புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீமானை வீழ்த்த நடக்கும் சதி..!
Page 1 of 1 •
உண்மையாகவே பெரிதும் வருத்தப்படுகிறேன்..!
நிச்சயமாக இந்தச் செய்தி தவறானது என்பதில் நான் நூறு சதவிகிதம் நம்புகிறேன்..!
எனக்கு சீமானுடன் நேரடி பழக்கமில்லை. கை குலுக்கியிருப்பதோடு சரி..! இருந்தாலும் நான் இப்போதும் உறுதியுடன் சொல்கிறேன்.. விஜயலட்சுமி என்னும் இந்த நடிகை சொல்லியிருப்பது அபாண்டமானது..!
ஒரு பெண்ணி்ன் நடத்தையை வைத்து அவரை எடை போட முடியுமா..? அல்லது ஒரு சம்பவத்தினாலேயே அவரை பலி கடாவாக்க முடியுமா..?
முன்பு அப்படியிருந்திருக்கலாம். ஆனால் இப்போது திருந்தியிருக்கலாமே..?
ஏன் சீமானே மாறியிருக்கலாமே.. ஒரு நிமிடத்தில் அப்படி நடந்திருக்கலாமே..?
இப்படியெல்லாம் பகுத்தறிவோடு சிந்திக்காமல் இந்தச் செய்தியைப் படித்த காலை பொழுதிலேயே நான் உணர்ந்துவிட்டேன் இது நிச்சயம் பொய்யான புகாராகத்தான் இருக்கும் என்று..!
முதல் காரணம் செல்வி.விஜயலட்சுமியின் குணநலன்கள் அவர் சின்னத்திரைக்குள் கால் வைத்த தினத்தில் இருந்து என் காதுகளுக்கு எட்டியபடியே இருந்ததினால்தான்..! அவரைப் பற்றிய பல திடுக்கிடும் செய்திகள் பலவிதமான நண்பர்களிடமிருந்து ஒரே மாதிரியாக வந்து சேர்ந்து கொண்டேயிருந்தன.
அது ஒன்றே ஒன்றுதான்.. அவர் தகுதிக்குரியவர் என்று யாரை நினைக்கிறாரோ அவரிடமெல்லாம், “ஐ லவ் யூ..” சொல்வார்..! சிலரை இப்படியே கிறங்கடித்திருக்கிறார். பலர் அது உண்மையோ என்று நம்பி விஜயலட்சுமியுடன் சின்சியராகப் பழகத் துவங்க, சில நாட்களிலேயே வேறொருவருக்கு “ஐ லவ் யூ..” சொல்லிவிட்டு தாவி விடுவார் என்றார்கள்..!
சின்னத்திரை உலகம் மிகவும் சிறியது.. முதல் நாள் ஓரிடத்தில் கேமிரா உதவியாளராகவும், செட் உதவியாளராகவும், தயாரிப்பு உதவியாளராகவும் பணியாற்றுபவர் மறுநாள் வேறொரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேரிடும். மறுநாள் மீண்டும் முதல் நாள் சீரியலுக்கே திரும்பி வர வேண்டியிருக்கும்.. இப்படி இவர்கள் குண்டுச் சட்டிக்குள் ஓடுவதைப் போலவே ஓடிக் கொண்டிருப்பதால் ஒரு ஷூட்டிங்கில் நடப்பது, அடுத்த நாள் வேறொரு ஷூட்டிங்கில் லைவ் ரிலேவாக ஓடிக் கொண்டிருக்கும்.
அவைகளனைத்தையும் மீண்டும் இங்கே சொல்லி அவரைக் கேவலப்படுத்துவது எனது நோக்கமல்ல..! ஆனால் உண்மையே அவருடைய நடத்தையைப் பொறுத்துதான் இருக்கிறது என்பதால் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது..!
சீரியல்களில் நடிக்கும்போது, “நான் உங்களைக் காதலிக்கிறேன்..” என்று சில புரொடெக்ஷன் மேனேஜர்கள், கேமிராமேன்கள், இயக்குநர்களிடத்தில் விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இரண்டாவது யூனிட் இயக்குநரைக்கூட அவர் விட்டுவைத்ததில்லை.
“ஏன் லேட்டா வர்றீங்க..?” என்று கேட்டால்கூட 'கையைப் பிடித்து இழுத்தார்' என்ற ரேஞ்ச்சுக்கு ராடன் ஆபீஸுக்கு புகாரை அனுப்பி வைப்பார் விஜயலட்சுமி. இந்தத் தொல்லை தாங்காமலேயே அவரிடம் நேராகப் பேசாமல் இடைத்தரகராக இணை இயக்குநர் ஒருவரை வைத்துக் கொண்டுதான் அவரைச் சமாளித்தார்கள் இயக்குநர்கள்..!
அவரைத் தவிர்த்துவிட்டு சீரியலை தொடர முடியாத சூழல் வந்தபோதுதான், வேறு வழியில்லாமல் அனைத்து விவகாரங்களும் ராடன் டிவி நிர்வாகத்தின் முன் வைக்கப்பட்டு பஞ்சாயத்தாக்கப்பட்டது. அப்போதுதான் விஜயலட்சுமி சொன்ன “ஐ லவ் யூ” கதைகள் அனைத்தும் அம்பலமாகின..!
'தங்கவேட்டை' நிகழ்ச்சியின் இயக்குநர் ரமேஷ் மீது தன்னை காதலித்து ஏமாற்றியதாக விஜயலட்சுமி பொய்யாக, போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு போன பின்புதான் அவரை அந்த இரண்டு தொடர்களிலிருந்தும் தூக்கினார்கள். பாவம் அந்த இயக்குநர் ரமேஷ்.. சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பெரும்பாடுபட்டு அந்த வழக்கை வாபஸ் பெற வைத்தார்கள்..!
2008-ம் ஆண்டு கன்னட நடிகர் லோகேஷின் மகன் ஸ்ரூஜன் லோகேஷுடன் விஜயலட்சுமி காதல் கொண்டு நிச்சயத்தார்த்தமும் நடந்தது. பின்பு இந்தக் காதலும் 6 மாதத்தில் முறிந்து போய்விட்டது. ஸ்ரூஜன் வேறொரு சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார். விஜயலட்சுமி மீண்டும் இப்போதுதான் 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தில் தமிழில் ரீ எண்ட்ரீயாகியிருந்தார்..!
இவருடைய இந்த நிலைமையோடு, சீமானின் நிலைமையையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்..!
வீடு முழுவதும் உதவி இயக்குநர்கள்.. தற்போதைய நிலையில் 10 இளைஞர்கள், அவருடைய வீட்டில் அவருடனேயே தங்கியிருக்கிறார்கள். ஒரு முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். மீண்டும் ஒரு முறை கைது செய்யப்பட்டு சாதா சிறைவாசம் அனுபவித்தார். அப்போதெல்லாம் இந்த விஜயலட்சுமி எங்கேயும் தென்பட்டதில்லை. 2 ஆண்டுகளாக காதலித்தோம் என்று கதை விடுவதற்கும் ஒரு அளவில்லையா..?
சீமானின் வீடு 24 மணி நேரமும் ஜாபர்சேட்டின் கண் பார்வையில்தான் இருந்தது. அவருடைய உதவி இயக்குநர்கள் அனைவருமே சீமானைப் போன்று தமிழ்த் தேசியம், ஈழம், பிரபாகரன் என்ற எண்ணத்திலேயே இருப்பவர்கள். இது போன்ற சின்னப்புள்ளத்தனத்திலெல்லாம் ஈடுபட சீமானுக்கெங்கே நேரமிருக்கப் போகிறது..?
அத்தோடு கட்சி வேறு ஆரம்பித்த கையோடு எப்பவும் நிருபர்களின் கண் பார்வையிலேயே இருந்தவர் இந்த விவகாரம் உண்மையாக இருந்திருந்தால் இந்நேரம் மாட்டியிருப்பார். சீமானை நன்கு அறிந்தவர்கள் இதனை எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பார்கள்..! அவருக்கு காதல், கல்யாணம் இதிலெல்லாம் அக்கறையில்லை என்பது திரையுலகத்தினருக்கே தெரிந்த விஷயம்தான்.
இப்போதுதான் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சியினரின் வற்புறுத்தலினால் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணை மணக்கலாம் என்ற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் என்று சிலிர்க்கிறார்கள் அவரது உதவி இயக்குநர்கள்..!
விஜயலட்சுமியுடனான அவரது தொடர்பு ஒன்றே ஒன்றுதான். அது விஜயலட்சுமியின் அக்கா உஷாவின் வரதட்சணை புகார் பற்றியது. விஜயலட்சுமியின் அக்கா கணவர் என்னைப் போன்ற சற்று யூத்தான தமிழ் இளைஞர்களுக்கு நன்று அறிமுகமானவர். 'திருட்டு புருஷன்' என்று ஆண்டு முழுவதும் காலை காட்சியாக ஓடி சாதனை படைத்த திரைப்படத்தின் கதாநாயகன் ராஜ்பாபு. இவர் நடிகை ஜெயப்ரதாவின் சொந்தத் தம்பி.
இவருடனான குடும்ப உறவு முறிந்த நிலையில், தனது அக்காவின் மகனை மீட்டுக் கொடுக்கும்படி 2008-ம் ஆண்டு விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அந்தச் சமயத்தில்தான் சீமானை விஜயலட்சுமி சந்தித்ததாக சீமானின் வழக்கறிஞர் சொல்கிறார். சீமானை விஜயலட்சுமி தெரிந்து வைத்திருந்ததற்கு காரணம் சீமான் இயக்கிய 'வாழ்த்துகள்' திரைப்படத்தில் அவரும் நடித்திருந்ததுதான். இந்தச் சின்னத் தொடர்பை வைத்து 3 ஆண்டுகள் கழித்து சூப்பரான திரைக்கதை அமைத்து கதை கட்டிவிட்டிருக்கிறார்கள் சிலர்..!
நேற்று இந்தத் தகவல் நிருபர்களுக்கு எப்படி சென்றது என்பதும் ஒரு சுவாரசியம்..! காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர்தான் சினிமா பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள். பத்திரிகையாளர்கள் கமிஷனர் அலுவலகத்துக்குப் போகும் முன்பேயே, விஜயலட்சுமி புகார் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்..!
ஆக முன்பே நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நாடகமாகவே இதனை நான் கருதுகிறேன்..! இதற்கு விஜயலட்சுமி என்ற பெண்ணும் உடந்தை என்பதுதான் வேதனை..!
ஒருவரின் கொள்கைகளை, கருத்துக்களை நேருக்கு நேராகச் சந்திக்கத் தைரியமில்லாத கோழைகள், அவரை எப்பாடுபட்டாவது வீழ்த்திவிட வேண்டும் என்று நினைத்து கேரக்டர் அஸாஸினேஷன் செய்ய முயற்சிப்பது கேவலமானது..!
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சீமானின் புயல்வேகப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் டவுசர் கிழிந்தது, அக்கட்சியினருக்கு பெரும் கோபத்தைக் கிளறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..!
தி.மு.க. நின்ற இடங்களிலெல்லாம் தோல்வி என்றால் அது ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த கடுப்பு என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் மீது..? அவர்கள் ஆளும் கட்சியினரின் தோழமைக் கட்சி என்ற ஒரு விஷயம் மட்டும்தான். ஆனால் இந்த ஒன்றுக்காகவேதான் காங்கிரஸுக்கு இவ்வளவு பெரிய தோல்வியா என்றால் இதை நான் நம்பவில்லை..!
ஊழலில் கூட்டணி அமைத்தது.. உயர்ந்து கொண்டேயிருந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த திராணியற்ற நிலையில் ஆட்சி நடத்தியது.. கூடவே எண்ணற்ற தமிழ் இளைஞர்களை கொந்தளிக்க வைத்திருந்த முள்ளிவாய்க்கால் படுகொலையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி செய்த துரோகமும், அந்தத் துரோகத்தை சீமான் தோலுரித்துக் காட்டியதாலும்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு இந்த அளவுக்கான படுதோல்வி கிடைத்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்..!
இல்லையெனில் தி.மு.க. கூட்டணி தோற்றிருந்தாலும், காங்கிரஸுக்கு சுமாராக 15 தொகுதிகளாவது கிடைத்திருக்கும்.. அதிலும் மாதத்தில் 20 நாட்கள் தொகுதியிலேயே இருந்து வீடு, வீடாக சென்று தனது பெயரை நிலை நாட்டி, கோடியை செலவிட்டிருந்த ஹெச்.வசந்தகுமாரும், வேலூரில் சிறந்த எம்.எல்.ஏ. என்று 4 முறையும் பெயரெடுத்திருந்த சி.ஞானசேகரனும், ராமநாதபுரத்தில் மதப் பெரியவர்களின் முழு ஆசியைப் பெற்றிருந்த ஹசன் அலியும் தோற்றிருக்கவே மாட்டார்கள்..!
பாரதீய ஜனதா என்ற கட்சி இடையில் புகுந்து ஓட்டுக்களைக் களவாடிய காரணத்தினால்தான் தற்போதைய 5 சீட்டுக்களே காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. பா.ஜ.க.வும் வராமல் இருந்திருந்தால் முட்டைதான் கிடைத்திருக்கும்..!
ஆக.. காங்கிரஸின் இந்தத் தோல்வியில் சீமானுக்கு பெரும் பங்கு உண்டு என்பது அக்கட்சியினருக்கு கோபத்தைக் கிளப்பி, இப்படியொரு பொய்யான புகார் கொடுக்க பின்புலமாக இருந்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது..!
இன்று காலையில் இருந்தே சினிமா துறையினர் பலரும் நிச்சயம் இது கட்டுக் கதை என்றே சொல்கின்றனர். இந்த அளவுக்கு சீமானின் நிஜ சுயரூபம் சினிமாவுலகில் தெரிந்திருக்கிறது..! இது ஒன்று போதும் அவருக்கு..!
எனக்கு சாபமிட மனசு வரவில்லை. ஆனாலும் மனம் பொறுக்காமல் சொல்கிறேன்.. விஜயலட்சுமியும், இந்தப் பழிக்குப் பின்னால் இருப்பவர்களும் வருங்காலத்தில் நிச்சயம் வெம்புவார்கள்..!
உண்மைத்தமிழன்
நிச்சயமாக இந்தச் செய்தி தவறானது என்பதில் நான் நூறு சதவிகிதம் நம்புகிறேன்..!
எனக்கு சீமானுடன் நேரடி பழக்கமில்லை. கை குலுக்கியிருப்பதோடு சரி..! இருந்தாலும் நான் இப்போதும் உறுதியுடன் சொல்கிறேன்.. விஜயலட்சுமி என்னும் இந்த நடிகை சொல்லியிருப்பது அபாண்டமானது..!
ஒரு பெண்ணி்ன் நடத்தையை வைத்து அவரை எடை போட முடியுமா..? அல்லது ஒரு சம்பவத்தினாலேயே அவரை பலி கடாவாக்க முடியுமா..?
முன்பு அப்படியிருந்திருக்கலாம். ஆனால் இப்போது திருந்தியிருக்கலாமே..?
ஏன் சீமானே மாறியிருக்கலாமே.. ஒரு நிமிடத்தில் அப்படி நடந்திருக்கலாமே..?
இப்படியெல்லாம் பகுத்தறிவோடு சிந்திக்காமல் இந்தச் செய்தியைப் படித்த காலை பொழுதிலேயே நான் உணர்ந்துவிட்டேன் இது நிச்சயம் பொய்யான புகாராகத்தான் இருக்கும் என்று..!
முதல் காரணம் செல்வி.விஜயலட்சுமியின் குணநலன்கள் அவர் சின்னத்திரைக்குள் கால் வைத்த தினத்தில் இருந்து என் காதுகளுக்கு எட்டியபடியே இருந்ததினால்தான்..! அவரைப் பற்றிய பல திடுக்கிடும் செய்திகள் பலவிதமான நண்பர்களிடமிருந்து ஒரே மாதிரியாக வந்து சேர்ந்து கொண்டேயிருந்தன.
அது ஒன்றே ஒன்றுதான்.. அவர் தகுதிக்குரியவர் என்று யாரை நினைக்கிறாரோ அவரிடமெல்லாம், “ஐ லவ் யூ..” சொல்வார்..! சிலரை இப்படியே கிறங்கடித்திருக்கிறார். பலர் அது உண்மையோ என்று நம்பி விஜயலட்சுமியுடன் சின்சியராகப் பழகத் துவங்க, சில நாட்களிலேயே வேறொருவருக்கு “ஐ லவ் யூ..” சொல்லிவிட்டு தாவி விடுவார் என்றார்கள்..!
சின்னத்திரை உலகம் மிகவும் சிறியது.. முதல் நாள் ஓரிடத்தில் கேமிரா உதவியாளராகவும், செட் உதவியாளராகவும், தயாரிப்பு உதவியாளராகவும் பணியாற்றுபவர் மறுநாள் வேறொரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேரிடும். மறுநாள் மீண்டும் முதல் நாள் சீரியலுக்கே திரும்பி வர வேண்டியிருக்கும்.. இப்படி இவர்கள் குண்டுச் சட்டிக்குள் ஓடுவதைப் போலவே ஓடிக் கொண்டிருப்பதால் ஒரு ஷூட்டிங்கில் நடப்பது, அடுத்த நாள் வேறொரு ஷூட்டிங்கில் லைவ் ரிலேவாக ஓடிக் கொண்டிருக்கும்.
அவைகளனைத்தையும் மீண்டும் இங்கே சொல்லி அவரைக் கேவலப்படுத்துவது எனது நோக்கமல்ல..! ஆனால் உண்மையே அவருடைய நடத்தையைப் பொறுத்துதான் இருக்கிறது என்பதால் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது..!
சீரியல்களில் நடிக்கும்போது, “நான் உங்களைக் காதலிக்கிறேன்..” என்று சில புரொடெக்ஷன் மேனேஜர்கள், கேமிராமேன்கள், இயக்குநர்களிடத்தில் விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இரண்டாவது யூனிட் இயக்குநரைக்கூட அவர் விட்டுவைத்ததில்லை.
“ஏன் லேட்டா வர்றீங்க..?” என்று கேட்டால்கூட 'கையைப் பிடித்து இழுத்தார்' என்ற ரேஞ்ச்சுக்கு ராடன் ஆபீஸுக்கு புகாரை அனுப்பி வைப்பார் விஜயலட்சுமி. இந்தத் தொல்லை தாங்காமலேயே அவரிடம் நேராகப் பேசாமல் இடைத்தரகராக இணை இயக்குநர் ஒருவரை வைத்துக் கொண்டுதான் அவரைச் சமாளித்தார்கள் இயக்குநர்கள்..!
அவரைத் தவிர்த்துவிட்டு சீரியலை தொடர முடியாத சூழல் வந்தபோதுதான், வேறு வழியில்லாமல் அனைத்து விவகாரங்களும் ராடன் டிவி நிர்வாகத்தின் முன் வைக்கப்பட்டு பஞ்சாயத்தாக்கப்பட்டது. அப்போதுதான் விஜயலட்சுமி சொன்ன “ஐ லவ் யூ” கதைகள் அனைத்தும் அம்பலமாகின..!
'தங்கவேட்டை' நிகழ்ச்சியின் இயக்குநர் ரமேஷ் மீது தன்னை காதலித்து ஏமாற்றியதாக விஜயலட்சுமி பொய்யாக, போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு போன பின்புதான் அவரை அந்த இரண்டு தொடர்களிலிருந்தும் தூக்கினார்கள். பாவம் அந்த இயக்குநர் ரமேஷ்.. சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பெரும்பாடுபட்டு அந்த வழக்கை வாபஸ் பெற வைத்தார்கள்..!
2008-ம் ஆண்டு கன்னட நடிகர் லோகேஷின் மகன் ஸ்ரூஜன் லோகேஷுடன் விஜயலட்சுமி காதல் கொண்டு நிச்சயத்தார்த்தமும் நடந்தது. பின்பு இந்தக் காதலும் 6 மாதத்தில் முறிந்து போய்விட்டது. ஸ்ரூஜன் வேறொரு சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார். விஜயலட்சுமி மீண்டும் இப்போதுதான் 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தில் தமிழில் ரீ எண்ட்ரீயாகியிருந்தார்..!
இவருடைய இந்த நிலைமையோடு, சீமானின் நிலைமையையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்..!
வீடு முழுவதும் உதவி இயக்குநர்கள்.. தற்போதைய நிலையில் 10 இளைஞர்கள், அவருடைய வீட்டில் அவருடனேயே தங்கியிருக்கிறார்கள். ஒரு முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். மீண்டும் ஒரு முறை கைது செய்யப்பட்டு சாதா சிறைவாசம் அனுபவித்தார். அப்போதெல்லாம் இந்த விஜயலட்சுமி எங்கேயும் தென்பட்டதில்லை. 2 ஆண்டுகளாக காதலித்தோம் என்று கதை விடுவதற்கும் ஒரு அளவில்லையா..?
சீமானின் வீடு 24 மணி நேரமும் ஜாபர்சேட்டின் கண் பார்வையில்தான் இருந்தது. அவருடைய உதவி இயக்குநர்கள் அனைவருமே சீமானைப் போன்று தமிழ்த் தேசியம், ஈழம், பிரபாகரன் என்ற எண்ணத்திலேயே இருப்பவர்கள். இது போன்ற சின்னப்புள்ளத்தனத்திலெல்லாம் ஈடுபட சீமானுக்கெங்கே நேரமிருக்கப் போகிறது..?
அத்தோடு கட்சி வேறு ஆரம்பித்த கையோடு எப்பவும் நிருபர்களின் கண் பார்வையிலேயே இருந்தவர் இந்த விவகாரம் உண்மையாக இருந்திருந்தால் இந்நேரம் மாட்டியிருப்பார். சீமானை நன்கு அறிந்தவர்கள் இதனை எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பார்கள்..! அவருக்கு காதல், கல்யாணம் இதிலெல்லாம் அக்கறையில்லை என்பது திரையுலகத்தினருக்கே தெரிந்த விஷயம்தான்.
இப்போதுதான் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சியினரின் வற்புறுத்தலினால் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணை மணக்கலாம் என்ற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் என்று சிலிர்க்கிறார்கள் அவரது உதவி இயக்குநர்கள்..!
விஜயலட்சுமியுடனான அவரது தொடர்பு ஒன்றே ஒன்றுதான். அது விஜயலட்சுமியின் அக்கா உஷாவின் வரதட்சணை புகார் பற்றியது. விஜயலட்சுமியின் அக்கா கணவர் என்னைப் போன்ற சற்று யூத்தான தமிழ் இளைஞர்களுக்கு நன்று அறிமுகமானவர். 'திருட்டு புருஷன்' என்று ஆண்டு முழுவதும் காலை காட்சியாக ஓடி சாதனை படைத்த திரைப்படத்தின் கதாநாயகன் ராஜ்பாபு. இவர் நடிகை ஜெயப்ரதாவின் சொந்தத் தம்பி.
இவருடனான குடும்ப உறவு முறிந்த நிலையில், தனது அக்காவின் மகனை மீட்டுக் கொடுக்கும்படி 2008-ம் ஆண்டு விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அந்தச் சமயத்தில்தான் சீமானை விஜயலட்சுமி சந்தித்ததாக சீமானின் வழக்கறிஞர் சொல்கிறார். சீமானை விஜயலட்சுமி தெரிந்து வைத்திருந்ததற்கு காரணம் சீமான் இயக்கிய 'வாழ்த்துகள்' திரைப்படத்தில் அவரும் நடித்திருந்ததுதான். இந்தச் சின்னத் தொடர்பை வைத்து 3 ஆண்டுகள் கழித்து சூப்பரான திரைக்கதை அமைத்து கதை கட்டிவிட்டிருக்கிறார்கள் சிலர்..!
நேற்று இந்தத் தகவல் நிருபர்களுக்கு எப்படி சென்றது என்பதும் ஒரு சுவாரசியம்..! காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர்தான் சினிமா பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள். பத்திரிகையாளர்கள் கமிஷனர் அலுவலகத்துக்குப் போகும் முன்பேயே, விஜயலட்சுமி புகார் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்..!
ஆக முன்பே நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நாடகமாகவே இதனை நான் கருதுகிறேன்..! இதற்கு விஜயலட்சுமி என்ற பெண்ணும் உடந்தை என்பதுதான் வேதனை..!
ஒருவரின் கொள்கைகளை, கருத்துக்களை நேருக்கு நேராகச் சந்திக்கத் தைரியமில்லாத கோழைகள், அவரை எப்பாடுபட்டாவது வீழ்த்திவிட வேண்டும் என்று நினைத்து கேரக்டர் அஸாஸினேஷன் செய்ய முயற்சிப்பது கேவலமானது..!
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சீமானின் புயல்வேகப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் டவுசர் கிழிந்தது, அக்கட்சியினருக்கு பெரும் கோபத்தைக் கிளறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..!
தி.மு.க. நின்ற இடங்களிலெல்லாம் தோல்வி என்றால் அது ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த கடுப்பு என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் மீது..? அவர்கள் ஆளும் கட்சியினரின் தோழமைக் கட்சி என்ற ஒரு விஷயம் மட்டும்தான். ஆனால் இந்த ஒன்றுக்காகவேதான் காங்கிரஸுக்கு இவ்வளவு பெரிய தோல்வியா என்றால் இதை நான் நம்பவில்லை..!
ஊழலில் கூட்டணி அமைத்தது.. உயர்ந்து கொண்டேயிருந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த திராணியற்ற நிலையில் ஆட்சி நடத்தியது.. கூடவே எண்ணற்ற தமிழ் இளைஞர்களை கொந்தளிக்க வைத்திருந்த முள்ளிவாய்க்கால் படுகொலையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி செய்த துரோகமும், அந்தத் துரோகத்தை சீமான் தோலுரித்துக் காட்டியதாலும்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு இந்த அளவுக்கான படுதோல்வி கிடைத்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்..!
இல்லையெனில் தி.மு.க. கூட்டணி தோற்றிருந்தாலும், காங்கிரஸுக்கு சுமாராக 15 தொகுதிகளாவது கிடைத்திருக்கும்.. அதிலும் மாதத்தில் 20 நாட்கள் தொகுதியிலேயே இருந்து வீடு, வீடாக சென்று தனது பெயரை நிலை நாட்டி, கோடியை செலவிட்டிருந்த ஹெச்.வசந்தகுமாரும், வேலூரில் சிறந்த எம்.எல்.ஏ. என்று 4 முறையும் பெயரெடுத்திருந்த சி.ஞானசேகரனும், ராமநாதபுரத்தில் மதப் பெரியவர்களின் முழு ஆசியைப் பெற்றிருந்த ஹசன் அலியும் தோற்றிருக்கவே மாட்டார்கள்..!
பாரதீய ஜனதா என்ற கட்சி இடையில் புகுந்து ஓட்டுக்களைக் களவாடிய காரணத்தினால்தான் தற்போதைய 5 சீட்டுக்களே காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. பா.ஜ.க.வும் வராமல் இருந்திருந்தால் முட்டைதான் கிடைத்திருக்கும்..!
ஆக.. காங்கிரஸின் இந்தத் தோல்வியில் சீமானுக்கு பெரும் பங்கு உண்டு என்பது அக்கட்சியினருக்கு கோபத்தைக் கிளப்பி, இப்படியொரு பொய்யான புகார் கொடுக்க பின்புலமாக இருந்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது..!
இன்று காலையில் இருந்தே சினிமா துறையினர் பலரும் நிச்சயம் இது கட்டுக் கதை என்றே சொல்கின்றனர். இந்த அளவுக்கு சீமானின் நிஜ சுயரூபம் சினிமாவுலகில் தெரிந்திருக்கிறது..! இது ஒன்று போதும் அவருக்கு..!
எனக்கு சாபமிட மனசு வரவில்லை. ஆனாலும் மனம் பொறுக்காமல் சொல்கிறேன்.. விஜயலட்சுமியும், இந்தப் பழிக்குப் பின்னால் இருப்பவர்களும் வருங்காலத்தில் நிச்சயம் வெம்புவார்கள்..!
உண்மைத்தமிழன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு பெண் எப்படி தான் கலங்கமானவள் என்று பொய் சொல்வார்களா? என்பது தான் என் சந்தேகம்.
Similar topics
» சீமானை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை
» செந்தமிழன் சீமானை வரவேற்கும் நாம் தமிழர் கட்சியினர்
» சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு
» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
» இந்திராவால் கூட தி.மு.க.,வை வீழ்த்த முடியவில்லை: கருணாநிதி
» செந்தமிழன் சீமானை வரவேற்கும் நாம் தமிழர் கட்சியினர்
» சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு
» தீவிரவாதத்தை தூண்டும் சுண்டைக் காய் சீமானை கைது செய்து 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கணும்: நாராயணசாமி
» இந்திராவால் கூட தி.மு.க.,வை வீழ்த்த முடியவில்லை: கருணாநிதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|