புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 9:52 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 2:17 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 1:51 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 1:49 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 1:48 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 1:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 12:32 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 11:55 am
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 11:54 am
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 11:52 am
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 11:50 am
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 11:43 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:40 am
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 9:59 am
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 9:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 9:04 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 9:03 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:15 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 4:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:52 pm
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 5:56 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 1:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 8:29 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 8:56 pm
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:04 am
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:56 am
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:50 am
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:48 am
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:46 am
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:44 am
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:38 am
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:35 am
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:34 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 5:56 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 3:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 10:59 am
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 10:55 am
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:39 am
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:32 am
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:29 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:20 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 7:54 am
by mohamed nizamudeen Today at 9:52 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 2:17 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 1:51 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 1:49 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 1:48 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 1:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 12:32 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 11:55 am
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 11:54 am
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 11:52 am
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 11:50 am
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 11:43 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:40 am
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 10:42 am
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 9:59 am
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 9:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 9:04 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 9:03 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:15 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 4:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:52 pm
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 5:56 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 1:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 8:29 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 8:56 pm
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:04 am
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:56 am
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:50 am
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:48 am
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:46 am
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:44 am
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:38 am
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:35 am
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:34 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 5:56 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 3:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 10:59 am
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 10:55 am
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:39 am
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:32 am
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:29 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:20 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:42 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 7:54 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
Page 3 of 10 •
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
Nalla Tamil Arivom - purananuru
தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.
தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.
பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே
பொருளுரை:
பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க
Nalla Tamil Arivom - purananuru
தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.
தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.
பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே
பொருளுரை:
பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பதவியின் பெருமை
பதவி வந்தால் அனைவரும் ஒரே மாதிரி கையாளுவதில்லை. ஒரு சிலரிடம் சின்ன வேலை கொடுத்தாலும் அதை முடிக்க வெகு சிரமப்படுவர். வேறு சிலரோ பெரிய வேலையையும் மிகச் சுலபமாக கையாளுகின்றனர். நாட்டை ஆளும் பிரதம மந்திரிக்கும் சாதாரண குடிமகனுக்கும் இருப்பது 24 மணி நேரம் தான். ஒருவர் நேரம் இல்லை என்கிறார். மற்றொருவர் சர்வசாதரானமாக அனைத்து வேலைகளையும் சுலபமாக செய்கிறார். இந்த பாடல் கூறுவதை கேளுங்கள்.
பாடல் 10 : அரச பாரம் (புறம் : 75)
பாடியவர்: சோழன் நலங்கிள்ளி
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடிவரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே !
மண்டு அமர்ப் பறிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெருகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே மையற்று,
விசும்பு உற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுக்கெழு திருவே"
பொருள் விளக்கம்
பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க, அதற்கு அடுத்து உள்ள இளையோர் பதவி ஏற்க, பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை. அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்தப் பதவிக்கே ஒரு மரியாதை வருகிறது.
ஆண்மை இல்லாத சிறியோன் கைகளில் கிடைத்தால் மக்களின் வரிப்பணத்தை உண்டு வாழும் வாழ்வாகவே அது முடியும். வீரமும் ஆண்மை அற்றவரிடம் அது போயிச் சேர்ந்தால், அது அவர்களுக்கு சுமையாகி விடும்.
போரில் எதிரிகளை தைரியமாக சந்திக்கும் ஆண்மைத் திறன் பெற்றவரிடம் அது போய்ச் சேரும் போது அது பொலிவு பெறுகிறது. முரசு கொண்டு நல்லாச்சி செய்யும் பெருநில மன்னருக்கு அது மிகவும் எளிதானது, குளத்தில் நீர் வற்ற காய்ந்து போன தாமரைக் கிழங்கு, மழை நீர் பெருகி குளத்தை நிறைக்கும் போது தக்கையாக மிதக்கும், அது போல் தக்கையாக அதை கையாளுவர்.
சரி பதவி வந்தால் மட்டும் போதுமா, நம்மை சுற்றி இருப்பவர்கள் நன்றாக இருந்தால் தான் நமக்கு கவலை இல்லாமல் இருக்கும், கவலை இல்லையென்றால் முடி கொட்டாது, முடி நரைக்காது. இப்படி பல ஆண்டுகள் நரைக்காமல் இருந்தவரிடம் அதன் ரகசியத்தை கேட்டால் என்ன சொல்வார்?, அடுத்த பாடலில் காண்போம்.
வளரும்...............
பதவி வந்தால் அனைவரும் ஒரே மாதிரி கையாளுவதில்லை. ஒரு சிலரிடம் சின்ன வேலை கொடுத்தாலும் அதை முடிக்க வெகு சிரமப்படுவர். வேறு சிலரோ பெரிய வேலையையும் மிகச் சுலபமாக கையாளுகின்றனர். நாட்டை ஆளும் பிரதம மந்திரிக்கும் சாதாரண குடிமகனுக்கும் இருப்பது 24 மணி நேரம் தான். ஒருவர் நேரம் இல்லை என்கிறார். மற்றொருவர் சர்வசாதரானமாக அனைத்து வேலைகளையும் சுலபமாக செய்கிறார். இந்த பாடல் கூறுவதை கேளுங்கள்.
பாடல் 10 : அரச பாரம் (புறம் : 75)
பாடியவர்: சோழன் நலங்கிள்ளி
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடிவரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே !
மண்டு அமர்ப் பறிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெருகுவன் ஆயின், தாழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே மையற்று,
விசும்பு உற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுக்கெழு திருவே"
பொருள் விளக்கம்
பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க, அதற்கு அடுத்து உள்ள இளையோர் பதவி ஏற்க, பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை. அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்தப் பதவிக்கே ஒரு மரியாதை வருகிறது.
ஆண்மை இல்லாத சிறியோன் கைகளில் கிடைத்தால் மக்களின் வரிப்பணத்தை உண்டு வாழும் வாழ்வாகவே அது முடியும். வீரமும் ஆண்மை அற்றவரிடம் அது போயிச் சேர்ந்தால், அது அவர்களுக்கு சுமையாகி விடும்.
போரில் எதிரிகளை தைரியமாக சந்திக்கும் ஆண்மைத் திறன் பெற்றவரிடம் அது போய்ச் சேரும் போது அது பொலிவு பெறுகிறது. முரசு கொண்டு நல்லாச்சி செய்யும் பெருநில மன்னருக்கு அது மிகவும் எளிதானது, குளத்தில் நீர் வற்ற காய்ந்து போன தாமரைக் கிழங்கு, மழை நீர் பெருகி குளத்தை நிறைக்கும் போது தக்கையாக மிதக்கும், அது போல் தக்கையாக அதை கையாளுவர்.
சரி பதவி வந்தால் மட்டும் போதுமா, நம்மை சுற்றி இருப்பவர்கள் நன்றாக இருந்தால் தான் நமக்கு கவலை இல்லாமல் இருக்கும், கவலை இல்லையென்றால் முடி கொட்டாது, முடி நரைக்காது. இப்படி பல ஆண்டுகள் நரைக்காமல் இருந்தவரிடம் அதன் ரகசியத்தை கேட்டால் என்ன சொல்வார்?, அடுத்த பாடலில் காண்போம்.
வளரும்...............
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சரவணன்1புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011
சதாசிவம் wrote:
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
எனது நினைவை விட்டு நீங்காத வரிகள். பாட பகுதியில் மனபாட பகுதி என்று ஒன்று உண்டு. இந்த பாடல் நாங்கள் படிக்கும் பொழுது அவ்வகையில் சேர்க்கப்பட்டு இருந்தது. மறுபடியும் படிக்க வாய்ப்பு குடுத்த சதாசிவம் மற்றும் ஈகரைக்கு எனது நன்றிகள் உரித்தாகுக!
அன்புடன்,
சரவணன்.
- சரவணன்1புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011
சதாசிவம் wrote:
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமீன்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படு உம் நெறியுமார் அதுவே
இத தான், சின்ன வயசுல - எங்கம்மா, அவங்க நடைமுறை வழக்குல - " உபகாரம் செய்ய முடியாயல நாளும் உபத்திரவம் செய்யகூடாது" நு சொல்லுவாங்க! ஒரு நல்ல பாடலை மறுபடியும் படிக்க வாய்ப்பு அளித்த சதாசிவத்துக்கும் ஈகரைக்கும் எனது நன்றிகள்!
அன்புடன்,
சரவணன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சரவணன் wrote:சதாசிவம் wrote:
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமீன்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படு உம் நெறியுமார் அதுவே
இத தான், சின்ன வயசுல - எங்கம்மா, அவங்க நடைமுறை வழக்குல - " உபகாரம் செய்ய முடியாயல நாளும் உபத்திரவம் செய்யகூடாது" நு சொல்லுவாங்க! ஒரு நல்ல பாடலை மறுபடியும் படிக்க வாய்ப்பு அளித்த சதாசிவத்துக்கும் ஈகரைக்கும் எனது நன்றிகள்!
நன்றி தோழரே
பல நல்ல விஷயங்களை நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம், ஆனால் விவரம் தெரியாத வயதில். வெறும் மதிப்பெண் நோக்கி தான் நாம் படிக்கும் படிப்பு இருக்கிறது. பல நல்ல விஷயங்கள் நம் முன்னோர் கூறி இருந்தாலும், அது நமக்கு சரியாக சேரவில்லை. இப்படி படித்த சிறந்த பாடல்களையும், பாடப் புத்தகங்களையும் தாண்டி தமிழில் உள்ள மிகச் சிறந்த பாடல்களையும் வெளிக் கொணருவது தான் இந்த தொடரின் நோக்கம்.
கருத்திட்டமைக்கு நன்றி
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கவலையில்லா வாழ்க்கை
இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் கவலை இல்லாத மனிதன் இல்லை என்றே சொல்லலாம். ஆசை அதிகம் ஆகும் போது கவலை அதிகம் ஆகுகிறது என்பது வாழ்வியல் உண்மை. இப்படி வாழும் நிலையில் கவலை நம்மால் மட்டுமே வந்து விடுவதில்லை. நம்மை சுற்றிவுள்ளவர்கள் தான் நம்முடைய சுக துக்கங்களை வளர்க்கவும் குறைக்கவும் செய்கின்றனர். கவலை தான் உடல் கோளாறு அனைத்திற்கும் காரணம். இப்படி கவலை இல்லாமல், வாழ்ந்து, வயது ஆகியும் தலைமுடி நரைக்காமல் ஒருவர் இருந்தார், அவரிடம் இப்படி நரைக்காமல் இருந்ததற்கு காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார், அவர் கூறும் பதில் தான் இந்த பாடல். இன்று நமக்கு என் சீக்கிரம் நரைகிறது என்று இந்த பாடல் மூலம் அறியலாம்.
பாடல் 11 : நரையில ஆகுதல் (புறம் : 191)
பாடியவர்: பிசிராந்தையார்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு, மக்களும் நிரம்பினார் ;
யான் கண்டனையர் என் இளையோரும் , வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே"
பொருள் விளக்கம்
பல ஆண்டுகள் வாழ்ந்தும் நரை இல்லாமல் வாழ்வது எங்ஙனம் என்று நீங்கள் கேட்கிறீர்கள், அது என்ன என்று கூறுகிறேன் கேளுங்கள்.
மாண்பான குணம் கொண்ட என் மனைவி, என் மக்களும் கல்வி கற்று அறிவு நிரம்பியவர்கள், என்னிடம் பணி செய்யும் வேலைக்காரர்களும் என் குறிப்பு அறிந்து நான் சொல்லும் முன் வேலை செய்பவர்கள், இந்த நாட்டு அரசனும் கொடுமைகள் செய்யாமல் மக்களுக்கு நன்மைகள் செய்யும் மன்னன், கவலை நீங்க வாழ வைக்கிறான். அதற்கு மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது, நல்லது எது கெட்டது எது என்று அனுபவத்தில் வாழ்ந்து உணர்ந்த (கல்வியால் மட்டும் உணரவில்லை என்பது இங்கு மறை பொருளாக கூறப்படுகிறது) சான்றோர் பலர் உள்ளனர், அவர்கள் மக்கள் தவறு செய்யும் போது அவர்களுக்கு நல்லது எது என்று எடுத்து உரைத்து தவறு மிகா வண்ணம் இந்த நாட்டை காக்கின்றனர். இப்படி நான் கவலைப் பட எந்த காரணமும் இல்லாதது தான் என் இளமைக்கு காரணம்.
சரி இளமையாக வாழ கவலை இல்லாமல் இருப்பது ஒன்று மட்டும் தான் வழியா, ஏதாவது தின்றால் நாம் இளமையாக இருக்க முடியுமா? இப்படி இளமையாக வாழ பழம் ஒன்று கிடைத்தால் நாம் என்ன செய்வோம், அதியமான் என்ன செய்தான் அடுத்த பாடலில் காண்போம்.
இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் கவலை இல்லாத மனிதன் இல்லை என்றே சொல்லலாம். ஆசை அதிகம் ஆகும் போது கவலை அதிகம் ஆகுகிறது என்பது வாழ்வியல் உண்மை. இப்படி வாழும் நிலையில் கவலை நம்மால் மட்டுமே வந்து விடுவதில்லை. நம்மை சுற்றிவுள்ளவர்கள் தான் நம்முடைய சுக துக்கங்களை வளர்க்கவும் குறைக்கவும் செய்கின்றனர். கவலை தான் உடல் கோளாறு அனைத்திற்கும் காரணம். இப்படி கவலை இல்லாமல், வாழ்ந்து, வயது ஆகியும் தலைமுடி நரைக்காமல் ஒருவர் இருந்தார், அவரிடம் இப்படி நரைக்காமல் இருந்ததற்கு காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார், அவர் கூறும் பதில் தான் இந்த பாடல். இன்று நமக்கு என் சீக்கிரம் நரைகிறது என்று இந்த பாடல் மூலம் அறியலாம்.
பாடல் 11 : நரையில ஆகுதல் (புறம் : 191)
பாடியவர்: பிசிராந்தையார்
பாடப்பட்டோர் : யாருமில்லை , பொதுவாக பாடியது
திணை : பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் ? என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு, மக்களும் நிரம்பினார் ;
யான் கண்டனையர் என் இளையோரும் , வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே"
பொருள் விளக்கம்
பல ஆண்டுகள் வாழ்ந்தும் நரை இல்லாமல் வாழ்வது எங்ஙனம் என்று நீங்கள் கேட்கிறீர்கள், அது என்ன என்று கூறுகிறேன் கேளுங்கள்.
மாண்பான குணம் கொண்ட என் மனைவி, என் மக்களும் கல்வி கற்று அறிவு நிரம்பியவர்கள், என்னிடம் பணி செய்யும் வேலைக்காரர்களும் என் குறிப்பு அறிந்து நான் சொல்லும் முன் வேலை செய்பவர்கள், இந்த நாட்டு அரசனும் கொடுமைகள் செய்யாமல் மக்களுக்கு நன்மைகள் செய்யும் மன்னன், கவலை நீங்க வாழ வைக்கிறான். அதற்கு மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது, நல்லது எது கெட்டது எது என்று அனுபவத்தில் வாழ்ந்து உணர்ந்த (கல்வியால் மட்டும் உணரவில்லை என்பது இங்கு மறை பொருளாக கூறப்படுகிறது) சான்றோர் பலர் உள்ளனர், அவர்கள் மக்கள் தவறு செய்யும் போது அவர்களுக்கு நல்லது எது என்று எடுத்து உரைத்து தவறு மிகா வண்ணம் இந்த நாட்டை காக்கின்றனர். இப்படி நான் கவலைப் பட எந்த காரணமும் இல்லாதது தான் என் இளமைக்கு காரணம்.
சரி இளமையாக வாழ கவலை இல்லாமல் இருப்பது ஒன்று மட்டும் தான் வழியா, ஏதாவது தின்றால் நாம் இளமையாக இருக்க முடியுமா? இப்படி இளமையாக வாழ பழம் ஒன்று கிடைத்தால் நாம் என்ன செய்வோம், அதியமான் என்ன செய்தான் அடுத்த பாடலில் காண்போம்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அதிசய நெல்லிக்கனி
தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள் இந்த உலகில் அருகி வருகின்றனர். இப்படி இருக்கும் ஒரு சிலருக்காகத் தான் மழை பெய்கிறது. முன்பு நீண்ட நாள் தன் அரண்மனையில் தங்கச் செய்து ஔவைக்கு பரிசு ஒன்றும் கொடுக்காமல் காலம் தாழ்த்தினான். எங்கே பரிசு கிடைத்தால் உடனே தன் அரண்மனையை விட்டு சென்று விடுவாள் என்று நினைத்து, பரிசு தராமல் காலம் தாழ்த்தி அவளுடைய தமிழின் சுவையை ரசித்திருந்தான். அப்படி அரண்மனையில் தங்கும் போது அதியமான் வேட்டையாடச் சென்ற மலையில் ஒரு அபூர்வ நெல்லிக்கனி அவனுக்கு கிடைத்தது. அதை தான் உண்டால் இந்த நாடு மட்டும் தான் பலன் பெரும், ஆனால் தமிழுக்கு தொன்று ஆற்றும் ஔவை உண்டால் நன்றாக இருக்கும், அவளால் தமிழும், தமிழால் உலகமும் உய்வு பெரும் என்று எண்ணி இளமையும், நீண்ட ஆயுளையும் தரும் அதிசய நெல்லிக்கனியின் அருமையை கூறி கொடுத்தால் ஔவை உண்ணமாட்டாள் என்று அறிந்து இது ஒரு
சாதாரண கனி என்று கூறி அதை தின்னக் கொடுக்கிறான் அதியமான்.
பாடல் 12 : எமக்கு ஈந்தனையோ! (புறம் : 91)
பாடியவர்: ஔவையார் அதியமான்
பாடப்பட்டோர் : அதியமான்
திணை : தும்பை துறை: வாழ்த்தியல்
வலம்படு வாய் வாள் ஏந்தி, ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடித் தடக்கை,
ஆர் கலி நறவின், அதியர் கோமான்
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி !
பால் புரை பிறை நூதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மண்ணுக - பெரும நீயே ! தொல் நிலைப்
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க, எமக்கு ஈந்தனையே !
பொருள் விளக்கம்
பகைவரின் பல களங்களை தைரியமாக எதிர்த்து வெற்றி பெற்ற அதியர் கூட்டத் தலைவன் அதியமானே, பால் போல் வெள்ளை நிற பிறையை அணிந்துள்ளவன், விஷம் உண்டு தேவர்களைக் காத்த நீல நிறக் கழுத்தை உடைய சிவபெருமான் போல் நீண்ட ஆயுளுடன் நீ வாழ்வாய். உயரமான மலையின் பிளவுக்கு இடையில் வளர்ந்த சிறிய இலைகளை உடைய அறிய நெல்லிக்கனியை, எனக்கு அதன் பெருமையை சொல்லாமல் தந்தாயே, உன்னை நான் எப்படி புகழ்வேன், இது மதிக்கத்த செயல் ஆகும்.
இப்படி கூறிய பிறகு, அதியமான் ஔவையே, இது உன் தமிழுக்கு செய்யும் மரியாதை என்று கூறினார், ஔவையோ கர்வம் கொள்ளாமல் ஒரு பாடல் பாடினார் ......அந்த பாடலை அடுத்து பார்ப்போம் .........
புறம் வளரும் ..........
தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள் இந்த உலகில் அருகி வருகின்றனர். இப்படி இருக்கும் ஒரு சிலருக்காகத் தான் மழை பெய்கிறது. முன்பு நீண்ட நாள் தன் அரண்மனையில் தங்கச் செய்து ஔவைக்கு பரிசு ஒன்றும் கொடுக்காமல் காலம் தாழ்த்தினான். எங்கே பரிசு கிடைத்தால் உடனே தன் அரண்மனையை விட்டு சென்று விடுவாள் என்று நினைத்து, பரிசு தராமல் காலம் தாழ்த்தி அவளுடைய தமிழின் சுவையை ரசித்திருந்தான். அப்படி அரண்மனையில் தங்கும் போது அதியமான் வேட்டையாடச் சென்ற மலையில் ஒரு அபூர்வ நெல்லிக்கனி அவனுக்கு கிடைத்தது. அதை தான் உண்டால் இந்த நாடு மட்டும் தான் பலன் பெரும், ஆனால் தமிழுக்கு தொன்று ஆற்றும் ஔவை உண்டால் நன்றாக இருக்கும், அவளால் தமிழும், தமிழால் உலகமும் உய்வு பெரும் என்று எண்ணி இளமையும், நீண்ட ஆயுளையும் தரும் அதிசய நெல்லிக்கனியின் அருமையை கூறி கொடுத்தால் ஔவை உண்ணமாட்டாள் என்று அறிந்து இது ஒரு
சாதாரண கனி என்று கூறி அதை தின்னக் கொடுக்கிறான் அதியமான்.
பாடல் 12 : எமக்கு ஈந்தனையோ! (புறம் : 91)
பாடியவர்: ஔவையார் அதியமான்
பாடப்பட்டோர் : அதியமான்
திணை : தும்பை துறை: வாழ்த்தியல்
வலம்படு வாய் வாள் ஏந்தி, ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடித் தடக்கை,
ஆர் கலி நறவின், அதியர் கோமான்
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி !
பால் புரை பிறை நூதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மண்ணுக - பெரும நீயே ! தொல் நிலைப்
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க, எமக்கு ஈந்தனையே !
பொருள் விளக்கம்
பகைவரின் பல களங்களை தைரியமாக எதிர்த்து வெற்றி பெற்ற அதியர் கூட்டத் தலைவன் அதியமானே, பால் போல் வெள்ளை நிற பிறையை அணிந்துள்ளவன், விஷம் உண்டு தேவர்களைக் காத்த நீல நிறக் கழுத்தை உடைய சிவபெருமான் போல் நீண்ட ஆயுளுடன் நீ வாழ்வாய். உயரமான மலையின் பிளவுக்கு இடையில் வளர்ந்த சிறிய இலைகளை உடைய அறிய நெல்லிக்கனியை, எனக்கு அதன் பெருமையை சொல்லாமல் தந்தாயே, உன்னை நான் எப்படி புகழ்வேன், இது மதிக்கத்த செயல் ஆகும்.
இப்படி கூறிய பிறகு, அதியமான் ஔவையே, இது உன் தமிழுக்கு செய்யும் மரியாதை என்று கூறினார், ஔவையோ கர்வம் கொள்ளாமல் ஒரு பாடல் பாடினார் ......அந்த பாடலை அடுத்து பார்ப்போம் .........
புறம் வளரும் ..........
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஔவையின் பெருந்தன்மை
சிறு விஷயம் செய்தாலே நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் பல பாடல்களைத் தந்த ஔவையோ தன் பாடலை குழந்தையின் சொல்லொடு ஒப்பிடுகிறார்.
தமிழுக்கு தொண்டு செய்யும் ஔவையின் சிறப்பை உணர்ந்த அதியமான் கிடைப்பதற்கு அறிய நெல்லிக்கனியை ஔவைக்கு பரிசாக அளித்தான். ஆனால் ஔவை இதற்கு கர்வம் கொள்ளாமல் ஒருவருக்கு தான் குழந்தை கூறும் மழலைச் சொல் புரியாவிட்டாலும் அது கேட்பதற்கு சுவையாக இருப்பது போல், அதியமானே உனக்கு என் மேல் உள்ள அன்பின் காரணமாக நான் பாடும் சாதாரண பாடல் கூட மிக இனிமையாக இருப்பது போல் தோன்றுகிறது என்று தன்னடக்கத்தோடு கூறுகிறார், அந்த பாடல்
பாடல் 13 : யாழொடும் கொள்ளா! (புறம் : 92)
பாடியவர்: ஔவையார் அதியமான்
பாடப்பட்டோர் : அதியமான்
திணை : ..... துறை: இயன்மொழி.
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை;
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே.
பொருள் விளக்கம்:
மழலைச் சொல், யாழ் போல் இனிமையாக இருப்பதாக கொள்ள முடியாது, பொருள் இருக்காது, காலத்தோடும் பொருந்தி வாராது, ஆனாலும் தந்தைக்கு தன் குழந்தை கூறும் மழலைச் சொல் இனிமையாக இருப்பதாக தோன்றும். அது போல் பல அரண்மனை கோட்டைச் சுவர்களை கடந்த, பல போரில் வென்ற அதியமானே உனக்கு என் மீது உள்ள அன்பின் காரணமாக மழலை மொழி போல் நான் கூறும் சாதாரண சொல்லும் இனிமையாக இருக்கிறது. இதில் என் பெருமை ஏதும் இல்லை.
மழலைச் சொல் இவ்வளவு இன்பம் என்றால், மழலைச் செல்வம் எவ்வளவு இன்பம்? அதை இப்பற்றி கூறும் புறப்பாடலை அடுத்துக் காண்போம்
புறம் வளரும் .......
சிறு விஷயம் செய்தாலே நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் பல பாடல்களைத் தந்த ஔவையோ தன் பாடலை குழந்தையின் சொல்லொடு ஒப்பிடுகிறார்.
தமிழுக்கு தொண்டு செய்யும் ஔவையின் சிறப்பை உணர்ந்த அதியமான் கிடைப்பதற்கு அறிய நெல்லிக்கனியை ஔவைக்கு பரிசாக அளித்தான். ஆனால் ஔவை இதற்கு கர்வம் கொள்ளாமல் ஒருவருக்கு தான் குழந்தை கூறும் மழலைச் சொல் புரியாவிட்டாலும் அது கேட்பதற்கு சுவையாக இருப்பது போல், அதியமானே உனக்கு என் மேல் உள்ள அன்பின் காரணமாக நான் பாடும் சாதாரண பாடல் கூட மிக இனிமையாக இருப்பது போல் தோன்றுகிறது என்று தன்னடக்கத்தோடு கூறுகிறார், அந்த பாடல்
பாடல் 13 : யாழொடும் கொள்ளா! (புறம் : 92)
பாடியவர்: ஔவையார் அதியமான்
பாடப்பட்டோர் : அதியமான்
திணை : ..... துறை: இயன்மொழி.
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை;
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே.
பொருள் விளக்கம்:
மழலைச் சொல், யாழ் போல் இனிமையாக இருப்பதாக கொள்ள முடியாது, பொருள் இருக்காது, காலத்தோடும் பொருந்தி வாராது, ஆனாலும் தந்தைக்கு தன் குழந்தை கூறும் மழலைச் சொல் இனிமையாக இருப்பதாக தோன்றும். அது போல் பல அரண்மனை கோட்டைச் சுவர்களை கடந்த, பல போரில் வென்ற அதியமானே உனக்கு என் மீது உள்ள அன்பின் காரணமாக மழலை மொழி போல் நான் கூறும் சாதாரண சொல்லும் இனிமையாக இருக்கிறது. இதில் என் பெருமை ஏதும் இல்லை.
மழலைச் சொல் இவ்வளவு இன்பம் என்றால், மழலைச் செல்வம் எவ்வளவு இன்பம்? அதை இப்பற்றி கூறும் புறப்பாடலை அடுத்துக் காண்போம்
புறம் வளரும் .......
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அதனால் தான் அவ்வை காலத்தில் அழியாமல் நிற்கிறார்.... [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றி ஐயா..அவ்வை புகழ் அறிய செய்தமைக்கு.....
மிக்க நன்றி ஐயா..அவ்வை புகழ் அறிய செய்தமைக்கு.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- GuestGuest
நல்ல முயற்சி ,பதிவு நன்றிகள் ...
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஈகரையில் உருப்படியான பதிவுகளில் இதுவும் ஒன்று
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 3 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 10
|
|