புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
4 Posts - 3%
Kavithas
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
1 Post - 1%
bala_t
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
1 Post - 1%
prajai
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
293 Posts - 42%
heezulia
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
6 Posts - 1%
prajai
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
4 Posts - 1%
manikavi
இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி எல்லாமே நீயல்லவோ


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:15 pm

நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த வேளை! அந்தச் சாலையோரத்துச் சின்ன விடுதியின் முன்னே சத்தமின்றி, ஒரு நீளக் கார் வந்து நின்றது!

காரை நிறுத்தி விட்டு, உள்ளே சென்றால், "உங்கள் அறை தயாராக இருக்கிறது. கடைசி மாடியில் ஒரே பெரிய அறை!" என்றார்கள்.

பரவாயில்லை! அவன் கேட்டபடிதான் தந்திருக்கிறார்கள்!

'ஆட்டிக்' மீதுள்ள ஒற்றை அறை என்றால், அடுத்த அறை மனிதர்கள் என்று, யாரையும் சந்திக்கத் தேவையிராது! சென்றது போல், ஓசையின்றி, அடுத்தவர் அறியாமல் திரும்பியும் சென்று விடலாம்! எந்தப் பிரச்சினைக்கும் வாய்ப்பே இராது! இல்லாவிட்டால், எங்கிருந்தாவது, கழுகுகள் மாதிரிப் பாய்ந்து விடுவார்கள்! குத்திக் குதறி, மனிதனை அடையாளமே இல்லாதபடி, அவர்கள் விருப்பத்துக்கு மாற்றிக் காட்டி விடுவார்கள்!

என்னமோ, அவன் தினமும் இப்படித்தான், ஏதோ வெறியன் என்பது போல!

பிணம் தின்னிக் கழுகுகள்!

புகழும் பணமும் வந்துவிட்டால், மனிதனுக்குச் சொந்த வாழ்க்கையே இருக்கக் கூடாதா?

மற்ற கோடிக்கணக்கான மனிதர்களைப் போன்ற தேவைகள், அவனுக்கும் இருக்கும் தானே? அதுவும், எதற்கும் சுதந்திரம் மிகுந்த இந்த நாட்டில்!

ஆனாலும், இவ்வளவு ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது! அப்படி இருந்துமே, சில சமயங்களில் கண்ட பேச்சுக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது... ஆனால், அதெல்லாம், தானாக மேலே வந்து விழுகிறவர்களால் நேர்ந்தது! அதனால், ரொம்பப் பேர் கெட்டு விடாமல் மீளவும் முடிந்திருக்கிறது!

லிஃப்டில் செல்லும் போதே, அவன் எலிசாவை மெச்சிக் கொண்டான்.

இடையிடையே, அவனது தேவை புரிந்து, இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், எலிசா கெட்டிக்காரிதான்!

மற்றபடி, படிக்க வந்தவனின் இன்னொரு திறமை புரிந்து, அதைச் செயல்படுத்தும் உரிமை பெற்றுத் தந்து, இன்று குன்றின் மீதிட்ட விளக்காய்க் கோடீசுவரனாக வாழ வழி செய்து கொடுத்தவளும் அவளே தானே!

அறை திறந்தே இருந்தது!

உள்ளே அவளும் இருந்தாள்!

அவனைக் கண்டதும், அறையின் உள்ளே இருந்தவள் அருகில் வந்துவிட, அவனுக்கு எலிசாவின் நினைவு மறைந்தது!

காலையில், இருள் மறையாத அளவுக்குச் சற்று அதிகாலையிலேயே, அந்தப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் கிளம்பும்போது, அவள் கெஞ்சுதலாகக் கேட்டாள், "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா?" என்று.

எல்லோரும் இப்படித்தான் என்று மனதில் எண்ணியதைக் காட்டாமல், "அதற்கு உரிமை, எனக்குக் கிடையாதேம்மா! அதைக் காஸ்டிங் டைரக்டரிடம் கேட்டுப் பார்!" என்று விட்டுக் கிளம்பினான் அவன்!

அவளது செல், கைப்பைக்குள் இருந்து சிணுங்கியது!

அடுத்த வாடிக்கையாக இருக்கும் என்று அலட்சியமாக நினைத்தபடி, 'லிஃப்ட்' விசையை அழுத்தினான் அவன்.

'லிஃப்ட்' வந்து, கதவு திறக்கையில், "ஏய் இண்டியன் மேன், நில்லு, நில்லு!" என்று உள்ளிருந்து அவள் ஓடி வந்தாள்.

கடுப்புடன், "விடமாட்டார்களே!" என்று எண்ணியவாறு, அவசரமாக லிஃப்டின் உள்ளே செல்ல அவன் முயன்ற போது, செல்லை நீட்டி, "எலிசா! உன்னிடம் பேச வேண்டுமாம்! உன் பெயர் சொல்லாமல், பேசச் சொன்னாள்!" என்றாள் அவள்!

கை நீட்டி, செல்லை வாங்கும்போதே, உள்ளூரக் கலக்கியது அவனுக்கு!

இந்த மாதிரிச் செல்லும் போது, எந்த இடையூறும் அவனுக்குப் பிடிப்பதில்லை! அதனால், அவனது செல் எதையும் எடுத்துப் போக மாட்டான்! கார் கூட, அவன் பெயரில் வாங்கியது அல்ல!

சிறு தகவல் தெரிந்தாலும், மொய்த்து விடுவார்கள் என்று அவன் மிகவும் கவனமாக இருப்பான்! அது எலிசாவுக்கும் தெரியும் என்பதால், அவளும் எந்த வகையிலும் தொடர்பின்றி, தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல், ஒதுங்கியே இருப்பாள். ஏற்பாட்டோடு சரி!

ஆனால், இன்று என்ன ஆயிற்று?

பெயர் சொல்லக் கூடாது என்றால், ஏதோ மீடியா பிரச்சினை தான்!

செல்லைக் காதில் வைத்து, "என்ன?" என்றான் அவன்.

"பதட்டப்படாமல், அமைதியாகக் கேள்! லாஸ் ஏஞ்சல்சில் இருந்து எவ்வளவு தூரத்தில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்று எலிசா தொடங்கவும், பொறுமையிழந்து குறுக்கிட்டு, "முதலில் விஷயத்தைச் சொல்லு! சீக்கிரம்!" என்றான் அவன்.

படப்பிடிப்பு நிறுவனத்தோடு பிரச்சினையா?

ஒப்பந்தம் தான் கையெழுத்திட்டாயிற்றே!

அல்லது...

"மித்ரா பத்திரமாகத்தான் இருக்கிறாள்?"

அவன் வீடு இருந்த பகுதியில் பாதுகாப்பு அதிகம் தான்! என்றாலும்...

"அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்" என்றாள் எலிசா.

வயிறு காலியான உணர்வுடன், "என்ன ஆயிற்று? சீக்கிரமாகச் சொல்லு! ப்ளீஸ்!"

"இனிப் பிழைத்து விடுவாள் என்று மருத்துவமனையில் சொல்லுகிறார்கள்! அதற்குள் விஷயம் வெளியே கசிந்து, ஒரே ரிப்போர்ட்டர்கள் கூட்டம்! நீ எங்கே, எங்கே என்று கேள்வி! தேடல்! நீ, மித்ராவை என்னிடமாவது விட்டுப் போயிருக்கலாமே!..."

"முதலில் என் மகளுக்கு என்ன ஆயிற்று? என்ன நிலையில் இருக்கிறாள் என்பதைச் சீக்கிரமாகச் சொல்லு! மற்றதைச் சொல்லி வளவளக்க வேண்டாம்!" என்றான் அவன் கவலையும், அதில் பிறந்த ஆத்திரமுமாக!

"அடுத்த தெருவில் யாருக்கோ பிறந்த நாள் என்று போயிருக்கிறாள்! ஆட்டம் போட்டதில், எப்படியோ தெருவுக்குப் போயிருக்கிறார்கள்! வேகமாக வந்த கார் இடித்து..."

"ஐயோ!"

சினேகிதியின் பிறந்த நாளைக்கு மித்ரா போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், 'பேபி சிட்டர்', வேண்டாம் என்று சொன்னது நினைவு வந்தது அவனுக்கு.

வீட்டுக்கு வரும் பிள்ளைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்கள், தன் பிள்ளைகளுக்குப் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறார்கள்?

"அதனால் தான் என் வீட்டில் விட்டிருக்கலாமே என்றேன்! இனிமேலாவது..."

"மித்ரா எங்கே இருக்கிறாள்? எந்த மருத்துவமனை?"



இனி எல்லாமே நீயல்லவோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:15 pm

"அவளைப் பார்க்கப் போவதற்கா? கவனி, டீப்! இப்போதைக்கு மீடியாவிடம், எந்தவிதக் குறுக்கீடும் இல்லாமல் தனியாக இருந்து, கதை வசனம் எழுதப் போயிருப்பதாக ஒரு கதை சொல்லியிருக்கிறேன்! அது, அப்படியே இருக்கட்டும்! உன்னிடம் கேட்டாலும், கவனம் சிதறாமல் இருப்பதற்காகத் தனிமை நாடிப் போனதாகச் சொல்லி விடு! அதற்காகவே, போன் எண் கொடுக்கவில்லை. செல் கொண்டு போகவில்லை என்றும்! இருக்கும் இடம் சொல்லு. என் காரில், உன் டிரைவரோடு வருகிறேன். நீ போன காரை, டிரைவரிடம் கொடுத்துவிட்டு, என் காரில் மருத்துவமனைக்குப் போகலாம்!"

அவனுடைய ஏஜண்ட் எலிசா கேட்ட தகவல்களைக் கொடுத்துவிட்டு, செல்லை, அந்தப் பெண்ணிடம் நீட்டினான். அவன்!

அவள் கண்ணில் அதிக ஆர்வம் இருந்ததோ?

செல்லை அவளிடம் கொடாமல் நிறுத்தி, அதை ஆராய்ந்தான். எலிசாவுடன் அவன் பேசியது, பதிவாகி இருந்தது! கூடவே, அவனும் அவளுமாக ஒரு போட்டோ! ஏதேனும் ஒரு பத்திரிகைக்கு, டீ.வி.க்குக் கொடுத்தால், ஏகப்பட்ட பணம் கிடைக்குமே!

உதட்டைப் பிதுக்கி ஒரு பார்வை பார்த்துவிட்டு, அனைத்தையும் அழித்து, அவள் கையில் கொடுத்தான்!

முகம் கன்றி நின்ற அவளிடம், மேலும் சில நோட்டுகளைப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு, வரவேற்பில் அமர்ந்து, எலிசாவுக்காகக் காத்திருக்கலானான்.

அவன் அதிக நேரம் காத்திருக்க நேரவில்லை!

யு.எஸ். சாலைகளில், தூரம் ஒரு பொருட்டல்ல!

ஆயினும், காத்திருந்த அந்த நேரத்தில், அவனது மனம் தவியாய்த் தவித்துவிட்டது!

மித்ராவுக்குத் தாயின் அரவணைப்பு கிடைத்ததில்லை!

சும்மா ஒரு கதை எழுதி, நண்பர்களாக நடிக்கப் போய், அதை ஒரு பெரிய டைரக்டர் பார்த்துத் திரைப்படம் ஆக்க ஏற்பாடு செய்தார்! கதையில் இருந்து மாறுபட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான், அவனை, அவர் கூடவே வைத்துக் கொண்டது!

ஆனால், டைரக்டர் திடீரென நோயுறவும், ஸ்டுடியோடிவில் அவனையே இயக்கச் சொன்னார்கள்!

படம், பெரும் வெற்றி!

தொடர்ந்த வளர்ச்சியில், சென்ற ஆண்டு ஆஸ்காரே கிடைத்தது!

முதலில் அவனுக்குத் திடீர்ப் புகழ் கிடைத்த போது, ஒட்டிக் கொண்டவள், மித்ராவுடைய தாய்! அந்த வயது, சூழ்நிலையில், அவனுக்கும் தப்பாகத் தெரியவில்லை! கர்ப்பம் என்றதும் திருமணமும், தன் போக்கில் நடந்ததுதான்!

மித்ரா பிறந்தாள்! அதே சமயம், அவனது இரண்டாவது படமும் பெருவெற்றி பெற்ற பிறகுதான், மனைவியாக இருப்பவளின் உண்மை உருவம், அவனுக்குத் தெரிய வந்தது!

அவளுக்கு நடிக்க ஆசை! தன்னைப் பெரிய கதாநாயகி ஆக்குவது, கணவனான அவனது கடமை என்றாள்.

நடிகைக்குரிய எதுவுமே அவளிடம் இல்லை என்று அவன் ஒரேயடியாக மறுக்கவும், பணமாவது கொடு என்று, விவாகரத்து வாங்கிக் கொண்டு போய் விட்டாள்!

அவள் பணம் கேட்டதை விட, அவனுக்குப் பெரிய அதிர்ச்சி என்ன என்றால், தன் குழந்தை என்பதே இல்லாமல், மித்ராவை விட்டுவிட்டுப் போய்விட்டதுதான்!

அவள் திட்டமிட்டிருந்த எதிர்காலத்துக்குக் குழந்தை இருப்பது சரிப்படாதாம்!

பெற்ற குழந்தையை விடுவது எப்படி முடியும் என்று சில நேரம், அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும்! அதாவது, எப்போதாவது ஓய்வு கிடைத்து, தன் வாழ்க்கையைப் பற்றி நினைத்துப் பார்க்கிற போது, இப்படி ஆச்சரியப்படுவான்!

இன்னும் கொஞ்சம் அவகாசம் கிடைத்தால், நாமும், பெற்று வளர்த்தவர்களை விட்டு, ஆண்டுக் கணக்கில் பிரிந்து தானே இருக்கிறோம் என்று தோன்றும்!

அந்த உறுத்தல் அதிகமாகி, இருமுறை தாய்நாட்டுக்குப் போயிருக்கிறான்!

ஒரு தடவை, மித்ராவைக் கூட, அழைத்துப் போயிருக்கிறான்!

ஆனால், போய் இரண்டே நாட்களில், இங்கிருக்கும் வேலைப் பளு பற்றி, அவனுடைய ஏஜண்ட் எலிசா போன் பண்ணுவாள்!

உடனே, விழுந்தடித்துக் கொண்டு, திரும்பி விடுவான்!

தாயாருக்கு, அது பற்றி வருத்தமும், கோபமும் இருந்தது என்பது அவனுக்குத் தெரியும்!

அதிலும், படிக்க வந்ததை விடுத்து, இன்னொன்றில் ஈடுபட்டு, திருமணம், ரத்து என்று இந்த வாழ்வுக்குப் பழகிப் போனது பற்றி, ரொம்பவே எரிச்சல் தான்!

ஆனால், இந்தப் பணம் சம்பாதிக்க, அங்கே எத்தனை பிறவி எடுக்க வேண்டியிருக்கும்?

சொன்னால், அன்னைக்குப் புரியவில்லை என்பதில், அவனுக்கும் எரிச்சல்தான்!

குழந்தை வளர்கிற முறை சரியில்லை என்று ஒரு வாதம்! சும்மா, அவனைத் திருப்பி வரவழைப்பதற்காக ஒரு சப்பைக் கட்டுதான்!

மற்றபடி, இங்கே மித்ராவுக்கு என்ன குறை?

நீச்சல் குளத்துடன் கூடிய பெரிய வீடு! அவளுக்காகத் தனி நர்சரி! அறைகள்! அவற்றில், அவளுக்குத் தேவையான அனைத்தும்! பொறுப்பான 'ஹவுஸ் கீப்பர்!'

இதற்கும் மேலாகச் சில நாட்களில், மித்ராவை, எலிசா அவள் வீட்டுக்கு அழைத்துப் போவாள். நாள் முழுவதும், அவளுடைய பிள்ளைகளோடு விளையாடிவிட்டுத் திரும்புவாள்.

அங்கே போவது என்றாலே, மித்ராவுக்குக் குஷிதான்!

இதற்கு மேலாக, ஒரு நாலு வயதுச் சிறுமிக்கு என்ன வேண்டும்?

பஞ்சடைத்த ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு, அதற்கு ஜேடி என்று பெயர் வைத்து, வீட்டில் அவள் விளையாடுவதைப் பார்க்கையில், அவனுக்கு வேடிக்கையாக இருக்கும்!

வேறு விலை உயர்ந்த ரோபோ மாடல் பொம்மைகளை வாங்கிக் கொடுத்தாலும், மித்ராவுக்கு இந்தப் பொம்மை மீதுதான் பிரியம் அதிகம்!

அதை ஒரு குழந்தை போலக் கொஞ்சுவது, அவ்வப் போது கண்ணில் படும்.

பெண் குழந்தைகளுக்கே உரித்தான தாய்மை உணர்ச்சி என்று அவன் எண்ணமிடும் போதே, அவளுடைய தாயின் நினைவு இடிக்கும்!

அவள் பெண்ணில்லையா? தாய் என்று நினைக்கக் கூடப் பிடிக்கவில்லை என்றாளே!

ஒருவேளை, தனிமை உணர்ச்சியைப் போக்கிக் கொள்ள குழந்தை, இந்தப் பொம்மையைப் பயன்படுத்துகிறாளோ என்று, இப்போது உட்கார்ந்து யோசிக்கும் போது, அவனுக்குத் தோன்றிற்று!

தனிமை உணர்வால்தான், உடனொத்த பிள்ளைகள் வீடுகளுக்கு, இப்படித் துடித்துக் கொண்டு ஓடுகிறாளோ?

இந்தப் பிறந்த நாள் பற்றி, மித்ரா பலமுறை ஆர்வமாக, அவனிடம் சொல்ல வந்தது, அப்போது அவனுக்கு நினைவு வந்தது!

வாழ்த்துக் கார்டு வாங்க வேண்டும்! பரிசு வாங்க வேண்டும்! அங்கே யாரோ நான்சி வருவாள்... மிச்சி வருவான்... இன்னும் யார் யாரோ!

"ஹவுஸ்கீப்பரிடம் சொல்லு" என்றவன், அதற்கு மேல் வெறுமனே 'ஊம்' கொட்டியபடி, சில முக்கியமான குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தது... மித்ராவின் பேச்சு நின்று போனதும், இப்போது ஞாபகம் வந்தது!

தந்தையின் கவனம் தன்னிடம் இல்லை என்று பேச்சை நிறுத்தியிருப்பாளோ? சே!

நெஞ்சு சுட்டது அவனுக்கு! அவளை விட எது முக்கியம்?

இனிக் குழந்தையுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்!

தாயின் அரவணைப்பு தான் இல்லை! தந்தையும், யாரோ போல, அவ்வப்போது எட்டிப் பார்ப்பதோடு விட்டு விட்டால் எப்படி?

கூடாது! இனிமேல், தாயுமானவனாக இருந்து, அவளைக் கவனித்துக் கொள்ள வேண்டும்!

கடவுளே! அதற்கு, அவள் நல்லபடியாகப் பிழைத்து எழ வேண்டும்!



இனி எல்லாமே நீயல்லவோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:16 pm

இப்போது உயிருக்கு ஆபத்து இல்லை, பிழைத்து விடுவாள் என்று எலிசா சொன்னாள் தான்! ஆனால், அப்படிச் சொன்னதில் இருந்தே, உயிருக்கு ஆபத்தான நிலையும் இருந்தது என்று அர்த்தமாகவில்லையா?

முழுக்க ஆபத்து நீங்கியிருக்குமா?

காட்! இந்த எலிசா எப்போது வந்து சேருவாள்?

கண்களோடு, முக அடையாளத்தையும் மறைத்த கறுப்புக் கண்ணாடி, தூக்கிவிட்ட கோட் காலரோடு, பொறுமையை இழுத்துப் பிடித்தபடி அவன் காத்திருந்தான்!

எலிசா காரோட்டியோடு வந்ததும், அவனது காரை, எலிசாவின் டிரைவரிடம் கொடுத்துவிட்டு, எலிசாவின் காரில், அவன் கிளம்பினான்.

முதலிலேயே கேட்டுவிட்ட போதும், கார் கிளம்பியதும், மீண்டும் ஒரு தரம், மகளது உடல்நிலை பற்றி, அவன் விசாரித்தான்.

"சொன்னேனே, டீப்! கார் பக்கவாட்டில் பட்டு, அவளைத் தூக்கி எறிந்து விட்டது. விழுந்த வேகத்தில், சில எலும்பு முறிவுகள்! அதிர்ச்சி வேறு! இரவில் உன்னைத் தேடினாள் போல! அக்கறையற்ற தகப்பனாக நீ தோன்றுவது, உன் புகழைக் கெடுத்துவிடும்! அடுத்த பட வசூலையும் கெடுக்கக் கூடும்! அதனால், நீ மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்... என்ன பார்க்கிறாய்? ஓ, இந்தப் போஸ் சரிதானா என்றா? ரொம்ப சரி! டைரக்டர் நீ. உனக்கு, இன்னொருவர் கற்றுத் தர வேண்டுமா?" என்று, முதல் தடவையாக, அவனுள் இருந்த வேதனையை உணர முடியாமல் பேசினாள் எலிசா.

ஆனால், அவளையும் குற்றம் சொல்லுவதற்கு இல்லை!

மனைவி பிரிந்த போது, 'விட்டது தொல்லை' என்பது போலச் சாதாரணமாக இருந்தவன் தானே? அந்த மனைவி பெற்ற பிள்ளையிடம் மட்டும் என்ன, பெரிய பாசம் வந்து விடும் என்று எண்ணியிருப்பாள்!

எலிசாவின் கவலையெல்லாம், மீடியா அவனைத் தவறாகச் சித்தரித்து விடக் கூடாது!

இன்றைய கால கட்டத்துக்கு ஏற்றபடி இருந்தாலும், அவனது படங்களில், உள்ளூர ஓர் ஒழுக்கம், நியாயம் இருக்கும்! அதைத் தருகிறவன் கெட்டவனோ என்று ரசிகர்களுக்குத் தோன்றிவிடக் கூடாது! தோன்றினால், அவனது படங்களைப் பார்க்கும் ஆவலும் குறைந்து போய் விடக் கூடும்! எனவே, அந்த நிலை வர விட்டுவிடக் கூடாது!

அவளது கருத்தில் இருப்பது, இதுதான்!

இந்த அக்கறை, அவனுக்காக மட்டுமானது அல்ல!

அவனது வருமானத்தில் பத்து சதவீதம் பெறும் ஏஜண்ட் அவள்! அவனது வருமானம் கூடக் கூடத்தானே, அவளுக்கும் லாபம்?

இன்னும் சில சினிமாத் துறையினரின் ஏஜண்டாக அவள் செயல்பட்டாலும், அவன் வழி கிடைப்பதுதான் பெருந்தொகை! அதற்காகவே...

தலையை உலுக்கிக் கொண்டான் அவன்!

மனம் சரியில்லாமல் இருப்பதால், இப்படியெல்லாம் தோன்றுகிறது போலும்! மற்றபடி, அவனை இந்த நிலைக்கு உயர்த்துவதற்கு, எலிசாவும் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறாள் என்பது, அவனும் அறிந்ததே!

முதல் படத்து டைரக்டர் தொடக்கத்திலேயே நோய்வாய்ப்பட்ட போது, இவனைக் கொண்டே படத்தை முடிக்கலாம் என்று மற்றவர்களை ஒப்ப வைப்பதற்கு, எவ்வளவு வேலை செய்தாள்!

புறம் திரும்பி, "என்ன செய்ய வேண்டும்?" என்று வினவினான் அவன்!

"சாலையோரத்து காஸ் ஸ்டேஷன் ஒன்றில், ஒரு காபி மட்டும் குடித்துக் கொள். ஷேவ் பண்ண வேண்டாம்! யார் என்ன கேட்டாலும், இடையூறின்றிக் கதை 'ஸ்கிரிப்ட்' தயார் பண்ணப் போனதாக, அதையே திருப்பித் திருப்பிச் சொல்லு! எங்கே என்பது வேண்டாம்! கூடவே இருந்து, நானும் கவனித்துக் கொள்கிறேன்!"

"சரி."

"மேலே எதுவும் கிளறினால், 'நோ கமென்ட்ஸ்' என்று விடு."

"சரி!"

"வரும் காலத்தில், இப்படி எதுவும் என்றால், என்னோடு தொடர்பு கொள்ளும்படி, உன் 'ஹவுஸ்கீப்'பரிடம் சொல்லி வை! சத்தமின்றிச் செய்ய வேண்டிய வேலையை, ஊரறியச் செய்து விட்டாள்!"

ஹவுஸ்கீப்பர் நல்ல பெண்மணி! வீட்டை முழுதும் அவள் பொறுப்பில் விட்டுவிட்டு, அவன் கவலையற்றிருந்தான்!

எலிசா, ஹவுஸ்கீப்பரைக் குற்றம் சொன்னது, அவனுக்குப் பிடிக்கவில்லை! ஆனால், அவள் சொன்னதிலும் தப்பில்லைதான்!

ஓசையற்றுச் செய்திருக்க வேண்டிய வேலை!

அவன் இல்லாத நேரத்தில், பிள்ளைக்குப் பெரிதாக ஒன்று என்றதும் பதறிப் போயிருப்பாள்!

ஆனால், அதையெல்லாம் சொல்லி, எலிசாவிடம் வாதாட மனமற்று, வெறுமனே தலையாட்டி வைத்தான் அவன்!

ஓரளவு, அவன் எதிர்பார்த்தது தான்! விவாகரத்தின் போது எதிர் கொண்டதுதானே?

ஆனால், ஆஸ்காரின் விளைவோ, என்னவோ, பன்மடங்கு அதிகமாகி இருந்தது!

காமிரா ஃப்ளாஷ்களின் கண்ணைக் குருடாக்கும் ஒளி வெள்ளம்! முண்டியடித்தபடி கேள்விக் கணைகளைத் தொடுத்தவாறு, படை அரணாய் அவனை நெருங்கிய ரிப்போர்ட்டர்கள் கூட்டம்!

அவர்களுக்குள்ளே புகுந்து, மருத்துவமனைக்குள் செல்ல முயன்றான் அவன்!

முன்னும் பின்னுமாக அட்டையாக ஒட்டிக் கொண்டு... அவன் அதைப் பெரிதாகக் கருதவில்லை! இதை விடக் கொஞ்சம் சின்ன அளவில் என்றாலும், ஐந்தாண்டுகளாக அன்றாடம் அனுபவிப்பதுதானே!

ஆனால், அவர்கள் கேட்ட கேள்விகள்!

இப்படி ஓர் அவசரத்துக்குக் கூட அணுக முடியாமல், ரகசியமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

மகளின் விபத்து பற்றிச் சரியாக எத்தனை மணிக்குத் தெரியும்?

தெரிந்த போது, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ஆபத்தான நிலைமையாமே! பிழைப்பாள் என்று தோன்றுகிறதா? பிழைக்காவிட்டால், எப்படி இருக்கும்?

இந்த மாதிரி நிலைமையில், மகள் கூட இருக்க முடியாமல் போகக் காரணம் என்ன? இனி இந்தத் தொழிலில் இருந்து விலகி விடுவீர்களா?

விலகிய பிறகு, என்ன செய்யப் போகிறீர்கள்?

மித்ராவின் நிலைமைக்கு, என்ன காரணம்?

ஆஸ்கார் கிடைக்காத ஆத்திரத்தில், யாரோ முக்கியமானவர்கள் செய்திருப்பதாக எண்ணுகிறீர்களா? அவர்கள் பெயர் சொல்ல முடியுமா?

அவளுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள்?

மனைவியோடு, என்ன தகராறில் பிரிந்தீர்கள்?

இந்த விபத்தைப் பயன்படுத்தி, மனைவியோடு சேர்வீர்களா... மனைவி வேறு யாரோடும் வாழ்கிறாளா? விட்டுவிட்டு வருவாளா?

வராவிட்டால், மகளோடு, தாய்நாட்டுக்கே போய் விடுவீர்களா?

அவனை மூட்டை கட்டிக் கடலுக்கு அடியில் புதைக்காத குறை!
ஆத்திரத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அதைப் பிடித்துக் கொண்டு, பிலுபிலுவென்று உலுக்குவார்கள்!

யாரிடமும் கை நீட்டிவிடக் கூடாது என்று மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு, பிடிவாதமான இறுகலுடன், அதிகம் நெருங்கியவர்களை இடித்துத் தள்ளிக் கொண்டு முன்னேறி, ஒருவாறு மருத்துவமனைக்குள் சென்றான் அவன்.

"பொறுங்கள், ஜென்டில்மேன்! டீப் அதிர்ச்சியுற்றிருக்கிறார்! மகளைப் பற்றிய கவலை சற்றுக் குறைந்ததும், உங்களைச் சந்தித்து, எல்லா விவரமும் சொல்வார்!" என்று பத்திரிகை, டீ.வி. ரிப்போர்ட்டர்களைச் சமாதானப்படுத்திவிட்டு, எலிசா அவனிடம் ஓடி வந்தாள்!

"'நோ கமென்ட்ஸ்' சொல்லு என்றேனே! மீடியாவிடம் பதமாக நடக்க வேண்டாமா? மகளைப் பற்றிய அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்லி சமாளித்து வைத்திருக்கிறேன்! வா!" என்று, மித்ராவுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் அவனை அழைத்துச் சென்றாள்.

உயிருக்கு ஆபத்து நீங்கி விட்டது என்று, நல்ல சேதியை முதலில் தெரிவித்து விட்டு, "ஐசியுவில் இருந்து மித்ராவை வார்டுக்கு மாற்றி விடலாம். ஆனால், உங்களைப் போன்ற பிரபலங்கள் வந்து போவது, மருத்துவ வார்டு சூழ்நிலையைப் பாதிக்கக் கூடும்! கொஞ்சம் தனிமை காப்பதாக, தனிப்பட்ட வார்டு ஒன்று இருக்கிறது! உங்கள் மகளை, அங்கே மாற்றலாமா?" என்று கேட்டார் வைத்தியர்.

"இன்னும் தனியாக..." என்று தொடங்கியவனை இடையிட்டு, "இப்போதைக்கு, அவளுக்கு மருத்துவக் கண்காணிப்பு அதிகம் தேவை, மிஸ்டர் டீப்! பிரத்தியேக வார்டில் இருப்பது, அவளுக்கு நல்லது!" என்றார் மருத்துவர்!

மாற்றத்துக்கான பணம் கட்டுவது போன்ற வேலைகளைக் கவனிப்பதற்காக எலிசாவை அனுப்பிவிட்டு, அவள் சென்றதும், "டாக்டர், உண்மையைச் சொல்லுங்கள்! என் மித்ராவுக்கு மெய்யாகவே, இனி எந்த ஆபத்தும் இல்லைதானே? இந்த விபத்தின் பின் விளைவாக, வேறு எதுவும் வந்து விடாதே!" என்று கவலையுடன் கேட்டான் அவன்!



இனி எல்லாமே நீயல்லவோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:16 pm

தன்னை மீறி, அவன் குரல் கரகரத்தது!

கூர்ந்து நோக்கிவிட்டு, "எல்லாச் சோதனையும் செய்தாயிற்று, மிஸ்டர் டீப்! பின் விளைவாக எந்தப் பிரச்சினைகளுக்கும் இடம் இல்லை! ஆனால், இவ்வளவு பாசம் வைத்திருக்கும் நீங்கள், அவளுக்கு மிகவும் தேவைப்பட்ட நேற்றைய இரவில் எங்கே போனீர்கள்? சின்னக் குழந்தைப் பருவத்திலேயே, மித்ராவுடைய தாயார் பிரிந்து போய் விட்டதாகக் கேள்விப்பட்டேன்! அவளே, அன்னையைத் தேடவே இல்லை! ஆனால், பின்னிரவில் மயக்கம் தெளிந்து, வலியும், ஏக்கமுமாக, அப்பா, அப்பா என்று அவள் புலம்பிய போது, நீங்கள் அருகில் இருந்திருந்தால், அப்போதே, சில மணி நேரம் முன்பாகவே, குழந்தை திடப்பட்டிருக்கக் கூடும்!" என்றார் வைத்தியர்!

அந்த நேரத்தில்...

இடையூறு வரக்கூடாது, என்று, அந்தப் பெண்னின் செல்லைக் கூட வாங்கி, அணைத்து வைத்தது, அவனுக்கு வலியுடன் நினைவு வந்தது!

வலி மட்டுமல்ல! குன்றலோடும்!

அவனது ஆறடி உயரம் அரையடியாகக் குறுகிவிட்ட உணர்வு!

விடிகாலையில் எப்போதோ அவள் எழுந்து போட்டோவை எடுத்துவிட்டு, செல்லையும் 'ஆன்' பண்ணியே வைத்திருக்கிறாள்! யாருடைய அழைப்பையும் எதிர்பார்த்திருந்தாளோ என்னவோ? இந்த மாதிரித் தொழிலுக்கு, நேரம் காலம் ஏது?

ஒரு வகையில் அவளது திருட்டுத்தனமும் நல்லதாயிற்று! அல்லது, விபத்து பற்றிய விவரம், அவனுக்கு இன்னமும் தெரிந்திராது!

என்ன கேவலம்!

கேவலம் அவனது நடத்தையில்! மகள் இங்கே உயிருக்குப் போராடுகையில், அவன் சே!

இன்று வரை, தப்பாக நினைத்திராதது, இன்று வேறு மாதிரித் தெரிந்தது!

பத்திரிகையாளர் தொல்லைக்காக மட்டும் தானே, அவன் ரகசியம் காத்தது?

ஆனால், நடந்ததில் தப்பில்லை என்றால், இப்போது இந்த டாக்டரிடம் ஏன் சொல்ல முடியவில்லை?

நடந்த உன்மை மட்டும் வெளியே தெரிந்தால், எல்லோரும், அவனை என்ன நினைப்பார்கள்?

நல்லவேளை! அப்படி எதுவும் நேராமல், எலிசா காப்பாற்றினாள்!

படுக்கையில் கிடந்த மகளைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கையில் அவனுக்கு என்னென்னவோ தோன்றிற்று!

இந்த வயதில், அவன் எப்படியெப்படி வளர்ந்தான் என்பது நினைவு வந்தது!

விளையாடும் போது, கீழே விழுந்து சிராய்த்துக் கொண்டு அழுத போது, "விளையாட்டில் பட்டதற்கெல்லாம் அழக்கூடாதும்மா!" என்றவாறே தலையைத் திருப்பித் தன் கண்ணைத் துடைத்துக் கொண்ட, தாயின் நினைவு!

கதை சொன்னபடி, வலிக்காமல் ஊசி போட்ட தந்தை!

காயம் நன்றாக ஆறி, தோல் நிறம் மாறும் வரைக் கவனித்த விதம்!

வெறும் சிராய்ப்புக்கே இந்தப் பாடு! அவனுடைய மகள் மறுபிறவி எடுக்கையில், அவன் அந்தப் பகுதியிலேயே இல்லை!

பிரத்தியேக வார்டு, ஸ்பெஷல் அறை என்று மித்ரா மாற, மாற, அவன் மருத்துவமனையே கதியென்று கிடந்தான்!

"பாசமுள்ள தந்தையாக, உன்னைப் பற்றிய செய்திகள் பிரமாதம்! மித்ரா வீட்டுக்கு வரும்வரை, பல்லைக் கடித்துக் கொண்டு, இப்படியே இருந்து விடு!" என்றாள் பூங்கொத்துடன் வந்த எலிசா.

மகளை மெல்ல நடக்க வைத்துக் கொண்டிருந்த அவன், எலிசாவை விசித்திரமாகப் பார்த்தான்!

அவனுக்குப் பல்லைக் கடித்துப் பொறுக்க வேண்டிய அவசியம் இருக்கவே இல்லையே! அந்தச் சின்ன உருவத்துக்கு உதவியும் பணிவிடைகளும் செய்து, அவனுக்குச் சுகமாக அல்லவா இருக்கிறது!

"மருத்துவமனையில் இருந்து, மித்ரா திரும்பி வரும் வரைதான்! அதுவரை இதே விதமான போஸிலேயே இருந்து விட்டால் போதும்! அதுவே, அடுத்த படத்துக்கு அருமையான முன் விளம்பரம் போல ஆகிவிடும்! மித்ரா குணமாகி வீட்டுக்கு வந்துவிட்டால், அப்புறம், நீ பழைய மாதிரியே இருந்து கொள்ளலாம்! நல்ல வேளையாக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது! ஸ்டுடியோவில் அடிப்படை வேலைகள் தான் நடக்கின்றன!"

அவனுள் ஓர் எண்ணம் தலைதூக்கியது!

யோசனையில் இருந்தவனை, வீடு திரும்பிய மறுநாள், குணமடைந்து வந்ததற்காக, மித்ராவை வாழ்த்துவதாக வந்த டெலிபோன் கால் முடிவெடுக்க வைத்தது!

குழந்தைக் குரலில் வாழ்த்திவிட்டு, அப்பா பழகும் ஆன்ட்டிகளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான் ஒருவன்!

யார், யார் வீட்டுக்கு வருவார்கள்? யார் யாரை அப்பா வெளியே கூட்டிப் போவார்? அன்றைக்கு, அவளுக்கு அடிபட்ட போது கூட, அப்பா, அப்படி எந்த ஆன்ட்டியுடனோ தான் போயிருந்தாரா?

மகளின் ஓரிரு பதில்களிலேயே, இன்னோர் இணைப்பைக் காதில் வைத்த தந்தைக்கு விஷயம் புரிந்து போயிற்று!

பரபரப்பான செய்தி வேண்டும்! அது, மட்ட ரகமாக இருந்தால், ரொம்பவே நல்லது! இப்போது, அதற்கான வாய்ப்பு ஒன்று இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் இருக்கிறது!

அதைப் பெறுவதற்காக, இந்தச் சிறு குழந்தையைக் கூட விடுவதாக இல்லை!

ஆனால், அந்தக் குழிக்குள், மகளை இழுத்துவிட, அவன் தயாரில்லை! அப்புறம், அவள் வெளியே எங்கேயும் போகவே முடியாது!

இந்தப் பிரச்சினை முடிந்து, மறக்கும் வரையேனும்...

"நீ இப்படி, இந்தச் சூழ்நிலையில், போட்டது போட்டபடி விட்டுவிட்டுக் கிளம்பினால் எப்படி, டீப்?" என்று தொடங்கி, அவனது இந்தியப் பயணத்தைத் தடுக்க, எலிசா எவ்வளவோ முயன்றாள்.

எப்போதுமே, அவன் இந்தியாவுக்குக் கிளம்புகையில், அவள் இப்படி ஏதாவது சொல்வது வழக்கம் தான்! ஓரிரு முறை, பயணமே நின்றிருக்கிறது!

ஆனால், இந்தத் தடவை, அவன் பிடிவாதமாக இருந்தான்.

"ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது! ஸ்டுடியோவில் அடிப்படை வேலைகள் தானே நடக்கின்றன?" என்று அவள் வார்த்தைகளையே திருப்பிப் படித்து, மேலேயும் சொன்னான் அவன்! "இதற்கு, நான் இங்கே இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே!"

அவள் முகம் போன போக்கைப் பார்த்து மனம் இளகி, "எனக்கு என் தாயாரை ஒருதரம் பார்த்தாக வேண்டும், எலிசா! கதைச் சுருக்கத்தைக் காஸ்டிங் டைரக்டரிடம் கொடுத்து விட்டேன். அவர் நடிகர் நடிகைகள் எல்லாம் பேசி முடித்து, அதன் பிறகு, பட்ஜெட் திட்டமிடும் போது, நான் வந்தால் போதுமே!" என்றான் அவன், விளக்கமாக.

"ஆனால், எழுத வேண்டாமா?"

"எழுதுவதுதானே? அதை எங்கே இருந்தும் செய்ய முடியும்! முக்கியமாக, மித்ராவுக்கு முழுமையான இடமாற்றம் வேண்டும் என்பது, என் கருத்து மட்டுமல்ல, டாக்டருடைய அறிவுரையும் கூட அதுதான், எலிசா!"

அவனது பிடிவாத குணமும், எலிசா அறிந்ததே! அவனே, ஈரேட்டாக இருக்கும் வரைதான் மாற்றங்கள் எல்லாம்! அந்த நிலை தாண்டி விட்டால், மாற்ற முடியாது!

புரிந்து விடவே, "சரி சரி போய்வா!" என்று அவனை ஒத்துப் பேசி, "ஆனால், ரொம்ப நாள் அங்கே தங்கி விடாதே! ஹாலிவுட், ஒரு மாதிரி உலகம். யாருக்காகவும் காத்திருக்காது" என்ற ஓர் எச்சரிக்கையோடு, அவனை அனுப்பி வைத்தாள்!

அவளிடம் சொல்லாத இன்னொன்றும் இருந்தது!

மகளைக் குளிப்பாட்டி, உடை அணிவித்து, சேர்ந்து விளையாடி, தூங்குமுன் கதை சொல்லித் தூங்க வைத்து... இப்படிக் கூடவே இருந்து பலவும் செய்யவும், "நான்சி, மிச்சியுடைய அப்பாக்கள் போல, நீயும் எனக்கு நிஜ அப்பா ஆகி விட்டாயாப்பா?" என்று சிறுமி கேட்டது. அவனுக்குப் பொட்டில் அறைந்தது போல ஆகிவிட்டது.

சமாளித்துக் கொண்டு, "எப்போதுமே, அப்பா, உன் நிஜ அப்பாதான் செல்லம்!" என்ற போது, குழந்தை ஒப்புக்கொள்ளவில்லை!

"ஊகூம்! இதெல்லாம் செய்தால் தான், நிஜ அப்பாவாம்! சும்மா, எப்பவாவது பார்த்து, கிஸ் பண்ணிட்டுப் போகிற அப்பா, சினிமா அப்பா... நீ சினிமா எடுக்கிறதாலே, நீயும் அதே மாதிரி, சினிமா அப்பா ஆகி விட்டேன்னு மிச்சி சொன்னான். ஆனால் இப்போ நீயும் நிஜ அப்பா ஆகிவிட்டே! இல்லையப்பா?" என்றாள் மகள்.

இதற்கெல்லாம் கூட, மகளை ஏங்க விட்டுவிட்டு, அவன் என்ன வாழ்க்கை வாழ்ந்தான்?

இங்கேயே இருந்தால், எல்லாம் பழைய மாதிரியே தான் ஆகிவிடும்! கொஞ்ச காலமேனும், இதிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்! அதற்கு, இங்கிருந்து வெளியேறியாக வேண்டும்!

விமானத்தில் ஏறி, மகளுக்கு பெல்ட்டை மாட்டிவிட்டு, தன் சீட் பெல்ட்டையும் மாட்டி, விமானமும் கிளம்பிய பிறகே, அப்பாடி என்று, சீட்டில் வசதியாகச் சாய்ந்தான் அவன்!

என்னமோ, மேலே விழுந்து பிடுங்கும் ஓநாய்களிடம் இருந்து தப்பிய உணர்வு!

மகளைக் காப்பாற்றி விட்டதாகவும்!



இனி எல்லாமே நீயல்லவோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:17 pm

அன்றைக்கு, அண்ணன் வெளிநாட்டுக்குக் கிளம்பி விடுவான். முன் மதியத்தில் கிளம்பும் ரயிலில் மும்பைக்குப் போய், அங்கே அவனது தலைமை அலுவலகத்தில் விவரம் தெரிவித்துவிட்டு, அப்படியே அமெரிக்காவுக்கு விமானம் ஏறி விடுவான்!

பூபாலன் ரயிலில் ஏறும் வரையில், ரயில் புறப்படும் வரையிலும் கூட, அவனோடு கூடவே சந்தனா இருக்கலாம்!

அதன் பிறகு?

பத்து நாட்களுக்கு முன்பாக, அவளுடைய தந்தை, அந்த ஃப்ளாட்டில், அவளோடு இருந்தார். பிறகு...

ஒரே இடத்தில் வேலை. தந்தை தலைமை ஆசிரியர். மகள் ஐந்தாம் வகுப்புக்குப் பாடம் எடுத்தாள். தலைமை ஆசிரியர் மகள் என்பதால், அவளுக்குப் பல சலுகைகளை மற்றவர்கள் அளித்த போதும், முடிந்த வரையில், அவள் அதைப் பயன்படுத்துவது இல்லை! இந்தக் குணமே, அவளுக்கு நிறைய நலம் விரும்பிகளைச் சம்பாதித்துத் தந்தது எனலாம்.

கலகலப்பான தந்தை, சிதம்பரநாதன்! சில தலைமை ஆசிரியர்களைப் போலப் பள்ளியைத் தன் தலை மேலேயே தாங்க முடியாமல் சுமப்பவர் போல முகத்தை உம்மென்று வைத்திராமல், சாதாரணமாகவே இருப்பார், சும்மாவே, சிரித்த முகம் அவருக்கு!

அப்பா, மகள், இருவரும் சேர்ந்தே வேலைக்குப் போனார்கள். கடை கண்ணிக்குப் போனார்கள்.

அதிலும், அவளுடைய அண்ணன் பூபாலன் வெளியூர்க் கல்லூரியில் இடம் கிடைத்துப் படிக்கப் போன பிறகு, தந்தை தான் அவளுக்கு எல்லாம் என்கிற மாதிரி! அப்போதெல்லாம், அந்தத் தந்தையும் இல்லாமல் தவிக்கும் ஒரு காலம் விரைவிலேயே வரப் போகிறது என்று, அவள் கனவில் கூட நினைத்ததில்லை!

கலகலவென்று எத்தனை கதைகள் சொல்வார்!

வில்லி பாரதத்தையும், கம்ப ராமாயணத்தையும் முழுமையாகப் படித்து மனதிலும் இருத்திக் கொண்டவர், அவர். மக்களுக்கும் கற்றுக் கொடுத்திருந்தார்.

நாட்டின் இதிகாசங்களை அறியும் போது தான், நாட்டின் கலாச்சாரம், பண்பாடு புரியும் என்பார்! ஆயிரம் நீதி நூல்களைப் படித்தும் மனதில் பதியாத நியாய அநியாயப் பாகுபாடுகள், இவற்றைப் படித்தால் தெரியும் என்பது அவரது கருத்து!

அதனாலேயே, மக்கள் இருவருக்குமே, அவற்றைக் கதைகளாகவே கற்றுக் கொடுத்தும் இருந்தார்!

திடுமென, "மகாபாரதப் போர் நிகழாமல் எப்படித் தடுக்க, என்னென்ன செய்ய வேண்டும் என்று கிருஷ்ணரிடம், சகாதேவன் சொன்னான்?" என்று கேட்பார்!

"'பாராளக் கர்ணன், இகல் பார்த்தனை முதலில் கொன்று அணங்கின் காரார் குழல் களைந்து, காலில் தளை பூட்டி, நேராக நின்னையும் நான் பிடித்துக் கட்டுவனேல், வாராமல் தடுக்கலாம் மாபாரதம்' என்றான்" என்று பாடலைச் சொல்லி, விளக்கமாக 'கர்ணனுக்குப் பட்டம் கட்டி, அவனை எப்போது இகழ்ந்து பேசும் அர்ஜுனனை முதலில் கொன்று விட்டு, விரித்துப் போட்ட கூந்தலை காட்டி சபதத்தை நினைவூட்டும் திரௌபதியைச் சிறையிட்டுக் கடைசியாக எல்லோரையும் ஆட்டி வைக்கும் உன்னையும், நான் கட்டி விட்டால், பாரதப் போர் மூளாமல் தடுக்க முடியும்' என்று சகாதேவன் சொன்னதையும் சேர்த்து, அவரிடம் தெளிவாகக் கூற வேண்டும்!

தடுமாறினால், திரும்பச் சொல்லிக் கொடுப்பார்! ஆனால், பத்துக்கு மூன்றைச் சரியாகச் சொல்லி விட்டால் கூடச் சிதம்பரம் பூரித்துப் போவார்!

தந்தையைப் பார்த்து, விரும்பி ஆசிரியை ஆன சந்தனா, மாணவ மணிகளின் பல்வேறு பிழைகளைப் பொறுத்துப் போகப் பயின்றதே, அவரைப் பார்த்துதான், அவரது போதனையால்தான்!
"முப்பத்தைந்து சதவீதம் மதிப்பெண் எடுத்தாலே, அடுத்த வகுப்புக்குப் போக முடியும் என்று ஏன் வைத்திருக்கிறார்கள்? நூறு மதிப்பெண் எடுக்க, முயற்சி செய்ய வேண்டியதுதான். ஆனால், கவனக் குறைவு, மறதி என்று, மனிதனிடம் எத்தனையோ குறைபாடுகள்! ஆயினும், முப்பத்தைந்து சதம் எடுத்து விட்டாலே, மனிதனாக முன்னேறுவதற்கு, அவன் முயற்சி எடுக்கிறான் என்று நிரூபிக்கப்பட்டு விடுவதாகக் கொள்ளப் படுகிறது! எல்லோருக்கும் ஒரே மாதிரிதானே கற்றுத் தருகிறோம். ஏன் எல்லோரும் நூறு மார்க் வாங்கவில்லை என்று எரிச்சல் படக் கூடாது! ஒவ்வொருவர் ஒவ்வொன்றை, உள்ளே வாங்கிக் கொள்ளும் திறனில் வேறுபாடு உண்டு. கணக்குப் பாடத்தில் முட்டை வாங்குகிறவன், தொழிலில் பெரிய பணக்கணக்கை, மனதிலேயே பிரமாதமாகப் போட்டு, முன்னேறப் பார்த்திருக்கிறேன். யார், யாரிடம் என்ன திறன் இருக்கிறதோ, அதைப் பார்த்துப் பாராட்ட, ரசிக்க, நீ முதலில் கற்றுக் கொள்ள வேண்டும்..."

இப்படி நிறைய, அவளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்!

அதனாலேயே, வகுப்பில் ஒரு வம்புக்கார வால், "திருவள்ளுவர் தப்பாக எழுதிவிட்டால், எந்த ரப்பரை வைத்து, எப்படி அழித்திருப்பார் மிஸ்?" என்று சந்தேகம் கேட்ட பிறகு, வகுப்புப் பிள்ளைகளுடன் சந்தனாவும் சேர்ந்து நகைத்திருக்கிறாள்.

அது மட்டுமல்ல! வீட்டுக்கு வந்து, தந்தையிடமும் வகுப்பில் நடந்ததைச் சொல்ல, இருவருமே ரசித்துச் சிரித்தார்கள்!

"என்ன கற்பனையெல்லாம் வருகிறது பாரேன்!" என்று வியந்து, இன்னொரு முறை சிரித்துவிட்டு, அவரிடமே இன்னோர் ஐயமும் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

"சந்தனா என்று, இது என்ன பெயர், அப்பா? இப்படிப் பெயர், நான் கேட்டதே இல்லை!"

பழைய நிகழ்ச்சியை மனதில் நினைத்து, சன்னமான முறுவலுடன், "நீ, பெண்ணாகப் பிறந்ததும், உனக்கு ஊர்த் தெய்வமான, முப்பிடாரி அம்மனின் பெயரை வைக்க வேண்டும் என்று, உன் தாத்தா ஆசை! ஆனால், அரைத்த சந்தனத்தில் செய்த சிலை போல, அழகாகக் கிடந்தாயா, உன் அம்மாவுக்கு அந்தப் பெயர் தான் தோன்றி விட்டது!" என்றார் அவர். தொடர்ந்து, "அம்மா சொன்னது, எல்லோருக்குமே பொருத்தமாகத் தோன்றிவிட, அதுவே உன் பெயராகிப் போயிற்று! அதுவும், உன் தாத்தா, உன்னைச் சந்தனச் சாந்துக் கட்டி என்று நீளமாகத்தான் கொஞ்சுவார்!"

தொடர்ந்து, நரை மீசையுடன் திடகாத்திரமான ஒருவர், அவளைத் தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொஞ்சிய சந்தோஷமான நினைவுகள், அவளுக்குத் தோன்றும்!

அதுதான் அப்பா!

துன்பங்களைப் பேசுவதும் இல்லை. கற்பனை செய்ய விடுவதும் இல்லை!

இல்லையென்றால், மனைவியை இழந்து, இந்த பதினெட்டு ஆண்டுகளாகத் தாயுமாகி, இரு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய சிரமம் பற்றி, எவ்வளவோ சொல்லிப் பிள்ளைகளின் மனதில் சுமையேற்றி இருக்கலாம்!



இனி எல்லாமே நீயல்லவோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:17 pm

ஆனால், அதெல்லாமே, அவர் ரசித்துச் சொன்ன தினுசில், வேடிக்கை விளையாட்டாக மாறிவிடும்!

இட்லி மிளகாய்ப் பொடியை வாங்கி வந்து, தெரியாமல் ஒரே மாதிரி இருந்த சர்க்கரை டப்பாவில் போட்டு வைத்து விட்டு, அதையும் காலை வேளையில் அவசரத்தில் கவனியாமல், இட்லிக்கு அதே பொடியைப் போட்டு எண்ணெய் ஊற்றி வைத்தது, இனிப்பும் காரமுமாகப் பிள்ளைகளுக்கு அந்தச் சுவை பிடித்துப் போகவே, ஒரு பெரிய ஜோக்காக மாறியது!

அவ்வப்போது, சுவையில் ஏதாவது கூடக் குறைய இருந்தாலும், 'அதுபோலத்தான்' என்று கிண்டலாகப் பேசும் அளவுக்கு!

பதினைந்து வயதில் தொடங்கி, மெல்ல மெல்லத் தந்தைக்கு உதவியாகத் தொடங்கி, சந்தனா சமையல் செய்கையில் ஏதாவது தப்புத் தவறுகள் நேர்ந்தாலும், இதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டே மூவரும் உண்டு விடுவார்கள்!

அந்த மகிழ்ச்சி, இனி என்றேனும் கிடைக்குமா?
"என்னடாம்மா? அப்பா நினைவா?" என்று கனிவாகக் கேட்டபடி, அண்ணன் அருகில் வந்து அமர்ந்த போதுதான், சந்தனாவுக்குச் சுய உணர்வு வந்தது.

பாவம்! அவள் இப்படிக் கலங்கினால், அவனால் எப்படி நிம்மதியாக வெளிநாடு செல்ல முடியும்?

"சந்தோஷமான நினைவுதாண்ணா! சர்க்கரையும் இட்லிப் பொடியும் சேர்த்து உண்போமே, அதை நினைத்தேன்! இப்படி, அப்பாவைப் பற்றிய எல்லாமே மகிழ்ச்சிகரமான நினைவுகள் தானே? உனக்குச் சாப்பாடு, தனித் தனியாக, மதியத்துக்கு, இரவுக்கு என்று கட்டி வைத்து விட்டேன். நீ சாமான்கள் எல்லாம் எடுத்து வைத்தாயிற்றா?" என்று, அண்ணனுக்கு முகம் காட்டாமல் எழுந்தாள் அவள்.

தந்தையின் வளர்ப்புதானே அவனும்!

கூடவே எழுந்தபடி, "இந்த ஒப்பந்தம் மட்டும் இல்லையென்றால், நான் பேசாமல் இங்கேயே இருந்து விடுவேன்!" என்றான் அவன் வருத்தத்துடன்! "இடையில் விட்டால், நாம் சில லட்சங்கள் கட்ட நேரும். ஆனாலும், இருப்பதை வைத்து, எப்படியோ கட்டி விடலாமே என்று தான் எனக்கும் தோன்றுகிறது! எதற்கும், நிறுவனத்தில் ஒரு தரம் கேட்டுப் பார்க்கப் போகிறேன், சாந்தும்மா. ஏனென்றால்..." என்று மேலும் ஏதோ சொல்லப் போனவனை அவசரமாக இடை மறித்தாள் தங்கை.

"அந்த மாதிரி மட்டும், எதுவும் கூடவே கூடாது, அண்ணா! உன் எதிர்காலம் நல்லபடியாக அமைந்துவிட்டது என்று, அப்பா எவ்வளவு மகிழ்ச்சியோடு, உன்னை அனுப்பினார்! அதைக் கெடுப்பதா? நினைத்துக் கூடப் பாராதே! அப்படி நீ போகாமல் இருந்தால், அப்பாவின் ஆசையை, நான் தான் கெடுத்து விட்டதாக, அதுதான் எனக்கு அதிக வேதனையாக, குற்ற உணர்வாக இருக்கும்! என்ன? எண்ணி மூன்றே நாட்கள்! அப்புறம், விடுதிக்குப் போய் விட்டால், அங்கே புதிய சூழ்நிலை, புதிய மனிதர்கள், அவர்களோடு பழகுவது என்று மனம் மற்றதில் ஈடுபடத் தொடங்கி விடும். அப்புறம் பார்த்தால், வேலை. இப்படி, என் நேரம் சரியாகப் போய் விடும்! ஓய்ந்த நேரத்தில் நினைக்கக் கூட, நமக்குத் தான் அப்பாவைப் பற்றி எத்தனையோ சந்தோஷமான நினைவுகள் இருக்கின்றனவே! நீ சும்மா தேவையற்று என்னைப் பற்றிக் கவலைப்படாதே!" என்று, உள்ளே இல்லாத தெம்பை, வெளியே காட்டிப் பேசி, அண்ணனின் மனதை அமைதிப்படுத்தினாள்!

"இருந்தாலும், சின்னப் பெண் நீ. உன்னைத் தனியாக விட்டுப் போக, மனமே வரமாட்டேன் என்கிறதேம்மா! முன்பாவது, அப்பா இருந்தார்!" என்றவனின் கண்களில் குபுக்கெனக் கண்ணீர் பொங்கியது!

சந்தனாவுக்கும் வேதனைதான்!

ஆனால் அதைக் காட்டினால், காரியம் கெட்டுப் போகும் என்று உணர்ந்து, "ஐயோ! என்னண்ணா இது? ஆண் பிள்ளை அழலாமா? கடல் கடந்து போகிறோமே என்று பார்க்கிறாயா? இந்தக் காலத்தில், அதெல்லாம் ஒரு தூரமே அல்ல! உலகமே ஒரு 'குளொபல் வில்லேஜ்' ஆகிவிட்டது என்று நாம் பேசிக் கொண்டிருந்தது மறந்து விட்டதா? நீ வெளிநாட்டுக்குப் போகாவிட்டாலும், இங்கே சென்னையிலேயா இருக்க முடியும்? மும்பையில் தானே இருக்க வேண்டும்? அதற்கும், வெளிநாட்டுக்கும் ஒன்றும் பிரமாதமான வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை! அதற்காக, வேலையையே விட்டு விட யோசிக்காதே! மும்பையும் 'சிலிக்கான் வாலி'யும் ஒன்றுதான் என்பேன். இந்தப் ப்ராஜக்டை நல்லபடியாக முடித்து விட்டு வந்தால், சென்னைக்குப் பதவி உயர்வுடன் கூடிய மாற்றம் தருவதாக, உன் அலுவலகத்தில் சொல்லியிருந்தார்களே, நினைவில்லை? அதனால், கண்ணைத் துடை... இல்லை, முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டு புறப்படு! வா! அப்பா படத்துக்கு முன்னே நின்று சொல்லிக் கொள்ளும் போது, இப்படி அழுத முகமாகவா, நிற்பது? ம்! போய் முகத்தைக் கழுவு!" என்று பூபாலனை விரட்டினாள்!

பூபாலனுக்கும், ஒருவாறு தங்கை சொல்வது சரியென்று தோன்றிவிட, மெல்லத் தலையாட்டிவிட்டு, முகம் கழுவச் சென்றான்.

ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியெல்லாம், சந்தனாவுக்கு ஒரே அறிவுரை தான். கதவை எப்போதும் உட்புறம் பூட்டிக்கொண்டு இருக்க வேண்டும். பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருக்கும் கிரில் கதவைப் பூட்டுப் போட்டுப் பூட்ட வேண்டும்! எப்பொழுதும்! வேலைக்காரம்மா உள்ளே இருக்கும் போதும், பூட்டுதான்! வேலை முடிந்து, அந்தம்மா போகிறபோது மீண்டும் திறந்து விட்டுக் கொள்ளலாம்! இந்த விஷயத்தில் சோம்பல் படவே கூடாது!
அவன் திரும்பத் திரும்பச் சொன்ன விதத்தில், சந்தனாவுக்குப் போரடித்துப் போயிற்று! சிரிப்புக் கூட வந்தது எனலாம்! ஆனால், அண்ணன் சொல்வது, அவள் மீதுள்ள அக்கறையால் அல்லவா? எனவே, அவ்வப்போது கண்கள் பளிச்சிட்ட போதும், பதில் பேசாமல் சாதுவாய்க் கேட்டுக் கொண்டாள்!

ரயில் நிலையத்திலும், பூபாலன் இன்னொரு தரம் வீட்டுப் பாதுகாப்புப் பற்றித் தொடங்கவும், குறுக்கிட்டு, "அண்ணா, திடீரென்று நான் ரொம்ப மக்காகி விட்டேனோ என்று சந்தேகமாக இருக்கிறது!" என்றாள், அப்பாவி போல.

திகைப்புற்று, "ஏம்மா, அப்படி? எனக்கொன்றும் அப்படித் தோன்றவில்லையே! எப்போதும் போலப் பளிச்சென்று தானே, இருக்கிறாய்... ஏன், ஏதேனும் புரியவில்லையா? அப்படி எதுவும் இருந்தால், இப்போதே என்னிடம் கேட்டுவிடு!" என்று, அவளுக்கு மூத்த அண்ணனாய் உதவ முன் வந்தான் அவன்.

"ஆமாம் அண்ணா! இதற்கு விளக்கம் நீதான் சொல்லித் தர வேண்டும்!" என்று கவலையாகத் தொடங்கினாள் தங்கை. "நம் வீட்டில், இந்த மூன்று நாட்களும் எப்படி இருக்க வேண்டும் என்று, கிட்டத்தட்ட முப்பது தடவை சொல்லி விட்டாய்! இன்னமும் என் மண்டையில் அது ஏறிய மாதிரி, உனக்குத் தோன்றவில்லை போல இருக்கிறதே. அதுதான் சந்தேகம் வந்து விட்டது!" என்று சாதுவாகவே கேட்டுவிட்டுச் சட்டெனக் கண் சிமிட்டிக் குறும்பாகச் சிரிக்கவும், அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது!

"வாலு!" என்று அவள் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு, "நிஜமாகவே அத்தனை தடவையா சொன்னேன்?... ம்ம்ம்... இருக்கும், இருக்கும்! பத்திரிகையில், அடுத்த தெருவில் நடந்த திருட்டைப் பற்றிப் படித்ததில் இருந்து, எனக்கு அதே நினைவாகத்தான் இருக்கிறது! நீ எச்சரிக்கையோடு இருப்பாயல்லவா?" என்று கவலையுடன் கேட்டான் பூபாலன்.

"என்னண்ணா நீ, இந்த வீட்டில் நான் இருக்கப் போவது, மிஞ்சி மிஞ்சி மூன்றே நாட்கள் தானே? எதிர் ஃப்ளாட்டில் வேறு சுந்தரிக்கா குழந்தை பெற வந்ததில் இருந்து, உறவினர் வருவதும் போவதுமாக நடமாட்டம் நிறைய இருக்கிறது! பயமே படாதே!" என்றவள், அவன் மீண்டும் தொடங்கு முன் அவசரமாக "அண்ணா, அங்கே வேலை, வேலை என்று நேரத்துக்குச் சாப்பிடாமல் இருந்து விடாதே! 'சுவரை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும்' என்பது போல, ஆரோக்கியத்துக்கு அப்புறம் தான், மற்றது எல்லாம்!" என்றாள் சந்தனா.

"நல்லவேளை, நினைவுபடுத்தினாய்...!" என்று பூபாலன் மறுபடித் தொடங்கினான். "பார் சந்தனா, அந்த வேலை பார்க்கும் மகளிர் விடுதியில் உணவு எல்லாமே நன்றாக இருக்கும் என்று தான் சொன்னார்கள்! ஆனால், எப்படியும், உன் சமையல் போலச் சுவையாக இருப்பது கடினம் தான்! அதற்காகச் சரியாகச் சாப்பிடாமல், உடம்பைக் கெடுத்துக் கொண்டு விடக் கூடாது! ஆனால், மற்ற பல இடங்களுக்கு, இந்த ஹாஸ்டல் உணவு பிரமாதம் என்று கேள்வி. அதைவிட முக்கியமாக, மிகவும் பாதுகாப்பான இடம்! அதனால் தான், கெஞ்சிக் கூத்தாடி, இதில் உனக்கு இடம் பிடித்தேன். சரியாக ஒன்றாம் தேதி மாலைக்குள் போய்விடு! இல்லாவிட்டால், கிடைத்த இடம், வேறு யாருக்காவது போய்விடும்! அங்கே இடம் பிடிக்கப் பெரிய போட்டி இருக்கிறது!"

அன்பும் அக்கறையுமாக, ஒருவருக்கொருவர் இப்படியே ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கையில் திடுமென ரயில் கிளம்பும் நேரம் வந்தது!

தன்னை மீறிக் கண்ணீரைச் சொரிந்த இருவரையும் பிரித்தவாறு, ரயில் கிளம்பிச் சென்றது!

இந்தப் பரந்த உலகில் யாருமே இல்லாதது போன்ற வெறுமையை உணர்ந்தபடி, தூரத்தில் புள்ளியாகி மறையும் ரயிலை வெறித்தவாறு, சந்தனா தனித்து நின்றாள்!



இனி எல்லாமே நீயல்லவோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:17 pm

ரயில் கண்ணுக்கு மறைந்த பிறகும் கூட சந்தனாவுக்கு, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிச் செல்லப் பிடிக்கவில்லை!

எங்கே செல்வது?

வீட்டை நினைக்கவே, மனம் கலங்கியது.

அவளது வெகு சிறு வயதில் மறைந்து விட்ட தாயின் நினைவு அவளை அதிகம் வருத்தியதில்லை!

ஆனால், தந்தை, அண்ணன் இருவருமே இல்லாமல், தன்னந் தனியே, அந்த வீட்டில், அவள் எப்படி இருப்பாள்?

புரிந்துதான், அவள் தங்குவதற்காக, வேலை பார்க்கும் மகளிர் விடுதிகளை அலசி ஆராய்ந்து, ஒரு நல்ல விடுதியில், பூபாலன் அவளுக்கு இடம் பிடித்துத் தந்திருக்கிறான்!

ஆனால், அந்த இடத்துக்குப் போவதற்கு, இன்னும் மூன்று நாட்கள் இருந்தன.

அந்த மூன்று நாட்கள், எப்படியோ சமாளித்து, அவள் இந்த வீட்டில் தான் இருந்தாக வேண்டும்!

இருபத்தியிரண்டு வயதில், இதைவிட, எவ்வளவோ மனோதிடம், தைரியம் இருக்க வேண்டும் என்று, தனக்குத் தானே எவ்வளவோ சொல்லிக் கொண்ட போதும் வீடு திரும்ப, அவளுக்குத் தயக்கமாகத்தான் இருந்தது!

எதிரே ரயில் நிலையக் கடிகாரம், மணி பனிரண்டைக் காட்டியது!

பள்ளியில், மதிய உணவு இடைவேளை நேரம்!

தந்தையின் அறையை ஒட்டியிருந்த வராந்தாப் பகுதியில் அமர்ந்து சாப்பாட்டுப் பாத்திரத்தைப் பிரிப்பது நினைவு வந்தது!

எளிய உணவுதான்! ஏதாவது கலந்த சாதம் அல்லது, இட்லி தோசை! அதுவே, அமிர்தமாகத் தோன்றும்!

அன்று கூட...

இல்லை, நினைக்கக் கூடாது! அன்றைய தினத்தை இயன்றவரை நினையாதிருப்பது நல்லது! நினனவு வந்துவிட்டால், அப்புறம் இந்தக் கனவுகளால் வேறு நஷ்டம்!

முயன்று, மனதை வேறுபுறம் திருப்பினாள் சந்தனா.

இன்னமும், அரைநாள் வகுப்புகள் இருந்தன...

'நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம், அம்மா! குறைந்தது, ஒரு மாதத்துக்கேனும் வேலை கொடுத்தாக வேண்டும் என்பதால், இப்போதைக்கு, உன் இடத்துக்கு, நாங்கள் யாரையும் நியமிக்கவில்லை! நாங்களே, ஒருவர் மாற்றி ஒருவர் உன் வகுப்புகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்! அதனால், உன்னால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக வந்து, வேலையைப் பார்! வேலையில் ஈடுபடுவது, உன் மனதுக்கும் நன்றாக இருக்கும் என்பதால்தான் சொல்லுகிறேன்' என்று முன்பு உதவித் தலைமை ஆசிரியையாக இருந்து, இப்போது தந்தைக்குப் பதிலாகத் தலைமை ஆசிரியை ஆகியிருக்கும் சரசுவதி ரங்கநாதன் ஏற்கனவே, சந்தனாவிடம் சொல்லியிருந்தார்!

எனவே, அவள் பள்ளிக்குப் போவது, யாருக்கும் பிரச்சினையாக இருக்கப் போவதில்லை! சொல்லப் போனால், அவளது பொறுப்பைப் பகிர்ந்து கொண்டு, அதிக வேலை செய்யும் மற்றவர்களுக்குப் பளு குறையும்!

அப்போது பள்ளிக்குப் போனால், ஒன்றிலிருந்து, மூன்று வரையிலான வகுப்புகளை எடுக்கலாம்!

அப்புறம், அங்கே மற்றவர்களோடு வேலை, மறுநாள் பாடம் பற்றிப் பேசிவிட்டு, சற்றுத் தாமதமாகவே வீடு திரும்பலாம்!

எப்படியும், குறைந்தது நாலு மணி நேரம், அவள் வீட்டுக்குப் போகத் தேவையிராது!

முன்புறமாகச் சென்று, வரிசையில் நின்று, ஆட்டோ பிடித்துப் போவதை விட, கார் பார்க் வழியே பக்கவாட்டில் சென்றால், பள்ளிக்குச் சீக்கிரமாகப் போய்ச் சேரலாம்! அன்று எடுக்க வேண்டிய பாடம் பற்றித் தயார் பண்ணவும் சற்று அவகாசம் கிடைக்கும்!

அவசரமாகத் திரும்பிப் பக்கவாட்டு வழியில் வேகமாகச் சந்தனா நடக்கலானாள்.

கார்ப் பார்க்கின் முதல் மூலை திரும்புகையில், செல்லில் பேசியவாறே, கைப்பையை மூடியபடி, காரினுள் ஏறிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி!

அவளது பெயரின் மூலமான சந்தன வண்ணச் சேலை!

ஐம்பதைத் தாண்டியவளாகத் தோன்றிய அந்தப் பெண்மணி, கார் கதவைச் சாத்தவும் கார் வேகமெடுத்து அங்கிருந்து வெளியேறியது!

டிரைவர் காரை ஏற்கனவே ஸ்டார்ட் செய்து வைத்திருக்க வேண்டும் என்று எண்ணியவாறே முன்னேறிய சந்தனா திடுக்கிட்டு நின்றாள்!

அந்தப் பெண்மணி, காரில் ஏறிய இடத்தில் ஒரு பர்ஸ் கிடந்தது!

ஏதோ கொஞ்சம் சில்லரையை மட்டும் வைக்கிற மாதிரிச் சின்னது அல்ல, அது! நிறைய ரூபாய் நோட்டுகளை ரகம் வாரியாக வைக்கக் கூடிய தினுசு.

பணம் நிறைய இருந்து, தப்பான யார் கையிலாவது மாட்டிக் கொண்டு விடப் போகிறதே என்று எண்ணிய சந்தனா, வேகமாகச் சென்று அந்தப் பர்சை எடுத்தாள்.

பர்சோடு வேகமாகச் சாலையை அடைந்து, இரு புறமும் ஆராய்ந்தாள். அந்தக் கார் சென்ற இடமே தெரியவில்லை!

அருகில் வந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி, பள்ளி முகவரியைக் கொடுத்துவிட்டு, பர்சை நிதானமாகத் திறந்து பார்த்தாள்.

நல்ல வேளையாக, அவள் அஞ்சியது போலப் பர்சில் அதிகப் பணம் இருக்கவில்லை!

பர்சைத் தவறவிட்ட பெண்மணி யார் என்று அறிய வசதியாக, அந்தப் பெண்மணியின் விசிட்டிங் கார்டு பையினுள் இருந்தது!

அதன்படி, அடையாறுப் பக்கமாக, அந்தம்மாவின் வீடு இருந்தது! பள்ளி தாண்டிப் பாதி தூரம், மறுபுறம் செல்ல வேண்டும்!

செல்லலாம்! அந்த வீட்டைத் தேடிச் சென்று, நேரிலேயே கொடுத்துவிட்டு, அதன் பிறகே வீடு திரும்பலாம்! இன்னும் கொஞ்ச நேரம் வெளியில் கழியக் கூடும்! என்றாலும் கூட அதைச் செய்ய, சந்தனாவுக்குத் தயக்கமாக இருந்தது.

அந்த அம்மாள் கட்டியிருந்த சேலை, ஏறிய கார், கைப்பை, பையைப் பற்றியிருந்த கையில் அணிந்திருந்த கடிகாரம், மோதிரம் அனைத்தையும் எண்ணிப் பார்க்கையில், அந்தப் பெண்மணி, சற்று அதிகப்படிப் பணம் படைத்தவள் என்பது, நன்றாகவே தெரிந்தது!



இனி எல்லாமே நீயல்லவோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:18 pm

பணக்காரர்களைக் கண்டால், சந்தனா சத்தமின்றி ஒதுங்கி விடுவாள்! படிக்கிற காலத்திலேயே!

ஒரிரு முறை கவனித்து விட்டு, அவளுடைய தந்தையே, அவளிடம் கேட்டிருக்கிறார்!

"பாவம்மா, அந்தக் கோகிலா! ஆசையாக உன்னிடம் பேசவந்தால், காது கேளாத மாதிரி, ஒதுங்கி ஓடிவிட்டாயே! அவள் என்ன, சிங்கமா? புலியா?" என்றவருக்கு, "அவள் பணக்காரிப்பா!" என்று சந்தனா கூறியிருக்கிறாள்.

"அந்தக் கோகிலாவுடைய தலையாட்டிக் கூட்டத்தைக் கவனித்திருக்கிறீர்களாப்பா? அவள் எழுந்தால், எல்லோரும் எழ வேண்டும். அவள் பொட்டு வைக்காமல் வந்தால், இவர்கள் வைத்திருந்த பொட்டைக் கூட, எடுத்து எறிந்துவிட வேண்டும். மணியடித்தால் கூட, வகுப்பறைக்குள் அவள் தான் முதலில் செல்ல வேண்டும்! மற்ற எல்லோரும், அவளுக்கு அப்புறம்தான்! ஏன், ஓர் ஆசிரியருக்கு வணக்கம் சொல்வதானாலும் கூட, அவளுக்குப் பிறகுதான் மற்றவர்கள் சொல்லலாம்! இன்றைக்கு, அவளாக என்னைத் தேடி வந்தாலும், விரைவிலேயே, மற்றவர்களைப் போல, நானும் அவளுக்கு வாலை ஆட்ட வேண்டும் என்று கோகிலா எதிர்பார்ப்பாள் தானே? அதெல்லாம், என்னால் முடியாதுப்பா!" என்று அவள் உறுதியோடு கூறிய போது தந்தை அவளை மாற்றச் சற்றும் முயற்சிக்கவில்லை!

ஏனெனில், அவருக்கும் கிட்டத்தட்ட அதே குணம் தான்!

பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து கொண்டு, பணக்காரர்களை ஒதுக்க முடியாது என்றாலும், நெருப்பில் குளிர் காய்கிற மாதிரிதான், அவர் செல்வந்தர்களிடம் பழகுவார்!

வெளிப்படையாக விலகுவதும் கிடையாது, ஒட்டுவதும் இல்லை! ஆனால், எல்லோருக்கும் பிரியமானவர்!

எப்பேர்ப்பட்ட மனிதர்! அவரைப் போய்... என்று பெருமூச்சு விட்ட சந்தனா, சட்டெனத் தலையை உலுக்கி, மீண்டும் கையில் இருந்த பர்சைப் பார்த்தாள்.

விசிட்டிங் கார்டில் உள்ள டெலிபோன் எண்ணுக்கு போன் செய்து, பர்சை வாங்கிப் போக, யாரையேனும் அனுப்பச் சொல்லலாமா என்று யோசித்தபடி பர்சை மேலும் ஆராய்ந்த போது, விசிட்டிங் கார்டோடு, ஒரு சிறுவனின் படம், அந்தச் சிறுவனோடு கூடிய ஒரு குடும்பப் படம். சிறுவன், இளமைப் பருவத்துள் காலடி எடுத்து வைத்த போது எடுத்த படம், ஒரு கிரெடிட் கார்டு, கூடவே மருத்துவமனையின் அடையாள அட்டை ஒன்றும் இருப்பதைப் பார்த்தாள் அவள்!

சந்தனாவின் பள்ளிக்கு அடுத்த தெருவில் இருந்த மருத்துவமனைதான்! 'சுகம்' என்று பெயர் வெளியே இருந்து பார்க்க, நன்றாகத்தான் இருக்கும்.

அட்டையைத் திருப்பிப் பார்த்தால், அன்று மாலை ஆறு மணிக்கு, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவரோடு சந்திப்பு என்று குறிக்கப்பட்டிருந்தது!

பர்சை, அதற்கு உரியவரிடம் சேர்ப்பிக்கும் வழி, இப்போது சந்தனாவுக்குப் புரிந்து போயிற்று!

பள்ளிக்குச் சென்று, தலைமை ஆசிரியையிடம் 'ரிப்போர்ட்' செய்த போது, சந்தனாவை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றார் அவர்!

தானே ஆசிரியர்கள் அறைக்கு அவளை அழைத்துச் சென்று, "உங்கள் அதிகப்படி வேலைப் பளுவைக் குறைப்பதற்காகத் தன் துயரத்தை ஒதுக்கி வைத்துவிட்டுச் சந்தனா சீக்கிரமாகவே வேலைக்கு திரும்பியிருக்கிறாள்! பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே மனைவி இறந்து ஒரே வாரத்தில், சிதம்பரம் சார் வேலைக்குத் திரும்பியது, எனக்கு இப்போது நினைவு வருகிறது! நாங்கள் எல்லோரும் ஒரே செட்! உன் அம்மா சாருவுக்காக அவர் உள்ளூர உருகியது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதை வெளிக் காட்டாமல், சிதம்பரம் சார் அவ்வளவு வேலை செய்வார்! கடமை உணர்ச்சி மிகுந்த அந்தத் தந்தைக்கு ஏற்ற மகள்!" என்று பாராட்டவும், சந்தனாவுக்குச் சற்று வெட்கமாக இருந்தது!

அவள் ஒன்றும் வெறும் கடமை உணர்ச்சி மட்டுமே காரணமாய், அதற்காக மட்டுமாகப் பள்ளிக்கு வரவில்லையே! அந்த வகையில், இந்தப் புகழ்ச்சிக்கு அவள் ஏற்றவளும் அல்ல!

ஈடு செய்வதற்கு, முழுக் கவனத்துடன் வேலை செய்ய வேண்டும் என்று மனதினுள் உறுதி எடுத்துக் கொண்டு, அதன்படியே வேலையையும் தொடங்கினாள் அவள்.

பள்ளி நேரம் முடிந்ததும், இந்தப் பத்து நாட்களாக அவளது வகுப்புகளில் நடந்த பாடம், அடுத்துச் செய்ய வேண்டியது பற்றி உடனொத்த ஆசிரியர்களோடு பேசி விட்டு, அவர்கள் கிளம்பிய பிறகே, சந்தனா பள்ளி அலுவல் அறைக்குச் சென்று, அங்கே ஒரு பெரிய கவரை வாங்கி வந்து, ரயில் நிலையத்தில் கண்டெடுத்த பர்சை அதனுள் வைத்து ஒட்டினாள்.

முகவரியைக் குறித்து வைத்துக் கொண்டு, பர்ஸ் உர்மையாளரின் விசிட்டிங் கார்டைப் பார்சலின் மீது ஒட்டி எடுத்துக் கொண்டு கிளம்பி, 'சுகம்' மருத்துவமனைக்குச் சென்றாள்.

அங்கே, அந்தப் பர்ஸ்காரப் பெண்மணி அறிமுகம் ஆனவராக இருந்தாள்!

"மாதாமாதம் பரிசோதனைக்காக வருகிறவர்கள் ஆயிற்றே! அத்தோடு, பெரிய டாக்டருக்கு வேண்டியவர்கள் வேறு! இன்றைக்கு ஆறு மணிக்கு அந்தம்மா வருவார்கள். வந்ததும் தன்னிடம் கூட்டி வரவேண்டும் என்று, பெரிய டாக்டர் ஏற்கனவே என்னிடம் சொல்லியிருக்கிறார்! அப்போது உங்கள் பார்சலைக் கட்டாயமாக, மேடத்திடம் கொடுத்து விடுகிறேன்!" என்று உறுதி கூறிய வரவேற்புப் பெண், சிறு தயக்கத்துடன், "நீங்கள், மிஸ்?..." என்று வினவினாள்.


ஒரு கணம் குழப்பத்துடன் நோக்கிய சந்தனாவுக்கு உடனே அந்தப் பெண்ணின் தயக்கம் புரிந்தது.

லேசாக முறுவலித்து, தன் கைப்பையைத் திறந்து, தன் ஆசிரியப் பதவிக்கான அடையாள அட்டையை எடுத்துக் காட்டினாள்.

"தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள், மேடம்! அடையாளம் தெரியாமல், யாரிடமும், எதையும் வாங்கி வைக்கக் கூடாது என்று எங்களுக்குக் கட்டளை இருக்கிறது! வெடிகுண்டு மிரட்டல் கலாச்சாரம் பெருகிவிட்டதல்லவா? அதனால்தான்..." என்றபடி, சந்தனாவின் பெயரையும், வேலையையும் குறித்துக் கொண்டாள் அவள்.

"பயங்கரவாதம் அதிகமாகிவிட்ட இந்தக் காலத்தில் இந்த எச்சரிக்கை அவசியம் தானே?" என்று, அவளோடு ஒட்டிப் பேசிவிட்டு, "மறக்காமல் கொடுத்து விடுங்கள். நான் அப்புறமாக அவர்களிடம் போன் பண்ணிப் பேசிக் கொள்கிறேன்!" என்று கூறிவிட்டுக் கிளம்பினாள் சந்தனா!

எப்படியும், பர்ஸ் கிடைத்துவிட்டதா என்று, அந்தப் பெண்மணியிடம் உறுதிப் படுத்திக் கொள்ளும் கடமை அவளுக்கு இருக்கிறதுதானே? என்னதான் மெதுவாகப் பார்சல் பண்ணி, மெதுவாக நடந்து வந்து கொடுத்த போதும், மணி ஐந்து கூட ஆக மறுத்தது!

இப்போதும், மறுபுறம் திரும்பி நடந்தால், பத்தே நிமிஷத்தில் வீடு வந்துவிடும்!

அவ்வளவு பக்கம் தான்!

ஆனால்...

இன்னொரு கிளை வழியே சென்று, தெரு மூலையில் இருந்த பூங்காவுக்குப் போய், உள்ளே இருந்த இரும்பு பெஞ்ச் ஒன்றில், அலுப்புடன் அமர்ந்தாள்!

நல்ல வேளையாகச் சிறுவர், சிறுமியர் சிலர் பூங்காவுக்கு வந்திருந்தனர்!

அவர்கள் விளையாடுவதைப் பார்த்திருப்பதில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நல்லபடியாகவே, கழிந்து விட, லேசாக இருள் பரவத் தொடங்கியதும், எழுந்து வீட்டை நோக்கிச் சந்தனா நடக்கத் தொடங்கினாள்.

இரவில், ஒரு வேளை பசித்தால்... என்று, தெருமூலைக் கடையில் சின்னதாகப் பாதி ரொட்டியை வாங்கிக் கொண்டு மெதுவாகவே நடந்து வந்தாள்.

படியேறிப் போய், யந்திரமாய் கதவைத் திறந்து, கதவருகே இருந்த ஸ்விட்சைக் கையால் தடவிப் போட்டவள், கண் முன்னே தென்பட்ட காட்சியில் விதிர்வித்து, மூளைமரத்துச் சிலையாகிப் போனாள்!



இனி எல்லாமே நீயல்லவோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:18 pm

சந்தனாவின் உள்ளே புழுவாய் அரித்துக் கொண்டிருந்த வலி மட்டும் இல்லை என்றால், வீட்டில் ஒரு வேறுபாட்டை, அவள் முதலிலேயே கண்டிருப்பாள்.

அவர்களது வீட்டின் முன் கதவுக்கு மூன்றடி முன்னதாகத் தொடங்கி, வழி முழுவதும், இரும்பு கிரில் போடப் பட்டிருந்தது. கதவும் கிரில் தான். அந்தக் கதவின் பூட்டு, சாவியால் தொட்டதுமே முன்பே திறந்து கொண்டதே!

பூட்டவில்லைபோல என்று அரைகுறையாக எண்ணினாளே தவிர, அவளோ, அண்ணனோ அப்படிக் கவனம் அற்றவர்கள் அல்ல என்பது, தோன்றவில்லையே!

யாரோ... யாரோ என்ன, திருடர்கள், அந்தப் பூட்டை உடைத்து, அடுத்து, கதவிலேயே பதித்திருந்த தாளையும் எப்படியோ திறந்து, உள்ளே வந்திருக்கிறார்கள்! வந்து, பூபாலனும் அவளுமாக ஒதுக்கிக் கட்டி வைத்திருந்த எல்லாவற்றையும் பிரித்து, கலைத்து வீசி எறிந்து வீட்டைக் களேபரமாக்கிப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்!

எதையெல்லாம் திருடிப் போனார்களோ?

கண்டபடி குப்பையாய் வீசி இறைத்திருக்கும் இந்தக் குவியலில் என்ன காணாமல் போயிருக்கிறது என்று எப்படித் தெரியும்?

அதற்கு முன், அந்தத் திருடர்கள் போய் விட்டார்களா? அல்லது இங்கேயே ஒளிந்து...

நெஞ்சு படபடக்க, சந்தனாவின் பார்வை அங்குமிங்கும் பாய, அவள் அச்சத்துடன் பின்னடைகையில், பின்புறம் இருந்து அழைப்பு மணி ஓசை கேட்கவும், உடல் நடுங்கப் பற்றி அலறி விட்டாள்!

அவளது அலறல் சத்தம் கேட்டு, எதிர் வீட்டில் இருந்து, அந்த வீட்டு அம்மாளும், மகனும் ஓடி வந்தார்கள்!

"சந்தனா, என்னடியம்மா? என்ன? எதற்குக்... கத்..." என்றபடி ஓடி வந்த அம்மாள், வீடு கிடந்த நிலையைப் பார்த்ததும், "ஐயோ!" என்று தானும் அலறினாள்!

"என்னடி இது? நாங்கள் சுந்தரியையும் பிள்ளையையும் ஆஸ்பத்திரியில் இருந்து கூட்டிக் கொண்டு, கொஞ்சம் முன்னால் தான் வந்தோம்! அப்போ... அம்மாடியோவ்! நம்ம ஃப்ளாட்டிலே கூடத் திருட்டா? எத்தனை பேர் வந்தார்களோ? நல்லகாலம், நீ தனியாக இருந்து, அவர்களிடம் மாட்டியிருந்தால், கடவுளே! உன்னைக் கொன்று கூட..." என்று அவள் ஏதேதோ சொல்ல, "அப்பா, அப்பா, இங்கே சந்தனக்கா வீட்டில் திருட்டு!" என்று மகன் கத்த, "என்னது? என்னது? திருடன் உள்ளே இல்லையே, முதலில் அதைப் பார்! சுந்தரிம்மா, உள்ளே பூட்டிக்கொள்!" என்று உரக்கக் கூவியபடி, எதிர் வீட்டுக்காரரும் வந்து சேர்ந்தார்.

"என்னென்ன போச்சோ தெரியலியே!"

"இரண்டு பக்க வீட்டிலும் ஆள் இல்லாதது தெரிந்துதான், திருடன் வந்திருக்கிறான்! எத்தனை பேரோ தெரியலியே!"

"நல்ல வேளை! எதிரே நம் வீட்டை உடைக்கவில்லை! பூட்டு உடைந்திருந்ததா?"

"எதெது திருட்டுப் போயிருக்கிறது என்று பார்த்தாயா?"

"அச்சோ! எதையும் தொடக்கூடாது! போலீசுக்குச் சொல்லி விட்டாயா?... டேய், நீ போய் செகரட்டரியைக் கூட்டி வா!"

இப்படி ஆளாளுக்கு ஏதேதோ பேசினார்களே தவிர, சந்தனாவின் நடுக்கம் அதிகமாவதை யாருமே கவனிக்கவில்லை!

காற்றில் ஆடும் சருகைப்போல, அவளது உடம்பு தூக்கிப் போடுகையில், "நீ முதலில் உட்காரம்மா!" என்று சோஃபாவில் கிடந்த துணிகளை ஒதுக்கி, யாரோ அவளது தோளைப் பற்றி உட்கார வைத்தார்கள்!

அப்பாடி என்று கண் மூடித் தலை சாய்த்து அமர்ந்தாள் சந்தனா.

"ஐயையோ, எதையும் தொடக்..." என்று பதறிய எதிர் வீட்டு அம்மாளின் பேச்சில் குறுக்கிட்டு, "அவளுக்கு அதிர்ச்சி! உடம்பு நடுங்குவதைப் பாருங்கள்! உடனே, குடிப்பதற்கு ஏதாவது சூடாகக் கொடுக்க வேண்டும்! நிறையச் சர்க்கரை போட்டு, டீ... இங்கே சமையல் அறை எங்கே இருக்கிறது?" என்று கேட்டபடி, சந்தனாவின் சில்லிட்டிருந்த கையைப் பற்றி, வேகமாகச் சூடு வரத் தேய்த்து விட்டாள், அவளை உட்கார வைத்த பெண்மணி.
"நான் கூடப் பார்த்திருக்கிறேன் அம்மா! இனிப்பாக டீ குடித்தால், அதிர்ச்சி குறைந்து, தெம்பு வரும் என்று, வகுப்பில் முதல் உதவியில் சொல்லிக் கொடுத்தார்கள்! ஆன்ட்டி இங்கே கிச்சன், அது!" என்று காட்டினான் சுதாகர், எதிர் வீட்டுப் பையன்!

"ஏய், பொறுடா! ஏதேனும் பெரிய பொருள் போயிருந்தால், ரேகையைக் கெடுத்து விட்டீர்கள் என்று போலீஸ் தகராறு பண்ணுவார்கள்! கனகம், நீ போய் நம் வீட்டில் டீ போட்டு எடுத்து வா!" என்று மனைவியை அனுப்பினார் எதிர் வீட்டுக்காரர். "அங்கே பேத்தியைக் கொஞ்ச உட்கார்ந்து விடாமல், சீக்கிரமாக வா! சுதா, நீயும் கூடப் போய், அம்மாவை விரட்டிச் சீக்கிரம் கொண்டு வரச் சொல்லு!" என்று மனைவியையும், பின்னோடு மகனையும் அனுப்பி வைத்தார்.

அதன் பிறகே, சந்தனாவின் அருகில் அமர்ந்து, அவளது கைகளைச் சூடு வரத் தேய்த்து விட்டுக் கொண்டிருந்த பெண்மணியைச் சரிவரக் கவனித்து, "நீங்கள் யார் என்று தெரியவில்லையே! இந்த வீட்டில், இதற்கு முன்னால், உங்களைப் பார்த்ததாக..." என்று இழுத்தார் அவர்!

"பார்த்திருக்க மாட்டீர்கள்!" என்றாள் அந்த அம்மாள். "இப்போதுதான், முதல் தடவையாக வருகிறேன்! நன்றி சொல்ல வந்தால், பாவம், பலன் கருதாமல் எனக்கு உதவி செய்த இந்த நல்ல பெண்ணுக்கு இப்படியொரு பிரச்சினை!" என்றாள் வருத்தத்துடன்!

உட்கார்ந்ததிலும், தொடர்ந்து, அந்த அம்மாள் கைகளைத் தேய்த்து விட்டதிலுமாக, ஓரளவு சுரனை வந்திருக்கவே, சந்தனாவும், தலை திருப்பி, அந்தப் பெண்மணியைப் பார்த்தாள்.

என்ன உதவி?

யார் இந்த அம்மாள்?

சந்தனாவின் கண்களில் கேள்வியைக் காணவும், லேசாக முறுவலித்து, "நான் தானம்மா, நீ கண்டெடுத்துக் கொடுத்த பர்சின் சொந்தக்காரி! அதில் இருந்த பணம் ஒன்றுமில்லாவிட்டாலும், அந்தப் படங்கள், எனக்கு விலை மதிப்பற்றவை!... அதற்காக நன்றி செலுத்த வந்தேன்! என் பெயர் தான், கார்டில் பார்த்திருப்பாயே, மீனாட்சி!" என்றாள் பெரியவள்.

பேச்சின் நடுவில் மீனாட்சி அம்மாளின் முகத்தில் இருள் படிந்து விலகினாற் போல, ஒரு தோற்றம்! கூடவே, இன்னும் ஏதோ புரியாதது போன்ற சிறு உறுத்தல்!

எதையும் முனைந்து கேட்கத் தோன்றாமல், அப்படியே அமர்ந்திருந்தாள், சந்தனா.

சற்றுக் கவலையுடன் எதிர் வீட்டுக்காரர் எட்டிப் பார்க்கும் போதே, ஆவி பறக்கும் டீக்கப்புடன் எதிர் வீட்டுக் கனகம் வந்து சேர்ந்தாள்! பின்னோடு, ஒரு ட்ரேயில் இன்னும் சில கப்புகளுடன், சுதாகரன்.

சந்தனாவிடம் முதல் கப்பைக் கொடுத்துவிட்டு, மீனாட்சியைப் பார்த்து, "நீங்களும் குடியுங்கள்!" என்று, அவளிடமும் ஒரு கப்பை நீட்டினாள்.



இனி எல்லாமே நீயல்லவோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:19 pm

"சந்தனாதான் முக்கியம்! ஆனால், எனக்கும் தேவை போலத்தான் தோன்றுகிறது! நன்றி!" என்று கப்பை வாங்கிக் குடித்தாள் மீனாட்சி.

குடித்தபடியே, சந்தனாவின் முகத்தைப் பார்த்து, "என்னம்மா, எப்படி உன் வீட்டைக் கண்டு பிடித்தேன் என்று குழப்பமாக இருக்கிறதா? பள்ளிக் கவரில்தானே பர்சைப் போட்டுப் பாக் பண்ணியிருந்தாய்! நேரே, உன் பள்ளிக்குப் போனேன். உன் பெயரைத்தான், மருத்துவமனையில் அந்தப் பெண் வாங்கி வைத்திருந்தாளே! பள்ளியில் உன் பெயரைச் சொன்னதுமே, வீட்டு முகவரியைத் தந்தார்கள்! வந்தால்... இப்போது, கொஞ்சம் பரவாயில்லையாம்மா? என்னென்ன போயிருக்கிறது என்று யோசித்துப் பார்க்கிறாயா? போலீசுக்குத் தெரியப்படுத்தும் போது கேட்பார்கள்..." என்றாள்.

இனிப்பான டீ உள்ளே போகவும், சந்தனாவுக்குப் பழைய தெம்பு, ஓரளவு திரும்பியது போல இருந்தது!

சற்று யோசித்து விட்டு, மீனாட்சியின் கேள்விக்குப் பதிலாக, "பெரிதாகத் திருட்டுப் போக, வீட்டில் ஒன்றும் கிடையாது!, வீட்டைக் காலி செய்வதால், தங்கம், வெள்ளி எல்லாம் பாங்க் லாக்கரில் வைத்து விட்டோம்! இன்றைக்குப் பணமும் வீட்டில் வைத்திருக்கவில்லை! ஒன்றும் கிடைக்காத ஆத்திரத்தில்தான், திருடன் இப்படி வீசி எறிந்திருக்கிறான் என்று தோன்றுகிறது!" என்றாள் சந்தனா மெதுவாக.
"அதுவும் நல்ல காலம் தான்..." என்று எதிர் வீட்டுக் கனகம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மகள் சுந்தரியின் குரல் அழைக்கவும், "இதோ வந்துவிட்டேன் கண்ணு" என்றவாறு, தன் வீட்டுக்குள் விரைந்தாள் அந்த அம்மாள்.

கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு மெல்ல எழுந்த மீனாட்சி அம்மாள், நின்று யோசனையோடு பார்க்கையில், "ஒன்றும் போகவில்லை என்றால், போலீசுக்குப் போவானேன்? சுந்தரி வீட்டு மனிதர்கள் வந்து கொண்டு இருப்பதாகத் தகவல் வந்தது! அவர்கள் இங்கே இருக்கும் போது போலீஸ்காரர்கள் வருவதும், போவதுமாக... ஏற்கனவே, ஒருதரம் பட்டாயிற்று! இப்போது எதற்கு சந்தனா?" என்றார் எதிர் ஃப்ளாட்டுக்காரர்!

அவள் தனியே இருப்பதால், சும்மாச் சும்மா தன்னையல்லவா கூப்பிடுவார்கள் என்றும் அவர் தயங்குவது, சந்தனாவுக்குப் புரிந்தது!

சுந்தரியுடைய பிள்ளையைப் பார்ப்பதற்காக, அவருடைய சம்பந்தி வீட்டார் வந்து விட்டால், அவர்களைக் கவனிக்கவே, அவருக்கு நேரம் சரியாக இருக்கும்!

அவர்களை விட்டு, எனக்காக வந்து நில் என்று அழைப்பது தப்பு!

அத்தோடு, சம்பந்தி வீட்டார் முன்னிலையில், அடிக்கடி, போலீசார் வந்து போவது நன்றாக இராது என்றும் எண்ணுகிறார்!

"அத்தோடு நீயும், உடனே ஹாஸ்டலுக்குப் போகப் போகிறாய்! போலீஸ், அது இது என்றால், குடி வருகிறவர்களுக்கு வெறுத்துப் போகும்! ஒன்றும் போகவில்லை என்றால், எதற்கு வீணாக? பேசாமல் வீட்டை ஒதுக்கி விட்டுப் படுத்துத் தூங்கி, நன்றாக ஓய்வெடு, வரட்டுமா? சுதா, கப்புகளை எடுத்துக் கொண்டு வா!" என்று கிளம்பினார் அவர்.

சந்தனாவின் விழிகள் அச்சத்தால் அகன்றன.

படுத்துத் தூங்குவதா?

இந்த வீட்டிலா?

அண்ணன் சொன்ன அடுத்த தெருத் திருட்டு நினைவு வர, அவள் முகம் வெற்றுத் தாளாய் வெளுத்தது!

அங்கே, தனித்திருந்த பெண்ணைக் கொன்றே விட்டார்கள்!

பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அந்தத் திருடர்கள், மறுபடியும் வரமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

இப்போதே கூட, யாரேனும், எங்கேனும் ஒளிந்திருக்கிறார்களோ, என்னவோ, என்று எண்ணும்போதே, சந்தனாவின் நெஞ்சு படபடத்தது!

அச்சத்துடன் அவளது பார்வை சுழலுவதைக் கவனித்து மீண்டும் அருகமர்ந்து, அவளது கையைப் பற்றி வருடி, "இங்கே, உன்னோடு யாரும் இல்லையாம்மா?" என்று மீனாட்சி வினவினாள்.

"இ... இல்லை..." என்ற சின்னவளின் முகம் கசங்கியது. "அப்பா... அப்பா இறந்து, அதற்கு வந்துவிட்டு, அண்ணன் இன்று தான்..." என்று தொடங்கி கண்ணீரிடையே விவரம் சொன்னாள்.

"மூன்று நாட்கள் தானே, சமாளித்து விடலாம் என்று நினைத்தேன், ஆன்ட்டி! ஆனால் இப்போது... பயம்ம்...மாக..."

வாக்கியத்தை முடிக்க முடியவில்லை அவளால்!

ஆறுதலாக அவளைத் தட்டிக் கொடுத்து மீனாட்சி அம்மாள் ஒரு யோசனை சொன்னாள். "பாரம்மா, சின்னப் பெண் நீ! இங்கே, நீ தனியே இருப்பது, அதுவும் இன்றைய நிலையில், சற்றும் சரியல்ல! ஓர் இரண்டு நிமிஷம் உட்கார்ந்திரு! இதோ வந்து விடுகிறேன்!" என்று எழுந்து எதிர் ஃப்ளாட்டுக்குச் சென்றாள்.

அவளைக் கண்டதும் வந்த வீட்டுக்காரக் கனகத்திடம், "இன்று ஒரு நாள், சந்தனா உங்கள் வீட்டில் தங்க வசதிப்படுமா?" என்று வினவினாள்!

"இல்லையே!'" என்று கையைப் பிசைந்தாள் அந்தப் பெண்மணி. "சுந்தரி... என் மகள் வீட்டில், மாப்பிள்ளை, அவர் அம்மா, அப்பா, என்று குடும்பமே வருகிறார்கள்! இரண்டு நாள் இருந்து, புண்ணியாகவாசனம் எல்லாம் முடித்துக் கொண்டு போவார்கள்! அவர்கள் வசதியைப் பார்க்க வேண்டும்!..."

"நிச்சயமாய்!" என்றாள் மீனாட்சி அம்மாள்! "ஆனால், அந்தச் சின்னப் பெண்ணைத் தனியாக விட முடியாது! அதனால்... அவளை, என் வீட்டுக்குக் கூட்டிப் போகிறேன்..." என்றவள், எதிர் வீட்டம்மாவின் முகம் போன போக்கைக் கவனித்து, "காலம் இருக்கிற நிலையில், யாரையும் நம்பி விட முடியாதுதான்! உங்கள் பையனையோ, கணவரையோ விசாரித்துத் திருப்தியானதும், காரிலேயே திருப்பி அனுப்பி விடுகிறேன்! என் கார்டு தருகிறேன். 'சுகம்' மருத்துவமனையில், பெரிய அளவில் எனக்குப் பங்கு இருக்கிறது! அங்கே கூட விசாரிக்கலாம்! அடுத்த வீட்டில் இருப்பவர் யார் என்று கூடத் தெரியாமல் இருக்கும் எத்தனையோ ஃப்ளாட்வாசிகள் போல இல்லாமல், சந்தனாவிடம் அக்கறையாக இருக்கிறீர்கள்! அதனால் தான் உங்களிடம் கேட்க வந்தேன்!"

மீனாட்சி மேலே பேசிய விதத்தில், கனகத்துக்கு ஒரு மாதிரி மனம் குளிர்ந்தது!

மருமகன் வீட்டார் வர இருக்கும் இந்த நேரத்தில் யாரை அனுப்புவது என்று அவள் யோசிக்கையில், "என்னது?" என்று சுதாகர் அருகே வந்து, அன்னையின் கையில் இருந்த கார்டை வாங்கிப் பார்த்துவிட்டு, "அட, இங்கேதான் என் சினேகிதன் பரசு இருக்கிறான்! அவன் ஏழில்! நீங்கள் ஆறா? வாசலில் தொடங்கி, வரிசையாக அசோக மரம் இருக்குமே!" எனவும், கனகம் நிம்மதியோடு தலையாட்டினாள்.

"உங்களுக்கு வீண் தொல்லை. ஆனால், நன்றி ஆன்ட்டி! என்னாலும், இன்று, இங்கே தனியாக இருக்க முடியாதுதான்!" என்று எல்லையற்ற ஆறுதலோடு, சந்தனாவும் மீனாட்சியோடு கிளம்பி விட்டாள்.



இனி எல்லாமே நீயல்லவோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக