புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 23:55

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:35

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 23:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 23:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:11

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:50

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 21:04

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 20:57

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 20:56

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 20:55

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 20:53

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 20:52

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 20:50

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 20:48

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 20:45

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 20:43

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 20:39

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 18:02

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 16:09

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 08:40

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 08:35

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 09 May 2024, 17:36

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 09 May 2024, 11:58

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 09 May 2024, 11:33

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:31

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:29

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:28

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 09 May 2024, 11:25

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 09 May 2024, 05:43

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 09 May 2024, 05:37

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 08 May 2024, 22:47

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 08 May 2024, 20:03

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 08 May 2024, 19:10

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 08 May 2024, 19:01

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 07 May 2024, 23:36

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 07 May 2024, 23:21

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 07 May 2024, 21:05

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 07 May 2024, 20:49

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 07 May 2024, 20:46

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 07 May 2024, 20:46

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 07 May 2024, 20:43

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 07 May 2024, 20:42

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 07 May 2024, 20:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
68 Posts - 45%
heezulia
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
5 Posts - 3%
prajai
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
4 Posts - 3%
Jenila
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
2 Posts - 1%
jairam
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
1 Post - 1%
M. Priya
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
1 Post - 1%
kargan86
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
9 Posts - 4%
prajai
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
6 Posts - 3%
Jenila
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
4 Posts - 2%
Rutu
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
2 Posts - 1%
jairam
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_m10தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை - திட்டமிடுதல்.


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 26 May 2010, 18:22

எனது 5000 மாவது பதிவு

முன்னொரு காலத்தில் அந்த நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். அரண்மனைக்குச் சென்று 'எனக்கு அரசர் பதவி வேண்டும்' என்று கேட்டால் போதும், அரியணையில் அமர்த்தி முடிசூட்டிவிடுவார்கள். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த
நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் மக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும்
புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

மேற்கண்ட கதையை கவனியுங்கள்!

''ஐந்து ஆண்டுக்குப் பிறகு காடும் சாவும்தான் விதி'' என்ற விதியை மதியால் எப்படி மாற்றினான்?

வறுமையும், நோயும், மன உளைச்சலும், அவமதிப்பும்தான் நம்முடைய விதியா?

பசி, பிணி, மூப்பு, சாக்காடுதான் தலையெழுத்தா? எப்படியும் மரணம்தான் என்பது ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் வகுக்கப்பட்ட விதியாக இருந்தாலும், இறுதிக் காலத்தை ஏன் இறுகிப்போன காலமாகக் கழிக்க வேண்டும்?

அதற்காகத் துல்லியமாகத் திட்டமிடுங்கள்.

எப்போது செய்ய வேண்டும் என்று அழகாகத் திட்டமிடுங்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 26 May 2010, 18:47

திட்டமி்ட்டு எழுதப்பட்ட கதை நிறைந்த படிப்பினைய தந்துள்ளது பிச்ச நன்றி உங்கள் திட்டமிடலுக்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 26 May 2010, 18:48

சபீர் wrote:திட்டமி்ட்டு எழுதப்பட்ட கதை நிறைந்த படிப்பினைய தந்துள்ளது பிச்ச நன்றி உங்கள் திட்டமிடலுக்கு
நன்றி சபீர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 26 May 2010, 18:58

சிறந்த கதை பிச்ச சார் நன்றி............ தன்னம்பிக்கை - திட்டமிடுதல். 68516




தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 26 May 2010, 19:00

lekshmanan wrote:சிறந்த கதை பிச்ச சார் நன்றி............ தன்னம்பிக்கை - திட்டமிடுதல். 68516
அதே கதை,
அதே காப்பி - பேஸ்ட்

தன்னம்பிக்கை - திட்டமிடுதல். 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 26 May 2010, 19:05

சூப்பர் தல இருந்தாலும் நா உங்ககிட்டேருன்ந்து இன்னும் எதிர்பாக்கறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் தன்னம்பிக்கை - திட்டமிடுதல். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 26 May 2010, 19:07

பிச்ச வாத்தியாரே.. இவ்வளவு அழகா நீதிக்கதை சொல்லி இருக்கீங்க.... உங்களுக்கு என்ன பரிசு தரலாம்...உண்மையாகவே கூ|றுகிறேன்.. அருமையான் கதை.. பின்பற்ற முயற்சி செய்பவர்கள் வெல்லுவது உறுதி...இன்னும் இது போன்ற கதைகளை தர வேண்டும்...வாழ்த்துக்கள்



தன்னம்பிக்கை - திட்டமிடுதல். Aதன்னம்பிக்கை - திட்டமிடுதல். Aதன்னம்பிக்கை - திட்டமிடுதல். Tதன்னம்பிக்கை - திட்டமிடுதல். Hதன்னம்பிக்கை - திட்டமிடுதல். Iதன்னம்பிக்கை - திட்டமிடுதல். Rதன்னம்பிக்கை - திட்டமிடுதல். Aதன்னம்பிக்கை - திட்டமிடுதல். Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 26 May 2010, 19:12

Aathira wrote:பிச்ச வாத்தியாரே.. இவ்வளவு அழகா நீதிக்கதை சொல்லி இருக்கீங்க.... உங்களுக்கு என்ன பரிசு தரலாம்...உண்மையாகவே கூ|றுகிறேன்.. அருமையான் கதை.. பின்பற்ற முயற்சி செய்பவர்கள் வெல்லுவது உறுதி...இன்னும் இது போன்ற கதைகளை தர வேண்டும்...வாழ்த்துக்கள்
தன்னம்பிக்கை - திட்டமிடுதல். 678642 தன்னம்பிக்கை - திட்டமிடுதல். 678642 தன்னம்பிக்கை - திட்டமிடுதல். 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 26 May 2010, 19:17

பிச்ச wrote:
சபீர் wrote:திட்டமி்ட்டு எழுதப்பட்ட கதை நிறைந்த படிப்பினைய தந்துள்ளது பிச்ச நன்றி உங்கள் திட்டமிடலுக்கு
நன்றி சபீர்.

இதுவும் ஓரு திட்டமிடலா பிச்ச பீர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக