரிகையில், 1896ல் ஒரு கட்டுரை எழுதினார். ‘‘திருமணம் ஆகாத இளைஞர்களும், பெண்களும் இரவு நேர சாப்பாட்டில் பாலாடை, முட்டை, உப்பு, மிளகு, மீன், சர்க்கரை, வெங்காயம், வாசனைத் திரவியங்கள்

ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். மது, காபி அருந்தக் கூடாது. இவை எல்லாம் நரம்புகளைத் தூண்டிவிட்டு செக்ஸ் உணர்வை ஏற்படுத்துகின்றன’’ என்றார் அவர். சில்வஸ்டர் கிரஹாம் என்ற மதபோதகர் செக்ஸ் உணர்வைக் கட்டுப்படுத்த,சைவ உணவை சாப்பிடச் சொன்னார். பாலீஷ்செய்யப்படாத கோதுமையை அரைத்து, அந்த மாவைசிறுசிறு வில்லைகள் போல் ஆக்கி, ‘கிரஹாம் கிராக்கர்ஸ்’ என்ற உணவை ஸ்பெஷலாக அவர் உருவாக்கினார். கிட்டத்தட்ட தவிடு மாதிரி இருக்கும். செக்ஸைக் குறைக்க இதை சாப்பிடச் சொன்னார் அவர். உப்பு, இனிப்பு எதுவும் இல்லாமல் இதை சாப்பிடுவதே ஒரு தண்டனை மாதிரி இருந்தது. போனால் போகிறது என்று, ‘கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடுங்கள்’ என விதிவிலக்கு அளித்தார். இன்னொரு பக்கம் சில டாக்டர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கினர். ‘என் பையன் தப்பு பண்றான்’ என கவலையோடு ஓர் இளைஞனை யாராவது டாக்டரிடம் கூட்டி வந்தால் போச்சு. அவன் மீது எல்லா பரிசோதனைகளையும் நடத்தி முடித்து விடுவார்கள். இதில் முதல்படி, குளியலில் ஆரம்பிக்கும். கொட்டும் பனியில், நடுக்கும் குளிரில், பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டுப் பையனைத் தூங்கச் சொல்வார்கள். உடம்பே விறைத்துக்கொள்ள பையன் நடுநடுங்கி விடுவான். காமத்தீயை இந்தக் குளிர்ந்த நீர் அடக்கிவிடும் என நினைத்தார்கள்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:27 am

இதற்கும் அடங்காத பையனாக இருந்தால், அவன் நிலைமை பாவம். தடிமனான ஒரு போர்வையைத் தண்ணீரில் நனைத்து ஈரம் சொட்டச்சொட்ட அதை போர்த்திக்கொண்டு தூங்கச் சொல்வார்கள். ஏதோ ஃபிரிஜுக்குள் நுழைந்துவிட்டது மாதிரி உணர்வு வர, தூக்கம் எங்கே வரும்?

இன்னும் சில டாக்டர்கள் ஏதாவது கஷ்டமான உடற்பயிற்சியை சொல்லிக் கொடுத்து, ‘‘தூங்கறதுக்கு முன்னாடி இதை ஆயிரம் தடவை செய்துடு கண்ணா’’ என்று அனுப்பி வைப்பார்கள். அப்பா கண் காணிக்க, அவர் முன்னால் ஆயிரம் தடவை இதை செய்து முடித்ததும் கண்ணைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்துவிடும். நடுவில் விழிப்பே வராது. அப்புறம் சுய இன்பத்துக்கு ஏது நேரம்?

வேறொரு சிகிச்சை... இரவு நேரத்தில் பையனை கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கட்டிப்போட்டுத் தூங்க வைப்பது. கைகள் கட்டப்பட்டிருக்க, பையனின் ஜட்டிக்குள் ஒரு தடிமனான நூல் கட்டப்பட்டு, அதன் இன்னொரு முனை அப்பாவின் அறைக்கு செல்லும். அந்த முனையில் மணி கட்டித் தொங்கவிடப்பட்டு இருக்கும். பையன் ஏதாவது தப்பு செய்ய முயன்றால்,

அப்பாவின் அறையில் மணி அடிக்கும். பையன் மாட்டிக் கொள்வான். சிலர் இதையே மின்சார இணைப்பு கொடுத்து, அலாரம் இணைத்து வைத்தி ருந்தார்கள்.
இதைவிட கொடூரமான இன்னொரு சிகிச்சை இருந் தது. எலிப்பொறி மாதிரி கூரான பற்களோடு ஒரு வளையம் இருக்கும். இதை ஆணுறுப்பின் மீது மாட்டி, இடுப்போடு இணைத்து ஒரு பூட்டுப் போட்டுப் பூட்டி விடுவார்கள். சாவி அப்பா கையில் இருக்கும். பரவசமான செக்ஸ் உணர்வு கிளர்ந்தால், இந்தக் கூரான பற்கள் குத்திக் காயப்படுத்திவிடும். அதனால் பையன் அடங்கி இருப்பான்.

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வில்லியம் ஆக்டன் என்ற டாக்டர் இருந்தார். இவர் ‘சுய இன்பத்தை’ தடுக்கும் அறுவை சிகிச்சைகளில் புகழ் பெற்றவர். ஆணுறுப்பின் மேற்புறத் தோலுக்குள் ஆபரேஷன் மூலம் மெல்லிய வெள்ளிக் கம்பியை நுழைத்து விடுவார் இவர். சுய இன்பம் அனுபவிக்கும் நோக்கத்தில் பையன் தொட்டால், வலி உயிர் போகும். இந்த வலிக்குப் பயந்து பையன்கள் கையைக் கட்டிக் கொண்டு அடங்கி இருந்தார்கள்.

இளம்பெண்களும் கூட டாக்டர்களிடம் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டார்கள். இதில் பயங்கரமானது ‘கற்பு வளையம்’ எனப் படும் ஒரு பெல்ட். இரும்பில் செய்யபட்ட இந்த பெல்ட், ஒரு ஜட்டி மாதிரி இருக்கும். பெற்றோர்கள் பெண்ணுக்கு இதை மாட்டி விடுவார்கள். இடுப்புப் பக்கம் இருக்கும் வளையத்தை இறுக்கிப் பூட்டி விட்டால் அவிழ்க்க முடியாது. இயற்கை உபாதைக்காக சின்னதாக ஒரே ஒரு துவாரம் மட்டும் இருக்கும்.

இதுதவிர கொடூரங்கள் நீண்டன... பெண்ணுறுப்பில் சூடுவைத்துக் காய மாக்கி விடுவார்கள். காயமான இடத்தில் கைவைத்தால் வலிக்கும் என்பதால், பெண்கள் தொடமாட்டார்கள் என நினைத்தார்கள். இன்னும் சிலர் தையலே போட்டு பெண்ணுறுப்பை முக்கால்வாசி மூடினார்கள்.

1856ல் தொடங்கி 1932 வரை இந்த மாதிரி சுய இன்பத்தை தடுக்கும் கருவிகள் முப்பத்துமூன்றுக்கு அமெரிக்கக் காப்புரிமை அலுவலகம் உரிமை கொடுத்திருந்தது! இதுதவிரவும், இன்னும் பல மாடல் கருவிகள் மார்க் கெட்டில் விற்றன.

சிகிச்சை என்ற பெயரில் டாக்டர்கள் மேற்கொண்ட கொடூரங்களுக்குப் பயந்தே பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இயல்பான ஒரு பழக்கத்தை நோய் என அடையாளம் காட்டி, ஆயிரக்கணக்கானவர்களை சாகடித்தது, வரலாற்றில் வேறு எப்போதும் நடக்காத கொடுமை.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் மருத்துவ உலகம் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஆராய்ந்து சொல்லப்படும் உண்மைகளை மட்டுமே நம்ப ஆரம்பித்தது. மருத்துவப் புத்தகங் களில் ‘சுய இன்பம் தப்பான விஷயம்... பயங்கரமான நோய்’ என்று இருந்த பாடத்தை, 1940ம் ஆண்டு நீக்கினர். அமெரிக்க அரசு வெளியிடும் ‘குழந்தைகள் பராமரிப்பு கையேட்டில்’ 1951ம் ஆண்டு புதிதாக ஒரு அறிவுரையைச் சேர்த்தனர். ‘பிள்ளைகள் சுய இன்பம் அனுபவித்தால் அதைத் தடுக்காதீர்கள்’ என்பதுதான் அந்தப் புதிய அட்வைஸ். 1972ம் ஆண்டு அமெரிக்க டாக்டர்கள் சங்கம், ‘சுய இன்பம் இயல்பான ஒரு பழக்கம்தான்’ என அறிவித்தது.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:28 am

இந்தியாவைப் பொறுத்தவரை சுய இன்பம் தப்பு என்றோ, சரி என்றோ மருத்துவ நூல்கள் சொல்லவில்லை. ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதையில், ‘இச்சைகளை அடக்கக் கூடாது’ என்று இருக்கிறது. பழங் கால சிற்பங்களில்கூட சுய இன்பம் அனுபவிப்பது மாதிரி காட்சிகளைப் பார்க்கமுடியும். இந்தப் பழக்கத்துக்கு ‘பாநி மந்தன்’ என பெயர் வைத் திருக்கும் வாத்ஸாயனர், வயதான காலத்தில் செக்ஸ் அனுபவிக்கும் ஆசை உள்ளவர்களுக்கு இதைத் ஒரு தீர்வாக சொல்கிறார்.

நவீன கால செக்ஸ் சிகிச்சையிலும்கூட, சுய இன்பம் ஒரு சிகிச்சை முறையாக இருக்கிறது. நோய் என்று கருதப்பட்ட ஒரு பழக்கம், இப்போது மருந்தாக மாறி இருப்பதற்குக் காரணம் அறிவியல்தான்.

ஆனாலும் சில நம்பிக்கைகளை மாற்றுவது கஷ்டம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஒரு நம்பிக்கையை ஐம்பது ஆண்டுகளில் மாற்றி விட முடியாது. ‘சுய இன்பம் தப்பில்லை’ என மக்கள் உணர்ந்து கொள்ள கொஞ்சம் காலம் பிடிக்கும்.

சுய இன்பம் அனுபவிப்பதைவிட, இது தப்பு என மனதில் தோன்றும் குற்ற உணர்வுதான் ஒருவரை மனநோயாளி ஆக்கும் அளவு ஆபத் தானது. விந்தணுவை ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கொடுக்க, கடவுள் ரேஷன் ஆபீஸர் இல்லை. மனிதன் ஆரோக்கியமாக இருந்தால், அவன் சாகிற வரை இது சுரந்து கொண்டே இருக்கும். ஞாயிறு விடுமுறை எல்லாம் கிடையாது. அதனால் சுய இன் பத்தில் இது வீணாகி விட்டது என நினைக்க முடியாது.

ஆனால், மனதில் குற்ற உணர்வைக் கிளப்பி விட்டுக் காசு பார்க்க ஏகப்பட்ட போலி டாக்டர்கள் கிளம்பிவிட்டார்கள். ‘சுய இன்பம் அனுபவிப்பவர்களுக்கு ஆணுறுப்பு சிறியதாகிவிடும்’ என்பது உட்பட பல வதந்திகளைக் கிளப்பிவிட்டு இவர்கள் பணம் பறிக்கிறார்கள். இவர்கள் கிளப்பும் பீதியை வேதவாக்காக பலர் நம்பு கிறார்கள். சிகிச்சை செய்து கொள்ளும் வசதி இல்லையே என ஏங்கித் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தக் குற்ற உணர்வு வரக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு விவரமாக சொல்கிறேன். மனிதர்கள் மட்டுமில்லை... குரங்கு, முள்ளம்பன்றி, யானை, பூனை, நாய் என பல விலங்குகளுக்கு இந்தப் பழக்கம் உண்டு.

திருமணத்துக்கு முன்பு இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், தனிமையில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு தியானம், தோட்ட வேலை, பகுதி நேர வேலை என வேறு எதிலாவது மனதை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. திருமணத்துக்குப் பிறகு இது சரியாகிவிடும். அப்படி சரியாகாவிட்டால், அதற்குதான் சிகிச்சை அவசியம். ஒவ்வொரு வயதிலும் ஒரு பழக்கத்தை கடந்து வருவது மனித இயல்பு. அப்படி ஒரு இயல்புதான் இது. ‘இளமையில் சுய இன்பம் அனுபவித்தது இல்லை’ என சொல்கிற ஆசாமிகளில் பலர்தான் செக்ஸ் பிரச்னை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

கன்னித்தன்மை, கற்பு... இந்த இரண்டு வார்த்தை களுக்கும் பழங்காலத்தில் அர்த்தமே வேறு. காலப் போக்கில்தான் ஒவ்வொரு சமூகமும் இந்த வார்த்தை களுக்கு கலாசார முகமூடி அணிவித்து, ஏராளமான பெண்களை இரக்கமில்லாமல் கொன்று போட்டிருக்கிறது. எந்த தப்பும் செய்யாத பெண்களைக்கூட ‘சோரம் போனவர்களாக’ முத்திரை குத்தி, உறவினர்களை விட்டே கல்லால் அடித்து சாகடித்த ரத்த வரலாறு பல நாடுகளுக்குச் சொந்தம்.

‘‘ஒரு பெண் செக்ஸ் உறவை ஒருமுறைகூட அனுபவித்தது இல்லை என்றால், அவரது பிறப்பு உறுப்பின் பாதுகாப்பு கவசமான ‘கன்னித்திரை’ கிழியாமல் இருக்கும். இப்படி கன்னித் திரை கிழியாமல் இருப்பவரே கன்னி’’ இதுதான் கன்னித் தன்மைக்கு இப்போது அர்த்தமாக சொல்லப்படுகிறது.

ஆனால், பழங்காலத்தில் எந்த ஓர் ஆணுடனும் திருமண உறவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ இணைந்து இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் ஒரு பெண்தான் கன்னி எனப்பட்டாள். உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இதுதான் அர்த்தம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:28 am

கன்னி என்பதற்கு ஆங்கிலத்தில் ‘வர்ஜின்’ (Vergin) என்று பெயர். கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் புழக்கத் தில் இருக்கும் ‘வர்கோ’ என்ற வார்த்தையிலிருந்து ‘வர்ஜின்’ வந்தது. ‘யாரோடும் சேர்ந்திருக்காமல் தன் சொந்தக்காலில் நிற்கும் சக்திவாய்ந்த பெண்’ என்பது தான் இந்த வார்த்தையின் அர்த்தம்.

ஆர்டெமிஸ், ஹெஸ்டியா ஆகிய இரண்டு கிரேக்கப் பெண் தெய்வங்கள் ‘வர்ஜின்’களாகக் கருதப்பட்டன. ஆர்டெமிஸ் வேட்டைக்கான தெய்வம். ஹெஸ்டியா உடல் நலத்தைக் காக்கும் தெய்வம். கொடிய மிருகங்களை வேட்டையாடவும், பயங்கர நோய்களிலிருந்து மக்களைக் காக்கவும் சக்தி தேவை. அந்த சக்தி இரண்டு பெண் தெய்வங் களிடமும் இருந்தது. அது மட்டுமில்லை... கிரேக்க ஆண் தெய்வங்களில் பலர் முரட்டுத்தனமானவர்கள்.ஒரே ஆண் தெய்வம், பல பெண் தெய்வங்களை ஏமாற்றியோ மிரட்டியோ செக்ஸ் வைத்துக்கொண்டு, பிறகு மனைவியாக்கிக் கொண்டதாகப் புராணங்களில் இருக்கிறது. இத்தனை முரட்டு தெய்வங்களையும் சமாளித்து ஆர்டெமிஸ§ம், ஹெஸ்டியாவும் தனியாக இருந்தனர். இந்த சக்தியும், சுயேச்சையான தன்மையும்தான் ‘வர்ஜின்’ என்பதன் அடையாளம்.

காலப்போக்கில் மத நம்பிக்கைகள் ‘வர்ஜின்’ என்பதைக் கன்னித் தன்மையின் அடையாளமாக மாற்றிவிட்டன. ‘ஒரு பெண்ணுக்குக் கடவுள்தான் கன்னித் தன்மையை பரிசாகக் கொடுக்கிறார். அது ஒரு வகை வேலி. அந்தப் பரிசை அவள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். திருமண உறவின் மூலம் அவளை அடையும் கணவன் மட்டுமே அந்த வேலியைத் தாண்டும் உரிமை உள்ளவன்’ என மத நூல்கள் வரையறுத்தன.

‘ஒரு பெண் முதல் தடவையாக செக்ஸ் உறவில் ஈடுபடும்போது லேசான ரத்தக் கசிவு இருக்கும். இதற்குக் காரணம், அந்த உறுப்பின் மேலுறை மாதிரி இருக்கும் மெல்லிய ஒரு கவசம் கிழிவதுதான்’ என்பது அந்தக்கால மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கு பிறகுதான் கட்டுப்பாடு வந்தது. ‘திருமணத் துக்கு முன் பெண்கள் செக்ஸ் உறவில் ஈடுபடக் கூடாது. கணவனு டன் இணைந்து முதலிரவில்தான் அவள் முதல்முறையாக செக்ஸை அனுப விக்க வேண்டும். அப்போதுதான் அவளது பிறப்பு உறுப்பின் கவசம் கிழிய வேண்டும்’ எனக் கட்டுப் பாடு கொண்டு வந்தார்கள்.
அந்த கவசம்தான் கன்னித்திரை! இதற்கு ஆங்கிலத்தில் ‘ஹைமென்’ (Hemen) என்று பெயர். கிரேக்கர்களின் திருமணக் கடவுளான ‘ஹைமெனியஸ்’ பெயரிலிருந்து தான் இந்த வார்த்தை வந்தது. ஒரு கையில் தீப்பந்தமும், இன்னொரு கையில் பூமாலையும் ஏந்தியிருக்கும் ஹைமெனியஸ்தான் ஓர் ஆணை யும், பெண்ணையும் திருமண பந்தத்தில் இணைத்து வைப்பதாக கிரேக்கர்கள் நம்பினார்கள். திருமண உறவின் மூலம் கிழிய வேண்டிய திரை என்பதால், திரு மணக் கடவுளின் பெயரிலிருந்து ‘ஹைமென்’ என்று இதற்கு நாம கரணம் ஆனது.

இப்படி கன்னித்திரை கிழிவ தும், அதன்மூலம் ரத்தக் கசிவை ஏற்படுத்துவதும்தான் முதலிரவில் நிகழவேண்டிய முக்கியமான சடங்கு என பல நாடுகளில் வழக்கமாகிவிட் டது. பழங்குடிகள், நாகரிகம் அடைந்தவர்கள் என எந்த சமூகமும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

பழங்கால கிரீஸில் திருமணம் முடிந்த தும் பெண் வீட்டில்தான் முதலிரவு நடக்கும். முதலிரவுக்காகக் கட்டிலை அலங்கரிக்கும் போது தூய வெள்ளை நிறத்தில் படுக்கை விரிப்பை அதில் போடுவார்கள். மறுநாள் காலை பெண்ணின் அம்மாவும், மணமக னின் அம்மாவும் ஒன்றாகச் சேர்ந்து அந்த அறைக்குள் போவார்கள். பெண்ணின் கன்னித்திரை கிழிந்து, அந்த ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்பை பத்திரமாக எடுத்து வருவார்கள். அதை ஏதோ காட்சிப் பொருள் மாதிரி வீட்டுப் பால்கனியில் அல்லது ஜன்னலில் கட்டித் தொங்க விடுவார்கள். ரோட்டில் போகிற வருகிற எல்லோரது பார்வையிலும் அது படும். ‘நாங்கள் எங்கள் பெண்ணைப் பரிசுத்தமாக வளர்த்து கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறோம்’ என அந்தக் குடும்பம் பெருமைப்பட்டுக் கொள்ள இது ஒரு வாய்ப்பு. எந்த வீட்டில் கல்யாணம் நடந்தாலும், ‘கறைபடிந்த படுக்கை விரிப்பு பால்கனியில் தொங்குகிறதா’ என்று மறுநாள் ஊர்க்காரர்கள் எல்லோரும் வந்து பார்ப்பது பழக்கமாக இருந்தது.

ஊர்க்காரர்கள் என்றில்லை... பெண்ணின் உறவினர்கள், மாப்பிள்ளையின் உறவினர்கள் என எல்லோரும் திருமணத்துக்கு மறுநாள் அந்த வீட்டுக்கு வருவார்கள். எல்லோருக்கும் விருந்து சாப்பாடு உண்டு. படுக்கை விரிப்பில் கறை படிந்திருப்பதை உறுதிசெய்து கொண்டு, விருந்தையும் சாப்பிட்ட பிறகு சந்தோஷமாக அவர்கள் கிளம்பிப் போவார்கள்.

இப்படி எல்லோரும் பார்த்து முடித்த பிறகு அந்த படுக்கை விரிப்பு பெண்ணின் சகோதரர் கையில் ஒப்படைக் கப்படும். அவர் அதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். பின்னால் என்றைக்காவது சண்டை வந்தால், பஞ்சாயத்தில் அதை அவர் ஒரு ஆவணமாக ஒப்படைக்க வேண்டும். ஒரு பரிசுத்தமான கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர் வாழ்நாள் முழுவதும் அவளை விவாகரத்து செய்வது சிரமம்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:29 am

ஒருவேளை ரத்தக்கறை இல்லை என்றால்... திருமண உறவை முறித்துக் கொள்ளும் உரிமை மணமகனின் வீட்டாருக்கு உண்டு. அது மட்டுமில்லை... அந்தப் பெண்ணின் குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைப்பார்கள்.

இந்த பழக்கம் அப்படியே ரஷ்யா, எகிப்து, ஆப்பிரிக்கா, அரபு நாடுகள் என பல பகுதிகளுக்கும் பரவியது. ஒவ்வொரு இடத்திலும் புதுப்புது விஷயங்கள் சேர்க்கப் பட்டன.

அல்ஜீரியாவில் முதலிரவின்போது படுக்கை விரிப்பில் கறை படியவில்லை என்றால், பெண்ணை அவளது அப்பாவும், சகோதரர்களும் சேர்ந்து கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.

அமெரிக்காவில் செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த அகோமாவி பழங்குடிகள் மத்தியில் ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. ஊரில் திருவிழா நடக்கும்போது கல்யாண வயசில் இருக்கும் பெண்களை அழைத்து நடனம் ஆடச் சொல்வார்கள். நடனம் ரொம்ப நேரத்துக்கு நீடிக்கும். யாராவது ஒரு பெண் களைப்பில் விழுந்து விட்டால் போச்சு... ‘அவள் கல்யாணத் துக்கு முன்பே ஏதோ தப்பு செய்து விட்டாள். அதனால்தான் கன்னிப் பெண்களுக்கான நடனத்தை அவளால் நீண்டநேரம் ஆட முடியவில்லை’ என தீர்மானித்து அவளுக்கு நூறு கசையடி கொடுப்பார்கள். அடிக்கும், பழிச்சொல்லுக்கும் பயந்தே எல்லாப் பெண்களும் உயிரைக் கொடுத்து ஆடுவார்கள்.

எகிப்தில் கன்னித்திரையைக் கிழிக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. கணவனின் கிராமத்தில் பிரசவம் பார்க்கும் தொழிலைச் செய்து வரும் தாதிக்குதான் அந்த உரிமை. முதலிரவுக்கு முன்னால் பெண் இருக்கும் அறைக்கு இந்த தாதி போவார். ஒரு மெல்லிய பட்டுத் துணி யைச் விரலில் சுற்றிக் கொண்டு கன்னித் திரையைக் கிழிப்பார். ரத்தக் கறை படிந்த அந்தப் பட்டுத்துணியை அவர் வெளியில் கொண்டுவந்து காட்டினால் தான் முதலிரவே நடக்கும். கறை இல்லா விட்டால் அந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும். இந்தக் காலத்தில் கூட தொடரும் நடைமுறை இது! (இந்த சம்பிரதாயத்தை வைத்து பல தாதிகள் சம்பாதிக்கிறார்கள். ஒருவேளை, துணியில் கறை படியாவிட்டால் பெண்ணு டன் ரகசியமாகப் பேரம் பேசுவார் தாதி. பணமோ, நகையோ பரிசாக வாங்கிக் கொண்டு கறையை வரவழைப்பார். எப்படி? இடுப்பில் ஒரு சுருக்குப் பையில் இதற்காகத் தயாராகக் கண்ணாடித்தூள் வைத்திருப்பார். துணியில் அதைத் தூவிவிட்டு பிறகு அதைக் கொண்டு கீறி ரத்தம் வரவழைப்பார். பெண்ணுக்கு வலி உயிர் போகும்தான்... ஆனால் வாழ்க்கையே போவதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை என தாங்கிக் கொள்வார்கள்!).

நவீன யுகத்தில்கூட பழைய சம்பிர தாயங்களைக் கைவிட பலர் மறுக்கி றார்கள். இராக் தலைநகர் பாக்தாத் போன்ற பெரிய நகரங்களில் ஆடம் பர ஹோட்டல்கள் ஏராளம். புதுமணத் தம்பதிகள் முதலிரவையும், தேனிலவை யும் கொண்டாட அலங்கரிக்கப்பட்ட அறைகள் இங்கு உண்டு. இந்த அறை களில் வந்து தங்கும் ஜோடிகள் அறையைக் காலி செய்த பிறகு, அறையை சோதித் தால் படுக்கை விரிப்பு மட்டும் காணாமல் போயிருக்கும். கறைபடிந்த அதைத் தங்கள் கிழட்டு உறவினர்களிடம் காண் பிக்க அந்தத் தம்பதிகள் பத்திரமாக எடுத்துப் போயிருப்பார்கள்.

ஆனால், இப்படிப்பட்ட சடங்குகள் எவ்வளவு குருட்டுத்தனமானவை என் பதைக் கன்னித்திரை பற்றிய அறிவியல் உண்மைகள் புரிய வைத்திருக்கின்றன.
ஆசியக் கண்டத்தில் பழமைவாத கொள்கைகளில் இன்றைக்கும் பிடிவாதமாக இருக்கும் ஒரு சில நாடுகளில் திருமணமாகாத ஒரு பெண் பாதுகாக்க வேண்டிய முக்கியமான விஷயம் அவளது கன்னித்திரை! ‘அதுதான் ஒரு கன்னிப் பெண்ணின் முகம். முகமில் லாதவர்கள் வாழ முடியாது. கன்னித்திரை இல்லாத பெண்ணுக்கும் வாழ்க்கை இல்லை’ என்பார்கள்.

ஆனால், உடலைப் பொறுத்தவரை கன்னித்திரைக்கு எந்த வேலையும் இல்லை. உடலில் தேவையில்லாத உறுப்புகள் நிறைய இருக்கின்றன. குடல்வால் என ஒரு பகுதி உடலில் இருக்கிறதே... அதற்கு உடலின் செயல்பாட்டில் எந்த பங்கும் இல்லை. ஏதோ அலங்காரப் பொருள் மாதிரி வீணாக அது உடலில் இருக்கிறது. அது இல்லாமலேகூட உடல் இயல்பாக இருக்கும். அது மாதிரி கன்னித்திரையும் தேவை இல்லாத ஓர் உறுப்புதான்!

அது கிழியாமல் இருந்தால், அந்தப் பெண் மட்டும் இதுவரை செக்ஸ் அனுபவிக்காத கன்னிப் பெண் என்றும் அர்த்தமில்லை. (அதிர்ஷ்டவசமாக ஆண்களுக்கு இப்படி எந்த திரையையும் சிருஷ்டியில் வைக்கவில்லை. அதனால் அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்!).



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:29 am

மருத்துவரீதியாக பார்த்தால் வெறும் நாற்பத்தி இரண்டு சதவிகிதம் பெண்களுக்கு மட்டும்தான் முதல்முறையாக உடலுறவு கொள்ளும்போது கன்னித்திரை கிழிந்து ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாற்பத்தேழு சதவிகிதம் பெண்களுக்கு இந்தக் கன்னித்திரை ஏதோ எலாஸ்டிக் மாதிரி நெகிழும் தன்மை கொண்டதாக இருக்கிறது. உடலுறவு முடிந்ததும் பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகிறது. அதனால் இவர்களுக்கு முதல் தடவை உறவின்போது இது கிழியவும் கிழியாது... ரத்தக் கசிவும் இருக்காது... வலியும் இருக்காது!

தடய அறிவியல் நிபுணர்கள்தான் இதைக் கண்டு பிடித்தார்கள். விலைமாதர்கள் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது, அவர்களில் பலரது கன்னித் திரை கிழியாமல் பத்திரமாக இருப்பதைப் பார்த்து நிபுணர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இத்தனைக்கும் ஆண்டுக்கணக்கில் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் அவர்கள். அதைப் பரிசோதித்த பிறகே இந்த எலாஸ்டிக் சமாச்சாரம் தெரிய வந்தது.

இந்த இரண்டு ரகம் தவிர, இன்னொரு பதினோரு சதவிகிதம் பெண்களுக்குக் கன்னித்திரை மிகவும் மெல்லியதாக இருப்பதால் சின்ன வயசிலேயே கிழிந்து விடும். உடற்பயிற்சி செய்யும்போதோ, பைக்கில் காலைத் தூக்கிப் போட்டு உட்காரும் போதோ, சைக்கிள் ஓட்டும் போதோ இது சிம்பிளாகக் கிழிந்துவிடும். இவர்களில் சிலர் கன்னித்திரை என்ற பாகமே இல்லாமல் பிறக்கிறார்கள் என்பதும் மருத்துவர்கள் கண்டறிந்த உண்மை. மொத்தத்தில் பார்த்தால், ஐம்பத்தெட்டு சதவிகிதம் பெண்களுக்கு கன்னித்திரை கிழியாது... ரத்தக் கசிவும் இருக்காது. அப்படியிருக்கும்போது... இவர்களை ‘கெட்டுப் போனவர்கள்’ என முத்திரை குத்துவது எவ்வளவு பெரிய கொடுமை?!
பெண்களின் பிறப்பு உறுப்பின் உட்பக்கமாக ஒரு இஞ்ச் தூரத்தில் இந்தக் கன்னித்திரை இருக்கிறது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க மேல்பக்கம் ஒரு ஃபாயில் பேப்பர் மாதிரி ஒட்டி வைக்கிறார்களே... அது மாதிரி மெல்லிய சவ்வு இது!

இது ஒவ்வொரு பெண் ணுக்கும் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும். பொதுவாக பிறைநிலா மாதிரி பெரும் பாலானவர்களுக்கு இருக்கும். மாதவிடாயின்போது ரத்தம் வெளியேறுவதற்காக இந்த வடிவம். சில பெண்களுக்குக் கன்னித் திரை சுத்தமாக மூடியிருக்க, மாதவிடாயின்போது ரத்தம் வெளியில் வராமல் அப்படியே அடைத்துக் கொள்ளும். அவர் களுக்கு ஆபரேஷன் செய்து கன்னித் திரையை அகற்றுவார்கள். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். ‘கன்னித்திரையை அகற்றப் போகிறோம்’ என சொல்லிவிட்டுத்தான் இந்த ஆபரேஷனை டாக்டர்கள் செய்வார்கள். பின்னால் பிரச்னை வந்துவிடக் கூடாது என்ற அக்கறை தான் காரணம்!
வேடிக்கை என்னவென்றால், பிளாஸ்டிக் சர்ஜரி மகத்தான வளர்ச்சி கண்டிருக்கும் இந்தக் காலத்தில் ஏதோ கண்ணில் கான்டாக்ட் லென்ஸ் பொருத்துவது மாதிரி பெண்களுக்குக் கன்னித்திரையைக்கூட புதிதாகப் பொருத்துகிறார்கள்.

திருமணத்துக்கு முன்பாக இதை யார் வேண்டுமானாலும் ஆபரேஷன் மூலம் பொருத்திக் கொள்ளலாம். இந்த ஆபரேஷனில் பிறப்பு உறுப்பின் உட்புறச் சுவரையும் இறுக்கமாக்கி விடுகிறார்கள். இதன்பிறகு முதலிரவின்போது ரத்தக் கசிவும் இருக்கும்... தாங்க முடியாமல் வலியும் இருக்கும். ‘செக்ஸ் பற்றி ஆத்திச்சூடிகூட தெரியாத பெண் நமக்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்’ என கணவர் பெருமைப்பட்டுக் கொள்வார். இன்னமும் கட்டுப்பெட்டித்தனமாக இருக்கும் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பல பெண்கள் இப்படிப்பட்ட ஆபரேஷனுக்காகவே மேற்கத்திய நாடுகளுக்குப் போகிறார்கள்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:30 am

அமெரிக்கப் பணக்கார பெண்கள் மத்தியில் இது தான் லேட்டஸ்ட் ஃபேஷன்! தங்களது இருபதாவது திருமண நாளுக்கு முன்னால் இதைச் செய்துகொண்டு குழந்தைகளோடு கிளம்பி ஹனிமூன் போகும் ஜோடிகள் அங்கே நிறைய!

இது ஒரு பக்கம் என்றால், விலைமாதர்களுக்கும் இது வசதியாகி விட்டது. எய்ட்ஸ் பயம் பீடித்திருக்கும் அமெரிக்காவில் புதிதாகத் தொழிலுக்கு வரும் விலைமாதர்களுக்கு மவுசு அதிகம். பணக்கார கஸ்டமர்கள் லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுப்பார்கள். இதற்கு ஆசைப்பட்டு இப்படிப்பட்ட பெண்கள் இந்த ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள். ‘எந்தெந்த சமுதாயம் கற்புக்கும், கன்னித்தன்மைக்கும் மதிப்பு கொடுக்கிறதோ அங்கெல்லாம்தான் தவறுகள் அதிகம் நடக்கின்றன’ என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். ஒரே வித்தியாசம்... பெண்கள் நேரடியான செக்ஸ் உறவில் ஈடுபடுவதில்லை. சுய இன்பம், பிறவழி இன்பம் என மற்ற எல்லா விவகாரங்களையும் செய்கிறார்கள். திருமணத்துக்கு முன் ஆண்களுக்கு அதிக இடம் கொடுக்காமல் தவிர்த்துத் தங்கள் கன்னித் தன்மையைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ‘டெக்னிக்கல் கன்னிப்பெண்கள்’ என இவர்களைச் சொல்லலாம்.

தன்னுடைய மகாராணி தன்னை ஏமாற்றி விட்டு வேறு யாருடனோ செக்ஸ் உறவு வைத்திருப்பதாக சந்தேகிக்கும் ஒரு மன்னர் தினமும் ஒரு கன்னிப் பெண்ணை மணந்து, அவளோடு செக்ஸ் அனுபவித்துவிட்டு, மறுநாள் அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுவார். காரணம்... அவளும் அவரை ஏமாற்றக் கூடாது என்பதுதான்! புகழ்பெற்ற செக்ஸ் புத்தகமான ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுகள்’ கதை இது. இப்படி சந்தேக மன்னர்களாக ஆண்கள் இருந்தால், கன்னித்திரை பொருத்தும் ஆபரேஷன்கள் நம்முடைய குக்கிராமத்தில்கூட பாப்புலர் ஆகக்கூடும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:44 am

கைகளைத் தட்டியபடி அவர்கள் பிச்சை கேட்டு வந்தால் கடைக்காரர்கள் விரட்டுவார்கள். சினிமாக் களில் காமெடி நடிகரை இந்தக் கும்பல், "மாமா" என்ற படி துரத்தும் காட்சிகள் சகஜம். எல்லா இடங்களிலும் மக்களின் ஏளனப் பார்வை அவர்கள் மீது படியும். தியேட்டர்களில், பஸ்களில், இன்னும் ஏராளமான பொது இடங்களில் அவர்களை ஆண்களாக நடத்துவதா... இல்லை, பெண்கள் பிரிவில் அனுமதிப்பதா என்று இன்னமும் குழப்பம். அரவாணிகளைப் பற்றித்தான் சொல்கிறேன். அலி, நபும்சகன், பேடி என பல பெயர்களில் இவர்களைக் கூப்பிடுகிறார்கள். ஆணுமாக இல்லாமல், பெண்ணுமாக இல்லாமல் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று பலருக்கும் குழப்பம். மருத்துவ நிபுணர்களேகூட இதற்கான காரணங்கள் குறித்து இன்னமும் தீர்மானமான முடிவுக்கு வரவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உண்மை... இப்போதைய சமூக சூழலில் இவர்கள் ஏளனமாகப் பார்க்கப்பட்டாலும், பழங்காலத்தில் இவர்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அரவாணிகளுக்கு ஆங்கிலத்தில் "யூனக்" (Eunuch) என்று பெயர். இதில் நான்கு ரகங்கள் உண்டு (இந்த ரகங்கள் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்). குழப்பமான குணங்களோடு பிறக்கிறவர்களை வகைப்படுத்தும் இந்த எல்லா ரகங்களுக்கும் தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை. எல்லாவற்றையும் அரவாணிகள் என்ற ஒரே பெயரால்தான் இங்கே சொல்கிறார்கள்! யூனக் என்பது கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. "படுக்கைக் காவலர்" என இதற்கு அர்த்தம்.

பெரிய அரசாங்கங்கள் உருவான அந்த சமயத்தில், மன்னர்களின் அந்தரங்கமான வேலைகளைச் செய்ய யாரை அனுமதிப்பது என குழப்பம் இருந்தது. அந்தப் புரத்தில் காவல் புரிவது, மன்னரின் படுக்கை அறையை அலங்கரிப்பது, வாசனை திரவியங்களைப் பூசிக் குளிப் பாட்டுவது, மசாஜ் செய்து விடுவது... இப்படி ஏகப்பட்ட வேலைகள். ஆண்களை அனுமதித்தால் சிக்கல் வந்தது. அந்தப்புரம் வரை போவதற்கு கிடைத்த சுதந்திரத்தை பயன்படுத்தி அவர்கள் தப்பு செய்ய ஆரம்பித்தனர். மகாராணிகளோடு முறை கேடான தொடர்பு வைத்திருப்பது ஒருபுறமிருக்க, அரசருக்கு எதிரான சதிவேலைகளிலும் இறங்கினர். பெண்களை இந்த வேலைகளைச் செய்ய அனுமதிப்பதில் மகாராணிகளுக்குத் தயக்கம் இருந்தது. பணிப்பெண் அழகாக இருந்தால், மன்னருக்குப் பணிவிடை செய்ய கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தானும் மகாராணியாகி விடுவார். இப்படிப்பட்ட சூழலில் ஏதோ ஒரு ஐரோப்பிய பேரரசில், புத்திசாலி மன்னர் ஒருவர் அரவாணிகளை இதற்கு பயன்படுத்த ஆரம்பிக்க, அதுவே எல்லா நாடு களுக்கும் பரவியது. பிறக்கும்போது ஆணாக இருந்தாலும் பெண்மைக்குரிய குணங்களைக் கொண்ட அரவாணிகள், அந்தக் காலத்திலேயே தங்களது விதைப்பைகளை அகற்றி ஆண்மையைப் போக்கிக் கொண்டனர்.

இவர்களை அந்தரங்க வேலைக்கு வைத்துக் கொள் வதில் பல வசதிகள் இருந்தன. மன்னரைத் தொட்டுப் பணிவிடைகள் செய்தாலும் தப்பாகப் படாது. மாமனார், கணவர், மகன் என உறவுகள் இவர்களுக்குக் கிடையாது. அதனால் பதவி ஆசையில் மன்னருக்கு எதிராக சதி செய்ய மாட்டார்கள். அப்படியே தப்பு செய்தாலும், இவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தலையை வெட்டினால்கூட கேட்க ஆளில்லை... சமுதாயத்தில் மிகவும் கீழான நிலையில் இருப்பவர்கள்தானே!

மன்னர்களோடு பெரும்பாலான நேரத்தைக் கழிப்ப வர்கள் என்பதால், இவர்களது பேச்சை மன்னர்கள் தட்டு வதில்லை. "மன்னரின் காது" என்று இவர்களைத்தான் சொல்வார்கள். முதல்மந்திரியேகூட மன்னரிடம் அவசர மாகப் பேச வேண்டும் என்றால் இவர்களின் அனுமதி தேவை. இப்படி இருந்த அரவாணிகள் பல நாடுகளில் அமைச்சர் பதவி வரை கூட போனார்கள்.

மாமன்னர் அலெக்சாண்டரின் அந்தரங்க ஆலோச கராக இருந்த பாகோஸ், ஓர் அரவாணி. போரில் வென்ற பகுதிகளைக் குழப்பமின்றி ஆட்சிபுரிய இவரது ஆலோ சனைகளைத்தான் கேட்பார் அலெக்சாண்டர்.

வீரத்திலும் அவர்கள் குறைந்தவர்கள் இல்லை. ஜூலியஸ் சீசரைத் தோற்கடித்து, அவரது மேலங்கியை உருவிக்கொண்டு விரட்டிய புகழ்பெற்ற தளபதி கனிமீட்ஸ், ஓர் அரவாணி. சீசரைவிட சிறந்த வீரராக அவர் கருதப்பட்டார்.

இந்தியாவில் அரவாணிகளுக்கு நெடிய வரலாறு உண்டு. பழங்கால இந்திய நூல் களில் இவர்களைப் பற்றி பலவிதமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இந்திரனின் தேவசபையில் இருந்த பிரதானிகள் பற்றிய வர்ணனையில் "கிம்புருஷர்கள்" என்ற ரகம் பற்றி சொல்லப்படுகிறது. இவர்கள் நாட்டியம் ஆடுவதில் தேர்ச்சிப் பெற்றவர்களாக இருந்தனர். கிம்புருஷர் என்றால், ஆணாக இல்லாதவர் என்று அர்த்தம். இது அரவாணிகளையே குறிக்கும் என்கிறார்கள்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:45 am

வியாசர் எழுதிய மகாபாரதத்தில் காலப்போக்கில் இடைச்செருகலாக நிறை கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படி வரும் கதைகளில் அரவாணி களைப் பற்றி செய்திகள் உண்டு. திரௌபதிக்கு ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் சிகண்டி. பெண்ணாக இருந்தபோதும், ஆண் மாதிரி நினைத்து சிகண்டியை வளர்த்தனர் பெற்றோர். இளவரசன் போல உடை அணிவித்து, போர்ப் பயிற்சியும் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஆணாகவே வளர்க்கப்பட்ட சிகண்டிக்கு கடைசியில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். உண்மை வெளிப்பட்டு விடும் என பயந்து முதலிரவு சமயத்தில் சிகண்டி ஓடிவிட, யாரோ ஒரு கந்தர்வன் தனது ஆண் தன்மையை சிகண்டிக்குக் கொடுத்ததாக ஒரு கதையில் இருக்கிறது. பகவான் கிருஷ்ணர்தான் சிகண்டி மீது பரிதாபப்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய வைத்து ஆணாக மாற்றியதாகக் கதையில் சொல்லப்படுகிறது. கதை உண்மையோ பொய்யோ... அரவாணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் பழக்கம் அப்போதே இருந்தது என்பதை இதில் உணர முடிகிறது.

இதே மகாபாரதத்தை வைத்து இன்னொரு கதையும் இருக்கிறது. குருஷேத்திரப் போர் ஆரம்பிக்க வேண்டிய சமயம்... பஞ்ச பாண்ட வர்களில் சகாதேவன், ஜோதிடக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவன், ""முப்பத்தி இரண்டு லட்சணங்களும் பொருந்திய ஒரு ஆண் மகனை களப்பலி கொடுத்து விட்டு, போரை ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்"" என்று சொல்கிறான்.

பாண்டவர் தரப்பில் பார்த்தால், மூன்றே பேர்தான் இப்படி சர்வ லட்சணங்கள் பொருந்திய ஆண்களாக இருந்தனர். ஒருத்தர் கிருஷ்ணர்... போருக்கு வியூகங்களை வகுத்துத் தரும் பகவானை பலியிட முடியாது. இன்னொருத்தர் அர்ஜுனன்... பாண்டவர் படைக்குத் தளபதியே அவன்தான். அவனை பலியிட்டுவிட்டுப் போர் நடத்த முடியாது. இவர்கள் இல்லாமல் மூன்றாவது நபர் அரவாண். அர்ஜுனனுக்கும், நாககன்னிக்கும் பிறந்த மகன். அவனிடம் பாண்டவர்கள் இதுபற்றி சொன்னபோது, தன் உயிரைத் தியாகம் செய்ய ஒப்புக் கொண்டான்.

ஆனால், அவன் அடிமனதில் ஓர் ஆசை இருந்தது. ""இன்னமும் எனக்குத் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்து, தாம்பத்ய வாழ்க்கையை ஒரு நாளாவது அனுபவித்து விட்டு, பிறகு பலியாகிறேன்"" என்று தன் ஆசையை அரவாண் சொல்ல, அவசரமாக அவ னுக்கு பெண் பார்த்தனர். ஒரே நாளில் சாகப் போகிறவனை மணந்துகொள்ள யாரும் தயாராக இல்லை. கடைசியில் பகவான் கிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து, பெண்ணாக மாறி அவனை மணந்தார். அவர்கள் ஒருநாள் தாம்பத்ய வாழ்க்கை நடத்தினர். மறுநாள் அரவாண் பலி கொடுக்கப்பட, சம்பிரதாயப்படி கிருஷ்ணர் விதவைக் கோலம் பூண்டு, அரவாணுக்காக அழுதார். வியா சர் எழுதிய மகாபாரதத்தில் இந்தக் கதை இல்லை. ஆனால், பல்வேறு இடங்களில் புழக்கத்தில் இருக்கும் வேறு பாரதங்களில் இதுவும் ஒரு இடைச்செருகலாக சேர்ந்து விட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கூவாகம் கிராமம் அரவாணிகளின் புனிதத்தலம். குருஷேத்திரப் போரில் அரவாண் பலியிடப்பட்டதாகக் கருதப்படும் சித்ரா பௌர்ணமி நாளில் இங்கு திருவிழா நடக்கும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் அரவாணிகள், அந்த இரவில் அரவாணுக்கு மனைவி ஆகிறார்கள். பகவான் கிருஷ்ணர் எடுத்த மோகினி அவதாரமாகவே தங்களை அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். அரவாணின் சார்பில் கோயில் பூசாரி அவர்களுக்குத் தாலி கட்டுகிறார். மறு நாள் எல்லோரும் தங்கள் நெற்றிப் பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து, வெள்ளைப் புடவை உடுத்தி விதவைக் கோலம் கொள்கிறார்கள்.

அரவாணிகளைப் பொறுத்தவரை, சாதார ணமான குடும்பங்களில் மற்றவர்கள் மாதிரியேதான் பிறக்கிறார்கள். வளர வளர, அவர்களுக்குள் மாற்றம் நிகழ்கிறது. தங்கள் குழந்தைக்கு உயிரைக் கொல்லும் பயங்கர நோய் இருந்தால்கூட பாசம் காட்டும் குடும்பம், இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏற்பதில்லை. கேலிப் பேச்சுகளுக்குப் பயந்து அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் என எல்லோரும் சித்ரவதை செய்ய, அதைத் தாங்க முடியாமல் ஊரைவிட்டு ஓடுகிறார்கள் அரவாணிகள். பிச்சை எடுப்பதும், பாலியல் தொழிலும்தான் அவர்களது கடைசிப் புகலிடமாகிறது.

அவ்வளவாக தேர்ச்சி பெறாத சாதாரண டாக்டர்களிடம் அறுவை சிகிச்சை செய்து தங்கள் ஆணுறுப்பை அகற்றிக்கொள்ளும் அரவாணி களில் பலர், வேறொரு ஆணை திருமணம் செய்து கொள்வதும் உண்டு.

சட்டம் இவர்கள் விஷயத்தில் இன்னமும் குழப்பமாகவே இருக்கிறது. தேர்தல் கமிஷனே அனுமதித்தும் பல மாநிலங்களில் இவர்களுக்கு ஓட்டு ரிமை இல்லை. ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் என எல்லாவற்றிலும் ஆண், பெண் என இருபாலினங்கள் மட்டுமே இருப்பதுதான் பிரச்னை. மூன்றாவது வகையை மனதளவில்கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லாத நிலைதான்!



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 23, 2009 9:45 am

ஊனமுற்றவர்கள் மீது கருணை காட்டுவது போல அரவாணிகளையும் சமூகம் நடத்த வேண்டும். அறிவியல் ரீதியாகப் பார்த்தால் அவர்கள் அப்படித்தான்... பாலியல் ஊனமுற்றவர்கள்!

மனித சமுதாயம் இரண்டுவிதமான தோற்றங் களைத்தான் இயல்பாகப் பார்க்கப் பழகி இருக்கிறது. ஒன்று ஆண்... இன்னொன்று பெண்! இந்த இரண்டு மாதிரியாகவும் இல்லாமல் ஆணாகப் பிறந்து, பெண்ணாக வாழ முயலும் (இதேபோல பெண்ணாகப் பிறந்து ஆணாக வாழ முயலும்) குழப்பமான அடையாளங்களைக் கொண்டவர்கள், மூன்றாவதுவிதமான தோற்றம் கொண்டவர்கள். இவர்களை அறிவியல்பூர்வமாக "ட்ரான்ஸ் ஜெண்டர்" (Transgender) என்கிறார்கள். இதற்குத் தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை. இந்த ட்ரான்ஸ் ஜெண்டர் என்பதை நான்கு ரகங்களாகப் பிரிக்கிறார்கள். இதற்கும் தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை. "அரவாணி"கள் என்று சமூகத்தில் அழைக்கப்படுபவர்கள், இந்த நான்கு ரகத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதுகூட அறிவியல்ரீதியில் எந்த அளவுக்குச் சரி என்று சொல்ல முடியாது. காரணம்... அரவாணி என்பதற்கு சரியான பொருள் என்ன என்பது இங்கே தெளிவுபடுத்தப்படவில்லை. அதற்கான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப்பட்டதாகவும் தெரியவில்லை.

சரி, நாம் அறிவியல் அடிப்படையில் மேலை நாட்டினர் பிரித்து வைத்திருக்கும் நான்கு ரகத்தினரையும் வரிசையாகப் பார்ப்போம்.

முதல் ரகத்தினர், "டிரான்வெஸ்ட்" என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் செயல்பாடுகள் "டிரான்ஸ்வெஸ்டிஸம்" எனப்படும். இவர்களுக்கு உடைகளை மாற்றிப் போட்டுக் கொண்டால்தான் செக்ஸ் உணர்வு எழும். மனைவியின் புடவையைக் கட்டினால்தான் "மூட்" வரும். செக்ஸுக்கு முன்னதாகக் கட் டாயம் இப்படி அவர் உடை மாற்றிக் கொள்வார். அதன்பிறகே பரவசப்பட ஆரம்பிப்பார். இதுதவிர வேறெந்த குறையும் இருக்காது. இந்த உடை சிக்கல் தவிர மற்றபடி, "நான் இயல்பான ஆண்" என்கிற உணர்வு இவர்களுக்கு இருக்கும். பெண்களிடம்தான் செக்ஸ் உணர்வு கொள்வார்கள். இதே குறைபாடு கொண்ட பெண்களுக்கு அப்படியே உல்டாவாக ஆண்களின் உடைமீது ஆசை வரும். அதுமட்டுமல்ல, செயல்களிலும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்.

இரண்டாவது ரகத்தினர் "டிரான்ஸ் செக்ஸுவல்கள்". இவர்களது உடலும், உணர்வும் வேறுவேறாக இருக்கும். உடல்ரீதியாக இவர்கள் ஆணாக இருப்பார்கள். அதற்கான அடையாளங்களாக மீசை, தாடி, ஆணுறுப்பு எல்லாம் இருக்கும். ஆனால், மனோரீதியாகத் தங்களை பெண்ணாக உணர்வார்கள். "நான் பிறக்கும்போதே ஒரு பெண்தான்! ஆனால், கடவுள் ஏதோ ஞாபகத்தில் தப்பு செய்து விட்டார். என்னைக் கொண்டுவந்து இந்த ஆம்பளை உடம்பில் போட்டுவிட்டார்" என நினைப்பார்கள். தன்னை அமுக்கிக் கொண்டிருக்கும் இந்த ஆண் உடம்பிலிருந்து விடுபட முயற்சிப்பார்கள். ஆணுறுப்பின் மீது வெறுப்பு வரும். பெற்றோர், சமூகம் என எல்லோரும் ஆணாகப் பார்த்தாலும் "நான் பெண்தான்" என்ற உணர்வு இவர்களுக்கு ஆழமாக இருக்கும். இவர்களுக்கு சக ஆண்களைப் பார்த்தால்தான் செக்ஸ் உணர்வு வரும். பெண்களுடன் சகோதர பாவத்தில் பழகுவார்கள். இதன் காரணமாக ஆணுறுப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டு பெண்ணாக முயற்சிப்பார்கள். இதேபோல பெண்ணாகப் பிறந்தவர்கள், ஆணாகத் துடிப்பார்கள். மார்பகங்களை அகற்றிவிட நினைப்பார்கள். மிகுந்த சிரமப்பட்டு ஆண் குறியையும் உருவாக்கிக் கொள்வார்கள். இந்த வகையினரில்... ஆணாகப் பிறந்து, பெண்ணாகத் துடிப்பவர்கள்தான் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆனால், இப்படி அறுவை சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் இவர்கள் முழுமையான பெண்ணாகவோ... ஆணாகவோ ஆக முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை.
மூன்றாவது ரகத்தினர், "இன்டர்செக்ஸ்" (நம்மூரில் "அரவாணிகள் என்று அழைக்கப்படுபவர்களை இந்த ரகத்தினர் என்று சொல்லலாம். ஆனால், அறுதியிட்டுக் கூற முடியாது. அதற்கான ஆராய்ச்சிகள் எதுவும் இங்கே நடக்கவில்லை). பிறப்புக் கோளாறு காரணமாக ஆண் அல்லது பெண் ஜனன உறுப்புகள் பரிபூரணமாக வளர்ச்சி அடைந்திருக்காது. இந்த ரகத்தினரில் ஆண்களாக நினைக்கப்பட்டவர்களுக்கு, ஆண் குறி இருக்கும். ஆனால், அது முழுமையாக இருக்காது. கூடவே பெண் குறி போன்ற அமைப்பும் இருக்கும். முக்கியமாக விதை இருக்காது.

பெண்ணாக நினைக்கப்பட்டவர்களுக்கு... பெண் குறி முழுமையாக இருக்காது. பக்கத்தில் ஆண் குறி போன்ற முழுமை பெறாத அமைப்பு இருக்கும். முக்கியமாகக் கருப்பை இருக்காது.

இந்த ரகத்தினர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாகவே... அல்லது பெண்ணாகவோ மாறிவிட்டதாக சொல்வார்கள். ஆனால், அதனால் எந்த பயனும் இல்லை. செக்ஸ் உணர்வு என்பது அதன் மூலம் பரிபூரணமாகக் கிடைக்காது. கர்ப்பப் பை என்பது இல்லாததால் குழந்தையும் பெற்றுக்கொள்ள முடியாது. விதை இல்லாததால் தந்தையாகவும் முடியாது.

நான்காவது ரகத்தினர் "யூனக்" என்று அழைக்கப் படுவார்கள் (கடந்த இதழில் அரவாணிகள்தான் "யூனக்" என்றும் அதில் நான்கு ரகங்கள் உண்டு என்றும் தவறான தகவல் இடம் பெற்றுவிட்டது... ஸாரி). ஆண்கள் மட்டுமே இந்த ரகத்தில் உண்டு. விதை மற்றும் ஆண்குறியை வெட்டி எடுத்துவிடுவார்கள். இவர்கள் முழுமையான ஆண்கள்தான் என்றாலும் சூழல் காரணமாகக் குறியை வெட்டிக்கொள்கிறார்கள். இதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று... அந்தக் காலத்தில் அந்தப்புர பாதுகாப்புக்காக மன்னர்களால் இப்படி விதை மற்றும் ஆண் குறி நீக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டார்கள். இரண் டாவது காரணம், ஹோமோசெக்ஸ். இது சமுதாயம் ஏற்றுக்கொள்ளாத விஷயம் மட்டுமில்லை... சட்ட விரோதமும்கூட. மாட்டிக் கொண்டால் தண்டனை கிடைக்கும். இதற்கு பயந்து, விதை மற்றும் ஆண் குறியை வெட்டிக்கொள்வார்கள். மூன்றாவது காரணம்... குரல் வளம். பிறந்ததிலிருந்து இருக்கும் மென்மையான குரல், பருவ வயதை எட்டும்போதுதான் மாற்றம் அடையும். அதாவது ஆணாக இருந்தால் கரடு முரடாக மாறும்.



உயிர் - டாக்டர் நாராயண ரெட்டி - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக