புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
120 Posts - 54%
heezulia
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
1 Post - 0%
Shivanya
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
1 Post - 0%
eraeravi
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
22 Posts - 4%
T.N.Balasubramanian
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
16 Posts - 3%
prajai
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
jairam
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%
Jenila
ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_m10ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 18, 2010 10:48 am

நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, என்னை விழுப்புரத்திற்கு அழைத்துச்சென்று தனியாக நாற்காலி ஒன்றையே போட்டு, கலைஞர் முதல்-அமைச்சராக வந்தால் தான் சமூகநீதியை காப்பாற்ற முடியுமென்று முழக்கமிட்ட டாக்டர் ராமதாஸ், தற்போது சமூகநீதியைப் பற்றி கருணாநிதி பேசலாமா என்று கேட்கிறார் என்றால் எல்லாம் காலத்தின் கோலம்தான் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கென நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றத்திலே 1994-ம் ஆண்டு தனியார் ஒருவரால் வழக்கு தொடுக்கப்பட்டு - ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப்பிறகு 13-7-2010 அன்று தான் உச்சநீதிமன்றம் ஒரு இடைக்கால தீர்ப்பை வழங்கியது.

அந்த இடைக்கால தீர்ப்பில், ``ஒரு மாநிலம் 50 சதவிகித இடஒதுக்கீட்டு அளவை விஞ்ச வேண்டுமானால், அதனை நியாயப்படுத்துவதற்கு தேவையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நிகழ்வில் புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள அளவுகோலை மனதிலே கொண்டு, மாநில அரசு தேவையான புள்ளிவிவரங்களை சேகரித்து, தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், சாதிவாரியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அந்த ஆணையம் இடஒதுக்கீடு எவ்வளவு என்ற அளவை நிர்ணயம் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிடுகிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரங்களை தமிழக அரசின் சார்பில் தனியாக சேகரிக்க வேண்டுமென்றால், அதற்கு நமக்கு சாதிவாரியான மக்கள் தொகை விவரங்கள் வேண்டும். அதற்கு சாதிவாரியான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் அதற்கு சுமார் ரூ.400 கோடி நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறலாம் என்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் கருத்து தெரிவித்திருக்கிறது. இதுபற்றி தமிழக அரசு ஆலோசித்து கொண்டிருக்கும் நிலையில்தான் அகில இந்திய அளவிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது பற்றி மத்திய அரசில் பரிசீலிக்கப்பட்டு, அதை ஏற்கலாம் என்ற அளவிற்கு முடிவுகள் வந்துள்ளன.

அவ்வாறு மத்திய அரசின் சார்பிலேயே ஒரு கணக்கெடுப்பு சாதிவாரியாக எடுக்கும்போது, தமிழ்நாடு அளவில் தானாக ஒரு கணக்கெடுப்பை நடத்த வேண்டுமா, அல்லது மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பில் தமிழகத்தின் கணக்கெடுப்பும் எடுக்கப்பட்டு விடாதா என்றும் யோசிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு எடுக்கும் கணக்கெடுப்பை பயோ-மெட்ரிக் சென்சஸ் அடிப்படையிலே எடுப்பதா அல்லது சாதிவாரியாக கணக்கெடுப்பு நடப்பதா என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

இதிலே கூட "பயோ-மெட்ரிக் சென்சஸ் முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கலாம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார்'' என்று பா.ம.க. நிறுவனர் ஒரு விழாவில் பேசி இன்றைய நாளிதழில் வெளிவந்துள்ளது. எந்த அடிப்படையில் அவர் அந்த கருத்தை தெரிவித்திருக்கிறார் என்று தெரியவில்லை.

ஆனால் நம்மை பொறுத்தவரையில், இந்த பிரச்சினை எழுந்ததும் 14-8-2010 அன்றே பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தில் "மாநில அரசும், மத்திய அரசும் நிறைவேற்றி வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் பலன்கள் கடைக்கோடி பிரிவினருக்கும் முழுமையாக சென்றடைய வேண்டுமென்றால், சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமானதென்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவே நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பிலேயே சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து மேற்கொள்வதும் பயோ-மெட்ரிக் கணக்கெடுப்பு என்று சொல்லி சாதிவாரி கணக்கெடுப்பை ஒத்திப்போடாமல் இருப்பதும் தற்போது அவசிய தேவையாகும்.

தற்போது உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான படிவத்திலேயே ஒருசில மாறுதல்களை செய்து சாதிவாரி கணக்கெடுப்புக்கான விவரங்களை சேகரித்திட முடியும் என நான் அறிகிறேன்'' என்று யாரும் என்னைக் கேட்டுக்கொள்ளாத நேரத்திலேயே-சமூகநீதிக்காக எனக்கு முன்பே குரல் கொடுத்ததாக கூறிக்கொள்வோர்-ஆர்ப்பாட்டம் செய்வோம், போராட்டம் நடத்துவோம் என்றெல்லாம் அறிவிக்காத நிலையிலேயே நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய தலைவராக உள்ள நீதிபதி எம்.என்.ராவ் கூட, "சாதிகளால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் மட்டுமே போக்க முடியும். சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தினால் சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆன பிறகும் பல சமூகங்கள் முன்னேறவில்லை என்பது புள்ளிவிவரங்களுடன் தெரியவரும். அவ்வாறு தெரியவந்தால் அந்த சமூகத்தினர் மேலும் சலுகைகளை கோருவார்கள் என்பதாலேயே சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது'' என்று சொல்லியிருப்பதையும் நாம் மனதிலே கொள்ளலாம்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை சென்சஸ் அமைப்பிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்பதையும், பயோ மெட்ரிக் நடைமுறையுடன் இணைத்து மேற்கொள்ளக்கூடாது என்பதையும் வலியுறுத்தி அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அறிஞர்கள் விளக்கங்கள் வழங்கியுள்ளனர். அந்த விளக்கங்களின் அடிப்படையில் அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பயோ மெட்ரிக் நடைமுறையில் வெளி அமைப்புகள் பங்கேற்று ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், அந்த அமைப்புகள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் சமரசம் செய்துகொள்ளும் வாய்ப்புகளும் ஏற்படக்கூடும்.

பயோமெட்ரிக் புள்ளிவிவரங்களை தொகுக்கும் மிகப்பெரிய பணி அந்த அமைப்புகளுக்கு அளிக்கப் பட்டிருப்பதே அதன் காரணம். சாதிவாரியான மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் தொகுக்கப்படும் பணி சமரசம் செய்து கொள்ளப்பட்டால், இந்த புள்ளிவிவரங்கள் தொகுக்கப்படும் நோக்கத்தை நிச்சயமாக தோற்கடித்துவிடும். மார்ச் 2011 உடன் இக்கணக்கெடுப்பின் அனைத்துப் பணிகளும் முடிந்து போய்விடும். ஆனால் பயோ மெட்ரிக் புள்ளிவிவரங்கள் தொகுக்கும் பணி மட்டும் மேலும் சிறிது காலத்திற்கு தொடரும் வாய்ப்பு உள்ளது.

எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை மேற்கொள்வதற்கான சரியான அமைப்பு தேசிய சென்சஸ் அமைப்புதான் என்றும், 2011 பிப்ரவரி 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை வீடுவீடாக மேற்கொள்ளப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கிடும் பணி மேற்கொள்வதற்கான சரியான நேரம். சோதித்து அறியப்பட்ட, நம்பகத்தன்மை உள்ள சென்சஸ் அமைப்பிடமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பையும் ஒப்படைக்க வேண்டும். பயோமெட்ரிக் புள்ளிவிவரங்கள் பெறும் நடைமுறையுடன் அதனை இணைப்பதால் ஏற்படும் பேராபத்துகள் தவிர்க்கப்படவேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளதையும் ஒதுக்கி தள்ளிவிட முடியாது.

மத்திய அரசாங்க பணிகளில் வன்னியர்களுக்கு இரண்டு சதவிகித இடஒதுக்கீடு வேண்டுமென்று கோரிக்கை வைத்த டாக்டர் ராமதாஸ் அவரது மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது நாடாளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவை கூட்டத்திலோ அதுகுறித்து எப்போதாவது வாய் திறந்தது உண்டா?

"சமூகநீதியைப்பற்றி கருணாநிதி பேசலாமா?'' என்றும், "சமூகநீதியைப்பற்றி முதல்வர் கருணாநிதியோ, வேறு திராவிட கட்சித்தலைவர்களோ பேசலாமா?'' என்றும், "வன்னியர் சங்கம் தொடங்கி, பெரும் போராட்டங்களை நடத்தி, 30 உயிர்களை பலிகொடுத்த பிறகு தான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தனியாக பிரிக்கப்பட்டு 20 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது'' என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாக ஏடுகளில் செய்தி வெளிவந்துள்ளது.

அந்த இருபது சதவிகித ஒதுக்கீடு வேண்டுமென்று அவர் போராடியிருக்கலாம். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட அந்தப் போராட்டத்திற்கு கழகம் ஆட்சிக்கு வந்ததும் மதிப்பு அளித்து, அவரையும் அழைத்துப்பேசி, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கென்று தனியாக 20 சதவிகிதம் வழங்கப்பட்டது என்ற வரலாற்றை டாக்டர் ராமதாஸ் மறைத்த போதிலும், அந்த போராட்டத்தில் உயிரிழந்த அந்த 30 உயிர்களுக்கும் குடும்ப நிதிஒதுக்கீடு அளித்து, மாதந்தோறும் ஓய்வூதியமும் வழங்கச்செய்து, அந்த இருபது சதவிகித இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வரும் ஒவ்வொருவரும் மறக்க மாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம்.

சமூகநீதியைப்பற்றி திராவிட கட்சித்தலைவர்கள் பேசலாமா என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுமானால் கேட்கலாம். ஆனால் சமூக நீதிக்காகவே தோன்றிய கட்சி தான்; நீதிக்கட்சி எனும் திராவிட இயக்கங்களின் வேர்க்கட்சியாகும். நீதிக்கட்சி ஆட்சியிலேதான் முதன்முதலாக 1921-ம் ஆண்டில் முதல் கம்யூனல் ஜி.ஓ. எனப்படும் வரலாற்று சிறப்புமிக்க இடஒதுக்கீட்டு ஆணையே வழங்கப்பட்டது. சமூக நீதியைப்பற்றி நானோ, அல்லது தமிழர் தலைவர் வீரமணியோ மற்ற திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களோ பேசக்கூடாது என்றால் வேறு யார்தான் பேசுவதற்கு தகுதி படைத்தவர்கள் என்பதை டாக்டர் ராமதாசே யோசித்து பேசியிருப்பாரானால் உணர்ந்து கொண்டிருக்க முடியும்.

நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, என்னை விழுப்புரத்திற்கு அழைத்துச்சென்று தனியாக நாற்காலி ஒன்றையே போட்டு, கலைஞர் முதல்-அமைச்சராக வந்தால் தான் சமூகநீதியை காப்பாற்ற முடியுமென்று முழக்கமிட்ட டாக்டர் ராமதாஸ், தற்போது சமூகநீதியைப்பற்றி கருணாநிதி பேசலாமா என்று கேட்கிறார் என்றால் எல்லாம் காலத்தின் கோலம்தான் என்று கூறியுள்ளார் கருணாநிதி

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 11:21 am

சிரிப்பு




ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 18, 2010 11:29 am

ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக