புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_c10கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_m10கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_c10கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_m10கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_c10கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_m10கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_c10கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_m10கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_c10கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_m10கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_c10கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_m10கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம்


   
   
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 9:18 pm

கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்
- விசாலம்



"கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்" என்றும் "கல்வியில் சிறந்தவர் கம்பர்" என்றும் கமபர் அவர்களின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவி இருக்கிறது. இராமாயணத்தை அழகிய தமிழில் பாடி புகழ்பெற்ற கவி அரசர், சோழ நாட்டில் பிறந்து அங்கேயே பல்லாண்டுகள் கொடிக்கட்டிப் பறந்தும் தன் கடைசி நாட்களில் பாண்டிய நாடு வந்து அடைந்து விட்டார். சிவகங்கையிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது நாட்டரசன் கோட்டை. கம்பருக்கு இங்கு ஒரு கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இங்குதான் அவர் சமாதியும் இருக்கிறது. அவரது சமாதியின் மேல் கம்பரின் அழகான உருவச்சிலை பிரதிஷ்டைச் செய்யப்பட்டு அதற்கு பூசையும் நடக்கிறது. இதை நடத்துபவர்கள் கம்பர் செட்டியார் என்ற வம்சத்தினைச் சேர்ந்தவர்கள்.

கம்பர் சோழ நாட்டை விட்டுப் பாண்டிய நாட்டிற்குப் போக வேண்டிய காரணம் என்ன? குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியைப் பார்த்துக் காதல் கொள்கிறான் கம்பரின் மகன் அம்பிகாபதி. இந்த காதல் காவியம் ஒரு அமரகாவியம், அரசன் குலோத்துங்க சோழன் கோபம் கொண்டு, அம்பிகாபதியிடம் காதலை மறந்து விடும்படி கேட்கிறான். அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும் மனம் ஒத்த தெய்வீக காதல் இருந்தமையால் அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிய இருவருமே மறுக்கின்றனர். சோழன் காதலுக்கு ஒரு போட்டி வைக்கிறான். நூறு கவிதை காமரசம் இல்லாமல் அடுத்தடுத்து பாடவேண்டும், நடுவில் காமரசம் வந்தால் மரணதண்டனை என்று அறிவிக்கிறான். அம்பிகாபதியும் தன் காதல் மேல் அத்தனை நம்பிக்கையுடன் போட்டிக்கு ஒப்புக்கொள்கிறான். சபை கூடுகிறது. புலவர் ஒட்டக்கூத்தரும் அவையில் இருக்கிறார், காதலி அமாராவதியோ திரை மறைவில் தன் காதலுக்கு ஜெயம் உண்டாகப் பிரார்த்தனை செய்கிறாள். பாடல் ஆரம்பமாகிறது. கவியரசர் கம்பரும் அங்கே மன வருத்தத்துடன் இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் அமராவதி கைகளில் இருக்கும் பூக்களிலிருந்து ஒரு பூவை எடுத்து வைக்கிறாள். நூறாவது பாடலும் வந்தது வெற்றிக்களிப்பில் அமராவதி தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திரை மறைவிலிருந்து ஓடி வருகிறாள். அவள் அழகில் அம்பிகாபதி தன்னை மறந்து

"சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றே அசையக் குழையூசலாட துவள் கொள் செவ்வாய்
நற்றேனிழொழுக நடன சிங்கார நடையழகில்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே"

அவ்வளவுதான், ஒட்டக்கூத்தர் "முதல் செய்யுள் காப்புச் செய்யுள் ஆகையால் அதைத் தவிர்த்து 99 பாடல்கள்தான் ஆகிறது. ஆகையால் இவன் போட்டியில் ஜெயிக்கவில்லை" என்றார். சோழனும் உடனே மரணதண்டனை பிரகடனம் செய்தான். மரணதண்டனை ஒருவருக்கும் தெரியாமல் நிறைவேற்றப்படுகிறது. தன் உயிர்க் காதலன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அமராவதி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். மகனைப் பறி கொடுத்த கம்பர் வேதனை கவ்வ, சோழ அரசன் மேல் சினமும் வெறுப்பும் பரவ அந்த நாட்டைவிட்டே வெளியேறினார்.

பாண்டிய எல்லையில் இருந்த நாட்டரசன்கோட்டையை அடைந்ததும் வெகுதூர நடையினால் களைத்து ஒரு மரத்தின் நிழலில் தங்கினார். ஒரே பசி கண்ணுக்கு எட்டிய தூரம் ஒன்றுமே நடமாட்டம் தெரியவில்லை.

அப்போது அங்கு வந்த சிறுவனிடம் "தம்பி ரொம்பப் பசி எடுக்கிறது. சோறு எங்கு விக்கும்?" எனக் கேட்டார்.

அவன் அதற்குப் பதிலாக, " சோறு உங்க தொண்டைல விக்கும்"
அவன் புத்திசாலித்தனத்தை வியந்தபடி,
"தம்பி இந்த வழி எங்கே போகிறது?"
"வழி எங்கும் போகல, ஐயா. இங்கிட்டுதான் இருக்கு. நீங்கதான் வழி தேடிப் போகணும்"

கம்பருக்கு இளம் சிறுவனின் புத்திசாலித்தனம் மிகவும் பிடித்தது. 'இந்தச் சிறுவனிடம் நான் தோற்று விட்டேன். நாட்டரசன்கோட்டை தான் இனி நான் தங்கப்போகும் இடம்' என்று அங்கேயே தங்கியும் விட்டார். பலர் அவரைக் கம்பர் புலவர் என்று அடையாளம் கண்டு கொண்டு அவரைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துப் போனார்கள். அங்கேயே இருந்த
கம்பர் மேலும் தியானத்தில் ஈடுபட்டு ஒரு சிறந்த சித்த புருஷரானார். மக்களிடம் அன்பும் பாசமும் பொழிந்தார். அவர்களது நோய்நொடிகளைத் தீர்த்தார், அவர் மறைவுக்குப் பின் மக்கள் மிகவும் பாசத்துடன் அவருக்கு சமாதி கட்டினர். அது கோவிலாகவே கொண்டாடப்படுகிறது. கோவிலில் பிரசாதம் கம்பர் சமாதியின் கீழ் இருக்கும் மண் தான். அதை நம்பிக்கையுடன் நாக்கில் தடவிக் கொள்கிறார்கள் மக்கள்.

இங்கு இருக்கும் மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால் இங்கு வந்து நேர்ந்து கொண்டால் தீராத வியாதியும் குணமாகும். புதிதாகப் பிறக்கும் குழந்தையைக் கம்பர் சமாதியில் இருத்தி அங்கிருக்கும் மண்ணை தேனுடன் சிறிது கலந்து நாக்கில் தடவுகிறார்கள். அந்தக் குழந்தையும் கம்பர் போல் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்று பிரார்த்தனையும் செய்கிறார்களாம். திக்கித் திக்கிப் பேசும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் பிரார்த்திக்க அவர்களுக்கு நன்றாகப் பேச்சு வந்து விடுகிறதாம். பங்குனி அஷ்டமியில் திருவிழா நடக்கிறது.


tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Tue Aug 17, 2010 6:10 am

இதுவரை படிக்காத, கேட்காத செய்தி. மிகவும் நன்றாக சொன்னீர்கள். நன்றி.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Aug 17, 2010 6:13 am

tdrajeswaran wrote:இதுவரை படிக்காத, கேட்காத செய்தி. மிகவும் நன்றாக சொன்னீர்கள். நன்றி.
சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 17, 2010 9:01 am

tdrajeswaran wrote:இதுவரை படிக்காத, கேட்காத செய்தி. மிகவும் நன்றாக சொன்னீர்கள். நன்றி.

ஆமோதித்தல் ஆமோதித்தல் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக