புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
Page 8 of 14 •
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
First topic message reminder :
'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து
'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பாயில கெடந்த பயல மடியில தூக்கிவச்சுக் கொஞ்சிட்டு, சட்டைக்கு உள்கூட்ல கையவிட்டு தங்கச் சங்கிலிய எடுத்துப் பிள்ள கழுத்துல போட்டு, "கைக்காசு போட்டுச் செய்முறை செய்ய வக்கில்லைன்னாலும், கடனத் திருப்பிக் கட்டத் தெம்பு இருக்கு தாயி. எம் மகளுக்கு ஒன் ஆத்தா போட்ட சங்கிலிய ஒம் மகனுக்கு நான் திருப்பிப் போட்டிருக்கேன்"னு சொல்லி வயசான கண்ல அழுதாரு.
களி தின்டுக்கிட்டிருந்தவ தன்னையறியாம எச்சிக் கையெடுத்துக் கும்பிட்டா பெரியவர.
கோழியடிச்சு கும்பா நெறையக் கொழம்புவச்சு நல்லெண்ண ஊத்தி எலும்பில்லாத கறியா எடுத்து, "தின்னு மகளே தின்னு"ன்னு திங்கவச்சு அவ ஒடம்பத் தேத்த, மூணாம் நாளே கண்ணு கசிய ஆரம்பிச்சிருச்சு காம்பு. மொதல்ல மஞ்சளா வருது சீம்பாலு. முட்டி முட்டி முண்டுது பிள்ள. யப்பே! ஒக்காந்துக்கிட்டே பறக்கிற மாதிரியில்ல இருக்கு பயபுள்ள பால் குடிக்கிறது!
கடவுளே! இதுல யார் சொகம் பெருசு..? குடுக்கிற தாய்க்கா? இல்ல குடிக்கிற பிள்ளைக்கா? இதுல ரெண்டு சொகம் எங்கயிருக்கு? பிள்ள சொகமும் சேந்து தாய்க்கு தாய் சொகமும் சேந்து பிள்ளைக்கு.
மூணாம் நாளு வந்து குமுஞ்சுபோனாக மொதலக்கம்பட்டி ஆளுக. அரிசி ஒரு பையில பேறுகாலச் செலவு ஒரு பையில நாலஞ்சு வெடக்கோழிக் குஞ்சுக கையில. ஆணும் பொண்ணுமாப் பத்துப் பன்னெண்டு பேர் வந்து, பிள்ள இடுப்புல ஒரு வெள்ளி அருணாக்கயிறையும் கட்டிவிட்டுட்டு, பெறந்து வந்துட்டாண்டா பீம மகராசான்னு பெருமையும் பேசிக்கிட்டாக.
பேறுகாலமான வீடு தீட்டு வீடு. ஒம்போது நாள் தீட்டுக் கழியாம அங்க யாரும் தங்குறதுமில்ல உங்குறதுமில்ல. செய்மொறையச் செஞ்சுபுட்டு, போயிட்டு வாரோம்னு பொழுதிருக்கப் போயிட்டாக. தாயும் பிள்ளையும் படுத்திருக்கிற பாயச்சுத்தி வட்டமா ஒரு சாம்பல்கோடு போட்டுவிடுவாக. அப்பிடிச் செஞ்சாப் பேய் பிசாசு அண்டாதுங்கிறது நம்பிக்கை. ஆனா, ஈ எறும்பு தாண்டாதுங்கிறதுதான் எதார்த்தம். அந்தச் சாம்பல் வட்டத்துக்குள்ள படுத்திருக்கா கருவாச்சி. பல்லு மொளைக்காத பிள்ள வாயில கட்ட வெரல வச்சுக் "கடி கடி"ங்கிறா. இளம் ஈறு அழுத்த அழுத்த என்னென்னமோ ஆகுது பிள்ள பெத்த ஒடம்புக்குள்ள.
"இப்பப் பாயில கெடக்குற நீயா மகனே... பத்து மாசம் படுத்திருந்த என் வகுத்துக்குள்ள? ஒன்னிய நான் காப்பாத்தப்போறனா? என்னிய நீ காப்பாத்தப்போறயா? பெறந்து மண்ணுல விழுந்ததுல யிருந்து நீ அழுகவே இல்லையே மகனே. ஒனக்கும் சேத்து அழுதுட்டா ஆத்தா அதே போதும்னு நெனைக்கிறியா? நீ வகுத்துக்குள்ள வளந்து வரல மகனே என் வைராக்கியத்துல வளந்து வந்திருக்க. பொழைச்சுக் காமிக்கணுமடா இந்த பூமியில. அஞ்சாம் நாளே காஞ்சு விழுந்து போச்சப்பா ஒந்தொப்பூழ்க் கொடி. ஆனா, எந்த நாள்லயும் விழுந்திரக் கூடாதுடா ஒன் வைராக்கியம். முள்ளுல கெடக்குடா மகனே ஆத்தா முந்தான வளந்து ஆளாகி வந்து எடுத்துவிடு."
கையக் கால ஒதறிக் காடாவெளக்கு வெளிச்சத்துல சிரிக்குது பிள்ள.
மொதலக்கம்பட்டி ஆளுக குடுத்த பேறுகாலச் செலவுலயிருந்து காயங்கருப்பட்டி சேக்குறாக ரங்கம்மாவும் பவளமும். மஞ்சள் கடுகு சுக்கு மௌகு திப்பிலி தேசாவதாரம் ஓமம் சதகுப்ப சித்தரத்த வசம்பு பெருங் காயம் வால்மௌகு எல்லாத்தையும் வறட்டோடுல போட்டு வறுத்தாக. ஒரல்ல போட்டு நொறுங்க இடிச்சாக. ஒரு சிரட்டை மேல எளந்துணி போட்டு அதுல இடிச்சதப் போட்டுச் சலிச்சாக. அரை வீச வெள்ளப்பூட எடுத்துப் பல்லு பல்லா உரிச்சு எளஞ்சூட்ல நல்லெண்ணெ விட்டு அரைவேக்காடா வதக்குனாக. இடிச்ச பொடிய அதுல கொட்டி ஒடைச்ச கருப்பட்டிய உள்ள போட்டு, பெரட்டு பெரட்டுன்னு பெரட்டியெடுத்தாக,
ஒரு பஞ்சாமிர்தப் பதத்துக்கு வந்ததும் மாமியாளுக்கு மருமக ஊத்துற மாதிரி பட்டும் படாம நெய்விட்டு விளாவி, ஒரே பதமா எறக்கி உறியில தூக்கி வச்சுட்டாக. உறியில வச்சுட்டா எறும்பு கிறும்பு ஏறாது நாய் பூன நக்காது எப்பப்ப வேணுமோ அப்பப்பப் பிள்ள பெத்தவ எடுத்து தின்டுக்கிட்டேயிருக்க வேண்டியது தான். அத்தன சக்தி அந்தக் காயங் கருப்பட்டிக்கு. ஊறாத பாலையும் இழுத்து ஊத்திப்பிடும் ஊத்தி.
யாரும் நெனைக்கல. அஞ்சாம் நாளு குளுர் காய்ச்சல் வந்திருச்சு பிள்ளைக்கு. மழையில நனைஞ்சு பிள்ளைக்கு மார்ச் சளி புடிச்சிருந்துச்சு அதான் காய்ச்சல் வந்திருச்சு. இன்னிக்கி நாளைக்குள்ள எறங்கிரணும் காய்ச்சல். இல்லாட்டி ஜன்னி வந்தாலும் வந்திரும். பிள்ளைக்கு இப்பவே பத்து போட்டாகணும். அடுப்புல வறட்டோட்ட வச்சு அளவா கேப்ப மாவ வச்சா. வேணுங்கிற தண்ணிவிட்டுக் கெட்டிப்படாமக் கிண்டுனா. களிப் பதத்துக்கு அது கூடிவாரப்ப ஒரு சிட்டிகை குங்குமத்தப் போட்டுக் கொழகொழன்னு எறக்குனா. ராமர் அணிலுக்குக் கோடு போட்டார்னு சொல்ற மாதிரி, அதை எடுத்து, பிள்ள உச்சந்தலையில மூணு வெரலு இழுகிவிட்டா நெத்தியில பத்துப் போட்டா அடிக் காது வரைக்கும் இழுத்து இழுகிவிட்டா. ரெண்டு நாளா சூடு கொஞ்சம் கொறையுதே தவிர அடங்கல. "எம்பிள்ளைக்கு ஒண்ணும் ஆகிறாதே..?"பெத்த வகுறு நடுங்குது கருவாச்சிக்கு.
பிள்ளைக்கு ஒண்ணும் ஆகல அவளுக்குத்தான் ஒண்ணு ஆகிப்போச்சு.
காய்ச்ச வந்த பிள்ள தாய் மார்புல வாய் வைக்காதில்லையா... ரெண்டு நாளா பிள்ள குடிக்காததுனால கட்டிப்போச்சு மார்பு கருவாச்சிக்கு. நெஞ்சு நெறபெருக்கா இருப்பதனால விண்ணு விண்ணுன்னு தெறிக்குது விட்டு விட்டு. பொதுவாப் பேறுகாலம் ஆன பொம்பளைகளுக்கு ரெண்டு வலி வரும். வகுத்துல சுண்டு வலி மாருல நெஞ்சு வலி.
சுண்டு வலி வரல கருவாச்சிக்கு நெஞ்சு வலி வந்திருச்சு இப்ப. சொல்லிவிட்டதும் கையில இருந்த கஞ்சித் தட்டத் தரையில வச்சுட்டுக் கூடவே ஓடி வந்துட்டா மருத்துவச்சி சீலையம்மா. எத்தன மார்புக்கு எடுத்து விட்டவ? இது அவளுக்கு லேசு.
"அஞ்சாத பயப்படாத செத்தவெடத்துல சொடக்கெடுத்த வெரலு மாதிரி சொகப்படுத்திடறேன் தாயி."
[You must be registered and logged in to see this image.]
பாதி கிழிஞ்ச பழைய சீலய எடுத்தா. எளம் வெந்நியில நனைச்சா. முறுக்கிப் புழிஞ்சா. கருவாச்சிய மண்டிபோட்டு ஒக்காரவச்சா. கனத்த மார்பு ரெண்டையும் துணிக்குள்ள அள்ளிப் போட்டுக் கட்டிப் பின் பக்கம் முதுகுல ஒரு சுத்துச் சுத்தி முடிச்சுப் போட்டா. மார்பு தரை பாக்கக் குனின்னா குனிஞ்சா இப்ப மொழங்கால அவ முதுகுல அழுத்தி இறுக்குறா சீலய. ஈரத்துணி வழியா சாரை சாரையா ஒழுகுதய்யா பாலு.
தாய்ப்பாலே சுத்தம் இது வடிகட்டின தாய்ப்பாலு. மருத்துவச்சி கசக்காமக் கசக்குறா. அழுத்தாம அழுத்துறா. காம்பு வழியா வீசம்படி பால் வெளி யேறுது. பாலுக்குப் பின்னாலயே வாரேன் வாரேன்னு வலியும் வெளியேறுது.
"இப்ப எப்படி இருக்கு தாயி?"
"வகுத்துலயிருந்து ஒரு பிள்ளைய எறக்கிவச்ச மாதிரி இப்ப நெஞ்சிலிருந்து ஒரு பிள்ளைய எறக்கிவைக்கிற மாதிரியிருக்கு."
ரெண்டு பேரும் முதுகக் காட்டிக்கிட்டு சுவத்துப் பக்கம் நின்னு வைத்தியம் பாத்து முடிச்சாகளா... திரும்பிப் பாத்தா பிள்ளையப் போட்டுவச்ச பாய் கெடக்கு பாயில போட்டுவச்ச பிள்ளையக் காணோம்!
களி தின்டுக்கிட்டிருந்தவ தன்னையறியாம எச்சிக் கையெடுத்துக் கும்பிட்டா பெரியவர.
கோழியடிச்சு கும்பா நெறையக் கொழம்புவச்சு நல்லெண்ண ஊத்தி எலும்பில்லாத கறியா எடுத்து, "தின்னு மகளே தின்னு"ன்னு திங்கவச்சு அவ ஒடம்பத் தேத்த, மூணாம் நாளே கண்ணு கசிய ஆரம்பிச்சிருச்சு காம்பு. மொதல்ல மஞ்சளா வருது சீம்பாலு. முட்டி முட்டி முண்டுது பிள்ள. யப்பே! ஒக்காந்துக்கிட்டே பறக்கிற மாதிரியில்ல இருக்கு பயபுள்ள பால் குடிக்கிறது!
கடவுளே! இதுல யார் சொகம் பெருசு..? குடுக்கிற தாய்க்கா? இல்ல குடிக்கிற பிள்ளைக்கா? இதுல ரெண்டு சொகம் எங்கயிருக்கு? பிள்ள சொகமும் சேந்து தாய்க்கு தாய் சொகமும் சேந்து பிள்ளைக்கு.
மூணாம் நாளு வந்து குமுஞ்சுபோனாக மொதலக்கம்பட்டி ஆளுக. அரிசி ஒரு பையில பேறுகாலச் செலவு ஒரு பையில நாலஞ்சு வெடக்கோழிக் குஞ்சுக கையில. ஆணும் பொண்ணுமாப் பத்துப் பன்னெண்டு பேர் வந்து, பிள்ள இடுப்புல ஒரு வெள்ளி அருணாக்கயிறையும் கட்டிவிட்டுட்டு, பெறந்து வந்துட்டாண்டா பீம மகராசான்னு பெருமையும் பேசிக்கிட்டாக.
பேறுகாலமான வீடு தீட்டு வீடு. ஒம்போது நாள் தீட்டுக் கழியாம அங்க யாரும் தங்குறதுமில்ல உங்குறதுமில்ல. செய்மொறையச் செஞ்சுபுட்டு, போயிட்டு வாரோம்னு பொழுதிருக்கப் போயிட்டாக. தாயும் பிள்ளையும் படுத்திருக்கிற பாயச்சுத்தி வட்டமா ஒரு சாம்பல்கோடு போட்டுவிடுவாக. அப்பிடிச் செஞ்சாப் பேய் பிசாசு அண்டாதுங்கிறது நம்பிக்கை. ஆனா, ஈ எறும்பு தாண்டாதுங்கிறதுதான் எதார்த்தம். அந்தச் சாம்பல் வட்டத்துக்குள்ள படுத்திருக்கா கருவாச்சி. பல்லு மொளைக்காத பிள்ள வாயில கட்ட வெரல வச்சுக் "கடி கடி"ங்கிறா. இளம் ஈறு அழுத்த அழுத்த என்னென்னமோ ஆகுது பிள்ள பெத்த ஒடம்புக்குள்ள.
"இப்பப் பாயில கெடக்குற நீயா மகனே... பத்து மாசம் படுத்திருந்த என் வகுத்துக்குள்ள? ஒன்னிய நான் காப்பாத்தப்போறனா? என்னிய நீ காப்பாத்தப்போறயா? பெறந்து மண்ணுல விழுந்ததுல யிருந்து நீ அழுகவே இல்லையே மகனே. ஒனக்கும் சேத்து அழுதுட்டா ஆத்தா அதே போதும்னு நெனைக்கிறியா? நீ வகுத்துக்குள்ள வளந்து வரல மகனே என் வைராக்கியத்துல வளந்து வந்திருக்க. பொழைச்சுக் காமிக்கணுமடா இந்த பூமியில. அஞ்சாம் நாளே காஞ்சு விழுந்து போச்சப்பா ஒந்தொப்பூழ்க் கொடி. ஆனா, எந்த நாள்லயும் விழுந்திரக் கூடாதுடா ஒன் வைராக்கியம். முள்ளுல கெடக்குடா மகனே ஆத்தா முந்தான வளந்து ஆளாகி வந்து எடுத்துவிடு."
கையக் கால ஒதறிக் காடாவெளக்கு வெளிச்சத்துல சிரிக்குது பிள்ள.
மொதலக்கம்பட்டி ஆளுக குடுத்த பேறுகாலச் செலவுலயிருந்து காயங்கருப்பட்டி சேக்குறாக ரங்கம்மாவும் பவளமும். மஞ்சள் கடுகு சுக்கு மௌகு திப்பிலி தேசாவதாரம் ஓமம் சதகுப்ப சித்தரத்த வசம்பு பெருங் காயம் வால்மௌகு எல்லாத்தையும் வறட்டோடுல போட்டு வறுத்தாக. ஒரல்ல போட்டு நொறுங்க இடிச்சாக. ஒரு சிரட்டை மேல எளந்துணி போட்டு அதுல இடிச்சதப் போட்டுச் சலிச்சாக. அரை வீச வெள்ளப்பூட எடுத்துப் பல்லு பல்லா உரிச்சு எளஞ்சூட்ல நல்லெண்ணெ விட்டு அரைவேக்காடா வதக்குனாக. இடிச்ச பொடிய அதுல கொட்டி ஒடைச்ச கருப்பட்டிய உள்ள போட்டு, பெரட்டு பெரட்டுன்னு பெரட்டியெடுத்தாக,
ஒரு பஞ்சாமிர்தப் பதத்துக்கு வந்ததும் மாமியாளுக்கு மருமக ஊத்துற மாதிரி பட்டும் படாம நெய்விட்டு விளாவி, ஒரே பதமா எறக்கி உறியில தூக்கி வச்சுட்டாக. உறியில வச்சுட்டா எறும்பு கிறும்பு ஏறாது நாய் பூன நக்காது எப்பப்ப வேணுமோ அப்பப்பப் பிள்ள பெத்தவ எடுத்து தின்டுக்கிட்டேயிருக்க வேண்டியது தான். அத்தன சக்தி அந்தக் காயங் கருப்பட்டிக்கு. ஊறாத பாலையும் இழுத்து ஊத்திப்பிடும் ஊத்தி.
யாரும் நெனைக்கல. அஞ்சாம் நாளு குளுர் காய்ச்சல் வந்திருச்சு பிள்ளைக்கு. மழையில நனைஞ்சு பிள்ளைக்கு மார்ச் சளி புடிச்சிருந்துச்சு அதான் காய்ச்சல் வந்திருச்சு. இன்னிக்கி நாளைக்குள்ள எறங்கிரணும் காய்ச்சல். இல்லாட்டி ஜன்னி வந்தாலும் வந்திரும். பிள்ளைக்கு இப்பவே பத்து போட்டாகணும். அடுப்புல வறட்டோட்ட வச்சு அளவா கேப்ப மாவ வச்சா. வேணுங்கிற தண்ணிவிட்டுக் கெட்டிப்படாமக் கிண்டுனா. களிப் பதத்துக்கு அது கூடிவாரப்ப ஒரு சிட்டிகை குங்குமத்தப் போட்டுக் கொழகொழன்னு எறக்குனா. ராமர் அணிலுக்குக் கோடு போட்டார்னு சொல்ற மாதிரி, அதை எடுத்து, பிள்ள உச்சந்தலையில மூணு வெரலு இழுகிவிட்டா நெத்தியில பத்துப் போட்டா அடிக் காது வரைக்கும் இழுத்து இழுகிவிட்டா. ரெண்டு நாளா சூடு கொஞ்சம் கொறையுதே தவிர அடங்கல. "எம்பிள்ளைக்கு ஒண்ணும் ஆகிறாதே..?"பெத்த வகுறு நடுங்குது கருவாச்சிக்கு.
பிள்ளைக்கு ஒண்ணும் ஆகல அவளுக்குத்தான் ஒண்ணு ஆகிப்போச்சு.
காய்ச்ச வந்த பிள்ள தாய் மார்புல வாய் வைக்காதில்லையா... ரெண்டு நாளா பிள்ள குடிக்காததுனால கட்டிப்போச்சு மார்பு கருவாச்சிக்கு. நெஞ்சு நெறபெருக்கா இருப்பதனால விண்ணு விண்ணுன்னு தெறிக்குது விட்டு விட்டு. பொதுவாப் பேறுகாலம் ஆன பொம்பளைகளுக்கு ரெண்டு வலி வரும். வகுத்துல சுண்டு வலி மாருல நெஞ்சு வலி.
சுண்டு வலி வரல கருவாச்சிக்கு நெஞ்சு வலி வந்திருச்சு இப்ப. சொல்லிவிட்டதும் கையில இருந்த கஞ்சித் தட்டத் தரையில வச்சுட்டுக் கூடவே ஓடி வந்துட்டா மருத்துவச்சி சீலையம்மா. எத்தன மார்புக்கு எடுத்து விட்டவ? இது அவளுக்கு லேசு.
"அஞ்சாத பயப்படாத செத்தவெடத்துல சொடக்கெடுத்த வெரலு மாதிரி சொகப்படுத்திடறேன் தாயி."
[You must be registered and logged in to see this image.]
பாதி கிழிஞ்ச பழைய சீலய எடுத்தா. எளம் வெந்நியில நனைச்சா. முறுக்கிப் புழிஞ்சா. கருவாச்சிய மண்டிபோட்டு ஒக்காரவச்சா. கனத்த மார்பு ரெண்டையும் துணிக்குள்ள அள்ளிப் போட்டுக் கட்டிப் பின் பக்கம் முதுகுல ஒரு சுத்துச் சுத்தி முடிச்சுப் போட்டா. மார்பு தரை பாக்கக் குனின்னா குனிஞ்சா இப்ப மொழங்கால அவ முதுகுல அழுத்தி இறுக்குறா சீலய. ஈரத்துணி வழியா சாரை சாரையா ஒழுகுதய்யா பாலு.
தாய்ப்பாலே சுத்தம் இது வடிகட்டின தாய்ப்பாலு. மருத்துவச்சி கசக்காமக் கசக்குறா. அழுத்தாம அழுத்துறா. காம்பு வழியா வீசம்படி பால் வெளி யேறுது. பாலுக்குப் பின்னாலயே வாரேன் வாரேன்னு வலியும் வெளியேறுது.
"இப்ப எப்படி இருக்கு தாயி?"
"வகுத்துலயிருந்து ஒரு பிள்ளைய எறக்கிவச்ச மாதிரி இப்ப நெஞ்சிலிருந்து ஒரு பிள்ளைய எறக்கிவைக்கிற மாதிரியிருக்கு."
ரெண்டு பேரும் முதுகக் காட்டிக்கிட்டு சுவத்துப் பக்கம் நின்னு வைத்தியம் பாத்து முடிச்சாகளா... திரும்பிப் பாத்தா பிள்ளையப் போட்டுவச்ச பாய் கெடக்கு பாயில போட்டுவச்ச பிள்ளையக் காணோம்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கருவாச்சிக்குத் தெரியாமப் பிள்ளையத் தூக்கிட்டுப்போன சுப்பஞ் செட்டியாரு நேர வந்து நின்னாரு, சடையத்தேவர் வீட்டு வாசல்ல.
"யப்பா... சடையத் தேவா! பெரிய மனுசா! எங்கையில இருக்கிறது யாருன்னு கண்ணக்கொண்டு பாரப்பா. ஒன் வம்ச வாரிசு வந்திருக்கப்பா ஓங் குலக்கொழுந்து. ஒன்னியவே உரிச்சு வச்சிருக்கான் பாரு களவாணிப் பய. ஓங்கிட்ட சொத்துக்கேட்டு வரலப்பா முத்தங்கேட்டு வந்திருக்கான். ஏலே பயலே! முழிச்சு பார்றா ஒன் தாத்தன... உரிமை இல்லேன்னு போயிருமா? எங்க... ஒரு எத்து எத்தி எச்சியத் துப்பு கெழவன் மேல. வம்பு புடிச்சவன்டா ஒன் தாத்தன் அவன் வைராக்கியத்துல எட்டி ஒரு மிதி மிதி!"
ஆடுறா ராமா ஆடுறானு குரங்கக் குட்டிக்கரணம் போட வைப்பானா இல்லையா குரங்காட்டி... அந்த மாதிரி, கையில பிள்ளைய வச்சுக் கிட்டே சகல வித்தையும் பண்ணிப் பாக்குறாரு சுப்பஞ் செட்டியாரு சாயல சடையத் தேவரு.
மேனகை பிள்ளையத் தூக்கிட்டு வந்து காமிக்க, விசுவாமித்திரர் வச்சிருந்தாரு பாருங்க ஒரு மூஞ்சி... அந்த மூஞ்சிய இன்னைக்கு மட்டும் குடுங்கன்னு இரவல் வாங்கி மாட்டிக் கிட்டு, கடைவாய்ப் பல்லுல சிக்குன கறிய வெளக்கமாத்துக்குச்சி ஒடிச்சுப் பல்லுக் குத்திக்கிட்டே பராக்கு பாத்துக்கிட்டிருக்காரு சடையத் தேவரு.
"பேரு வையப்பா பேரனுக்கு" கடைசியா ஒரு அம்ப விட்டுப் பாத்தாரு சுப்பஞ் செட்டியாரு.
பார்வை பிள்ள பக்கம் விழுந்திரு மோன்னு வலிய முயற்சி பண்ணி மூஞ்சிய முதுகுப் பக்கம் வெச்சுக்கிட்டு, இன்னிக்கி மழை கிழ வருமான்னு அண்ணாந்து ஆகாயம் பாத்துக்கிட்டே சாவகாசமாச் சொல்றாரு சடையத் தேவரு "நாயி பேயி பன்னிக்கெல்லாம் நான் பேரு வைக்கிறதில்லப்பா!"
சுண்டிச் சூம்பிக் கறுத்துப்போச்சு சுப்பஞ் செட்டியாரு மூஞ்சி. சீ! இந்தாள மனுசக் கணக்குல சேக்க முடியாதுன்னு நெனச்சுக்கிட்டாரு மனசுக்குள்ள. "பிள்ளையக் காட்டிக் கருவாச்சிக்கு நல்லது பண்ணிப்புடலாம்னு நெனச்ச நெனப்புல மண்ணடிச்சுட்டானே மனுசன். சாகப்போற கெழட்டு மாட்டுக்கே இம்புட்டு வீம்பு இருந்தா, சல்லிக்கட்டுக் காள ஒனக்கு எம்புட்டு வீம்பு இருக்கும்? ஒரு நாளைக்கு ஒன்னியத் தேடி வருவான்டா கெழவன். அன்னிக்கு ஒண்ணுக்கடி ஒந் தாத்தன் மடியில" பிள்ளையத் தூக்கிக்கிட்டு விறு விறு விறுனு வெளியேறிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.
சுப்பஞ் செட்டியார் பிள்ளையத் தூக்கி நடக்க, முதுகுல வச்சிருந்த மூஞ்சியத் திருப்பி, பேரன் மூஞ்சியில தன் சாடை தெரியுதா பாத்திராலாம்னு சடையத் தேவர் நெனைக்க, சுப்பஞ் செட்டியார் முதுகுதான் தெரியுது பிள்ள மூஞ்சி தெரியல போய்ட்டாரு மனுசன்.
அதுக்குள்ள பிள்ளையக் காணோமேனு கதறி, நெஞ்சு வெந்து, அடிவகுத்துக் குடலு அந்து வந்துக்கிட்டிருக்காக கருவாச்சியும் வைத்தியச்சியும். "உசுரு போயி உசுரு வந்துருச்சு எங்களுக்கு. காய்ச்ச அடிக்கிற பிள்ளய எங்க தூக்கிட்டுப் போயிட்டீக எங்களக் கேக்காம?"
"வேறொண்ணுமில்ல ஆத்தா... தப்பையை வச்சுக் கட்டி நாய் வால நிமித்தலாம்னு நெனச்சேன். தப்பையே வளஞ்சுபோச்சு வந்துட்டேன்."
"என்ன சொல்றீக?"
"ஒடஞ்சு போன குடும்பத்த இந்தப் பச்ச மண்ண வச்சு ஒட்டவைக்கலாம்னு பாத்தேன் நடக்கல. பேர் வைக்கக்கூட யோக்யதை இல்ல. பெரிய மனுசனாம் பெரிய மனுசன்."
"மதியாத வாசப்படி மிதிக்க வச்சுட்டீகளே, எம் பிள்ளைய. பெத்துத் தரையில விழுந்தன்னைக்கே பேரும் வச்சிட்டனே எம் பிள்ளைக்கு."
"என்ன பேரு தாயி?"
"அழகு சிங்கம்."
"போடு அப்படிப் போடு. அடிச்சுக் கெளப்புடா தங்கம், அழகு சிங்கம்." பிள்ளையத் தலைக்கு மேல தூக்கி ரெண்டு சுத்துச் சுத்தி ஆனந்தக் கூத்தாடி மகிந்து மலந்துபோனாரு சுப்பஞ் செட்டியாரு. அவரு போட்டுவிட்ட தங்கச் சங்கிலிய வாயில கவ்விச் சப்பிச் சப்புக்கொட்டுது சவலப் பிள்ள. அந்தத் தங்கச் சங்கிலிதான் அவர் பொழச்ச பொழப்பையே பொரட்டிப் போடப்போகுதுனு அப்பத் தெரியாது பாவம் அவருக்கு.
"யப்பா! அக்கா வந்திருக்கா ஊருலயிருந்து."
உச்சியிலிருந்த பிள்ளைய உச்சுனாப்புல எறக்கி கருவாச்சி கையில குடுத்துட்டு, தகவல் சொல்ல வந்த எளைய மகளப் பாத்துக் கேக்குறாரு சுப்பஞ் செட்டியாரு "தனியா வந்திருக் காளா? தொணையா வந்திருக்காளா?"
"தனியாத்தான் வந்திருக்கா."
சொன்னது சொல்லு இல்ல காதுல தச்ச முள்ளு. மூத்த மக என்னா வேசங்கட்டி வந்திருக் காளோ... நெஞ்சப் புடிச்சுக் கிட்டே கெழட்டு நடை நடந்துபோறாரு சுப்பஞ் செட்டியாரு.
ஏறு வெயிலு, முள் முருங்கை மரத்து நெழல்ல பள்ளம் பறிச்சுப் படுத்திருக்கு கோழி. நல்லவகளப் பாத்தாலும், கெட்டவ களப் பாத்தாலும் உர்ருனு ஒரே மாதிரி உறுமிட்டுத் திரும்பவும் கண்ண மூடி அனத்திக்கிட்டே படுத்துக்கெடக்கு சொகமில்லாத ஒரு சொறி நாயி. காத்து இல்லாத சித்திரை மாத்தையில மேலயும் கீழயும் ஆடி அடங்குது காக்கா உக்காந்து போன வேப்பங்கொப்பு. பூனக்குட்டி ஒண்ணு உக்காந்திருக்கு வளவிப் பொதியப் பொத்திவச்ச கம்பளி மேல. வீட்டுக் குள்ள நொழையிறாக தகப்பனும் மகளும்.
"மகளே கனகம்! என்னாத்தா இது? மூஞ்சி வீங்கிப்போயி வந்திருக்கவ?"
"அது ஒண்ணும் வேற வீக்கமில்லப்பா... பொன்னுக்கு வீங்கி" தேங்காய்க்கு ஒரு கல்லெறிய மாங்கா விழுகிற மாதிரி, மூத்த வளக் கேள்வி கேட்டா எளையவ பட்டுன்னு பட்டாசு வெடிக்குறா.
புளிச்ச தண்ணிப் பானை யில ஊறிக் கெடக்கற சோளக் கஞ்சிக்கு மறுமாத்தமா பச்ச மொளகா வெங்காயம் வதக்கி, உப்புக் கருவாடு வறுக்க அடுப்புப் பத்தவைக்க ஆரம்பிச்சுட்டா பவளம்.
"ஒத்தையா வந்திருக்கி யேம்மா."
"யப்பா... சடையத் தேவா! பெரிய மனுசா! எங்கையில இருக்கிறது யாருன்னு கண்ணக்கொண்டு பாரப்பா. ஒன் வம்ச வாரிசு வந்திருக்கப்பா ஓங் குலக்கொழுந்து. ஒன்னியவே உரிச்சு வச்சிருக்கான் பாரு களவாணிப் பய. ஓங்கிட்ட சொத்துக்கேட்டு வரலப்பா முத்தங்கேட்டு வந்திருக்கான். ஏலே பயலே! முழிச்சு பார்றா ஒன் தாத்தன... உரிமை இல்லேன்னு போயிருமா? எங்க... ஒரு எத்து எத்தி எச்சியத் துப்பு கெழவன் மேல. வம்பு புடிச்சவன்டா ஒன் தாத்தன் அவன் வைராக்கியத்துல எட்டி ஒரு மிதி மிதி!"
ஆடுறா ராமா ஆடுறானு குரங்கக் குட்டிக்கரணம் போட வைப்பானா இல்லையா குரங்காட்டி... அந்த மாதிரி, கையில பிள்ளைய வச்சுக் கிட்டே சகல வித்தையும் பண்ணிப் பாக்குறாரு சுப்பஞ் செட்டியாரு சாயல சடையத் தேவரு.
மேனகை பிள்ளையத் தூக்கிட்டு வந்து காமிக்க, விசுவாமித்திரர் வச்சிருந்தாரு பாருங்க ஒரு மூஞ்சி... அந்த மூஞ்சிய இன்னைக்கு மட்டும் குடுங்கன்னு இரவல் வாங்கி மாட்டிக் கிட்டு, கடைவாய்ப் பல்லுல சிக்குன கறிய வெளக்கமாத்துக்குச்சி ஒடிச்சுப் பல்லுக் குத்திக்கிட்டே பராக்கு பாத்துக்கிட்டிருக்காரு சடையத் தேவரு.
"பேரு வையப்பா பேரனுக்கு" கடைசியா ஒரு அம்ப விட்டுப் பாத்தாரு சுப்பஞ் செட்டியாரு.
பார்வை பிள்ள பக்கம் விழுந்திரு மோன்னு வலிய முயற்சி பண்ணி மூஞ்சிய முதுகுப் பக்கம் வெச்சுக்கிட்டு, இன்னிக்கி மழை கிழ வருமான்னு அண்ணாந்து ஆகாயம் பாத்துக்கிட்டே சாவகாசமாச் சொல்றாரு சடையத் தேவரு "நாயி பேயி பன்னிக்கெல்லாம் நான் பேரு வைக்கிறதில்லப்பா!"
சுண்டிச் சூம்பிக் கறுத்துப்போச்சு சுப்பஞ் செட்டியாரு மூஞ்சி. சீ! இந்தாள மனுசக் கணக்குல சேக்க முடியாதுன்னு நெனச்சுக்கிட்டாரு மனசுக்குள்ள. "பிள்ளையக் காட்டிக் கருவாச்சிக்கு நல்லது பண்ணிப்புடலாம்னு நெனச்ச நெனப்புல மண்ணடிச்சுட்டானே மனுசன். சாகப்போற கெழட்டு மாட்டுக்கே இம்புட்டு வீம்பு இருந்தா, சல்லிக்கட்டுக் காள ஒனக்கு எம்புட்டு வீம்பு இருக்கும்? ஒரு நாளைக்கு ஒன்னியத் தேடி வருவான்டா கெழவன். அன்னிக்கு ஒண்ணுக்கடி ஒந் தாத்தன் மடியில" பிள்ளையத் தூக்கிக்கிட்டு விறு விறு விறுனு வெளியேறிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.
சுப்பஞ் செட்டியார் பிள்ளையத் தூக்கி நடக்க, முதுகுல வச்சிருந்த மூஞ்சியத் திருப்பி, பேரன் மூஞ்சியில தன் சாடை தெரியுதா பாத்திராலாம்னு சடையத் தேவர் நெனைக்க, சுப்பஞ் செட்டியார் முதுகுதான் தெரியுது பிள்ள மூஞ்சி தெரியல போய்ட்டாரு மனுசன்.
அதுக்குள்ள பிள்ளையக் காணோமேனு கதறி, நெஞ்சு வெந்து, அடிவகுத்துக் குடலு அந்து வந்துக்கிட்டிருக்காக கருவாச்சியும் வைத்தியச்சியும். "உசுரு போயி உசுரு வந்துருச்சு எங்களுக்கு. காய்ச்ச அடிக்கிற பிள்ளய எங்க தூக்கிட்டுப் போயிட்டீக எங்களக் கேக்காம?"
"வேறொண்ணுமில்ல ஆத்தா... தப்பையை வச்சுக் கட்டி நாய் வால நிமித்தலாம்னு நெனச்சேன். தப்பையே வளஞ்சுபோச்சு வந்துட்டேன்."
"என்ன சொல்றீக?"
"ஒடஞ்சு போன குடும்பத்த இந்தப் பச்ச மண்ண வச்சு ஒட்டவைக்கலாம்னு பாத்தேன் நடக்கல. பேர் வைக்கக்கூட யோக்யதை இல்ல. பெரிய மனுசனாம் பெரிய மனுசன்."
"மதியாத வாசப்படி மிதிக்க வச்சுட்டீகளே, எம் பிள்ளைய. பெத்துத் தரையில விழுந்தன்னைக்கே பேரும் வச்சிட்டனே எம் பிள்ளைக்கு."
"என்ன பேரு தாயி?"
"அழகு சிங்கம்."
"போடு அப்படிப் போடு. அடிச்சுக் கெளப்புடா தங்கம், அழகு சிங்கம்." பிள்ளையத் தலைக்கு மேல தூக்கி ரெண்டு சுத்துச் சுத்தி ஆனந்தக் கூத்தாடி மகிந்து மலந்துபோனாரு சுப்பஞ் செட்டியாரு. அவரு போட்டுவிட்ட தங்கச் சங்கிலிய வாயில கவ்விச் சப்பிச் சப்புக்கொட்டுது சவலப் பிள்ள. அந்தத் தங்கச் சங்கிலிதான் அவர் பொழச்ச பொழப்பையே பொரட்டிப் போடப்போகுதுனு அப்பத் தெரியாது பாவம் அவருக்கு.
"யப்பா! அக்கா வந்திருக்கா ஊருலயிருந்து."
உச்சியிலிருந்த பிள்ளைய உச்சுனாப்புல எறக்கி கருவாச்சி கையில குடுத்துட்டு, தகவல் சொல்ல வந்த எளைய மகளப் பாத்துக் கேக்குறாரு சுப்பஞ் செட்டியாரு "தனியா வந்திருக் காளா? தொணையா வந்திருக்காளா?"
"தனியாத்தான் வந்திருக்கா."
சொன்னது சொல்லு இல்ல காதுல தச்ச முள்ளு. மூத்த மக என்னா வேசங்கட்டி வந்திருக் காளோ... நெஞ்சப் புடிச்சுக் கிட்டே கெழட்டு நடை நடந்துபோறாரு சுப்பஞ் செட்டியாரு.
ஏறு வெயிலு, முள் முருங்கை மரத்து நெழல்ல பள்ளம் பறிச்சுப் படுத்திருக்கு கோழி. நல்லவகளப் பாத்தாலும், கெட்டவ களப் பாத்தாலும் உர்ருனு ஒரே மாதிரி உறுமிட்டுத் திரும்பவும் கண்ண மூடி அனத்திக்கிட்டே படுத்துக்கெடக்கு சொகமில்லாத ஒரு சொறி நாயி. காத்து இல்லாத சித்திரை மாத்தையில மேலயும் கீழயும் ஆடி அடங்குது காக்கா உக்காந்து போன வேப்பங்கொப்பு. பூனக்குட்டி ஒண்ணு உக்காந்திருக்கு வளவிப் பொதியப் பொத்திவச்ச கம்பளி மேல. வீட்டுக் குள்ள நொழையிறாக தகப்பனும் மகளும்.
"மகளே கனகம்! என்னாத்தா இது? மூஞ்சி வீங்கிப்போயி வந்திருக்கவ?"
"அது ஒண்ணும் வேற வீக்கமில்லப்பா... பொன்னுக்கு வீங்கி" தேங்காய்க்கு ஒரு கல்லெறிய மாங்கா விழுகிற மாதிரி, மூத்த வளக் கேள்வி கேட்டா எளையவ பட்டுன்னு பட்டாசு வெடிக்குறா.
புளிச்ச தண்ணிப் பானை யில ஊறிக் கெடக்கற சோளக் கஞ்சிக்கு மறுமாத்தமா பச்ச மொளகா வெங்காயம் வதக்கி, உப்புக் கருவாடு வறுக்க அடுப்புப் பத்தவைக்க ஆரம்பிச்சுட்டா பவளம்.
"ஒத்தையா வந்திருக்கி யேம்மா."
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"ஒத்தையில வந்ததுனாலதான், ஒத்த உருண்ட சோளச்சோற வச்சு ஒப்பேறுது பொழப்பு. அக்காவோட மாமனும் சேந்து வந்திருந்தா நித்தம் எங்க போறது நெல்லுச் சோத்துக்கு?"
அடுப்பு இன்னும் பத்தல அவளாப் பத்தி எரியிறா பவளம். எந்தக் கேள்வி கேட்டாலும் ரெண்டே பதில்தான் வச்சிருக்கா கனகாம்பரம். ஒண்ணு கண்ணீரு... இன்னொண்ணு விசும்பல். தெரியும் தெரியாதுங்கிற ரெண்டே வார்த்தையில எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியுமா இல்லையா, அப்பிடி! மகள உத்துப் பாத்ததுல பகீர்னு பதறிப்போனாரு சுப்பஞ் செட்டியாரு.
"இதென்னம்மா இது... புருவத்துல காயம்?" இந்தக் கேள்விக்கும் அடுப்புப் புகைக்குள்ளயிருந்து அசரீரி மாதிரி வருது பதிலு.
"கழுத்துல கெடந்த சங்கிலியையும் புடுங்கிட்டுப் போயிட்டான் வைர மோதிரம் போடச் சொன்னா ஒங்கப்பன் வளவி போட்டுவிட்ருவான் போலிருக்கேனு நாழிய எடுத்து எறிஞ்சா புருவம் கிழியாம என்ன பண்ணும்? அந்தாளுக்குப் புத்தி கலங்கிப்போச்சு இவளுக்குப் புருவம் கலங்கிப்போச்சு."
கிட்ட வந்தாரு சுப்பஞ் செட்டியாரு. மக புருவத்த ஒத்த வெரல்ல பட்டும் படாமத் தொட்டுத் தடவுனாரு. அவ தலையில கைவச்சு ஆதரவா ஒரு செல்ல அழுத்து அழுத்திச் சொல்றாரு: "ஏஞ் செல்லங்களா, ஒங்க ஆத்தா ஒங்கள வகுத்துல சொமந்து பெத்துப் போட்டுட்டுப் போயிட்டா. நான் தோள்ல வளவி சொமந்து ஒங்கள வளத்தெடுத்தனம்மா. அப்பன் வச்சுக்கிட்டு வஞ்சகம் பண்ணுவேனா? முந்தி மாதிரி செமக்க முடியல. ஊரு ஊரா அலைய முடியல. அதான் நான் கும்புடுற சாமிமேல குட்டிப் பூன உக்காந்திருக்கு."
சீ போ கழுத அங்கிட்டுன்னு பூனக்குட்டிய வெரட்டுனவரு, ரெண்டு கையிலயும் அடியில கோத்து ஏந்தி வளையல் பொதியத் தூக்குனாரு.
க்ளங்... க்ளுங்... களுங்... கிணுங்... அந்த சங்கீதச் சத்தம் வெரட்டோ வெரட்டுனு வெரட்டி அடிச்சிருச்சு அங்கிருந்த வெறுமைய ஒரு நாதம் கசிஞ்சு வழிஞ்சு நனச்செடுக்குது வீட்ட. தலையில ஒட்டி இறுக்கி உருமாக் கட்டி, வளவிக சொருகிவச்ச ஜம்பைத் திண்டுகள அடுக்கிவச்ச பைகளத் தோள்ல போட்டு, அதுக்கு மேல பக்கத் துக்குப் பத்துத் தோடா மேனிக்கு எடப் பக்கத்துலயும் வலப் பக்கத்துலயும் நூல் கயித்துல கோத்துவச்ச இருவது தோடா வளையலச் சொமந்துக்கிட்டு அதுக்கு மேல கம்பளியும் போட்டுப் பொத்திப் பெருஞ்செருப்பெடுத்து மாட்டி, ஒரு கறுப்புக் கொடைய நீட்டிச் சுப்பஞ் செட்டியார் நடந்துபோனா ஆம்பளைகளே ஆசைப்படணும், அவர்கிட்ட வந்து வளவி போட.
எந்த ஊருக்குள்ள போனாலும் அந்த ஊர ஒரு சுத்துச் சுத்தி வந்து "வளையல்... வளையல்"னு ஒரு சத்தம் விடுவாரு. ஆயிரம் வளவிக ஒண்ணுகூடி மொத்தமாச் சத்தமாச் சொல்ற மாதிரி இருக்கும் அவர் வளையல்னு ஆசையோடு விடுற ஓசை. வந்திருக்கேன் வளவிக்காரன்னு அறிவிச்சிட்டு, ஊரு மந்தையிலயோ கோவில்லயோ கம்பளி விரிச்சுக் கடை போட்ருவாரு.
கல கல கலன்னு வளவி பேசுறது பாதி சல சல சலன்னு அவர் வாய் பேசுறது பாதி. வளவிச் சத்தத்துல நீட்டிருவாக பொம்பளைக கைய வாய்த் தாட்டியத்து லயே இவரு மாட்டிரு வாரு வளவிய. நூல் கயித்துல கோத்திருக்கிற இருபது தோடா வளையலயும் ரெண்டு திருகுத் திருகி ஒரு முறுக்கு முறுக்கி எறக்கி வப்பாரு பாருங்க... ராசா வீட்டுப் பிள்ளைய வேலக்காரன் தரையில எறக்கிவிடுற மாதிரி அம்புட்டுப் பக்குவமா எறக்கிவைப்பாரு. அவரு ஆயுசில ஒத்த வளவி ஒடஞ்சதில்ல. கடை விரிச்சு ஊரக் கூட்டி வர்ணிப்பாரு பாருங்க வளவிய சும்மா கெறக்கமாவந்திரும் கெழவிகளுக்கும்.
" யம்மா! நீங்க வானவில்லப் பாத்தி ருப்பீக. அது ஏழு நெறம். அதுக்கு மேக்கொண்டதம்மா என் வளவி இது ஒம்போது நெறம். இந்தா அடுக்கி வச்சிருக்கேன் எண்ணிப் பாத்துக்குங்க." பச்சை செவப்பு ஆரஞ்சு மஞ்சள் காப்பி நீலம் செந்தூரம் வெள்ள ஊதா சும்மா கண்ணப் பறிச்சு மின்னும் கண்ணாடி வளையல். "என்னிய எடுத்துக்கிர்றியா... என்னிய எடுத்துக்கிர் றியா..."னு எல்லா நெறமும் கூப்பிடும்.
எந்தப் பொம்பள கண்ணு எந்த நெறத்துல நெலகுத்தி நிக்கிதோ அந்த வளையல எடுத்து, "சும்மா போட்டுப் பாரு தாயி!"னு மாட்டிவிடுவாரு.
ஒரு பொம்பள கை பெறந்த ராசியப் பாத்தவுடனயே அது என்னா அளவுனு அவரு கண்ணு சொல்லிப்பிடும். வளவிக்கு நெறம் ஒம்போதுங்கிற மாதிரியே வளவி போடுற பொம்பளைக கை அளவும் ஊர் தேசம் பூரா சுத்துனாலும் ஒம்போதுக்குள்ள தான் அடங்குது. அரையரைக்கா முக்கா முக்காலே யரைக்கா ஒண்ணே காலரைக்கா ஒண்ணரை ரெண்டு ரெண்டேயரைக்கா ரெண்டே கால் ரெண்டே காலரைக்கா இதுதான் பொதுவா பொம்பளைக கைகளுக்கு ஒலகத்துல உண்டான அளவு.
என்னமோ தொட்டிலை ஆட்டுற கையி தொல்லுலகை ஆள்ற கையினு பாட்டுக் கட்டிப் பாடுறாகளே... ஒலகத்துல எந்தக் கையா இருந்தாலும் இந்த ஒம்போதுக்குள்ள அடக்கம். சிலதுக யானைக் கால கையின்னு வச்சுப் பொறந்திருக்கும் அதுகள்லாம் கணக்குல சேராது.
சுப்பஞ் செட்டியாரு ஒரு பொம்பளைக்கு வளவி மாட்டிவிட் டாருன்னா, அந்தப் பொம்பள வேற ஊருக்கு வாக்கப்பட்டுப் போனாலும் சுப்பஞ் செட்டியார் அந்த ஊருக்கு வார வரைக்கும் வேற யாருகிட்டயும் வளவி போட மாட்டா. வளவி போட வார எல்லாப் பொம்பளையையும் மக மாதிரிதான் பாப்பாரு மகராசன். அவர் வளவி போடுற சோங்கும் பாங்கும் வேற யாருக்கும் சொல்லிக் குடுத்தெல்லாம் வராது. வளவி போடுற பிள்ள கைய நீட்ன வுடன, அத வாங்கி வசதி பண்ணி லேசா ஒரு சொடக்கெடுத்து விடுவாரு. கொஞ்சம் மோட்டுக் கையி முரட்டுக் கையா இருந்தா எடது கையில ஏந்தி வலது கையால மணிக்கட்ட ஒரு எளம் நசுக்கு நசுக்கி விடுவாரு. அவருக்குத் தெரியும் எந்தமேடு வளவிய வழி மறிக்கும்னு. மெல்லுசா சல்லுசா அந்த மேடு கோடு தட்டி விடுவாரு. வளவி என்னதான் எடக்குப் பண்ணாலும் எக்கார ணத்தக் கொண்டும் எண்ண போட்டுத் தள்ளுறதில்ல தொழிலுக்கு அது இழுக்காம். "நான் வளவிக்காரச் செட்டியாரு தான் தாயி எண்ணக்காரச் செட்டியார் இல்லே"ம்பாரு சிரிச்சுக்கிட்டே.
அடுப்பு இன்னும் பத்தல அவளாப் பத்தி எரியிறா பவளம். எந்தக் கேள்வி கேட்டாலும் ரெண்டே பதில்தான் வச்சிருக்கா கனகாம்பரம். ஒண்ணு கண்ணீரு... இன்னொண்ணு விசும்பல். தெரியும் தெரியாதுங்கிற ரெண்டே வார்த்தையில எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியுமா இல்லையா, அப்பிடி! மகள உத்துப் பாத்ததுல பகீர்னு பதறிப்போனாரு சுப்பஞ் செட்டியாரு.
"இதென்னம்மா இது... புருவத்துல காயம்?" இந்தக் கேள்விக்கும் அடுப்புப் புகைக்குள்ளயிருந்து அசரீரி மாதிரி வருது பதிலு.
"கழுத்துல கெடந்த சங்கிலியையும் புடுங்கிட்டுப் போயிட்டான் வைர மோதிரம் போடச் சொன்னா ஒங்கப்பன் வளவி போட்டுவிட்ருவான் போலிருக்கேனு நாழிய எடுத்து எறிஞ்சா புருவம் கிழியாம என்ன பண்ணும்? அந்தாளுக்குப் புத்தி கலங்கிப்போச்சு இவளுக்குப் புருவம் கலங்கிப்போச்சு."
கிட்ட வந்தாரு சுப்பஞ் செட்டியாரு. மக புருவத்த ஒத்த வெரல்ல பட்டும் படாமத் தொட்டுத் தடவுனாரு. அவ தலையில கைவச்சு ஆதரவா ஒரு செல்ல அழுத்து அழுத்திச் சொல்றாரு: "ஏஞ் செல்லங்களா, ஒங்க ஆத்தா ஒங்கள வகுத்துல சொமந்து பெத்துப் போட்டுட்டுப் போயிட்டா. நான் தோள்ல வளவி சொமந்து ஒங்கள வளத்தெடுத்தனம்மா. அப்பன் வச்சுக்கிட்டு வஞ்சகம் பண்ணுவேனா? முந்தி மாதிரி செமக்க முடியல. ஊரு ஊரா அலைய முடியல. அதான் நான் கும்புடுற சாமிமேல குட்டிப் பூன உக்காந்திருக்கு."
சீ போ கழுத அங்கிட்டுன்னு பூனக்குட்டிய வெரட்டுனவரு, ரெண்டு கையிலயும் அடியில கோத்து ஏந்தி வளையல் பொதியத் தூக்குனாரு.
க்ளங்... க்ளுங்... களுங்... கிணுங்... அந்த சங்கீதச் சத்தம் வெரட்டோ வெரட்டுனு வெரட்டி அடிச்சிருச்சு அங்கிருந்த வெறுமைய ஒரு நாதம் கசிஞ்சு வழிஞ்சு நனச்செடுக்குது வீட்ட. தலையில ஒட்டி இறுக்கி உருமாக் கட்டி, வளவிக சொருகிவச்ச ஜம்பைத் திண்டுகள அடுக்கிவச்ச பைகளத் தோள்ல போட்டு, அதுக்கு மேல பக்கத் துக்குப் பத்துத் தோடா மேனிக்கு எடப் பக்கத்துலயும் வலப் பக்கத்துலயும் நூல் கயித்துல கோத்துவச்ச இருவது தோடா வளையலச் சொமந்துக்கிட்டு அதுக்கு மேல கம்பளியும் போட்டுப் பொத்திப் பெருஞ்செருப்பெடுத்து மாட்டி, ஒரு கறுப்புக் கொடைய நீட்டிச் சுப்பஞ் செட்டியார் நடந்துபோனா ஆம்பளைகளே ஆசைப்படணும், அவர்கிட்ட வந்து வளவி போட.
எந்த ஊருக்குள்ள போனாலும் அந்த ஊர ஒரு சுத்துச் சுத்தி வந்து "வளையல்... வளையல்"னு ஒரு சத்தம் விடுவாரு. ஆயிரம் வளவிக ஒண்ணுகூடி மொத்தமாச் சத்தமாச் சொல்ற மாதிரி இருக்கும் அவர் வளையல்னு ஆசையோடு விடுற ஓசை. வந்திருக்கேன் வளவிக்காரன்னு அறிவிச்சிட்டு, ஊரு மந்தையிலயோ கோவில்லயோ கம்பளி விரிச்சுக் கடை போட்ருவாரு.
கல கல கலன்னு வளவி பேசுறது பாதி சல சல சலன்னு அவர் வாய் பேசுறது பாதி. வளவிச் சத்தத்துல நீட்டிருவாக பொம்பளைக கைய வாய்த் தாட்டியத்து லயே இவரு மாட்டிரு வாரு வளவிய. நூல் கயித்துல கோத்திருக்கிற இருபது தோடா வளையலயும் ரெண்டு திருகுத் திருகி ஒரு முறுக்கு முறுக்கி எறக்கி வப்பாரு பாருங்க... ராசா வீட்டுப் பிள்ளைய வேலக்காரன் தரையில எறக்கிவிடுற மாதிரி அம்புட்டுப் பக்குவமா எறக்கிவைப்பாரு. அவரு ஆயுசில ஒத்த வளவி ஒடஞ்சதில்ல. கடை விரிச்சு ஊரக் கூட்டி வர்ணிப்பாரு பாருங்க வளவிய சும்மா கெறக்கமாவந்திரும் கெழவிகளுக்கும்.
" யம்மா! நீங்க வானவில்லப் பாத்தி ருப்பீக. அது ஏழு நெறம். அதுக்கு மேக்கொண்டதம்மா என் வளவி இது ஒம்போது நெறம். இந்தா அடுக்கி வச்சிருக்கேன் எண்ணிப் பாத்துக்குங்க." பச்சை செவப்பு ஆரஞ்சு மஞ்சள் காப்பி நீலம் செந்தூரம் வெள்ள ஊதா சும்மா கண்ணப் பறிச்சு மின்னும் கண்ணாடி வளையல். "என்னிய எடுத்துக்கிர்றியா... என்னிய எடுத்துக்கிர் றியா..."னு எல்லா நெறமும் கூப்பிடும்.
எந்தப் பொம்பள கண்ணு எந்த நெறத்துல நெலகுத்தி நிக்கிதோ அந்த வளையல எடுத்து, "சும்மா போட்டுப் பாரு தாயி!"னு மாட்டிவிடுவாரு.
ஒரு பொம்பள கை பெறந்த ராசியப் பாத்தவுடனயே அது என்னா அளவுனு அவரு கண்ணு சொல்லிப்பிடும். வளவிக்கு நெறம் ஒம்போதுங்கிற மாதிரியே வளவி போடுற பொம்பளைக கை அளவும் ஊர் தேசம் பூரா சுத்துனாலும் ஒம்போதுக்குள்ள தான் அடங்குது. அரையரைக்கா முக்கா முக்காலே யரைக்கா ஒண்ணே காலரைக்கா ஒண்ணரை ரெண்டு ரெண்டேயரைக்கா ரெண்டே கால் ரெண்டே காலரைக்கா இதுதான் பொதுவா பொம்பளைக கைகளுக்கு ஒலகத்துல உண்டான அளவு.
என்னமோ தொட்டிலை ஆட்டுற கையி தொல்லுலகை ஆள்ற கையினு பாட்டுக் கட்டிப் பாடுறாகளே... ஒலகத்துல எந்தக் கையா இருந்தாலும் இந்த ஒம்போதுக்குள்ள அடக்கம். சிலதுக யானைக் கால கையின்னு வச்சுப் பொறந்திருக்கும் அதுகள்லாம் கணக்குல சேராது.
சுப்பஞ் செட்டியாரு ஒரு பொம்பளைக்கு வளவி மாட்டிவிட் டாருன்னா, அந்தப் பொம்பள வேற ஊருக்கு வாக்கப்பட்டுப் போனாலும் சுப்பஞ் செட்டியார் அந்த ஊருக்கு வார வரைக்கும் வேற யாருகிட்டயும் வளவி போட மாட்டா. வளவி போட வார எல்லாப் பொம்பளையையும் மக மாதிரிதான் பாப்பாரு மகராசன். அவர் வளவி போடுற சோங்கும் பாங்கும் வேற யாருக்கும் சொல்லிக் குடுத்தெல்லாம் வராது. வளவி போடுற பிள்ள கைய நீட்ன வுடன, அத வாங்கி வசதி பண்ணி லேசா ஒரு சொடக்கெடுத்து விடுவாரு. கொஞ்சம் மோட்டுக் கையி முரட்டுக் கையா இருந்தா எடது கையில ஏந்தி வலது கையால மணிக்கட்ட ஒரு எளம் நசுக்கு நசுக்கி விடுவாரு. அவருக்குத் தெரியும் எந்தமேடு வளவிய வழி மறிக்கும்னு. மெல்லுசா சல்லுசா அந்த மேடு கோடு தட்டி விடுவாரு. வளவி என்னதான் எடக்குப் பண்ணாலும் எக்கார ணத்தக் கொண்டும் எண்ண போட்டுத் தள்ளுறதில்ல தொழிலுக்கு அது இழுக்காம். "நான் வளவிக்காரச் செட்டியாரு தான் தாயி எண்ணக்காரச் செட்டியார் இல்லே"ம்பாரு சிரிச்சுக்கிட்டே.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வலது கையில பதிமூணு எடது கையில பன்னெண்டு. மொத்த வளவியக் கூட்னா ஒத்தப்படையில வரணும். இதான் ஊர் நாட்ல உண்டானது. ஒண்ணே முக்கால் ரூவாய்க்கு வித்தா, கால் ரூவா லாபங்கிறது கணக்கு. இதுல சில பேர் குடுப் பாக. சில பேர் நவதான்யம் வாங்கிட்டுப் போறீகளாம்பாக. சில பேர் நடையா நடக்கவிடுவாக.
வளவி விக்கப்போன எடத்துல குள்ளப்பக் கவுண்டன்பட்டியில ஒரு கூத்தாகிப்போச்சு. வழியில போயிக்கிட்டிருந்த வளவிக் காரரை வான்னு கூப்பிட்டான் வெள்ளையுஞ்சொள்ளையுமா இருந்த ஒரு எளந்தாரி. அவனப் பாத்தாச் சிரிப்பா இருந்துச்சு. உள்ள போட்டிருக்கிற முண்டா பனியன் வெள்ளையா வெளிய தெரியிற மாதிரி மெல்லுசா ஒரு சட்ட. உள் கால் சட்டப் பட்டைக பளீர்னு வெளிய தெரியற மாதிரி ஒரு மல்லு வேட்டி. பாவம் வேட்டிக்கும் சட்டைக்கும் வீணாச் செலவழிச்ச பய.
"எஞ் சொந்தபந்தம் எல்லாத்துக்கும் வளவி போடு"ன்னான். சும்மா ரேசனுக்கு அரிசி வாங்குற மாதிரி வரிசையா வந்து நின்னுட் டாக பொம்பளைக. "இன்னைக்கி நரி முகத்துல முழிச்சமடா சாமி"ன்னு வந்தவுக போனவுகளுக்கெல்லாம் வளவி போட்டு முடிக்க, "நான் வெள்ளிக் கெழமை யாருக்கும் துட்டுத் தாரதில்ல நாளைக்கு வந்து வாங்கிட்டுப் போ"ன்னுட்டான் அந்த ஆளு. சனிக்கெழமை போயிக் கேட்டா, அவன் ஊர்லயே இல்ல. மாமன் பெருமையை மச்சினிகளுக்குக் காமிக்கிறேன்னு காமிச்சுட்டு, வளையல அங்க மாட்டி விட்டுட்டு இவரு காதுல பூமாட்டி விட்டுட்டு ஓடியே போனான் புது மாப்பிள. சல்லிக் காசுகூட வரல போனது போனதுதான்.
அப்பிடிக் காத்துலயும் வெயில்லயும் மழையிலயும் குளுர்லயும் ஊர் ஊரா அலைஞ்சு எச்சிய முழுங்கிக்கிட்டே எட்டணா ஒரு ரூவானு சேத்துவச்சு ஒரு மகளக் கரை சேத்துட்டோம்னு நெனச்சா, கரை சேந்தவ திருப்பித் தண்ணியில விழுந்து கெடக்கா. இப்ப இருக்கிறவளக் கரை சேக்குறதா? வந்தவளக் கரை சேக்குறதா?
"கண்ணாடி வளவிக சத்தம் போடும் ரப்பர் வளவிக போடாது. நான் பெத்த மகளுகளா, நீங்க கண்ணாடி வளவிக. சத்தம் போடுறீக. அப்பன் ரப்பர் வளவி என்னத்தப் பேசுவேன்? ஆனா ஒண்ணு... ஒங்க ரெண்டு பேரையும் கரை சேக்காம என் கட்டை வேகாது." தான் ஒண்ணு நெனச்சா தெய்வம் ஒண்ணு நெனைக் கும்னு சொல்லுவாக. ஆனா, செத்துச் சீலப் பேனாகிப் போன சுப்பஞ் செட்டியார் கதையக் கேட்ட தெய்வம் ஏதொண்ணும் நெனைக்கலன்னு தான் சொல்லத் தோணும், ஏன்னா... அப்படியெல்லாம் ஒரு கருமாயத்தக் கற்பனை பண்ணி நெனைக்க தெய்வத்துக்கே தெரியாது.
"அடியே கருவாச்சி! எனக்கும் ஒனக்கும் சின்ன வயசிலிருந்தே வித்தியாசம்டி. நீ கறுப்பு நான் செவப்பு. நீ மாடு மேய்க்கப் போன நான் பள்ளிக்கூடம் போனேன். ஒனக்குத் தாய் இருந்திச்சு தகப்பன் இல்ல. எனக்குத் தகப்பன் இருக்க, தாயில்ல. எனக்கு வெளியூர்ல கல்யாணம் ஒனக்கு உள்ளூர்ல கல்யாணம். ஒனக்குப் பிள்ளை இருக்கு புருசன் இல்ல. எனக்குப் புருசன் இருக்க, பிள்ளை இல்ல.
கருவாச்சி மகன் அழகுசிங்கத்த வாங்கி மடியில போட்டுக்கிட்டு சோகத்த மறந்து கெக்கக்கெக்கக் கெக்கேனு சிரிக்கிறா கனகம். துன்பம்ங்கிறது விருந்தாடி மாதிரிதான் எப்பவாச்சும் வந்தாத்தான் மரியாதை. நித்தம் நித்தம் துன்பம் வந்தா மனசு மரத்துப்போகுதா இல்லையா? அப்படி மரத்து மறந்துபோனாக பொம்பளைக ரெண்டு பேரும்.
"யம்மா கனகாம்பரம்! வீட்டுக்குப் போ தாயி ஒரு விசேசம் வந்திருக்கு" - போறபோக்குல சொல்லிட்டுப் போனாரு அம்மைய நாயக்கரு.
என்னமோ ஏதோன்னு லொங்கு லொங்கு லொங்குனு ஓடுறா கனகாம்பரம் ஒடம்பத் தூக்கிக்கிட்டு. வீட்டுக்கு வந்து பாத்தவ நெலப்படிய ஒரு கையிலயும் நெஞ்ச ஒரு கையிலயும் புடிச்சு நின்னே போனா. பவளத்துக்குச் சொக்குப் பொடி போட்டு சோங்கு பண்ணிக்கிட்டிருக்கான் கனகம் புருசன் முத்துக்காமு.
"ஏ பவளம்... இங்க வா பிள்ள, வா. ஒன்னிய நான் கடிச்சா தின்னுபிடப் போறேன்? என்னமோ சொல்றாகளே ஊரெல்லாம். நீ பேன் பாக்குறதுல பெருங்கொண்ட கையின்னு. ஒங்க அக்காகூட படுத்துப் படுத்து எந்தலையில ஏறிக்கெடக்கு ஏகப்பட்ட பேனு. வா கண்ணு வா மண்ட காயுதுடி மாமனுக்கு. வந்து பேன் பாரு வா."
மச்சினிச்சிக்காக வெல்லப்பாகு மாதிரி எளகி ஓடுன மூஞ்சி, பொண்டாட்டியப் பாத்ததும் கருப்பட்டி மாதிரி இறுகிப்போச்சு. "ஏண்டி! புருசன் வீட்லயிருந்து ஓடி வந்தவ அப்பன் வீட்லயும் தங்குறதில்லையா? எங்கடி போயிட்டு வாரவ?"
வளவி விக்கப்போன எடத்துல குள்ளப்பக் கவுண்டன்பட்டியில ஒரு கூத்தாகிப்போச்சு. வழியில போயிக்கிட்டிருந்த வளவிக் காரரை வான்னு கூப்பிட்டான் வெள்ளையுஞ்சொள்ளையுமா இருந்த ஒரு எளந்தாரி. அவனப் பாத்தாச் சிரிப்பா இருந்துச்சு. உள்ள போட்டிருக்கிற முண்டா பனியன் வெள்ளையா வெளிய தெரியிற மாதிரி மெல்லுசா ஒரு சட்ட. உள் கால் சட்டப் பட்டைக பளீர்னு வெளிய தெரியற மாதிரி ஒரு மல்லு வேட்டி. பாவம் வேட்டிக்கும் சட்டைக்கும் வீணாச் செலவழிச்ச பய.
"எஞ் சொந்தபந்தம் எல்லாத்துக்கும் வளவி போடு"ன்னான். சும்மா ரேசனுக்கு அரிசி வாங்குற மாதிரி வரிசையா வந்து நின்னுட் டாக பொம்பளைக. "இன்னைக்கி நரி முகத்துல முழிச்சமடா சாமி"ன்னு வந்தவுக போனவுகளுக்கெல்லாம் வளவி போட்டு முடிக்க, "நான் வெள்ளிக் கெழமை யாருக்கும் துட்டுத் தாரதில்ல நாளைக்கு வந்து வாங்கிட்டுப் போ"ன்னுட்டான் அந்த ஆளு. சனிக்கெழமை போயிக் கேட்டா, அவன் ஊர்லயே இல்ல. மாமன் பெருமையை மச்சினிகளுக்குக் காமிக்கிறேன்னு காமிச்சுட்டு, வளையல அங்க மாட்டி விட்டுட்டு இவரு காதுல பூமாட்டி விட்டுட்டு ஓடியே போனான் புது மாப்பிள. சல்லிக் காசுகூட வரல போனது போனதுதான்.
அப்பிடிக் காத்துலயும் வெயில்லயும் மழையிலயும் குளுர்லயும் ஊர் ஊரா அலைஞ்சு எச்சிய முழுங்கிக்கிட்டே எட்டணா ஒரு ரூவானு சேத்துவச்சு ஒரு மகளக் கரை சேத்துட்டோம்னு நெனச்சா, கரை சேந்தவ திருப்பித் தண்ணியில விழுந்து கெடக்கா. இப்ப இருக்கிறவளக் கரை சேக்குறதா? வந்தவளக் கரை சேக்குறதா?
"கண்ணாடி வளவிக சத்தம் போடும் ரப்பர் வளவிக போடாது. நான் பெத்த மகளுகளா, நீங்க கண்ணாடி வளவிக. சத்தம் போடுறீக. அப்பன் ரப்பர் வளவி என்னத்தப் பேசுவேன்? ஆனா ஒண்ணு... ஒங்க ரெண்டு பேரையும் கரை சேக்காம என் கட்டை வேகாது." தான் ஒண்ணு நெனச்சா தெய்வம் ஒண்ணு நெனைக் கும்னு சொல்லுவாக. ஆனா, செத்துச் சீலப் பேனாகிப் போன சுப்பஞ் செட்டியார் கதையக் கேட்ட தெய்வம் ஏதொண்ணும் நெனைக்கலன்னு தான் சொல்லத் தோணும், ஏன்னா... அப்படியெல்லாம் ஒரு கருமாயத்தக் கற்பனை பண்ணி நெனைக்க தெய்வத்துக்கே தெரியாது.
"அடியே கருவாச்சி! எனக்கும் ஒனக்கும் சின்ன வயசிலிருந்தே வித்தியாசம்டி. நீ கறுப்பு நான் செவப்பு. நீ மாடு மேய்க்கப் போன நான் பள்ளிக்கூடம் போனேன். ஒனக்குத் தாய் இருந்திச்சு தகப்பன் இல்ல. எனக்குத் தகப்பன் இருக்க, தாயில்ல. எனக்கு வெளியூர்ல கல்யாணம் ஒனக்கு உள்ளூர்ல கல்யாணம். ஒனக்குப் பிள்ளை இருக்கு புருசன் இல்ல. எனக்குப் புருசன் இருக்க, பிள்ளை இல்ல.
கருவாச்சி மகன் அழகுசிங்கத்த வாங்கி மடியில போட்டுக்கிட்டு சோகத்த மறந்து கெக்கக்கெக்கக் கெக்கேனு சிரிக்கிறா கனகம். துன்பம்ங்கிறது விருந்தாடி மாதிரிதான் எப்பவாச்சும் வந்தாத்தான் மரியாதை. நித்தம் நித்தம் துன்பம் வந்தா மனசு மரத்துப்போகுதா இல்லையா? அப்படி மரத்து மறந்துபோனாக பொம்பளைக ரெண்டு பேரும்.
"யம்மா கனகாம்பரம்! வீட்டுக்குப் போ தாயி ஒரு விசேசம் வந்திருக்கு" - போறபோக்குல சொல்லிட்டுப் போனாரு அம்மைய நாயக்கரு.
என்னமோ ஏதோன்னு லொங்கு லொங்கு லொங்குனு ஓடுறா கனகாம்பரம் ஒடம்பத் தூக்கிக்கிட்டு. வீட்டுக்கு வந்து பாத்தவ நெலப்படிய ஒரு கையிலயும் நெஞ்ச ஒரு கையிலயும் புடிச்சு நின்னே போனா. பவளத்துக்குச் சொக்குப் பொடி போட்டு சோங்கு பண்ணிக்கிட்டிருக்கான் கனகம் புருசன் முத்துக்காமு.
"ஏ பவளம்... இங்க வா பிள்ள, வா. ஒன்னிய நான் கடிச்சா தின்னுபிடப் போறேன்? என்னமோ சொல்றாகளே ஊரெல்லாம். நீ பேன் பாக்குறதுல பெருங்கொண்ட கையின்னு. ஒங்க அக்காகூட படுத்துப் படுத்து எந்தலையில ஏறிக்கெடக்கு ஏகப்பட்ட பேனு. வா கண்ணு வா மண்ட காயுதுடி மாமனுக்கு. வந்து பேன் பாரு வா."
மச்சினிச்சிக்காக வெல்லப்பாகு மாதிரி எளகி ஓடுன மூஞ்சி, பொண்டாட்டியப் பாத்ததும் கருப்பட்டி மாதிரி இறுகிப்போச்சு. "ஏண்டி! புருசன் வீட்லயிருந்து ஓடி வந்தவ அப்பன் வீட்லயும் தங்குறதில்லையா? எங்கடி போயிட்டு வாரவ?"
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நியாயப்படி கேள்வி கேக்க பாத்தியப் பட்டவளும் பாதிக்கப்பட்டவளும் அவதான். ஆனா, அவ கேள்வி கேக்குறதுக்கு ஒரு சந்துவிடாம முந்திக்கிட்டு மூஞ்சியில எள்ளு வெடிக்கிறான் முத்துக்காமு. நிலைப்படி கொள்ளாம நிக்கிறவளத் திரும்பவும் ஒரு அமட்டு அமட்டுறான்:
"சொல்லுடி, எங்கடி போயிருந்த?"
உடம்பு அலுங்காம உதடு மட்டும் அசைய அவ சொல்றா: "மாப்ள பாக்க."
"பாப்படி பாப்ப! ரெண்டு கையிலயும் வளவி போடுறவன் மகதான? கைக்கொரு புருசன் கேப்ப."
கையில இருந்த மோர்ச் செம்ப எடுத்து எறியப்போனவன ஓடி வந்து தடுத்து உள்ள விழுந்த பவளம், மோர்ச் செம்பப் புடுங்கித் துண்டாத் தூர எறிஞ்சிட்டுச் சொல்றா: "அவ ஒரு வெனயங்கெட்ட சிறுக்கி நீ ஒரு வெவரங்கெட்ட மாமன். கருவாச்சி மகனப் பாக்கப் போனாளா... அவனத்தான் மாப்ளைங்கிறா. அவள நாத்துனா ஒறவு சொல்லித்தான் நாங்க வளந்திருக்கோம். ஆமா... எடுத்ததுக்கெல்லாம் கை நீட்றது என்ன பழக்கம் மாமா?"
மச்சினிச்சி தொட்டதுல சன்னஞ் சன்னமா சாமி எறங்கிப்போனான் முத்துக்காமு.
முத்துக்காமு ஒரு சவங்கப் பய. அவன் இழுத்த இழுவைக்குத்தான் ஊருலகம் வந்து சேரணும்னு நெனைப்பானே தவிர, ஊருலகம் இழுக்கிற இழுவைக்கு அவன் போக மாட்டான். நித்தம் காசு சம்பாதிக்கணும் நித்தம் கறி திங்கணும். இந்த ரெண்டையும் தவிர, பெறவிக்கு அர்த்தம் பெருசா என்ன இருக்குன்னு நெனைக்கிறவன் முத்துக்காமு.
ஆள் செத்த வீட்ல * கவிச்சி பொழங்கக் கூடாதுங்கிறது ஐதீகம். அப்படிச் சொந்தபந்தத்துல ஆள் செத்துப்போனா, பொணம் தூக்குறவரைக்கும் பொறுமையா இருப்பான். பொணம் தூக்குனதும் கால்ல தண்ணி ஊத்திக்கிட்டே ஈரங் காயுமுன்ன கறிக் கடைக்குப் போயிருவான். வீடு, வாச, சொந்தம், பந்தம், பொண்டாட்டி, பொட்டிக் கடை, ஊரு, உலகம் எல்லாம் காசு பண்ணவும் கறி திங்கவும் கடவுள் அவனுக்குச் செஞ்சுகுடுத்த ஏற்பாடுங்கறது அவன் தீர்மானமான முடிவு. அன்னிக்கி ஒண்ணும் வழியில்லையா, உப்புக் கருவா டாச்சும் சுட்டு வைக்கலேன்னா பொண்டாட்டிய அடிக்கிற அடியில, வீடு வீங்கிப் போகும்.
சில பேருக்கு மூக்குல மச்ச மிருக்கிற மாதிரி இவன் மூக்குல கோவம் எப்பவும் ஒட்டிக்கிட்டேயிருக்கும். ரெண்டு கொணம், ரெண்டு பேச்சு இருக்கு அவன்கிட்ட. இவனுக்குக் காசு தர வேண்டிய ஆளுககிட்ட வழுவழுனு பேசுவான். இவன் காசு குடுக்க வேண்டிய ஆளுககிட்ட கடுகடுனு பேசுவான். கொடுக்கும் காம்பும் ஒரே எடத்துல இருக்கிற பிராணிய நீங்க பாத்திருக்கீகளா? அவன்தான் அது. கொடுக்கு எப்ப கொட்டும் காம்பு எப்ப சொட்டும்?
அதுக்கெல்லாம் காலதேச வர்த்தமானத்துல கணக்கெல்லாம் ஒண்ணும் கெடையாது. அப்பன் அவன் கிட்ட ஒப்படைச் சிட்டுச் செத்தது அவன் ஆத்தாளையும் ஒரு பொட்டிக்கடையை யும். ஆத்தாள செலவுக் கணக்குல சேத்துட் டான் பொட்டிக் கடையை வரவு வச்சுக் கிட்டான்.
அவன் அப்பன் ஒரு சத்தியவந்தன். "பொருளு வித்துப் பொழைக்கலாம் புத்திய வித்துப் பொழைக் கலாம். நேர்மைய வித்துப் பொழைக்கக் கூடாதுடா மகனே"னு சொல்லிட்டுச் செத்தாரு. அவரு பொணத்தோட சேத்து அவர் புத்திமதியையும் புதைச்சிட்டான் முத்துக் காமு. போதுமடா அப்பன் பொழைச்ச பொழப்புனு பொட்டிக்கடையில களவாணிப் பொருள் வாங்கி விக்க ஆரம்பிச் சான். கெழங்கு, வாழத் தாரு, முட்டை, நெலக்கடலையெல்லாம் களவாண்டு வர்ற ஆளுகளுக்குப் பத்துக்கு ஒரு வெல குடுத்தாப் போதும் குடுத்தத வாங்கிக்கிட்டுக் கும்பிட்டுப் போயிருவாக. அதுல அடிப்பானய்யா முத்துக்காமு லாபம். ஒண்ணுக்கு அஞ்சா வெல சொல்லி, ஒண்ணுக்கு மூணா வித்திருவான். அப்படிச் சம்பாரிச்சுக் கல்லாவும் ஆளும் கனத்துப்போனான் அதுலதான் வந்து சேந்துச்சு ஒரு ஆபத்து.
அவுக ஆத்தா செத்து ஆறு மாசமிருக்கும். விடிய்ய கடை தெறக்க ஒரு அம்பது திருட்டுத் தேங்காயத் தலைச் சொமையா சொமந்து கடையில கொண்டுவந்து எறக்கிட்டான் பொத்தக் காதன் திருட்டு ஆளாயிருந்தாலும் மொரட்டு ஆளு. ஒரு தேங்காய்க்கு ஒரணா மேனிக்கு வாங்கிட்டு, "போயிட்டு வாரனப்பா"னு போயிட்டான். போனவன் மறுநாள் திரும்பி வந்து, "காளியம்மன் கோயிலுக்குச் செதறு தேங்கா போடணுமப்பா... ரெண்டு தேங்கா குடு"னு கேட்டிருக்கான். "ஆறணா எடுத்து வையி. ஒரு தேங்கா மூணு அணா"னான் முத்துக்காமு.
"இதென்னப்பா கூத்தாயிருக்கு. ஒனக்கு ஒரணாவுக்கு நான் வித்த காயை எனக்கே மூணு அணாவுக்கு விக்கிறியே இது நியாயமா?"னு பொத்தக் காதன் கேக்க, "ஊரான் பொருளுக்கு நான் ஒரணா குடுத்தனே... என் பொருளுக்கு நீ மூணு அணா குடுத்தா என்ன?"னு முத்துக்காமு கேக்க... காசக் குடுத்துட்டுப் பேசாம வாங்கிட்டுப் போயிட்டான் பொத்தக் காதன். கோயில்ல போயி ஒடைச்சுப் பாத்தாரெண்டும் அழுகுன தேங்கா. கெட்ட கோவத்தோட புத்தி மாறி வாரான் பொத்தக் காதன்.
"ஏண்டா... ஆறணா வாங்குனது மில்லாம அழுகுன தேங்காயா குடுத்துவிட்ட? மாத்துத் தேங்கா குடுக்கல.... மரியாதை கெட்டுப் போகும்."
"அதெல்லாம் குடுக்க முடியாது. ஒன் நேரம் நல்லாயில்லைன்னா நான் என்னா பண்ணுவேன்?"
"என் நேரமா நல்லால்ல... ஒன் நேரந்தான் நல்லா இல்லடீ."
சும்மா தேங்காக் கடையில யான புகுந்த மாதிரி அடிச்சு ஒடச்சு மிதிச்சு அப்பளம் பண்ணிப் பொருள்கள எடுத்து வீதியில எறிஞ்சு பொட்டிக் கடையை இழுத்துத் தரையில போட்டு சாச்சுத் தேச்சு வீட்டுக்குள்ள புகுந்து அதுவரைக்கும் அவன் சன்னஞ்சன்னமாச் சேத்துவச்சிருந்த சம்பாத்தி யத்தையும் எடுத்துக்கிட்டு, போடி மெட்டு மேல ஏறி மூணாறுல ஓடி ஒளிஞ்சுபோனான் பொத்தக் காதன்.
சோளம் அடிச்ச களம் மாதிரி சிந்திச் செதறி நொறுங்கிக் கெடக்குற பலகையும் தகரமும் கூரையும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால எங்க பேரு பொட்டிக் கடைனு முழியா முழிக்குதுக. முத்துக்காமு பாவம்! மூக்குல இருந்த கோபத்தையும் காணம் மூக்கையும் காணம்.
"சொல்லுடி, எங்கடி போயிருந்த?"
உடம்பு அலுங்காம உதடு மட்டும் அசைய அவ சொல்றா: "மாப்ள பாக்க."
"பாப்படி பாப்ப! ரெண்டு கையிலயும் வளவி போடுறவன் மகதான? கைக்கொரு புருசன் கேப்ப."
கையில இருந்த மோர்ச் செம்ப எடுத்து எறியப்போனவன ஓடி வந்து தடுத்து உள்ள விழுந்த பவளம், மோர்ச் செம்பப் புடுங்கித் துண்டாத் தூர எறிஞ்சிட்டுச் சொல்றா: "அவ ஒரு வெனயங்கெட்ட சிறுக்கி நீ ஒரு வெவரங்கெட்ட மாமன். கருவாச்சி மகனப் பாக்கப் போனாளா... அவனத்தான் மாப்ளைங்கிறா. அவள நாத்துனா ஒறவு சொல்லித்தான் நாங்க வளந்திருக்கோம். ஆமா... எடுத்ததுக்கெல்லாம் கை நீட்றது என்ன பழக்கம் மாமா?"
மச்சினிச்சி தொட்டதுல சன்னஞ் சன்னமா சாமி எறங்கிப்போனான் முத்துக்காமு.
முத்துக்காமு ஒரு சவங்கப் பய. அவன் இழுத்த இழுவைக்குத்தான் ஊருலகம் வந்து சேரணும்னு நெனைப்பானே தவிர, ஊருலகம் இழுக்கிற இழுவைக்கு அவன் போக மாட்டான். நித்தம் காசு சம்பாதிக்கணும் நித்தம் கறி திங்கணும். இந்த ரெண்டையும் தவிர, பெறவிக்கு அர்த்தம் பெருசா என்ன இருக்குன்னு நெனைக்கிறவன் முத்துக்காமு.
ஆள் செத்த வீட்ல * கவிச்சி பொழங்கக் கூடாதுங்கிறது ஐதீகம். அப்படிச் சொந்தபந்தத்துல ஆள் செத்துப்போனா, பொணம் தூக்குறவரைக்கும் பொறுமையா இருப்பான். பொணம் தூக்குனதும் கால்ல தண்ணி ஊத்திக்கிட்டே ஈரங் காயுமுன்ன கறிக் கடைக்குப் போயிருவான். வீடு, வாச, சொந்தம், பந்தம், பொண்டாட்டி, பொட்டிக் கடை, ஊரு, உலகம் எல்லாம் காசு பண்ணவும் கறி திங்கவும் கடவுள் அவனுக்குச் செஞ்சுகுடுத்த ஏற்பாடுங்கறது அவன் தீர்மானமான முடிவு. அன்னிக்கி ஒண்ணும் வழியில்லையா, உப்புக் கருவா டாச்சும் சுட்டு வைக்கலேன்னா பொண்டாட்டிய அடிக்கிற அடியில, வீடு வீங்கிப் போகும்.
சில பேருக்கு மூக்குல மச்ச மிருக்கிற மாதிரி இவன் மூக்குல கோவம் எப்பவும் ஒட்டிக்கிட்டேயிருக்கும். ரெண்டு கொணம், ரெண்டு பேச்சு இருக்கு அவன்கிட்ட. இவனுக்குக் காசு தர வேண்டிய ஆளுககிட்ட வழுவழுனு பேசுவான். இவன் காசு குடுக்க வேண்டிய ஆளுககிட்ட கடுகடுனு பேசுவான். கொடுக்கும் காம்பும் ஒரே எடத்துல இருக்கிற பிராணிய நீங்க பாத்திருக்கீகளா? அவன்தான் அது. கொடுக்கு எப்ப கொட்டும் காம்பு எப்ப சொட்டும்?
அதுக்கெல்லாம் காலதேச வர்த்தமானத்துல கணக்கெல்லாம் ஒண்ணும் கெடையாது. அப்பன் அவன் கிட்ட ஒப்படைச் சிட்டுச் செத்தது அவன் ஆத்தாளையும் ஒரு பொட்டிக்கடையை யும். ஆத்தாள செலவுக் கணக்குல சேத்துட் டான் பொட்டிக் கடையை வரவு வச்சுக் கிட்டான்.
அவன் அப்பன் ஒரு சத்தியவந்தன். "பொருளு வித்துப் பொழைக்கலாம் புத்திய வித்துப் பொழைக் கலாம். நேர்மைய வித்துப் பொழைக்கக் கூடாதுடா மகனே"னு சொல்லிட்டுச் செத்தாரு. அவரு பொணத்தோட சேத்து அவர் புத்திமதியையும் புதைச்சிட்டான் முத்துக் காமு. போதுமடா அப்பன் பொழைச்ச பொழப்புனு பொட்டிக்கடையில களவாணிப் பொருள் வாங்கி விக்க ஆரம்பிச் சான். கெழங்கு, வாழத் தாரு, முட்டை, நெலக்கடலையெல்லாம் களவாண்டு வர்ற ஆளுகளுக்குப் பத்துக்கு ஒரு வெல குடுத்தாப் போதும் குடுத்தத வாங்கிக்கிட்டுக் கும்பிட்டுப் போயிருவாக. அதுல அடிப்பானய்யா முத்துக்காமு லாபம். ஒண்ணுக்கு அஞ்சா வெல சொல்லி, ஒண்ணுக்கு மூணா வித்திருவான். அப்படிச் சம்பாரிச்சுக் கல்லாவும் ஆளும் கனத்துப்போனான் அதுலதான் வந்து சேந்துச்சு ஒரு ஆபத்து.
அவுக ஆத்தா செத்து ஆறு மாசமிருக்கும். விடிய்ய கடை தெறக்க ஒரு அம்பது திருட்டுத் தேங்காயத் தலைச் சொமையா சொமந்து கடையில கொண்டுவந்து எறக்கிட்டான் பொத்தக் காதன் திருட்டு ஆளாயிருந்தாலும் மொரட்டு ஆளு. ஒரு தேங்காய்க்கு ஒரணா மேனிக்கு வாங்கிட்டு, "போயிட்டு வாரனப்பா"னு போயிட்டான். போனவன் மறுநாள் திரும்பி வந்து, "காளியம்மன் கோயிலுக்குச் செதறு தேங்கா போடணுமப்பா... ரெண்டு தேங்கா குடு"னு கேட்டிருக்கான். "ஆறணா எடுத்து வையி. ஒரு தேங்கா மூணு அணா"னான் முத்துக்காமு.
"இதென்னப்பா கூத்தாயிருக்கு. ஒனக்கு ஒரணாவுக்கு நான் வித்த காயை எனக்கே மூணு அணாவுக்கு விக்கிறியே இது நியாயமா?"னு பொத்தக் காதன் கேக்க, "ஊரான் பொருளுக்கு நான் ஒரணா குடுத்தனே... என் பொருளுக்கு நீ மூணு அணா குடுத்தா என்ன?"னு முத்துக்காமு கேக்க... காசக் குடுத்துட்டுப் பேசாம வாங்கிட்டுப் போயிட்டான் பொத்தக் காதன். கோயில்ல போயி ஒடைச்சுப் பாத்தாரெண்டும் அழுகுன தேங்கா. கெட்ட கோவத்தோட புத்தி மாறி வாரான் பொத்தக் காதன்.
"ஏண்டா... ஆறணா வாங்குனது மில்லாம அழுகுன தேங்காயா குடுத்துவிட்ட? மாத்துத் தேங்கா குடுக்கல.... மரியாதை கெட்டுப் போகும்."
"அதெல்லாம் குடுக்க முடியாது. ஒன் நேரம் நல்லாயில்லைன்னா நான் என்னா பண்ணுவேன்?"
"என் நேரமா நல்லால்ல... ஒன் நேரந்தான் நல்லா இல்லடீ."
சும்மா தேங்காக் கடையில யான புகுந்த மாதிரி அடிச்சு ஒடச்சு மிதிச்சு அப்பளம் பண்ணிப் பொருள்கள எடுத்து வீதியில எறிஞ்சு பொட்டிக் கடையை இழுத்துத் தரையில போட்டு சாச்சுத் தேச்சு வீட்டுக்குள்ள புகுந்து அதுவரைக்கும் அவன் சன்னஞ்சன்னமாச் சேத்துவச்சிருந்த சம்பாத்தி யத்தையும் எடுத்துக்கிட்டு, போடி மெட்டு மேல ஏறி மூணாறுல ஓடி ஒளிஞ்சுபோனான் பொத்தக் காதன்.
சோளம் அடிச்ச களம் மாதிரி சிந்திச் செதறி நொறுங்கிக் கெடக்குற பலகையும் தகரமும் கூரையும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால எங்க பேரு பொட்டிக் கடைனு முழியா முழிக்குதுக. முத்துக்காமு பாவம்! மூக்குல இருந்த கோபத்தையும் காணம் மூக்கையும் காணம்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"விழுந்த கடையை நிமித்திக் குடுத்திருங்க ஒரு வைர மோதிரம் போட்ருங்க கண் கலங்காம வச்சுக் கிறேன் கனகாம்பரத்த... பொண்ணு வீடு பாக்க வந்தப்ப அவன் கேட்டது இந்த ரெண்டே ரெண்டுதான். நியாயமாத் தான் தெரியுதுனு சரி சொல்லிட்டாரு சுப்பஞ் செட்டியாரு.
"மாப்ள! குருவி மாதிரி சேத்த காச வச்சுப் போட்டுக் குடுத்திடறேன் பொட்டிக் கடையை. தங்கச் சங்கிலி ஒண்ணு எரவல் தாரேங்கிறா பெரிய மூக்கி. பொண்ணு கழுத்துல போட்டு அனுப்புறேன் வைர மோதிரம் குடுத்துட்டு வாங்கிக்கிறேன்."
முடிஞ்சுபோச்சு கல்யாணம் முடியல பிரச்னை. நாலு வருசமா அவளுக்குப் பிள்ளையுமில்ல வைர மோதிரமும் வரல. முள்ளங்கி மாதிரி சிக்குன்னு இருந்த கனகம், ஒரே எடத்துல ஒக்காந்து ஒக்காந்து, ரெண்டே வருசத்துல சொரைக்கா மாதிரி பெருத்துப்போனா. ஒடம்பு சொகம் கொறையக் கொறைய குத்தங் கொறைக பெருசாத் தெரியுமா இல்லையா? புதுசாப் போட்ட பொட்டிக் கடையில ஏவாரமும் கம்மி. ரெண்டு காதுலயும் பூரான் புகுந்த மாதிரி "வைரமோதிரம் வைரமோதிரம்"னு அவளக் குத்திக் கொடஞ்சுக்கிட்டேயிருக்கான்.
"எங்கப்பன் வச்சுக்கிட்டு ஒண்ணும் வஞ்சகம் பண்ணலேனு இவளும் சொல்லிச் சொல்லிப் பாத்தா. கொடுக்கும் காம்பும் உள்ள பிராணினு அவனச் சொன்னமா இல்லையா... இப்ப காம்பக் கழத்தி வச்சுட்டுக் கொடுக்கு மட்டும் வச்சு அவளக் கொட்டிக் கிட்டேயிருக்கு அந்தப் பிராணி.
பழனிசெட்டிப்பட்டிக்கு அவ அப்பனும் வாரதில்ல சொக்கத்தேவன் பட்டிக்கு இவளும் போறதில்ல. வைர மோதிரத்துக்கு என்னடா வழினு யோசிச்சுக் கணக்குப் போட்டுக் காய் நகத்துறான் பய. அவ சோறு போட்டு வச்சுட்டு அந்தப் பக்கம் திரும்பி ரசத்துல கரண்டி போடுறதுக்குள்ள, ஒரு கை உப்ப அள்ளிக் குழம்புல போட்டுட்டு "கைக்கிது கைக் கிது"னு கத்திக் கெடுக்கிறான். அவன் பண்ணின இந்த மொதக் கூத்துலயே மூச்சுப் பேச்சில்லாமப் போனா அவ. அது தெளியுமுன்ன ரெண்டாவது கூத்த ஆரம்பிச்சுட்டான். ஆடு உரிக்க உரிக்கக் கடையிலயே கால்கடுக்க நின்னு கறியும் ஈரலுமா வாங்கிட்டு வந்தான். அரைவேக்காட்டுல கொழம்பு மொதக் கொதி கொதிக்க அகப்பைய விட்டு ஈரல மட்டும் எடுத்து வாயில போட்டுத் தின்டுபுட்டு "ஈரலக் காணம்... ஈரலக் காணம்"னு கத்திக் கெடுத்து ஊரக் கூட்டி அவளக் கிறுக்குப்புடிக்க வச்சுப்புட்டான்.
இத்தன எடக்குமடக்குப் பண்ணி எடஞ்சல் பண்ணியும் அழுகுறாளே தவிர, அவ அசையிறா இல்ல. கடைசியா அவளச் சண்டபோட்டு வெளியேத்த சாமியத் தொணைக்கிழுத்துக்கிட்டான். பண்ணக் கூடாத ஒரு காரியம் பண்ணினான் பாவி. வீட்டுக்குள்ள அவன் வேட்டிசட்டை போட்டு வக்கிற கொடியில, அவ மூலையில சுருட்டிவச்சிருந்த முட்டுச்சீலையக் கலந்து தொங்க விட்டுட்டான்.
"அய்யோ அநியாயமே! இந்த அசிங்கத்தப் பாத்தீகளா? கட்ற வேட்டியோட சேத்து முட்டுச்சீலையக் கொண்டாந்து முட்ட விட்ருக்காளே முண்டச்சி மக. இப்படித் தீட்டுப்பட்ட வீட்ல தெய்வமிருக்குமா? தெய்வம் இல்லாத வீட்ல பிள்ள இருக்குமா?" அது இதச் சொல்லி, அவள நொக்கு நொக்குன்னு நொக்கி நிம்மதியில்லாமப் பண்ணிப்புட்டான்.
நாலு வருசம் வாழ்ந்ததுக்குள்ளயே நடு முதுகுல ஏறி மிதிக்கிறவன்... இவன்கூட காலமெல்லாம் எப்பிடிக் காலந் தள்றது? அவன் நெனச்ச மாதிரியே "நான் போறேன் எங்க அப்பன் வீட்டுக்கு"னு புறப்பட்டுட்டா.
"போடீ போ. நான் இல்லாத நேரத்துல தங்கச் சங்கிலியையும் அவுத்திட்டுப் போயிட்டான் ஒங்கப்பன். வந்தா வைர மோதிரத்தோட வா இல்ல வளவிக்காரன் வீட்லயே விழுந்து சா." அன்னைக்கி வந்தவதான் அவ ஒரு மாசம் கழிச்சு இன்னைக்குத்தான் வந்திருக்கான் இவன். கறி கெடைக்கலேன்னா நாக்கக் கடிச்சுத் திங்கிற மாப்பிள்ளைக்கு எலும் பாச்சும் போடணும்னு அம்மாபட்டிக் கறிக் கடையில கடன் சொல்லி, ஆட்டுத் தலையும் எலும்புக் கறியும் வாங்கி ரத்தம் சொட்டச்சொட்ட மஞ்சப் பையில புடிச்சுட்டு வந்தாரு சுப்பஞ் செட்டியாரு.
தலைக் கறி வறுத்து, எலும்புக் கொழம்பு வச்சுக் குடுக்கவும், சட்டியிலருந்த மொத்தச் சோத்தையும் தட்டுல கவுத்து சோறு தெரியாமக் கொழம்பு ஊத்தி ஒரு முங்கு முங்குறான் முத்துக்காமு. அந்த வீட்ல இன்னம் ரெண்டு எள உசுரும் ஒரு கெழட்டு உசுரும் கெடக்கேன்னு நெஞ்சுல ஒரு ஓரத்துலகூட நெனைக்காம எலும்புக்குள்ள இருக்கிற வெந்த ரத்தம் வெளிய வரட்டுமேனு அத வாயில வச்சு உறியோ உறின்னு உறியிறான், உஸ்ஸு உஸ்ஸுன்னு. இருந்தாத்தானே... அது சுப்பஞ் செட்டியாருகிட்டயிருந்து வைர மோதிரம் மாதிரி வரவே மாட்டேங்குது.
ரெண்டு கன்னமும் உப்ப உப்ப சோத்த அள்ளி வாயில அடைச்சுக்கிட்டுக் கேக்குறான்: "நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாச்சு. சொல்லுங்க மாமு... எப்ப அனுப்பப்போறீங்க எங்கூட எம் பொண்டாட்டிய?"
"வந்தா இப்பக்கூட கூட்டிட்டுப் போங்க மாப்ள."
"அது கழுதை வந்திரும் தரையில தவ்வுற மீனு தண்ணிக்கு வான்னா வராமலா போகும்? வர வேண்டியது வருதாங்கிறேன்" சாப்பாட்டுக்குள்ள இருந்த எச்சிக் கைய வெளியில எடுத்து மோதிர வெரல மட்டும் ஒரு ஆட்டு ஆட்டுறான்.
"மாப்ள! குருவி மாதிரி சேத்த காச வச்சுப் போட்டுக் குடுத்திடறேன் பொட்டிக் கடையை. தங்கச் சங்கிலி ஒண்ணு எரவல் தாரேங்கிறா பெரிய மூக்கி. பொண்ணு கழுத்துல போட்டு அனுப்புறேன் வைர மோதிரம் குடுத்துட்டு வாங்கிக்கிறேன்."
முடிஞ்சுபோச்சு கல்யாணம் முடியல பிரச்னை. நாலு வருசமா அவளுக்குப் பிள்ளையுமில்ல வைர மோதிரமும் வரல. முள்ளங்கி மாதிரி சிக்குன்னு இருந்த கனகம், ஒரே எடத்துல ஒக்காந்து ஒக்காந்து, ரெண்டே வருசத்துல சொரைக்கா மாதிரி பெருத்துப்போனா. ஒடம்பு சொகம் கொறையக் கொறைய குத்தங் கொறைக பெருசாத் தெரியுமா இல்லையா? புதுசாப் போட்ட பொட்டிக் கடையில ஏவாரமும் கம்மி. ரெண்டு காதுலயும் பூரான் புகுந்த மாதிரி "வைரமோதிரம் வைரமோதிரம்"னு அவளக் குத்திக் கொடஞ்சுக்கிட்டேயிருக்கான்.
"எங்கப்பன் வச்சுக்கிட்டு ஒண்ணும் வஞ்சகம் பண்ணலேனு இவளும் சொல்லிச் சொல்லிப் பாத்தா. கொடுக்கும் காம்பும் உள்ள பிராணினு அவனச் சொன்னமா இல்லையா... இப்ப காம்பக் கழத்தி வச்சுட்டுக் கொடுக்கு மட்டும் வச்சு அவளக் கொட்டிக் கிட்டேயிருக்கு அந்தப் பிராணி.
பழனிசெட்டிப்பட்டிக்கு அவ அப்பனும் வாரதில்ல சொக்கத்தேவன் பட்டிக்கு இவளும் போறதில்ல. வைர மோதிரத்துக்கு என்னடா வழினு யோசிச்சுக் கணக்குப் போட்டுக் காய் நகத்துறான் பய. அவ சோறு போட்டு வச்சுட்டு அந்தப் பக்கம் திரும்பி ரசத்துல கரண்டி போடுறதுக்குள்ள, ஒரு கை உப்ப அள்ளிக் குழம்புல போட்டுட்டு "கைக்கிது கைக் கிது"னு கத்திக் கெடுக்கிறான். அவன் பண்ணின இந்த மொதக் கூத்துலயே மூச்சுப் பேச்சில்லாமப் போனா அவ. அது தெளியுமுன்ன ரெண்டாவது கூத்த ஆரம்பிச்சுட்டான். ஆடு உரிக்க உரிக்கக் கடையிலயே கால்கடுக்க நின்னு கறியும் ஈரலுமா வாங்கிட்டு வந்தான். அரைவேக்காட்டுல கொழம்பு மொதக் கொதி கொதிக்க அகப்பைய விட்டு ஈரல மட்டும் எடுத்து வாயில போட்டுத் தின்டுபுட்டு "ஈரலக் காணம்... ஈரலக் காணம்"னு கத்திக் கெடுத்து ஊரக் கூட்டி அவளக் கிறுக்குப்புடிக்க வச்சுப்புட்டான்.
இத்தன எடக்குமடக்குப் பண்ணி எடஞ்சல் பண்ணியும் அழுகுறாளே தவிர, அவ அசையிறா இல்ல. கடைசியா அவளச் சண்டபோட்டு வெளியேத்த சாமியத் தொணைக்கிழுத்துக்கிட்டான். பண்ணக் கூடாத ஒரு காரியம் பண்ணினான் பாவி. வீட்டுக்குள்ள அவன் வேட்டிசட்டை போட்டு வக்கிற கொடியில, அவ மூலையில சுருட்டிவச்சிருந்த முட்டுச்சீலையக் கலந்து தொங்க விட்டுட்டான்.
"அய்யோ அநியாயமே! இந்த அசிங்கத்தப் பாத்தீகளா? கட்ற வேட்டியோட சேத்து முட்டுச்சீலையக் கொண்டாந்து முட்ட விட்ருக்காளே முண்டச்சி மக. இப்படித் தீட்டுப்பட்ட வீட்ல தெய்வமிருக்குமா? தெய்வம் இல்லாத வீட்ல பிள்ள இருக்குமா?" அது இதச் சொல்லி, அவள நொக்கு நொக்குன்னு நொக்கி நிம்மதியில்லாமப் பண்ணிப்புட்டான்.
நாலு வருசம் வாழ்ந்ததுக்குள்ளயே நடு முதுகுல ஏறி மிதிக்கிறவன்... இவன்கூட காலமெல்லாம் எப்பிடிக் காலந் தள்றது? அவன் நெனச்ச மாதிரியே "நான் போறேன் எங்க அப்பன் வீட்டுக்கு"னு புறப்பட்டுட்டா.
"போடீ போ. நான் இல்லாத நேரத்துல தங்கச் சங்கிலியையும் அவுத்திட்டுப் போயிட்டான் ஒங்கப்பன். வந்தா வைர மோதிரத்தோட வா இல்ல வளவிக்காரன் வீட்லயே விழுந்து சா." அன்னைக்கி வந்தவதான் அவ ஒரு மாசம் கழிச்சு இன்னைக்குத்தான் வந்திருக்கான் இவன். கறி கெடைக்கலேன்னா நாக்கக் கடிச்சுத் திங்கிற மாப்பிள்ளைக்கு எலும் பாச்சும் போடணும்னு அம்மாபட்டிக் கறிக் கடையில கடன் சொல்லி, ஆட்டுத் தலையும் எலும்புக் கறியும் வாங்கி ரத்தம் சொட்டச்சொட்ட மஞ்சப் பையில புடிச்சுட்டு வந்தாரு சுப்பஞ் செட்டியாரு.
தலைக் கறி வறுத்து, எலும்புக் கொழம்பு வச்சுக் குடுக்கவும், சட்டியிலருந்த மொத்தச் சோத்தையும் தட்டுல கவுத்து சோறு தெரியாமக் கொழம்பு ஊத்தி ஒரு முங்கு முங்குறான் முத்துக்காமு. அந்த வீட்ல இன்னம் ரெண்டு எள உசுரும் ஒரு கெழட்டு உசுரும் கெடக்கேன்னு நெஞ்சுல ஒரு ஓரத்துலகூட நெனைக்காம எலும்புக்குள்ள இருக்கிற வெந்த ரத்தம் வெளிய வரட்டுமேனு அத வாயில வச்சு உறியோ உறின்னு உறியிறான், உஸ்ஸு உஸ்ஸுன்னு. இருந்தாத்தானே... அது சுப்பஞ் செட்டியாருகிட்டயிருந்து வைர மோதிரம் மாதிரி வரவே மாட்டேங்குது.
ரெண்டு கன்னமும் உப்ப உப்ப சோத்த அள்ளி வாயில அடைச்சுக்கிட்டுக் கேக்குறான்: "நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாச்சு. சொல்லுங்க மாமு... எப்ப அனுப்பப்போறீங்க எங்கூட எம் பொண்டாட்டிய?"
"வந்தா இப்பக்கூட கூட்டிட்டுப் போங்க மாப்ள."
"அது கழுதை வந்திரும் தரையில தவ்வுற மீனு தண்ணிக்கு வான்னா வராமலா போகும்? வர வேண்டியது வருதாங்கிறேன்" சாப்பாட்டுக்குள்ள இருந்த எச்சிக் கைய வெளியில எடுத்து மோதிர வெரல மட்டும் ஒரு ஆட்டு ஆட்டுறான்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"மாப்ள... ஒங்களுக்கு நான் கடன்பட்ருக்கேன் இல்லேங்கல. வளவி ஏவாரம் படுத்திருச்சு வளஞ்சும் போச்சு முதுகு. வாழ்ந்த பொண்ணு வாழா வெட்டியா இருக்கா. வளந்த பொண்ணு வீட்ல இருக்கா. நான் வைர மோதிரம் போடுவேனா? வளந்தவளக் கரை சேப்பனா?"
"ரெண்டும் ஒரே வேலையாப் போச்சுன்னா?"
"என்ன சொல்றீக மாப்ள?"
"எளையவளயும் கட்டிக்கிட்டு மூத்தவளயும் கூட்டிட்டுப் போயிடறேங்கிறேன். வைர மோதிரம் மட்டும் போட்டு விட்டுருங்க. மூத்தவளக் கர சேத்ததாவும் இருக்கும். எளையவ எனக்கொரு பிள்ள பெத்துக் குடுத்ததாவும் இருக்கும். என்ன நான் சொல்றது?"
மூணு பேருக்கும் நெஞ்சுக்கூட்டுச் சத்தம் நின்னுபோச்சு மூச்சுப் பேச்சும் நின்னுபோச்சு. கத்துற காக்கா உறுமுற நாயி ஒலக்கைச் சத்தம் சகலமும் நின்னுபோச்சு. அவன் எலும்பு கடிக்கிற சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டேயிருக்கு.
நகச்சுத்தி வந்தாலும் வீக்கம் வெரலுக்குத்தான..?
கனகாம்பரமும் பவளமும் நெஞ்சுக்கூடு ஒடஞ்சு வந்து அடைமழையா அழுகவும் கண்ணுமுழி கலங்கிப்போனா கருவாச்சி. ஒடைஞ்ச மனச ஒண்ணு சேத்துக்கிட்டு, அக்காதங்கச்சிக ரெண்டு பேருக்கும் நல்ல வார்த்தையா நாலு வார்த்த சொல்றா:
"மூத்தவளுக்குப் பிள்ளையில்ல இளையவள கட்டிக்குடுனு கேக்குறாரு அந்த ஆளு. பொண்ணு கேக்குற ஆள ரெண்டு மூணு கேள்வி கேளுங்கடி. வருசம் நாலுதான் ஆச்சு அதுக்குள்ள மலடின்னா எப்படி? கல்யாணமாகிப் பத்து வருசம் கழிச்சும் பிள்ளையெடுக்கிறவ இருக்காளா, இல்லையா? இன்னொண்ணும் கேக்கணும், பிள்ளை யில்லாததுக்குக் காரணம் மலடியா? மலடனா? அதை எதை வச்சு அளக்குறது?
சரி. ஒன் புருசன் வீரியக்காரன்னே வச்சுக்க... கட்டிட்டுப்போன ஓந் தங்கச்சிக்கும் பிள்ளையில்லாமப் போச்சுனா அதுக்கு மேல கட்டிக்குடுக்க ஒனக்குத் தங்கச்சியில்ல. மூணாவது பொண்டாட்டி கட்ட வேற யாரு தங்கச்சியத் தேடுவான்?
இருக்கட்டும் பொண்டாட்டி ரெண்டுனு ஆன பெறகு, பொட்டைப்பய அவன்தான்னு முடிவாகிப் போச்சுனு வச்சுக்க... ஒரு மலட்டுப் பயலுக்கு ரெண்டு பொண்டாட்டினு ஆகிப் போகுமே, நியாயமா?
மூக்குல குத்துற மாதிரி இன்னொரு கேள்வியும் கேளுங்கடி:
தண்டியும் தரமும் கொப்பும் குலையுமா அக்கா இருக்க ஏன் கேட்டு வாரான் எளையவள? வாரிசுக்கா? அவ வயசுக்கா? இல்ல, வைர மோதிரத்துக்கா?" கருவாச்சி பேசப் பேச அவ வாயையே பாத்து வாயடைச்சு நிக்கிறாக கனகாம்பரமும் பவளமும்.
"ஏண்டி கருவாச்சி, எங்கிட்டிருந்துடி வந்துச்சு இத்தந்தண்டி அறிவு? பல்லாங்குழியில புளிய வெதைய எண்ணிப் போடக்கூட புத்தியில்லாம இருந்தவ சொட்டாங்கல் வெளையாடறப்ப ஒத்தைக் கல்ல ஒழுங்கா எடுத்துட்டு ரெட்டைக் கல் எடுக்கக் குட்டிக்கரணம் போடுறவ அயிரை மீனப் புடிக்கப் போறேனு போயி அரட்டாவளைய அள்ளிட்டு வந்து ஆத்தாகிட்ட பெத்தவ, என்னைக்கிடி வந்துச்சு ஒனக்கு இம்புட்டுப் புத்தி?"
ஒரு பக்க உதட்டுல ஓரமாச் சிரிச்சுக் கிட்டா கருவாச்சி: ஒண்ணும் பேசல. பால் குடிக்கிற பிள்ளைக்கு ஒரு பக்க முந்தானைய ஒதுக்கிக் குடுத்துட்டு, பிள்ள முண்டிமுண்டி முட்டுற சொகத்தக் கண்ணு மூடி அனுபவிச்சுக் கிட்டே சீ கடிக்குது பாரு கழுதைனு பிள்ள தலையில ஒரு செல்லத் தட்டுத் தட்டிட்டுக் கருவாச்சி சொல்றா:
"புத்தி யாருக்கு இல்ல? எல்லாருக்கும் இருக்குடி. என்னா ஒண்ணு... எல்லா புத்தியும் அடைச்சுக் கெடக்கு. கையில ஒரு சுத்தி வச்சு அலைசுக் கிட்டேயிருக்கு காலம். அப்பப்ப புத்தியில பொட்டு பொட்டுனு போட்டுப் போயிக் கிட்டேயிருக்கு. போடுற போட்டுல சில புத்தி தெறந்திருது இதுக்கெல்லாம் அசந்திருவனானு சிலது அடைச்சே கெடக்கு. இருக்கட்டும் பெருசு என்ன சொல்றாரு?"
"புத்தி மாறி உக்காந்திருக்காரு எங்கப்பன். மானம் மரியாதிக்கு அஞ்சி இஞ்சிக் கெடக்கறோம் நாங்க."
"ஒரு ஆறு மாசம் ஆறவிடுங்கடி. மனுசன் கேக்குற கேள்விக்கு மாசம் பதில் சொல்லுமடி. ஆள் செய்யாததை நாள் செய்யும்னு சும்மாவா சொன்னாக?"
யோசிக்கிறா கருவாச்சி. அவளுக்கு அவளே பேசிக்கிறா.
காடு இருக்கு உழுக மாடு இல்ல.
வீடு இருக்கு ஆள் இல்ல.
பிள்ள இருக்கு புருசன் இல்ல.
கை காலு இருக்கு காசில்ல.
மண்ட வலி காய்ச்சல்னு விழுந்தாலும் ஒரு சுக்குத் தண்ணி வச்சுக் குடுக்கச் சொந்தபந்தம் இல்ல.
"செயிக்கிறனோ இல்லையோ தோத்துப் போக மாட்டேன் மாமா" பஞ்சாயத்துல சொன்ன சொல்லு மட்டுந்தான் நெஞ்சாங்குலையப் புடிச்சு நிமிண்டிக்கிட்டேயிருக்கு. பொழைச்சுக் காமிக்கணும்.பொழைக்கிறது முக்கியமில்ல மானத் தோட பொழைக்கணும். நெல்ல வெதைக்கிறோம்... உள்ள அரிசியிருக்கு, வெளிய உமி இருக்கு. அரிசிதான் மொளைக்கிது. ஆனா, உமி இல்லாம அரிசியை மட்டும் வெதைச்சா மொளைக்குமா? மொளைக்காது. அரிசிதான் பொழப்பு உமிதான் மானம். உமியில்லாத அரிசி மொளைக்காது மானமில்லாத பொழைப்புக்கு மதிப்பேது?
சொல்லிக் குடுக்கல யாரும் அவ புத்திக்குள்ள புதுசு புதுசா முட்டுது என்னென்னமோ! ஒடம்பு நோக ஒழைக்கணும். பாடுபட்ட மேனி பவுனு படாத மேனி புண்ணு. ஒரே வேல செஞ்சு ஒண்ணுக்கும் ஆகாது சகல வேலையும் பழகணும். தண்ணியில விட்டாலும் இருக்குமாம் தரையில விட்டாலும் பொழைக்குமாம் தவள மாதிரி இருக்கணும். அண்ணந் தம்பி ஒறவுனாலும் தள்ளி நின்னே பழகணும் சொலவம் சொல்லுதா இல்லையா?
"ரெண்டும் ஒரே வேலையாப் போச்சுன்னா?"
"என்ன சொல்றீக மாப்ள?"
"எளையவளயும் கட்டிக்கிட்டு மூத்தவளயும் கூட்டிட்டுப் போயிடறேங்கிறேன். வைர மோதிரம் மட்டும் போட்டு விட்டுருங்க. மூத்தவளக் கர சேத்ததாவும் இருக்கும். எளையவ எனக்கொரு பிள்ள பெத்துக் குடுத்ததாவும் இருக்கும். என்ன நான் சொல்றது?"
மூணு பேருக்கும் நெஞ்சுக்கூட்டுச் சத்தம் நின்னுபோச்சு மூச்சுப் பேச்சும் நின்னுபோச்சு. கத்துற காக்கா உறுமுற நாயி ஒலக்கைச் சத்தம் சகலமும் நின்னுபோச்சு. அவன் எலும்பு கடிக்கிற சத்தம் மட்டும் கேட்டுக்கிட்டேயிருக்கு.
நகச்சுத்தி வந்தாலும் வீக்கம் வெரலுக்குத்தான..?
கனகாம்பரமும் பவளமும் நெஞ்சுக்கூடு ஒடஞ்சு வந்து அடைமழையா அழுகவும் கண்ணுமுழி கலங்கிப்போனா கருவாச்சி. ஒடைஞ்ச மனச ஒண்ணு சேத்துக்கிட்டு, அக்காதங்கச்சிக ரெண்டு பேருக்கும் நல்ல வார்த்தையா நாலு வார்த்த சொல்றா:
"மூத்தவளுக்குப் பிள்ளையில்ல இளையவள கட்டிக்குடுனு கேக்குறாரு அந்த ஆளு. பொண்ணு கேக்குற ஆள ரெண்டு மூணு கேள்வி கேளுங்கடி. வருசம் நாலுதான் ஆச்சு அதுக்குள்ள மலடின்னா எப்படி? கல்யாணமாகிப் பத்து வருசம் கழிச்சும் பிள்ளையெடுக்கிறவ இருக்காளா, இல்லையா? இன்னொண்ணும் கேக்கணும், பிள்ளை யில்லாததுக்குக் காரணம் மலடியா? மலடனா? அதை எதை வச்சு அளக்குறது?
சரி. ஒன் புருசன் வீரியக்காரன்னே வச்சுக்க... கட்டிட்டுப்போன ஓந் தங்கச்சிக்கும் பிள்ளையில்லாமப் போச்சுனா அதுக்கு மேல கட்டிக்குடுக்க ஒனக்குத் தங்கச்சியில்ல. மூணாவது பொண்டாட்டி கட்ட வேற யாரு தங்கச்சியத் தேடுவான்?
இருக்கட்டும் பொண்டாட்டி ரெண்டுனு ஆன பெறகு, பொட்டைப்பய அவன்தான்னு முடிவாகிப் போச்சுனு வச்சுக்க... ஒரு மலட்டுப் பயலுக்கு ரெண்டு பொண்டாட்டினு ஆகிப் போகுமே, நியாயமா?
மூக்குல குத்துற மாதிரி இன்னொரு கேள்வியும் கேளுங்கடி:
தண்டியும் தரமும் கொப்பும் குலையுமா அக்கா இருக்க ஏன் கேட்டு வாரான் எளையவள? வாரிசுக்கா? அவ வயசுக்கா? இல்ல, வைர மோதிரத்துக்கா?" கருவாச்சி பேசப் பேச அவ வாயையே பாத்து வாயடைச்சு நிக்கிறாக கனகாம்பரமும் பவளமும்.
"ஏண்டி கருவாச்சி, எங்கிட்டிருந்துடி வந்துச்சு இத்தந்தண்டி அறிவு? பல்லாங்குழியில புளிய வெதைய எண்ணிப் போடக்கூட புத்தியில்லாம இருந்தவ சொட்டாங்கல் வெளையாடறப்ப ஒத்தைக் கல்ல ஒழுங்கா எடுத்துட்டு ரெட்டைக் கல் எடுக்கக் குட்டிக்கரணம் போடுறவ அயிரை மீனப் புடிக்கப் போறேனு போயி அரட்டாவளைய அள்ளிட்டு வந்து ஆத்தாகிட்ட பெத்தவ, என்னைக்கிடி வந்துச்சு ஒனக்கு இம்புட்டுப் புத்தி?"
ஒரு பக்க உதட்டுல ஓரமாச் சிரிச்சுக் கிட்டா கருவாச்சி: ஒண்ணும் பேசல. பால் குடிக்கிற பிள்ளைக்கு ஒரு பக்க முந்தானைய ஒதுக்கிக் குடுத்துட்டு, பிள்ள முண்டிமுண்டி முட்டுற சொகத்தக் கண்ணு மூடி அனுபவிச்சுக் கிட்டே சீ கடிக்குது பாரு கழுதைனு பிள்ள தலையில ஒரு செல்லத் தட்டுத் தட்டிட்டுக் கருவாச்சி சொல்றா:
"புத்தி யாருக்கு இல்ல? எல்லாருக்கும் இருக்குடி. என்னா ஒண்ணு... எல்லா புத்தியும் அடைச்சுக் கெடக்கு. கையில ஒரு சுத்தி வச்சு அலைசுக் கிட்டேயிருக்கு காலம். அப்பப்ப புத்தியில பொட்டு பொட்டுனு போட்டுப் போயிக் கிட்டேயிருக்கு. போடுற போட்டுல சில புத்தி தெறந்திருது இதுக்கெல்லாம் அசந்திருவனானு சிலது அடைச்சே கெடக்கு. இருக்கட்டும் பெருசு என்ன சொல்றாரு?"
"புத்தி மாறி உக்காந்திருக்காரு எங்கப்பன். மானம் மரியாதிக்கு அஞ்சி இஞ்சிக் கெடக்கறோம் நாங்க."
"ஒரு ஆறு மாசம் ஆறவிடுங்கடி. மனுசன் கேக்குற கேள்விக்கு மாசம் பதில் சொல்லுமடி. ஆள் செய்யாததை நாள் செய்யும்னு சும்மாவா சொன்னாக?"
யோசிக்கிறா கருவாச்சி. அவளுக்கு அவளே பேசிக்கிறா.
காடு இருக்கு உழுக மாடு இல்ல.
வீடு இருக்கு ஆள் இல்ல.
பிள்ள இருக்கு புருசன் இல்ல.
கை காலு இருக்கு காசில்ல.
மண்ட வலி காய்ச்சல்னு விழுந்தாலும் ஒரு சுக்குத் தண்ணி வச்சுக் குடுக்கச் சொந்தபந்தம் இல்ல.
"செயிக்கிறனோ இல்லையோ தோத்துப் போக மாட்டேன் மாமா" பஞ்சாயத்துல சொன்ன சொல்லு மட்டுந்தான் நெஞ்சாங்குலையப் புடிச்சு நிமிண்டிக்கிட்டேயிருக்கு. பொழைச்சுக் காமிக்கணும்.பொழைக்கிறது முக்கியமில்ல மானத் தோட பொழைக்கணும். நெல்ல வெதைக்கிறோம்... உள்ள அரிசியிருக்கு, வெளிய உமி இருக்கு. அரிசிதான் மொளைக்கிது. ஆனா, உமி இல்லாம அரிசியை மட்டும் வெதைச்சா மொளைக்குமா? மொளைக்காது. அரிசிதான் பொழப்பு உமிதான் மானம். உமியில்லாத அரிசி மொளைக்காது மானமில்லாத பொழைப்புக்கு மதிப்பேது?
சொல்லிக் குடுக்கல யாரும் அவ புத்திக்குள்ள புதுசு புதுசா முட்டுது என்னென்னமோ! ஒடம்பு நோக ஒழைக்கணும். பாடுபட்ட மேனி பவுனு படாத மேனி புண்ணு. ஒரே வேல செஞ்சு ஒண்ணுக்கும் ஆகாது சகல வேலையும் பழகணும். தண்ணியில விட்டாலும் இருக்குமாம் தரையில விட்டாலும் பொழைக்குமாம் தவள மாதிரி இருக்கணும். அண்ணந் தம்பி ஒறவுனாலும் தள்ளி நின்னே பழகணும் சொலவம் சொல்லுதா இல்லையா?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"மெத்தப் பழகுனாப் பித்தாளையும் பீ நாறும்."
என் வாய் உண்டது வகுறு கொண்டது போக மிச்சத்தக் கஞ்சியில்லாமக் கெடக்குற உசுருகளுக்கும் கைகால் வெளங்காத கெழடு கெட்டைகளுக்கும் ஆடு மாட்டுக்கும் காக்கா குருவிக்கும் குடுக்கணும் அள்ளிக் குடுக்கலேனாலும் கிள்ளிக் குடுக்கணும். பிள்ள பெத்த மேனி ஆம்பள சொகம் என்னான்னு அறிஞ்ச ஒடம்பு மூடி மூடி வச்சாலும் உள்ளுக்குள்ள என்னமோ முணு முணுங்கிற பருவம். ஆசைகள எரிச்சு அந்தச் சாம்பல அள்ளிப் பூசாட்டி அந்த ஆசை என்னிய எரிச்சுப்புடும். பிள்ளையப் பெத்த குடிசைக்குள்ள மாசு பொதைச்ச பள்ளத்தி லயே என் ஆசையையும் பொதைச்சுப் புட்டேன். பொதைச்ச ஆச மொளைக்காமப் பாத்துக்க ஆத்தா ஒன்னியக் கையெடுத்துக் கும்புடறேன் காளியாத்தா. நரி நாட்டாம பண்ற ஊர்ல தாய்க் கோழி இல்லாத குஞ்சாத் தனிச்சு நிக்கிறேன். நரி அடிக்க வந்தா, திருப்பி அடிக்கத் திராணி வேணாம் சாமி தப்பிச்சு ஓடி ஒளிய சந்து பொந்து காமி. மானத்துக்குப் பங்கமில்லாத எந்த வேலையும் செய்யலாம்னு முடிவெடித்துட்டா கருவாச்சி.
பூமி வானம் பாத்த பூமி. மனுசங்க பூமி பாத்த மனுசங்க. வேறென்ன தொழில் இருக்கு, விவசாயத்த விட்டா? களையெடுத்தா கருதறுத்தா குழை யறுக்கப் போனா கரட்டுக்குப் போயி வெறகெடுத்து வித்தா.
ஒரு நாள் மலையடிய ஒட்டியிருக்கிற கம்பங்காட்டுக்கு மறுகு கருது பெறக்கப் போனா. மறுகு கருதுங்கிறது வேறொண்ணு மில்ல. கம்பங்காட்ல தலக் கருது வெளைய விலாச் சிம்புகள்ல வெடிச்சு வெளியேறும் இன்னொரு கருது. தலக் கருது அறுத்து முடிச்ச இருபதாம் நாளு அதையும் அறுக்கலாம். பொதுவா அந்தக் கருதுக சக்கை யாத்தான் இருக்கும் சாவியாத்தான் கெடக்கும். அதனால் காட்டுக்காரக அத அறுக்கறதில்ல. வந்த சனம் போற சனம் அறுத்திட்டுப் போகட்டும்னு விட்ருவாக.
தோள்ல தொட்டி கட்டிப் பிள்ளையப் போட்டுக்கிட்டு, அதுக்கொரு சீனி முட்டாயி வாங்கிக் குடுத்து அழுகைய அமத்திட்டு, மசங்கற வரைக்கும் மறுகு கருது அறுத்துப் பாத்தும் குட்டிச் சாக்குல முக்காச் சாக்கு நெறையல. பிள்ளைய இடுப்புல சொமந்து கருதுச் சாக்கத் தலையில சொமந்து மொட்டக் கெணத்துப் பொலி வழியா நடந்து வாரப்ப எதுக்க வந்து நில்லுனு நிறுத்துனான் பன்னியான் பேரன்.
"எங்கருந்து கருதறுத்து வாரவ?"
"நாயக்கர் வீட்டுக் காட்ல."
"அது அப்ப எங்கண்ணன் கட்டையன் குத்த கைக்கு எடுத்த காடு."
"அறுக்கிறப்ப யாரும் தடுக்கல அறுத்த பெறகு ஏம்ப்பா மறிக்கிற?"
"தீத்துட்டுப் போன சிறுக்கிக்குப் பேச்சென்ன பேச்சு?"
அவ தலையிலிருந்த கருதுச் சாக்க விசுக்குனு புடுங்கி வீசியெறிஞ்சான் மொட்டக் கெணத்துல. கருதுச் சாக்கு கெணத்துக்குள்ள விழுந்த சத்தம் அடங்கு முன்ன அவன் கம்பங்காட்ல ஓடிக் காணாமப் போனான்.
"இருங்கடா... தெய்வம் கேக்குமடா ஒங்கள..." ஆத்தாளுக்கு என்னமோ ஆகிப்போச்சுனு பிள்ள வீல்னு கத்துன கத்துல கெணத்துக்குள்ளிருந்து ஆகாயத் துல- யாரோ அம்பு தொடுத்த மாதிரி சிவ்வுனு பயந்து பறந்து வருதுக, அப்பத்தான் போய் அடைஞ்ச நெய்க் குருவிக.
ஒரு வாய்க் கூழ்கூட இல்லாம ஏறு வெயில்ல கருதறுத்து அதையும் பறிகுடுத் திட்டு, கண்ணெல்லாம் பஞ்சடைஞ்சு கைப் பிள்ள சொமந்து போறா கருமாயப் பட்ட கருவாச்சி. கொண்ணவாயன நெனச்சாத் தான் கும்பி எரிஞ்சுபோகுது கருவாச்சிக்கு. யாரு பெத்த பிள்ளையோ? கஞ்சியில்லாத வீட்டுக்கு நீதாண்டா ராசானு ஈசன் இவன் தலையில எழுதிருச்சோ? கட்டை வேகிற காலம் வரைக்கும் காலடி நிழல்லயே கெடக்கப் போற ஒரே சொந்தம் இந்தக் கிறுக்குப் பயலாத்தான் இருப்பான் போலிருக்கு. தான் கொலபட்டினியாக் கெடந்தாலும் அவன் கும்பாவப் பழைய கஞ்சி ஊத்தியாச்சும் நெப்பிவிட்றணும். இப்படியெல்லாம் நெனச்சுக் கெடந்தவ நெஞ்சிலயும் நெருப்பு விழுகுது லேசுலேசா. அவன் முன்ன மாதிரி இல்ல. விடிஞ்சும் ஒறங்குறான் வெறிச்சு விட்டம் பாக்கிறான் கூடையில அள்ள வேண்டிய சாணியச் சட்டியில அள்ளுறான். அழகு சிங்கத்தத் திண்ணையில விட்டுட்டுத் தெருவுக்கு ஓடிப் போறான். ஒண்ணும் புடிபடல அவன் போற போக்கு. சடையத்தேவர் வீட்டு ஆளுக செய்வினை செஞ்சிருப்பாகளோ? பாப்பம்.
பொழைக்க ஒரு புது வழி பாக்கணுமே!
கருவாச்சி பெரிய மனுசியான அணுசுல ஆத்தா பெரியமூக்கி அவளுக்குப் பருத்திப் பால் பாயாசம் வச்சுக் கொடுத்திருக்கா. அந்த மாதிரி ஆயுசுல குடிச்சதில்லனு சொல்லியிருக்காக அத ருசி கண்டவுக. பருத்திப் பால் பாயாசம் செய்யிற கம்பசூத்திரம் தெரியும் கருவாச்சிக்கு. பாயாசம் போட்டு ஊருக்குள்ள வித்தா என்னன்னு யோசிச்சா மறுநாள் செஞ்சேபுட்டா. அன்னக்கி ராத்திரி அரை வீச பருத்தி வெதையத் துண்டா ஊறப் போட்டா. அரைப்படி பச்சரிசி கொஞ்சம் உளுந்து இத்துனூண்டு வெந்தயம் மூணும் கலந்து மொத்தமா ஊறவச்சா. அரைக்காப்படி பாசிப் பயறைப் போட்டு இன்னொரு ஏனத் துல தண்ணி ஊத்திவச்சா. ஊறவச்ச பருத்தி வெதையோட இஞ்சியும் ஏலக்காயும் கலந்து ஒரல்ல போட்டு, கோழி கூப்பிடக் கொண்ணவாயன எழுப்பி "ஆட்றா மகனே ஆட்றா"ன்னா. அவன் ஒறங்கி விழுந்துக்கிட்டே ஒரல ஆட்றான். சக்கைப் பதம் வரவும் அதுல தண்ணி ஊத்திப் பருத்திப் பாலப் புழிஞ்சா பாத்திரத்துல. அப்படி மூணு ஆட்டி ஆட்டி மூணு புழி புழிஞ்சா. ஊறப் போட்ட பச்சரிசியக் குருணப் பதத்துக்கு ஆட்டி அள்ளிவச்சுக்கிட்டா. ரெண்டு வீச கருப்பட்டிய நுணுக்கிவச்சுக் கிட்டா அரைத் தேங்காயத் துருவிவச்சுக் கிட்டா.
இப்பப் பத்துப் படி தண்ணிய ஒரு அடுப்புக் கூட்டிக் கொதிகொதினு கொதிக்கவிட்டா. ஊத்துனா அதுல பருத்திப் பால. கிண்டிக்கிட்டே முழுப் பாசிப் பயற உள்ள அள்ளிக் கொட்னா. அது முக்காப் பதம் வேக்காடு கண்டதும் பச்சரிசி மாவ உள்ள கொட்டிக் கலக்கோ கலக்குனு கலக்குனா. கொதி பதம் வந்ததும் கருபட்டித் தூளை வெதச்சு தேங்காத் துருவலைத் தெளிச்சு எறக்கிவச்சா. நான் இங்கே இருக்கேன்னு தெருவுல போற ஆளுக்கெல்லாம் தகவல் சொல்லுது பாயாசம். ஒரு போணி ஓரணானு அவ விக்க ஆரம்பிச்சதும் கஞ்சிப் பொழுதுக்குள்ள காணாமப்போயிருச்சு பாயாசம்.
பத்தே நாள்ல கருவாச்சி பாயாசத்துக்குக் கிறுக்குப் புடிச்சுப் போயிருச்சு ஊரு. விடிய்ய பல்லு வெளக்காமப் பாயாசம் குடிச்சுப் பழகிருச்சு சொக்கத்தேவன் பட்டி. செலவெல்லாம் போக அவ கையில நித்தம் நிக்கிது ஒண்ணே முக்கா.
கட்டையன் பதறிப் போனான். "ஏய்! இப்படியே விட்டா ஈரு பேனாகிப் போகும் பேனு பெருமாளாகிப் போகும். அவ பாயாசச் சட்டியில பல்லியடிச்சுப் போடுங்கடா."
என் வாய் உண்டது வகுறு கொண்டது போக மிச்சத்தக் கஞ்சியில்லாமக் கெடக்குற உசுருகளுக்கும் கைகால் வெளங்காத கெழடு கெட்டைகளுக்கும் ஆடு மாட்டுக்கும் காக்கா குருவிக்கும் குடுக்கணும் அள்ளிக் குடுக்கலேனாலும் கிள்ளிக் குடுக்கணும். பிள்ள பெத்த மேனி ஆம்பள சொகம் என்னான்னு அறிஞ்ச ஒடம்பு மூடி மூடி வச்சாலும் உள்ளுக்குள்ள என்னமோ முணு முணுங்கிற பருவம். ஆசைகள எரிச்சு அந்தச் சாம்பல அள்ளிப் பூசாட்டி அந்த ஆசை என்னிய எரிச்சுப்புடும். பிள்ளையப் பெத்த குடிசைக்குள்ள மாசு பொதைச்ச பள்ளத்தி லயே என் ஆசையையும் பொதைச்சுப் புட்டேன். பொதைச்ச ஆச மொளைக்காமப் பாத்துக்க ஆத்தா ஒன்னியக் கையெடுத்துக் கும்புடறேன் காளியாத்தா. நரி நாட்டாம பண்ற ஊர்ல தாய்க் கோழி இல்லாத குஞ்சாத் தனிச்சு நிக்கிறேன். நரி அடிக்க வந்தா, திருப்பி அடிக்கத் திராணி வேணாம் சாமி தப்பிச்சு ஓடி ஒளிய சந்து பொந்து காமி. மானத்துக்குப் பங்கமில்லாத எந்த வேலையும் செய்யலாம்னு முடிவெடித்துட்டா கருவாச்சி.
பூமி வானம் பாத்த பூமி. மனுசங்க பூமி பாத்த மனுசங்க. வேறென்ன தொழில் இருக்கு, விவசாயத்த விட்டா? களையெடுத்தா கருதறுத்தா குழை யறுக்கப் போனா கரட்டுக்குப் போயி வெறகெடுத்து வித்தா.
ஒரு நாள் மலையடிய ஒட்டியிருக்கிற கம்பங்காட்டுக்கு மறுகு கருது பெறக்கப் போனா. மறுகு கருதுங்கிறது வேறொண்ணு மில்ல. கம்பங்காட்ல தலக் கருது வெளைய விலாச் சிம்புகள்ல வெடிச்சு வெளியேறும் இன்னொரு கருது. தலக் கருது அறுத்து முடிச்ச இருபதாம் நாளு அதையும் அறுக்கலாம். பொதுவா அந்தக் கருதுக சக்கை யாத்தான் இருக்கும் சாவியாத்தான் கெடக்கும். அதனால் காட்டுக்காரக அத அறுக்கறதில்ல. வந்த சனம் போற சனம் அறுத்திட்டுப் போகட்டும்னு விட்ருவாக.
தோள்ல தொட்டி கட்டிப் பிள்ளையப் போட்டுக்கிட்டு, அதுக்கொரு சீனி முட்டாயி வாங்கிக் குடுத்து அழுகைய அமத்திட்டு, மசங்கற வரைக்கும் மறுகு கருது அறுத்துப் பாத்தும் குட்டிச் சாக்குல முக்காச் சாக்கு நெறையல. பிள்ளைய இடுப்புல சொமந்து கருதுச் சாக்கத் தலையில சொமந்து மொட்டக் கெணத்துப் பொலி வழியா நடந்து வாரப்ப எதுக்க வந்து நில்லுனு நிறுத்துனான் பன்னியான் பேரன்.
"எங்கருந்து கருதறுத்து வாரவ?"
"நாயக்கர் வீட்டுக் காட்ல."
"அது அப்ப எங்கண்ணன் கட்டையன் குத்த கைக்கு எடுத்த காடு."
"அறுக்கிறப்ப யாரும் தடுக்கல அறுத்த பெறகு ஏம்ப்பா மறிக்கிற?"
"தீத்துட்டுப் போன சிறுக்கிக்குப் பேச்சென்ன பேச்சு?"
அவ தலையிலிருந்த கருதுச் சாக்க விசுக்குனு புடுங்கி வீசியெறிஞ்சான் மொட்டக் கெணத்துல. கருதுச் சாக்கு கெணத்துக்குள்ள விழுந்த சத்தம் அடங்கு முன்ன அவன் கம்பங்காட்ல ஓடிக் காணாமப் போனான்.
"இருங்கடா... தெய்வம் கேக்குமடா ஒங்கள..." ஆத்தாளுக்கு என்னமோ ஆகிப்போச்சுனு பிள்ள வீல்னு கத்துன கத்துல கெணத்துக்குள்ளிருந்து ஆகாயத் துல- யாரோ அம்பு தொடுத்த மாதிரி சிவ்வுனு பயந்து பறந்து வருதுக, அப்பத்தான் போய் அடைஞ்ச நெய்க் குருவிக.
ஒரு வாய்க் கூழ்கூட இல்லாம ஏறு வெயில்ல கருதறுத்து அதையும் பறிகுடுத் திட்டு, கண்ணெல்லாம் பஞ்சடைஞ்சு கைப் பிள்ள சொமந்து போறா கருமாயப் பட்ட கருவாச்சி. கொண்ணவாயன நெனச்சாத் தான் கும்பி எரிஞ்சுபோகுது கருவாச்சிக்கு. யாரு பெத்த பிள்ளையோ? கஞ்சியில்லாத வீட்டுக்கு நீதாண்டா ராசானு ஈசன் இவன் தலையில எழுதிருச்சோ? கட்டை வேகிற காலம் வரைக்கும் காலடி நிழல்லயே கெடக்கப் போற ஒரே சொந்தம் இந்தக் கிறுக்குப் பயலாத்தான் இருப்பான் போலிருக்கு. தான் கொலபட்டினியாக் கெடந்தாலும் அவன் கும்பாவப் பழைய கஞ்சி ஊத்தியாச்சும் நெப்பிவிட்றணும். இப்படியெல்லாம் நெனச்சுக் கெடந்தவ நெஞ்சிலயும் நெருப்பு விழுகுது லேசுலேசா. அவன் முன்ன மாதிரி இல்ல. விடிஞ்சும் ஒறங்குறான் வெறிச்சு விட்டம் பாக்கிறான் கூடையில அள்ள வேண்டிய சாணியச் சட்டியில அள்ளுறான். அழகு சிங்கத்தத் திண்ணையில விட்டுட்டுத் தெருவுக்கு ஓடிப் போறான். ஒண்ணும் புடிபடல அவன் போற போக்கு. சடையத்தேவர் வீட்டு ஆளுக செய்வினை செஞ்சிருப்பாகளோ? பாப்பம்.
பொழைக்க ஒரு புது வழி பாக்கணுமே!
கருவாச்சி பெரிய மனுசியான அணுசுல ஆத்தா பெரியமூக்கி அவளுக்குப் பருத்திப் பால் பாயாசம் வச்சுக் கொடுத்திருக்கா. அந்த மாதிரி ஆயுசுல குடிச்சதில்லனு சொல்லியிருக்காக அத ருசி கண்டவுக. பருத்திப் பால் பாயாசம் செய்யிற கம்பசூத்திரம் தெரியும் கருவாச்சிக்கு. பாயாசம் போட்டு ஊருக்குள்ள வித்தா என்னன்னு யோசிச்சா மறுநாள் செஞ்சேபுட்டா. அன்னக்கி ராத்திரி அரை வீச பருத்தி வெதையத் துண்டா ஊறப் போட்டா. அரைப்படி பச்சரிசி கொஞ்சம் உளுந்து இத்துனூண்டு வெந்தயம் மூணும் கலந்து மொத்தமா ஊறவச்சா. அரைக்காப்படி பாசிப் பயறைப் போட்டு இன்னொரு ஏனத் துல தண்ணி ஊத்திவச்சா. ஊறவச்ச பருத்தி வெதையோட இஞ்சியும் ஏலக்காயும் கலந்து ஒரல்ல போட்டு, கோழி கூப்பிடக் கொண்ணவாயன எழுப்பி "ஆட்றா மகனே ஆட்றா"ன்னா. அவன் ஒறங்கி விழுந்துக்கிட்டே ஒரல ஆட்றான். சக்கைப் பதம் வரவும் அதுல தண்ணி ஊத்திப் பருத்திப் பாலப் புழிஞ்சா பாத்திரத்துல. அப்படி மூணு ஆட்டி ஆட்டி மூணு புழி புழிஞ்சா. ஊறப் போட்ட பச்சரிசியக் குருணப் பதத்துக்கு ஆட்டி அள்ளிவச்சுக்கிட்டா. ரெண்டு வீச கருப்பட்டிய நுணுக்கிவச்சுக் கிட்டா அரைத் தேங்காயத் துருவிவச்சுக் கிட்டா.
இப்பப் பத்துப் படி தண்ணிய ஒரு அடுப்புக் கூட்டிக் கொதிகொதினு கொதிக்கவிட்டா. ஊத்துனா அதுல பருத்திப் பால. கிண்டிக்கிட்டே முழுப் பாசிப் பயற உள்ள அள்ளிக் கொட்னா. அது முக்காப் பதம் வேக்காடு கண்டதும் பச்சரிசி மாவ உள்ள கொட்டிக் கலக்கோ கலக்குனு கலக்குனா. கொதி பதம் வந்ததும் கருபட்டித் தூளை வெதச்சு தேங்காத் துருவலைத் தெளிச்சு எறக்கிவச்சா. நான் இங்கே இருக்கேன்னு தெருவுல போற ஆளுக்கெல்லாம் தகவல் சொல்லுது பாயாசம். ஒரு போணி ஓரணானு அவ விக்க ஆரம்பிச்சதும் கஞ்சிப் பொழுதுக்குள்ள காணாமப்போயிருச்சு பாயாசம்.
பத்தே நாள்ல கருவாச்சி பாயாசத்துக்குக் கிறுக்குப் புடிச்சுப் போயிருச்சு ஊரு. விடிய்ய பல்லு வெளக்காமப் பாயாசம் குடிச்சுப் பழகிருச்சு சொக்கத்தேவன் பட்டி. செலவெல்லாம் போக அவ கையில நித்தம் நிக்கிது ஒண்ணே முக்கா.
கட்டையன் பதறிப் போனான். "ஏய்! இப்படியே விட்டா ஈரு பேனாகிப் போகும் பேனு பெருமாளாகிப் போகும். அவ பாயாசச் சட்டியில பல்லியடிச்சுப் போடுங்கடா."
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"நீ சும்மா இருண்ணே... அவ பொழப்புல ஆப்படிக்கிறதுக்கு இன்னொரு வழி வச்சிருக்கேன்." மறுநாள் பாயாசப் பானையத் தலையில சொமந்து கோழி கூப்புட கருவாச்சி தெருவுல எறங்கி நடக்க... அதுக்கு முன்ன பாயாசம் வாங்கிக் குடிச்சுக்கிட்டிருக்கு ஒரு கூட்டம். அதே மாதிரி ஈயக்குண்டா, அதே மாதிரி போணி வச்சு ஓரணாவுக்கு ரெண்டு போணின்னு ஊருக்கே ஊத்திக்கிட்டிருக்கா கன்னியம்மா. ஊர்ல ஒரு மாதிரியான பொம்பள அவ. முப்பது முப்பத்தஞ்சு வயசிருந்தாலும் சும்மா செவ்வாழத்தாரு மாதிரி சிலுப்பி நிக்கிறவ. அவளுக்கும் வேற பொம்பளைகளுக்கும் தெருவுல சண்டகிண்ட வந்து "தெரியாதா ஒன்னிய... அவனத்தான நீ வச்சிருக்க"னு கேட் டுட்டா... "ஒனக்குத் தெரிஞ்சு அவன் ஒருத்தன்தாண்டி... எனக்குத்தான தெரியும் என்னிய வச்சிருக்கிற நாலு பேர்ல ஒம் புருசனும் ஒரு ஆளுனு"இப்படிப் பதில் சொல்ற ஏடாகூடமான பொம்பள.
அவளுக்குக் கட்டையன் ஆளுக துட்டக் குடுத்துத் தட்டேத்திவிடவும் ஓரணாவுக்கு ஒரு போணினு விக்கிற பாயாசத்த இவ ஓரணாவுக்கு ரெண்டு போணினு வித்து கருவாச்சி பொழப்பக் காலி பண்ணிப்புட்டா.
ஏவாரம் அத்துப்போச்சு, கைக் காசு கொறஞ்சுபோச்சு, சென மாடு தீவனமில்லாமக் கெடக்கு, சதசதசதனு ஈரமிருந்தும் உழாமக் கெடக்கு காடு. காய்ச்ச(ல்) தடுமன்னு பத்துப் போட்டுக் கெடக்கு பெத்த புள்ள.
இந்த வருசச் சம்பளம் வேற குடுக்கல கொண்ணவாயனுக்கு. கொட்டத்துல சாணியள்ளி, தூக்குச் சட்டியில கூழ் ஊத்தி வச்சுக்கிட்டு "மேய்ச்சலுக்கு ஓட்டிட்டுப் போடா மகனே பசுமாட்ட"னு கொண்ணவாயனக் கூப்பிட்டா, அவன் சாட்டக் கம்பத் திண்ணையில போட்டுட்டு ஒடிஞ்ச ஒடம்பு வளைஞ்சு நின்னு சொல்றான்: "சி... சி... சின்னத்தா... நான் ஊர்ல போயிக் க...க...க... கல்யாணம் பண்ணிக் கு...கு...கு... குடும்பம் நடத்தப் போறேன். ச...ச...ச... சம்பளத்தக் குடுத்திட்டா... நான் வே...வே... வே... வேலைய விட்டு நின்னுக்கிறேன்."
அவன்கிட்ட எதிர்பாக்கல அவ அந்த வார்த்தைய...
காதுக்குள்ள பாஞ்ச முள்ளு கண்ணுக்குள்ள எட்டிப்பாக்குற மாதிரி அவ கண்ணவிட்டுத் தவ்விருச்சு கண்ணீர்த் துளி ரெண்டு.
செத்தவடம் நெஞ்சப் புடிச்சு ஒக்காந்துபோனவ நொட்டாங்கையில ரெண்டு கண்ணையும் தொடச்சுக்கிட்டா.
"போடா! ஏலே போடா. எல்லாம் அந்து போயி என் இத்த வேருக்குக் கீழ ஒட்டிக்கிட்டிருந்த ஒத்த வேரு நீயும் அத்துக்கிட்டுப் போறயா? போ! ஒத்தையில பிள்ள பெத்தவளுக்கு ஒத்தையில சாகத் தெரியாதா? போங்கடா, போறவனெல்லாம் போங்கடா!"
அழுகை நிக்கல பாவம் அழுகப் பெறந்தவளுக்கு!
சொக்கத்தேவன் பட்டியைக் கடக்கிற வரைக்கும் மாருல கல்லக் கட்டி நடந்த மாதிரி, மனசு கனத்துத்தான் கெடந்துச்சு கொண்ணவாயனுக்கு. கஞ்சி ஊத்துன வீட்ட விட்டுப் போறமே, காத்தா அலஞ்சு திரிஞ்ச காட்ட விட்டுப் போறமே, தீனிக்கு ஏங்குற சென மாட்ட விட்டுட்டுப் போறமேங்குற வருத்தம் ஒரு பக்கமிருக்க, நாம போனா ஊடும் பாடும் ஒத்தாச பண்றதுக்குச் சின்னத்தாவுக்கு நாதி இல்லையே, அழகு சிங்கத்தத் தூக்க ஆளில்லையேங்கிற கவல தான் குறுக்குல குத்துது கொண்ணவாயன.
ஊரு கடந்து ஒத்தையடிப் பாதையில வந்து சேர, நெஞ்சில இருந்த பாரம் கொஞ்சமா எறங்கி பையில இருந்த பாரம் கனக்குது லேசா. பையத் தாண்டி எண்ணெயப் பையக் கசியவிட்டு, நான் இங்கே இருக்கேங்குது உள்ளுக் கிருக்கிற அதிரசம். முறுக்கும், சீடையும் ஒண்ணுக்கொண்ணு முட்டி, குட்டிக் கலாட்டாப் பண்ணி வருதுக.
என்னியக் கட்டப் போறவ பேரென்ன... பேரென்ன?னு பையிக்கு வெளிய பிதுங்கி நாக்கத் தொங்கப்போட்டுக் கேக்குது, தேனிச் சந்தையில வாங்கித் திணிச்ச மஞ்சச் சீல. அவ பேரு அய்யக்கா அவ பேரு அய்யக்கானு க்ளிங் மொழி பேசுதுக காயிதத்துல சுத்திவச்ச கண்ணாடி வளவிக.
அவுந்த வேட்டியக் கட்ட அவன் கையத் தூக்கவும், எதேச்சையா மேல வந்த பையி மூக்குல ஒரு முட்டி முட்டிப் போனதுல, அடிக்குது பைக்குள்ள அய்யக்கா வாசம். இன்னைக்கு நேத்துப் பழக்கமா அவனுக்கும் அய்யக்காவுக்கும். பத்துப் பதினோரு வயசுல ஊர் மாடு மேய்க்கப் போனவன் இவன். ஊர் மாட்டுக்குப் பின்னாலயே சாணி பெறக்க வந்தவ அவ. சாட்டைக்கம்புக்குக் கால் சட்டை போட்டுவிட்ட மாதிரி இவன். முருங்கக் காய்க்கு முந்தான சுத்துன மாதிரி அவ. இவனவிட மூணு மாசம் அவ பெரியவ தான் ஆனா, பெரிய வித்தியாசமில்ல உருவத்துல. கொண்ணவாயன் அப்பன் ஒரு குடிகாரன் அய்யக்கா அவுக ஆத்தா ஒரு ஓடுகாலி. பொழச்சாப் பொழைங்க செத்தா சாங்கனு ரெண்டு பேரையும் தெருவுல விட்டுட்டாக அவன் அப்பனும் இவ ஆத்தாளும்.
மாடுதான் சொந்த பந்தம்னு ஆகிப்போச்சு இவனுக்கு சாணிதான் கஞ்சினு ஆகிப்போச்சு அவளுக்கு. கஞ்சிப் பொழுதுக்கு ஊர் மாடு ஓட்டிக் கெளம்பிடுவான் கொண்ண வாயன். நாப்பது அம்பது மாடுகள முன்னுக்குவிட்டு இவன் பின்னுக்குப் போக கூடையத் தூக்கிக்கிட்டு கூடவே வருவாக சாணி பெறக்கிற அஞ்சாறு பொம்பளைக. அந்தப் பொம்பளைக போடுவாளுகய்யா ஒரு சண்ட, சும்மா பானிப்பட்டு யுத்தம் மாதிரி ஒரு சாணிப்பட்டு யுத்தம். எந்த ஒரு மாடும் சாணி போடுற துக்கு முன்ன மொதல்ல வாலத் தூக்கும்.
தூண்டிக்காரன் தக்கையிலயே கண்ணு வச்சிருக்கிற மாதிரி வால்லயே கண்ணு வச்சிருப்பாளுக சாணி பெறக்கிற பொம்பளைக. எந்த மாடு வாலத் தூக்குதுனு கண்டுபுடிச்சு ஏஞ்சாணி... ஏஞ்சாணினு எவ மொதல்ல கத்துறாளோ, அவளுக்குதான் சட்டப்படி பாத்தியப்படும் சாணி.
அய்யக்காவுக்கு ஒரு காலு இழுவை வெரசா நடக்க மாட்டா. சாணியப் பாத்தாக் கூடைய விட்டுருவா கூடையப் பாத்தா சாணிய விட்ருவா. எத்தனையோ நாள் ஏமாந்து போயி வெறுங்கூடையோட வீடு சேந்திருக்கா. அவளப் பாக்கப் பாக்கக் கொண்ணவாயன் மனசு ஓரமா உருகுது. எப்பிடியும் அவ கூடைய நெப்பி அனுப்பணுங்கற ஒரு நெனப்பு நெஞ்சுக்குழியப் பிறாண்டுது.
இவனே ஒரு ஏற்பாடு பண்ணுனான் எந்த மாடு வயிறு நெறையக் குழை தின்டுச்சோ, எந்த மாட்டுக்குச் சாணிச் சத்து அதிகமோ, அந்த மாடுகள எடது பக்கமா நிறுத்தி ஓட்டி, அய்யக்காவ அதே பக்கம் முன்னுக்கவிட்டு இவன் பின்னுக்கப் போறான். மாடு வாலத் தூக்க ஒரு எம்பு எம்ப, இவன் அய்யக்கா தோளத் தடவுவான். அதுக்குள்ள அவ "ஏஞ்சாணி... ஏஞ்சாணி"னு கத்திருவா. இப்பவெல்லாம் நித்தம் நித்தம் நெறஞ்சுபோகுது கூடை.
இப்படியே அஞ்சாறு மாசம் அவுக காலம் நடக்குது. வரவர கூடையில சாணியும் மனசுல காதலும் பெரும்கனம் கனக்குது.
அவளுக்குக் கட்டையன் ஆளுக துட்டக் குடுத்துத் தட்டேத்திவிடவும் ஓரணாவுக்கு ஒரு போணினு விக்கிற பாயாசத்த இவ ஓரணாவுக்கு ரெண்டு போணினு வித்து கருவாச்சி பொழப்பக் காலி பண்ணிப்புட்டா.
ஏவாரம் அத்துப்போச்சு, கைக் காசு கொறஞ்சுபோச்சு, சென மாடு தீவனமில்லாமக் கெடக்கு, சதசதசதனு ஈரமிருந்தும் உழாமக் கெடக்கு காடு. காய்ச்ச(ல்) தடுமன்னு பத்துப் போட்டுக் கெடக்கு பெத்த புள்ள.
இந்த வருசச் சம்பளம் வேற குடுக்கல கொண்ணவாயனுக்கு. கொட்டத்துல சாணியள்ளி, தூக்குச் சட்டியில கூழ் ஊத்தி வச்சுக்கிட்டு "மேய்ச்சலுக்கு ஓட்டிட்டுப் போடா மகனே பசுமாட்ட"னு கொண்ணவாயனக் கூப்பிட்டா, அவன் சாட்டக் கம்பத் திண்ணையில போட்டுட்டு ஒடிஞ்ச ஒடம்பு வளைஞ்சு நின்னு சொல்றான்: "சி... சி... சின்னத்தா... நான் ஊர்ல போயிக் க...க...க... கல்யாணம் பண்ணிக் கு...கு...கு... குடும்பம் நடத்தப் போறேன். ச...ச...ச... சம்பளத்தக் குடுத்திட்டா... நான் வே...வே... வே... வேலைய விட்டு நின்னுக்கிறேன்."
அவன்கிட்ட எதிர்பாக்கல அவ அந்த வார்த்தைய...
காதுக்குள்ள பாஞ்ச முள்ளு கண்ணுக்குள்ள எட்டிப்பாக்குற மாதிரி அவ கண்ணவிட்டுத் தவ்விருச்சு கண்ணீர்த் துளி ரெண்டு.
செத்தவடம் நெஞ்சப் புடிச்சு ஒக்காந்துபோனவ நொட்டாங்கையில ரெண்டு கண்ணையும் தொடச்சுக்கிட்டா.
"போடா! ஏலே போடா. எல்லாம் அந்து போயி என் இத்த வேருக்குக் கீழ ஒட்டிக்கிட்டிருந்த ஒத்த வேரு நீயும் அத்துக்கிட்டுப் போறயா? போ! ஒத்தையில பிள்ள பெத்தவளுக்கு ஒத்தையில சாகத் தெரியாதா? போங்கடா, போறவனெல்லாம் போங்கடா!"
அழுகை நிக்கல பாவம் அழுகப் பெறந்தவளுக்கு!
சொக்கத்தேவன் பட்டியைக் கடக்கிற வரைக்கும் மாருல கல்லக் கட்டி நடந்த மாதிரி, மனசு கனத்துத்தான் கெடந்துச்சு கொண்ணவாயனுக்கு. கஞ்சி ஊத்துன வீட்ட விட்டுப் போறமே, காத்தா அலஞ்சு திரிஞ்ச காட்ட விட்டுப் போறமே, தீனிக்கு ஏங்குற சென மாட்ட விட்டுட்டுப் போறமேங்குற வருத்தம் ஒரு பக்கமிருக்க, நாம போனா ஊடும் பாடும் ஒத்தாச பண்றதுக்குச் சின்னத்தாவுக்கு நாதி இல்லையே, அழகு சிங்கத்தத் தூக்க ஆளில்லையேங்கிற கவல தான் குறுக்குல குத்துது கொண்ணவாயன.
ஊரு கடந்து ஒத்தையடிப் பாதையில வந்து சேர, நெஞ்சில இருந்த பாரம் கொஞ்சமா எறங்கி பையில இருந்த பாரம் கனக்குது லேசா. பையத் தாண்டி எண்ணெயப் பையக் கசியவிட்டு, நான் இங்கே இருக்கேங்குது உள்ளுக் கிருக்கிற அதிரசம். முறுக்கும், சீடையும் ஒண்ணுக்கொண்ணு முட்டி, குட்டிக் கலாட்டாப் பண்ணி வருதுக.
என்னியக் கட்டப் போறவ பேரென்ன... பேரென்ன?னு பையிக்கு வெளிய பிதுங்கி நாக்கத் தொங்கப்போட்டுக் கேக்குது, தேனிச் சந்தையில வாங்கித் திணிச்ச மஞ்சச் சீல. அவ பேரு அய்யக்கா அவ பேரு அய்யக்கானு க்ளிங் மொழி பேசுதுக காயிதத்துல சுத்திவச்ச கண்ணாடி வளவிக.
அவுந்த வேட்டியக் கட்ட அவன் கையத் தூக்கவும், எதேச்சையா மேல வந்த பையி மூக்குல ஒரு முட்டி முட்டிப் போனதுல, அடிக்குது பைக்குள்ள அய்யக்கா வாசம். இன்னைக்கு நேத்துப் பழக்கமா அவனுக்கும் அய்யக்காவுக்கும். பத்துப் பதினோரு வயசுல ஊர் மாடு மேய்க்கப் போனவன் இவன். ஊர் மாட்டுக்குப் பின்னாலயே சாணி பெறக்க வந்தவ அவ. சாட்டைக்கம்புக்குக் கால் சட்டை போட்டுவிட்ட மாதிரி இவன். முருங்கக் காய்க்கு முந்தான சுத்துன மாதிரி அவ. இவனவிட மூணு மாசம் அவ பெரியவ தான் ஆனா, பெரிய வித்தியாசமில்ல உருவத்துல. கொண்ணவாயன் அப்பன் ஒரு குடிகாரன் அய்யக்கா அவுக ஆத்தா ஒரு ஓடுகாலி. பொழச்சாப் பொழைங்க செத்தா சாங்கனு ரெண்டு பேரையும் தெருவுல விட்டுட்டாக அவன் அப்பனும் இவ ஆத்தாளும்.
மாடுதான் சொந்த பந்தம்னு ஆகிப்போச்சு இவனுக்கு சாணிதான் கஞ்சினு ஆகிப்போச்சு அவளுக்கு. கஞ்சிப் பொழுதுக்கு ஊர் மாடு ஓட்டிக் கெளம்பிடுவான் கொண்ண வாயன். நாப்பது அம்பது மாடுகள முன்னுக்குவிட்டு இவன் பின்னுக்குப் போக கூடையத் தூக்கிக்கிட்டு கூடவே வருவாக சாணி பெறக்கிற அஞ்சாறு பொம்பளைக. அந்தப் பொம்பளைக போடுவாளுகய்யா ஒரு சண்ட, சும்மா பானிப்பட்டு யுத்தம் மாதிரி ஒரு சாணிப்பட்டு யுத்தம். எந்த ஒரு மாடும் சாணி போடுற துக்கு முன்ன மொதல்ல வாலத் தூக்கும்.
தூண்டிக்காரன் தக்கையிலயே கண்ணு வச்சிருக்கிற மாதிரி வால்லயே கண்ணு வச்சிருப்பாளுக சாணி பெறக்கிற பொம்பளைக. எந்த மாடு வாலத் தூக்குதுனு கண்டுபுடிச்சு ஏஞ்சாணி... ஏஞ்சாணினு எவ மொதல்ல கத்துறாளோ, அவளுக்குதான் சட்டப்படி பாத்தியப்படும் சாணி.
அய்யக்காவுக்கு ஒரு காலு இழுவை வெரசா நடக்க மாட்டா. சாணியப் பாத்தாக் கூடைய விட்டுருவா கூடையப் பாத்தா சாணிய விட்ருவா. எத்தனையோ நாள் ஏமாந்து போயி வெறுங்கூடையோட வீடு சேந்திருக்கா. அவளப் பாக்கப் பாக்கக் கொண்ணவாயன் மனசு ஓரமா உருகுது. எப்பிடியும் அவ கூடைய நெப்பி அனுப்பணுங்கற ஒரு நெனப்பு நெஞ்சுக்குழியப் பிறாண்டுது.
இவனே ஒரு ஏற்பாடு பண்ணுனான் எந்த மாடு வயிறு நெறையக் குழை தின்டுச்சோ, எந்த மாட்டுக்குச் சாணிச் சத்து அதிகமோ, அந்த மாடுகள எடது பக்கமா நிறுத்தி ஓட்டி, அய்யக்காவ அதே பக்கம் முன்னுக்கவிட்டு இவன் பின்னுக்கப் போறான். மாடு வாலத் தூக்க ஒரு எம்பு எம்ப, இவன் அய்யக்கா தோளத் தடவுவான். அதுக்குள்ள அவ "ஏஞ்சாணி... ஏஞ்சாணி"னு கத்திருவா. இப்பவெல்லாம் நித்தம் நித்தம் நெறஞ்சுபோகுது கூடை.
இப்படியே அஞ்சாறு மாசம் அவுக காலம் நடக்குது. வரவர கூடையில சாணியும் மனசுல காதலும் பெரும்கனம் கனக்குது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நித்தம் கூடைய நெப்பிக் குடுக்கிற சாணீஸ்வரனுக்கு அச்சுவெல்லம், பணியாரம், அவிச்ச மொச்சையெல்லாம் கொண்டு வந்து குடுக்க ஆரம்பிச்சுட்டா. இப்படிச் சேந்த கூட்டுக் கிளிக ரெண்டும் கூட்டு ஏவாரம் பண்ணப் பழகிருச்சுக. அதாவது சாணி தட்டி விக்கிதுக. சாணியில மாட்டுச் சாணி கொஞ்சம் கெட்டி எருமச் சாணி கொஞ்சம் கூழு. ரெண்டையும் சேத்துப் போட்டு கொழச் சாத்தான் கெடைக்கும் எருத்தட்ட ஏத்த பதம். அய்யக்காவுக்கு நல்லாப் புடி பட்டிருக்கு சாணிய எருவாக்குற சங்கதி. உமிக்கருக்கு, புளியஞ்சருகு, நெல்லுச்சண்டு மூணையும் போட்டு ரெண்டு சாணியிலயும் கலப்பா. என்னமோ மண்டவெல்லம் புடிக்கிற மாதிரி ஆசைஆசையா உருண்ட புடிப்பா. உருண்டைய எடுத்துத் திரும்பவும் உமியில வச்சு ஓங்கித் தட்ட... அது சப்பட்டையாப் போகும். அத அப்படியே எடுத்துப் புளியமரத்துலயோ சுவத்திலயோ அடிச்சு ஒரு வாரம் காயவிடுவா எருவாயிரும்.
உற்பத்தி அய்யக்கா ஏவாரம் கொண்ணவாயன். ஆப்பக்கடை ராசம்மாவுக்கும் தோட்டி துடியாண்டிக்கும் எருவ வித்து வடையும் கெழங்கும் வாங்கித் தின்ட காலம் கரையாத அச்சுவெல்லக்கட்டியா இனிச்சுக் கெடக்கு மனசுக்குள்ள இன்னும். அய்யக்காவ நெஞ்சுல சொமந்து வெயில்ல நடந்து வேர்த்து வந்தவன் எருத் தட்டுற புளியமரத்து நெழல்ல ஒதுங்குனான். புல்லரிக்குது தேகம் பூரா. அய்யக்கா அய்யக்கானு கத்துது புளியமரத்துல ஒரு காக்கா. புளியமரத்து அடித்தண்டுல எருத் தட்டுன பழைய தடத்துல போயிப் படுத்துக்கிட்டு இன்னிக்கி எந்திரிக்கிறாப்பில இல்லேங்குது இருதயக்கூடு.
வெவரம் தெரியாத வயசுல மனசுல பச்ச குத்துது பாருங்க ஒரு பழைய நெனப்பு... அழியிறதில்ல அது ஆயுசு பரியந்தம்.
புளியமரம் கடந்து கிளியாம்பாறை எறங்குனா வந்திரும் பாம்பாறு. பாம் பாத்துல எறங்கி நின்னானோ இல்லையோ ஒடம்பெல்லாம் அவனுக்குப் பாயாசம் பாயுது. உள்ளங்கால் நனைக்கிற தண்ணியில நின்னு ஓடவிடுறான் மனச பழைய காலத்துமேல. அன்னக்கி ஓடுன தண்ணி இன்னக்கி இல்ல அந்தப் பழைய மணலுமில்ல ஆத்துல. அன்னக்கி இச்சி மரத்துல நின்னு எங்கள வேடிக்க பாத்த கொக்கும் குருவியும் செத்தேபோயிருக்கும் இந்நேரம்.
அவளையும் என்னையும் அல்லாட விட்டு அழகு பாத்த அந்த நாளு, கால சமுத்திரத்துல விழுந்த ஒத்த மழைத் துளியா உருவழிஞ்சு போயிருக்கும். ஆனா ஞாபகம் சாகுமா? சாகாது. அந்தா! அந்த எடந்தான் அவ விடுகதை போட்டது. இந்தா! இந்த எடந்தான் நான் மீன் சுட்டுக் குடுத்தது.
உச்சிப் பொழுது.
கம்முனு இருக்கு காடு. இல தழை ஆடல. காசு குடுங்க, இல்லாட்டிக் காயிதம் போடுங்க... அப்பத்தான் வருவேங்குது காத்து. எல்லாக் கைகளையும் தூக்கி ஆகாயத்தக் கும்பிட்டு ஆடாம அசையாம மழை வரம் கேக்குதுக மரங்க. வடை சட்டியில போட்டு ஈரல வறுத்தெடுக்கிற மாதிரி, வெயில் சட்டியில போட்டு பூமிய வறுத் தெடுக்குது சித்திரை மாசம். தரிசுக் காடு மேஞ்சு வந்த மாடுக தாகத்துக்கு எறங்குதுக ஆத்துக்குள்ள, ஆத்துக்குத் தேமல் விழுந்த மாதிரி அங்கங்க திட்டுத்திட்டாக் கெடக்கு தண்ணி. மூங்கி மரத்து நெழல்ல சரிஞ்சு சாஞ்சாக கொண்ணவாயனும் அய்யக்காவும்.
எருவு வாங்குனதுக்குத் துட்டுக்குப் பதிலா சுடுகாட்டுப் பொரியும் தேங்காச் சில்லும் குடுத்திருந்தான் தோட்டி துடியாண்டி. ஒரு வாய் பொரி, ஒரு கடி தேங்கா யுமா மாத்திமாத்தித் தின்டுக்கிட்டுக் கத பேசுதுக ரெண்டும்.
"எ... எ... எ... எங்க வீட்டுக்கு வா... வா... வா... வாக்கப்பட்டு வாரப்ப... எ... எ... எ... என்ன கொண்டு வருவ?"
"மொறையா வந்து பெண்ணு கேளு மொற செய்யிறத அப்புறம் பாக்கலாம்."
"எங்கப்பன் சொ... சொ... சொ...சொல்லிருச்சில்ல. எங்க வீட்டுக்கு நீ மொ... மொ... மொ... மொறப் பொண்ணாம். மூ... மூ... மூணு முடிச்சில மூக்கணாங்கயிறு போ... போ... போட்டுற மாட்டேன்."
"மூணு முடிச்சு அப்புறம் மொதல்ல மூணு கதை சொல்றேன் அத விடுவி பாப்பம்."
"சொ... சொ... சொ... சொல்லு. கே... கே... கேப்பம்."
வாயில கெடந்த பொரிய ஒரு கடவாப் பல்லுலயிருந்து மறு கடவாப் பல்லுக்குத் தள்ளி மென்னு அரைச்சு ஒரே முழுங்கா முழுங்கி உள்ள தள்ளிட்டுச் சொல்றா அய்யக்கா.
"பொட்டு வைக்காத சாமி ஒரு சாமி
காலு கழுவாத சாமி ஒரு சாமி
ஒட்டுத்துணி கட்டாத சாமி ஒரு சாமி
மொத்தம் மூணு சாமி என்ன சாமி?"
"சொ... சொ... சொல்லிப்பிட்டா?"
அவளுக்குத் தெரியாதா? அவன் தலையைத் தரையில ஊன்டி மருத வரைக்கும் போனாலும் இந்த மூணு சாமியும் சொல்றதுக்கு அவனுக்கு மூளை இல்லைனு... அந்த தைரியத்துல
சொல்றா."கோழியடிச்சுக் கொழம்புவச்சு உள்ளங்கையில சோறாக்கிப் போடுறேன் ஒனக்கு. சொல்லாட்டி?"
"சொ... சொ... சொ... சொல்லாட்டி... இ... இ... இ... இங்கேயே மீன் சுட்டுத் தாரேன்."
"அதையும் பாப்பம்."
அவன் முக்குறான், மொனகுறான் உருமால அவுக்குறான் உள்ள முடியிலயும் ஒண்ணு ரெண்டு கொட்டிப் போக தலையச் சொறியிறான். என்னமோ ரெண்டு கைகளுக்கு மத்தியில தேங்காய வச்சு ஒரே அமுக்குல அமுக்கி ஒடைக்கிறவன் மாதிரி, ஒண்ணுமில்லாத உள்ளங்கைய நசநசனு நசுக்கிறான். வாய்க்கு வந்த வார்த்தையெல்லாம் கொண்ணிக் கொண்ணிச் சொல்லிப் பாக்குறான் ஒண்ணும் கதையாகல.
"நீ... நீ... நீ... நீயே சொல்லு?"
உற்பத்தி அய்யக்கா ஏவாரம் கொண்ணவாயன். ஆப்பக்கடை ராசம்மாவுக்கும் தோட்டி துடியாண்டிக்கும் எருவ வித்து வடையும் கெழங்கும் வாங்கித் தின்ட காலம் கரையாத அச்சுவெல்லக்கட்டியா இனிச்சுக் கெடக்கு மனசுக்குள்ள இன்னும். அய்யக்காவ நெஞ்சுல சொமந்து வெயில்ல நடந்து வேர்த்து வந்தவன் எருத் தட்டுற புளியமரத்து நெழல்ல ஒதுங்குனான். புல்லரிக்குது தேகம் பூரா. அய்யக்கா அய்யக்கானு கத்துது புளியமரத்துல ஒரு காக்கா. புளியமரத்து அடித்தண்டுல எருத் தட்டுன பழைய தடத்துல போயிப் படுத்துக்கிட்டு இன்னிக்கி எந்திரிக்கிறாப்பில இல்லேங்குது இருதயக்கூடு.
வெவரம் தெரியாத வயசுல மனசுல பச்ச குத்துது பாருங்க ஒரு பழைய நெனப்பு... அழியிறதில்ல அது ஆயுசு பரியந்தம்.
புளியமரம் கடந்து கிளியாம்பாறை எறங்குனா வந்திரும் பாம்பாறு. பாம் பாத்துல எறங்கி நின்னானோ இல்லையோ ஒடம்பெல்லாம் அவனுக்குப் பாயாசம் பாயுது. உள்ளங்கால் நனைக்கிற தண்ணியில நின்னு ஓடவிடுறான் மனச பழைய காலத்துமேல. அன்னக்கி ஓடுன தண்ணி இன்னக்கி இல்ல அந்தப் பழைய மணலுமில்ல ஆத்துல. அன்னக்கி இச்சி மரத்துல நின்னு எங்கள வேடிக்க பாத்த கொக்கும் குருவியும் செத்தேபோயிருக்கும் இந்நேரம்.
அவளையும் என்னையும் அல்லாட விட்டு அழகு பாத்த அந்த நாளு, கால சமுத்திரத்துல விழுந்த ஒத்த மழைத் துளியா உருவழிஞ்சு போயிருக்கும். ஆனா ஞாபகம் சாகுமா? சாகாது. அந்தா! அந்த எடந்தான் அவ விடுகதை போட்டது. இந்தா! இந்த எடந்தான் நான் மீன் சுட்டுக் குடுத்தது.
உச்சிப் பொழுது.
கம்முனு இருக்கு காடு. இல தழை ஆடல. காசு குடுங்க, இல்லாட்டிக் காயிதம் போடுங்க... அப்பத்தான் வருவேங்குது காத்து. எல்லாக் கைகளையும் தூக்கி ஆகாயத்தக் கும்பிட்டு ஆடாம அசையாம மழை வரம் கேக்குதுக மரங்க. வடை சட்டியில போட்டு ஈரல வறுத்தெடுக்கிற மாதிரி, வெயில் சட்டியில போட்டு பூமிய வறுத் தெடுக்குது சித்திரை மாசம். தரிசுக் காடு மேஞ்சு வந்த மாடுக தாகத்துக்கு எறங்குதுக ஆத்துக்குள்ள, ஆத்துக்குத் தேமல் விழுந்த மாதிரி அங்கங்க திட்டுத்திட்டாக் கெடக்கு தண்ணி. மூங்கி மரத்து நெழல்ல சரிஞ்சு சாஞ்சாக கொண்ணவாயனும் அய்யக்காவும்.
எருவு வாங்குனதுக்குத் துட்டுக்குப் பதிலா சுடுகாட்டுப் பொரியும் தேங்காச் சில்லும் குடுத்திருந்தான் தோட்டி துடியாண்டி. ஒரு வாய் பொரி, ஒரு கடி தேங்கா யுமா மாத்திமாத்தித் தின்டுக்கிட்டுக் கத பேசுதுக ரெண்டும்.
"எ... எ... எ... எங்க வீட்டுக்கு வா... வா... வா... வாக்கப்பட்டு வாரப்ப... எ... எ... எ... என்ன கொண்டு வருவ?"
"மொறையா வந்து பெண்ணு கேளு மொற செய்யிறத அப்புறம் பாக்கலாம்."
"எங்கப்பன் சொ... சொ... சொ...சொல்லிருச்சில்ல. எங்க வீட்டுக்கு நீ மொ... மொ... மொ... மொறப் பொண்ணாம். மூ... மூ... மூணு முடிச்சில மூக்கணாங்கயிறு போ... போ... போட்டுற மாட்டேன்."
"மூணு முடிச்சு அப்புறம் மொதல்ல மூணு கதை சொல்றேன் அத விடுவி பாப்பம்."
"சொ... சொ... சொ... சொல்லு. கே... கே... கேப்பம்."
வாயில கெடந்த பொரிய ஒரு கடவாப் பல்லுலயிருந்து மறு கடவாப் பல்லுக்குத் தள்ளி மென்னு அரைச்சு ஒரே முழுங்கா முழுங்கி உள்ள தள்ளிட்டுச் சொல்றா அய்யக்கா.
"பொட்டு வைக்காத சாமி ஒரு சாமி
காலு கழுவாத சாமி ஒரு சாமி
ஒட்டுத்துணி கட்டாத சாமி ஒரு சாமி
மொத்தம் மூணு சாமி என்ன சாமி?"
"சொ... சொ... சொல்லிப்பிட்டா?"
அவளுக்குத் தெரியாதா? அவன் தலையைத் தரையில ஊன்டி மருத வரைக்கும் போனாலும் இந்த மூணு சாமியும் சொல்றதுக்கு அவனுக்கு மூளை இல்லைனு... அந்த தைரியத்துல
சொல்றா."கோழியடிச்சுக் கொழம்புவச்சு உள்ளங்கையில சோறாக்கிப் போடுறேன் ஒனக்கு. சொல்லாட்டி?"
"சொ... சொ... சொ... சொல்லாட்டி... இ... இ... இ... இங்கேயே மீன் சுட்டுத் தாரேன்."
"அதையும் பாப்பம்."
அவன் முக்குறான், மொனகுறான் உருமால அவுக்குறான் உள்ள முடியிலயும் ஒண்ணு ரெண்டு கொட்டிப் போக தலையச் சொறியிறான். என்னமோ ரெண்டு கைகளுக்கு மத்தியில தேங்காய வச்சு ஒரே அமுக்குல அமுக்கி ஒடைக்கிறவன் மாதிரி, ஒண்ணுமில்லாத உள்ளங்கைய நசநசனு நசுக்கிறான். வாய்க்கு வந்த வார்த்தையெல்லாம் கொண்ணிக் கொண்ணிச் சொல்லிப் பாக்குறான் ஒண்ணும் கதையாகல.
"நீ... நீ... நீ... நீயே சொல்லு?"
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 14
|
|