புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_m10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10 
30 Posts - 50%
heezulia
இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_m10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_m10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_m10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10 
72 Posts - 57%
heezulia
இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_m10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_m10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_m10இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்!


   
   
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 14, 2011 12:08 pm

இன்று எனக்கு வந்த ஒரு மின் அஞ்சலை உங்களுடன் பகிர விரும்புகிறேன் !!!

அண்மைக்காலத்தில் நம்மை மிகவும் பாதித்த ஒரு கொடூரம் - சிறுவன் தில்ஷனை ஒரு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சுட்டுக் கொன்றதாகத் தானிருக்கும் என்று நம்புகிறேன். ஒரு பதிமூன்று வயதுச் சிறுவனின் மண்டையில் ஒருபக்கமாய் நுழைந்த குண்டு மறுபக்கமாய் வெளிவந்து சுவற்றிலும் ஒரு தடயச்சின்னம் ஏற்படுத்தியிருப்பதாகப் படித்தபோது, இயல்பாகவே ஆத்திரம் பொத்துக் கொண்டுவந்தது. முழுமையாகத் துப்புத் துலங்கி, சுட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டபிறகும், புதிய புதிய கேள்விகள் எழும்புகின்றன. மிக முக்கியமாக, ஒரு ராணுவ ஆயுதக் கிடங்கில் பணியாற்றிய அதிகாரி, ராணுவத்துக்குத் தெரியாமல் ஒரு அதிநவீன துப்பாக்கியை, ராணுவக் குடியிருப்பிலேயே வைத்திருக்க முடிகிறதே! இவர்களின் லட்சணம் இவ்வளவுதானா?

’என் மகனைச் சுட்டவனை அதே மாதிரி சுட வேண்டும்,’ என்று தில்ஷனின் தாயார் சொன்னதை வாசித்தபோது, திடுக்கிடவில்லை. பெற்ற வயிறு! அந்தத் தீ சுடத்தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கைது செய்யப்பட்ட அந்த ஓய்வுபெற்ற அதிகாரிக்கு மிகக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். பதிமூன்று வயது சாகிற வயதில்லை; குற்றவாளி செய்தது எவ்வித பச்சாதாபத்துக்கும் உகந்ததுமில்லை.

அடுத்து....

இன்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கோவையில் ஒருவரை பட்டப்பகலில், போக்குவரத்து நிறுத்தத்தில் நான்கு பேர் அடித்துக் கொன்றதையும், அதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி நின்றதையும் திருப்பித் திருப்பிக் காட்டினார்கள். காவல்துறையின் கண்காணிப்புக் கேமிராவில் பதிவு செய்யப்பட்ட காட்சியே, காவல்துறைக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறது. கொன்றவர்களின் குரூரத்தைப் பார்க்கையில் முதுகுத்தண்டு சில்லிடுகிறது. அதை விடவும், பச்சை விளக்குக்காகக் காத்திருப்பவர்கள், ஏதோ படப்பிடிப்பைப் பார்ப்பவர்கள் போல, செயலற்றுப்போய் வேடிக்கை பார்த்தது அதிர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. சம்பந்தப்பட்ட நான்கு கொலையாளிகளும், கைது செய்யப்பட்டிருப்பது சற்றே ஆறுதலாய் இருக்கிறது.

ஆனால், இத்துடன் தொடர்புடைய இரண்டு செய்திகளை வாசித்தபோது சற்றே ஆயாசமாக இருந்தது. முதலாவது, கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தார் பிணத்தை வாங்க மறுத்து, மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தியது. இரண்டாவது, சந்தோஷ்குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ஐந்து லட்சம் நஷ்ட ஈடும் தர வேண்டும் என்று அவரது உறவினர்கள் போராட்டம் செய்தது.

சந்தோஷ்குமாருக்கு வயது 29 தான். இப்படி நடுத்தெருவில் நான்குபேர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது கொடுமைதான்; அவரது குடும்பத்துக்குப் பெரும் இழப்புதான். அந்த நான்கு பேருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாதுதான். ஆனால், நஷ்ட ஈடு? அரசு வேலை...??

தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஆட்சி மலர்ந்தபிறகு, இது போல எத்தனை கொலைகள் நடந்திருக்கின்றன? ஆனால், இந்தக் கொலையைப் பற்றி ஊடகங்கள் பெரிதுபடுத்துவதற்கு முக்கியமான காரணம், இது அவர்களுக்கு மிகவும் வசதியாக, காணொளியாக மீண்டும் மீண்டும் காண்பிக்கத்தக்கதாகக் கிடைத்திருப்பதுதான். பீஹாரில் நடுத்தெருவில் ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டபோது, இவர்கள் அவளைக் காப்பாற்றாமல் படமெடுத்துச் செய்தியாகப் போட்டதை மறக்க முடியுமா?

இந்த நாசமாய்ப் போன டாஸ்மாக் கடைகள் சந்துபொந்தெல்லாம் வந்துவிட்ட பிறகு, குடிபோதையில் குற்றம் புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை! அந்த வகையில் பார்த்தால், கொலையுண்ட சந்தோஷ் ஒருவிதத்தில் குற்றவாளியே!

பொதுமக்கள் நினைத்திருந்தால் அவர் இறந்தததை தடுத்திருக்கலாம் என்பது உண்மைதான்! பொதுமக்கள் நினைத்தால், அதை மட்டும்தானா தடுத்திருக்க முடியும்?

சந்தோஷின் படுகொலை, டாஸ்மாக் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிற சீரழிவின் ஒரு அப்பட்டமான அளவுகோல். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தான் தெரிவிக்க முடியுமே தவிர, அரசு வேலை, நஷ்ட ஈடு என்று மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விடக் கூடாது.

ஒரு சாலைவிபத்தில் கூட, மதுபோதையில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுவதில்லை என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். குடித்துச் செத்தால் அரசு வேலை கிடைக்கும் என்ற நிலைக்கு தமிழகத்தைக் கொண்டு செல்ல யாரும் அனுமதிக்கக் கூடாது.

சந்தோஷின் குடும்பத்தினர் அனுதாபத்துக்குரியவர்கள்; அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட வேண்டியவை.

--- உங்கள் கருத்துக்களையும் பதியலாமே...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 14, 2011 1:29 pm

அருமை நண்பா



realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jul 14, 2011 1:56 pm

ரூ.5 லட்சம் ,அரசு வேலை போதாது...
ரயில்வே இலவசபாஸ்(குடும்பத்தினர் அனைவருக்கும்), இலவச வீட்டுமனை மற்றும் மாதம் தோறும் ஊக்கதொகை ஆகியவற்றை வழங்க முன்மொழிகிறேன்..

என்ன வழிமொழிவீர்களா?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 14, 2011 1:58 pm

நியாயமான பதிவு

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 14, 2011 11:32 pm

மேலும் கருத்துக்களை கூறுங்கள் நண்பர்களே !!

இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Dove02juneum7இரண்டு கொலைகள்; இரண்டு நிலைகள்! Lp7310452si6



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக