புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
3 Posts - 4%
prajai
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
18 Posts - 2%
prajai
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
8 Posts - 1%
Rutu
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_m10திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளில் அந்தணன் யார்?-ஆங்கரை கிருஷ்ணன்


   
   
pasunthamilan
pasunthamilan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 17/07/2011

Postpasunthamilan Fri Sep 09, 2011 6:38 pm

திருக்குறளில் அந்தணன்/அந்தணர் என்ற சொல் மூன்று இடங்களில் வருகின்றது.

[You must be registered and logged in to see this link.]

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது. (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். (30-நீத்தார் பெருமை)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)

நாம் மேலே கண்ட குறட்பாக்களில் முதலாவது கடவுளையும் இரண்டாவ்து ஆசையை துறந்த முனிவர்களையும் வள்ளுவர் அழைகின்றார். எனவே நாம் நேரடி அந்தணர் என்பது அன்றி பிற பெயர்களாலும் அந்தணர் – வேள்வி தொடர்பான விஷயங்களிலும் வள்ளுவர் கூறியுள்ள குறட்பாக்களைப் பார்ப்போம். இறுதியில் மேலே உள்ள இரு குறட்பாக்களையும் காண்போம்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)



அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. ( 259 புலான்மறுத்தல்)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)



பாரத நாட்டின் புகுந்த அன்னியர்கள் பிரித்தாளும் சூட்சியில் பல ஊகக் கோட்பாடுகளைப் பரப்பினர், அந்த மூடநம்பிக்கை புரளிகளுக்கு ஆதாரம் என முறையற்ற வகையில் மேலும் புரளிகளும் திரிபான விளக்கங்களும் கொண்ட ஆய்வுகள் என அடுக்கடுக்கான புத்தகங்கள் பரவியது. உண்மையரிந்த புலவர்கள் தங்கள் சுயநலத்திற்காக இவற்றை தீவீரமாக கண்டிக்கவில்லை. அடிமைப் படுத்த அன்னியர்கள் மததினையும் சாதியையும் தூண்டலாட, வெகுஜன அறிஞர்களும் உண்மையைக் கூற தயங்கினர். முக்கியமான ஊகக் கோட்பாடுகள் ஆரியர்- திராவிடர் என்னும் அன்னியர்கள் படையெடுப்பு, குமரிக்கண்டம் என்பவை முழுமையாக விஞ்ஞானம் மறுத்துள்ளது.

மேலும் வள்ளுவரே குறளின் உள்ளேயே வேறு குறளில் தொடர்புடைய அதிகாரத்தில் பயன்படுத்தும் போது அதெ பொருள்பட்டு விளக்கம் கொண்டபடியாக இயற்றியும் உள்ளார்.



திருக்குறள் எழுதப்படும் காலத்தில் அந்தணர் என்ற சொல்-தமிழரின் பழமையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், இதன் பின் தொல்கப்பியம், திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்கணக்கு நூல்கள், இதன் பின்னரான இரட்டை காப்பியங்கள் சிலப்பதிகாரம் மனிமேகலையும், பின் திருமந்திரம் தொடங்கி பக்தி இலக்கியங்கள் என அறிஞர்கள் குறித்துள்ளனர். இலக்கியங்களில் பயன்பட்ட அதே பொருளில் தான் வள்ளுவரும் பயன்படுத்தியுள்ளார்.

நூறுக்கும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன, உதாரணத்திற்கு சில தரப்பட்டுள்ளது. உண்மைகளை அனுபவிப்போம்.

ஆசிரியர் நல்லுவந்தனார் பரிபாடல் 11ம் பாடலில் வையை என வைகை ஆற்றின் சிறப்பைக் கூறுகையில்

பரிபாடல்2:

கனைக்கும் அதிகுரல் கார் வானம் நீங்க,
பனிப் படு பைதல் விதலைப் பருவத்து, 75

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர், அவர்
தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90

தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று வேதமோதும் அந்தணர்கள் சிவபெருமானிற்கு திருவிழா செய்யத் தொடங்கினர். முப்புரி நூல் அணிந்த அந்தணர் பொன்கலத்தை ஏந்தி சென்றனர். அம்பா ஆடல் செய்யும் கன்னிப் பெண்கள்- முதிய அந்தணப் பெண்கள் வழிகாட்ட அதிகாலையில் நீராடினர்.
அதிகாலையில் நீராடிய இளம்பெண்கள், மார்கழியின் குளிர் வாட்ட, கரையில் வேதமந்திரங்கள் கூறி வளர்த்த வேள்வி அக்னியின் அருகில் சென்று தங்கள் ஈர ஆடையை காயச் செய்தனர். அந்தணர் வேத வேள்விகளால் மழை தொடர வைகை நீ பெருகுகிறாய்.
இவை மார்கழி மாதத்தின் பாவை நோன்பின் தொன்மையையும் திருவாதிரை பண்டிகை கொண்டாடுதலின் வழமையையும் மெய்பிக்கின்றது.

பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் வையை என்ற தலைப்பில்
தலைவன் கூற்று
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்

தணிவின்று, வையைப் புனல். 50

தலைவன் கூற்று

‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,

எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட

புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,

நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,

கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55

ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.

என ஆங்கு-
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்

‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்

பார்ப்பார் ஒழிந்தார், படிவு.

‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60

அந்தணர் தோயலர், ஆறு.

‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’

ஐயர், வாய்பூசுறார், ஆறு.

-பா¢பாடல்-திரட்டு 2:50-63
அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.

மேலும் சங்க காலத்தில் தமிழகத்தின் பக்திநிலை பற்றியும் உறுதி செய்கிறது.

மதுரைக் காஞ்சி

பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியுஞ்
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலமமர் வையத் தொருதா மாகி . . .470

உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்
பெரியோர் மேஎ யினிதி னுறையுங்
குன்றுகுயின் றன்ன அந்தணர் பள்ளியும்
வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்
பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉ மமயமும்
இன்றிவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து
வானமு நிலனுந் தாமுழு துணருஞ்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை . . .480

“தாதுண் தும்பி போது முரன்றாங்கு

ஓதல் அந்தணர் வேதம் பாட” – மதுரை காஞ்சி 655, 656

திருமுருகாற்றுப்படை

2. திருச்சீர் அலைவாய்

மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,

4. திரு ஏரகம்

அந்தணர்:
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . . .180

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று,

பெரும்பாணாற்றுப்படை

செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கு 499

பெருநாள ளமையத்துப் பிணையினிர் கழிமின்
செழுங்கன் றியாத்த சிறுதாட் பந்தர்ப்
பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்
மனையுறை கோழியடு ஞமலி துன்னாது
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும் . . . .300
மறைகாப் பாள ருறைபதிச் சேப்பிற்
பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ்

அந்தணர்கள் அவர்கள் வீடுகளில் ஓதும் மறையைக் கேட்டு கேட்டு அவர்கள் இல்லங்களில் வாழும் கிளிகளும் வேத ஒலிகளை எழுப்புகின்றனவாம்.

பதிற்றுப்பத்து

பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.

“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்

அறம் புரி அந்தணர்” – 24)

பாட்டு – 74

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது

வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்

அந்தணன், பார்ப்பான், நான்மறையாளன், முனிவன் என்று குறிப்பிடப்படுகின்றனர். வேதம் அறிந்தவர்கள். அதனைத் தினந்தோறும் ஓதுபவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

அந்தணர் – பார்ப்பான் அறுதொழிலார் என நேரடியாக குறளில் வள்ளுவர் பன்படுத்தியுள்ளார்.

நாம் மேலே சங்க இலக்கியத்தில் காட்டியதில் வேள்விகள் சிறப்பித்து கூறப்படுவதயும் காண்கிறோம்.

அனால் திருவள்ளுவரோ

குறள் 259: துறவறவியல் – புலான்மறுத்தல்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

நாமக்கல் கவிஞர் உரை மு.வ உரை:

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

நாம் இந்தக் குறளோடு இதன் முந்தைய அடுத்த குறள்களையும் காண்போம்.

குறள் 258:

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

மு.வ உரை:

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

குறள் 260:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

மு.வ உரை:

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர்- முனிவர்களை தான் வள்ளுவர் ஊணுண்வு மறுத்தலில் முக்கிய்ம் கொடுக்கிறார். ஆனாலும் அனவருக்கும் அவர் வற்புரித்தினார் என்று கொண்டாலும் ஒருவன் தெய்வமாக தொழப்படும் நிலைக்கு ஈடாகும் நிலைக்கு முன்னர் இறைவனிடம் அடையும்வழி வேள்விகள் செய்தல். ஒருவன் வேல்விகள் செய்து கொண்டு, இறைவனை அடைய முயன்று ஊன் உண்தல் தவிற்க வேள்விகளை சிறப்பித்து போற்றித் தான் வள்ளுவர் கூறுகிர்றார்.

வேள்விகள் பற்றி வள்ளுவர் கூறியுள்ளது

விருந்தோம்பல்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

விருந்தினரை உபசரித்தல் அதிதி யக்ஞம் எனப்படும் இது வேள்விக்கும் ஒப்பாகும், இவ்வேள்வி செய்வோர் வீட்டில் ல்க்ஷ்மி தேவீ வாசம் செய்வாள் என்கிறார்.

குறள் 413: கேள்வி

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

கேள்வி என சத்சங்கங்கள் செய்வது தேவர்கள் உண்ணும் அவி உணவிற்கு ஈடானது

வள்ளுவர் வேள்விகளை மிகவும் உயர்வாகவே கருதியதைக் கண்டோம்.

வேத முறைப்படி மூன்று அக்னிகள் வளர்க்கப்படுகின்றன. அவை ஆகவனீயம், காருகபத்தியம், தட்சினாக்கினி என்பவை. இவை ரிக் வேதத்திலேயே கூறப்பட்டுள்ளன. முத்தீ பண்டைத் தமிழர் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. சேரமான் மாவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும் சோழன் பெருநற்கிள்ளியும் ஒற்றுமையாக இருப்பதை காண்கிறார் புறநானூற்று ஔவையார். பாடுகிறார்:

பார்ப்பு என்றால் பறவைக் குஞ்சு. பிரக்கும் போது முட்டை உடலில் வந்தது பின் முட்டை உடைய புது பிறப்பு எடுப்பது போலே பூனல் எனப்படும் உபநயந்துக்குப்பின் வேதம் படிக்க ஆசிரியரிடம் செல்கிறான், எனவே பார்ப்பான் என்றால் இருபிறப்பாளன். தாயின் வயிற்றினின்று பிறந்து வருவது ஒரு பிறவி. தன்னுடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாகத் திருத்தி அமைக்க ஆரம்பிக்கின்ற பொழுது மனிதன் ஆன்மிகத் துறையில் இன்னொரு பிறப்பெடுத்தவன் ஆகின்றான். ஆகையினால் அவன் துவிஜன் – இருபிறப்பாளன் என்று சொல்லப் படுகிறான்.

அந்தணர்- அந்தம் + அணர். உலகின் உறுதிப் பொருளான வேதங்களினை கொண்டு வழி காட்டுபவர் எனப் பொருள் படும்.

வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.

இறைவனை அந்தணர் என்றும் பார்ப்பான் என்றும் அழைப்பது சங்க இலக்கிய நடைமுறையே.

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய, – 25

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு - 30
(Paaaripādal, Chapter 5)

மண்மிசை—அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும் (Paripādal 8:1-5)

தொல்காப்பியம்-செய்யுளியல்480

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்1
மறைமொழி தானே 2மந்திரம் என்ப.

என் – னின். மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு.

திருமுருகாற்றுப்படை2. திருச்சீர் அலைவாய்

மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,

உலகமே இருளில் முழ்கி கிடந்த போது ஆன்ம ஒளியில் திளைத்தது நம் நாடு.ரிஷிகள் சிந்தனையில் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.எப்போது இவை தோன்றியது என யாருக்கும் தெரியாது.”புவி ஈர்ப்பு விதிகள் நமக்கு முன்னும், நமக்கு பின்னும் எப்போதும் இருக்கும்.அது போல்தான் ஆன்மிக உலகின் விதிகளும் மாறாமல் இருக்கும்”அவ்வாறு ரிஷிகள் வெளிப் படுத்திய அந்த உண்மைகள், பின்னாளில் வியாசரால் நான்காகப் தொகுக்கப் பட்டன.ரிக்,யாகூர்,சாம மற்றும் அதர்வணம்.ஒவ்வொரு வேதமும் முக்கிய மூன்று பிரிவாக ,சம்ஹிதை(பல்வேறு தேவர்களின் பிரார்த்தனைகள்),பிராம்மணம்(யாக விவரங்கள்)ஆரண்யகம்(அறுதி உண்மை பற்றிய ஆராய்ச்சிகள்) பிரிக்கப் பட்டன.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

சங்க காலத்தில் பலவகைகளிலும் மேன்மையுற்றிருந்த தமிழகம் 3ம் நூற்றாண்டு முதல் 6. வரை களப்பிரர் காலத்தில் பல இடர்பாடுகளுக்கு உள்ளானது. அக்காலத்தில் சமணம் தழைத்தோங்க ஆரம்பித்தது. காதல், களவு, கற்பு, வீரம் போன்றவற்றைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மறைந்தன. நீதிக்கருத்துக்களை எடுத்துக்கூறும் நூல்கள் இயற்றப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்டவையே பதினென் கீழ்கணக்கு நூல்களாகும்

திருக்குறள் இக்காலத்தில் இயற்றப்பட்டதே- எனவே திருவள்ளுவர் தன் நூலை ஒரு பொது நூல் தோற்றம் தரும் வகையில் கடவுள் வாழ்த்தின் பத்து குறட்பாக்களில் ஒரு பெயர்சொல் கூட பயன்படுத்தவில்லை. இதை வெவெவேறு மதத்தினரும் தன் வகையில் பொருத்த முயற்சித்தல் இயல்பே. ஆனால் வள்ளுவர் மனதை அறிய நாம் மேலே கண்ட முறையில் அவர் சங்க கால நடைமுறையில் தான் எழுதியுள்ளார் என்பதை தெளிவாக உணறலாம்

சாங்கிய தரிசனத்தி ருந்து எழுந்த ஒரு தத்துவம் பின் பௌத்த சமண மதங்களாக மாறியது. இவ்விரு மதங்களும் பல வைதிக மதக் கோட்பாடுகளை சற்றே மாற்றி பயன்படுத்தியது மட்டுமின்றி இதிகாசங்கள் இரண்டையும் திரித்து தங்கள் மத நம்பிக்கைகேற்ப பிற்காலத்தில் புனைந்தனர். என்வே வள்ளுவர் காலத்திற்கு முன்பே இருந்த ஆதாரங்கள் வள்ளுவர் வைதீக நடைமுறையையெ கூறினார் எனத் தெளிவாக உண்மைகளை தெளிவாக்கும்.

Jainistm is a kind of religion based upon the acceptance of the Samkhya system, but venerating a limited group of noble selves, who have achieved perfection and bliss. ( p-10 Coparative Religion ; A.C.Bouquet)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)

நாமக்கல் கவிஞர் உரை

அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)



அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. ( 259 புலான்மறுத்தல்)



ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)

Translation:

Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans’ sacred lore will all forgotten lie.

Explanation:

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

மு.வ உரை:

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

குறள் 1066:

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.

மு.வ உரை:

பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

“பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ‘பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னையொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்!
நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம்’ என்று அறநெறியோடு அறிவுறுத்திப் பிறகே போர் செய்யத் தொடங்கும் வலிமையும் மறமும் கொண்டவன். கொல்லுகின்ற யானை மீது எடுக்கப்பட்ட கொடிகள் ஆகாயத்தை மறைக்கும்; அத்தகைய சிறப்புடையவன் எம்முடைய வேந்தன். புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்……

என்ற அடிகள் அக்காலத் தமிழர் போர் நெறி காட்டுவன.

இப்புறநானுறு பாடல்படியான மரபில் தானே வள்ளுவர் இகுறளும் கூறுகின்றது.

பசுக்கள் தரும் பால்- அதன் உப பொருட்கள் தயிர், வெண்ணெய் நெய்- இவை அனைத்துமே கர்ப்பிணி பெண்கட்கும், சிறு குழந்தைகட்கும் அவசியம். வேள்விகளிலும் அவசியம். நாட்டின் பலத்திற்கு வருங்காலத் தலைமுறையும் கடவுள் ஆசியும் அவசியம் என்பதையே கூறியுள்ளார்.

திருவள்ளுவர் சங்ககாலத் தமிழர் மரபுப்படிதான் திருக்குறளைத் தந்துள்ளார். அதில் அந்தணர் என்பது தொழில் வழியில் அந்தணர்களைத் தான்.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 09, 2011 6:42 pm

யையாடி... எவ்வளவு பெரிய பதிவு... அதிர்ச்சி



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
pasunthamilan
pasunthamilan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 17/07/2011

Postpasunthamilan Fri Sep 09, 2011 6:46 pm

பதிலுக்கு நன்றி, இரண்டு நூற்றாண்டுகளாக பரவியுள்ளதை மூல வரிகளோடு நண்பர் கொடுத்துள்ளதால் பெரிதாக உள்ளது.

நிதானமாக படித்து விமர்சிக்கவும்.

redindian
redindian
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009

Postredindian Fri Sep 09, 2011 7:13 pm

திருக்குறளில் அந்தணர் யார் என்பது இருக்கட்டும், எனக்கு அந்தணர் என்றால் யார் என்பதே தெரியவில்லை. தயவு செய்து கூறுங்கள்.



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Sep 09, 2011 9:11 pm

மிக சிறந்த கட்டூரை நண்பரே இந்து மாதம் வருணாசிரமத்தை ஊக்குவிக்கிறது என்பவர்களுக்கு இந்த கட்டுரையை சுட்டிக்காட்டலாம் அவ்வாறு இல்லையென

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 09, 2011 9:56 pm

பாதி படிச்சிட்டேன்..........மீதி பாதியை.......நாளை படித்து பதில் கூறுகிறேன்.....

அந்தணர் என்பதை ஆராய்ந்து அளித்த நண்பருக்கு நன்றிகள்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 18, 2011 7:42 pm

நல்ல ஆய்வுக்கட்டுரை எனத் தெரிகிறது. நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக