புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 11:51 pm
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Yesterday at 9:52 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 12:32 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:55 am
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:54 am
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 am
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:50 am
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:43 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:40 am
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 10:42 am
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 10:42 am
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:04 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:03 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:15 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed Mar 27, 2024 11:52 pm
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 5:56 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 1:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 8:29 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 8:56 pm
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:04 am
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:56 am
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:50 am
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:48 am
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:46 am
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:44 am
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:38 am
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:35 am
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:34 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 5:56 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 3:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 10:59 am
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 10:55 am
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:39 am
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:32 am
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:29 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:20 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:42 pm
by bala_t Yesterday at 11:51 pm
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Yesterday at 9:52 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 12:32 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:55 am
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:54 am
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 am
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:50 am
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:43 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:40 am
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 10:42 am
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 10:42 am
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:04 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:03 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:15 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:38 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:54 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed Mar 27, 2024 11:52 pm
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 5:56 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 1:13 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 8:29 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sun Mar 24, 2024 8:56 pm
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 7:04 am
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:56 am
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:50 am
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:48 am
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:46 am
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:44 am
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:38 am
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:35 am
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 6:34 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 5:56 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 3:47 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 10:59 am
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 10:55 am
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:39 am
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:32 am
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:29 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 6:20 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூதுரை
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
கடவுள் வாழ்த்து
1.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
2.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால அந்நன்றி
என்று தருங்கோல் எனவேண்டா -நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
3.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
4.
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.
5.
அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் - கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
6.
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா .
7.
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.
8.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம் .
9.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.
10.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.
11.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
12.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.
13.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.
14.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.
15.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.
16.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.
17.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
18.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
19.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.
20.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.
21.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.
22.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.
23.
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.
24.
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்.
25.
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.
26.
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
27.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.
28.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.
29.
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.
30.
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம்.
31.
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
மூதுரை
[You must be registered and logged in to see this image.]
கடவுள் வாழ்த்து
1.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
2.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால அந்நன்றி
என்று தருங்கோல் எனவேண்டா -நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.
3.
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
4.
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் - இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.
5.
அட்டாலும் பால்சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் - கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
6.
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா .
7.
உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.
8.
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம் .
9.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.
10.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.
11.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
12.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.
13.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.
14.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.
15.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.
16.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.
17.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
18.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
19.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.
20.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.
21.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.
22.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.
23.
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.
24.
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்.
25.
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.
26.
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
27.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.
28.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.
29.
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடாது ஆதலால் - தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.
30.
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை
ஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து
போம்போ(து) அவளோடு (ம்) போம்.
31.
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
10.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.
பொருள் விளக்கம்
தீயச் செயல்களைச் செய்பவர்களை காண்பது தீமையை தரும். இனிய சொல் இல்லாத கடுமையான சொற்களை கூறும் தீயோர் சொல் கேட்பதும் தீமையை தரும். தீயாரைப் பற்றி பேசுவதும், அவரோடு இணைந்து இருப்பதும் தீமையை தரும்.
11.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
பொருள் விளக்கம்
உலகத்தில் உள்ள மக்களின் பசியார உதவும் நெல்லுக்கு இரைக்கும் நீர், வாய்க்கால் வழியாக ஓடி பயன் தராத புல்லுக்கும் பாயும், அதுபோல் இந்த பழமையான உலகத்தில் நல்ல செயல்கள் செய்யும் ஒருவர் உள்ளவரை அவருக்காக அனைவருக்கும் மழை பெய்யும்.
12.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.
பொருள் விளக்கம்
உமி நீங்கி செடியாக முளைப்பது அரிசியே ஆனாலும், அந்த அரிசி, உமியுடன் சேர்ந்த நெல்லாக விதைத்தால் தான் முளைக்கும். அதுபோல் எத்தனை ஆற்றல் உடையவருக்கும் தக்க துணை இருந்தால் தான் எடுத்த காரியம் நடைபெறும்.
13.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.
