புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
1 Post - 1%
Shivanya
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
12 Posts - 2%
prajai
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
9 Posts - 2%
jairam
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
4 Posts - 1%
Rutu
வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_m10வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ப்பு - சிறுகதை - ஜெபராஜ்


   
   
jabaraj.s
jabaraj.s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 01/02/2011

Postjabaraj.s Thu Feb 24, 2011 11:02 am

வளர்ப்பு





"செல்வேந்திரன் M.L.A"



வீட்டு வாசலில் கிரானைட் பதிப்பில் பெயர் பளிச்சிட்டது.வாசலில் 'சுமோ' படையுடன் தொண்டர் படையும் வெள்ளயில் பள்ச்சிட்டது. தெருவெங்கும் 'வினைல் போர்டின் போஸ்டரில் அவருடைய வாழ்த்துபாடல் இடம்பெற்றது. எதிர்கட்சியின் முக்கிய உரிப்பினர், தன் பேச்சால் அளும்கட்சியை பெயர்த்து விடுவார்.





நாட்டின் பாதுகாப்பின்மை மற்றும் பள்ளி,கல்லுரி மாணவர்கள் போதைக்கு அடிமையாய் இருக்கிறார்கள், இதை தடுக்காத,கண்டுகொள்ளாத ஆளும்கட்சியை எதிர்த்து இன்று கடற்கரையில் நடக்கும் மாநாட்டில் பேசபோகிறார். முன்னுரை இது போதும் வீட்டினுல் சென்று செல்வேந்திரனை சந்திப்போம்.



பெயரைப் போலவே வீடும் செல்வத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தொண்டர்களையும்,தொகுதி மக்களையும் சந்திக்கவும் வீட்டின் முன் கட்டிலேயே அலுவலகம் வைத்துள்ளர்.அதை தாண்டி சென்றால் பெரிய ஹால். மேற்கூரை இல்லாமல் நேராக முதல்மாடி தெரியும்படி உள்ளது. அதோ வருகிறாறே அவர் தான் 'செல்வேந்திரன்.





'நாட்டமை' படம் போல் எங்கே சென்றாலும் மனைவி எதிரே தண்ணீர் செம்புடன் வரவெண்டும்.( 5 வேலையாட்கள் இருந்தும்). கொஞ்சம் அவரை அடையாளம் காட்டிவிடலாம், தாய், தந்தைக்கு ஒரே மகன் ( ஒரு தங்கையும் உண்டு கனவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் ). பதினைந்து வயதிலேயே பள்ளியில் பேச்சுபோட்டியில் அசத்தியவர், என்ன காரணமோ இன்று அரசியலில். நாற்பத்தியோரு வயதிலேயே முன்னால் கொஞ்சம் முடியை காணோம். சிறிய, கூர்மையான கண்கள், இரண்டு ஓட்டையுடன் ஒரு மூக்கு, முப்பத்திரெண்டு பற்களுடன் ஒரு வாய் ( இது கொஞ்சம் அதிகம் தான் இல்ல )

ஒன்றரை நாடி உடம்பு, பட்டை போட்டுக்கொண்டால் பழம் என்று நினைத்துவிடுவார்களோ என்று சிறிது விபூதி மட்டும் இட்டுக்கொண்டு தரையை

பெருக்கும் வேஷ்டியோடு படிகளில் இறங்கி வருகிறார்.



" என்னங்க ".



" சொல்லும்மா மீனாட்சி "



( அறிமுகபடுத்தாதற்க்கு மன்னிக்கனும் ' மீனாட்சி ' அவருடைய மனைவி )



"மீட்டிங் முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடுங்க இன்னிக்கு என்ன நாள் தெரியுமில்லே" - என்றாள் மீனாட்சி.



பையனோட பொறந்த நாள் தானே வந்துடறேன். ஆமா கணேஷ் எழுந்துட்டானா?



( கணேஷ் அவரது மகன் )



"இன்னும் இல்லிங்க, இன்னிக்கு காலேஜ் லீவு தானே அதான் இன்னும் தூங்குறான்".



"சரி வந்துடறேன்", என்று மனைவியிடம் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வெளியேறினார் செல்வேந்திரன்.



அவர் சென்று பத்து நிமிடம் கழித்து கணேஷ் மீனாட்சியிடம் சென்றான்.



"ஹாய் அம்மா"



"கணேஷ் எப்ப எழுந்த, எங்க டிரஸ் மாட்டிக்கிட்டு கிளம்பிட்ட?" - என்று ஆச்சரியப்பட்டாள் மீனாட்சி.



கணேஷ் 5 அடி 3 அங்குலம் (அல்லது 6 அங்குலம்) உயரம். கருவிழி ஓர் இடத்தில் நிற்காத பார்வை. ' அப்பா ' சம்பாதிப்பதை ' தப்பா ' செலவு செய்கிற ரகம், ஆனால் வீட்டில் இருபத்தியொரு வயது செல்வேந்திரனை பொலவே இருந்தான்.



"அம்மா எனக்கு அவசரமா இரண்டாயிரம் வேணும்".



"எதுக்கு?" என்று கேட்காமல் கொடுத்துவிடுவாள் என்று தெரியும்.



திருமதி செல்வேந்திரன் கொடுத்து விட்டாள்.



மாலை ஐந்து மணி, கடற்கரை.



புதுப்பெண் பள்ளியறை செல்லும் போது கன்னம் சிவப்பதுபோல், உடம்பெங்கும் சிவந்து உயர்ந்த கட்டிடங்களின் மறைவில் இருந்தது சூரியன். கணவன் அணைப்பதுபோல் இருல் இன்னும் சிறிது நேரத்தில் அணைத்துவிடும். போர் வீரர்கள் எதிரிகல் தாக்காமல் இருக்க காவல்காப்பது போல் கடற்கரை சாலை விளக்குகளும், கலங்கரை விளக்கும் இப்பொதே தனது பணியை தொடங்கி விட்டன.



அங்கங்கே மக்கள் அலை அலையாய் அலையை நோக்கி சென்றார்கள். காதலர்கள் உலகத்தில் தாங்கள் மட்டும் தான் இருக்கிறோமென்று எண்ணி சந்தோஷமாக இருந்தார்கள். கடற்கரையில் ஓரிடத்தில் மட்டும் தற்காலிகமாக மேடை அமைத்து, பந்தலிட்டு, நாற்காலி அமைத்து, சுற்றி போலிஸாரின் கண்காணிப்பில் தடபுடலாய் இருந்தது.



வெள்ளை வேட்டி சட்டையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து பலர் மேடையிலும், நாற்காலியிலும் அமர்ந்திருந்தனர். வரிசையாய் மூன்று கார்கள் வந்து நின்றன. முதல் காரில்ருந்து ஒற்றை நாடியுடன் ஒருவர் இறங்கி காரின் பின்புற கதவை திறந்து விட்டார் ( ஒற்றை நாடி P.A ). காரில் இருந்து இறங்கினார் செல்வேந்திரன். கையில் இருந்த கோப்பை (file) அவரிடம் நீட்டினார்.



"என்ன குருசாமி யார் இதை ரெடி பண்ணது?" - செல்வேந்திரன்



"எல்லாம் நம்ம ராகவன் தான் சார், ரெண்டு நாள்ள ரெடி பண்ணியிருக்கான், எப்ப சவுண்டா பேசணும் எப்ப பொறுமையா பேசணும் எல்லாம் அவரே இதுல நோட் பண்ணியிருக்கார்" - என்றார் பி.ஏ.



அவரே தொடர்ந்து, "எப்பவும் நீங்க கடைசியில பேசினாத்தான் மக்கள் இருந்து கேட்டுட்டு போவாங்க, அதனால இன்னிக்கும் நீங்க கடைசிதான். அப்பப்ப நோட்ஸ் எடுக்கிற மாதிரி பாவ்லா காட்டுங்க போதும்".



( இப்படித்தான் பல பேச்சாளர்கள் இருக்காங்க போல )



செல்வேந்திரன் மேடைக்கு சென்றார். மேடையில் இருந்தவர்கள் இவருக்கும் இவர் மேடையில் இருந்தவர்களுக்கும் வணக்கம் செலுத்திவிட்டு அமர்ந்தனர்.



நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் மைக்கின் முன்னால் வந்து நின்று வாழ்த்துரை கூற ஆரம்பித்தார்.



இங்கு வந்திருக்கும் பெரியோர்களே! தாய்மார்களே! என்று ஆரம்பித்து சரியாக இருபத்தி ஐந்து பேரின் பெயர்களை சொல்லி அவர்களே அவர்களே ( வெற்றி அவர்களே, சுந்தரம் அவர்களே ) என்று கூறி முடித்து "நாட்டின் இன்றைய நிலை குறித்து பேச ஒவ்வொருவராய் அழைத்தார், எல்லோரும் பேசி முடித்த பின் கடைசியில் மறவாமல் நன்றி கூறினார்.



"அடுத்ததாக பேச வருபவர் நம் கட்சியின் செயல் பீரங்கி, சொல்லின் வேந்தன், திரு.செல்வேந்திரன் சட்டசபை உறுப்பினர் அவர்களை பேச வருமாறு அழைக்கிறேன்". அவர் கூறியதிலிருந்து செல்வேந்திரன் மைக் முன்பு வந்து நிற்கும் வரை மக்கள் கைத்தட்டலில் கடற்கரை அதிர்ந்தது.



இங்கே கூடியிருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே அனைவருக்கும் என் வணக்கத்தினை தெரிவித்துகொள்கிறேன் (கைதட்டல்). இங்கே அமர்ந்திருக்கும் அனைவரின் முகத்தைப் பார்க்கும் போதும், மக்கள் கூட்டத்தை பார்க்கும் போதும் வரும் தேர்தலில் நமது கட்சிதான் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை வறருகிறது. கடற்கரையில் உள்ள மணலை கூட எண்ணிவிடலாம் ஆனால் அளும் கட்சியினர் செய்யும் அராஜகமும் அட்டுழியமும் எண்ண முடியாதவையாக இருக்கின்றன. தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதிலிருந்து ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது வரை எல்லாம் ஆளுங்கட்சியின் அராஜகம். எழுத படிக்க தெரியாதவர்கள், இன்னும் ஒரு வாரத்தில் இறந்துவிடும் நிலையில் உள்ளவர்கள் எல்லாம் ஆட்ச்யில் இருந்தால் நாட்டை யார் காப்பாற்றுவார்கள்.



நம் நாட்டின் இளைஞர்கள் பற்றி கூற வேண்டும், இளைஞர்கள் புத்திசாலிகள், மிக்க திறமைசாலிகள் என்று எல்லோரும் கூறிக்கொண்டு இருக்கிறோம். தற்போதைய கணக்கின் படி 7.5 கோடி மக்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர் நம் நாட்டில். இதில் 5.3 கோடி பேர் இளைஞர்கள் அதுவும் 15 முதல் 28 வயது வரை உள்ளவர்கள்.



பள்ளியறை சென்ற சூரியனின் குழந்தையாய் வானத்தில் வெள்ளை நிற முழு நிலா பிறக்க, கடற்கரையின் ஒரு ஓரத்தில் செல்வேந்திரன் உச்சபட்ட டெஸிபலில் எதிர்கட்சியை கிழி...கிழி... என்று கிழிக்க. இங்கே.



"என்ன மச்சான் எப்ப வருவான் பாபு?" என்றான் கணேஷ். அலுத்துக்கொண்டே



"இரு அவன் என்ன ஸ்வீட் பொட்டலமா எடுத்துட்டு வரான்?" என்றான் அவன் நண்பன்.



சிறிது நேரத்தில் 25 - 30 வயதுக்குள் இடைப்பட்ட வயதுடைய ஒருவன் வர.



"என்ன பாபு என்ன ஆச்சு ஏன் இவ்வளவு லேட்?" எனறான் கணேஷின் நண்பன்.



பாபு, "என்ன தெரஞ்சுக்கிட்டே கேக்கிறே? பார்த்தல்ல எவ்வளவு போலிஸ் புடிச்சான் செத்தேன்".



"சரி, சரி, மேட்டரைக் கொடு".



"பணம்".



"எத்தனை நாள் வாங்குறோம் நம்பமாட்டியே, சரி எவ்வளவு?"



"ஆயிரத்து ஐநூறு".



"ரொம்ப அதிகம், இந்தா" என்று பணத்தை கொடுத்தான்.



"வெளியே கொடுத்தா ஆறாயிரம் கம்மியா வாங்குனதில்லே. தெரிஞ்ச கஸ்டமர்ன்னு இந்த ரேட்டு", பாபு.



சிறிய பை போன்ற பொருள் கைமாறப்பட்டது. அதை வாங்கிக்கொண்டு கணேஷும், முருகனும் கடலும் கூவம் நதியும் சேரும் இடம் நோக்கி சென்றார்கள்.



முருகன், என்னடா உங்க அப்பாவுக்கு வேற வேலையே இல்லையா? இப்படி கத்துறாரு?".



"நமக்கு இது வேலை மாதிரி அவருக்கு அது வேலை" - என்றான் கணேஷ்.



உயர்ந்த கற்களுக்கிடையே இருவரும் தங்களை மறைத்துக்கொண்டனர், கையில் இருக்கும் பையை பிரித்தனர், அதில், சின்ன பாலித்தின் பாக்கெட்டில் புகையிலை இலை போன்ற பொருள், சர்க்கரை போல ஒரு பாக்கெட், இரண்டு சிகரெட் பாக்கெட், ஷாம்பு பாட்டில், ஒட்டும் திரவம் ஒரு டியூப் இருந்தது.



சிகரெட்டை எடுத்து அதில் உள்ள புகையிலையை வெளியே எடுத்து போட்டனர். பாலித்தின் பையில் உள்ள புகையிலை போன்ற வேறு ஏதோ பொருளை எடுத்து அதில் அடைத்து பற்ற வைத்தனர். மூக்கையும் வாயையும் மூடி ஒரு இழு உடலில் சிறகு முளைக்க தொடங்கியது. காலி பாலித்தின் பையில் ஷாம்பு போன்ற திரவத்தையும் ஒட்டும் திரவத்தையும் ஊற்றினான் அதை மாவை பிசைவதுபோல் கசக்கு கசக்கு என்று கசக்கி அதை அப்படியே மூக்கில் வைத்து ஒரு இழுப்பு பூமி அவர்கள் காலை விட்டு நழுவியது.



"மச்சான் பொறந்த நாளுக்கு இப்படி ஒரு ட்ரீட்டா தேங்க்ஸ் டா" - அவன் நண்பன்.



"பேசாதே, பூமிய விட்டு பரந்து போறேன்" - என்றான் கணேஷ்.



டி.வி யில ஒரு பையன் பேட்டி கொடுக்கிறான், "எங்களுக்கு அதிகமா பணம் கெடைக்கிறதில்ல அதனால சீப்பா இருக்கிறத வெச்சி போதை ஏத்திக்கிறோம்" நல்லா படிச்சவன் வெளி நாட்டில வேலை பார்த்துக்குனு அங்கேயே போய் செட்டில் ஆயிடுறாங்க, படிக்காம இருக்குறவங்க இப்படி ஆயிடறாங்க. ஆயிரம் இளைஞர்களை எனக்கு கொடுங்க இந்த நாட்டையே மாத்துறேன்னு விவேகானந்தர் சொன்னாரு, இப்ப இந்த இளைஞர்கள மாத்த ஆயிரம் விவேகானந்தர் வேணும். சேரி, இவங்க தான் இப்படினா இவங்கள பெத்தவங்களாவது பிள்ளைகளை சரியா வளக்குறாங்கலா...................................என்று ஹை டெஸிபலில் பேசிக்கொண்டிருக்க.



எதையோ நினைத்து சிரித்துக்கொண்டிருந்தான் கணேஷ்.

--------------- X --------------- X --------------- X --------------- X --------------- X --------------- X ---------------

- செ.ஜெபராஜ்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக