புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுப்புறப் பாடல்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
முன்னுரை
நாட்டுப்புறப் பாடல்கள் மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாட்டுப்புறப் பாடலைக் கேட்டு மயங்கும் சூழல் அமைந்துள்ளது. நாட்டுப்புறப் பாடலின் இன்ப இசை எல்லா மக்களாலும் வெகுவாகச் சுவைக்கப்படுகின்றது. பாரதியார் கூட,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாடுகின்றார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பியல்புகளை அறியும் வண்ணம் இப்பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்புற இலக்கியங்கள் பற்றிய முந்தைய பாடத்தில் பாடல்கள் உள்ளிட்ட அனைத்து வகை நாட்டுப்புற இலக்கியங்களின் தன்மைகள் பற்றிக் கூறப்பட்டது. நாட்டுப்புற இலக்கியத்தின் ஓர் அங்கமான நாட்டுப்புறப் பாடல்களுக்கும் அந்தத் தன்மைகள் அப்படியே பொருந்தும். இந்தப் பகுதியில் நாட்டுப்புறப் பாடல் பற்றிய வரையறைகள், அவற்றை வகைப்படுத்துதல், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் உத்திகள், தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பு ஆகியவை பற்றி விளக்கமாகக் காணலாம். தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், தொழிற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், இரத்தல் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் எனும் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.
நாட்டுப்புறப் பாடல் - வரையறைகள்
நாட்டுப்புறப் பாடல்கள் எவை என்பதை அவற்றைக் கேட்கும் போதோ படிக்கும் போதோ கண்டுபிடித்துச் சொல்லி விடலாம். எதைக் கொண்டு அவ்வாறு சொல்ல முடிகிறது? அவற்றின் தன்மைகள் கேட்டுப் படித்த அனுபவத்தில் உங்களுக்குள் பதிவாகியிருக்கின்றன. அவற்றின் வரையறைகளை விளக்கிச் சொல்ல முடியுமா? அறிஞர் பலர் நாட்டுப்புறப் பாடல்களுக்கான வரையறைகளைத் தெரிவித்துள்ளனர். அவற்றை இங்குக் காண்போம்.
நாட்டுப்புறப் பாடல்களை - நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் எனப் பலவாறு பெயரிட்டு அழைக்கின்றனர். (சு.சண்முக சுந்தரம், நாட்டுப்புறவியல், பக். 186)
"புலவர்களால் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் காப்பாற்றப்படுபவை இலக்கியங்கள். பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுப்புறப் பாடல்கள். இலக்கிய வரலாறு என்னும் கடலில் சங்கமம் ஆகும் ஆறுகளில் நாட்டுப்புறப் பாடல் என்னும் ஆறு ஒன்றாகும்" என்கிறார் ஆறு. அழகப்பன்.
நாட்டுப்புறப் பாடல் பற்றி விளக்கும்போது சு. சண்முக சுந்தரம் பின் வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார். " நாட்டுப்புறம் என்பது கிராமமும் கிராமீயம் சார்ந்த இடங்களும் ஆகும். இவ்விடங்களில் பாடப்பட்டு வருகின்ற பாடல்களை நாட்டுப்புறப் பாடல்கள் எனலாம். இப் பாடல்கள் எளியவை; இனியவை; எழுதப்படாதவை. வாயில் பிறந்து செவிகளில் உலவிக் காற்றில் மிதந்து கருத்தில் இனிப்பவை. இவை தனி உரிமை, உடைமை உள்ளவையல்ல. பொது உரிமையும், உடைமையும் கொண்டவை. என்று பிறந்தவை, எவரால் பிறந்தவை என எடுத்துச் சொல்ல இயலாத பண்பும் பாங்கும் இவற்றுக்கு உண்டு."
நாட்டுப்புறப் பாடல்களின் தன்மைகள் பற்றி அவர் மேலும் கூறுகிறார்.
"நாட்டுப்புறப் பாடல்களின் சொற்கள் எளியவை, எங்கும் தேடிப் பெறாதவை; அன்றாட வாழ்வில் புழங்குபவை; கொச்சையானவை. நாட்டுப்புறப் பாடல்களில் அடிகளைத் திரும்பப் பாடும் வழக்கம் உண்டு. இதனால் அவர்களுக்குச் சலிப்பு ஏற்படுவதில்லை. மாறாக, சொன்னதையே சொல்வதன் மூலம் அக்கருத்து வலுப் பெறுகிறது. கேட்கவும் இனிமை பயக்கிறது".
முன்னுரை
நாட்டுப்புறப் பாடல்கள் மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாட்டுப்புறப் பாடலைக் கேட்டு மயங்கும் சூழல் அமைந்துள்ளது. நாட்டுப்புறப் பாடலின் இன்ப இசை எல்லா மக்களாலும் வெகுவாகச் சுவைக்கப்படுகின்றது. பாரதியார் கூட,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும்
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்
நெஞ்சைப் பறிகொடுத்ததாகப் பாடுகின்றார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பியல்புகளை அறியும் வண்ணம் இப்பாடப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்புற இலக்கியங்கள் பற்றிய முந்தைய பாடத்தில் பாடல்கள் உள்ளிட்ட அனைத்து வகை நாட்டுப்புற இலக்கியங்களின் தன்மைகள் பற்றிக் கூறப்பட்டது. நாட்டுப்புற இலக்கியத்தின் ஓர் அங்கமான நாட்டுப்புறப் பாடல்களுக்கும் அந்தத் தன்மைகள் அப்படியே பொருந்தும். இந்தப் பகுதியில் நாட்டுப்புறப் பாடல் பற்றிய வரையறைகள், அவற்றை வகைப்படுத்துதல், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் உத்திகள், தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பு ஆகியவை பற்றி விளக்கமாகக் காணலாம். தாலாட்டுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், தொழிற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், இரத்தல் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் எனும் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.
நாட்டுப்புறப் பாடல் - வரையறைகள்
நாட்டுப்புறப் பாடல்கள் எவை என்பதை அவற்றைக் கேட்கும் போதோ படிக்கும் போதோ கண்டுபிடித்துச் சொல்லி விடலாம். எதைக் கொண்டு அவ்வாறு சொல்ல முடிகிறது? அவற்றின் தன்மைகள் கேட்டுப் படித்த அனுபவத்தில் உங்களுக்குள் பதிவாகியிருக்கின்றன. அவற்றின் வரையறைகளை விளக்கிச் சொல்ல முடியுமா? அறிஞர் பலர் நாட்டுப்புறப் பாடல்களுக்கான வரையறைகளைத் தெரிவித்துள்ளனர். அவற்றை இங்குக் காண்போம்.
நாட்டுப்புறப் பாடல்களை - நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் எனப் பலவாறு பெயரிட்டு அழைக்கின்றனர். (சு.சண்முக சுந்தரம், நாட்டுப்புறவியல், பக். 186)
"புலவர்களால் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் காப்பாற்றப்படுபவை இலக்கியங்கள். பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுப்புறப் பாடல்கள். இலக்கிய வரலாறு என்னும் கடலில் சங்கமம் ஆகும் ஆறுகளில் நாட்டுப்புறப் பாடல் என்னும் ஆறு ஒன்றாகும்" என்கிறார் ஆறு. அழகப்பன்.
நாட்டுப்புறப் பாடல் பற்றி விளக்கும்போது சு. சண்முக சுந்தரம் பின் வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார். " நாட்டுப்புறம் என்பது கிராமமும் கிராமீயம் சார்ந்த இடங்களும் ஆகும். இவ்விடங்களில் பாடப்பட்டு வருகின்ற பாடல்களை நாட்டுப்புறப் பாடல்கள் எனலாம். இப் பாடல்கள் எளியவை; இனியவை; எழுதப்படாதவை. வாயில் பிறந்து செவிகளில் உலவிக் காற்றில் மிதந்து கருத்தில் இனிப்பவை. இவை தனி உரிமை, உடைமை உள்ளவையல்ல. பொது உரிமையும், உடைமையும் கொண்டவை. என்று பிறந்தவை, எவரால் பிறந்தவை என எடுத்துச் சொல்ல இயலாத பண்பும் பாங்கும் இவற்றுக்கு உண்டு."
நாட்டுப்புறப் பாடல்களின் தன்மைகள் பற்றி அவர் மேலும் கூறுகிறார்.
"நாட்டுப்புறப் பாடல்களின் சொற்கள் எளியவை, எங்கும் தேடிப் பெறாதவை; அன்றாட வாழ்வில் புழங்குபவை; கொச்சையானவை. நாட்டுப்புறப் பாடல்களில் அடிகளைத் திரும்பப் பாடும் வழக்கம் உண்டு. இதனால் அவர்களுக்குச் சலிப்பு ஏற்படுவதில்லை. மாறாக, சொன்னதையே சொல்வதன் மூலம் அக்கருத்து வலுப் பெறுகிறது. கேட்கவும் இனிமை பயக்கிறது".
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
என்ற வழக்கு இத்தகைய கலைஞர்களையே சுட்டுகின்றது. இவர்களின் பாடல் "மாரடிப்பாடல்" என அழைக்கப்படுகின்றது. மாரடித்துப் பாடாமல் மேளம் அடித்துக் கொண்டு "கைலாசப் பாடல்" பாடும் கலைஞர்களைத் தமிழகத்தின் வட பகுதிகளில் காணலாம். இறந்தவர்களைக் "கைலாசம்" அனுப்புவதாகப் பாடல் அமையும். இவ்வகைப் பாடல்களும் உயிர் இழப்புப் பாடல்களே. இதற்குச் சான்றாகப் பின்வரும் பாடலைக் கூறலாம்.
தங்கத்த உருக்கியல்லோ - ஏ என் வீமசேனர
வில்லெடுக்கும் ராமரே இன்னைக்கு
தரையிலே ஊத்திவந்தேன்
தங்க(ம்) உருவுலியே - இன்னைக்கு
தங்கருந்து உருவுணுமே
பொன்ன உருக்கியல்லோ - ஏ பாளையப்பட்டே
என் பணமுகத்து வன்னியரே இன்னைக்கு
பூமியிலே ஊத்தி வந்தேன்
பொன்னு உருவுலியே - இன்னைக்கு
பொண்ணாருந்து உருவுணுமே
வேலிமே ஏ வெள்ளருகு - இன்னைக்கு
வெடிக்காத முல்லரும்பு
வெடிச்சி வெளிய வந்தா - இன்னைக்கு
வெசனங்க தோணாதே.
[ஆறு. இராமநாதன்
2001; தொகுதி 3; பக் - 247]
இந்தப் பாடல் இறந்தவரின் பெண் சார்பாக ஆட்டக்காரர்கள் பாடும் பாடல் ஆகும். இது பறை மேளமடித்துப் பாடப்படும் ‘உரைப்பாட்டு’ என்று கூறப்படும்.
(உருவுணுமே - உருக வேண்டுமே. பெண்ணே பாடுவதாக இருந்தால் ‘உருவுறனே’, ‘உருவுனனே’ என்று வந்திருக்கும். ஆட்டக்காரர்கள் பாடுவதால் இவ்வாறு வந்துள்ளது.)
நிலம், பணம் போன்ற பொருள் இழந்த நிலையிலும் மானத்துக்கு ஊறு நேர்ந்த நிலையிலும் குடும்பத்தின் அச்சாணி போன்றவர்களுக்குச் செயலற்ற நிலை வந்துற்ற நிலையிலும் வாழ்க்கையில் தங்களுக்கு இருக்கும் குறைகளால் துயருற்ற நிலையிலும் பெண்களால் தனித்துப் பாடப்படும் பாடல்களைப் பிற இழப்புப் பாடல்களாகக் கருதலாம். இவை பாடல் வடிவத்தால் ஒப்பாரியை ஒத்திருக்கும். இவற்றைப் ‘புலம்பல்’ என்றும் கூறலாம். புலம்பலாவது (துன்பம் வந்துற்ற போது அதனை நினைத்து) தனித்து வருந்துதல். இவ்வகைக்குச் சான்றாகப் பின்வரும் பாடலைக் கூறலாம்.
எட்டு ரூவா கொத்தமல்லி - என்னப் பெத்த அம்மாடி எனக்கு
எழப்பெழச்ச கோடாலி - இந்த ராச்சியத்த
எடுத்து செரா பொளக்க - எனக்கு வாய்ச்ச
இந்திரனும் நோவாளி
பத்துரூவா கொத்தமல்லி
பதுவச்ச கோடாலி - இந்த பழிகார சீமையிலே
பாத்து செரா பொளக்க - எனக்கு வாச்ச
பாண்டியனும் நோவாளி.
[இராமநாதன், ஆறு; 2001, தொகுதி - 3, பக். 255]
இந்தப் பாடல் கணவன் உடல்நலமற்று இருப்பதைச் சொல்லிப் புலம்பும் பாடல் ஆகும்.
தங்கத்த உருக்கியல்லோ - ஏ என் வீமசேனர
வில்லெடுக்கும் ராமரே இன்னைக்கு
தரையிலே ஊத்திவந்தேன்
தங்க(ம்) உருவுலியே - இன்னைக்கு
தங்கருந்து உருவுணுமே
பொன்ன உருக்கியல்லோ - ஏ பாளையப்பட்டே
என் பணமுகத்து வன்னியரே இன்னைக்கு
பூமியிலே ஊத்தி வந்தேன்
பொன்னு உருவுலியே - இன்னைக்கு
பொண்ணாருந்து உருவுணுமே
வேலிமே ஏ வெள்ளருகு - இன்னைக்கு
வெடிக்காத முல்லரும்பு
வெடிச்சி வெளிய வந்தா - இன்னைக்கு
வெசனங்க தோணாதே.
[ஆறு. இராமநாதன்
2001; தொகுதி 3; பக் - 247]
இந்தப் பாடல் இறந்தவரின் பெண் சார்பாக ஆட்டக்காரர்கள் பாடும் பாடல் ஆகும். இது பறை மேளமடித்துப் பாடப்படும் ‘உரைப்பாட்டு’ என்று கூறப்படும்.
(உருவுணுமே - உருக வேண்டுமே. பெண்ணே பாடுவதாக இருந்தால் ‘உருவுறனே’, ‘உருவுனனே’ என்று வந்திருக்கும். ஆட்டக்காரர்கள் பாடுவதால் இவ்வாறு வந்துள்ளது.)
நிலம், பணம் போன்ற பொருள் இழந்த நிலையிலும் மானத்துக்கு ஊறு நேர்ந்த நிலையிலும் குடும்பத்தின் அச்சாணி போன்றவர்களுக்குச் செயலற்ற நிலை வந்துற்ற நிலையிலும் வாழ்க்கையில் தங்களுக்கு இருக்கும் குறைகளால் துயருற்ற நிலையிலும் பெண்களால் தனித்துப் பாடப்படும் பாடல்களைப் பிற இழப்புப் பாடல்களாகக் கருதலாம். இவை பாடல் வடிவத்தால் ஒப்பாரியை ஒத்திருக்கும். இவற்றைப் ‘புலம்பல்’ என்றும் கூறலாம். புலம்பலாவது (துன்பம் வந்துற்ற போது அதனை நினைத்து) தனித்து வருந்துதல். இவ்வகைக்குச் சான்றாகப் பின்வரும் பாடலைக் கூறலாம்.
எட்டு ரூவா கொத்தமல்லி - என்னப் பெத்த அம்மாடி எனக்கு
எழப்பெழச்ச கோடாலி - இந்த ராச்சியத்த
எடுத்து செரா பொளக்க - எனக்கு வாய்ச்ச
இந்திரனும் நோவாளி
பத்துரூவா கொத்தமல்லி
பதுவச்ச கோடாலி - இந்த பழிகார சீமையிலே
பாத்து செரா பொளக்க - எனக்கு வாச்ச
பாண்டியனும் நோவாளி.
[இராமநாதன், ஆறு; 2001, தொகுதி - 3, பக். 255]
இந்தப் பாடல் கணவன் உடல்நலமற்று இருப்பதைச் சொல்லிப் புலம்பும் பாடல் ஆகும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நாட்டுப்புறப் பாடல் - பாடும் உத்திகள்
சில சூழ்நிலைகளில் நீண்ட நேரம் பாடல்களைத் தொடர்ந்து பாட நேர்கிறது. நாட்டுப்புறப் பாடகர்கள் சில எளிய உத்திகளைப் பின்பற்றுவதன் வாயிலாகத் தங்களின் நீண்ட நேரம் பாடும் தேவைகளை நிறைவு செய்து கொள்கிறார்கள். இங்கு இரு உத்திமுறைகளைக் காணலாம்.
நீண்ட பாடல்களை உருவாக்குதல்
தாலாட்டு, ஒப்பாரி, தொழிற் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள் முதலியவற்றைப் பாடும்போது பாடும் காலத் தேவைக்கு ஏற்றவாறு பாடலின் நீளத்தை நீட்டிக் கொள்ளவோ சுருக்கிக் கொள்ளவோ செய்கின்றனர். இதனை அப் பாடகர்கள் எவ்வாறு சாதிக்கின்றனர்?
"ஓர் அடிக்கருத்தைப் பலபட விரித்துரைத்தல் அல்லது சிலவாகச் சுருக்கியுரைத்தல் [Expansion Or Contraction] என்னும் முறையால் தாலாட்டுப் பாடல் கால அளவிற்குத் தக்கவாறு பாடப்படுகிறது" என்றும், "குறைவான கருத்து, ஒரு கருத்தை இரு பத்திகளில், முன் மாதிரி - நேர் பகர்ப்புப் பத்தியமைப்பில் அமைத்தல் என்னும் இவ்விரு முறைகளால் ஒப்பாரிப் பாடல் எளிதாக உருவாகிறது" என்றும் ஒப்பாரி, தாலாட்டு பற்றிய அமைப்பியல் ஆய்வு செய்த பா.ரா. சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார். இதன் விளக்கத்தைக் கீழே காணுங்கள்.
ஓர் ஆதார நிகழ்ச்சி அல்லது செயல் அடுக்கப்படுவதன் வாயிலாக ஒரு தொழிற் பாடலையோ அல்லது கொண்டாட்டப் பாடலையோ வேண்டுமளவு நீட்டிக் கொள்ள அடுக்கைக் குறைத்துக் கொள்வதன் மூலம் சுருக்கிக் கொள்ளவும் முடியும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில் நிகழும் வேலைகள் அல்லது ஒரு நிகழ்ச்சி தொடர்பான செயல்கள், உணவு, எண், திசை, வண்ணம், மரம், ஆடை, அணி, விலங்கு, பறவை, உறவு முதலியவற்றின் பெயர்கள் ஆகியவை ஆதார நிகழ்ச்சிகளை அடுக்கிப் பாடலை நீட்டிக் கொள்ளத் துணைபுரியும் என்பதை அறிய முடிந்தது. அடுக்கிக் கூறுவதில் ஓர் ஒற்றுமையைக் காண முடியும். அதாவது வண்ணப் பெயர் முதலில் தொடங்கினால் பாடல் முழுக்க வண்ணப் பெயர்களே தொடர்ந்து அடுக்கிக் கூறப்படும். அது போல எந்த இனத்தில் தொடங்குகிறதோ அந்த இனத்திலேயே தொடரும். அந்த இனத்தில் இனிக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை வரும்போது வேறு இனம் மாற்றப்பட்டு அதிலேயே தொடரும். இது போன்ற உத்தியைக் கையாண்டே நீண்ட நேரம் பாடுகின்றனர். சான்றாகப் பின்வரும் நடவுப் பாடலைப் பாருங்கள்.
ஆலாமரமோடி ஆலாமரமோடி இந்த
ஆலமரத்து வேரதிலே கலந்த மருந்தையா
மருத்த முறிஐயா மருத்தமுறி ஐயா எந்தன்
மாமன் மகன மகராசனே மருத்த முறிஐயா
மருந்தோ இல்லோடி மருந்தோ இல்லோடி
எந்தன் அத்தமவள ரத்தன கிளியே
மனமோ மருந்தோடி மனமே மருந்தோடி
கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவை மாற்றமுறும் அடிகள். கீழே பாடலின் மாற்றமுறும் அடிகள் மட்டும் தரப்படுகின்றன. ஏனைய அடிகள் அப்படியே திரும்ப வரும்.
அத்தி மரமோடி அத்தி மரமோடி இந்த
அத்தி மரத்து வேரதிலே கலந்த மருந்தையா
(மருத்த......)
கருவ மரமோடி கருவ மரமோடி இந்த
கருவ மரத்து வேரதிலே கலந்த மருந்தையா
(மருத்த.....)
தென்ன மரமோடி தென்ன மரமோடி இந்த
தென்ன மரத்து வேரதிலே கலந்த மருந்தையா
(மருத்த.....)
[இராமநாதன், ஆறு; 2001; தொகுதி - 2; பக் - 38]
இந்தப் பாடலில் மரங்களின் பெயர்களை மாற்றுவதன் வாயிலாகப் பாடலை வேண்டுமளவு நீட்டித்துக் கொள்வதைக் காணமுடிகிறது.
ஒரே கருத்து அல்லது சிந்தனை சிறுசிறு சொல் மாற்றங்களுடன் திரும்பத் திரும்ப அடுக்கி வருதல் எழுத்திலக்கியத்தில் தாழிசை என்னும் அமைப்பில் காணப்படுவது. நாட்டுப்புறப் பாடல்களில் இத்தகைய அடுக்கு - அதன் மூலமாகப் பாடலை எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டிக் கொள்ளும் வசதி அதிகம். வழக்கமான தாலாட்டு பாடல்களில் குழந்தையின் அழுகைக்குத் தாய் வரிசையாகக் காரணங்களை அடுக்குகிறாள்.
அம்மா அடித்தாளோ கண்ணே
அமுதூட்டும் கையாலே
பாட்டி அடித்தாளோ கண்ணே
பால் வார்க்கும் கையாலே
மாமா அடித்தானோ கண்ணே
மல்லிகைப்பூச் செண்டாலே
மாமி அடித்தாளோ கண்ணே உனக்கு
மைதீட்டும் கையாலே
(நா. வானமாமலை, 1964, ப. 115)
சில சூழ்நிலைகளில் நீண்ட நேரம் பாடல்களைத் தொடர்ந்து பாட நேர்கிறது. நாட்டுப்புறப் பாடகர்கள் சில எளிய உத்திகளைப் பின்பற்றுவதன் வாயிலாகத் தங்களின் நீண்ட நேரம் பாடும் தேவைகளை நிறைவு செய்து கொள்கிறார்கள். இங்கு இரு உத்திமுறைகளைக் காணலாம்.
நீண்ட பாடல்களை உருவாக்குதல்
தாலாட்டு, ஒப்பாரி, தொழிற் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள் முதலியவற்றைப் பாடும்போது பாடும் காலத் தேவைக்கு ஏற்றவாறு பாடலின் நீளத்தை நீட்டிக் கொள்ளவோ சுருக்கிக் கொள்ளவோ செய்கின்றனர். இதனை அப் பாடகர்கள் எவ்வாறு சாதிக்கின்றனர்?
"ஓர் அடிக்கருத்தைப் பலபட விரித்துரைத்தல் அல்லது சிலவாகச் சுருக்கியுரைத்தல் [Expansion Or Contraction] என்னும் முறையால் தாலாட்டுப் பாடல் கால அளவிற்குத் தக்கவாறு பாடப்படுகிறது" என்றும், "குறைவான கருத்து, ஒரு கருத்தை இரு பத்திகளில், முன் மாதிரி - நேர் பகர்ப்புப் பத்தியமைப்பில் அமைத்தல் என்னும் இவ்விரு முறைகளால் ஒப்பாரிப் பாடல் எளிதாக உருவாகிறது" என்றும் ஒப்பாரி, தாலாட்டு பற்றிய அமைப்பியல் ஆய்வு செய்த பா.ரா. சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார். இதன் விளக்கத்தைக் கீழே காணுங்கள்.
ஓர் ஆதார நிகழ்ச்சி அல்லது செயல் அடுக்கப்படுவதன் வாயிலாக ஒரு தொழிற் பாடலையோ அல்லது கொண்டாட்டப் பாடலையோ வேண்டுமளவு நீட்டிக் கொள்ள அடுக்கைக் குறைத்துக் கொள்வதன் மூலம் சுருக்கிக் கொள்ளவும் முடியும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில் நிகழும் வேலைகள் அல்லது ஒரு நிகழ்ச்சி தொடர்பான செயல்கள், உணவு, எண், திசை, வண்ணம், மரம், ஆடை, அணி, விலங்கு, பறவை, உறவு முதலியவற்றின் பெயர்கள் ஆகியவை ஆதார நிகழ்ச்சிகளை அடுக்கிப் பாடலை நீட்டிக் கொள்ளத் துணைபுரியும் என்பதை அறிய முடிந்தது. அடுக்கிக் கூறுவதில் ஓர் ஒற்றுமையைக் காண முடியும். அதாவது வண்ணப் பெயர் முதலில் தொடங்கினால் பாடல் முழுக்க வண்ணப் பெயர்களே தொடர்ந்து அடுக்கிக் கூறப்படும். அது போல எந்த இனத்தில் தொடங்குகிறதோ அந்த இனத்திலேயே தொடரும். அந்த இனத்தில் இனிக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை வரும்போது வேறு இனம் மாற்றப்பட்டு அதிலேயே தொடரும். இது போன்ற உத்தியைக் கையாண்டே நீண்ட நேரம் பாடுகின்றனர். சான்றாகப் பின்வரும் நடவுப் பாடலைப் பாருங்கள்.
ஆலாமரமோடி ஆலாமரமோடி இந்த
ஆலமரத்து வேரதிலே கலந்த மருந்தையா
மருத்த முறிஐயா மருத்தமுறி ஐயா எந்தன்
மாமன் மகன மகராசனே மருத்த முறிஐயா
மருந்தோ இல்லோடி மருந்தோ இல்லோடி
எந்தன் அத்தமவள ரத்தன கிளியே
மனமோ மருந்தோடி மனமே மருந்தோடி
கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவை மாற்றமுறும் அடிகள். கீழே பாடலின் மாற்றமுறும் அடிகள் மட்டும் தரப்படுகின்றன. ஏனைய அடிகள் அப்படியே திரும்ப வரும்.
அத்தி மரமோடி அத்தி மரமோடி இந்த
அத்தி மரத்து வேரதிலே கலந்த மருந்தையா
(மருத்த......)
கருவ மரமோடி கருவ மரமோடி இந்த
கருவ மரத்து வேரதிலே கலந்த மருந்தையா
(மருத்த.....)
தென்ன மரமோடி தென்ன மரமோடி இந்த
தென்ன மரத்து வேரதிலே கலந்த மருந்தையா
(மருத்த.....)
[இராமநாதன், ஆறு; 2001; தொகுதி - 2; பக் - 38]
இந்தப் பாடலில் மரங்களின் பெயர்களை மாற்றுவதன் வாயிலாகப் பாடலை வேண்டுமளவு நீட்டித்துக் கொள்வதைக் காணமுடிகிறது.
ஒரே கருத்து அல்லது சிந்தனை சிறுசிறு சொல் மாற்றங்களுடன் திரும்பத் திரும்ப அடுக்கி வருதல் எழுத்திலக்கியத்தில் தாழிசை என்னும் அமைப்பில் காணப்படுவது. நாட்டுப்புறப் பாடல்களில் இத்தகைய அடுக்கு - அதன் மூலமாகப் பாடலை எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டிக் கொள்ளும் வசதி அதிகம். வழக்கமான தாலாட்டு பாடல்களில் குழந்தையின் அழுகைக்குத் தாய் வரிசையாகக் காரணங்களை அடுக்குகிறாள்.
அம்மா அடித்தாளோ கண்ணே
அமுதூட்டும் கையாலே
பாட்டி அடித்தாளோ கண்ணே
பால் வார்க்கும் கையாலே
மாமா அடித்தானோ கண்ணே
மல்லிகைப்பூச் செண்டாலே
மாமி அடித்தாளோ கண்ணே உனக்கு
மைதீட்டும் கையாலே
(நா. வானமாமலை, 1964, ப. 115)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சூழலுக்கேற்பப் பாடலை மாற்றல்
சூழலுக்குத் தக்கவாறு பாடலை மாற்றிக் கொள்ளும் உத்தி முறையாலும் மக்கள் தங்கள் பாடல் தேவையை எளிதில் நிறைவு செய்து கொள்கின்றனர்.
‘காளேஎ - எந்தோழி’, ‘காளையரே’, ‘எந்தோழி காளைகளே’, ‘எந்தோழி காளரியே’, ‘எந்தோழனார் காளைகளே’ போன்ற விளிச் சொற்களையும் ‘ஏலேலம்’, ‘ஏலமே ஏலம்’, ‘ஏலசிங்கேலம்’, ‘ஏலேலம்படி ஏலேலம்’, ‘ஏலேலம் முருகா ஏலேலம்’ போன்ற ஒலிக் குறிப்புச் சொற்களையும் முன்னோ, பின்னோ அல்லது முன்னும் பின்னுமாகவோ பொருத்தமாகச் சேர்ப்பதன் வாயிலாக ஒரே பாடலைச் சூழலுக்கு ஏற்ப ஏர்ப்பாடலாகவோ, கும்மிப் பாடலாகவோ, நடவுப் பாடலாகவோ வேறு தொழிற் பாடலாகவோ மாற்றிக் கொள்ள முடியும்.
ஒப்பாரிப் பாடல் நடவுப் பாடலாகவும் கும்மிப் பாடலாகவும் மாறும் போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஒரு சான்று காணலாம்.
கூடையிலே கல்பொறுக்கி என்சாமி
கோபுரங்கள் கட்டிவச்சேன் - இந்த
குயில் வந்து சேர்ந்தாலும்
குயில தொரத்தாதீங்க
குயில் முட்டைய எடுக்காதீங்க - இந்த
குயிலோட பாவம் - ஒங்க
கோட்டைய சுத்துமோ.
இது ஓர் ஒப்பாரிப் பாடல்.
"கூடையிலே கல்பொறுக்கி அய்யனே
கோவிரங்கள் உண்டுபண்ணி அய்யனே
கோவிரங்கள் உண்டுபண்ணி
கோவிரத்தின் உள்ளாலதான் அய்யனே
குயிலுபோயி மிட்டையிடும் அய்யனே
குயிலுபோயி மிட்டையிடும்
குயிலவி ராட்டாதீங்கோ அய்யனே
குயில்மிட்டைய எடுக்காதீங்கோ அய்யனே
குயில்மிட்டைய எடுக்காதீங்கோ
குயிலுவிடும் வாசாங்குதான் அய்யனே
கொடியாள சுத்துமையா அய்யனே
கொடியாள சுத்துமையா".
என்பது ஒரு நடவுப் பாடல்.
"கூடையிலே கல்பொறுக்கி
கூடையிலே கல்பொறுக்கி
கூடையிலே கல்பொறுக்கி
கோவிரங்கள் உண்டுபண்ணி
கோவிரத்தின் உள்ளாலே
கோவிரத்தின் உள்ளாலே
கோவிரத்தின் உள்ளாலே
குயிலு வந்து முட்டையிடும்.
[பாடலின் ஏனைய அடிகளும் இவ்வாறே பாடப்படும்]
என்பது ஒரு கும்மிப்பாடல்.
நாட்டுப்புறப் பாடல்களை ஒருவர் பாடுவதைப் போலவே மற்றவர் பாடுவது கிடையாது. ஒருவரே ஒரு பாடலை மறுமுறை பாடும்போது மாற்றம் ஏற்படும். எனவே, இங்குக் காட்டப்பட்ட மூன்று பனுவல்களிலும் காணப்படும் மூலப்பனுவல் வேறுபாடுகள் [உ.ம். கோபுரங்கள் கட்டி வச்சேன் - கோவிரங்கள் உண்டுபண்ணி] இயல்பானவையே. ஆனால் பாடப்படும் முறையால் ஒப்பாரிப் பாடலிலிருந்து நடவுப் பாடலும், கும்மிப் பாடலும் முற்றிலும் மாறுபடுவதைக் காணலாம். ‘என்சாமி’, ‘அய்யனே’ போன்ற சொற்களும் இசை மாற்றமும் பாடும் தொனியும், சூழலுக்குத் தக்கவாறு மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தக்க நெகிழ்ச்சியான பாடலமைப்பும் ஒரே பாடலைச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதில் மக்களுக்குத் துணைபுரிகின்றன.
சூழலுக்குத் தக்கவாறு பாடலை மாற்றிக் கொள்ளும் உத்தி முறையாலும் மக்கள் தங்கள் பாடல் தேவையை எளிதில் நிறைவு செய்து கொள்கின்றனர்.
‘காளேஎ - எந்தோழி’, ‘காளையரே’, ‘எந்தோழி காளைகளே’, ‘எந்தோழி காளரியே’, ‘எந்தோழனார் காளைகளே’ போன்ற விளிச் சொற்களையும் ‘ஏலேலம்’, ‘ஏலமே ஏலம்’, ‘ஏலசிங்கேலம்’, ‘ஏலேலம்படி ஏலேலம்’, ‘ஏலேலம் முருகா ஏலேலம்’ போன்ற ஒலிக் குறிப்புச் சொற்களையும் முன்னோ, பின்னோ அல்லது முன்னும் பின்னுமாகவோ பொருத்தமாகச் சேர்ப்பதன் வாயிலாக ஒரே பாடலைச் சூழலுக்கு ஏற்ப ஏர்ப்பாடலாகவோ, கும்மிப் பாடலாகவோ, நடவுப் பாடலாகவோ வேறு தொழிற் பாடலாகவோ மாற்றிக் கொள்ள முடியும்.
ஒப்பாரிப் பாடல் நடவுப் பாடலாகவும் கும்மிப் பாடலாகவும் மாறும் போது ஏற்படும் மாற்றங்களுக்கு ஒரு சான்று காணலாம்.
கூடையிலே கல்பொறுக்கி என்சாமி
கோபுரங்கள் கட்டிவச்சேன் - இந்த
குயில் வந்து சேர்ந்தாலும்
குயில தொரத்தாதீங்க
குயில் முட்டைய எடுக்காதீங்க - இந்த
குயிலோட பாவம் - ஒங்க
கோட்டைய சுத்துமோ.
இது ஓர் ஒப்பாரிப் பாடல்.
"கூடையிலே கல்பொறுக்கி அய்யனே
கோவிரங்கள் உண்டுபண்ணி அய்யனே
கோவிரங்கள் உண்டுபண்ணி
கோவிரத்தின் உள்ளாலதான் அய்யனே
குயிலுபோயி மிட்டையிடும் அய்யனே
குயிலுபோயி மிட்டையிடும்
குயிலவி ராட்டாதீங்கோ அய்யனே
குயில்மிட்டைய எடுக்காதீங்கோ அய்யனே
குயில்மிட்டைய எடுக்காதீங்கோ
குயிலுவிடும் வாசாங்குதான் அய்யனே
கொடியாள சுத்துமையா அய்யனே
கொடியாள சுத்துமையா".
என்பது ஒரு நடவுப் பாடல்.
"கூடையிலே கல்பொறுக்கி
கூடையிலே கல்பொறுக்கி
கூடையிலே கல்பொறுக்கி
கோவிரங்கள் உண்டுபண்ணி
கோவிரத்தின் உள்ளாலே
கோவிரத்தின் உள்ளாலே
கோவிரத்தின் உள்ளாலே
குயிலு வந்து முட்டையிடும்.
[பாடலின் ஏனைய அடிகளும் இவ்வாறே பாடப்படும்]
என்பது ஒரு கும்மிப்பாடல்.
நாட்டுப்புறப் பாடல்களை ஒருவர் பாடுவதைப் போலவே மற்றவர் பாடுவது கிடையாது. ஒருவரே ஒரு பாடலை மறுமுறை பாடும்போது மாற்றம் ஏற்படும். எனவே, இங்குக் காட்டப்பட்ட மூன்று பனுவல்களிலும் காணப்படும் மூலப்பனுவல் வேறுபாடுகள் [உ.ம். கோபுரங்கள் கட்டி வச்சேன் - கோவிரங்கள் உண்டுபண்ணி] இயல்பானவையே. ஆனால் பாடப்படும் முறையால் ஒப்பாரிப் பாடலிலிருந்து நடவுப் பாடலும், கும்மிப் பாடலும் முற்றிலும் மாறுபடுவதைக் காணலாம். ‘என்சாமி’, ‘அய்யனே’ போன்ற சொற்களும் இசை மாற்றமும் பாடும் தொனியும், சூழலுக்குத் தக்கவாறு மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தக்க நெகிழ்ச்சியான பாடலமைப்பும் ஒரே பாடலைச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதில் மக்களுக்குத் துணைபுரிகின்றன.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பு
சார்லஸ் இ. கோவர் [Charles E. Gowar] என்னும் ஆங்கில ஆட்சியாளர் தமிழ் நாட்டுப்புறப் பாடல் சேகரிப்புப் பணியைத் தொடங்கி வைத்தார். Folk Songs of Southern India என்ற இவருடைய நூல் 1871 இல் வெளிவந்தது. தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை ஆங்கிலத்தில் வெளியிட்ட முதல் நூல் இது. இந்திய மக்களின் உணர்வுகளை ஐரோப்பியர்கள் உள்ளது உள்ளபடி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களை நல்குவது அவருடைய முதல் நோக்கம் என்பதை அவரே தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார். தேவராஜு பிள்ளை என்ற பி.ஏ பட்டதாரியின் உதவியுடன் இவர் சேகரிப்புப் பணியைச் செய்தார். மொழி தெரியாத கோவர் நாட்டுப்புறப் பாடல்கள் எவை, எழுத்திலக்கியம் எவை என்று இனம் பிரித்து அறியாமல் இரண்டையும் தமது நூலில் தந்துள்ளார். திருக்குறள், பத்ரகிரியார் பாடல்கள், கபிலர் அகவல், சிவவாக்கியர் பாடல்கள் போன்றவற்றை நாட்டுப்புறப் பாடல்கள் எனக் கொண்டு மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். தொழிலாளர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் இந்நூலின் சிறப்பம்சம். ஆனால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழிலும் தந்திருந்தால் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட பழமையான தமிழ் நாட்டுப்புறப் பாடல்களாக அவை இருந்திருக்கும்.
1910இல் ‘விவேக சிந்தாமணி’ இதழில் கல்யாணப் பாட்டு வெளிவந்தது. முதன் முதலாக நாட்டுப்புற இலக்கியத்தை வெளியிட்ட தமிழ் இதழ் இதுவாக இருக்க வேண்டும் என்று சு.சண்முகசுந்தரம் கருதுகின்றார்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1939இல் ‘குழந்தைப் பாட்டுகள்’ என்ற தலைப்பில் சிறு நூலை வெளியிட்டது.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இதுவரை தமிழில் வெளிவந்த நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூல்கள் 97. சார்லஸ் கோவர் நூல் இதில் சேர்க்கப்படவில்லை. இவை பக்க அளவால் வேறுபட்டவை. சான்றாக ‘மலையாள நாட்டுப்புறப் பாடல்கள்’ 41 பக்கங்களைக் கொண்டது. ‘மன்னார் நாட்டுப் பாடல்கள்’ 46 பக்கங்களைக் கொண்டது. ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ 667 பக்கங்களைக் கொண்டது.
வெளிவந்த நூல்களுள் 18 நூல்கள் இலங்கையில் சேகரிக்கப்பட்டு வெளிவந்தவை. ஏனையவை தமிழ் நாட்டில் சேகரிக்கப்பட்டு வெளிவந்தவை. 1955க்கு முன் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த தொகுப்பு நூல்கள் அதற்குப்பின் தொடர்ச்சியாக (1963, 68, 89, 92 ஆம் ஆண்டுகள் தவிர்த்து) ஒரே சீராக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட பாடல் வகையை மட்டும் வெளியிடும் நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றுள் குழந்தை மற்றும் தாலாட்டுப் பாடல் நூல்களும் (மொத்தம் 9) ஒப்பாரி நூல்களும் (8) எண்ணிக்கையில் அதிகம். திருமணப் பாடல் நூல்கள் மூன்றும், பூசாரிப் பாடல்கள் இரண்டும், தொழிற்பாடல்களுள் ஏற்றப் பாடல் நூல்கள் மூன்றும், தொழில் பாடல் என்ற தலைப்பில் ஒன்றும் அம்பாப் பாடல், நடவுப்பாடல் என்பன தலைக்கு ஒன்றும் வெளிவந்துள்ளன. இராவாண்டைப் பாடல், சிறுவர் பாடல், தெய்வப் பாடல், தெம்மாங்குப் பாடல், சடங்குப் பாடல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நூல் வெளிவந்துள்ளது.
சேகரிக்கப்பட்ட இடப்பகுதி அடிப்படையில் தஞ்சை மாவட்டத்துப் பாடல்கள் ஒரு நூலும், நெல்லை மாவட்டப் பாடல்கள் இரு நூல்களும், கொங்கு நாட்டுப் பாடல்கள் இரு தொகுதிகளும் வெளிவந்துள்ளன. கத்திரி மலை, பாலை மலை மக்களின் பாடல்கள் தலா ஒவ்வொன்று வெளிவந்துள்ளன. இலங்கையிலிருந்து வட இலங்கை மன்னார், மட்டக் களப்பு, வன்னிவள நாடு போன்ற பகுதிகளின் பாடல்கள் அந்தந்த இடப் பெயர்களால் வெளியிடப்பட்டுள்ளன.
மொழி பெயர்ப்பு நூலாக மலையாள நாட்டுப்புறப் பாடல் (சிறுநூல்) மட்டும் வெளிவந்துள்ளது.
கதம்பக ஒப்பாரி, பதினாறு ஒப்பாரிக் கட்டடம், நவரத்தின ஒப்பாரி மற்றும் 1978இல் வெளிவந்துள்ள 'ஒப்பாரிப் பாடல்' ஆகிய நூல்கள் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவை அல்ல, எழுதி வெளியிடப்பட்டவை.
‘கும்மிப் பாடல்கள்’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவை அல்ல. எழுதப்பட்ட இலக்கியங்களின் பதிப்பு.
தமிழகத்தில் இசுலாமியர்களின் பாடல்கள் சேகரித்து வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இலங்கையிலிருந்து இசுலாமியத் தமிழர்களால் இசுலாமியர்களிடம் சேகரிக்கப்பட்டுச் சுமார் ஐந்து நாட்டுப்புறப் பாடல் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலே காட்டப்பட்டுள்ள தொகுப்பு நூல்களேயன்றி நாட்டுப்புறப்பாடல் ஆய்வு நூல்களின் பின்னிணைப்புகளிலும் எடுத்துக்காட்டுகளிலும் பாடல்கள் பல இடம்பெற்றுள்ளன. அவற்றுள் அ.மு. பரமசிவானந்தம் (1984), டாக்டர். பா.ரா. சுப்பிரமணியன் (1975), டாக்டர். இ. பாலசுந்தரம் (1979), டாக்டர். மீ.அ.மு. நாசீர் அலி (1987), சி. ருக்மணி (1988), செங்கோ வரதராசன் (1979, 1988), ஆறு. இராமநாதன் (1988), பேராசிரியர் வி. அசோக் குமார் (1992), டாக்டர். மா. கோதண்டராமன் (1996) போன்றோரின் ஆய்வு நூல்கள் குறிப்பிடத் தக்கவை. அசோக் குமார் சமணர்களிடமிருந்து பாடல் சேகரித்துள்ளார்.
சார்லஸ் இ. கோவர் [Charles E. Gowar] என்னும் ஆங்கில ஆட்சியாளர் தமிழ் நாட்டுப்புறப் பாடல் சேகரிப்புப் பணியைத் தொடங்கி வைத்தார். Folk Songs of Southern India என்ற இவருடைய நூல் 1871 இல் வெளிவந்தது. தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை ஆங்கிலத்தில் வெளியிட்ட முதல் நூல் இது. இந்திய மக்களின் உணர்வுகளை ஐரோப்பியர்கள் உள்ளது உள்ளபடி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களை நல்குவது அவருடைய முதல் நோக்கம் என்பதை அவரே தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார். தேவராஜு பிள்ளை என்ற பி.ஏ பட்டதாரியின் உதவியுடன் இவர் சேகரிப்புப் பணியைச் செய்தார். மொழி தெரியாத கோவர் நாட்டுப்புறப் பாடல்கள் எவை, எழுத்திலக்கியம் எவை என்று இனம் பிரித்து அறியாமல் இரண்டையும் தமது நூலில் தந்துள்ளார். திருக்குறள், பத்ரகிரியார் பாடல்கள், கபிலர் அகவல், சிவவாக்கியர் பாடல்கள் போன்றவற்றை நாட்டுப்புறப் பாடல்கள் எனக் கொண்டு மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். தொழிலாளர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் இந்நூலின் சிறப்பம்சம். ஆனால் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழிலும் தந்திருந்தால் தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட பழமையான தமிழ் நாட்டுப்புறப் பாடல்களாக அவை இருந்திருக்கும்.
1910இல் ‘விவேக சிந்தாமணி’ இதழில் கல்யாணப் பாட்டு வெளிவந்தது. முதன் முதலாக நாட்டுப்புற இலக்கியத்தை வெளியிட்ட தமிழ் இதழ் இதுவாக இருக்க வேண்டும் என்று சு.சண்முகசுந்தரம் கருதுகின்றார்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1939இல் ‘குழந்தைப் பாட்டுகள்’ என்ற தலைப்பில் சிறு நூலை வெளியிட்டது.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இதுவரை தமிழில் வெளிவந்த நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூல்கள் 97. சார்லஸ் கோவர் நூல் இதில் சேர்க்கப்படவில்லை. இவை பக்க அளவால் வேறுபட்டவை. சான்றாக ‘மலையாள நாட்டுப்புறப் பாடல்கள்’ 41 பக்கங்களைக் கொண்டது. ‘மன்னார் நாட்டுப் பாடல்கள்’ 46 பக்கங்களைக் கொண்டது. ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ 667 பக்கங்களைக் கொண்டது.
வெளிவந்த நூல்களுள் 18 நூல்கள் இலங்கையில் சேகரிக்கப்பட்டு வெளிவந்தவை. ஏனையவை தமிழ் நாட்டில் சேகரிக்கப்பட்டு வெளிவந்தவை. 1955க்கு முன் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த தொகுப்பு நூல்கள் அதற்குப்பின் தொடர்ச்சியாக (1963, 68, 89, 92 ஆம் ஆண்டுகள் தவிர்த்து) ஒரே சீராக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட பாடல் வகையை மட்டும் வெளியிடும் நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றுள் குழந்தை மற்றும் தாலாட்டுப் பாடல் நூல்களும் (மொத்தம் 9) ஒப்பாரி நூல்களும் (8) எண்ணிக்கையில் அதிகம். திருமணப் பாடல் நூல்கள் மூன்றும், பூசாரிப் பாடல்கள் இரண்டும், தொழிற்பாடல்களுள் ஏற்றப் பாடல் நூல்கள் மூன்றும், தொழில் பாடல் என்ற தலைப்பில் ஒன்றும் அம்பாப் பாடல், நடவுப்பாடல் என்பன தலைக்கு ஒன்றும் வெளிவந்துள்ளன. இராவாண்டைப் பாடல், சிறுவர் பாடல், தெய்வப் பாடல், தெம்மாங்குப் பாடல், சடங்குப் பாடல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நூல் வெளிவந்துள்ளது.
சேகரிக்கப்பட்ட இடப்பகுதி அடிப்படையில் தஞ்சை மாவட்டத்துப் பாடல்கள் ஒரு நூலும், நெல்லை மாவட்டப் பாடல்கள் இரு நூல்களும், கொங்கு நாட்டுப் பாடல்கள் இரு தொகுதிகளும் வெளிவந்துள்ளன. கத்திரி மலை, பாலை மலை மக்களின் பாடல்கள் தலா ஒவ்வொன்று வெளிவந்துள்ளன. இலங்கையிலிருந்து வட இலங்கை மன்னார், மட்டக் களப்பு, வன்னிவள நாடு போன்ற பகுதிகளின் பாடல்கள் அந்தந்த இடப் பெயர்களால் வெளியிடப்பட்டுள்ளன.
மொழி பெயர்ப்பு நூலாக மலையாள நாட்டுப்புறப் பாடல் (சிறுநூல்) மட்டும் வெளிவந்துள்ளது.
கதம்பக ஒப்பாரி, பதினாறு ஒப்பாரிக் கட்டடம், நவரத்தின ஒப்பாரி மற்றும் 1978இல் வெளிவந்துள்ள 'ஒப்பாரிப் பாடல்' ஆகிய நூல்கள் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவை அல்ல, எழுதி வெளியிடப்பட்டவை.
‘கும்மிப் பாடல்கள்’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டவை அல்ல. எழுதப்பட்ட இலக்கியங்களின் பதிப்பு.
தமிழகத்தில் இசுலாமியர்களின் பாடல்கள் சேகரித்து வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இலங்கையிலிருந்து இசுலாமியத் தமிழர்களால் இசுலாமியர்களிடம் சேகரிக்கப்பட்டுச் சுமார் ஐந்து நாட்டுப்புறப் பாடல் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலே காட்டப்பட்டுள்ள தொகுப்பு நூல்களேயன்றி நாட்டுப்புறப்பாடல் ஆய்வு நூல்களின் பின்னிணைப்புகளிலும் எடுத்துக்காட்டுகளிலும் பாடல்கள் பல இடம்பெற்றுள்ளன. அவற்றுள் அ.மு. பரமசிவானந்தம் (1984), டாக்டர். பா.ரா. சுப்பிரமணியன் (1975), டாக்டர். இ. பாலசுந்தரம் (1979), டாக்டர். மீ.அ.மு. நாசீர் அலி (1987), சி. ருக்மணி (1988), செங்கோ வரதராசன் (1979, 1988), ஆறு. இராமநாதன் (1988), பேராசிரியர் வி. அசோக் குமார் (1992), டாக்டர். மா. கோதண்டராமன் (1996) போன்றோரின் ஆய்வு நூல்கள் குறிப்பிடத் தக்கவை. அசோக் குமார் சமணர்களிடமிருந்து பாடல் சேகரித்துள்ளார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மேலும் நாட்டுப்புறப் புலவர்களால் எழுதி 19ஆம்நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சிறு சிறு நூல்களாக வெளியிடப்பட்ட கும்மி, குறவன் குறத்தி பாட்டு, சம்பந்தி ஏசல் முதலான ஏசல் பாடல்கள், கல்யாணப் பாடல்கள், ஏற்றப் பாடல்கள், தாலாட்டுகள், ஒப்பாரிகள், கொலைச் சிந்துகள், தற்கொலைச் சிந்துகள், தெருக்கூத்துப் பாடல்கள் முதலானவை எண்ணிலடங்கா. இவை வாய்மொழி மரபில் கலந்து விட்ட நிலையை இங்குக் குறிப்பிடலாம்.
இதுவரை வெளிவந்துள்ள நாட்டுப்புறப் பாடல் நூல்களில் மிகச் சிறப்பானதாக ‘நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம்’ என்னும் நூலைக் கூறலாம். இது மெய்யப்பன் பதிப்பக வெளியீடாக 2001இல் வெளிவந்த நூல். பத்துத் தொகுதிகளைக் கொண்டது. இதன் முதன்மைப் பதிப்பாசிரியர் ஆறு. இராமநாதன். இந்நூல் தமிழகத்தின் தலைசிறந்த நாட்டுப்புறவியல் அறிஞர்களால் தமிழகத்தின் இருபது மாவட்டங்களைச் சேர்ந்த 225 ஊர்களிலிருந்து 625 பாடகர்களிடம் களப்பணி வாயிலாகச் சேகரிக்கப்பட்ட பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூலின் தொகுதிகளில் 1493 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. நாட்டுப்புறவியல் ஆய்வாளருக்குப் பெரிதும் உதவும் வண்ணம் இருப்பதோடு சாதாரண மக்களும் படித்துச் சுவைக்கும் வண்ணம் இத்தொகுதிகள் அமைந்துள்ளன.
இவையேயன்றித் தமிழகம் முழுவதும் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி. பட்டங்களுக்காக நடைபெற்ற ஆய்வுகளுக்காக ஏராளமான பாடல்கள் சேகரிக்கப்பட்டு அச்சிடப்படாமல் ஆய்வேடுகளில் உள்ளன. பல்வேறு இதழ்களில் நாட்டுப்புறப் பாடல்கள் வெளிவந்துள்ளன. பல ஆய்வுக் கட்டுரைகளிலும் ஆய்வாளர்கள் புதுப்புதுப் பாடல்களைச் சேகரித்து வெளியிட்டுள்ளனர்.
இதுவரை கண்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சில கருத்துக்களை நிறைவாகச் சுட்டலாம்.
எழுத்திலக்கியங்கள் தோன்றி வளர்ச்சி பெற்ற போதும் தமிழர்கள் நாட்டுப்புறப் பாடல்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டியிருக்கின்றனர். அவற்றைச் செப்பமான இலக்கியங்களாக்கியும், இலக்கியங்களில் சுட்டியும் வந்துள்ளனர். பல்வேறு நோக்கங்களுக்காக மக்களை அணுக வேண்டிய காலகட்டங்களில் எல்லாம் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அவற்றைச் சேகரித்துத் தனி நிலையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
காலச் சூழலின் தூண்டுதலால் சார்லஸ் கோவர் 1871இல் தமிழ் நாட்டுப்புறப் பாடல் சேகரிப்புப் பணியைத் தொடங்கி வைத்தார். ஏறத்தாழ 134 ஆண்டுகள் கடந்த நிலையில் 96க்கு மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன.
பாடல்களைக் சேகரிப்பதற்கான காரணங்கள் காலத்துக்குக் காலம் மாறி வருகின்றன. மதம், அரசியல், தேசீய உணர்வு, பிரச்சாரம், கல்வி, சாதி என்று பல காரணங்கள் உள்ளன.
வெளிவந்த நூல்களின் எண்ணிக்கை பலவாயினும் சில நூல்களே குறிப்பிடத் தக்கவையாக உள்ளன. அவற்றிலும் பல குறைகள் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர். பாடல்கள் செப்பம் செய்யப்பட்ட நிலை (பேச்சு மொழியை எழுத்து மொழியாக மாற்றியமை), சேகரிப்பு விவரம் இல்லாத நிலை, பாடகர் விவரம் இல்லாத நிலை, விளக்கம் தரப்படாத நிலை போன்றவை குறிப்பிடத்தக்கவை. களப் பணியில் ஈடுபட்டுப் பாடல் சேகரித்த பதிப்பாசிரியர்கள் குறைவு. அவர்களுக்குள்ளும் முறையாகச் சேகரித்தவர்கள் மிகமிகக் குறைவு.
பல பதிப்பாசிரியர்கள் ஆர்வமாகப் பாடல்கள் சேகரித்தனர். இவர்களின் ஆர்வம் பாராட்டத்தக்கது; போற்றத்தக்கது. இவர்கள் தந்துள்ள பாடல்களில் பல விவரங்கள் இல்லை. இவர்கள் பாடல்களின் பனுவல் [Text] எதிர்கால வரலாற்று / ஒப்பீட்டு ஆய்வுகளுக்குப் பயன்படும்.
நாட்டுப்புறப் பாடல் சேகரிப்பு மற்றும் பதிப்புப் பணி குறித்து இதுவரை கூறாத சில செய்திகளையும் இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
வணிக நோக்கில் பிற நூல்களிலிருந்து எவ்வித நன்றி அறிவிப்பும் இன்றிப் பாடல்களை எடுத்து நூலாக வெளியிடும் போக்கினையும், தங்கள் சேகரிப்புப் போல் ‘பாவனை’ செய்து ஆய்வுகளில் பயன்படுத்துவதையும் காண முடிகின்றது. இத்தகைய பதிப்பாளர்கள் / ஆய்வாளர்கள் ஒரே பாடல் பல இடங்களிலும் பாடப்படும் என்னும் நாட்டுப்புறப்பாடல் இயல்பினைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர். ‘ஒரு பாடலை ஒரு பாடகரே மறுமுறை பாடும்போது அதில் மாற்றம் காணப்படும்’ என்பதை அவர்கள் மறந்துவிடுவதால் அம்பலப்பட்டு விடுகிறார்கள். சில ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்கேற்ப நாட்டுப்புறப் பாடலையே மாற்றி விடுகின்றனர்.
இதுவரை வெளிவந்த நாட்டுப்புறப் பாடல் பதிப்பு நூல்களைப் படிக்கும் வாசகர்களும் ஆய்வுத் தரவுகளாகக் கொள்ளும் ஆய்வாளர்களும் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுவரை வெளிவந்துள்ள நாட்டுப்புறப் பாடல் நூல்களில் மிகச் சிறப்பானதாக ‘நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம்’ என்னும் நூலைக் கூறலாம். இது மெய்யப்பன் பதிப்பக வெளியீடாக 2001இல் வெளிவந்த நூல். பத்துத் தொகுதிகளைக் கொண்டது. இதன் முதன்மைப் பதிப்பாசிரியர் ஆறு. இராமநாதன். இந்நூல் தமிழகத்தின் தலைசிறந்த நாட்டுப்புறவியல் அறிஞர்களால் தமிழகத்தின் இருபது மாவட்டங்களைச் சேர்ந்த 225 ஊர்களிலிருந்து 625 பாடகர்களிடம் களப்பணி வாயிலாகச் சேகரிக்கப்பட்ட பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூலின் தொகுதிகளில் 1493 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. நாட்டுப்புறவியல் ஆய்வாளருக்குப் பெரிதும் உதவும் வண்ணம் இருப்பதோடு சாதாரண மக்களும் படித்துச் சுவைக்கும் வண்ணம் இத்தொகுதிகள் அமைந்துள்ளன.
இவையேயன்றித் தமிழகம் முழுவதும் எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி. பட்டங்களுக்காக நடைபெற்ற ஆய்வுகளுக்காக ஏராளமான பாடல்கள் சேகரிக்கப்பட்டு அச்சிடப்படாமல் ஆய்வேடுகளில் உள்ளன. பல்வேறு இதழ்களில் நாட்டுப்புறப் பாடல்கள் வெளிவந்துள்ளன. பல ஆய்வுக் கட்டுரைகளிலும் ஆய்வாளர்கள் புதுப்புதுப் பாடல்களைச் சேகரித்து வெளியிட்டுள்ளனர்.
இதுவரை கண்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சில கருத்துக்களை நிறைவாகச் சுட்டலாம்.
எழுத்திலக்கியங்கள் தோன்றி வளர்ச்சி பெற்ற போதும் தமிழர்கள் நாட்டுப்புறப் பாடல்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டியிருக்கின்றனர். அவற்றைச் செப்பமான இலக்கியங்களாக்கியும், இலக்கியங்களில் சுட்டியும் வந்துள்ளனர். பல்வேறு நோக்கங்களுக்காக மக்களை அணுக வேண்டிய காலகட்டங்களில் எல்லாம் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அவற்றைச் சேகரித்துத் தனி நிலையில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
காலச் சூழலின் தூண்டுதலால் சார்லஸ் கோவர் 1871இல் தமிழ் நாட்டுப்புறப் பாடல் சேகரிப்புப் பணியைத் தொடங்கி வைத்தார். ஏறத்தாழ 134 ஆண்டுகள் கடந்த நிலையில் 96க்கு மேற்பட்ட நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு நூல்கள் வெளிவந்துள்ளன.
பாடல்களைக் சேகரிப்பதற்கான காரணங்கள் காலத்துக்குக் காலம் மாறி வருகின்றன. மதம், அரசியல், தேசீய உணர்வு, பிரச்சாரம், கல்வி, சாதி என்று பல காரணங்கள் உள்ளன.
வெளிவந்த நூல்களின் எண்ணிக்கை பலவாயினும் சில நூல்களே குறிப்பிடத் தக்கவையாக உள்ளன. அவற்றிலும் பல குறைகள் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர். பாடல்கள் செப்பம் செய்யப்பட்ட நிலை (பேச்சு மொழியை எழுத்து மொழியாக மாற்றியமை), சேகரிப்பு விவரம் இல்லாத நிலை, பாடகர் விவரம் இல்லாத நிலை, விளக்கம் தரப்படாத நிலை போன்றவை குறிப்பிடத்தக்கவை. களப் பணியில் ஈடுபட்டுப் பாடல் சேகரித்த பதிப்பாசிரியர்கள் குறைவு. அவர்களுக்குள்ளும் முறையாகச் சேகரித்தவர்கள் மிகமிகக் குறைவு.
பல பதிப்பாசிரியர்கள் ஆர்வமாகப் பாடல்கள் சேகரித்தனர். இவர்களின் ஆர்வம் பாராட்டத்தக்கது; போற்றத்தக்கது. இவர்கள் தந்துள்ள பாடல்களில் பல விவரங்கள் இல்லை. இவர்கள் பாடல்களின் பனுவல் [Text] எதிர்கால வரலாற்று / ஒப்பீட்டு ஆய்வுகளுக்குப் பயன்படும்.
நாட்டுப்புறப் பாடல் சேகரிப்பு மற்றும் பதிப்புப் பணி குறித்து இதுவரை கூறாத சில செய்திகளையும் இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
வணிக நோக்கில் பிற நூல்களிலிருந்து எவ்வித நன்றி அறிவிப்பும் இன்றிப் பாடல்களை எடுத்து நூலாக வெளியிடும் போக்கினையும், தங்கள் சேகரிப்புப் போல் ‘பாவனை’ செய்து ஆய்வுகளில் பயன்படுத்துவதையும் காண முடிகின்றது. இத்தகைய பதிப்பாளர்கள் / ஆய்வாளர்கள் ஒரே பாடல் பல இடங்களிலும் பாடப்படும் என்னும் நாட்டுப்புறப்பாடல் இயல்பினைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர். ‘ஒரு பாடலை ஒரு பாடகரே மறுமுறை பாடும்போது அதில் மாற்றம் காணப்படும்’ என்பதை அவர்கள் மறந்துவிடுவதால் அம்பலப்பட்டு விடுகிறார்கள். சில ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்கேற்ப நாட்டுப்புறப் பாடலையே மாற்றி விடுகின்றனர்.
இதுவரை வெளிவந்த நாட்டுப்புறப் பாடல் பதிப்பு நூல்களைப் படிக்கும் வாசகர்களும் ஆய்வுத் தரவுகளாகக் கொள்ளும் ஆய்வாளர்களும் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நாட்டுப்புறப் பாடல் சேகரிப்பின் பயன்கள்
நாட்டுப்புறப் பாடல்களைச் சிறந்த ஆய்வுத் தரவுகள் என்ற அடிப்படையில் விரும்புவோர் பலர். ஏனெனில் நாட்டுப்புறப் பாடல்கள் பல்வேறு துறையினருக்கான தகவல் களஞ்சியம். அவை இலக்கிய வரலாறு, இலக்கண வரலாறு, மொழி வரலாறு, சமூக வரலாறு, அரசியல் வரலாறு, பண்பாட்டுக் கூறுகள் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுகின்றன. நாட்டுப்புறப் பாடல் தரவுகளைப் புறக்கணித்துச் செய்யப்படும் மேற்படி ஆய்வுகள் முழுமை பெறா. இலக்கியம், மொழியியல், வரலாறு, சமூகவியல், மானிடவியல், இசை, அகராதியியல் போன்ற பல துறைகளுக்கும் நாட்டுப்புறப் பாடல்கள் மிகச் சிறந்த தரவுகளாக அமையும்.
நாட்டுப்புறப் பாடல்களை இலக்கியச் சுவைக்காக விரும்புவோர் பலர். எளிமையான, பாசாங்கு ஏதுமற்ற யதார்த்தமான பாடல்களை யார்தான் விரும்பமாட்டார்கள்? அவற்றைப் படிக்கும் போது தென்றலைத் தீண்டிய சுகமும் கிடைக்கும். புயலை எதிர் கொள்ளும் அதிர்ச்சியும் கிடைக்கும். மக்கள் இன்பமாகவும் துன்பமாகவும் வாழ்ந்த வாழ்க்கையும் வாழும் வாழ்க்கையும் கண்முன் விரியும்.
நாட்டுப்புறப் பாடல்களுடைய வாய்மொழி வாழ்வின் ஒரு சில நிமிடங்களையே நாம் பதிவு செய்து எழுத்து வடிவம் தருகிறோம். அந்த ஒரு சில நிமிடங்களில் அவற்றின் பொருள் என்னவாக இருந்தது என்பதை அறிய வெறும் பனுவல்கள் [Text] மட்டுமே பயன்படா. பனுவல்களை மட்டுமே வைத்துக் கொண்டு நம் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு அப்பாடல்களுக்குக் கூறும் விளக்கங்கள், அவற்றை உற்பத்தி செய்து பயன்படுத்தும் மக்களின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக அமையா. பாடுவோர், பாடுவோரின் வயது, பால், கல்வி, சாதி, ஊர் போன்ற விவரங்கள், சேகரித்த சூழல், பாடிய நோக்கம், பார்வையாளர்கள், அவர்தம் பங்கு, சேகரித்த தேதி, பாடலைப் பற்றிய பாடகரின் கருத்து (ஏதேனும் இருப்பின்) போன்ற அனைத்து விவரங்களோடும் பனுவலை நோக்கும் போதுதான் அவை சேகரிக்கப்பட்ட அந்தச் சில நிமிடங்களில் அவற்றின் பொருள் என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு நாம் புரிந்து கொள்ளும் பொருள் சேகரிக்கப்பட்ட அந்தப் பனுவல்களுக்கு மட்டுமே உரியதாகும். அதே பாடலின் வாய்மொழிப் பயணத்தின் போது வேறு கால கட்டத்தில் வேறு சூழல்களில் அதே பாடகரிடமிருந்தோ வேறு பாடகரிடமிருந்தோ அப்பாடலைச் சேகரித்தால் அதன் பனுவலும் பொருளும் மாறுபட்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். களப்பணியில் நேரடியாக ஈடுபடும் போதுதான் மேற்கண்ட அனைத்து விவரங்களுடனும் பாடல்களைச் சேகரிக்க இயலும்.
மூலம்: [You must be registered and logged in to see this link.]
நாட்டுப்புறப் பாடல்களைச் சிறந்த ஆய்வுத் தரவுகள் என்ற அடிப்படையில் விரும்புவோர் பலர். ஏனெனில் நாட்டுப்புறப் பாடல்கள் பல்வேறு துறையினருக்கான தகவல் களஞ்சியம். அவை இலக்கிய வரலாறு, இலக்கண வரலாறு, மொழி வரலாறு, சமூக வரலாறு, அரசியல் வரலாறு, பண்பாட்டுக் கூறுகள் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுகின்றன. நாட்டுப்புறப் பாடல் தரவுகளைப் புறக்கணித்துச் செய்யப்படும் மேற்படி ஆய்வுகள் முழுமை பெறா. இலக்கியம், மொழியியல், வரலாறு, சமூகவியல், மானிடவியல், இசை, அகராதியியல் போன்ற பல துறைகளுக்கும் நாட்டுப்புறப் பாடல்கள் மிகச் சிறந்த தரவுகளாக அமையும்.
நாட்டுப்புறப் பாடல்களை இலக்கியச் சுவைக்காக விரும்புவோர் பலர். எளிமையான, பாசாங்கு ஏதுமற்ற யதார்த்தமான பாடல்களை யார்தான் விரும்பமாட்டார்கள்? அவற்றைப் படிக்கும் போது தென்றலைத் தீண்டிய சுகமும் கிடைக்கும். புயலை எதிர் கொள்ளும் அதிர்ச்சியும் கிடைக்கும். மக்கள் இன்பமாகவும் துன்பமாகவும் வாழ்ந்த வாழ்க்கையும் வாழும் வாழ்க்கையும் கண்முன் விரியும்.
நாட்டுப்புறப் பாடல்களுடைய வாய்மொழி வாழ்வின் ஒரு சில நிமிடங்களையே நாம் பதிவு செய்து எழுத்து வடிவம் தருகிறோம். அந்த ஒரு சில நிமிடங்களில் அவற்றின் பொருள் என்னவாக இருந்தது என்பதை அறிய வெறும் பனுவல்கள் [Text] மட்டுமே பயன்படா. பனுவல்களை மட்டுமே வைத்துக் கொண்டு நம் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு அப்பாடல்களுக்குக் கூறும் விளக்கங்கள், அவற்றை உற்பத்தி செய்து பயன்படுத்தும் மக்களின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக அமையா. பாடுவோர், பாடுவோரின் வயது, பால், கல்வி, சாதி, ஊர் போன்ற விவரங்கள், சேகரித்த சூழல், பாடிய நோக்கம், பார்வையாளர்கள், அவர்தம் பங்கு, சேகரித்த தேதி, பாடலைப் பற்றிய பாடகரின் கருத்து (ஏதேனும் இருப்பின்) போன்ற அனைத்து விவரங்களோடும் பனுவலை நோக்கும் போதுதான் அவை சேகரிக்கப்பட்ட அந்தச் சில நிமிடங்களில் அவற்றின் பொருள் என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு நாம் புரிந்து கொள்ளும் பொருள் சேகரிக்கப்பட்ட அந்தப் பனுவல்களுக்கு மட்டுமே உரியதாகும். அதே பாடலின் வாய்மொழிப் பயணத்தின் போது வேறு கால கட்டத்தில் வேறு சூழல்களில் அதே பாடகரிடமிருந்தோ வேறு பாடகரிடமிருந்தோ அப்பாடலைச் சேகரித்தால் அதன் பனுவலும் பொருளும் மாறுபட்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். களப்பணியில் நேரடியாக ஈடுபடும் போதுதான் மேற்கண்ட அனைத்து விவரங்களுடனும் பாடல்களைச் சேகரிக்க இயலும்.
மூலம்: [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நாட்டுப்புறப் பாடல்களை பற்றிய அழகான விளக்கம் தந்த சிவா அண்ணாக்கு நன்றி...
புவனா wrote:நாட்டுப்புறப் பாடல்களை பற்றிய அழகான விளக்கம் தந்த சிவா அண்ணாக்கு நன்றி...
புவனாவுடன் சேர்த்து மூன்று பேர் திருமணம் முடித்துத் திரும்பி வரவில்லை.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- strawberryபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 15/03/2018
ஏட்டில் எழுதா இலக்கியங்களைப் பற்றிய ஒரு அருமையான கட்டுரையை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!!!...
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
[You must be registered and logged in to see this link.]strawberry wrote:ஏட்டில் எழுதா இலக்கியங்களைப் பற்றிய ஒரு அருமையான கட்டுரையை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!!!...
இங்கு சென்று உங்களை பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
ஸ்ட்ராபெர்ரி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப் பாடல்கள்
» நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்!
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
» நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் அறிவியல் கற்றுத்தரும் ஆசிரியர்!
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|