பொருள் விளக்கம்
கற்றாழை மடல்கள் மிகவும் பெரியது, ஆனால் மணம் வீசாது. ஆனால் தாழம்புவின் மடல்கள் சிறியதாக இருந்தாலும் மிகுந்த மணத்துடன் மணம் வீசும். கடல் பெரியது, ஆனால் ஒருவரின் தாகத்தை தீர்க்க உதவாது, அதன் அருகில் இருக்கும் சிறிய ஊற்று நீர் மக்களின் தாகத்தை தீர்க்க உதவும். ஆதலால் உருவத்தை கொண்டு, அவர்கள் இருக்கும் வசதி வாய்ப்பை வைத்து ஒருவரை எடை போடக்கூடாது. எளிமையாக இருக்கும் ஒருவர் நமக்கு செய்யும் உதவி போல் பெரியவர்கள் செய்யமாட்டார்கள்.
14.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.
பொருள் விளக்கம்
இலை கிளைகளுடன் நீண்டு உயர்ந்து காட்டில் வளர்ந்த மரங்கள், மரங்கள் ஆகாது. தேவையான நூல்களை கற்காமல் படித்தவர்கள் சபையில் அவர்கள் பேசும் விஷயத்தை புரிந்து கொள்ளாமல் மரம் போல் நிற்கும் மனிதன் தான் சிறந்த மரம்.
தொடரும்......
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.
பொருள் விளக்கம்
தீயச் செயல்களைச் செய்பவர்களை காண்பது தீமையை தரும். இனிய சொல் இல்லாத கடுமையான சொற்களை கூறும் தீயோர் சொல் கேட்பதும் தீமையை தரும். தீயாரைப் பற்றி பேசுவதும், அவரோடு இணைந்து இருப்பதும் தீமையை தரும்.
11.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
பொருள் விளக்கம்
உலகத்தில் உள்ள மக்களின் பசியார உதவும் நெல்லுக்கு இரைக்கும் நீர், வாய்க்கால் வழியாக ஓடி பயன் தராத புல்லுக்கும் பாயும், அதுபோல் இந்த பழமையான உலகத்தில் நல்ல செயல்கள் செய்யும் ஒருவர் உள்ளவரை அவருக்காக அனைவருக்கும் மழை பெய்யும்.
12.
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.
பொருள் விளக்கம்
உமி நீங்கி செடியாக முளைப்பது அரிசியே ஆனாலும், அந்த அரிசி, உமியுடன் சேர்ந்த நெல்லாக விதைத்தால் தான் முளைக்கும். அதுபோல் எத்தனை ஆற்றல் உடையவருக்கும் தக்க துணை இருந்தால் தான் எடுத்த காரியம் நடைபெறும்.
13.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீ ருமாகி விடும்.
பொருள் விளக்கம்
கற்றாழை மடல்கள் மிகவும் பெரியது, ஆனால் மணம் வீசாது. ஆனால் தாழம்புவின் மடல்கள் சிறியதாக இருந்தாலும் மிகுந்த மணத்துடன் மணம் வீசும். கடல் பெரியது, ஆனால் ஒருவரின் தாகத்தை தீர்க்க உதவாது, அதன் அருகில் இருக்கும் சிறிய ஊற்று நீர் மக்களின் தாகத்தை தீர்க்க உதவும். ஆதலால் உருவத்தை கொண்டு, அவர்கள் இருக்கும் வசதி வாய்ப்பை வைத்து ஒருவரை எடை போடக்கூடாது. எளிமையாக இருக்கும் ஒருவர் நமக்கு செய்யும் உதவி போல் பெரியவர்கள் செய்யமாட்டார்கள்.
14.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே
நீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.
பொருள் விளக்கம்
இலை கிளைகளுடன் நீண்டு உயர்ந்து காட்டில் வளர்ந்த மரங்கள், மரங்கள் ஆகாது. தேவையான நூல்களை கற்காமல் படித்தவர்கள் சபையில் அவர்கள் பேசும் விஷயத்தை புரிந்து கொள்ளாமல் மரம் போல் நிற்கும் மனிதன் தான் சிறந்த மரம்.
தொடரும்......
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஆதிரா அவர்களுக்கும் பொருள் விளக்கம் அளித்த சதாசிவம் அவர்களுக்கும் எம் நன்றி உரித்தாகுக .
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Sundararaj Thayalan wrote:ஆதிரா அவர்களுக்கும் பொருள் விளக்கம் அளித்த சதாசிவம் அவர்களுக்கும் எம் நன்றி உரித்தாகுக .
நன்றி ஐயா
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
15.
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.
பொருள் விளக்கம்
அழகான மயில் ஆடுவதை பார்த்து, வான்கோழியும் தன்னை மயில் போல் பாவித்து தன் சிறிய சிறகுகளை விரித்து ஆடும். அது போல் தான் திறமை இல்லாதவன் திறமை இருப்பது போல் நடிப்பது, கல்வி கற்காதவன் சொல்லும் கவி எப்படி இருக்குமே அது போல் இருக்கும்.
16.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.
பொருள் விளக்கம்
புலிக்கு இரக்கப்பட்டு அதன் காயத்திற்கு மருந்து போட்டால், அது குணம் ஆன உடன் மருந்து போட்ட மருத்துவனை தின்னப் போகும், அது போல் தான், முட்டாளுக்கு நாம் செய்யும் உபகாரம், அவர்கள் நம்மிடமே கற்று நன்றி இல்லாமல் நமக்கு பகை ஆவார்கள். அவர்களுக்கு செய்யும் உதவி கல்லின் மேல் வேகமாக பானை வைத்தால், பானை உடைந்து விடுவதைப் போல் வீணாக போகும்.
17.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
பொருள் விளக்கம்
ஒருவர் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பதால் அவரை நாம் முட்டாள் என்று எண்ணக் கூடாது. குளத்தில் சிறிய மீன்களை விட்டு விட்டு பெரிய மீனுக்காக காத்திருக்கும் கொக்கைப் போல் அவர்கள் வேண்டிய நேரத்தில் அவர்களின் திறமையை நிரூபிப்பார்.
18.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
பொருள் விளக்கம்
குளத்தில் நீர் இருக்கும் போது தான் அதில் பலன் பெரும் கொக்கு, நாரை அதன் அருகில் இருக்கும். அந்த குளத்தில் நீர் வற்றி விட்டால் அது நீர் உள்ள குளத்தை நோக்கி பறந்து சென்று விடும். ஆனால் அந்த குளம் வற்றி போனாலும் அங்கு இருந்த ஆம்பல், தாமரை போன்ற செடிகள் அங்கு இருந்து, மழை பெய்த பின்பு குளத்துடன் தழைத்து வளரும். அது போல் நமக்கு வறுமை, பிரச்சனை வந்தவுடன் நம்மை விட்டு விலகி விடுபவர்கள் நமக்கு உறவினர், நண்பர்கள் இல்லை. கஷ்டம் வந்த காலத்தில் நம்முடன் இருப்பவரே சிறந்த உறவினர் /நண்பர்.
19.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.
பொருள் விளக்கம்
தங்கத்தால் செய்யப்பட்ட குடம் உடைந்தால் அது திரும்ப குடமாக செய்து விடலாம், அதன் மதிப்பு மாறாது, அது போல் நல்ல குணம் உடையவர்கள் வறுமை வந்தாலும், தங்களுக்கு கஷ்டம் வந்தாலும், தங்களின் குணம் இழக்க மாட்டார்கள், அவர்களின் மதிப்பு மாறாது. ஆனால் தீய குணம் உடைய சிறியவர்கள், மண்ணால் செய்யப்பட்ட குடத்தை போன்றவர்கள், ஒரு முறை உடைந்தால் ஒட்ட முடியாது. அவர்களின் குணம் காலத்திற்கு தகுந்தது போல் மாறும்.
20.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.
பொருள் விளக்கம்
நடுக்கடலில் ஆழமான பகுதில் சென்று ஒரு பாத்திரத்தை நன்றாக மூழ்கி நீரை எடுத்தாலும், பாத்திரத்தின் அளவே தான் நீரை அள்ள முடியும், மிகப் பெரிய அளவில் நீர் இருந்தாலும் நாம் விரும்பும் அளவு நீரை அள்ள முடியாது. அது போல் தான் ஒரு பெண்ணுக்கு பணம், கணவன் நல்லபடியாக அமைந்தாலும் என்ன அனுபவிக்க வேண்டுமோ அதை மட்டும் தான் அனுபவிக்க முடியும்.
21.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.
பொருள் விளக்கம்
நம்முடன் பிறந்தோர் மட்டுமே உதவி செய்வார் என்று எண்ணக்கூடாது. நம்மை துன்புறுத்தும் வியாதி நாம் பிறக்கும் போது நம் கூடத் தான் பிறக்கிறது. ஆனால் அதைக் குணமாக்கும் மருந்து எங்கோ ஒரு மலையில் இருந்து கிடைக்கிறது. அது போல் எங்கோ இருந்து வரும் நண்பர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.[b]
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.
பொருள் விளக்கம்
அழகான மயில் ஆடுவதை பார்த்து, வான்கோழியும் தன்னை மயில் போல் பாவித்து தன் சிறிய சிறகுகளை விரித்து ஆடும். அது போல் தான் திறமை இல்லாதவன் திறமை இருப்பது போல் நடிப்பது, கல்வி கற்காதவன் சொல்லும் கவி எப்படி இருக்குமே அது போல் இருக்கும்.
16.
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.
பொருள் விளக்கம்
புலிக்கு இரக்கப்பட்டு அதன் காயத்திற்கு மருந்து போட்டால், அது குணம் ஆன உடன் மருந்து போட்ட மருத்துவனை தின்னப் போகும், அது போல் தான், முட்டாளுக்கு நாம் செய்யும் உபகாரம், அவர்கள் நம்மிடமே கற்று நன்றி இல்லாமல் நமக்கு பகை ஆவார்கள். அவர்களுக்கு செய்யும் உதவி கல்லின் மேல் வேகமாக பானை வைத்தால், பானை உடைந்து விடுவதைப் போல் வீணாக போகும்.
17.
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
பொருள் விளக்கம்
ஒருவர் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பதால் அவரை நாம் முட்டாள் என்று எண்ணக் கூடாது. குளத்தில் சிறிய மீன்களை விட்டு விட்டு பெரிய மீனுக்காக காத்திருக்கும் கொக்கைப் போல் அவர்கள் வேண்டிய நேரத்தில் அவர்களின் திறமையை நிரூபிப்பார்.
18.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.
பொருள் விளக்கம்
குளத்தில் நீர் இருக்கும் போது தான் அதில் பலன் பெரும் கொக்கு, நாரை அதன் அருகில் இருக்கும். அந்த குளத்தில் நீர் வற்றி விட்டால் அது நீர் உள்ள குளத்தை நோக்கி பறந்து சென்று விடும். ஆனால் அந்த குளம் வற்றி போனாலும் அங்கு இருந்த ஆம்பல், தாமரை போன்ற செடிகள் அங்கு இருந்து, மழை பெய்த பின்பு குளத்துடன் தழைத்து வளரும். அது போல் நமக்கு வறுமை, பிரச்சனை வந்தவுடன் நம்மை விட்டு விலகி விடுபவர்கள் நமக்கு உறவினர், நண்பர்கள் இல்லை. கஷ்டம் வந்த காலத்தில் நம்முடன் இருப்பவரே சிறந்த உறவினர் /நண்பர்.
19.
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டாலங் கென்னாகும்? - சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால்.
பொருள் விளக்கம்
தங்கத்தால் செய்யப்பட்ட குடம் உடைந்தால் அது திரும்ப குடமாக செய்து விடலாம், அதன் மதிப்பு மாறாது, அது போல் நல்ல குணம் உடையவர்கள் வறுமை வந்தாலும், தங்களுக்கு கஷ்டம் வந்தாலும், தங்களின் குணம் இழக்க மாட்டார்கள், அவர்களின் மதிப்பு மாறாது. ஆனால் தீய குணம் உடைய சிறியவர்கள், மண்ணால் செய்யப்பட்ட குடத்தை போன்றவர்கள், ஒரு முறை உடைந்தால் ஒட்ட முடியாது. அவர்களின் குணம் காலத்திற்கு தகுந்தது போல் மாறும்.
20.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி - தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.
பொருள் விளக்கம்
நடுக்கடலில் ஆழமான பகுதில் சென்று ஒரு பாத்திரத்தை நன்றாக மூழ்கி நீரை எடுத்தாலும், பாத்திரத்தின் அளவே தான் நீரை அள்ள முடியும், மிகப் பெரிய அளவில் நீர் இருந்தாலும் நாம் விரும்பும் அளவு நீரை அள்ள முடியாது. அது போல் தான் ஒரு பெண்ணுக்கு பணம், கணவன் நல்லபடியாக அமைந்தாலும் என்ன அனுபவிக்க வேண்டுமோ அதை மட்டும் தான் அனுபவிக்க முடியும்.
21.
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.
பொருள் விளக்கம்
நம்முடன் பிறந்தோர் மட்டுமே உதவி செய்வார் என்று எண்ணக்கூடாது. நம்மை துன்புறுத்தும் வியாதி நாம் பிறக்கும் போது நம் கூடத் தான் பிறக்கிறது. ஆனால் அதைக் குணமாக்கும் மருந்து எங்கோ ஒரு மலையில் இருந்து கிடைக்கிறது. அது போல் எங்கோ இருந்து வரும் நண்பர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.[b]
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அனைத்துமே அருமையான விளக்கங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பள்ளி கூடத்துல படிக்கும்போது கூட இத்தனை ஆர்வமாக படித்ததில்லை.அப்போது தமிழ் என்ற பாடத்தை பாஸ் செய்ய உதவும் என்றுதான் படித்தேனே தவிர அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை.இப்பதான் சதாசிவம் சார் நான் முழுசா படிக்கிறேன்.
அத்தனை விளக்கமும் அருமை.
அத்தனை விளக்கமும் அருமை.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
22.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.
பொருள் விளக்கம்
நல்ல மனைவி வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் இல்லாதது என்ற ஒன்று இல்லை. மனைவி துன்பம் செய்பவளாயின், வலியை ஏற்படுத்தும் கடுஞ்சொல் பேசுபவளாக இருப்பின் அந்த வீடு புலி வசிக்கும் குகைப்போல் மாறிவிடும் (அந்த வீட்டிற்கு யாரும் வர மாட்டார்கள்)
23.
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.
பொருள் விளக்கம்
நாம் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லையே என்று வருந்தும் மடைமை பொருந்திய நெஞ்சமே, எதை கேட்டாலும் கொடுக்கும் கற்பக மரத்தின் கீழே இருந்து பழம் கேட்டு, அது தின்ன முடியாத எட்டிக்காயை கொடுத்தால் அது யார் குற்றம், அனைத்தும் முன் பிறவியில் நாம் செய்த செயல்கள் மூலமே, நம் தலையில் எழுதி வைத்தபடி நடக்கிறது . ஆதலால் நன்மையை வேண்டின் நன்மையை செய்.
24.
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்.
பொருள் விளக்கம்
தீய குணம் உடைய கடைநிலை நண்பர்களோடு ஏற்படும் பிரிவு, கல் பிளந்ததுப் போல் மீண்டும் ஒட்டாது. இடைநிலை நண்பர்களிடம் ஏற்படும் பிரிவு ஒருவர் வலிய வந்து பேசினால் , பொன் பிளந்த பிறகு சூடாக்கினால் மீண்டும் ஒட்டுவதுப் போல் ஒட்டிக்கொள்ளும். ஆனால் மேண்மை குணம் உள்ள முதல் நிலை நண்பர்களிடம் ஏற்படும் பிரிவு ஓடும் நீரில் ஒரு அம்பை வைத்து ஒரு கோடு போட்டால், அது சில நொடிகளில் மறைந்து போவதைப்போல் உடனடியாக மறைந்து மீண்டும் இணைந்து விடும்.
25.
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.
பொருள் விளக்கம்
நல்ல தாமரை இருக்கும் குளத்தில் நல்ல அன்னம் வந்து சேரும், அது போல் கல்வி கற்றோரை கல்வி கற்றவர் மதித்து அவருடன் இணங்கி வாழ்வார்கள். ஆனால் பிணத்தை தேடிப் போய் தின்னும் காக்கைப்போல் மூர்க்க குணம் உடைய முட்டாள்கள் முட்டாள்களுடன் தான் சேர்ந்து வாழ்வார்கள்.
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.
பொருள் விளக்கம்
நல்ல மனைவி வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் இல்லாதது என்ற ஒன்று இல்லை. மனைவி துன்பம் செய்பவளாயின், வலியை ஏற்படுத்தும் கடுஞ்சொல் பேசுபவளாக இருப்பின் அந்த வீடு புலி வசிக்கும் குகைப்போல் மாறிவிடும் (அந்த வீட்டிற்கு யாரும் வர மாட்டார்கள்)
23.
எழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.
பொருள் விளக்கம்
நாம் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லையே என்று வருந்தும் மடைமை பொருந்திய நெஞ்சமே, எதை கேட்டாலும் கொடுக்கும் கற்பக மரத்தின் கீழே இருந்து பழம் கேட்டு, அது தின்ன முடியாத எட்டிக்காயை கொடுத்தால் அது யார் குற்றம், அனைத்தும் முன் பிறவியில் நாம் செய்த செயல்கள் மூலமே, நம் தலையில் எழுதி வைத்தபடி நடக்கிறது . ஆதலால் நன்மையை வேண்டின் நன்மையை செய்.
24.
கற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீர்ஒழுகு சான்றோர் சினம்.
பொருள் விளக்கம்
தீய குணம் உடைய கடைநிலை நண்பர்களோடு ஏற்படும் பிரிவு, கல் பிளந்ததுப் போல் மீண்டும் ஒட்டாது. இடைநிலை நண்பர்களிடம் ஏற்படும் பிரிவு ஒருவர் வலிய வந்து பேசினால் , பொன் பிளந்த பிறகு சூடாக்கினால் மீண்டும் ஒட்டுவதுப் போல் ஒட்டிக்கொள்ளும். ஆனால் மேண்மை குணம் உள்ள முதல் நிலை நண்பர்களிடம் ஏற்படும் பிரிவு ஓடும் நீரில் ஒரு அம்பை வைத்து ஒரு கோடு போட்டால், அது சில நொடிகளில் மறைந்து போவதைப்போல் உடனடியாக மறைந்து மீண்டும் இணைந்து விடும்.
25.
நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.
பொருள் விளக்கம்
நல்ல தாமரை இருக்கும் குளத்தில் நல்ல அன்னம் வந்து சேரும், அது போல் கல்வி கற்றோரை கல்வி கற்றவர் மதித்து அவருடன் இணங்கி வாழ்வார்கள். ஆனால் பிணத்தை தேடிப் போய் தின்னும் காக்கைப்போல் மூர்க்க குணம் உடைய முட்டாள்கள் முட்டாள்களுடன் தான் சேர்ந்து வாழ்வார்கள்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
தமிழ் நூலுக்கு இனை ஏதும் இல்லை
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
26.
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
பொருள் விளக்கம்
ஒருவர் நம்மிடம் பழகுவதை வைத்து அவர் நல்லவரா கெட்டவரா என்று நாம் கண்டறிய முடியும். பல்லில் விஷம் இல்லாத தண்ணீர் பாம்பு அனைவரும் உலவும் பகல் வேளையில் அங்கும் இங்கும் உலவும். அது நஞ்சு இல்லாதது என்று அறிந்த மக்கள் அதை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனால் பல்லில் விஷம் உள்ள நல்ல பாம்பு, மக்கள் நடமாடும் பகல் வேளையில் வெளியில் வராது, யாரும் இல்லாத இருட்டு வேளையில் தான் அது வெளிவரும். அது போல் நெஞ்சில் தவறு, குற்றம், களவு இல்லாதவர்கள் எப்போதும் வெளிப்படையாக பேசுவார்கள், அனைவரிடம் சகஜமாக பழகுவார்கள். அவர்களின் செயல்கள் அனைவருக்கும் தெளிவாக இருக்கும். ஆனால் மிகக்குறைவாக பேசுபவர்கள், அனைவரையும் தவிர்த்து ஒரு சிலரிடம் மட்டுமே பழுகுபவர்கள், தன் செயலை அடுத்தவருக்கு மறைத்து செய்பவர்கள் என்றும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை, ஒருவருக்கும் உண்மை ஆக மாட்டார்கள் அவர்கள் நெஞ்சில் வஞ்சம் நிறைந்து இருக்கும். இது போல் உள்ளவர்களிடம் நல்ல பாம்பை கண்டு நாம் விலகுவதைப் போல் விலகி இருக்க வேண்டும்.
27.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.
பொருள் விளக்கம்
ஒரு நாட்டை ஆளும் மன்னனையும் கல்வி கற்றவனையும் ஒப்பு நோக்கினால் (compare செய்தால்), மன்னனை விட கல்வி கற்றவனே சிறந்தவன், ஏனெனில் மன்னனுக்கு அவன் வாழும் நாட்டில் மட்டுமே சிறப்பு, ஆனால் கல்வி கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
28.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.
பொருள் விளக்கம்
கல்வி கற்காத மனிதர்களுக்கு கல்வி கற்றவர் சொல்லும் அறிவுரை எமனைப் போல் கொல்லும். தவறு செய்யும் கெட்ட மனிதர்களுக்கு அறம் எமனைப் போல் கொல்லும். மென்மையான வாழைக்கு அது ஈன்ற கன்று எமனைப் போல் கொல்லும், அது போல் இல்வாழ்க்கைக்கு ஒத்து வராத பெண் , வீட்டிற்கு எமனைப் போல் இருந்து அந்த வீட்டின் மகிழ்ச்சியை கொல்லுவாள்.
தொடரும் ......
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
பொருள் விளக்கம்
ஒருவர் நம்மிடம் பழகுவதை வைத்து அவர் நல்லவரா கெட்டவரா என்று நாம் கண்டறிய முடியும். பல்லில் விஷம் இல்லாத தண்ணீர் பாம்பு அனைவரும் உலவும் பகல் வேளையில் அங்கும் இங்கும் உலவும். அது நஞ்சு இல்லாதது என்று அறிந்த மக்கள் அதை ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஆனால் பல்லில் விஷம் உள்ள நல்ல பாம்பு, மக்கள் நடமாடும் பகல் வேளையில் வெளியில் வராது, யாரும் இல்லாத இருட்டு வேளையில் தான் அது வெளிவரும். அது போல் நெஞ்சில் தவறு, குற்றம், களவு இல்லாதவர்கள் எப்போதும் வெளிப்படையாக பேசுவார்கள், அனைவரிடம் சகஜமாக பழகுவார்கள். அவர்களின் செயல்கள் அனைவருக்கும் தெளிவாக இருக்கும். ஆனால் மிகக்குறைவாக பேசுபவர்கள், அனைவரையும் தவிர்த்து ஒரு சிலரிடம் மட்டுமே பழுகுபவர்கள், தன் செயலை அடுத்தவருக்கு மறைத்து செய்பவர்கள் என்றும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை, ஒருவருக்கும் உண்மை ஆக மாட்டார்கள் அவர்கள் நெஞ்சில் வஞ்சம் நிறைந்து இருக்கும். இது போல் உள்ளவர்களிடம் நல்ல பாம்பை கண்டு நாம் விலகுவதைப் போல் விலகி இருக்க வேண்டும்.
27.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.
பொருள் விளக்கம்
ஒரு நாட்டை ஆளும் மன்னனையும் கல்வி கற்றவனையும் ஒப்பு நோக்கினால் (compare செய்தால்), மன்னனை விட கல்வி கற்றவனே சிறந்தவன், ஏனெனில் மன்னனுக்கு அவன் வாழும் நாட்டில் மட்டுமே சிறப்பு, ஆனால் கல்வி கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
28.
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்
அல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே
இல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.
பொருள் விளக்கம்
கல்வி கற்காத மனிதர்களுக்கு கல்வி கற்றவர் சொல்லும் அறிவுரை எமனைப் போல் கொல்லும். தவறு செய்யும் கெட்ட மனிதர்களுக்கு அறம் எமனைப் போல் கொல்லும். மென்மையான வாழைக்கு அது ஈன்ற கன்று எமனைப் போல் கொல்லும், அது போல் இல்வாழ்க்கைக்கு ஒத்து வராத பெண் , வீட்டிற்கு எமனைப் போல் இருந்து அந்த வீட்டின் மகிழ்ச்சியை கொல்லுவாள்.
தொடரும் ......
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|