புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
3 Posts - 5%
prajai
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
1 Post - 2%
Pradepa
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
219 Posts - 21%
sugumaran
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
18 Posts - 2%
prajai
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
5 Posts - 0%
Rutu
காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_m10காக்கும் இமை நானுனக்கு - Page 3 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கும் இமை நானுனக்கு


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:33 pm

First topic message reminder :

காக்கும் இமை நானுனக்கு - Page 3 Kakum

எப்போதும் போலவே அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது, நளினியின் மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது.

'உன்னதம்.'

இந்தப் பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வேலை செய்கிறாள்.

அகன்ற சலவைக் கல் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் மூன்று மாடிக் கட்டடம். எத்தனை கோடி பெறுமோ?

படியேறும் போதே, ஓர் அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமிப்பு.

எண்ணம் தொடரும் போதே, அவளது மனதுக்குள் நெருஞ்சியாய் உறுத்தலும் தொடங்கி விட்டது.

தோற்றத்தில் மட்டும் அந்தக் கட்டடம் அரண்மனையாக இருக்கவில்லை! உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் அரண்மனைவாசிகளுக்கு ஏற்றவை தான். ஏன்? அவர்கள் மட்டும் தான் வாங்கக் கூடியவையும் கூட.

தரத்தால் மட்டும் அல்ல. விலையும் அப்படித்தான்.

துணிகளா? மீட்டர் எண்ணூறு ஆயிரம் எல்லாம் சர்வ சாதாரணம். ஐந்நூறுக்குக் குறைவாக ஒன்றுமே கிடையாது.

அதே போல, மரச் சாமான்கள் பகுதி ஒன்று உண்டு. சோஃபா செட் ஒரு லட்சம் என்பார்கள். என்ன? அங்கங்கே தந்தம் இழைத்திருக்கும்! நல்ல வைரம் பாய்ந்த தேக்காக இருக்கும்.

அசல் நவரத்தினங்கள் பதித்த நகைகள். வைரமிழைத்த கைக்கடிகாரங்கள். அவற்றிலும், செய்கூலியே ஆளைச் சாப்பிட்டுவிடும். கூலி எவ்வளவு, சேதாரம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கிறவர்களால், இங்கே வாங்க முடியாது.

அதனாலேயே, சாதாரண மக்கள் இந்தக் கடையின் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும், இந்தப் பணக்காரச் சீமான்கள் வாங்கும் பொருட்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்துப் போவதற்காகத்தான். அதுவும் அபூர்வமாகத்தான். ஏனெனில், வாங்க இயலாத பொருட்களைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட எத்தனை பேருக்குப் பிடிக்கும்?

யாரும் அறியாமல் தட்டிக் கொண்டு போய்விடும் திட்டத்துடன் வருவோரும் உண்டு. ஆனால் அங்கங்கே சாதாரண உடையில் காவலுக்கு ஆட்கள் இருந்ததால், அது பலித்தது இல்லை. அன்றுவரை!

அந்தக் காலத்தில், பெரிய பெரிய பிரபுக்கள், வெள்ளைக்காரத் துரைகள், ராஜ குடும்பத்தினர், ஜமீந்தாரர்கள் போன்றோருக்கு ஏற்ற பொருட்களை, ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதி செய்யும் பொருட்டுச் சில மாதங்களுக்கு முன் வரை இதை நடத்திய பெரியம்மாவுடைய மாமனார், இந்த அங்காடியைத் தொடங்கியதாகச் சொல்லுவார்கள்.

இந்தத் தரம் குறையாமல் காப்பதுதான் முக்கியக் கொள்கையாக இருந்தது.

எனவே, அங்கொருவர், இங்கொருவர் தவிர, இந்தக் கடையில் வாடிக்கையாளர் அலைமோதி, நளினி பார்த்ததே கிடையாது.

குறைந்த பட்சமாக, அவள் இங்கே வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று மாத காலமாக. அதைப் பற்றி, அங்கே யாரும் கவலைப்படுவதும் கிடையாது.

தளத்துக்கு ஒருவராக, மூன்று தளங்களுக்கும், மூன்று வயதான நிர்வாகிகள். ரொம்ப காலமாக இங்கேயே பணி புரிகிறார்களாம்.

விற்பனை, இருப்புக் கணக்கு எடுப்பதும், புதிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுப்பதும் அவர்களது பொறுப்பு.

அவர்களிடம் நளினி மோதிப் பார்த்திருக்கிறாள். அதை விடக் கற்பாறையில் மோதினால், ஏதோ பாறை கொஞ்சம் அசையக் கூடும் என்று புரிந்தும் இருக்கிறாள்.

புருவங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, மூக்கு நுனியில் நிற்கும் கண்ணாடி வழியே, ஒரு தூசியைப் போலப் பார்த்து, "இந்தக் கடையின் பாரம்பரியம் பற்றிச் சின்னப் பெண் உனக்கு என்ன தெரியும்? எழுபது ஆண்டுகளாக, எனக்குத் தெரியவே நாற்பத்தைந்து வருஷங்களாக மதிப்பும் மரியாதையுமாக நடத்தப்படுகிற கடை! பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் காரில் வந்து இறங்கி, மறு விலை கேளாமல் வாங்கிப் போகிற இடம்! இதில் போய், உன் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்ப் பொருட்களைக் கொட்டிக் கேவலப்படுத்துவதா? பெரியம்மா மட்டும் இருந்து, அவர்கள் காதில் உன் பேச்சும் விழுந்திருக்கட்டும், உன்னை அப்போதே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். முதலில், வேலை பார்க்கக் கூட, நீ இங்கே உள்ளே நுழைந்திருக்க முடியுமா? இப்போதுதான் என்ன? உன்னை நாங்களே வெளியேற்றி விடுவோம்! என்னவோ புதுசாய் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்று விட்டு வைத்திருக்கிறோம்," என்று மிரட்டுவார் ஒருவர்.

"உன் வேலை என்ன? அங்கங்கே, தளத்துக்குத் தளம் பொருட்களைக் கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கு அழகாக அடுக்கி வைப்பதுதானே? அத்தோடு நிறுத்திக் கொள். அதற்கு மேல், அதிகப் பிரசங்கித்தனம் செய்யாமல், வாயை மூடிக் கொண்டிரு. மீறினால், வேலைக்கே வேட்டு வைத்து விடுவோம்," என்பார் அடுத்தவர்.

"பெரியம்மா பார்த்து வைத்த ஆட்கள் நாங்கள். எங்களுக்கு வேலை தெரியாது என்று, நீ வந்து சொல்கிறாயா? வயதுக்கு மரியாதை கொடுக்கக் கூடத் தெரியவில்லையே!" என்று ஆளாளுக்கு அவளை மிரட்டினார்களே தவிர, வளாகத்தில் உள்ள கடைப் பொருட்களின் விற்பனைப் பெருக்கத்துக்காக, உருப்படியாக எதையும் செய்யக் காணோம்.

இந்த அழகில், மதிய உணவுக்காக மூடுவது வேறு. பன்னிரண்டு மணிக்கு எடுத்து வைக்கத் தொடங்கினால், மீண்டும் கடை திறக்க நாலு மணி ஆகும்.

வாடிக்கையாளர்கள் வீட்டில் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து, கடை கண்ணிக்குக் கிளம்பி வர, அவ்வளவு நேரமேனும் ஆகாதா என்று கேள்வி வேறு.

தூக்கம் தேவைப்படுவது, கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அல்ல, வளாகத்தின் முதிய நிர்வாகிகளுக்குத் தான் என்பது, நளினியின் அபிப்பிராயம்.

ஆனால், யாரிடம் முறையிடுவது?

அவளுக்கும் அலுத்து விட்டது.

எப்படியோ போகிறார்கள்.

இந்த வளாகத்துடைய உரிமையாளர்கள், பல தலைமுறைகளாகப் பெரிய பணக்காரர்கள். எங்கெங்கோ பங்களாக்கள், சொத்துக்கள், பெரிய வருமானங்கள் உண்டு என்று கேள்வி.

இந்தக் கடையிலிருந்து வந்து, நிறைய வேண்டியதில்லை. சும்மா ஒரு கௌரவத்துக்காக நடத்துகிறார்கள் என்றும்.

அப்புறமென்ன?

விற்பனைப் பகுதிப் பொறுப்பாளரிடமிருந்து, கணக்குச் சொல்லி எடுத்த பொருட்களுக்குக் கையெழுத்திட்டு விட்டுப் பொருட்களோடு வந்து, அவற்றை இயன்றவரை கவர்ச்சிகரமாகக் கண்ணாடித் தட்டுகளில் அடுக்கத் தொடங்கிய போது, வளாகத்துடைய காவல் பொறுப்பாளரான பூவலிங்கம் வந்தார்.

"என்னம்மா, நீ அடுக்கிறதைப் பார்த்து, கண்ணாடி அலமாரியோடு தந்துவிடுங்கள் என்று கேட்டு விடுவார்கள் போல இருக்கிறதே!" என்று கிண்டலடித்துவிட்டு, "ஜாக்கிரதை அம்மா! எந்தப் பொருளும் தவறிவிடாமல் பார்த்துக் கொள்," என்று எச்சரித்து விட்டுப் போனார்.

ஆமாம் என்று அவளுக்கும் அலுப்பாகத்தான் இருந்தது.

ஏதோ செய்வன திருந்தச் செய்வது என்ற பழக்கத்தில் செய்து கொண்டிருந்தாளே தவிர, நளினிக்கு, அவளது வேலையில் ஈடுபாடு கொஞ்சம் குறைந்து தான் போயிற்று எனலாம்!

கொஞ்சமென்ன? ரொம்பவே.


எவ்வளவு காலம்தான் இருப்பதையே மாற்றி அமைத்துக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது?

விற்க விற்க, விதம் விதமாகப் பொருட்களைப் புதிது புதிதாக அன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப வாங்கி வாங்கி வைத்தால், அவளும் புதிது புதிதாகக் கண்ணைக் கவரும்படி விதம் விதமாக அடுக்க முடியும்!

அதுவும், இன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப என்றால், எண்ணில் அடங்காத வகைகள் எத்தனையோ கிடைக்கும். அவைகளை வாங்கிக் கொடுத்தால்...

ஆனால், அதெங்கே இங்கே நடக்கும்? அப்புறம், மழை கொட்டோ கொட்டென்று கொட்டி, ஊரெல்லாம் வெள்ளத்தில் முழுகிப் போய்விடாதா?

எண்ணத்திற்கு ஏற்ப, சிறு ஏளனத்துடன் தோளைக் குலுக்கியவாறு திரும்பியபோது தான், நளினி முதலில் அவனைப் பார்த்தது!

நல்ல உயரம்! உயரத்துக்குச் சற்றே மெலிவுதான் என்றாலும், உடல் கட்டில், நடையில் உறுதி தெரிந்தது.

அவள் அடிக்கடி ஆசையாக ஏறி இறங்கும், அழகிய அரண்மனைப் படிக்கட்டுகளின் வழியே வராமல், லிஃப்டின் கதவைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

அவன் மட்டுமல்ல, அவனோடு இன்னும் சிலரும்... மொத்தம் மூன்று பேர்.

அவனுக்கு முன்னும் பின்னுமாக வந்த மற்ற இரண்டு பேரும், பந்தாவாகப் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டபடி, இங்கும் அங்குமாகத் திருதிருவென்று விழித்துப் பார்த்தவிதம் அவளுக்குச் சிரிப்பூட்டியது.

பின்னே கடைக்கு வந்தால், என்னென்ன சாமான் இருக்கிறது என்று பாராமல், இங்கே யாரேனும் திருடன் இருக்கிறானா என்று கண்களை உருட்டி உருட்டித் தேடுவது போலப் பார்த்தால்...?

இவர்கள் தேடுவது, திருடனையா... அல்லது காவலாளியையா?

ஒருவேளை, இவர்களே திருடர்களாக இருந்தால்... இருந்தாலும், அப்படி ஒன்றும் பயப்படத் தேவையில்லை! இந்தக் கடை வளாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடு வலுவானது. பில் போட்டுப் பணம் தராத எதையும் எளிதில் வெளியே கொண்டு போய்விட முடியாது. அத்தோடு, அந்தத் தளத்தின் விற்பனை ஆட்களோடு, இவர்களோடு வந்த அந்த மனிதனும் இருக்கிறான்!

நேர் நடையுடன் வந்த அவன் உதவ மாட்டானா, என்ன? பார்த்துக் கொள்ளலாம்.

தன்னையறியாமல் ஓரப் பார்வை அந்தப் புதியவனிடம் ஓடவும், கட்டுப்படுத்திக் கொண்டு திரும்ப முயன்றவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஏனெனில், அவன் தனது பழைய கைக்கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, அங்கிருந்த விலை உயர்ந்த ஒன்றை எடுத்துத் தன் கையில் கட்டிக் கொண்டிருந்தான்.

அதன் முள், எண்கள் எல்லாம் வைரங்கள்! விலை லட்சத்துக்கும் மேல்! அதைப் பார்த்ததும், தன் பழைய ஓட்டைக் கடிகாரம் பிடிக்காமல் போய் விட்டது போல!

ஆனால் அதற்காகத் திருடலாமா?

அதுவும் திருடர்களைப் பிடிக்க யார் உதவுவான் என்று நினைத்திருந்தாளோ, அவனே அல்லவா, அங்கே திருடிக் கொண்டிருந்தான். என்ன அநியாயம்!

இருந்திருந்து, அவனைப் போய் நல்லவன் என்று நினைத்தாளே.

நல்லவன் போல வேஷமிடும் அயோக்கியன்.

இவனது முகத்திரையைக் கிழித்து, இவனது உண்மைத் தோற்றத்தை ஊர் உலகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

அவன் கைக்கடிகாரம் திருடியதை அறியாதவள் போன்று, அவனை நெருங்கினாள் நளினி.

ஆனால், அந்த நெடியவனை அவள் நெருங்கு முன், மற்ற திருதிரு முழிக்காரர்களில் ஒருவன், குறுக்கே வந்து, அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சற்றே விலகி நின்றான்.

ஏன் குறுக்கே வந்தான்? ஏன் விலகிப் போனான்?

எப்படியோ போகட்டும். இவனைப் பார்த்துத் திருடனை விட்டுவிடக் கூடாது என்று எண்ணி, அவனை நெருங்கி, "இங்கிருப்பதை விட விலை உயர்ந்த வைரங்கள் அந்த அறையுள் இருக்கின்றன. பார்க்கிறீர்களா, சார்?" என்று கேட்டாள்.

"பரவாயில்லை. இந்த வளாகத்தில், விற்பனையில் அக்கறை உள்ளவள் நீ ஒருத்தியேனும் இருக்கிறாயே," என்றவன், அவளைப் பாராமல் எங்கோ நோக்க, அந்தத் 'திருதிருமுழி'களில் ஒருவன் வேகமாக அந்த அறையினுள் சென்றுவிட்டுத் திரும்பி வந்தான்.

இன்னொருவன் நெடியவனை ஒட்டிக் கொண்டே நின்றான்.

இவர்கள் மூவருமே கூட்டுக் கள்ளர்களாக இருக்கக் கூடுமோ என்று எண்ணிவிட்டு, இராது என்ற முடிவுக்கு வந்தாள் நளினி. ஏனெனில், மற்றவர்கள் யாரும் பொருட்களின் பக்கம் பார்க்கக் கூட இல்லையே.

அப்படியே கூட்டாக இருந்தால் சேர்ந்து மாட்டட்டும் என்று எண்ணியவளாய், "வாருங்கள் சார்!" என்று அழைத்துச் சென்றாள்.

உள்ளே சென்றதும், அவளையே நோக்கி, "என்னவோ விலை உயர்ந்த வைரங்கள் இங்கே இருப்பதாகச் சொன்னாயே. பார்த்தால், வெறும் பீரோக்கள் மட்டும் தானே இருப்பதாக அல்லவா காண்கிறது?" என்று கேட்டான் அவன்.

"இருக்கின்றன சார். ரொம்பவும் விலை உயர்ந்தனவா? பீரோவில் நன்றாகப் பூட்டி வைத்திருக்கிறார்கள். நான் போய்ச் சாவியை வாங்கி வந்து திறந்து காட்டுகிறேன் சார்!" என்று வேகமாக அறையிலிருந்து வெளியே வந்தவள், அதைவிட அதி விரைவாக அறைக்கதவை இழுத்துப் பூட்டினாள்.

மின்னலெனப் பாய்ந்து கீழிறங்கிச் சென்றவள், கீழ்த்தளத்தில் மூன்று தளத்து நிர்வாகிகளும் சேர்ந்து அமர்ந்து, நிறுவன விஷயமாகக் கலந்துரையாடும் - அவளது அபிப்பிராயப்படி, மூவருமாக வெற்று அரட்டையடிக்கும் - தனி அறைக்குள் வேகமாகச் சென்றாள்.

"அனுமதி கேட்காமல், நீ எப்படி..." என்று அதட்டலாகத் தொடங்கிய ஒருவரின் பேச்சை அலட்சியம் செய்து, "நம் கடை வளாகத்துள் ஒரு திருடன் புகுந்து விட்டான் சார். அவனைக் கூட்டாளிகளோடு, நம் ரிக்கார்டு அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு வந்தேன். வந்து, அவர்களைப் பிடித்துப் போலீஸில் ஒப்படையுங்கள்!" என்று மூச்சு விடாமல் கூறி முடித்து விட்டு, அதன் பின்னரே மூச்சு வாங்கினாள் நளினி.

பெரியவர்கள் மூவருமே திகைத்துத் திணறிப் போயினர்.

அவர்கள் அறிந்தவரையும், திருடர்கள் என்றால், பில் போட்டுப் பணம் கொடுக்காமல், ஒன்றிரண்டு பொருட்களைக் கொண்டு செல்ல முயல்வார்கள். உள் வாயிலைத் தாண்டும் போதே 'பீப்' சத்தம் வந்துவிடும். 'செக்யூரிட்டி' ஆட்கள் உடனே திருடனைப் பிடித்து விடுவார்கள். மரியாதையாகப் பணத்தைக் கேட்பார்கள். பணம் இல்லையென்றால், பொருளைப் பிடுங்கிக் கொண்டு, நாலு தர்ம அடி போட்டு விரட்டி விடுவார்கள்.

இப்போது, இவள் ஒருத்தியாக ஒன்றுக்கு மேற்பட்ட திருடர்களைப் பூட்டி வைத்தாளாமே! நம்புகிறாற் போலவா இருக்கிறது?

மூளை உள்ள எவனாவது அந்த அறைக்குள் வைர நகைகள் இருப்பதாக நம்பி உள்ளே செல்லுவானா?

அங்கே ஒன்றும் இல்லாததும் நல்லதுதான்.

ஆனால், எப்படிப்பட்ட முக்கியமான ரிக்கார்டுகள் அங்கே பத்திரமாய் வைக்கப்பட்டு இருக்கின்றன. சொத்துக் கணக்கு, சொத்துரிமைக் கணக்கு, இத்தனை ஆண்டு வரவு செலவுக் கணக்கு... அங்கே போய்த் திருட்டுப் பயல்களை விடுவதா?

ஆனால், இவள் சொன்னதை நம்பி, மூன்று தடிமாடுகள் வெறும் இரும்புப் பீரோக்கள் இருக்கும் அறைக்குள் போய் மாட்டிக் கொள்வார்களா?

கேழ்வரகில் நெய் வருகிறது என்று ஒரு புளுகிணி சொன்னால், அதை நம்புவதற்குக் கேட்கிற அவர்கள் என்ன, புத்தியில்லாதவர்களா?

அதுவும் பெரியம்மாவால் நியமிக்கப்பட்ட அவர்கள்!

மூவருமாகச் சேர்ந்து வெறும் கதை என்று முடிக்கையில், அந்தப் பக்கமாக வந்த நிறுவனப் பாதுகாப்பு அதிகாரியை, நளினி ஆத்திரத்தோடு கூப்பிட்டாள்.

"பூவலிங்கம் சார், நம் கடையில் வைர வாட்ச் திருடிய ஒருவனையும் அவனுடைய கூட்டாளிகளையும், மேல் தளத்து ரிக்கார்டு அறையில் பூட்டி வைத்திருக்கிறேன். கூடச் சில ஆட்களை அழைத்துப் போய், அவனைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைக்கிறீர்களா? அங்கே முக்கியமான பத்திரங்கள் இருக்கிறதாம்! அவை, அடுத்தவர் கண்ணில் பட்டாலும் ஆபத்து, என்று இந்தப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதனால், சீக்கிரமாக ஏதாவது செய்யுங்கள்" என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கேட்டுக் கொண்டாள்.

"வை...ர வாட்ச்! ஐயோ ஒன்றரை லட்சம் விலையாயிற்றே. அப்படியானால், நீ நிஜமாகத்தான் சொல்லுகிறாயா? கடவுளே, அந்தச் சின்னப் பயலுக்குத் தெரிந்தால், நம்மைத் தொலைத்துக் கட்டி விடுவானே. சீக்கிரம் ஓடுங்கள், பூவு. நம் ஆட்களையே நாலைந்து பேரைக் கூட்டிக் கொண்டு, ஓடிப் போய், அவனைப் பிடியுங்கள். கைக்கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு, அப்புறமாகப் போலீசில் ஒப்படைக்கலாம். ஜன்னல் கின்னலைத் திறந்து, கடிகாரத்தை வெளியே வீசி விட்டால், நமக்கு நட்டத்துக்கு நட்டம். அத்தோடு, அவனது திருட்டுக்கு ஆதாரமும் இராது. அப்புறம் அவன் நம் மேலேயே கேஸ் போட்டு விடுவான்."

மூவருமாக ஆளுக்கொன்றாகச் சொன்னதின் சாராம்சத்தைக் காதில் வாங்கிக் கொண்டு, பூவலிங்கம் தன் ஆட்களைத் திரட்டிக் கொண்டு, மேல் தளத்துக்கு விரைந்தார்.

அதற்குள் நிர்வாகிகள் மூவரும் லிஃப்ட் வழியே, அங்கே வந்து சேர்ந்து, முடிந்தவரை தூரமாய் ஒதுங்கி நின்றனர். கூட வந்த நால்வரையும், நாலு இடங்களில் நிற்கச் செய்துவிட்டு, பூவலிங்கம் கதவைத் தட்டி, "பாருங்கப்பா, கதவைத் திறந்தால், நாலைந்து இடங்களில் துப்பாக்கியோடு நிற்கிறார்கள். அதனால் மரியாதையாகக் கைகளைத் தூக்கிக் கொண்டு வெளியே வாருங்கள். அசட்டுத்தனம் எதுவும் செய்தால், உங்கள் உயிருக்குத் தான் ஆபத்து" என்று உரத்த குரலில் கூறிவிட்டு, மெல்லக் கதவைத் திறந்துவிட்டு ஒதுங்கி நின்றார்.

வாட்ச் திருடனுடைய கூட்டாளி, தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்து, உள்ளே ஏதோ சொல்ல, பூவலிங்கத்தின் எச்சரிக்கையைச் சற்றும் மதியாமல், வெகு அலட்சியமாக வெளியே வந்தான், அந்தத் திருடன்.

"என்ன பூவலிங்கம், என்னைச் சுட்டு விடுவீர்களா?" என்று கேட்ட அவனது ஏளனப் பார்வை, நளினியின் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.

சூழ இருந்தோரின் முகத்தில் இருந்த இறுக்கமும் பயமும் மறைந்து, ஒருவிதமான அசட்டுத் தனத்தோடு கூடிய பதற்றம் பரவியது.

மூன்று நிர்வாகிகளும், கூழைக் கும்பிடு போட்டபடி, "சா...ர் நீங்களா? உரிமைக்கார உங்களைப் போய், இந்த முட்டாள் பெண்..." என்று வழிந்தவாறு, அந்த நெடியவனிடம் ஓடினார்கள்.

திருடன் என்று தான் அறைக்குள் அடைத்து வைத்திருந்தது யார் என்று புரிபட, நளினியின் கால்களின் கீழிருந்த பூமி நழுவியது.



காக்கும் இமை நானுனக்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:43 pm

என்ன தான் பழைய ராஜாக்கள் காலம் மாதிரி மெய்க்காவலர்களை அவன் அவனுக்கு வைத்திருப்பதே அவளுக்குப் பிடிக்காவிட்டாலும், அவனோடு வாக்குவாதம் செய்யப் பிடிக்காமல் வாளா இருந்தாள். ஆனால், இப்போது அவன் நியமித்திருப்பது அவளுக்கு அல்லவா?

முன்னதைக் காட்டிலும், இது அதிக எரிச்சல்தான். ஆனால், அவன் செய்தது, அவளது நலம் கருதி. அதனால், அவனிடம் சினம் காட்டுவது, சரியல்ல. நிதானமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஒருவாறு மனதை அமைதிப்படுத்திக் கொண்டு, புவனேந்திரனுக்குப் போன் செய்தால், அவளிடம் விடை பெறாமலே, அவன் சென்னையை விட்டுக் கிளம்பிச் சென்றிருந்தான்.

அப்படி அவன் சொல்லாமல் சென்றதே இல்லையே.

மறுநாளில் இருந்து, திரும்பி வரும்வரை, அவளைப் பார்க்க முடியாதே என்று வருத்தப் படாமல், அவன் பிரிந்து போனதும் கிடையாதுதான்.

சட்டென நளினியின் மனம் கலங்கிப் போயிற்று.

'போய் வருகிறேன்' என்று ஒரு வாக்கியம்.

அவளிடம் ஏன் சொல்லவில்லை? ஏதேனும் கோபமா?

ஏன் கோபம்? அவள் ஏதேனும் தப்பு செய்தாளா?

அவளை அறியாமலே ஏதேனும் தப்பு செய்து, அவளிடம் மனம் வெறுத்துப் போய் விட்டானா?

முன்பும், இதே போல நன்றாகப் பழகிக் கொண்டு இருந்த போதுதான், திடீரென்று ஒதுங்கிக் கொண்டான்.

இப்போதும் அப்படிச் செய்ய மாட்டான் என்று, என்ன நிச்சயம்?

முன்பு திரும்பி வந்தான். ஆனால், இப்போதும் வருவான் என்று என்ன நிச்சயம்?

தொழில் இருக்கிறது. கட்டாயம் வரத்தான் போகிறான்.

ஆனால், அவனிடம் உள்ள அன்பு? அது மாறாமல் இருக்குமென்று என்ன நிச்சயம்?

நிச்சயம் தான். நிச்சயமேதான்! இதே தொழில் முன்னரும் இருந்தது! ஆயினும், அது போதாதென்று, அவளுக்காக வரவில்லையா?

இப்போதும் வருவான்.

இப்படிப் பலவாறு யோசித்து, மிகவும் சிரமப்பட்டு மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அவள் கவலையோடு காத்திருந்தால், ஒன்றுமே நடவாதது போல, அவன் வெகு சாதாரணமாகத் திரும்பி வந்தான்.

வந்தவன், அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்றது பற்றி, எந்த விளக்கமும் இல்லாமல், "இந்தத் தளிர்ப் பச்சை வண்ண சல்வாரில், நீ தேவதை மாதிரி இருக்கிறாய்!" என்ற போது, நளினியால் அதை இயல்பாக ஏற்க முடியவில்லை.

பத்து நாட்களாகப் பட்ட துன்பம் உசுப்ப, "நான் உங்களைத் தேடினேன். ஆனால், நீங்கள் ஊருக்குப் போய்விட்டதாக, உங்கள் வீட்டுக் காரியஸ்தர் சொன்னார்," என்றாள் ஒரு மரத்த குரலில்.

ஒரு விநாடி தயங்கினானோ?

அவள் நிச்சயப்படுத்திக் கொள்ளுமுன், "அடடா!" என்று தலையில் தட்டிக் கொண்டான் புவனேந்திரன். "இதைத்தான் துரதிர்ஷ்டம் என்பது. வழக்கமாக, நானாகத்தானே ஓடி ஓடி வருவது? அப்படியின்றி அதிசயமாக, மகாராணி நீயே என்னைத் தேடி வந்தால், அந்தச் சமயம் பார்த்து, வேலை என்னை வேறிடத்துக்கு அழைத்துச் சென்று விட்டது, பார்! என்னம்மா, ஏதும் தன்னந் தனிமையில் கவனித்தாக வேண்டிய சமாசாரமா? அதற்கெல்லாம், கால நேரம் எதற்கு? இப்போது வேண்டுமானாலும்... என்ன சொல்லுகிறாய்?" என்று தணிந்த குரலில் கொஞ்சலாகக் கேட்டுக் கண் சிமிட்டினான்.

அவனது பேச்சின் பொருளும், கண் சிமிட்டலுமாக, நளினியின் முகம் செக்கச் சிவந்து போயிற்று.

"ச்சு! போங்கள். என்ன பேச்சு இது? நான் ஒன்றும், அந்த மாதிரி உங்களைத் தேடவில்லை. ஆனால்..." என்றவளை இடைமறித்து, "நினைத்தேன்," என்றான் அவன் சோகமாக.

"நமக்கேதுடா அப்படிப்பட்ட அதிர்ஷ்டமெல்லாம் என்று, முதலிலேயே சந்தேகம் தான்! ஆனாலும், ஒரு நிமிஷம் மனம் என்னென்னமோ ஆகாயக் கோட்டை கட்டி விட்டது. ஆனாலும், அவ்வளவு உயரத்திலிருந்து, மனிதனை இப்படித் தடாலென்று படு பாதாளத்தில் தள்ளக் கூடாதும்மா. பார், ஏமாற்றத்தில் எனக்குச் சரியாகப் பேசக்கூட முடியவில்லையே," என்று, அவன் மேல் மூச்சு வாங்கிக் காட்ட, அடக்க மாட்டாமல், அவளுக்குச் சிரிப்பு வந்துவிட, அந்தப் பேச்சு அத்தோடு போயிற்று.

அவளை வீட்டிற்குக் கூட்டி வந்து, பெற்றோருடன் கலகலப்பாகப் பேசியிருந்து விட்டுப் புவனேந்திரன் கிளம்பிச் செல்லும் வரை, நளினிக்கு வேறுபாடாக ஒன்றும் தோன்றவில்லை.

அதிலும், பேசியது திருமணத் திட்டங்கள்!

எப்படி எளிமையாகக் கோவிலில் திருமணத்தை முடித்துக் கொண்டு, நேரே திருமணப் பதிவு அலுவலகத்துக்குப் போய்த் திருமணத்தைப் பதிவு செய்து விடுவது என்று மண நாளின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி, அவன் விளக்கிக் கூறிய போது, நளினியின் முழு மனதும் அதில்தான் இருந்ததே தவிர, வேறு எதையும் எண்ணிப் பார்க்கக் கூட அவளுக்குத் தோன்றவில்லை.

பிறகும், வீட்டினர் நால்வரும் அது பற்றித்தான் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

தான் விரும்பியது போல, விலை உயர்ந்த டிஷ்யூ, புரோகேட் சேலைகளில் மகளை அலங்கரித்துப் பார்க்க முடியாது போல இருக்கிறதே என்று, சகுந்தலா குறைப்பட்டாள். சூரிய சந்திரப் பிரபைகளோடு நெற்றிச் சுட்டி, நத்து, இடுப்பில் ஒட்டியாணம் என்று, தன் அழகிய மகளின் அலங்காரம் பற்றி, அவளுக்கு எண்ணிறந்த கனவுகள்.

வருங்கால மருமகனின் எளிமையான திருமணத் திட்டத்துக்கு, அந்த மாதிரி அலங்காரங்கள் சற்றும் பொருந்தாது.

இந்தச் சுருக்கமான எளிய திருமணத்திற்கு, அவர் விரும்பிய வண்ணம், அக்கம் பக்கத்தார், உறவினர், நட்பாளர்கள் அனைவரையும் எப்படி அழைப்பது என்ற குழப்பம் சுதர்சனத்துக்கு.

இதற்கிடையே, "எனக்கு வகுப்பில் எந்தப் பரீட்சையும் இல்லாத நாள் பார்த்துத் திருமணத்தை வையுங்கள். லீவு போடவும் சொல்லாதீர்கள். நான் பிளஸ் டூவாக்கும்!" என்று பெரிய முக்கியஸ்தி போல, ஊடுபா ஓடினாள், தங்கை மஞ்சரி.

வீட்டுக் கடைக்குட்டி என்பதால், அவளது பேச்சில் எல்லோருக்கும் சிரிப்புதான் வந்தது.

பேச்சும் சிரிப்புமாக இருந்து விட்டு, நால்வரும் படுக்கப் போகவே, மணி பதினொன்றை நெருங்கி விட்டது.

ஆனால், புவனேந்திரனின் புன்னகை முகத்தை நினைத்த வாறே சுகமாகப் படுத்தவளுக்குச் சட்டென்று உறுத்தியது.

சொல்லாமல் கொள்ளாமல், தான் திடுமென வெளியூர் சென்றது பற்றிய விவரத்தைப் புவனேந்திரன், அவளிடம் சொல்லவே இல்லை.

எப்போதுமே, தனது வேலைகளை எல்லாம் அவளிடம் அவன் ஒப்பித்துக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது. அப்படி அவள் எதிர்பார்க்கவும் இல்லை.

'உன்னதம்' தவிர, அவனது மற்றத் தொழில்கள் பற்றி, அவனே சொன்னாலும், அவளுக்குப் புரிவதற்கில்லை.

ஆயினும், மில்லுக்குப் பஞ்சு வாங்கப் போனேன், பிரிண்ட் போட்ட பனியன் துணி ஏற்றுமதிக்கு முடித்துக் கொடுப்பதைப் பார்க்க வேண்டியிருந்தது. இப்படிப் பொதுவாக என்ன விஷயம், எங்கே போனான் என்பதைப் பற்றிச் சொல்லுவான்.

செல்லும் போதும் சொல்லுவான். அல்லது, வந்த பிறகேனும் பேச்சில் வரும். 'உன்னிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை!' என்பது போன்ற இயல்பான பேச்சு.

எப்படியும், இன்னும், 'இத்தனை நாட்கள் உன்னைப் பார்க்க முடியாதே!' என்று வருத்தப்படாமல் அவன் பிரிந்து சென்றதே கிடையாது.

ஆனால் இந்த முறை அதெல்லாம் ஒன்றுமின்றி அவன் சென்றது மட்டுமின்றி, சென்று என்ன செய்தான் என்பதையும் சொல்லாமலே மழுப்பி விட்டான்.

அது மழுப்பலேதான்.

மேற்கொண்டு பிடிவாதமாகக் கேட்டு விடுவாளோ என்ற கலக்கத்தில், அதைத் தவிர்ப்பதற்குத்தான், புவனேந்திரன் அவ்வளவு கொஞ்சலும் குலாவலுமாகப் பேசினானோ?

திருமணத் திட்டங்கள் பற்றி விவரித்தது கூட அதற்காகத் தானோ என்று தோன்றவும், நளினி குழம்பிப் போனாள். குன்றியும்!

எப்போதுமே, அவன் சென்னையில் இல்லாத போது, நளினிக்குக் கொஞ்சம் மனதுக்குச் சோர்வாகத்தான் இருக்கும். அப்புறம், அவன் திரும்பி வந்ததும், உலகம் வண்ண மயமாக ஆகிவிடும்.

இப்போது அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் போன போது தோன்றிய, புவனேந்திரன் தன்னை வெறுத்து விட்டானோ, விலகிப் போய் விடுவானோ என்று தோன்றிய கலக்கங்கள் எல்லாமே, அவனை நேரில் பார்த்த பிறகு அடியோடு மறைந்து போயின.

ஆனால், அவன் அறியக் கூடாத ஏதோ ஒரு மர்மம் அவனது வாழ்வில் இருக்கிறதோ என்ற ஐயம் இப்போது அவளுக்கு உண்டாயிற்று.

அது என்னவாக இருக்கக் கூடும்?

அவளிடம் சொல்லக் கூடாதது என்றால், ஒரு வேளை, அது அவனுடைய முதல் மனைவி சம்பந்தப்பட்டதாக இருக்குமோ?



காக்கும் இமை நானுனக்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:44 pm

நளினியின் மனம் ரொம்பவே குழம்பலாயிற்று.

புவனேந்திரனின் மர்மப் பயணத்தின் காரணம், அவனுடைய முதல் மனைவி தொடர்புடையதாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் மட்டும்தான், அவளுக்கு முதலில் தோன்றியது.

அந்த ரதியின் பிறந்த நாளோ? அன்றி இறந்த நாளோ? அது தொடர்பான சடங்குகளுக்காகப் புவனேந்திரன் சென்றிருக்கக் கூடும் என்றாலும், அதை முழுமையாக அவளால் ஒப்ப முடியவில்லை.

அந்த மாதிரி விஷயம் என்றால், அதை மூடி மறைப்பானேன்?

அதுவும், ஏற்கெனவே மணமானதை வெளிப்படையாகச் சொன்னவன், இதையும் சொல்லிவிட்டே சென்றிருக்கலாம். ஒருவர் இறந்து விட்டால், சில குறிப்பிட்ட நாட்களில் அவர்களை நினைவு கூர்ந்து, சில சடங்குகளைச் செய்வது, நம்மில் பழக்கம் தானே?

அதுவும் அவனது முதல் மணம் அவனது கடந்த காலம். அதை அவள் பொருட்படுத்தப் போவதில்லை என்று விட்ட பிறகு, இது போன்ற விஷயங்களை அவளிடம் மறைக்கத் தேவையே இல்லையே.

எனவே இது வேறு விஷயம்.

எப்போதும், கிங்கரர்கள் மாதிரிக் கூடவே நிற்கும் காவலர்களின் காதுகளுக்குக் கூட எட்டக் கூடாத தொழில் ரகசியமாக இருக்கக் கூடும் என்று தன்னைத் தானே, நளினி சமாதானம் செய்து கொண்ட போதும், அவள் கொஞ்சமும் அறியாத ஏதோ ஒன்று புவனேந்திரனின் வழியில் இப்போது இருப்பது, அவளுக்கு உறுத்தலாகவே இருந்தது.

அப்படி எதையும் அவனிடமிருந்து மறைக்க வேண்டும் என்று, அவளுக்குத் தோன்றியதே இல்லையே.

இந்நிலையில், அவளது ஆத்திரத்தைத் தூண்டும் விதமாக, மறுநாள் வேறொன்று நடந்தது.

தனக்குப் போலவே, புவனேந்திரன் அவளுக்கும் காவலுக்கு ஆள் வைத்தது, நளினிக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒன்று. அது பற்றித் தன்னுடைய வருங்காலக் கணவனுடன் பேசி, அந்தக் காவலை நிறுத்தியாக வேண்டும் என்று, அவள் ஏற்கெனவே முடிவு செய்திருந்தாள்.

ஆனால், ஏற்பாடு செய்து, சம்பளமும் கொடுக்கும் புவனேந்திரனின் சொல்தான், அந்தப் பாதுகாவலர்களிடம் எடுபடும் என்று புரிந்ததால், அவன் திரும்பி வரும்வரை, இந்தப் பாதுகாவல் விஷயம் அவளது குடியிருப்புப் பகுதியில் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்காத விதத்தில், மிகவும் எச்சரிக்கையுடனேயே நடந்து கொண்டாள்.

சாதாரணமாக வெளியே செல்வதை நிறுத்திக் கொண்டு, தந்தை வேலைக்குச் செல்லும் போது, அவருடனேயே 'உன்னத'த்துக்குச் சென்று இறங்கிக் கொண்டு, வேலை முடிந்து, அவர் திரும்பி வரும்போது, அவருடனேயே அவளும் திரும்பி வந்தாள்.

குடியிருப்புப் பகுதிக் கடைக்குக் கூடச் செல்வது இல்லை.

துணிகளுக்கு அலங்கார வேலைக்குத் தேவையான பொருட்களை வாங்குவது, வேலை முடித்த துணிகளை உரிய இடங்களில் சேர்ப்பது எல்லாவற்றையும் விட்டு விட்டாள்.

எனவே, அந்தக் காவலர்கள் அவளைப் பின் தொடர்வது, வெளிப்படையாக யார் கண்ணிலும் பெரிதாகப் படாமலே இருந்து வந்தது.

ஆனால், அன்று இரவெல்லம் மனக் குழப்பத்தில் புரண்டவள், காலையில் அதிக நேரம் தூங்கிவிட, சுதர்சனமும் அன்று வெளியே ஒருவரைச் சந்தித்துப் பேசி விட்டு வேலைக்குப் போக வேண்டியதாக இருந்ததால், தேவைப் பட்டால், நளினியை ஆட்டோவில் போகச் சொல்லும்படி மனைவியிடம் கூறிவிட்டு, அதிகாலையிலேயே கிளம்பிவிட்டார்.

நளினிக்கும் அது உசிதமாகவே தோன்றியது.

குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியே வந்தால் 'உன்னத'த்துக்கு வெகு அருகிலேயே இறங்குவதற்குப் பஸ் வசதி இருந்தது.

ஆனால், அவள் பஸ்ஸில் ஏறி, முன்னும் பின்னுமாக இந்தப் பாதுகாவலர்களும் ஏறி, இங்குமங்கும் விழித்துப் பார்த்தால், ஏதேனும் ஏடாகூடம் ஆகி, இவர்களுக்குத் தர்ம அடி விழுந்து விடுமோ என்று, நளினிக்குப் பயமாக இருந்தது.

எனவே, அலுவலகத்துக்குக் கிளம்பி, தெருமுனை வரை நடந்து சென்று, அங்கே வந்த ஆட்டோ ரிக்ஷாவை நிறுத்தி, ஏறினாள்.

முன்னும் பின்னுமாகச் சக்திவேலும், அவனுடைய கூட்டாளியும் கூடவே வந்த போதும், யாரோ தெருவில் போகிறவர்கள் போலவே வந்ததால், அதுவரை பிரச்சனை இல்லை.

ஆனால், அவள் வண்டியில் ஏறுகையில், சக்திவேல் அருகில் வந்து, ஆட்டோ ஓட்டியை முதுகில் தட்டி, "பாரப்பா, நான் இந்த அம்மாவுக்குக் காவல், பின்னோடு பைக்கில் வருவேன், கவனித்துச் சற்று மெதுவாகப் போ," என்றான்.

குழப்பமும் குறுகுறுப்புமாக நோக்கிய போதும், ஆட்டோ ஓட்டியும் தலையாட்டிவிட்டு, ஏவப்பட்ட விதமாக, நிதானமாகவே வண்டியை ஓட்டினான்.

பக்கவாட்டுக் கண்ணாடியில் தெரிந்த அவனது முகத்தில், குறுகுறுப்பையும் ஆர்வத்தையும் கண்ட நளினிக்கு மனதோடு, உடம்பும் கூசிக் குறுகிப் போயிற்று.

இந்த ஆட்டோ ஓட்டி இப்போது என்ன நினைத்துக் கொண்டிருப்பான்?

'காதலனோ, கணவனோ இவளுக்குக் காவல் வைத்திருக்கிறான். இவளது நடத்தை எப்படிப்பட்டதோ?' என்று தானே எண்ணுவான்?

அவன் நினைப்பது மட்டுமா? அவன் முகத்தைப் பார்த்தாலே, இந்தக் கதையை யார் யாரிடமோ சொல்லத் துடித்துக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.

கண், காது, மூக்கு வைத்து, எத்தனை பேரிடமோ நன்றாக அளக்கப் போகிறான்.

சே! என்ன கேவலம், என்ன கேவலம் என்று நளினியின் மனம் பதறித் தவித்தது.

இன்றைக்கு இந்த அசட்டுத் தனத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்த பிறகுதான், நளினிக்குச் சரியாக மூச்சுக்கூட விட முடிந்தது.

அவ்வளவு ஆத்திரம்.

வழக்கம் போலவே, மற்றவர்களை விடச் சீக்கிரமாகவே புவனேந்திரன் வந்திருந்தான்.

வெளிப்படையாக யாரும் உறுதிப் படுத்தாவிட்டாலும், ஊகமும் வதந்தியுமாகப் புவனேந்திரன் - நளினி உறவு அங்கே எல்லோருக்கும் தெரிந்து போயிருந்தது.

அதனால், அவளுக்குத் தனி மரியாதையும் கிடைத்துக் கொண்டிருந்தது.

எனவே, அவனைத் தேடி அவள் சென்ற போது, அவளை யாரும் தடுக்கவில்லை.

சும்மா உள்ளே போகச் சொல்லிவிட்டு, அப்புறமே, அவனுக்கே அறிவித்தார்கள்.

புவனேந்திரனின் அலுவல் அறைக்குள் நளினி சென்ற போது, அங்கே 'உன்னத'த்துடைய தலைமை கணக்கரும், மூன்று தள நிர்வாகிகளும் இருந்தனர்.

எல்லோரின் முகங்களிலும் புன்னகை இருந்தது.

புவனனின் கண்களில் அவளுக்காக ஒரு தனியான பளிச்சிடல். அதைக் கண்டதும், அவளும் தன்னை மீறிப் புன்னகை செய்தாள்.

"வா, நளினி," என்று அவளை முக மலர்ச்சியுடன் வரவேற்ற புவனேந்திரன், "உன் யோசனைப்படி விற்பனைப் பொருட்களை மாற்றினோம், அல்லவா? இந்த மாத விற்பனை வெகுவாகக் கூடியிருக்கிறது!" என்று அவளிடம் தெரிவித்துவிட்டு, மீண்டும் மற்றவர்களிடம் திரும்பினான்.

"ஓகே, சார்! நீங்கள் மூவரும் எந்தெந்தப் பொருட்களில் விற்பனை அதிகமாகி இருக்கிறது என்று ஒரு கணக்கு எடுத்து எனக்கு அனுப்புங்கள். வாடிக்கையாளர்களைக் கவனிப்பதற்கு இன்னும் அதிக ஆட்கள் வேண்டும் என்றால், அதைப் பற்றியும் விவரம் கொடுங்கள். கணக்கர் சார், சென்ற மாத வரவு செலவு பற்றித் தெளிவான ரிப்போர்ட் ஒன்று வேண்டும். இதே போலத் தொடர்ந்தால், தீபாவளிப் போனஸை அதிகமாகக் கொடுக்கலாம், பாருங்கள். இனி அவரவர் இடத்துக்குப் போய், இந்த வேலைகளைப் பார்க்கிறீர்களா?"

அவள் வந்ததும் அனுப்புவது போலத் தோன்றாமல், நால்வரும் சிரித்த முகமாகவே, அவரவருக்கு அளிக்கப்பட்ட வேலைகளைக் கவனிக்கக் கிளம்பும்படி செய்து விட்டானே!

அவன் சொன்ன 'போன'சால் வந்த மலர்ச்சியா?



காக்கும் இமை நானுனக்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:44 pm

மற்றபடி, அந்த மூன்று பெரியவர்களும் நளினியின் யோசனை என்பதை எப்படி ஏற்பார்கள்? அவர்களிடம் அவள் முட்டிக் கொண்டதும், அவர்கள் மிரட்டியதும் எப்படி மறக்கும்?

அல்லது, விற்பனை அதிகரிக்க அதிகரிக்க, அவர்களுக்கே உற்சாகம் வந்து விட்டதா?

கணக்கரும் சென்று, அவர் பின்னே கதவு மூடிக் கொண்ட பிறகு, "எல்லோரும் போயாயிற்று. இப்போது சொல். என்னம்மா, என்ன பிரச்சனை?" என்று கேட்டான் அவன்.

பிரச்சனை என்ன? யார் சொன்னது? என்ற கேள்வி தொண்டை வரை வந்து அடங்கியது.

பதிலாக, ஓடி ஓடி வருகிறவன் நான் தானே என்று அவன் சல்லாபிப்பதைக் கேட்டு மயங்கும் மனநிலை அப்போது அவளுக்கு இல்லை.

அத்தோடு, எல்லோரும் போயாயிற்று என்று அவன் சொன்னதே, இருவரின் எண்ணப் போக்குகளுக்கும் இடையே உள்ள இடைவெளியின் அளவை எடுத்துக் காட்டுவதைப் போல இருந்தது அவளுக்கு.

ஏனெனில், அந்த அறையில் நடப்பன எதிலும் சம்பந்தப்படாமல் ஒதுங்கி, அந்தப் பெரிய அறையின் இரு மூலைகளில் முத்துவும், திருமயனும் இப்போதும் நின்று கொண்டுதான் இருந்தனர்.

அவர்கள் இருவரும் அங்கே இருக்கையில், எல்லோரும் போயாயிற்று என்று எப்படிச் சொல்ல முடியும்?

அவனால் முடிந்தது.

ஆனால், அவளால் ஒரு போதும் முடியாதே.

இப்படி அடிப்படையே தவறாக இருக்கிறதே.

அத்தோடு, அவள் பேச வந்த விஷயத்தை, இவர்களை வைத்துக் கொண்டு சொல்லவும் முடியாது.

"தயவு பண்ணிக் கிண்டலாக எதுவும் பேசாதீர்கள், புவனன். நான் உங்களிடம் தனியாகப் பேச வேண்டும். நிஜமாகவே தனியாக," என்றாள் மெல்லிய குரலில்.

என்ன தான் மென்குரலில் பேசினாலும், காவலர்கள் காதிலும் விழுந்து தான் இருக்கும்.

எனவே, புவனேந்திரன் நிமிர்ந்து பார்த்ததும், அவர்கள் இருவரும் அறை வாயிலை நோக்கி நகர்ந்தனர்.

"நாங்கள் கதவின் அருகிலேயே நிற்கிறோம் சார்," என்று முத்து கூற, இருவரும் வெளியே சென்றனர்.

சாத்தியிருந்த கதவை ஒரு தரம் பார்த்துவிட்டுப் புவனேந்திரன் நளினியிடம் திரும்பினான்.

இது போலப் பிறர் தவறாக ஊகிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில், இருவருமே கவனமாகத்தான் இருப்பது. ஆனால், அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இன்றைக்கு நளினி இல்லை என்பது அவள் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

எனவே, தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து, அன்போடு அவளது கைகளைப் பற்றி உட்கார வைத்து, பிரச்சனை என்னவென்று புவனேந்திரன் மறுபடியும் வினவினான்.

நளினி நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். "எனக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்களா?"

"நிச்சயமாய்! சக்திவேலும், கண்ணனும் கிட்டத்தட்ட முத்து, திருமயனுக்குச் சமமானவர்கள் என்று பாதுகாப்புக்கு ஆள் அனுப்பும் நிறுவனத்தில் சொன்னார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஏன்? வேலையில் ஏதேனும் ஓட்டை விட்டார்களா? என்ன செய்தார்கள்? சொல்லு உடனே. ஆளை மாற்றி விடலாம்," என்றான் அவன் சட்டென மூண்ட கோபத்துடன்.

உச்சுக் கொட்டினாள் நளினி. "நான் ஆளே வேண்டாம் என்கிறேன், நீங்கள் ஆளை மாற்றுவது பற்றிப் பேசுகிறீர்களே," என்றாள் எரிச்சலோடு.

"ஆள் வேண்டாமா? என்ன உளறல் இது?"

"உளறல் ஒன்றும் இல்லை. இவ்வளவு காலம், இருபத்திரண்டு வருஷமாக, இந்த மாதிரிப் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் தான் வாழ்ந்திருக்கிறேன். எனக்கு எதுவுமே ஆனதில்லை. இப்போது மட்டும் எதற்கு?" என்றாள் நளினி, பிடிவாதமான குரலில்.

"உனக்கு விஷயம் புரியவில்லை, நளினி," என்றான் புவனேந்திரன். "இப்போது, நான் தற்பெருமை பேசுவதாக நினைத்துக் கொள்ள மாட்டாய் என்று நம்புகிறேன். இதுவரை நீ வாழ்ந்த விதம் வேறு! எத்தனையோ லட்சக் கணக்கான பெண்களில் ஒருத்தியாக இருந்தாய். அழகிலும், சாதுரியத்திலும் மேம்பட்டிருந்தாலும், பலருள் ஒருத்தியே! ஆனால், இப்போது அப்படியல்ல..."

"ஏன் திடீரென்று எனக்குக் கொம்பு கிம்பு முளைத்து விட்டதா?" என்று கிண்டலாகக் கேட்டுத் தொட்டுப் பார்த்து விட்டு, "இல்லையே!" என்று உதட்டைப் பிதுக்கினாள் அவள்.

புன்னகைத்துவிட்டு, "இது கண்ணுக்குத் தெரியாத கொம்பு. புவனேந்திரனுடைய மனைவி, அதாவது மனைவி ஆகப் போகிறவள் என்கிற கொம்பு!" என்றான் அவன் சிறு வருத்தமும் கேலியும் கலந்த குரலில்.

அவனது வார்த்தைகள் சித்தரித்த நிலைமை மனதிற்கு ஆனந்தமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சியில், முன்னிருக்கும் பிரச்னையை மறந்து விடக்கூடாதே. அதுவும், அப்படி மறக்கடிப்பதில் அவன் வல்லுனனும் கூட!

யோசிக்கும் பாவனையில் புருவம் சுருக்கி, "புவனேந்திரனுடைய மனைவிக்குக் கொம்பு இருந்தே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்?" என்று கேட்டாள் நளினி.

"புவனேந்திரன் ஒரு பணக்காரன்."

"இருக்கட்டுமே. அப்போதும், உங்கள் வார்த்தைகளையே சொல்வதானால், நீங்களும் பணக்காரப் 'பலருள் ஒருவர்' தானே?"

சற்று தயங்கி, "ஆனால், ஆபத்து நேரக் கூடிய வாய்ப்பு அதிகம் உண்டம்மா!" என்றான் அவன் புரியாத குழந்தைக்குச் சொல்வது போல.

"என்ன பெரிய ஆபத்து? எதுவானாலும் நாமாகச் சமாளிக்க வேண்டியதுதானே? நான் ஒன்றும் தண்ணீர் பட்டால் கரையும் உப்பல்ல. ஓர் ஆபத்தில் சிக்கினால் மீள முடியாமல் அழிந்து போவதற்கு."

கண்கள் பளிச்சிட, "நீ வெறும் உப்புக்கல் அல்ல, கண்மணி. உலகிலேயே விலை உயர்ந்த வைரக் கல் அல்லவா?" என்றான் புவனேந்திரன், பெருமிதக் குரலில்.

முகம் சுளித்த போதும், "அது உங்களுக்குத்தானே? மற்றவர்களுக்கோ, வெறும் உப்புக்கல்லாகக் கூட நான் பயன்பட மாட்டேன். அந்தப் பெறுமானம் கூட இல்லாதவள் தானே? அப்புறம் எதற்கு இந்தப் பாதுகாப்பு, பந்தா எல்லாம்?" என்று விடாமல் கேட்டாள் அவள்.

தொடர்ந்து அந்த அறையில் ஓர் அமைதியற்ற அமைதி நிலவியது.

பிறகு, "இது பந்தா அல்ல. பாதுகாப்பு மட்டுமே. எனக்காக, என் நிம்மதிக்காக, இந்தப் பாதுகாப்பை நீ சகித்துக் கொள்ளக் கூடாதா?" என்று இதமாகவே கேட்டான் அவன்.

ஒரு கணம் தயங்கினாலும், "இதே போல, என் நிம்மதிக்காக விட்டு விடக் கூடாதா என்று, நானும் கேட்கலாம் அல்லவா? எங்கள் வீட்டுச் சுற்றுப்புறம் பார்த்தீர்கள், அல்லவா? இயல்பான, சாதாரணமான வாழ்க்கை. அந்த இடத்தில், இப்படிப் பழைய கால ராஜ பரம்பரை போல, முன்னும் பின்னும் பாதுகாவலுக்கு ஆட்களோடு நடமாடுவது என்றால், அது கொஞ்சம்... கொஞ்சமென்ன, ரொம்பவே 'அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிற' விதமாகத் தோன்றாதா? தோழமையோடு பழகுகிற யார் முகத்தை நான் நிமிர்ந்து பார்க்க முடியும்? நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் வெளியூர் போயிருந்த இத்தனை நாட்களும், நான் கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளேயே சிறையிருந்த மாதிரிதான் இருந்தேன், தெரியுமா?" என்று வாழைப்பழத்தில் ஊசியாய், அவன் சொல்லாமல் சென்றதையும் குறிப்பிட்டாள் நளினி.

ஊசி குத்திற்றோ இல்லையோ, அதை அவன் கவனித்த மாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை. "நீ பத்திரமாய் இருக்கிறாய் என்பது, மற்ற எதையும் விட, எனக்கு முக்கியம், நளினி. அதற்காகச் சில சங்கடங்களை நாம் சகித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், முதலில் தான் அவை சங்கடங்களாகத் தோன்றும். விரைவிலேயே, என்னைப் போல, உனக்கும் பழகிப் போய் விடும்," என்று அதிலேயே நின்றான் புவனேந்திரன்.

விட்டுக் கொடுக்க அவளுக்கும் மனமில்லை. அவனையுமே இந்தப் பைத்தியக்காரத்தனத்தை விட வைக்க விரும்புகிறவள் ஆயிற்றே.

அதனாலே, "சும்மாவே, நான் பத்திரமாகத்தான் இருப்பேன் என்கிற போது, அனாவசியமாக இந்தச் சங்கடங்களை ஏன் சகிக்க வேண்டும்? தேவையே இல்லை," என்றாள் அழுத்தமாகவே.

மீண்டும் ஒரு மௌனம் அவர்களிடையே நிலவியது.

சற்றுப் பொறுத்து, ஒரு நீண்ட பெருமூச்சின் பின் புவனேந்திரன் பேசினான்.

"ரதி எப்படி இறந்தாள் என்று, உனக்குத் தெரியாதில்லையா?" என்று மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டு நிறுத்தினான்.

ரதி! அவனுடைய முதல் மனைவி.

திடுக்கிட்டு, நளினி அவனைப் பார்த்தாள்.



காக்கும் இமை நானுனக்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:44 pm

ரதியின் பெயர், முன்னொரு தரம் அவர்களிடையே வந்திருக்கிறது. திருமணமாகி அந்தப் பத்து நாட்களுக்குள் அந்த வயதுக்கேற்ப மகிழ்ச்சியோடு இருந்ததாகச் சொன்னான்.

புதுமண மகிழ்ச்சி.

ஆனால், தேவதாசாக, அதே நினைவில் தான் உருகிக் கொண்டிருப்பதாக அவன் கூறவில்லை. அப்படிக் காட்டிக் கொள்ளவும் இல்லை.

இப்போது என்ன சொல்லப் போகிறான்?

அத்தோடு, அவளது இறப்புக்கும், இந்தப் பாதுகாவலர்கள் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் கூடும்?

மீண்டும் புவனேந்திரன் பேசத் தொடங்குமுன், என்னென்னவோ கேள்விகள் மனதில் குவிந்த போதும், நளினிக்கு எதையும் வாய்விட்டுக் கேட்கத் தோன்றவில்லை.

ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவளைப் போல, அவனையே பாராத வண்ணம் உட்கார்ந்திருந்தாள்.

இன்னும் ஒரு சிறு இடைவெளியின் பின், தொண்டையைச் செருமிக் கொண்டு, புவனேந்திரனே தொடங்கினான்.

"ரதியை நான் மணந்தது, அவள் இறந்தது எதுவுமே, கோவையில் கூட யாருக்குமே தெரியாது," என்று தொடங்கியவன், தொடர்ந்து அதன் காரணத்தை விளக்கினான்.

"என் அப்பாவும் அம்மாவும் இறந்தது, என் இருபத்தொன்றாம் பிறந்த நாளைக்கு இரு மாதங்கள் முன்பு. தொழில் துறை நிர்வாகம் பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். படிக்கும் போதே அப்பாவுடன் தொழிலைக் கவனித்துக் கொண்டுமிருந்தேன். நம்முடைய நூற்பு ஆலை, நூல் விற்பனை தொடர்பாக, நான் அகமதாபாத்துக்குப் போய் வருவது உண்டு. அம்மா, அப்பாவுக்குப் பிறகு, பாட்டி வந்து என்னை அழைத்தது, நான் வர மறுத்தது எல்லாம், தண்டோரா போட்டுப் பறையறிவிக்காத குறையாக இங்கே எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.

"அம்மா இருக்கும் வரை என்னையும் வெறுத்து இருந்தவர்களுக்கு, இப்போது என்ன திடீர் உருக்கம்? அம்மா இறந்ததால், எனக்கென்ன தீட்டா கழிந்து விட்டது? அம்மா இருந்தாலும், இல்லாவிட்டாலும், என் அம்மாவின் வயிற்றில் நான் பிறந்தது மாறி விடுமா என்ன?

"இப்படியெல்லாம் நினைத்து, அந்த ஆத்திரத்தில் நான் இங்கே வர மறுத்ததோடு, அப்போதைக்கு, அந்த விஷயம் முடிந்து போனது.

"ஆனால், பெற்றோரின் இறப்பு பற்றி வேதனை - அப்போதுதான் கொஞ்சம் அடங்கத் தொடங்கியிருந்தது - இரு மடங்காக மீண்டும் என்னை வாட்டத் தொடங்கிவிட்டது. கோவை வீட்டில் தனியே இருக்கப் பிடிக்காமல், வெளியூர் வேலைகளை அதிகமாக இழுத்துப் போட்டுக் கொண்டு, அங்குமிங்கும் அலைந்து திரிந்து செய்தேன். அப்படி ஒரு தரம் அகமதாபாத் சென்ற போதுதான், ரதியைச் சந்தித்தேன்.

"அவளுக்கும் சின்ன வயதுதான். அப்போது பதினெட்டு தான் ஆகியிருந்தது. என்னைப் போலவே, அவளுக்கும் உறவென்று யாரும் இல்லை. எனக்குப் பாட்டி இருந்தாலும், அவர்களைத்தான் அப்போது நான் உறவாக ஏற்கவே இல்லையே. ரதி இல்லத்தில் வளர்ந்தவள். அலுவலுக்கான படிப்பு கற்றுக் கொடுத்திருந்தார்கள். தற்காலிகமான அலுவலக வேலைகளுக்கு அனுப்புவார்கள். அப்படி எனக்காக வந்தபோது, முதல் பார்வையிலேயே எங்கள் இருவருக்கும் பிடித்துப் போயிற்று. அவளைப் பார்க்கையில், நெஞ்சை அரித்துக் கொண்டிருந்த பெற்றோரின் பிரிவுத் துயரத்தை என்னால் மறக்க முடிந்தது. ஒரே வாரத்தில் திருமணம் நடந்தது. எப்படி இருந்தோம் என்று தான் சொல்லியிருக்கிறேனே.

"மணமாகிப் பத்தாவது நாள், அவள் காணாமல் போனாள்!... கடத்தப்பட்டாள்...!"

"என்னது?!" என்று நளினி அதிர்ந்தாள்.

சூனியத்தை வெறித்த வண்ணம் சொல்லிக் கொண்டிருந்தவன், சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்தான்.

"ஆமாம்! ரதி கடத்தப்பட்டாள். என் மனைவி என்கிற ஒரே காரணத்துக்காக, அவள் கடத்தப்பட்டாள். ஒரு பணக்காரனுடைய மனைவியைக் கடத்தினால், அவனிடம் நிறையப் பணம் பறிக்கலாம் என்று திட்டமிட்ட மனிதத்தன்மையே இல்லாத ஒரு கும்பலால் அவள் கடத்தப்பட்டாள். கடத்திக் கொலையும் செய்யப்பட்டாள்."


"ஐயோ!" என்று பதறி எழுந்தாள் நளினி. "கொ...கொலையா?"

அமைதியிழந்து நடந்து கொண்டிருந்தவன், அவள் எதிரில் வந்து நின்றான். "ஆமாம்! கொலை தான். அந்த அரக்கர்களிடம், நான் பணத்தையும் இழந்து மனைவியையும் பறிகொடுத்தேன்.

"அவர்களிடமிருந்து, ரதி தப்ப முயன்றாளா, அன்றி அடையாளம் காட்டி விடுவாள் என்று பயந்தோ, இரண்டு, மூன்று என்று, திரும்பத் திரும்பக் கேட்டு, என்னிடம் பத்து லட்ச ரூபாய் பணத்தையும் வாங்கிக் கொண்டு, அவளையும் கொன்று விட்டார்கள், அந்த வெறியர்கள். பாவம்! ஏழைப் பெண். பணத்துக்குக் கஷ்டப்பட்டாலும், எங்கோ நிம்மதியாக உயிரோடு இருந்திருப்பாள். அவளைச் சிறப்பாக வாழ வைப்பதாக நினைத்துச் சாகடித்து விட்டேன். அந்தக் கொலைகாரர்கள் கையால் கொல்லப்படுமுன், ரதி என்னமாகத் தவித்திருப்பாள். அவளை இழந்து, அந்த இருபத்தோரு வயதில் நான் என்ன பாடுபட்டிருப்பேன்? சொல்லு. என் அன்புக்கு உரியவள் என்கிற காரணத்தால், உனக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று, உன்னை நான் பாதுகாக்க முயல்வது, எப்படித் தப்பாம்?" என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

அவளது தோளைப் பற்றி உலுக்காத குறை.

ஆனாலும், இப்போதும், இந்தப் பாதுகாவலர்கள் விஷயத்தை அவளால் முழுதாக ஒத்துக் கொள்ள முடியவில்லை.

"ரதி சின்னப் பெண், புவனன். அத்தோடு, இல்லத்தில் வளர்ந்ததால், சில விஷயங்கள் தெரியாமலே வளர்ந்திருக்கக் கூடும்."

"என்னென்ன விஷயங்கள்?"

"எச்சரிக்கை உணர்வு... பாதுகாப்புக் கலைகள். நான் அப்படியில்லை."

அடுத்த வினாடி நடந்ததை, நளினி சற்றும் எதிர்பார்க்கவில்லை!

மின்னல் விரைவுடன் அவளது இரு கரங்களையும் பின்புறமாகச் சேர்த்துப் பிடித்து, ஒரு காலால் அவளது இரு கால்களையும் சுற்றிப் பிணைத்து, மறு கையால் அவளது தாடையைப் பற்றினான் புவனேந்திரன்.

அனிச்சையான திமிறல் பலனற்றுப் போகவும், திகைப்புடன் அவனைப் பார்த்தாள் அவள்.

"என்னவோ பாதுகாப்புக் கலைகள் என்றாயே. அவற்றைப் பயன்படுத்தி, உன்னை விடுவித்துக் கொள்ளேன், பார்ப்போம்," என்றான் புவனன் ஏளனமாக.

தன்னால் முடியாது என்று நன்றாகவே புரியவும், பேசாமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் அவள்.

பார்வை இளகக் குனிந்து, அவளது இதழ்களில் லேசாக முத்தமிட்டு, அவளை விடுவித்தான் அவன்.

"பார், அவர்கள் வன்முறையைத் தொழிலாகக் கொண்டவர்கள். இந்தப் போர்க்கலைகள் எல்லாம் அவர்களுக்குத் தண்ணீர் பட்டபாடு! அதனால் தான், அதே கலைகளைத் திறம்படக் கற்றவர்களைப் பயன்படுத்தி, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன், நான்! ஒரு முறை சூடு பட்டவன் நான். இன்னொரு பேரிழப்பை என்னால் தாங்க முடியாது. நம் ஈடுபாடு வெளியே பரவிவிட்டது. அதனால், உனக்கு ஆபத்து வந்துதான் தீரும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்த வாய்ப்பு மிகவும் அதிகம். எனவே, இந்த மனிதர்களின் காவல் உனக்கு இருக்கும்வரை, என்னால் பெருமளவு நிம்மதியுடன் மற்ற வேலைகளைப் பார்க்க முடியும். அதில்லாமல், ஒவ்வொரு கணமும், நீ பத்திரமாக இருக்கிறாயோ, இல்லையோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்க என்னால் முடியாது. அதுவும் உனக்கோர் ஆபத்து நேர்ந்தால், அதைத் தாங்கவும் என்னால் முடியாது. அதனால்... அதனால், ஒன்று, இந்தக் காவலை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது, உனக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய காரணத்தை நீக்க வேண்டும். புரிகிறதில்லையா? நாம் பிரிய வேண்டும். இவை தவிர, மாற்று வழியேதும் கிடையாது!" என்று முடித்தான் அவன்.



காக்கும் இமை நானுனக்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:45 pm

ஆனால், அவள் பதில் சொல்லு முன்னரே, அவளது கையைப் பற்றி முத்தமிட்டு, "பிரிவே பரவாயில்லை என்று சொல்லிவிடாதே, கண்மணி!" என்றான் கொஞ்சுதலாக.

கெஞ்சுதலாகவும்.
அவளும் தான் அப்படி எப்படிச் சொல்லுவாள்?

தன் சம்மதத்தைச் சொல்லாமல் சொல்லும் விதமாக அவன் தோளில் சற்று நேரம் சாய்ந்திருந்தாள் அவள்.

ஆனால், அப்போதும் அவளது குடியிருப்புப் பகுதியில் இந்தக் காவலர் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் அவளைக் குழப்பியடித்துக் கொண்டிருந்தது.

குடும்ப விவகாரங்களில் தலையிடா விட்டாலும், அங்கே எல்லோருமே ஒருவருக்கொருவர் இலகுவாகப் பேசிப் பழகுகிறார்கள். கேலியும் கிண்டலும் எளிதாக வரும்.

'புதிதாகக் கார் வாங்கியவர், இரண்டே தரம் 'என் கார், என் கார்' என்று விட்டாலே, அவர் 'கார் பந்தா' ஆகி விடுவார். அதற்கு மேல் போனால் 'போர் பந்தா.'

அந்த மாதிரி இடத்தில், முன்னும் பின்னுமாய் மெய்க் காப்பாளர்கள் என்றால், அவளுடைய குடும்பத்துக்கு என்ன பெயர் வைப்பார்கள்? இது ஒரு பக்கம் என்றால், புவனேந்திரன் அஞ்சுகிற மாதிரியான ஆபத்து எதுவும் தனக்கு வரக்கூடும் என்று, அவளால் ஒப்பவும் முடியவில்லை. இதில் எதைச் சொல்லி இந்த அன்பனுக்குப் புரிய வைப்பது?

"என்ன யோசனை, நளினி?" என்று கேட்டான் புவனேந்திரன்.

"வேறென்ன? அங்கே இந்த இருவரையும் எப்படி இயல்பாகப் பொருந்தச் செய்வது என்றுதான்," என்று உண்மையைச் சொன்னாள் அவள்.

"பொருந்துகிறார்களோ, இல்லையோ, அவர்கள் இருக்கப் போவது கட்டாயம்," என்றான் அவன் இறுகிய குரலில்.

கடைசி முயற்சியாக, "அது மிகவும் பாதுகாப்பான பகுதிதான், புவனன். இதுவரை அங்கே சின்னத் திருட்டு கூட நடந்தது இல்லை. அதனால், கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போமா?" என்று கேட்டாள் நளினி.

"பொறுத்து? பொறுத்திருந்து எதைப் பார்ப்பது? உன்னை யாராவது கடத்திக் கொண்டு போகிறார்களா, இல்லையா என்றா? ஒரு வேளை, கடத்திப் போய் விட்டால்? உன் விஷயத்தில், ஆபத்து வருகிறதா இல்லையா என்று பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க, நான் தயாரில்லை. அதனால், இந்த மாதிரி அசட்டுப் பேச்சு இனி வேண்டாம்," என்று கண்டிப்பான குரலில் கூறி முடித்தான் புவனேந்திரன்.

நளினியின் கற்பனைதானோ, என்னவோ, குடியிருப்புப் பகுதியில் உள்ளவர்கள் எல்லோரும் தன்னை இளக்காரமாகப் பார்ப்பது போல, ஓர் எண்ணம்.

சங்கத் தலைவர், செயலாளர் முதலியோரிடம், சுதர்சனம் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சக்திவேல், அவனுடைய கூட்டாளி பற்றிச் சொல்லிவிட்டு வந்தார். அவர்கள் இருவரும் தங்கள் வீட்டுக்கு வேண்டியவர்கள் என்று மட்டுமே.

ஆனால், அவர்கள் இருவரும் சும்மாவே அங்கே இருப்பதும், அவள் வெளியே சென்றால் மட்டும் கூட வருவதும், பிறர் கவனத்தைக் கவராது இருக்குமா, என்ன?

அவரவருக்கு அவரவர் பிரச்சனை... இதில் நம்மைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க, அவர்களுக்கு ஏது நேரம் என்று மகளுக்குச் சமாதானம் சொன்ன போதும், சுதர்சனத்துக்குமே, இந்தப் பாதுகாவல் இந்த இடத்தில் சற்று அதிகப்படியாகத்தான் தோன்றியது.

புவனேந்திரனின் நிலைமைக்கு அது தேவையாக இருக்கலாம். அப்படித்தான் என்று, ஒரு சமயத்தில் மனைவியிடம் அவனுக்காக வக்காலத்து வாங்கிப் பேசியவரும் கூட! ஆனால், அவனுடைய மனைவியாக ஆகாத நிலையில் எதற்கு என்ற எண்ணம் தான்.

ஆனாலும் மகளது நன்மைக்காக என்று எண்ணித்தானே செய்கிறான் புவனேந்திரன் என்று தன்னைச் சமாதானப் படுத்திக் கொண்டார்.

பெருமளவு மகளையும்.

ஆனால், இருவருமே, புவனேந்திரனின் பிடிவாதத்துக்காகப் பொறுத்துப் போனார்களே தவிர, இந்தக் காவல் அவசியம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஒரு போதும் வரவில்லை.

புவனேந்திரனையே அடியாட்களோடு அலைவது போல இருக்கிறது என்று கூறும் சகுந்தலாவும், கணவனைப் போலவே பொறுத்துப் போனாள்.

பொறுத்துப் போனாலும், சற்று வசதியான மத்திய தரத்து வாழ்க்கையில் பழகியிருந்த அந்தக் குடும்பத்துக்குப் புவனேந்திரனின் அச்சம் புரிபடவே இல்லை.

ஆனால், அவன் அதில் பிடிவாதமாக இருக்கவே, அவனை இழக்க விரும்பாமல், அவனது நிபந்தனையை ஏற்றுக் கொண்டார்கள் எனலாம்.

செல்வம், செல்வாக்கு என்பது ஒரு புறம் இருந்தாலும், மகள் அவனை விரும்புகிறாள் என்பதும் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. ஆயினும், இந்தக் கூண்டுக் கிளி வாழ்வை மகள் எவ்வளவு நாள் தாங்குவாள் என்று, சகுந்தலாவுக்குச் சந்தேகம் தான்.

நளினியைப் பொறுத்த வரையில், தந்தையுடைய காரில் மட்டுமே வேலைக்குப் போவாள். அப்போதும் காவலர்கள் கூட வருவதுதான். ஆனால், முன் போல ஆட்டோ ஓட்டியிடம் ஏதாவது சொல்வது போன்றவற்றுக்கு இடம் இராதல்லவா?

கார் கிடைக்காத போதும், மற்ற சமயத்திலும் வீடே கதியென்று இருக்கத் தொடங்கினாள்.

ஆனால், அப்போதும் நேரத்தை வீணாக்காமல், தனக்கும் தங்கைக்கும் துணிமணிகளில், மணி, கண்ணாடி, கல், சம்கி போன்றவற்றைக் கொண்டு வேலைப்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள்.

பிடித்தமான வேலைதான். ஆனால், இதுவே சில சமயங்களில் நளினிக்கு எரிச்சலூட்டவும் செய்தது.

முனைந்து வேலைச் செய்கிறபோது, சில சமயம், உரிய கற்கள், கோந்து போன்றவை தீர்ந்து போகும். ஒரு தரம் அந்தக் கோந்து கொட்டிக் காய்ந்து போயிற்று. முன்பானால், உடனே ஆட்டோவிலோ, பஸ்சிலோ சென்று தேவையானதை வாங்கி வந்து, மறுபடியும் வேலையைத் தொடங்கி விடுவாள்.

இப்போதானால், சகுந்தலாவிடம் சொல்லியனுப்பி வாங்க வேண்டியிருந்தது.

அன்றாட வேலைகள், திருமண வேலைகள் எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டு, அவள் சென்று வாங்கி வந்தாலும், சில சமயங்களில் அவை தவறாகிப் போய், நளினியின் பொறுமையைச் சோதித்து, மூச்சு முட்டுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

மற்றப்படி, பட்டுச் சேலைகள், நகைகள் போன்ற அனைத்தையும், தாயையே வாங்கி வரச் சொல்லி விட்டாள், நளினி.

ஏற்கெனவே, மகளின் திருமணத்தின் போது தேவைப்படக் கூடியவை என்று சுதர்சனமும், சகுந்தலாவும் அவ்வப்போது வாங்கிச் சேர்த்து வைத்துக் கொண்டே இருந்ததால், அப்போது பெரிய அளவில் எதையும் வாங்கும்படி நேரவும் இல்லை.

ஆனால், நளினியே நேரடியாகச் சென்று வாங்க வேண்டிய சில பொருட்களும் இருந்தன.

அவளது உள்ளாடைகளை எப்போதுமே அவளே தான் வாங்குவது வழக்கம். வாசனைப் பொருட்கள், மேக்கப் சாமான்கள் போன்றவற்றையும் தானே தேர்ந்தெடுப்பாள். இப்போதும், அந்த வழக்கத்தை மாற்ற, நளினி விரும்பவில்லை.

அதிலும் முக்கியமாக உள்ளாடைகளை!

அதே சமயம், இரு அன்னிய ஆண்கள் புடைசூழச் சென்று, உள்ளாடையைத் தேர்ந்தெடுப்பதும் அவளுக்கு மிகவும் அசூசையாகப் பட்டது.

ஆனால், இதைப் புவனேந்திரனிடம் சொன்னால், அவளது உணர்வை அவன் நிச்சயமாகப் புரிந்து கொள்ள மாட்டான் என்று தோன்றவும், அவனிடம் சொல்லாமலே கடைக்குப் போய்த் தனக்கு வேண்டியதை வாங்கி வந்துவிட நளினி முடிவு செய்தாள்.

ஆனால் அந்த முடிவு, அவளது திருமணத்தையே நிறுத்தி விடும் என்று, பாவம் அவள் எதிர் பார்க்கவே இல்லை.



காக்கும் இமை நானுனக்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:46 pm

தனியே கடைக்குச் செல்ல, நளினி பிடிவாதமாக முடிவெடுத்ததின் இன்னொரு காரணம், புவனேந்திரன் ஊரில் இல்லாதது.

இருவருக்கும் அறிமுகமாகி இந்தச் சில மாதங்களில், அவன் சொல்லாமலும், எங்கே என்ன காரியம் என்று விவரம் சொல்லாமலும், குறைந்தது ஐந்து முறையேனும் புவனேந்திரன் வெளியூர் சென்றிருப்பான். திரும்பி வந்த பிறகும், அது பற்றி அவன் பேசுவதில்லை.

திருமணம் நிச்சயம் ஆன பிறகும், அவன் அப்படிச் சென்றது, அவளுக்கு வருத்தத்தோடு சற்றுக் கோபமாகவும் இருந்தது.

புவனேந்திரனின் கடந்த காலம் அவளுக்குச் சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆனால், நிகழ்காலம்? அதிலிருந்து அவன் அவளை எப்படி ஒதுக்கலாம்?

அவளுக்கு மட்டும் அத்தனை கட்டுப்பாடுகள், காவலர்களின் கண்காணிப்பா?

எவ்வளவோ ஆத்திரம் வந்த போதும், அவன் சிரிப்பும் விளையாட்டுமாகப் பேசத் தொடங்கியதும், பதிலுக்கு, அவனைப் போலவே பேசத் தோன்றியதே தவிர, கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்துக் கொள்ள அவளுக்கு வரவே இல்லை.

அன்று அவனிடம் பேச வேண்டும் போல, நளினிக்கு ரொம்பவும் ஆவலாக இருந்தது.

ஒரு கருநீல வண்ணச் சுரிதார் செட்டுக்கு, வண்ணக் கல்லாலேயே வட்ட வட்டமாய் அங்கங்கே பூவேலை செய்து முடித்திருந்தாள். அணிந்து பார்க்கும் போது மிக அழகாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை புவனனோடு கலந்து கொள்ள, அவள் மிகவும் விரும்பினாள்.

அதற்காக, அவனை செல்லில் பிடிக்கலாம் என்று பார்த்தால், செல்லை அணைத்து வைத்திருந்தான். ஃபோன் செய்து பார்த்தபோதுதான், அவளிடம் சொல்லாமலே, புவனேந்திரன் வெளியூர் சென்றிருந்தது, அவளுக்குத் தெரிய வந்தது.

மீண்டுமா என்று எண்ணியவளுக்கு, முகம் கறுத்துச் சிறுத்துப் போயிற்று.

அவள் மட்டும், அவளது ஒவ்வொரு கணத்துக்கும், பாதுகாவல் என்ற பெயரில், அவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டும். ஆனால், அவன் விருப்பம் போலச் சுற்றுவானா?

குறைந்த பட்சமாய், வெளியூர் போகிறேன் என்று கூடவா சொல்லக் கூடாது?

அதையெல்லாம் அறியும் உரிமை உனக்குக் கிடையாது என்று வாய் வார்த்தையாகச் சொல்லாமல், செயலில் செய்து காட்டி, அதற்கு அவளைப் பழக்குகிறானா? இன்னொருவர் மூலம் அறிய நேரும் போது, இன்றைய நிலையில், அவளுக்கு அது எவ்வளவு பெரிய அவமானம் என்று கூடவா யோசிக்கக் கூடாது?

இதையெல்லாம் ஏற்று வாழ்வதற்கு அவள் ஒன்றும் முதுகெலும்பே இல்லாத புழு அல்லவே!

அல்லது, அவனது பணத்துக்காக அவள் எதையும் பொறுத்துப் போவாள் என்று எண்ணினானா?

அப்படி மட்டும் எண்ணியிருந்தான் என்றால், அவனுக்கு விரைவிலேயே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது நிச்சயம்.

இது பற்றிக் கட்டாயமாகப் புவனனிடம் பேசியாக வேண்டும் என்று எண்ணியவளுக்குத் தனக்காக நியமிக்கப்பட்ட பாதுகாவலர்களை உதறி விட்டுத் தனியே கடைக்குச் சென்றாக வேண்டும் என்பதும் உள்ளூர உறுதியாயிற்று.

புவனனிடம் ஊதியம் பெறுகிறவர்களிடம் தன் அதிகாரம் செல்லாது என்பதால், அவர்களை ஏமாற்றிச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டாள். தவிர, மற்ற யாரிடமும், புவனனிடம் கூடத் தான் தனியே செல்வதை மறைக்க அவள் எண்ணவில்லை.

அவளிடம் தெரிவியாமல் அவன் வெளியூருக்கே சென்று வரும் போது, அவள் உள்ளூரில் ஒரு கடைக்குச் செல்வதில் என்னவென்று தப்புக் காண முடியும்?

இப்படித்தான் நளினி நினைத்தாள்.

ஆனால்...
சக்திவேலுக்கும், அவனுடைய கூட்டாளிக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுவது, நளினிக்கு அப்படி ஒன்றும் கடினமாக இருக்கவில்லை.

காவலர்கள் இருவரும் இருப்பது, பெரும்பாலும் முன் வராண்டாவில் தான். நளினியும், புவனேந்திரனும் உட்கார்ந்து வேலை செய்த இடம்.

வாயில் வழியே, உள்ளே, வெளியே யார் சென்றாலும், இவர்களது பார்வைக்குத் தப்ப முடியாது.

ஆனால், 'லிஃப்ட்' வேலை செய்யாத போது செல்வதற்காக, வீட்டின் பின்புறமாக ஒரு படிக்கட்டி இருந்தது. அதற்குச் செல்ல ஒரு கதவும் எல்லா வீடுகளுக்கும் உண்டு.

பாதுகாப்புக் கருதி, அந்தப் பின்புறக் கதவைப் பூட்டி விடும்படி பாதுகாப்பு நிறுவனத்தால் ஆலோசனை கூறப்பட்டு, அப்படி அந்தக் கதவு பூட்டப்பட்டும் இருந்தது.

எப்போதாவது மின்சாரம் தடைப்பட்டு, லிஃப்டைப் பயன்படுத்த முடியாத போதும் கூட, சக்திவேலிடம் தெரிவித்து விட்டே அந்தக் கதவைப் பயன்படுத்தும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தச் சமயங்களில் இருவரில் ஒருவர் அந்தப் பக்கம் காவலிருப்பார்கள்.

பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளைப் புவனேந்திரன் அப்படியே கடைப்பிடிப்பான். அதில் அரை குறைத்தனமே கிடையாது. அவன் ஏற்பாட்டில் ஏற்ற பணி என்பதால், அவனுடைய வருங்கால மனைவியின் வீட்டிலும் அதே நிலைமையைப் பாதுகாப்பு நிறுவனமும், அதனுடைய பணியாளர்களும் எதிர்பார்த்தனர்.

அன்றுவரை, அவர்கள் குறைப் படும்படியாக எதுவும் நடக்கவும் இல்லை. அதனால், அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் ஏற்படவும் இல்லை.

எனவே, அந்தக் கதவின் வழியே, வீட்டை விட்டு வெளியேறி, நளினி கடைக்குச் செல்வது இலகுவாகவே முடிந்து விட்டது.

என்ன வாங்க வேண்டியிருந்தது என்பதைச் சொல்லியதால், மகளை அறிந்த தாயும் அவளைத் தடுக்கவில்லை. பிளஸ் டூ தங்கைக்கும் அதுவே சரியாகப் பட்டது.

பல நாட்களுக்குப் பிறகு, காவலர் புடைசூழச் செல்வது, அதை யார் யார் பார்த்து என்னென்ன கிண்டலடிக்கிறார்களோ என்பன போன்ற எந்த விதக் கட்டுப்பாடோ, குன்றலோ இல்லாமல் வெளியே செல்கையில், வெகு சுதந்திரமாக, மிகச் சுதந்திரமாக நளினி உணர்ந்தாள்.

அந்தச் சுகத்தில், திட்டமிட்டதை விடவும் அதிக நேரம் வெளியே சுற்றியலைந்து, இன்னும் பல பொருட்களையும் வாங்கிக் கொண்டு, அவள் வீடு திரும்பினால், சிவந்த கண்களுடன், இறுகிய முகத்துடன் புவனேந்திரன் அவள் வீட்டில் உட்கார்ந்திருந்தான். உண்ணவும், அருந்தவுமாக, அவன் முன்னே வைக்கப்பட்டிருந்தவை தொடக்கூடப் படாமல், அப்படியே இருந்தன.

ஒரு கணம், நளினிக்குத் திக்கென்றுதான் இருந்தது.

ஆனாலும், அவள் அப்படியென்ன தப்பு செய்து விட்டாள்? அவனது அசட்டுப் பாதுகாவலை ஒரு தரம் மீறியிருக்கிறாள். மற்றபடி ஒன்றுமில்லையே என்று தோன்றிவிடவும், தானாக அவளது தலை நிமிர்ந்து விட்டது.

வீட்டில் அவளுடைய தந்தை, தாய் இருவருமே பெரும் சிக்கல் தீர்ந்த பெருமூச்சுடன், "வாம்மா!" என்று அவசரமாக அவளை எதிர் கொண்டனர்.

"இதோ வந்து விடுவாள் என்று சொல்லிக் கொண்டே இருந்தோம்! அதே போல, வந்து விட்டாய். எல்லாம் கிடைத்ததாடா?" என்றாள் சகுந்தலா. "போய் முகத்தைக் கழுவிக் கொண்டு வா. புவனேந்திரன் அப்போது பிடித்துக் காத்திருக்கிறார்!" என்றாள் குறிப்பாக.

புவனேந்திரன் வெறுமனே காத்திருக்கவில்லை, பார்த்து நடந்து கொள் என்று தாயார் சொல்வது நளினிக்குப் புரிந்தது.

ஆனால், இந்த மூன்று மணி நேரம் சுதந்திரமாகச் சுற்றியலைந்தது, நளினியை வேறு விதமாக எண்ண வைத்தது.


பாதுகாப்பு, பாதுகாப்பு என்று புவனேந்திரன் செய்வதெல்லாம் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது. பொன் வண்ணம் பூசியதாலேயே, சிறைக் கம்பிகள் வேறாகி விடுமா? சொந்த வீட்டிலேயே, காசு கொடுத்துக் கைதிகளாக வாழ்வதா?

அவசியமற்றுத் தன்னைத்தானே கைதியாக்கிக் கொண்டதோடு, அவளையும் அந்த நிலைக்கு அவன் தள்ள முயற்சிக்கிறான்.

அந்த நிலையிலிருந்து, தன்னோடு, பாவம்! அவனையும் காப்பாற்ற வேண்டும்.

ஒரு ரதி கடத்தப்பட்டதாலேயே, எல்லாப் பணக்காரர்களுடைய மனைவிமாரும் கடத்தப்பட்டு விடுவார்களா, என்ன? மாட்டார்கள் என்று, அவனுக்குப் புரிய வைக்க வேண்டும்.

அவனிடம் என்ன மாதிரிப் பேசிப் புரிய வைப்பது என்று, அவள் அவசரமாக மனதுள் ஒத்திகை பார்க்கையில், "உன்னிடம் தனியாகப் பேச வேண்டும். சற்று வெளியே போய் வரலாமா?" என்று உணர்ச்சி அடைத்த குரலில் கேட்டான் அவன்.

ஒரு கணம் நளினி யோசித்தாள்.



காக்கும் இமை நானுனக்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:46 pm

புவனனோடு எங்கே சென்றாலும், அவனுடைய மெய்க்காவலர்கள் கண் பார்க்கும்... ஏன், காது கேட்கும் தொலைவிலேயே இருப்பார்கள். அப்படி இரு பார்வையாளர்களை அருகில் வைத்துக் கொண்டு, அவளால் இலகுவாகப் பேச முடியாது.

எனவே, "நிஜமாகவே தனியாகப் பேசுவது என்றால், வெளியே போவதை விட, அப்பாவின் அலுவல் அறையில் இருந்து பேசுவது மேல்..." என்றாள், அவனுக்குப் பதிலாக.

அவளது பேச்சின் பொருள் புரிந்தாற் போலப் புவனனின் முகம் சற்றுக் கடுத்தது.

ஆனாலும், அவளது யோசனையை மறுக்காமல், சுதர்சனத்தின் அலுவலக அறைப் பக்கமாக நடந்தான்.

அறைக் கதவுக்கு முடிந்தவரை உட்புறமாகத் தூரச் சென்றவன், அவளும் அருகே வந்ததும், "நான் சொன்னது எதுவுமே, உன் மூளையை எட்டவில்லையா? ஏன் இப்படிச் செய்தாய்?" என்று தணிந்த குரலில் சீறினான்.

முட்டாளே என்கிறானா?

"அன்னிய ஆண்களைப் பார்வையாளர்களாக வைத்துக் கொண்டு உள்ளாடைகளை வாங்கும் பழக்கம் எனக்குக் கிடையாது!" என்றாள் இவள் வெடுக்கென.

"ஓகோ! நீ உள்ளாடைகளை வாங்கும் போது, உன்னைக் கடத்தக் கூடாது என்று, ஏதேனும் சட்டம் இருக்கிறதா?" என்றான் அவன் எகத்தாளமாக. "அப்படியே ஒரு சட்டம் இருந்தாலும், அவர்கள் வன்முறையாளர்கள். அந்தச் சட்டத்தை எப்படியும் மீறிகிறவர்கள். இது கூடவா உனக்குப் புரியவில்லை?"

பொறுமையிழந்து, "நிறுத்துங்கள், புவனன்! என்ன இது, எப்போது பார்த்தாலும், கடத்தல், கடத்தல் என்று கொண்டு!" என்று ஆத்திரப்பட்டாள் நளினி.

"என்ன செய்வது? எத்தனை முறை சொன்னாலும், அது உன் மண்டையோட்டைத் தாண்டி, உள்ளே போவதாகத் தெரியவில்லையே! அதனால் தான், திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது," என்றான் புவனேந்திரன் பதிலுக்கு ஆத்திரமாகவே. ஆனால், உடனே தணிந்து, "சொன்னால் புரிந்து கொள், நளினி. ஏற்கெனவே பட்ட கடனே எனக்கு முழுதாகத் தீரவில்லை. இன்னும் உனக்காக வேறு கடன்பட வைத்துவிடாதே!" என்றான் கனத்த குரலில்.

"கடனா? என்ன கடன்?"

"எனக்கு மனைவியான பாவத்துக்கு, ஒருத்தி பலியானது போதாதா? உனக்கும் ஏதேனும் நேர்ந்தால், நான் என்ன செய்வேன்? என்னால் தாங்கவே முடியாதும்மா."

எதுவும் நேரத் தேவையே இல்லை என்றால், இவன் ஏன் ஒத்துக் கொள்ளவே மாட்டேன் என்கிறான்? கீறல் விழுந்த பழைய கிராமபோன் இசைத்தட்டு மாதிரி, அதே 'கடத்தலை' உருப் போட்டால், அவளுக்கு எரிச்சல் வராதா? முதலில், இந்தப் பேச்சை நிறுத்தியாக வேண்டும்.

"நீங்கள் பாதிக்கப்பட்டவர், புவனன்! சூடு பட்ட பூனை மாதிரிப் பட்டறிவில் பேசுகிறீர்கள். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், பூனையை விட, ஓர் அறிவு உங்களுக்கு அதிகம் இருக்கிறதல்லவா? அதைக் கொண்டு, யோசித்துப் பாருங்கள். எந்தப் பணக்காரனுடைய மனைவி எப்போது கிடைப்பாள், கடத்திப் போய்ப் பணம் பறிக்கலாம். கூடவே கொல்லலாம் என்று ஊரெல்லாம் வன்முறையாளர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றா நினைப்பது? அப்படி எல்லோரும் எண்ணத் தொடங்கினால் அப்புறம் தொழில் நடத்துவதிலும், பொருள் ஈட்டுவதிலும், யாருக்கு ஆர்வம் இருக்கும்? மனைவியை நேசிப்பவர்கள் எல்லோரும், கையில் திருவோட்டைத் தூக்கிக் கொண்டு பிச்சையெடுக்கத்தானே போவார்கள்? அப்புறம் நாட்டின் பொருளாதாரமே நாசமாகி விடாதா?" என்று மனதில் இருந்ததை மூச்சு விடாமல், படபடவென்று பொரிந்து கொட்டினாள்.

அவள் பேசி முடித்த போது, புவனேந்திரனின் கண்களுக்குச் சமமாக, முகமும் கன்றிச் சிவந்து போயிருந்தது.

இறுக மூடியிருந்த உதடுகளும், கை முஷ்டிகளுமாக, அவன் உணர்ச்சிகளை அடக்கப் பாடுபடுவதைக் கண்ட நளினிக்குச் சற்றுப் பரிதாபமாகக் கூட இருந்தது.

ஆனால், இது சொல்லியாக வேண்டிய விஷயம் அல்லவா?

அவன் கற்சிலையாய் நிற்க, அவனை நெருங்கி அவனது கரத்தைத் தொட்டு, "மெய்யாகத்தான் சொல்லுகிறேன், புவனன். ரதிக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம் எல்லோருக்கும் நேர வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நீங்கள் அப்படி அஞ்சத் தேவையும் இல்லை," என்றாள்.

அவளது விரல்களுக்கு அடியில், புவனேந்திரனின் தோல் மேலும் இறுகுவதை அவளால் உணர முடிந்தது.

அந்த இறுகலின் அடிப்படையான வேதனை புரியவும், அது தாங்காமல், "ஐயோ, வேண்டாம், புவன்!" என்று இரு கைகளாலும் அவனை இறுக அணைத்தாள்.

அவனது கரங்களும் அவளைச் சுற்றிக் கொள்ள, இருவரும் சற்று நேரம் அப்படியே நின்றனர்.

அவனது இறுக்கம் மெல்லத் தளர்வதை உணர்ந்து, அவனது தோளை மெல்ல வருடி, "அனாவசியமாக உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள், புவனன்!" என்று வேதனையோடு வேண்டினாள் நளினி.

ஓரிரு கணங்கள் அசையாமல் நின்று விட்டு, ஆறுதலாக வருடிக் கொடுத்த அவளது கைகளைப் பற்றி நிறுத்தினான் புவனேந்திரன்.

"அனாவசியமாகவா?" என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்டவன், அவளை நேராக நோக்கி, "ரதிக்கு நேர்ந்த ஆபத்து எல்லோருக்கும் நேர வேண்டிய கட்டாயம் இல்லை என்றாயே. அப்படி நேரவே நேராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்று கேட்டான்.

பழைய கதைக்கே வருகிறான்.

இதற்கெல்லாம் என்ன உறுதி கொடுக்க முடியும்? வெகு சில வாய்ப்புகள் மட்டும்தானே உண்டு என்றாலும், அதற்காகவேனும் அவள் காவல் கைதியாக வாழ்ந்தே ஆக வேண்டும் எனப் போகிறான்.

உள்ளம் சலிப்புறக் கைகளை விடுவிடுத்துக் கொண்டாள் அவள். "அப்படி வெகு அபூர்வமாக ஏதேனும் நேர்ந்தாலும், என்னைக் காப்பாற்றிக் கொள்ள, என்னால் முடியும்," என்றாள் எங்கோ பார்த்தபடி.

"எப்படியாம்? அன்றைக்கு என்னிடம் மாட்டினாயே, அது போலவா?" என்று ஏளனமாகக் கேட்டான் அவன். "உன்னால் முடியாது என்று, அன்று போலவே இன்னொரு தரம் நிரூபித்துக் காட்டினால் அப்போதேனும் மனதில் நிற்குமா?"

அவனது ஏளனம் தைக்க, "தேவையில்லை. ஆனால் நீங்களும் ஒன்றை யோசித்துப் பாருங்கள். நான் ஒன்றும், உங்கள் வில்லாதி வில்லர்களை உற்றவர்கள் என்று நம்பி, உங்களிடம் போலத் தனியாகச் சென்று, அவர்களிடம் மாட்டிக் கொள்ளப் போவதில்லையே! பொது இடங்களில், அந்த மாதிரிக் கடத்த முயன்றால், நம் பொதுமக்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். அதனால், உங்கள் அச்சமும், கவலையும் அனாவசியமேதான்!" என்றாள் அவள் தெளிவாக.


"கள்வன் பெரிதா, காப்பான் பெரிதா!" என்று வாசகம் சொல்வார்கள். மதுரையில் பார்த்திருக்கிறாயா? அவ்வளவு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கும் திருமலை நாயக்கர் மகாலிலேயே, அவரது காவல் படையையும் மீறிக் கள்வர்கள் கன்னமிட்ட இடம் இருக்கிறது. சாதாரணப் பொதுமக்கள், எந்த விதத்தில், உன்னைக் காப்பாற்றிவிட முடியும் என்கிறாய்?" என்று கேட்டான் அவன்.

"அப்படிப் பார்த்தாலும், நாயக்க மன்னருடைய பெரும் படை வீரர்களையே மீறி, அந்தக் கள்வர்கள் கன்னம் போட்டிருக்கிறார்களே! உங்கள் இரண்டு பாதுகாவலர்கள் அந்த வன்முறையாளர்களுக்கு எம் மாத்திரம்?" என்று மடக்கினாள் நளினி.

இவளிடம் என்ன சொன்னால் புரிந்து கொள்வாள் என்று அறியாதவன் போலச் சற்று நேரம் அவளைப் பார்த்தபடி, புவனேந்திரன் புருவம் சுழித்து நின்றான்.

பிறகு, "உண்மையாகவே, இந்தப் பாதுகாப்பு தேவை இல்லை என்று உனக்குத் தோன்றுகிறதா, அல்லது இங்குள்ள சூழ்நிலையில் அது சங்கடமாக இருப்பதால், வேண்டாம் என்கிறாயா? நன்கு யோசித்து எனக்குப் பதில் சொல், நளினி," என்று வரண்ட குரலில் வினவினான்.

அவனது குரலில், 'கண்மணி, ம்மா' விகுதியைக் கைவிட்டு வெறுமனே நளினியென்று அழைத்த விதமும், அவளை எச்சரித்திருக்க வேண்டும்.

ஆனால், அவனிடம் இருக்கும் ஒரே அசட்டுத்தனம் என்று அவள் கருதியதைப் போக்கிவிடும் வேகத்தில், "தேவையில்லை... தேவையில்லை... நிஜமாகவே, எனக்குப் பாதுகாப்புத் தேவையே இல்லை!" என்றாள் அவள் அவசரமாக!

"நான் உன்னை யோசித்துப் பதில் சொல்லச் சொன்னேன்!" என்றான் அவன் கோபமாக.

"மனதில் எப்போதும் இருப்பதைச் சொல்ல, எதற்கு யோசனை?" என்றாள் நளினி.

"மனதில் எப்போதும் இருப்பதா?" என்று, அவளது வார்த்தைகளையே மெதுவாகத் திருப்பிச் சொன்னான் புவனேந்திரன். "அப்படியானால், ஏற்கெனவே யோசித்து, ஒரு முடிவுடன் தான் இருக்கிறாய் என்று தெரிகிறது."

"நிச்சயமாக! இனி நீங்கள் தான் யோசிக்க வேண்டும்."

"யோசித்து நான் எடுத்த முடிவு பற்றி, முன்பே உன்னிடம் சொல்லியிருக்கிறேன்," என்றான் அவன் - இளக்கமற்ற, கனத்த குரலில்.

அவன் சொன்னது நினைவு வர, நளினி அதிர்ந்தாள்.



காக்கும் இமை நானுனக்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:47 pm

சக்திவேலின் காவல் தேவையில்லை என்று, புவனேந்திரனிடம் அவள் கேட்கப் போனபோது நடந்தது, நளினிக்குத் தெள்ளத் தெளிவாக நினைவு இருந்தது.

அவனது விஷயங்கள் எதையுமேதான் அவள் மறப்பது இல்லையே.

அதிலும், இது அவனது முதல் இதழொற்றுதல்.

பிரிவைத் தேர்ந்தெடுத்து விடாதே என்று, அவன் எப்படிக் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டான்.

அந்த அன்பு பெரு மரமாய் இவ்வளவு வளர்ந்த பிறகு, அவனுக்கு மட்டும் பிரிவது எளிதாகவா இருக்கும்? அதற்காக, அவனும் அவள் பக்கம் வரலாமே.

ஆனால், புவனேந்திரன் ஒரு மாதிரிப் பிடிவாதக்காரன். பெற்றோருக்கு அநியாயம் செய்தார் என்று, பாட்டியைக் கடைசி வரை... மரண வாசலில் ஒரு தரம் எட்டிப் பார்த்தது தவிர, இன்னமும் கூட, அவன் மன்னிக்கவே இல்லை.

ஆனால், முன்பின் பார்த்தே அறியாத பாட்டியின் பாசமும், அவளது காதலும் ஒன்றல்ல.

அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பின் வலிமை பெரியது. அது, அவனை அவள் பக்கம் இழுத்து வந்து விடும் என்று நளினி பிடிவாதமாக எண்ணமிடும் போது, அதை நிரூபிப்பவன் போன்று, புவனன் அவள் புறமாக ஓர் எட்டு எடுத்து வைத்தான்.

ஆனால், அவள் ஆவலாக நோக்குகையிலேயே, கைகளை இறுக மூடிக் கொண்டு, திரும்பி நடந்து அறையை விட்டு வெளியேறி விட்டான்.

வெளியே சென்றவன், அறைக்குள் நடப்பதைக் கவனியாதிருக்க மிகவும் முயன்று கொண்டிருந்த சுதர்சனத்திடம் போனான். "பாருங்கள், அங்கிள்! என் கடந்த காலத்தில் நடந்தது பற்றி உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். விளக்கி, விலாவாரியாக விவரிக்க முடியாத சிலதைத் தேவையில்லை என்று விட்டிருந்தேன்... அதில்... அங்கிள், நளினிக்கும் இது தெரிய வேண்டியதுதான்..." என்று மேலும் சற்றுத் தடுமாறி விட்டு, அவனே தொடர்ந்து பேசினான்.

"அங்கிள்! ரதிக்குப் பூ மாதிரி முகம். இளமை, சந்தோஷம் எல்லாமாக, அன்றலர்ந்த பூ தவிர, அவள் முகத்துக்கு வேறு உவமை கிடையாது. ஆனால், அவள் காணாமல் போய்... இறந்து பத்து நாட்களுக்குப் பிறகு, பிணக் கிடங்கில் பார்த்தபோது, அந்த முகம் எப்படி இருந்தது, தெரியுமா? எனக்கு மறக்காது. இந்தப் பிறவியில் அது மறக்கக் கூடியது அல்ல, அங்கிள். என்னை மணந்த ஒரு காரணத்துக்காக... அவள்... அந்தப் புதுமலர்... கடவுளே..." என்று, மேலே பேச முடியாமல் தவிப்புடன் அவன் நிறுத்திய போது, எல்லோருக்கும் மூச்சடைத்துப் போயிற்று.

சகுந்தலா ஓசையற்று அழவே தொடங்கி விட்டாள்.

முதலில் சமாளித்துக் கொண்டவனும் புவனன் தான்.

தொண்டையைச் செருமிச் சரிப்படுத்திக் கொண்டு, "அங்கிள், ஆன்ட்டி! நீங்கள் இருவரும் என்னைப் போலவே, நளினி மீது நீங்களும் மிகுந்த அன்புள்ளவர்கள் என்பதால், நான் சொல்வதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நளினி என் மனைவியாக இருப்பதை விட, அவள்... நல்லபடியாக உயிரோடு இருப்பது எனக்கு முக்கியம். இன்னொரு... அதுபோல, இன்னொரு தப்பு நடக்க விட முடியாது, அங்கிள். அதனால் நான் இந்தத் திருமண நிச்சயத்தை முறிக்கிறேன்!" என்று முடித்தான்.

அவரது அலுவல் அறை வாயிலில், முகத்தில் ரத்தப் பசையே இல்லாமல் வெளுத்த முகத்துடன், ஓர் ஆவியைப் போன்று நின்ற மகளை அதிர்ச்சியுடன் பார்த்தார், சுதர்சனம்.

மகளின் மனம் அவர் அறியாதது அல்ல.

அது, இப்போது என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கும் என்று உணர்ந்து, "பாருங்கள் புவனேந்திரன். அவள் சின்னப் பெண்! இந்த ஒரு தடவை யோசியாமல்..." என்று ஏதோ சொல்லத் தொடங்கினார்.

"இல்லை, அங்கிள். நன்கு யோசித்துத்தான், தனக்குப் பாதுகாப்புத் தேவையில்லை என்று, நளினி செயல்பட்டிருக்கிறாள். வரக்கூடிய ஆபத்து பற்றி அவளுக்குப் புரியவில்லை என்பதோடு, எதையும் புரிந்து கொள்ளப் பிரியமும் இல்லை. அவசியமற்ற அசட்டுத்தனமாக நிச்சயமாக நினைக்கிறாள். எனவே, மீதம் இருக்கும் ஒரே வழி, ஆபத்துக்கு ஆளாகாத, பாதுகாப்புத் தேவையற்ற ஒரு நிலையை, அவளுக்கு உருவாக்கிக் கொடுப்பதுதான். அதனால் தான், விலகிப் போக முடிவு செய்திருக்கிறேன். இன்னொன்று அங்கிள். இதுவே, இன்னொருவர் என்றால், நிச்சயித்த திருமணத்தை நிறுத்துவதற்காக, நஷ்ட ஈடு எவ்வளவு வேண்டும் என்று நேரடியாகக் கேட்டிருப்பேன். ஆனால், இந்தக் குடும்பம் அப்படிப்பட்டது இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும், சில ஏற்பாடுகளுக்காக நீங்கள் செய்திருக்கும் அதிகப்படிச் செலவுகளை ஈடு செய்யவே நான் விரும்புகிறேன். அதனால்..."

பணமா தருகிறேன் என்கிறான்? பணம் எல்லாவற்றையும் ஈடு செய்து விடுமாமா?

நளினியின் தவிப்பு கொதிப்பாக மாறியது.

அவன் பேச்சில் குறுக்கிட்டு, "அவரது பணம் இங்கே யாருக்கும் தேவையில்லை. அது இல்லாமலே இதுவரை வாழ்ந்தது போல, இனியும் நம்மால் வாழ முடியும் என்று சொல்லி, அவரை வெளியே அனுப்புங்கள், அப்பா!" என்று சீறீனாள்.

அவளை நேராகப் பாராமலே, "இது, இப்படிப் பிரிய நேர்வது, எனக்கும் மிகுந்த வேதனைதான், அங்கிள். மீண்டும், பழைய பாலைவன வாழ்க்கைக்குத் திரும்புவது எனக்கு மட்டும் மகிழ்ச்சியா? ஆனால், அவள் மேல் உள்ள அக்கறையினாலேயே, இதை விடப் பெரிய துன்பம் நேர்ந்து விடக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவே, வேறு வழியில்லாமல், மனதைப் பெரிதும் கட்டுப்படுத்திக் கொண்டு, இந்த முடிவை எடுத்திருக்கிறேன்! பணம் பற்றிக் கூட, உங்களுக்குத் தேவை என்று நான் அதைக் கூறவில்லை. நொந்த என் மனதிற்கு ஒரு சிறு ஆறுதல் கிடைக்கக் கூடும் என்றுதான். இதற்கு மேல், நான் வேறு என்ன சொல்லட்டும்? கிளம்புகிறேன்," என்ற புவனேந்திரன் அதற்கு மேல் நில்லாமல், அங்கிருந்து போய்விட்டான்.

புவனேந்திரன் இப்படிச் சொல்லிச் சென்றது, வீட்டினர் எல்லோருக்குமே அதிர்ச்சிதான்.

அவர்களிலும், நளினிக்கு, ஒரு பயங்கரக் கனவை நிறுத்த முடியாமல், தொடர்ந்து கண்டு கொண்டே இருக்கும் உணர்வு.

புவனனின் அசட்டுப் பயத்தைப் போக்குவதாக எண்ணி அவள் செய்த முயற்சி, இப்படிப் பூமராங்காகத் திருப்பி அடிக்கும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லையே.

அவள் மீது அவனுக்குள்ள அன்பில் நம்பிக்கை வைத்து, அந்த அன்பை இழக்க விரும்பாமல், புவனன் தன் வழிக்கு வருவான் என்று அவள் கருதியது மாறி, அந்த அன்புக்காகவே, அவளைப் பிரியத் துணிவான் என்று அவள் நினைக்கவில்லையே.

இது கனவாகத்தான் இருக்கும், அல்லது ஏதோ மனப் பிரமையோ என்றெல்லாம் கூட, அவளுக்குத் தோன்றியது.

ஆனால், அவள் ஏதோ கண்ணாடிப் பாத்திரம், உரக்கப் பேசினாலே உடைந்து விடுவாள் போலப் பார்த்துப் பார்த்துப் பெற்றோர் நடந்து கொண்ட விதம், இது கனவோ, பிரமையோ அல்ல என்றது.

வீட்டு வாயிலில் எப்போதும் இருக்கும் சக்திவேலும் அவனுடைய கூட்டாளி கண்ணனும் காணாமல் போனது, எல்லாம் நனவே என்று மேலும் உறுதிப்படுத்தியது.

சூரியன் கிழக்கே உதித்து, மேற்கே மறைவது போல, வெகு நிச்சயமான நடப்பு!

புவனேந்திரன், அவளை விட்டு, நிஜமாகவே பிரிந்து போய் விட்டான்.

எப்படி முடிந்தது?

அவளைப் பார்த்ததுமே, அவன் கண்கள் பளிச்சிட்டதும், முகம் மலர்ந்ததும், எல்லாம் பொய்யா? நடிப்பா? கனவா?

இல்லை. எல்லாமே உண்மையே!

ஆனால், எல்லாவற்றையும் விட, அவர்களது அன்பை விட, அவர்களது ஆனந்தமான எதிர்கால வாழ்வை விட அவனது பாதுகாப்புப் பைத்தியம் பெரிதாக இருந்திருக்கிறது.

அவர்களது வாழ்வில் பூரண மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கக் கூடும் என்று கருதி, அவள் தவிர்க்க முயன்றது, கடைசியில், அவளது வாழ்வையே அழித்து விட்டது.

மெய்யாகவே, வாழ்க்கையே அழிந்து விட்டது போலத் தான் நளினி உணர்ந்தாள்.

புவனேந்திரன் இல்லாமல் சுகமோ, சந்தோஷமோ அவளுக்கு ஏது?

இனிமேல், தன்னால் வாய்விட்டுச் சிரிக்கவே முடியாது என்று, அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.

அதை விடவும், இதயம் இருந்த இடத்தில் புழுவாய் அரித்த இந்த வேதனை! அது என்றேனும் மட்டுப் படக் கூடுமா? அந்த நம்பிக்கையும் இல்லை.

புவனேந்திரனைப் பிரியவே நேர்ந்து விடும், அந்தப் பிரிவு இவ்வளவு வேதனையைத் தரும் என்று முன்பே தெரிந்திருந்தால், வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கலாமே!

'நுணலும் தன் வாயால் கெடும்' என்பது போல நடந்து கொள்கிறாள் என்று, அவன் முதல் நாள் சந்திப்பிலேயே சொன்னானே. அதற்கு உதாரணமாக நடந்து, மீண்டும் எதிர்காலத்தைக் கெடுத்துக் கொண்டாளே!

இப்படியெல்லாம் நினைத்துக் கண்ணீர் வடித்துத் தன்னைத் தானே நோகடித்துக் கொண்ட போதும், மனதாரச் சரியானது என்று ஒத்துக் கொள்ளாத ஒன்றைச் சும்மா வாய் மூடி மௌனமாக ஏற்றுக் கொள்வது, தன் இயல்பு அல்ல என்பதையும் நளினி அறிந்தே இருந்தாள்.

புவனனும், பாதுகாப்பு விஷயத்தில் இளகுகிறவன் அல்ல.

எனவே, அன்று இல்லாவிட்டாலும், சற்றுப் பின்னே எப்படியும் ஒரு நாள் இந்த வாக்குவாதமும், அதன் இந்த முடிவும் நிகழ்ந்தே இருக்கும்.

எனவே, இப்படி இருந்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என்று எண்ணி மனதைப் புண்ணாக்கிக் கொள்வது மடத்தனம்!

தன்னைப் புண்ணாக்கிக் கொள்வது மட்டும் மடத்தனம் அல்ல. தன் மேல் அன்பு வைத்த பாவத்துக்காகப் பெற்றோரையும், உடன் பிறந்தவளையும் நோகடிப்பது கூட மடத்தனம் தான்.

'நான் பிளஸ் டூ, பிளஸ் டூ!' என்று எப்போதும் புத்தகமும் கையுமாகப் புருவங்களை உயர்த்திக் கொண்டு அலையும் மஞ்சரி கூட, தன் வழக்கத்துக்கு மாறாக, "கொஞ்சம் ஜூஸ் குடிக்கிறாயாக்கா? காபி தரட்டுமா?" என்று ஓடி ஓடி வருவது ஒருவாறு, கண்ணிலும், அதைத் தொடர்ந்து கருத்திலும் பட, நளினி தன்னைச் சமாளித்துக் கொள்ள முயற்சித்தாள்.



காக்கும் இமை நானுனக்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:47 pm

சும்மா விழுந்தடித்துப் படுத்திருப்பதும், படுத்துக் கொண்டு அழுவதும், இனிக் கூடாது.

குறுக்கிட்டுக் கொண்டே இருந்த புவனேந்திரன் நினைவைப் பிடிவாதமாக முயன்று ஒதுக்கியபடி, என்ன செய்வது என்று நளினி யோசித்தாள்.

'உன்னத'த்துக்குப் போய்த் தொடர்ந்து பணிபுரிவது முடியாத காரியம்.

தன் நெஞ்சில் தானே கத்தியால் திருகுவது போல, அது முட்டாள்தனமான காரியம்.

வீட்டிலும் வழக்கம் போல எந்த விதமான அலங்காரப் பூ வேலைகளைச் செய்யவும் முடியவில்லை.

அதற்குக் கற்பனா சக்தி வேலை செய்ய வேண்டும். கண்ணும் மனமும் ஒன்றி வேலை செய்ய வேண்டும். எப்போதும் கண்ணுக்குள் புவனேந்திரனை வைத்துக் கொண்டு செய்தால், ஊசி குத்திக் குத்தியே கை புண்ணாகி விடும்.

வேறு என்ன செய்வது என்று அவள் யோசித்த போது, 'உன்னத'த்திலிருந்து அவளது சம்பளத்தைக் கணக்குத் தீர்த்து ஒரு காசோலையும், வேலையைத் திறம்படச் செய்ததற்காக ஒரு நன்னடத்தைச் சான்றிதழும் வந்து சேர்ந்தன.

அங்கே தொடர்ந்து அவள் வேலை செய்வது முடியாது என்று, அவளைப் போலவே, அவனும் எண்ணியிருக்கிறான்.

யாராக இருந்தாலும், அப்படித்தான் யோசித்திருப்பார்கள் என்றாலும், நளினிக்கு என்னவோ, தன்னைப் போலவே ஒத்த மனமாகப் புவனேந்திரனும் நினைத்திருப்பதாகத் தோன்றி, அதற்கோர் அழுகை வந்தது.

ஆனால், அதுவே இன்னொரு வாய்ப்பையும் கொடுத்தது.

அடுத்த வேலை தேடப் போவதாகக் கூறி, வீட்டை விட்டு வெளியே செல்லத் தொடங்கினாள்.

ஆனால், முழு மனதோடு, நளினி வேலை தேடினாள் என்று சொல்ல முடியாது.

ஆனால், முதல் லாபமாக, அவளது கண்ணீர் நின்றது. வெளியே கண்ட கண்ட அன்னியர்கள் பார்க்க அழ முடியாது அல்லவா? அந்த அளவுக்குச் செல்ல முடியாமல், குறைந்த பட்சமாக, அவளது உடல் உறுப்புகளுக்கேனும் ரோஷம் இருந்தது.

அத்தோடு, அவளது மூளையும் பிடிவாதமாக மற்ற விஷயங்களில் - இந்த உடையில் கழுத்து அமைப்பு நன்றாக இருக்கிறது. இது வண்ணக் கலவை சரியில்லை. இந்த உடல் அமைப்புக்கு இது போலப் பெரிய கட்டங்கள் உள்ள சேலை கட்டவே கூடாது. நீளவாக்கில் கோடுகள் வரும்படி வேலைப்பாடாவது செய்ய வேண்டும்... என்பன போன்ற அவளது வேலை தொடர்பான விஷயங்களில் சிந்தனையைச் செலுத்தக் கண் கரிப்பு மெல்ல மெல்ல மறைந்து போகும்.

எனவே, வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, கண்ணீரும், வேதனையுமாக மற்ற மூவரையும் வருத்திக் கொண்டிருந்தது மாறியது.

வீட்டிலிருந்து கிளம்பியவள், வேலை தேடினாளா, அல்லது சும்மா சுற்றியலைந்தாளா என்று சொல்வதற்கில்லைதான். அலைச்சல் ரொம்பவும் சலிப்பூட்டினால், ஏதாவது பூங்காவிற்குப் போய், அங்கே சும்மா உட்கார்ந்திருப்பதும் உண்டு. சும்மா இருப்பது புவனேந்திரன் நினைவை அதிகமாகக் கொணர்ந்தால், மீண்டும் கிளம்பி ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்குப் போய் விடுவாள்.

இப்படி ஒரு குறிப்பின்றி அலைகையில் திடுமென ஒரு நாள், யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வருவது போல, நளினிக்குத் தோன்றியது.

என்ன இது என்று அவள் மனம் சற்றே படபடத்தது.

அவளை யார் பின் தொடரக் கூடும்?

அதுவும், புவனேந்திரன் அவளைப் பிரிந்து சென்று விட்ட இப்போது!

சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொள்வதற்காக, அவ்வப்போது சடக்கென்று திரும்பிப் பார்த்தால், அப்படி யாரும் அவளைப் பின் தொடர்வதாகத் தெரியவில்லை.

நாலாவது தடவையாகத் திரும்பிப் பார்த்தவளுக்குத் தன் மீதே எரிச்சல் வந்தது.

புவனேந்திரனின் கடத்தல் பிரமை, இப்போது அவளையும் பிடித்துக் கொண்டு விட்டதா?

இந்தப் பைத்தியம் முன்பே அவளைப் பிடித்துத் தொலைத்திருந்தால், பேசாமல் அவனது பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தலையாட்டி ஏற்று நிம்மதியாக இருந்திருக்கலாம் என்று தோன்றவும், அவளுக்குத் தொண்டை அடைத்தது.

நடைபாதையில் வைத்து, இது என்ன பைத்தியக்காரத்தனமான எண்ணப் போக்கு, என்று தன்னைத் தானே கடிந்தபடி, நளினி மேலே நடந்தாள்.

மறுநாள் வீட்டை விட்டு வெளியே செல்லுமுன், வாயில்புற ஜன்னல் வழியே, நளினி சுற்றுப் புறத்தை ஆராய்ந்தாள்.

முந்திய நாள் கலக்கத்தை வலியுறுத்தும்படியாக எதுவும் அவள் கண்ணில் படவில்லை... அல்லது தெரு முனைக் கடையின் அருகில் நின்று பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஒருவன், பத்திரிகையைத் தாழ்த்தி, அவளது வீட்டை உற்றுப் பார்த்தானோ?


வீட்டைத்தான் பார்த்தானோ, அல்லது தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தவன், அலுத்த கண்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காகப் பத்திரிகையை விட்டுப் பார்வையை விலக்கியதைப் போய், அவள் தப்பாக எண்ணுகிறாளோ?

அவனை மணக்கப் போகிறவள் என்கிற நிலை மாறினாலே, நளினிக்கு ஆபத்து வராது என்பது, புவனேந்திரனின் கருத்து. அதன்படி, சக்திவேலும், கண்ணனும் அகற்றப்பட்டுப் பத்து நாட்களுக்கு மேலாகிறது.

எனவே, இது, அவளுக்கான காவல் இல்லை என்பது நிச்சயம்.

பின்னே?

மகள் முகத்தில் யோசனையைக் கண்டு, "என்னடாம்மா... கிளம்பவில்லை?" என்று சகுந்தலா வினவினாள்.

தாயிடம் எதையும் சொல்லிக் கலங்க வைக்க மனமின்றி, "ஒன்றும் இல்லையம்மா. ஒரு சேலைக்கு அலங்காரப் பூவேலை செய்யலாம் என்று நினைத்தேன். அதற்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்," என்று பெற்றவளுக்கு ஒரு காரணம் கண்டு பிடித்துச் சொல்லியபடியே, சும்மா பார்ப்பது போன்ற பாவனையோடு கீழே பார்த்தாள்.

பத்திரிகை படித்தவன் அந்தப் பக்கம் எங்குமே கண்ணில் படவில்லை.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!' என்கிற மாதிரி, அவளுக்கும் தோன்றத் தொடங்கி விட்டது போலும்.

சகவாச தோஷம். புவனனின் சகவாசம்.

முன் தினம் யாரோ பின் தொடர்வது போல, இன்று யாரோ வீட்டைக் கவனிப்பது போல.

இது போன்ற பிரமைகள் தான் புவனேந்திரனுக்கும் இருந்திருக்குமோ? அப்படி ஒரு துக்கமும் நேர்ந்து விட்டதால், இந்தப் பாதுகாப்பு விஷயத்தில், அவன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறான் போலும்!

மீண்டும் மனம் புவனேந்திரனிடம் சென்று விட்டது மட்டுமின்றி, அவனை நியாயப்படுத்தவும் தொடங்கி விட்டதையும் நளினி உணர்ந்தாள்.

ஆனால், புவனேந்திரனுக்கு இருப்பது, வெறும் பிடிவாதம் மட்டுமல்ல-வெறி, மதவெறி போலத் தீவிரமான ஒன்று.

அந்த வெறிக்குப் பணிந்து, அவன் ஒருவன் கைதி வாழ்க்கை வாழ்வது போதும்.

அவளும் அதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது.

அந்தப் பயத்தில், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கவும் கூடாது.

இந்த எண்ணத்தில்தான் உள்ளத்தில் ஆர்வமே இல்லாத போதும், நளினி அன்று வீட்டை விட்டு வெளியே சென்றது.

ஆனால், புவனேந்திரனின் அசட்டுப் பயம், வெறி என்று அவளால் வர்ணிக்கப்பட்டது, அன்று அவளுக்கு நடந்தது.

நளினி கடத்தப்பட்டாள்.



காக்கும் இமை நானுனக்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 2:48 pm

கடந்த நாலைந்து நாட்களைப் போலவே, அன்றும் நளினி சில பெரிய கடைகளுக்குள் சென்று சுற்றியலைந்தாள்.

ஒரு கடையில், ஏதோ பேருக்கு ஒரு வேலை கேட்டாள்.

நளினியின் ஃபைலைப் பார்த்து ஆவலோடு, அவளது திறமை, தகுதி முதலியவற்றை விசாரித்த கடை நிர்வாகி, அவளது ஈடுபாடற்ற அரைகுறையான பதில்களில் அதிருப்தியுற்றுக் கையை விரித்து விட்டார்.

நளினியும் அதற்காகப் பெரிதாக வருந்தி விடவில்லை.

'உன்னத'த்தில் பணி புரிந்த பிறகு, அதே போன்ற இன்னோர் இடத்தில் வேலை செய்ய அவளுக்கும் மனமில்லை தான்.

ஏன், வேறு யாரிடமும், எந்த விதமான வேலை செய்யவுமே, அப்போதைக்கு அவளுக்குப் பிடிக்கவே இல்லைதான்.

இந்த வேலை தேடும் படலமே, வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, மற்றவர்களை வருத்துவதைத் தவிர்ப்பதற்கான சாக்காகத்தான் இருந்தது.

இந்த வருமானம் வந்துதான் வாழ வேண்டும் என்கிற நிலை இல்லாத காரணத்தால், வேலை கிடைக்காததை யாரும் பெரிதாகக் கருதவும் இல்லை.

நளினியுடைய பெற்றோருக்குமே மகள், வெளியே சென்று, நாலு பேர் முகத்தைப் பார்த்துப் புவனேந்திரனின் இழப்பை மறக்க மாட்டாளா என்பதுதான் முக்கியமாக இருந்தது.

இந்தச் சில நாட்களின் பழக்கம் போலவே, ஓரிரு பெருங்கடைகளில் ஏறி இறங்கியதும், தன் கால் போன போக்கில் நளினி நடக்கலானாள்.

மனமும் வழக்கம் போலவே, புவனேந்திரனிடம் ஓடியது.

காவல், காவல் என்று வீதிகளில் சுதந்திரமாக நடக்கக் கூட முடியவில்லையே என்று அவன் மீது எரிச்சல் பட்டாளே! இப்போது சுதந்திரமாக நடப்பது சுகமாகவா இருக்கிறது? இல்லவே, இல்லையே...

நேரே செல்ல முடியாமல், எதுவோ வழியில் தடுப்பதை உணர்ந்து, நின்று நிமிர்ந்து பார்த்தாள் நளினி.

அறிமுகமற்ற ஒரு மனிதன், கையில் ஒரு துண்டுக் காகிதத்தை வைத்துக் கொண்டு, "இந்த முகவரி தெரியுமா, மேடம்?" என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

நடைபாதைகளில் கூட்டமில்லாத நேரம். ஆனாலும், அங்கொருவர், இங்கொருவர் போய்க் கொண்டு தான் இருந்தார்கள்.

அருகே நடைபாதை ஓரமாகக் கூடவே, மெல்ல நகர்ந்து வந்த காரும், அந்த அன்னியன் குறிப்பாக அவளை நிறுத்திக் கேட்ட விதமும், மனதை உறுத்த, சட்டென விழிப்புற்று, அவள் வேகமாக விலகிச் செல்ல முயன்றாள்.

ஆனால், அதே வேகத்தில் இலகுவாக அவளோடு கூட நடந்தபடி, "கவனி பெண்ணே, அந்தப் பக்கம் பார்த்தாயானால், துப்பாக்கியில் கை வைத்தபடி, எங்கள் ஆள் நிற்பது தெரியும். மறுப்பின்றி எங்களோடு இந்தக் காரில் ஏறி வந்து விட்டாயானால், உனக்குப் பிரச்சனை இராது! இல்லாவிட்டால், கை, கால், உயிர் என்று என்னவெல்லாம் போகும் என்று சொல்ல முடியாது," என்று புன்னகையோடு பேசி மிரட்டினான்.

ஆனால், அந்த மிரட்டலுக்குப் பயந்து நளினி அவன் காட்டிய காரில் ஏறி விடவில்லை. ஏனெனில், அப்படி அந்தக் காரில் ஏறிச் சென்ற பிறகு, அவள் சொன்ன எதுவும் அவளை விட்டுப் போகாது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லையே!

ஆனால் அவன் காட்டிய பக்கமாக அனிச்சையாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, உடனே தவறுணர்ந்து, அவள் அவசரமாகத் திரும்புமுன் கிடைத்த சில கணங்கள், அந்தக் கடத்தல்காரனுக்குப் போதுமானதாக இருந்தன.

மென்னியோரமாக விழுந்த அளவான சிறு தட்டில், நளினி உணர்வு மயங்கிச் சரிய, சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த ஓரிருவர் என்னவென்று எட்டிப் பார்க்கும் முன்னதாகக் கார் கதவைத் திறந்து, அவளை உள்ளே தள்ளி ஏற்றிக் கொண்டு, கார் பறந்து விட்டது.

போக்குவரத்து வெகுவாகக் குறைந்திருந்த சமயம் என்பதால், கார் வேகமெடுப்பதற்கு வசதியாகவும் இருந்தது.

சிறு கூச்சலிடக்கூட நளினிக்கு அவகாசம் இல்லாது போக, இங்கே ஓர் அநியாயம் நடக்கிறது என்று யாருக்கும் தெரியவும் வழியே இல்லாது போயிற்று.

எனவே, புவனேந்திரனிடம் அவள் பெரிதாகச் சொன்ன பொதுமக்களின் உதவி அவளுக்குக் கிடைக்கும் வாய்ப்பு இல்லாது போயிற்று.

ஆகச் சில மணி நேரம் கழித்து, நளினிக்கு முழுமையாகச் சுய உணர்வு வந்த போது, அவள் கை, கால்கள் கட்டப்பட்டு, ஒரு நாற்காலியில் அமர்த்தப்பட்டிருந்தாள்.

வலிக்கும் அளவுக்கு இறுக்கமாக இல்லை என்றாலும், தானாக அவிழ்த்துக் கொள்ள முடியாத கட்டுகள் என்று, உடனேயே புரிந்தது.

அவளுக்கு அறிமுகமே இல்லாத சில மனிதர்கள், அந்த அறையில் அவரவர் வசதிக்கு ஏற்ப நின்று கொண்டோ, உட்கார்ந்தோ இருந்தார்கள்!

நளினிக்கு விழுந்த அடி வலுவானது அல்ல.

மன வலிமையும், உடல் ஆரோக்கியமும் உள்ளவள் என்பதால், நளினிக்கும் விரைவிலேயே மயக்கம் தெளியத் தொடங்கிவிட்டது.

சில மணி நேரத்தில், தானாகவே தெளிந்து விடக் கூடிய அளவிலேயே, அந்தக் கடத்தல்காரன் அவனது வலுவைப் பயன்படுத்தியிருந்தான் என்பது அவளுக்குப் புரிந்தது.

அதனாலேயே, அவன் இந்தப் போர்க்கலையில் எவ்வளவு வல்லவன் என்பதும் புரிபட்டது. புரிந்த அளவில், அவள் மனம் சோர்ந்தது.

இதைத்தானே புவனனும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னான். அப்போது அதை அசட்டுத்தனம் என்று எண்ணியதை நினைத்து, இப்போது மனம் வேதனைப் பட்டது.

ஆனால், அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் அசட்டுத்தனம் தான். இப்போது என்ன செய்வது என்று யோசிப்பதில் மூளையைப் பயன்படுத்தினால், கொஞ்சமேனும் பலன் இருக்கக் கூடும் என்று யோசிக்கத் தொடங்கினாள் நளினி.

எதிரிக்கு முழுப் பலத்தைக் காட்டுவது முட்டாள்தனம். அதிலும், மயங்கித் தெளிந்து, இப்போதிருக்கும் பலவீனமான நிலையில், உறுப்புகள் வசப்படும் வரையேனும், வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது.

எனவே, அவள் உடனே கண்ணைத் திறந்து பார்த்து விடவில்லை. கண் மூடிய அதே நிலையில் இருந்தவாறே, காதுகளைப் பயன்படுத்திச் சுற்றுப் புறத்தை ஆராயத் தொடங்கினாள்.

இந்தக் கடத்தல் எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பது பற்றித்தான் அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நிச்சயமாக முழுப் பலன் கிடைக்கும் என்பது பெரும்பான்மை அபிப்பிராயமாக இருந்தது.

ஆனாலும், "... இவள் வெறும் காதலிதானே? எத்தனையோ பேரில் ஒருத்தியாகக் கூட இருக்கலாம். இவளுக்காக, அவன், நாம் கேட்கிற பிணைத் தொகையைக் கொடுப்பானோ, என்னவோ. எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது," என்று ஒரு குரல் சந்தேகமும் பட்டது.

காதலிதானே என்று, சற்று இளப்பமாகப் பேசியது, தன்னையா? அதுவும், எத்தனையோ பேரில் ஒருத்தியாமே.

புவனேந்திரன் அப்படிப்பட்டவன் அல்ல என்று கத்த வேண்டும் போல, அவளுக்கு ஆத்திரம் வந்தது.

ஆனால், அவளது வேஷம் கலைந்து போகுமே, ஏமாற்றினாயா என்று ஆத்திரத்தில் என்னவேனும் சித்திரவதை செய்தால்?

சிரமப்பட்டு, எந்தவித மாற்றமும் இல்லாமல் முகத்தை வைத்துக் கொண்டு நளினி இருக்க, நல்ல வேளையாக, அவர்களில் ஒருவனே, முன்னவனை மறுத்துப் பேசினான்.

"சே, புவனேந்திரன் அப்படிப்பட்ட ஆள் இல்லையடா. ஐந்து ஆண்டுகளாகப் பெண் வாசனையே இல்லாமல் இருந்திருக்கிறான். அதனால் தான், இவளை வைத்து அவனைப் பிடிக்கும் ஐடியா வந்ததே. சரியான குரங்குப் பயல். பெண்டாட்டி செத்தால் புது மாப்பிள்ளை என்று இன்னொருத்தியை மணந்து கொண்டு, சும்மா இருப்பதுதானே. அதை விட்டு, நொட்டு, நொசுக்கு என்று கண்டதையும் நோண்டிக் கொண்டு. அந்த முட்டாளுக்கு உயிரை விடுவதற்கு வேறு வழியா கிடைக்கவில்லை?"

உயிரை விடுவதா? யாருடைய உயிர்? புவனேந்திரனின் உயிரா? கடவுளே!

அதற்கு மேல் சும்மா இருக்க முடியாமல், நளினியின் முகம் மாறிவிட்டது.

அவளைக் கவனித்திருந்த யாரோ, "ஷ்... மயக்கம் தெளிகிறது," எனவும், இனி நடிப்பதில் பலனில்லை என்று உணர்ந்து, அப்போதுதான் மயக்கம் தெளிகிறவள் போன்ற பாவனையுடன், முக்கலும் முனகலுமாக நளினி மெல்லக் கண்ணைத் திறந்தாள்.

போடுகிற வேஷத்தை ஒழுங்காகப் போட வேண்டும், அல்லவா?

கண்ணைத் திறந்தவள், கண் முன்னே காண்பதை நம்ப முடியாதவள் போலக், கண்ணைக் கசக்கிக் கட்டப்பட்டிருப்பதை உணர்ந்தாற்போல, மேலும் முகத்தில் திகைப்பைக் காட்டினாள்.

திகைப்பும் பயமுமாக, "ஐயோ! நீங்களெல்லாம் யார்? என்னை... என்னை ஏன் இங்கே... கடவுளே! என்னை ஒன்றும் பண்ணி விடாதீர்கள். ப்ளீஸ்!" என்று பதறினாள்.

தன்னை என்ன செய்யப் போகிறார்களோ என்பதோடு, புவனேந்திரனின் உயிரைப் பற்றிய அச்சமும் உள்ளே நிஜமாகவே மிக அதிகமாக இருந்ததால், அவளது கலக்கம் பெருமளவு உண்மையாகவே இருந்தது. பார்த்தவர்களுக்கும் அப்படியே தோன்றிற்று.



காக்கும் இமை நானுனக்கு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக