புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
Page 2 of 14 •
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
First topic message reminder :
'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.
கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு வைரமுத்து
'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா 2006 டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
உடுக்குங்கிறது அவுக குடும்பத்துக்கே சாமி. "சிவன்கிட்ட இருந்ததடா மகனே... அடுத்து இவன்கிட்ட இருக்கு"ன்னு அடிக்கொருக்க சொல்லு வாரு அவுகப்பன் தங்கவேல் கோடாங்கி. இருளப்பன் மனசுக் குள்ள ஒரு ஐதீகம். உடுக்க எடுத்து ஒரு பக்கம் அடிச்சா கடவுளும், மறுபக்கம் அடிச்சா செத்துப்போன அவுக அப்பனும் கூடவே பேசுறதா ஒரு நெனப்பு.
இருளப்பன் உடுக்கய உசுரா நெனக்கிறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இந்த உடுக்க அவுக அப்பனே செஞ்சது. இவரு பத்து வயசுப் பயலா இருக்கிறப்பக் கூடவேயிருந்து பாத்தது. மரங்கள்ல வேங்கு, வெள்ளெருக்கு, மஞ்சணத்தி, பலா நால்ல ஒண்ணுதான் நல்லது உடுக்குச் செய்ய. வெண்கலத் துலயும் செய்வாக. அதுல சத்தம்கூட நல்லாத்தான் இருக்கும். ஆனா, நாதம் அள்ளி எறியறதுல வெள்ளெருக்கங் கட்ட மாதிரி வேறொண்ணும் வராது.
வெள்ளெருக்கங்கட்டைய ஒரே கட்டையா வாங்கி, ஒரே கடைசலாக் கடைஞ்செடுத்தாரு கோடாங்கி. ஒரு பக்கம் சந்திர வளையமாம்; மறு பக்கம் சூரிய வளையமாம். வளையங்கள மூட இப்ப சவ்வு வேணும். மாடு உரிக்கிற மந்தைக்குப் பொழுது விடியப் போயிட்டாரு தங்கவேல் கோடாங்கி. மாட்டுப் பெருங்குடல வாங்குனாரு. அதுல ஒட்டியிருந்த கறியமட்டும் சுரண்டி எறிஞ்சிட்டு, வெறும் சவ்வா வாங்கிட்டு வந்தாரு. வெது வெதுங்கிற வெந்நியில முக்கி ஊறவச்சு அதுல ஒட்டியிருந்த பிசுற எடுத்துத் துண்டாத் தூர எறியவும், கண்ணாடி மாதிரி பளபள பளன்னு மின்னுது சவ்வு.
ஊறப்போட்ட புளியங் கொட்டைய ஆட்டொரல்ல போட்டு, "ஆட்றா மகனே"ன் னாரு. இருளப்பனுக்கு ஆட்டத் தெரியல. பள்ளிக் கூடம் பிடிக்காத பய ஓடி ஓடி வந்திர்ற மாதிரி குழியவிட்டு எந்திரிச்சு எந்திரிச்சு வந்துருது கொழவி.
"எந்திர்றா"ன்னு அவன ஒரே எத்தா எத்தித் தள்ளிட்டு அவரே ஒக்கார்றாரு. சும்மா மழு மழு மழுன்னு புளியவெதைய அரைச்சு, மண்சட்டியில வழிச்சுப் போட்டு, அத அடுப்புல சுடவச்சு, களி பதத்துல எறக்கிட்டுச் சொல்றாரு: "இதுக்குக் கீக் கொண்டது தாண்டா மகனே எந்தப் பசையும். திருமலநாயக்கன் தூணு ரெண்டா ஒடஞ்சு துண்டாக் கெடந்தாலும் இதைத் தடவுனா ஓடிவந்து ஒட்டிக்கிரும்டா."
உடுக்குல பசையத் தடவி சந்திர வளை யத்தையும் சூரிய வளையத்தையும் சவ்வெடுத்து மூட்டி, ரெண்டு வளையத்தையும் நூல் கயித்துல எணைச்சு எணைச்சுக் கச்சைகட்டி, ஒரு பக்க உடுக்கையில குதிரைவால் ரோமங்களக் கம்பி மாதிரி இழுத்து வெறப்பாக் கண்ணிகட்டி, சுங்கம் வச்ச கடிவாளமும் சேத்து, செத்தவடம் காயவச்சு அடிச்சாரய்யா பெரிய கோடாங்கி.
உடுக்குங்கிறது அவுக குடும்பத்துக்கே சாமி. "சிவன்கிட்ட இருந்ததடா மகனே... அடுத்து இவன்கிட்ட இருக்கு"ன்னு அடிக்கொருக்க சொல்லு வாரு அவுகப்பன் தங்கவேல் கோடாங்கி. இருளப்பன் மனசுக் குள்ள ஒரு ஐதீகம். உடுக்க எடுத்து ஒரு பக்கம் அடிச்சா கடவுளும், மறுபக்கம் அடிச்சா செத்துப்போன அவுக அப்பனும் கூடவே பேசுறதா ஒரு நெனப்பு.
இருளப்பன் உடுக்கய உசுரா நெனக்கிறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இந்த உடுக்க அவுக அப்பனே செஞ்சது. இவரு பத்து வயசுப் பயலா இருக்கிறப்பக் கூடவேயிருந்து பாத்தது. மரங்கள்ல வேங்கு, வெள்ளெருக்கு, மஞ்சணத்தி, பலா நால்ல ஒண்ணுதான் நல்லது உடுக்குச் செய்ய. வெண்கலத் துலயும் செய்வாக. அதுல சத்தம்கூட நல்லாத்தான் இருக்கும். ஆனா, நாதம் அள்ளி எறியறதுல வெள்ளெருக்கங் கட்ட மாதிரி வேறொண்ணும் வராது.
வெள்ளெருக்கங்கட்டைய ஒரே கட்டையா வாங்கி, ஒரே கடைசலாக் கடைஞ்செடுத்தாரு கோடாங்கி. ஒரு பக்கம் சந்திர வளையமாம்; மறு பக்கம் சூரிய வளையமாம். வளையங்கள மூட இப்ப சவ்வு வேணும். மாடு உரிக்கிற மந்தைக்குப் பொழுது விடியப் போயிட்டாரு தங்கவேல் கோடாங்கி. மாட்டுப் பெருங்குடல வாங்குனாரு. அதுல ஒட்டியிருந்த கறியமட்டும் சுரண்டி எறிஞ்சிட்டு, வெறும் சவ்வா வாங்கிட்டு வந்தாரு. வெது வெதுங்கிற வெந்நியில முக்கி ஊறவச்சு அதுல ஒட்டியிருந்த பிசுற எடுத்துத் துண்டாத் தூர எறியவும், கண்ணாடி மாதிரி பளபள பளன்னு மின்னுது சவ்வு.
ஊறப்போட்ட புளியங் கொட்டைய ஆட்டொரல்ல போட்டு, "ஆட்றா மகனே"ன் னாரு. இருளப்பனுக்கு ஆட்டத் தெரியல. பள்ளிக் கூடம் பிடிக்காத பய ஓடி ஓடி வந்திர்ற மாதிரி குழியவிட்டு எந்திரிச்சு எந்திரிச்சு வந்துருது கொழவி.
"எந்திர்றா"ன்னு அவன ஒரே எத்தா எத்தித் தள்ளிட்டு அவரே ஒக்கார்றாரு. சும்மா மழு மழு மழுன்னு புளியவெதைய அரைச்சு, மண்சட்டியில வழிச்சுப் போட்டு, அத அடுப்புல சுடவச்சு, களி பதத்துல எறக்கிட்டுச் சொல்றாரு: "இதுக்குக் கீக் கொண்டது தாண்டா மகனே எந்தப் பசையும். திருமலநாயக்கன் தூணு ரெண்டா ஒடஞ்சு துண்டாக் கெடந்தாலும் இதைத் தடவுனா ஓடிவந்து ஒட்டிக்கிரும்டா."
உடுக்குல பசையத் தடவி சந்திர வளை யத்தையும் சூரிய வளையத்தையும் சவ்வெடுத்து மூட்டி, ரெண்டு வளையத்தையும் நூல் கயித்துல எணைச்சு எணைச்சுக் கச்சைகட்டி, ஒரு பக்க உடுக்கையில குதிரைவால் ரோமங்களக் கம்பி மாதிரி இழுத்து வெறப்பாக் கண்ணிகட்டி, சுங்கம் வச்ச கடிவாளமும் சேத்து, செத்தவடம் காயவச்சு அடிச்சாரய்யா பெரிய கோடாங்கி.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சும்மா நரம்பச் சுண்டுது நாதம்; காது வழியாக் கள்ளு குடிச்ச மாதிரி இருக்கு. உடுக்கு சாமி அப்பன் மூணும் ஒண்ணு தான்இருளப்பக் கோடாங்கிக்கு.
தலை நெறைய உருமாக்கட்டி, நெத்திதேயப் பட்டையடிச்சு, கொழகொழன்னு சந்தனம் பூசி, அதுல ஒரு குழியும் வெட்டிக் குங்குமம் அப்பி, உத்திராட்சமால நெஞ்சுல பொரள காவி வேட்டியும் அதுக்குமேல சரிகைத்துண்டும் கட்டி "எங்க பொண்டு புள்ளைகளுக்கு நல்ல சொகம் குடு சாமி"ன்னு உடுக்கையைத் தொட்டுக் கும்பிட்டெடுத்து "வாரேன் இருளப்பன் வழி விடுங்கப்பா"ன்னு நடந்து வாராரு கோடாங்கி.
"கருவாச்சிக்குப் பேய் ஓட்டப் போறா களாம்; கருவாச்சிக்குப் பேய் ஓட்டப் போறாகளாம்". கோடாங்கி பின்னாலயே ஒரு அறுப்பாளு வருது.
இந்தக் கல்யாண வீடு, காதுகுத்து வீடு, சடங்கு வீடு இங்கயெல்லாம் கண்காட்சியோட சின்னதா ஒரு பொழுதுபோக்கும் இருக்கு சனங்களுக்கு. ஒரு பொம்பளையவோ ஆம்பளையவோ இதுவரைக்கும் பாக்காத கோலத்துல பாக்கிறதுல யாருக்கும் ஒரு ஆவலாதி இருக்கத்தான் செய்யுது.
கோழிச்சண்டைக்கே கூட்டம் கூடுற ஊர்ல பேயோட்டுற வீட்ல இருக்காதா? அதுலயும் இவ சின்னவ; இப்பத்தான் கல்யாணமாகி அத்துவிடச்சொல்லிப் பஞ்சாயத்துல நின்ன பிள்ள. கூட்டத்துக்குக் கேக்கணுமா? தெருவுல, திண்ணயில, வாசல்ல வீட்டுக்குள்ள, தொழுவுல ஒரல்ல, சாலுமேல... முந்துனவுகளுக்கு மொத எடங்கிற கணக்குல கூடிக் குமுஞ்சு போச்சு ஆணும் பொண்ணும்.
வீட்டுக்குள்ள இருக்கிற தெறந்த வாசல்ல சாணி தொளிச்சு மொழுகி, சாக்கு, பழைய துணியெல்லாம் பரப்பி அதுக்குமேல ஒரு சமுக்காளம் விரிச்சு, சூடம் கொளுத்தி, பத்தி பொருத்தி, சாம்பிராணிபோட்டு, குங்குமம், சந்தனம், மல்லிகப்பூ வாங்கித் தரையில படைச்சு, தேங்கா பழத்தோட தனக்கு அஞ்சேகால் ரூவா தட்சணையும் வாங்கிக்கிட்டு "பிள்ளையக் கூட்டிட்டு வாங்காத்தா"ன்னு சொல்லிட்டு, பேயாடப்போற பொண்ணுக்குத் துண்டாப் பாய்போடச் சொன்னாரு கோடாங்கி.
ஊர்ப் பொம்பளைக கருவாச்சிய கூட்டிட்டு வாராக கைத்தாங்கலா. அவளுக்கு நட, கூடி வரல. வில்லா வெறைச்சு வர்றா. பல்லுவேற கிட்டிச்சுக்கிருச்சு. தொண்டக்குழியிலருந்து என்னமோ வார்த்த வருது வர்ற வார்த்தைய நாக்கு தட்டி விட்டுருது; கொழர்றா. "வாழத்தண்ட அடுப்புல வச்சமாதிரி பச்ச மண்ணுக்கு இப்படி ஒரு பழிபாவம் வந்திருச்சே"ன்னு பொலம்புதுக கெழடுகட்டைக.
நாடகம் போடப்போறாகங்கிற மாதிரியேகண்ணுல மனசத் தேக்கிச் சம்மணங்கால் போட்டு ஒக்காந்திருக்குதுக சின்னஞ்சிறுசுக.
தலை நெறைய உருமாக்கட்டி, நெத்திதேயப் பட்டையடிச்சு, கொழகொழன்னு சந்தனம் பூசி, அதுல ஒரு குழியும் வெட்டிக் குங்குமம் அப்பி, உத்திராட்சமால நெஞ்சுல பொரள காவி வேட்டியும் அதுக்குமேல சரிகைத்துண்டும் கட்டி "எங்க பொண்டு புள்ளைகளுக்கு நல்ல சொகம் குடு சாமி"ன்னு உடுக்கையைத் தொட்டுக் கும்பிட்டெடுத்து "வாரேன் இருளப்பன் வழி விடுங்கப்பா"ன்னு நடந்து வாராரு கோடாங்கி.
"கருவாச்சிக்குப் பேய் ஓட்டப் போறா களாம்; கருவாச்சிக்குப் பேய் ஓட்டப் போறாகளாம்". கோடாங்கி பின்னாலயே ஒரு அறுப்பாளு வருது.
இந்தக் கல்யாண வீடு, காதுகுத்து வீடு, சடங்கு வீடு இங்கயெல்லாம் கண்காட்சியோட சின்னதா ஒரு பொழுதுபோக்கும் இருக்கு சனங்களுக்கு. ஒரு பொம்பளையவோ ஆம்பளையவோ இதுவரைக்கும் பாக்காத கோலத்துல பாக்கிறதுல யாருக்கும் ஒரு ஆவலாதி இருக்கத்தான் செய்யுது.
கோழிச்சண்டைக்கே கூட்டம் கூடுற ஊர்ல பேயோட்டுற வீட்ல இருக்காதா? அதுலயும் இவ சின்னவ; இப்பத்தான் கல்யாணமாகி அத்துவிடச்சொல்லிப் பஞ்சாயத்துல நின்ன பிள்ள. கூட்டத்துக்குக் கேக்கணுமா? தெருவுல, திண்ணயில, வாசல்ல வீட்டுக்குள்ள, தொழுவுல ஒரல்ல, சாலுமேல... முந்துனவுகளுக்கு மொத எடங்கிற கணக்குல கூடிக் குமுஞ்சு போச்சு ஆணும் பொண்ணும்.
வீட்டுக்குள்ள இருக்கிற தெறந்த வாசல்ல சாணி தொளிச்சு மொழுகி, சாக்கு, பழைய துணியெல்லாம் பரப்பி அதுக்குமேல ஒரு சமுக்காளம் விரிச்சு, சூடம் கொளுத்தி, பத்தி பொருத்தி, சாம்பிராணிபோட்டு, குங்குமம், சந்தனம், மல்லிகப்பூ வாங்கித் தரையில படைச்சு, தேங்கா பழத்தோட தனக்கு அஞ்சேகால் ரூவா தட்சணையும் வாங்கிக்கிட்டு "பிள்ளையக் கூட்டிட்டு வாங்காத்தா"ன்னு சொல்லிட்டு, பேயாடப்போற பொண்ணுக்குத் துண்டாப் பாய்போடச் சொன்னாரு கோடாங்கி.
ஊர்ப் பொம்பளைக கருவாச்சிய கூட்டிட்டு வாராக கைத்தாங்கலா. அவளுக்கு நட, கூடி வரல. வில்லா வெறைச்சு வர்றா. பல்லுவேற கிட்டிச்சுக்கிருச்சு. தொண்டக்குழியிலருந்து என்னமோ வார்த்த வருது வர்ற வார்த்தைய நாக்கு தட்டி விட்டுருது; கொழர்றா. "வாழத்தண்ட அடுப்புல வச்சமாதிரி பச்ச மண்ணுக்கு இப்படி ஒரு பழிபாவம் வந்திருச்சே"ன்னு பொலம்புதுக கெழடுகட்டைக.
நாடகம் போடப்போறாகங்கிற மாதிரியேகண்ணுல மனசத் தேக்கிச் சம்மணங்கால் போட்டு ஒக்காந்திருக்குதுக சின்னஞ்சிறுசுக.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
செவக்கி ஒக்கார முடியாம சாஞ்சு சாஞ்சு விழுந்த கருவாச்சிக்குக் கால் ரெண்டை யும் மடிச்சு விட்டு முட்டிக்கால் போட்டுவிடவும், அவ "மளார்"ன்னு கவுந்து தலையத் தரையில போட, பாயே தெரியாமப் பரவிக் கெடக்கு அவ குடுமிக்காடு.
கோடாங்கி வலக்கையில உடுக்க எடுத்து எடக்கைக்கு மாத்தி, கடிவாளச் சுங்கம் தொங்க ஒசத்திப்புடிச்சு, ஆகாயத்துக் கொரு கும்புடும் பூமிக்கொரு கும்புடும் போட்டு, உடுக்கைய ஓங்கித்தட்டிக் கச்சைய ஒரு இறுக்கு இறுக்கிப் புடிச்சுச் சத்தம் கூட்டவும் "தம்தணத்தோம் தம்தணத்தோம் தம் தணத்தோம்"ங்கிற ஓச சும்மா சொக்கத்தேவன் பட்டியையே பெரட்டிப்போடுது.
உடுக்குல ஆரம்பிச்சுப் பாட்டுல கூட்டிட்டாரு கோடாங்கி.
"மந்தை நிறைந்திட
மனம் நெறைய வா! வா! வா!
ஆணாக இருந்தாலும்
பெண்ணாக இருந்தாலும் நீ
காத்தாக இருந்தாலும்
கறுப்பாக இருந்தாலும்
மானிடஜீவன்
மனித நிலையானாலும்...
இந்த மங்கையைச் சீதைபோல் சிறையெடுக்க வந்திருக்கிற நீ யாரு?"
உடுக்கும் தமிழும் மாறி மாறி சலாம் வரிசை பாடியும் கீழ கெடந்த பிள்ள எந்திரிக்கல. தலைய விரிச்சுப் போட்டுத் தரையிலயே கெடக்கா.
உடுக்கய இன்னும் ஓங்கியடிச்சுஅடித் தொண்டையில பாட ஆரம்பிக்கிறாரு கோடாங்கி, பிசிறடிக்கிற கொரல்ல "பிர்கா" போட்டு சங்கீத உலகத்துக்கு அவராலான சவாலும் விட்டுக் கிர்றாரு.
"ஒங்களோட தங்கக் கைய
எஞ்சாமி முன்ன போடு...
எஞ்சாமி முன்ன போடு...
ஒங்க தல முடிய
எஞ்சாமி சொழட்டிப் போடு...
எஞ்சாமி சொழட்டிப் போடு..."
உடுக்கு சுதியேறி ஓங்காரநாதம் சுத்தியிருக்கிறவுக இருதயக்கூட்ட அறுக்க ஆரம்பிக்க, மண்ணுக் குத்துன சல்லிக்கட்டுக் காள மளார்னு தலையத் தூக்கின மாதிரி, "ஏலே"ன்னு பெருங்கொண்ட குரலெடுத்து ஒரு கத்துக் கத்தி, கருவாச்சி தலைய ஒரு சுத்துச் சுத்துனா பாருங்க... சும்மா ஆயிரம் சாட்டைய எடுத்து வீசுற மாதிரி அவ குடுமி நாலா பக்கமும் தெறிச்சு வீசவும், தாங்கிப் புடிக்க வந்த பொம்பளைக ஓடிப் போனாக ஓடி. ஆடிஆடித் தலசுத்திக் கெறங்கிக் கிறுகிறுத்துத் தலையக் கீழபோட்டு அவளா மூச்சுவாங்கி ஓயறவரைக்கும் உடுக்கடிய நிறுத்தல கோடாங்கி. அவ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கறது அவ பொடனி ஏறி எந்திரிக்குதே அதுல தெரியுது.
அவ ஆசுவாசம் பண்ணிக்கிற அந்த இடைவெளியில லேசு லேசாப் பேச்சுக் குடுக்கிறாரு கோடாங்கி.
"யாரு நீ வந்திருக்கறது? இந்த ஒண்ணுந் தெரியாத புள்ளையத் தொட்டுத் தொடந்து வந்திருக்கிற நீ யாரு?"
"சொல்ல மாட்டேன்..." கருவாச்சி கொரல் மட்டும் கேக்குது குடுமிக்குள்ளருந்து.
"சும்மா சொல்லு... எங்க பிள்ளையத் தொட்ருக்கிற நீ ஆணோ பெண்ணோ... ஒன்னிய ஒரு குத்தமும் சொல்லமாட்டோம்... உண்மையச் சொல்லு..."
"சொல்லமாட்டேண்டா"
"என்னது மரியாதை கொறையுது? ஏதோ வந்தது வந்துட்ட. வேணுங்கிறதக் கேட்டு வாங்கிட்டு எங்க பிள்ளைய எங்க கிட்ட ஒப்படைச்சிட்டுப் போயிரு."
"பழிவாங்க வந்திருக்கேன். வெரட்டவா பாக்குற?"
"பச்சமண்ண எதுக்குப் பழிவாங்கிக்கிட்டு? ஏதோ எங்க பிள்ளைக்கு
அங்கம் பதறாம
அனல்காத்து வீசாம
முள்ளு முறியாம
முடிச்சுப் பூ வாடாம
நல்ல கதி குடுத்து
நடையக்கட்டு..."
"வந்த வேல முடியாம இந்த எடத்தவிட்டுப் போகமாட்டேன்."
செவக்கி ஒக்கார முடியாம சாஞ்சு சாஞ்சு விழுந்த கருவாச்சிக்குக் கால் ரெண்டை யும் மடிச்சு விட்டு முட்டிக்கால் போட்டுவிடவும், அவ "மளார்"ன்னு கவுந்து தலையத் தரையில போட, பாயே தெரியாமப் பரவிக் கெடக்கு அவ குடுமிக்காடு.
கோடாங்கி வலக்கையில உடுக்க எடுத்து எடக்கைக்கு மாத்தி, கடிவாளச் சுங்கம் தொங்க ஒசத்திப்புடிச்சு, ஆகாயத்துக் கொரு கும்புடும் பூமிக்கொரு கும்புடும் போட்டு, உடுக்கைய ஓங்கித்தட்டிக் கச்சைய ஒரு இறுக்கு இறுக்கிப் புடிச்சுச் சத்தம் கூட்டவும் "தம்தணத்தோம் தம்தணத்தோம் தம் தணத்தோம்"ங்கிற ஓச சும்மா சொக்கத்தேவன் பட்டியையே பெரட்டிப்போடுது.
உடுக்குல ஆரம்பிச்சுப் பாட்டுல கூட்டிட்டாரு கோடாங்கி.
"மந்தை நிறைந்திட
மனம் நெறைய வா! வா! வா!
ஆணாக இருந்தாலும்
பெண்ணாக இருந்தாலும் நீ
காத்தாக இருந்தாலும்
கறுப்பாக இருந்தாலும்
மானிடஜீவன்
மனித நிலையானாலும்...
இந்த மங்கையைச் சீதைபோல் சிறையெடுக்க வந்திருக்கிற நீ யாரு?"
உடுக்கும் தமிழும் மாறி மாறி சலாம் வரிசை பாடியும் கீழ கெடந்த பிள்ள எந்திரிக்கல. தலைய விரிச்சுப் போட்டுத் தரையிலயே கெடக்கா.
உடுக்கய இன்னும் ஓங்கியடிச்சுஅடித் தொண்டையில பாட ஆரம்பிக்கிறாரு கோடாங்கி, பிசிறடிக்கிற கொரல்ல "பிர்கா" போட்டு சங்கீத உலகத்துக்கு அவராலான சவாலும் விட்டுக் கிர்றாரு.
"ஒங்களோட தங்கக் கைய
எஞ்சாமி முன்ன போடு...
எஞ்சாமி முன்ன போடு...
ஒங்க தல முடிய
எஞ்சாமி சொழட்டிப் போடு...
எஞ்சாமி சொழட்டிப் போடு..."
உடுக்கு சுதியேறி ஓங்காரநாதம் சுத்தியிருக்கிறவுக இருதயக்கூட்ட அறுக்க ஆரம்பிக்க, மண்ணுக் குத்துன சல்லிக்கட்டுக் காள மளார்னு தலையத் தூக்கின மாதிரி, "ஏலே"ன்னு பெருங்கொண்ட குரலெடுத்து ஒரு கத்துக் கத்தி, கருவாச்சி தலைய ஒரு சுத்துச் சுத்துனா பாருங்க... சும்மா ஆயிரம் சாட்டைய எடுத்து வீசுற மாதிரி அவ குடுமி நாலா பக்கமும் தெறிச்சு வீசவும், தாங்கிப் புடிக்க வந்த பொம்பளைக ஓடிப் போனாக ஓடி. ஆடிஆடித் தலசுத்திக் கெறங்கிக் கிறுகிறுத்துத் தலையக் கீழபோட்டு அவளா மூச்சுவாங்கி ஓயறவரைக்கும் உடுக்கடிய நிறுத்தல கோடாங்கி. அவ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கறது அவ பொடனி ஏறி எந்திரிக்குதே அதுல தெரியுது.
அவ ஆசுவாசம் பண்ணிக்கிற அந்த இடைவெளியில லேசு லேசாப் பேச்சுக் குடுக்கிறாரு கோடாங்கி.
"யாரு நீ வந்திருக்கறது? இந்த ஒண்ணுந் தெரியாத புள்ளையத் தொட்டுத் தொடந்து வந்திருக்கிற நீ யாரு?"
"சொல்ல மாட்டேன்..." கருவாச்சி கொரல் மட்டும் கேக்குது குடுமிக்குள்ளருந்து.
"சும்மா சொல்லு... எங்க பிள்ளையத் தொட்ருக்கிற நீ ஆணோ பெண்ணோ... ஒன்னிய ஒரு குத்தமும் சொல்லமாட்டோம்... உண்மையச் சொல்லு..."
"சொல்லமாட்டேண்டா"
"என்னது மரியாதை கொறையுது? ஏதோ வந்தது வந்துட்ட. வேணுங்கிறதக் கேட்டு வாங்கிட்டு எங்க பிள்ளைய எங்க கிட்ட ஒப்படைச்சிட்டுப் போயிரு."
"பழிவாங்க வந்திருக்கேன். வெரட்டவா பாக்குற?"
"பச்சமண்ண எதுக்குப் பழிவாங்கிக்கிட்டு? ஏதோ எங்க பிள்ளைக்கு
அங்கம் பதறாம
அனல்காத்து வீசாம
முள்ளு முறியாம
முடிச்சுப் பூ வாடாம
நல்ல கதி குடுத்து
நடையக்கட்டு..."
"வந்த வேல முடியாம இந்த எடத்தவிட்டுப் போகமாட்டேன்."
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"வேண்டாத வேல செய்ய விடுவனா ஒன்னிய? ஓடிப்போ ஒங்காட்டுக்கு... இல்லாட்டி..."
"இல்லாட்டி?"
"தொறக்காத வித்துக்குள்ள ஒன்னப்போட்டுப் பூட்டிப் பாதாள கங்கையில எறிஞ்சுருவேன்."
"கோடாங்கி! வித்தத் தொளச்சு வெளியேறி ஒன் வீட்டுக் கன்னிகளையும் புடிக்காம விடமாட்டேன்."
"சும்மா உடுக்க தொங்கற வீட்டுல படுக்க வந்திருவியாக்கும்? அதெல்லாம் யாராச்சும் ஏப்பசாப்பகிட்ட வச்சுக்க. ஏங்கிட்ட வச்சுக்கிராத... ஒன்னிய ஓட்டாம விடமாட்டேன்."
"நான் முனியா, பேயான்னே தெரியாம என்னிய எப்பிடி ஓட்டுவ?"
"சண்டிமுனி, சடாமுனி, மண்டி முனி, மகாமுனி, பாண்டிமுனி, பரவைமுனி, நல்லமுனி, கெட்டமுனி, இப்படி எல்லா முனிகளையும் வரவழைச்சு முத்துப்போட்டுப் பாத்ததுல வந்திருக்கிறது முனி இல்லைன்னு தெரிஞ்சுபோச்சு. நீ பேய்தான். ஆணா, பெண்ணா அதச்சொல்லு மொதல்ல."
"வீல்"ன்னு ஒரு கத்துக்கத்தி கருவாச்சி திரும்பவும் பேயாட... அவ வேகத்துக்குத் தக்கன அடிக்கிறாரு கோடாங்கி உடுக்கய.
அந்தத் "தம்த ததம் தம்த ததம்"ங்கிற கனசத்தம் உசுப்பேத்தவும் ஆடிக்கிட்டே கருவாச்சியும் பாட்ல கூடிட்டா.
"யண்ணே யண்ணே! எஞ்சாமி
கோடாங்கி யண்ணே! நான்
பெறந்த கதை ஒங்களுக்குச்
சொல்லட்டுமா இல்ல
முடிஞ்ச கதை ஒங்களுக்குச்
சொல்லட்டுமா எஞ்சாமி
சொல்லட்டுமா?"
"வந்திருச்சு. பேய் வழிக்கு வந்திருச்சு. இந்தா இப்பச் சொல்லப்போகுது... ஊரையும் பேரையும்." ஊரே நிமிந்து உட்காருது.
"இல்லாட்டி?"
"தொறக்காத வித்துக்குள்ள ஒன்னப்போட்டுப் பூட்டிப் பாதாள கங்கையில எறிஞ்சுருவேன்."
"கோடாங்கி! வித்தத் தொளச்சு வெளியேறி ஒன் வீட்டுக் கன்னிகளையும் புடிக்காம விடமாட்டேன்."
"சும்மா உடுக்க தொங்கற வீட்டுல படுக்க வந்திருவியாக்கும்? அதெல்லாம் யாராச்சும் ஏப்பசாப்பகிட்ட வச்சுக்க. ஏங்கிட்ட வச்சுக்கிராத... ஒன்னிய ஓட்டாம விடமாட்டேன்."
"நான் முனியா, பேயான்னே தெரியாம என்னிய எப்பிடி ஓட்டுவ?"
"சண்டிமுனி, சடாமுனி, மண்டி முனி, மகாமுனி, பாண்டிமுனி, பரவைமுனி, நல்லமுனி, கெட்டமுனி, இப்படி எல்லா முனிகளையும் வரவழைச்சு முத்துப்போட்டுப் பாத்ததுல வந்திருக்கிறது முனி இல்லைன்னு தெரிஞ்சுபோச்சு. நீ பேய்தான். ஆணா, பெண்ணா அதச்சொல்லு மொதல்ல."
"வீல்"ன்னு ஒரு கத்துக்கத்தி கருவாச்சி திரும்பவும் பேயாட... அவ வேகத்துக்குத் தக்கன அடிக்கிறாரு கோடாங்கி உடுக்கய.
அந்தத் "தம்த ததம் தம்த ததம்"ங்கிற கனசத்தம் உசுப்பேத்தவும் ஆடிக்கிட்டே கருவாச்சியும் பாட்ல கூடிட்டா.
"யண்ணே யண்ணே! எஞ்சாமி
கோடாங்கி யண்ணே! நான்
பெறந்த கதை ஒங்களுக்குச்
சொல்லட்டுமா இல்ல
முடிஞ்ச கதை ஒங்களுக்குச்
சொல்லட்டுமா எஞ்சாமி
சொல்லட்டுமா?"
"வந்திருச்சு. பேய் வழிக்கு வந்திருச்சு. இந்தா இப்பச் சொல்லப்போகுது... ஊரையும் பேரையும்." ஊரே நிமிந்து உட்காருது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
சும்மா கோயில் மணிச்சத்தம் மாதிரி சுத்தமான குரல் கருவாச்சிக்கு. பாடுது மனப்பேயி கருவாச்சி குரலைக் கடன்வாங்கி.
"எனக்கு இட்டதொரு
எழுத்திருக்க எஞ்சாமி
எழுத்திருக்க நான்
கம்பங்காடு போகையிலே
ஈசன் கொஞ்சம்
கடையெழுத்த மாத்திட்டாரு
கடையெழுத்த மாத்திட்டாரு"
உடுக்குச் சத்தம் கூடக் கூட சக்கரமாச் சுத்துது அவ தல.
இந்த ஈருவல்லிக்குச்சி ஒடம்புக்குள்ள இத்தன சக்தியான்னு மூக்குமேல வெரலவச்சுக் கவலக்குறியோட பாத்து நிக்கிது சாதிசனம் எல்லாம்.
தரையில மண்டி போட்டுப் பேயாடின பொம்பள, பூமியிலருந்து சூறாவளி சுத்தி எந்திருச்ச மாதிரி "குபீர்"னு எந்திரிச்சு, மொழங்கால் போட்டு முழு வேகத்துல பேயாடவும், இழுத்து இடுப்புல சொருகியிருந்த சீல "பட்டீர்"ன்னு அவுந்திருச்சு.
சீல உருவ, மாராப்பு வெடிச்சு வெலக, லவுக்கையில்லாத தேகத்துல ஓரஞ்சாரம் தெரியவும் கருவாச்சி மேல ஓடிவந்து விழுந்து அவள ஒரே அமுக்கா அமுக்கிக்கிட்டா பவளம்.
பெரியமூக்கி உள்ள ஓடிப்போயி கம்புமூட கட்டிவச்சிருந்த சரடுகள உருவிட்டு வந்தா. கருவாச்சியத் தூக்கி நிமித்தி, சீலய இறுக்கிச் சரி செஞ்சு, இந்தப் பக்கம் ஒரு சரடும் அந்தப் பக்கம் ஒரு சரடுமாக் கட்டி, ஒருவாஞ்சுருக்குப் போட்டா அவுந்தாலும் அவுந்திருமின்னு கல்லுமுடிபோட்டு "ஆடுடீ ஆத்தா ஆடு"ன்னு சொல்லித் தள்ளிவிட்டு அழுது ஒதுங்கிட்டா. உடுக்கு இப்பத் தீப்புடிக்குது.
"வந்திருக்கறது யாரு? வா வெளிய! ஒனக்குண்டான சாங்கியத்த வாங்கிக் கிட்டு ஒன் வழியத் தேடி நீ போயிரு. எங்க வீட்டுப் பிள்ளைக்குப் பட்டி பெருகணும்; பால் பான பொங்கணும்.
அல்லியும் தாமரையும் பூத்துக் குலுங்கணும். சொல்லு. நீ ஆம்பளையா? பொம்பளையா?" கோடாங்கி குரல்ல கோபக்குறி ஏறவும் வந்திருந்த பேய்க்கும் ரோசம் பொத்துக்கிருச்சு.
"வந்திருக்கிறது பொம்பளடா; பொம்பள."
"ஊரு?"
"இதே ஊருதாண்டா... சொக்கத்தேவன்பட்டி."
"பேரு?"
"சொர்ணக்கிளிடா; சொர்ணக்கிளி; சடையத் தேவர் அண்ணன் மாறு கண்ணுத்தேவர் மக."
"சொர்ணக்கிளியா? கருவாச்சியப் பேயா வந்து புடிச்சிருக்கறது என்னைக்கோ செத்துப்போன சொர்ணக்கிளியா? யாத்தே"ன்னு நெஞ்சுலடிக்கிறாக கெழவிக.
"வெளியூர்ப் பேயா இருக்குமோன்னு ஊகம் பண்ணுனா கடைசியில கருப்பு காலுக்குள்ளயே இருந்திருக்கேப்பா" நாப்பது வருசம் முன்னுக்கு நடந்த சம்பவத்த நெனச்சுப் பெருமூச்சு விடுதுக பெருசுக.
பாவம்! சொர்ணக்கிளி கத பெருங்கத.
சும்மா கோயில் மணிச்சத்தம் மாதிரி சுத்தமான குரல் கருவாச்சிக்கு. பாடுது மனப்பேயி கருவாச்சி குரலைக் கடன்வாங்கி.
"எனக்கு இட்டதொரு
எழுத்திருக்க எஞ்சாமி
எழுத்திருக்க நான்
கம்பங்காடு போகையிலே
ஈசன் கொஞ்சம்
கடையெழுத்த மாத்திட்டாரு
கடையெழுத்த மாத்திட்டாரு"
உடுக்குச் சத்தம் கூடக் கூட சக்கரமாச் சுத்துது அவ தல.
இந்த ஈருவல்லிக்குச்சி ஒடம்புக்குள்ள இத்தன சக்தியான்னு மூக்குமேல வெரலவச்சுக் கவலக்குறியோட பாத்து நிக்கிது சாதிசனம் எல்லாம்.
தரையில மண்டி போட்டுப் பேயாடின பொம்பள, பூமியிலருந்து சூறாவளி சுத்தி எந்திருச்ச மாதிரி "குபீர்"னு எந்திரிச்சு, மொழங்கால் போட்டு முழு வேகத்துல பேயாடவும், இழுத்து இடுப்புல சொருகியிருந்த சீல "பட்டீர்"ன்னு அவுந்திருச்சு.
சீல உருவ, மாராப்பு வெடிச்சு வெலக, லவுக்கையில்லாத தேகத்துல ஓரஞ்சாரம் தெரியவும் கருவாச்சி மேல ஓடிவந்து விழுந்து அவள ஒரே அமுக்கா அமுக்கிக்கிட்டா பவளம்.
பெரியமூக்கி உள்ள ஓடிப்போயி கம்புமூட கட்டிவச்சிருந்த சரடுகள உருவிட்டு வந்தா. கருவாச்சியத் தூக்கி நிமித்தி, சீலய இறுக்கிச் சரி செஞ்சு, இந்தப் பக்கம் ஒரு சரடும் அந்தப் பக்கம் ஒரு சரடுமாக் கட்டி, ஒருவாஞ்சுருக்குப் போட்டா அவுந்தாலும் அவுந்திருமின்னு கல்லுமுடிபோட்டு "ஆடுடீ ஆத்தா ஆடு"ன்னு சொல்லித் தள்ளிவிட்டு அழுது ஒதுங்கிட்டா. உடுக்கு இப்பத் தீப்புடிக்குது.
"வந்திருக்கறது யாரு? வா வெளிய! ஒனக்குண்டான சாங்கியத்த வாங்கிக் கிட்டு ஒன் வழியத் தேடி நீ போயிரு. எங்க வீட்டுப் பிள்ளைக்குப் பட்டி பெருகணும்; பால் பான பொங்கணும்.
அல்லியும் தாமரையும் பூத்துக் குலுங்கணும். சொல்லு. நீ ஆம்பளையா? பொம்பளையா?" கோடாங்கி குரல்ல கோபக்குறி ஏறவும் வந்திருந்த பேய்க்கும் ரோசம் பொத்துக்கிருச்சு.
"வந்திருக்கிறது பொம்பளடா; பொம்பள."
"ஊரு?"
"இதே ஊருதாண்டா... சொக்கத்தேவன்பட்டி."
"பேரு?"
"சொர்ணக்கிளிடா; சொர்ணக்கிளி; சடையத் தேவர் அண்ணன் மாறு கண்ணுத்தேவர் மக."
"சொர்ணக்கிளியா? கருவாச்சியப் பேயா வந்து புடிச்சிருக்கறது என்னைக்கோ செத்துப்போன சொர்ணக்கிளியா? யாத்தே"ன்னு நெஞ்சுலடிக்கிறாக கெழவிக.
"வெளியூர்ப் பேயா இருக்குமோன்னு ஊகம் பண்ணுனா கடைசியில கருப்பு காலுக்குள்ளயே இருந்திருக்கேப்பா" நாப்பது வருசம் முன்னுக்கு நடந்த சம்பவத்த நெனச்சுப் பெருமூச்சு விடுதுக பெருசுக.
பாவம்! சொர்ணக்கிளி கத பெருங்கத.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நாப்பது வருசத்துக்கு முன்ன நடந்த கத; சொக்கத்தேவன்பட்டி பெறந்த காலத்துலயிருந்து மறக்க முடியாத கத.
சடையத்தேவர்கூட பிறந்தவுக அண்ணந் தம்பிக ஏழு பேரு. ஏழு பேருக்கும் பிள்ளையில்ல.
பிள்ள பெறக்காம இல்ல; பெறக்கும் பிள்ளைக ஒரு வாரத்துக்கு மேல தங்கல; எறந்துபோகுதுக.
என்ன விதியோ... என்ன தலையெழுத்தோ இல்ல மூதாக்கமாரு செஞ்ச பாவமோன்னு ஏழு குடும்பமும் மனசுக்குள்ள வெந்துவெதும்பிக் கூட்டம் கும்மலுக்குக்கூட வர முடியாமச் சங்கடப்பட்டு, ஊர்வாயில விழுந்துகெடக்கிற நாளையில மாறுகண்ணுத்தேவருக்கு மகளா வந்து பெறந்தா சொர்ணக்கிளி.
ஏழு அப்பன்மார்களுக்கும் செல்லப் பிள்ளையா செல்வத்துலயும் செல்வாக்கியத்துலயும் வளர்றா. அவுக வம்சத்துலயே இல்லாத செவுப்புத் தோலு அவளுக்கு. தலைக்குச் செழிம்பா எண்ண வச்சு,அழுத்தி வாரி, வெடவெடன்னு சட போட்டு, தலைச் சொமையாப் பூவச்சு, பாவாட கட்ன குத்துவெளக்கா சொர்ணக்கிளி தெருவுல நடந்துபோனா, ஆணும் பொண்ணும் மாடும் கன்டும் அவளையே வெறிச்சு வெறிச்சுப் பாக்கும். அவ பளீர்னு சிரிச்சு வாய் மூடினா நெலா செத்தவடம் வந்துட்டுப் போயிட்டு வாரேன்னு போயிரும்.
சொர்ணக்கிளி சொதந்திரக் கிளி. தண்ணியெடுக்கவும் போவா. காடுகரைக்கும் போய்வருவா. பெரிய மனுசியாகிப் பூத்துக் குலுங்கிப் புதுப் பாள போட்டு நிக்கிறா. வழக்கமா அவுக குடும்பத்துப் புள்ளைகளுக்கு வாரம் ஒண்ணுல வார எமன், சொர்ணக்கிளிகிட்ட வாரானய்யா வருசம் பதினேழுல பெரியமூக்கி தம்பி செயில்ராசு ரூவத்துல.
பெரியமூக்கி புருசன் துரைச்சாமி, சடையத்தேவருக்குச் சொந்த மச்சினன். மொதலக்கம்பட்டியில பெரியமூக்கியப் பெண்ணெடுத்துக் கூட்டி வாரப்ப வண்டிமாடு ஓட்டிட்டுக் கூடவே வந்தவன்தான், அவ தம்பி செயில்ராசு. அவன் பெறக்கறப்ப அவன் அப்பன் செயில்ல இருந்ததுனால அவனுக்கு அந்தப் "பட்டம்".
சக்கரவள்ளிக் கெழங்கு மூட்டையில சமயத்துல சாரப்பாம்புக் குட்டியும் சேந்து வந்திருமா இல்லையா... சக்கரவள்ளிக் கெழங்கு பெரியமூக்கி. சாரப்பாம்புக் குட்டி செயில்ராசு. ஊருக்கு வந்தன்னிக்கே செயில்ராசு ஆரம்பிச்சுட்டான் அவன் கிருத்திரியத்தை. மூணாம் நாளே ஊருபூராத் தெரிஞ்சு போனான்.
மந்தையில அரசமரத்தடியிலயே காத்தக் குடிச்சுக் கெடக்குற கெழடுகட்டைகளுக்குப் பலகாரம் மிச்சரு அல்வான்னு பொட்டணம் பொட்டணமா வாங்கிக் குடுத்து "மகராசன் நல்லாருக்கணும்"ங்கிற நல்ல பேரு வாங்கிட்டான்.
சடையத்தேவர்கூட பிறந்தவுக அண்ணந் தம்பிக ஏழு பேரு. ஏழு பேருக்கும் பிள்ளையில்ல.
பிள்ள பெறக்காம இல்ல; பெறக்கும் பிள்ளைக ஒரு வாரத்துக்கு மேல தங்கல; எறந்துபோகுதுக.
என்ன விதியோ... என்ன தலையெழுத்தோ இல்ல மூதாக்கமாரு செஞ்ச பாவமோன்னு ஏழு குடும்பமும் மனசுக்குள்ள வெந்துவெதும்பிக் கூட்டம் கும்மலுக்குக்கூட வர முடியாமச் சங்கடப்பட்டு, ஊர்வாயில விழுந்துகெடக்கிற நாளையில மாறுகண்ணுத்தேவருக்கு மகளா வந்து பெறந்தா சொர்ணக்கிளி.
ஏழு அப்பன்மார்களுக்கும் செல்லப் பிள்ளையா செல்வத்துலயும் செல்வாக்கியத்துலயும் வளர்றா. அவுக வம்சத்துலயே இல்லாத செவுப்புத் தோலு அவளுக்கு. தலைக்குச் செழிம்பா எண்ண வச்சு,அழுத்தி வாரி, வெடவெடன்னு சட போட்டு, தலைச் சொமையாப் பூவச்சு, பாவாட கட்ன குத்துவெளக்கா சொர்ணக்கிளி தெருவுல நடந்துபோனா, ஆணும் பொண்ணும் மாடும் கன்டும் அவளையே வெறிச்சு வெறிச்சுப் பாக்கும். அவ பளீர்னு சிரிச்சு வாய் மூடினா நெலா செத்தவடம் வந்துட்டுப் போயிட்டு வாரேன்னு போயிரும்.
சொர்ணக்கிளி சொதந்திரக் கிளி. தண்ணியெடுக்கவும் போவா. காடுகரைக்கும் போய்வருவா. பெரிய மனுசியாகிப் பூத்துக் குலுங்கிப் புதுப் பாள போட்டு நிக்கிறா. வழக்கமா அவுக குடும்பத்துப் புள்ளைகளுக்கு வாரம் ஒண்ணுல வார எமன், சொர்ணக்கிளிகிட்ட வாரானய்யா வருசம் பதினேழுல பெரியமூக்கி தம்பி செயில்ராசு ரூவத்துல.
பெரியமூக்கி புருசன் துரைச்சாமி, சடையத்தேவருக்குச் சொந்த மச்சினன். மொதலக்கம்பட்டியில பெரியமூக்கியப் பெண்ணெடுத்துக் கூட்டி வாரப்ப வண்டிமாடு ஓட்டிட்டுக் கூடவே வந்தவன்தான், அவ தம்பி செயில்ராசு. அவன் பெறக்கறப்ப அவன் அப்பன் செயில்ல இருந்ததுனால அவனுக்கு அந்தப் "பட்டம்".
சக்கரவள்ளிக் கெழங்கு மூட்டையில சமயத்துல சாரப்பாம்புக் குட்டியும் சேந்து வந்திருமா இல்லையா... சக்கரவள்ளிக் கெழங்கு பெரியமூக்கி. சாரப்பாம்புக் குட்டி செயில்ராசு. ஊருக்கு வந்தன்னிக்கே செயில்ராசு ஆரம்பிச்சுட்டான் அவன் கிருத்திரியத்தை. மூணாம் நாளே ஊருபூராத் தெரிஞ்சு போனான்.
மந்தையில அரசமரத்தடியிலயே காத்தக் குடிச்சுக் கெடக்குற கெழடுகட்டைகளுக்குப் பலகாரம் மிச்சரு அல்வான்னு பொட்டணம் பொட்டணமா வாங்கிக் குடுத்து "மகராசன் நல்லாருக்கணும்"ங்கிற நல்ல பேரு வாங்கிட்டான்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பொதுக்கெணத்துல தண்ணியெடுக்க வார பொம்பளைகளுக்கெல்லாம் இவனே தண்ணியெறச்சு நெப்பி... தூக்கிவிடுற சாக்குல தொட்டும் அனுப்பினான்.
ஊருக்குள்ள யார் வீட்ல யாரிருக்கா, வீடுகள்ல என்னென்னா இருக்குன்னு சட்டையக் கழத்தி உருமாக் கட்டி நெஞ்சத் தூக்கி நடந்து தெருத்தெருவாத் திரிய ஆரம்பிச்சுட்டான்.
பொம்பளைக ரெண்டு பேரு ஒரல்ல சோளம் போட்டு ஒலக்க குத்திக்கிட்டிருந் தாகன்னா ஓடிப்போயி ரெண்டு பேரையும் ஒதுங்கி நிக்கச் சொல்லிட்டு, ரெண்டு கையிலயும் ரெண்டு ஒலக்கைய வாங்கி, இவனே மாத்தி மாத்திக் குத்திப் பொடச்சும் குடுத்திட்டுப் போயிருவான். யார் வீட்லயும் கூசாம நொழஞ்சு அம்மியில ஆறவெச்சிருக்கிற களியில இவனா கொழம்ப அள்ளி ஊத்தித் தெனாவெட்டாத் தின்டுபிட்டு, உப்போ ஒறப்போ கம்மின்னும் சொல்லிப்புட்டு வேட்டியில கையத் தொடச்சு வெளியேறிருவான்.
கல்யாணமாகாத மூத்த கொமரிகள... புருசன் வீட்லயிருந்து கோவிச்சிட்டு வந்து பெறந்த வீட்ல பேன் பாத்துக்கிட்டிருக்கிற வாழாவெட்டிகள... "சோங்கு" பண்றதுல இவனுக்கொரு சொகம் இருக்கு.
"ஊருக்குள்ள ஒரு தும்பு திரிச்ச மாடு துள்ளிக்கிட்டுத் திரியுதே அத லேசாத் தட்டிவைங்கப்பா"னு வெடலப் பயககிட்ட ஊர்ப் பெருசுக சொல்ற அளவுக்கு அத்துமீறிப் போயிக்கிட்டிருக்கு அவன் அக்குறும்பு.
"ஏம்மா பெரியமூக்கி! சொக்கத்தேவன் பட்டிக்கு வாக்கப்பட்டு வந்தவளே! ஒன் தம்பியக் கொஞ்சம் தட்டிவைக்கக் கூடாதா?"ன்னு கேட்டதுக்கு, "ஆம்பளப் பயன்னா அப்படித்தான் இருப்பான்"னு பெரும்போக்கா அவ சொல்லப்போக, "அப்ப சொக்கத்தேவன்பட்டியில ஆம்பளப்பயலே இல்லேன்றியா?"ன்னு சடையத்தேவர் வீட்டு ஆளுக கேக்க... அப்பவே கசமுசாவாகி, அஞ்சாறு மாசமாப் பேச்சுவார்த்தை இல்ல ரெண்டு வீட்டுக்கும்.
ஒரு புரட்டாசி மாசம். அப்பவே அடிக்க ஆரம்பிச்சிருச்சு, அடுத்த மாச மழைக்குண்டான சிறு காத்து. பொழுசாய நேரம்... வாரேன் வாரேன்ங்குது இருட்டு... போறேன் போறேங்குது வெளிச்சம். மொதப் பறவை கூடு சேந்திருச்சு; கடைசிப் பறவை இந்தா வந்திட்டேன்ங்குது.
ஊருக்கு மேற்க கரட்டடிய ஒட்டியிருக்க கம்பங்காட்டுக்குள்ள செடிசெத்தையப் பரப்பி,அதுக்கு மேல சக்கரவள்ளிக் கெழங்க அடுக்கி, சோளத்தட்டைய மேல போட்டுச் சுட்டுத் திங்கத் தோது பண்ணிக்கிட்டு இருக்கான் செயில்ராசு.
அப்ப... "சல்லு சல்லு சல்லு"ன்னு ஒரு சத்தம்; அந்தக் காடு கேக்காத சத்தம்; மனசக் கொழச்சு மண்ணு மிதிக்கிற சத்தம்.
"ஆள் இல்லாத அனாதிக் காட்ல இது என்னடா கொலுசுச் சத்தம்?"ன்னு பாத்தா, தலையில பருத்திச் சாக்கச் சொமந்து ஒத்தையடிப் பாதையில ஒத்தையில வந்துக்கிட்டிருக்கா சொர்ணக்கிளி.
பார்த்தான்...
கெழங்கு சுடறதுக்குள்ள மனசு வெந்துபோச்சு அவனுக்கு. கொடியில சீல காயறதக் கண்டாலே "படக்"குன்னு பார்வைய எடுக்க முடியாத பய புத்தி கொதிச்சுப்போயி நிக்கிறான்.
ஊருக்குள்ள யார் வீட்ல யாரிருக்கா, வீடுகள்ல என்னென்னா இருக்குன்னு சட்டையக் கழத்தி உருமாக் கட்டி நெஞ்சத் தூக்கி நடந்து தெருத்தெருவாத் திரிய ஆரம்பிச்சுட்டான்.
பொம்பளைக ரெண்டு பேரு ஒரல்ல சோளம் போட்டு ஒலக்க குத்திக்கிட்டிருந் தாகன்னா ஓடிப்போயி ரெண்டு பேரையும் ஒதுங்கி நிக்கச் சொல்லிட்டு, ரெண்டு கையிலயும் ரெண்டு ஒலக்கைய வாங்கி, இவனே மாத்தி மாத்திக் குத்திப் பொடச்சும் குடுத்திட்டுப் போயிருவான். யார் வீட்லயும் கூசாம நொழஞ்சு அம்மியில ஆறவெச்சிருக்கிற களியில இவனா கொழம்ப அள்ளி ஊத்தித் தெனாவெட்டாத் தின்டுபிட்டு, உப்போ ஒறப்போ கம்மின்னும் சொல்லிப்புட்டு வேட்டியில கையத் தொடச்சு வெளியேறிருவான்.
கல்யாணமாகாத மூத்த கொமரிகள... புருசன் வீட்லயிருந்து கோவிச்சிட்டு வந்து பெறந்த வீட்ல பேன் பாத்துக்கிட்டிருக்கிற வாழாவெட்டிகள... "சோங்கு" பண்றதுல இவனுக்கொரு சொகம் இருக்கு.
"ஊருக்குள்ள ஒரு தும்பு திரிச்ச மாடு துள்ளிக்கிட்டுத் திரியுதே அத லேசாத் தட்டிவைங்கப்பா"னு வெடலப் பயககிட்ட ஊர்ப் பெருசுக சொல்ற அளவுக்கு அத்துமீறிப் போயிக்கிட்டிருக்கு அவன் அக்குறும்பு.
"ஏம்மா பெரியமூக்கி! சொக்கத்தேவன் பட்டிக்கு வாக்கப்பட்டு வந்தவளே! ஒன் தம்பியக் கொஞ்சம் தட்டிவைக்கக் கூடாதா?"ன்னு கேட்டதுக்கு, "ஆம்பளப் பயன்னா அப்படித்தான் இருப்பான்"னு பெரும்போக்கா அவ சொல்லப்போக, "அப்ப சொக்கத்தேவன்பட்டியில ஆம்பளப்பயலே இல்லேன்றியா?"ன்னு சடையத்தேவர் வீட்டு ஆளுக கேக்க... அப்பவே கசமுசாவாகி, அஞ்சாறு மாசமாப் பேச்சுவார்த்தை இல்ல ரெண்டு வீட்டுக்கும்.
ஒரு புரட்டாசி மாசம். அப்பவே அடிக்க ஆரம்பிச்சிருச்சு, அடுத்த மாச மழைக்குண்டான சிறு காத்து. பொழுசாய நேரம்... வாரேன் வாரேன்ங்குது இருட்டு... போறேன் போறேங்குது வெளிச்சம். மொதப் பறவை கூடு சேந்திருச்சு; கடைசிப் பறவை இந்தா வந்திட்டேன்ங்குது.
ஊருக்கு மேற்க கரட்டடிய ஒட்டியிருக்க கம்பங்காட்டுக்குள்ள செடிசெத்தையப் பரப்பி,அதுக்கு மேல சக்கரவள்ளிக் கெழங்க அடுக்கி, சோளத்தட்டைய மேல போட்டுச் சுட்டுத் திங்கத் தோது பண்ணிக்கிட்டு இருக்கான் செயில்ராசு.
அப்ப... "சல்லு சல்லு சல்லு"ன்னு ஒரு சத்தம்; அந்தக் காடு கேக்காத சத்தம்; மனசக் கொழச்சு மண்ணு மிதிக்கிற சத்தம்.
"ஆள் இல்லாத அனாதிக் காட்ல இது என்னடா கொலுசுச் சத்தம்?"ன்னு பாத்தா, தலையில பருத்திச் சாக்கச் சொமந்து ஒத்தையடிப் பாதையில ஒத்தையில வந்துக்கிட்டிருக்கா சொர்ணக்கிளி.
பார்த்தான்...
கெழங்கு சுடறதுக்குள்ள மனசு வெந்துபோச்சு அவனுக்கு. கொடியில சீல காயறதக் கண்டாலே "படக்"குன்னு பார்வைய எடுக்க முடியாத பய புத்தி கொதிச்சுப்போயி நிக்கிறான்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
"ஏ சொர்ணக்கிளி! தலைச் சொமைய எறக்கிவச்சுட்டுச் சக்கரவள்ளிக் கெழங்கு தின்டுட்டுப் போறது?"
"வேணாம் மாமா. பொழுதுபோயிருச்சு. வீடு போயிச் சேரணும்."
"நீ கெழங்கு தின்டுட்டுப் போறதாயிருந்தா, வீட்டுவரைக்கும் ஒன் தலைச் சொமைய நான் தூக்கிட்டு வாரேன்."
"நெசமாவா?"
"பொய்யா சொல்றேன். ஒனக்குக் கால் வலிச்சா ஒன்னையுந் தூக்கி இடுப்புல வச்சுக்கறேன்". பாதையில போனவள முன்னுக்கு வந்து மறிச்சு, அவ தலைச் சொமைய வம்படியா அவனே எறக்கி வைக்கிறான்.
தொட்டும் தொடாம அவள ஓரங்கட்டி ஒதுக்குறான்.
கங்குகளத் தள்ளி வெந்தும் வேகாமக் கெடந்த கெழங்குகள்ல ஒண்ண எடுத்து, "தின்னு சொர்ணம்... தின்னு"ன்னு அவ கையில திணிக்க, குருத்துவாழை எலையில சுடுசோறு விழுந்த மாதிரி கெழங்குச் சூட்டுல உள்ளங்கை வெந்து, அவ "யாத்தே"ன்னு கத்த, இதான் சாக்குன்னு கையப் புடிச்சு "உஸ் உஸ்ஸு"ன்னு அவன் ஊதிவிட, அந்த அணுக்கத்த அனுகூலமாக்கி சாச்சுட்டான் அவளக் கம்பங்காட்ல.
குரங்குலருந்துதான் மனுசன் பொறந்தான்ங்கிறாங்க. ஆனா, மனுசனுக்குள்ளருந்து சிங்கம், புலி, கரடி, ஓநாய் இதெல்லாம் பூமியில நித்தம் நித்தம் பொறந்துகிட்டே இருக்கு. பலது கண்ணுக்குத் தெரியறதில்ல; கணக்குல வாரதில்ல.
ஒரு தெய்வச் செலையக் களவாணிப்பய திருடி உருக்கி விக்கிற மாதிரி, ஆளில்லாத காட்ல ஒரு சின்னப் புள்ளையச் சீரழிக்கிறான். ஒவ்வொரு துணியா உருவி எறியிறான்; கத்திக் கதையக் கெடுத்திருவாளோன்னு அவ வாய அடைக்கிறான் தாவணியப் பந்து சுருட்டி. ஒரு மிருகம் கூடுதய்யா மனுசப் பொம்பளைய.
காடே கதிகலங்குது. கம்பங்காட்ல வந்து அடைஞ்ச தட்டச் சிட்டுக, தானியத்த அள்ளித் தலைக்கு மேல எறிஞ்ச மாதிரி செதறி ஓடுதுக. காடை கதுவாளிக என்னமோ ஏதோன்னு பதறி, சொந்த பந்தங்களே சூதானம்ன்னு அடுத்த காடு கேட்க அலறிக் கத்துதுக. அங்கங்க ஊறித் திரிஞ்ச பாம்பு பூரான் எல்லாம் சட்டுன்னு சுருண்டு பிரிமணை மாதிரி சுத்திச் செத்தது மாதிரி கெடக்குக சத்தமில்லாம. ஈரக்கொல நடுங்கி விர்றுவிர்றுன்னு வீசுது காத்து.
எல்லாம் முடிஞ்சுபோச்சு.
இப்ப நல்லா வெந்திருக் கும்ன்னு கங்குகளக் கிண்டிக் கெழங்குகள எடுத்து ஊதி ஊதித் தின்டுபிட்டுத் திரும்பிப் பாத்தா, அவ இன்னம் எந்திரிக்கல. காலப் புடிச்சு ஒரு ஆட்டு ஆட்றான். கொலுசு சத்தம் போடுது; அவ அசையல. வாயில அடைச்ச தாவணிய உருவுனா, வாய் தொறந்தே கெடக்கு; மூடல. மூக்குல கைய வச்சுப் பாக்குறான். மூச்சில்ல.
"யாத்தே! செத்துப்போனாளே!"
செத்தவடம் புத்தி மாறிப்போயிப் பயந்து ஒக்காந்தவன் சுதாரிச்சு எந்திரிக்கிறான். சுத்தியும் முத்தியும் பாக்குறான்.
"ஏ சொர்ணக்கிளி! தலைச் சொமைய எறக்கிவச்சுட்டுச் சக்கரவள்ளிக் கெழங்கு தின்டுட்டுப் போறது?"
"வேணாம் மாமா. பொழுதுபோயிருச்சு. வீடு போயிச் சேரணும்."
"நீ கெழங்கு தின்டுட்டுப் போறதாயிருந்தா, வீட்டுவரைக்கும் ஒன் தலைச் சொமைய நான் தூக்கிட்டு வாரேன்."
"நெசமாவா?"
"பொய்யா சொல்றேன். ஒனக்குக் கால் வலிச்சா ஒன்னையுந் தூக்கி இடுப்புல வச்சுக்கறேன்". பாதையில போனவள முன்னுக்கு வந்து மறிச்சு, அவ தலைச் சொமைய வம்படியா அவனே எறக்கி வைக்கிறான்.
தொட்டும் தொடாம அவள ஓரங்கட்டி ஒதுக்குறான்.
கங்குகளத் தள்ளி வெந்தும் வேகாமக் கெடந்த கெழங்குகள்ல ஒண்ண எடுத்து, "தின்னு சொர்ணம்... தின்னு"ன்னு அவ கையில திணிக்க, குருத்துவாழை எலையில சுடுசோறு விழுந்த மாதிரி கெழங்குச் சூட்டுல உள்ளங்கை வெந்து, அவ "யாத்தே"ன்னு கத்த, இதான் சாக்குன்னு கையப் புடிச்சு "உஸ் உஸ்ஸு"ன்னு அவன் ஊதிவிட, அந்த அணுக்கத்த அனுகூலமாக்கி சாச்சுட்டான் அவளக் கம்பங்காட்ல.
குரங்குலருந்துதான் மனுசன் பொறந்தான்ங்கிறாங்க. ஆனா, மனுசனுக்குள்ளருந்து சிங்கம், புலி, கரடி, ஓநாய் இதெல்லாம் பூமியில நித்தம் நித்தம் பொறந்துகிட்டே இருக்கு. பலது கண்ணுக்குத் தெரியறதில்ல; கணக்குல வாரதில்ல.
ஒரு தெய்வச் செலையக் களவாணிப்பய திருடி உருக்கி விக்கிற மாதிரி, ஆளில்லாத காட்ல ஒரு சின்னப் புள்ளையச் சீரழிக்கிறான். ஒவ்வொரு துணியா உருவி எறியிறான்; கத்திக் கதையக் கெடுத்திருவாளோன்னு அவ வாய அடைக்கிறான் தாவணியப் பந்து சுருட்டி. ஒரு மிருகம் கூடுதய்யா மனுசப் பொம்பளைய.
காடே கதிகலங்குது. கம்பங்காட்ல வந்து அடைஞ்ச தட்டச் சிட்டுக, தானியத்த அள்ளித் தலைக்கு மேல எறிஞ்ச மாதிரி செதறி ஓடுதுக. காடை கதுவாளிக என்னமோ ஏதோன்னு பதறி, சொந்த பந்தங்களே சூதானம்ன்னு அடுத்த காடு கேட்க அலறிக் கத்துதுக. அங்கங்க ஊறித் திரிஞ்ச பாம்பு பூரான் எல்லாம் சட்டுன்னு சுருண்டு பிரிமணை மாதிரி சுத்திச் செத்தது மாதிரி கெடக்குக சத்தமில்லாம. ஈரக்கொல நடுங்கி விர்றுவிர்றுன்னு வீசுது காத்து.
எல்லாம் முடிஞ்சுபோச்சு.
இப்ப நல்லா வெந்திருக் கும்ன்னு கங்குகளக் கிண்டிக் கெழங்குகள எடுத்து ஊதி ஊதித் தின்டுபிட்டுத் திரும்பிப் பாத்தா, அவ இன்னம் எந்திரிக்கல. காலப் புடிச்சு ஒரு ஆட்டு ஆட்றான். கொலுசு சத்தம் போடுது; அவ அசையல. வாயில அடைச்ச தாவணிய உருவுனா, வாய் தொறந்தே கெடக்கு; மூடல. மூக்குல கைய வச்சுப் பாக்குறான். மூச்சில்ல.
"யாத்தே! செத்துப்போனாளே!"
செத்தவடம் புத்தி மாறிப்போயிப் பயந்து ஒக்காந்தவன் சுதாரிச்சு எந்திரிக்கிறான். சுத்தியும் முத்தியும் பாக்குறான்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அவ சொமந்து வந்த பருத்திச்சாக்கு இருக்கு. சாக்க அவுத்தான்; பருத்திய ஒதறிவிட்டான். ஒட்டுத்துணிகூட இல்லாமக் கெடந்தவளத் தூக்கி குத்தவச்சமேனிக்கு ஒக்காரவச்சு சாக்குக்குள்ள திணிச்சான். ஏற்கெனவே பருத்திச் சாக்கக் கட்டியிருந்த கயித்தப் பதட்டத்துல எங்க எறிஞ்சானோ... தெரியல...
காணல. இடுப்புல இருந்த சூரிக்கத்திய எடுத்து அவ குடுமியவே அறுத்து, முடியக்கொண்டே முடி போட்டான் மூட்டைக்கு. "பொணத்த எங்கயாவது பாங்கெணத்துல போட்டுட்டுக் கங்காணாத சீமைக்கு ஓடியே போகணும் ஓடி."
காடு இருட்டுக்கட்டிப்போச்சு. மங்கலா வழி தெரியுது. "பொணம் எளம் பொணம்; கனக்கல; ஆனா, மனசு மட்டும் பாறாங்கல்லாக் கனக்குதே"ன்னு சொல்லிக்கிட்டே பயத்தையும் சொமந்து நடக்கிறான். "பொணத்தத் தலையில புடிச்சு உசுரக் கையில புடிச்சு இதென்னடா பொழப்பு?"ன்னு அடுத்த அடி வைக்கவும் ஆள் மொனகுற சத்தம் வருது.
"யாத்தே! யாராச்சும் பின்னாலயே வாராகளா, இல்ல காட்டுக்குள்ள காத்துகருப்பா?'
கம்பங்காடு கடந்து, ஒத்தப்பனமரப் பாதை வழியா சோளக்காட்டுக்குள்ள நொழைய "என்னிய விட்ரு; என்னிய விட்ரு"ன்னு சத்தம் வருது. பய பயந்து கழிஞ்சுபோனான்.
வேர்த்து விறுவிறுத்து, தலைச் சொமையோட ஒரு முழுச்சுத்தும் சுத்தி, எங்கயிருந்துடா வருதுன்னு பாத்தா, கடைசியில சாக்குக்குள்ளருந்து வருது சத்தம்.
"பொத்"துன்னு மூட்டையப் போட்டுட்டு நாலடி பின்னால நகந்து நின்னு பாத்தா, அவுந்துபோன மூட்டைக்குள்ளருந்து குத்தவச்சு ஒக்காந்த மேனிக்குக் கும்புட்டு அழுகுறா சொர்ணக்கிளி; அவ சாகல.
ஒடம்புல ஒரு ஒட்டுத்துணியில்லாம, கூந்தல எடுத்து அங்கங்க மூடிக்கிட்டு, கும்புட்டுக்கிட்டே மார்ப மூடிக்கிட்டு "நடந்தது நடந்துபோச்சு; என்னிய விட்ரு மாமா"ன்னு சாரைசாரையா அவ அழுகறதக் கண்டா ஓநாய் புலி பேயாயிருந்தாலும் 'போயிட்டு வா தாயி!'ன்னு போயிரும்.
பேயி பிசாசு மிருகம் மனுசன்னு எதுலயும் சேக்க முடியாது இவன.
"அடியே சொர்ணம்! ஒரு வகைக்கு நீ செத்தது நல்லது. எனக்கு சாட்சியிருக்காது. இப்ப நீ பொழச்சது கெட்டது. ஒன்னிய இப்படியே விட்டா, நான் காடு கடக்கு முன்ன என்னியப் பொணமாக்கிப்பிடுவானுக ஒங்கப்பன்மாருக. அதுனால, நீ செத்தது செத்ததாவே இருக்கட்டும்."
இடுப்புல சூரியத் தேடினான்; காணோம். பதட்டத்துல எங்கேயோ விழுந்துபோச்சு.
காணல. இடுப்புல இருந்த சூரிக்கத்திய எடுத்து அவ குடுமியவே அறுத்து, முடியக்கொண்டே முடி போட்டான் மூட்டைக்கு. "பொணத்த எங்கயாவது பாங்கெணத்துல போட்டுட்டுக் கங்காணாத சீமைக்கு ஓடியே போகணும் ஓடி."
காடு இருட்டுக்கட்டிப்போச்சு. மங்கலா வழி தெரியுது. "பொணம் எளம் பொணம்; கனக்கல; ஆனா, மனசு மட்டும் பாறாங்கல்லாக் கனக்குதே"ன்னு சொல்லிக்கிட்டே பயத்தையும் சொமந்து நடக்கிறான். "பொணத்தத் தலையில புடிச்சு உசுரக் கையில புடிச்சு இதென்னடா பொழப்பு?"ன்னு அடுத்த அடி வைக்கவும் ஆள் மொனகுற சத்தம் வருது.
"யாத்தே! யாராச்சும் பின்னாலயே வாராகளா, இல்ல காட்டுக்குள்ள காத்துகருப்பா?'
கம்பங்காடு கடந்து, ஒத்தப்பனமரப் பாதை வழியா சோளக்காட்டுக்குள்ள நொழைய "என்னிய விட்ரு; என்னிய விட்ரு"ன்னு சத்தம் வருது. பய பயந்து கழிஞ்சுபோனான்.
வேர்த்து விறுவிறுத்து, தலைச் சொமையோட ஒரு முழுச்சுத்தும் சுத்தி, எங்கயிருந்துடா வருதுன்னு பாத்தா, கடைசியில சாக்குக்குள்ளருந்து வருது சத்தம்.
"பொத்"துன்னு மூட்டையப் போட்டுட்டு நாலடி பின்னால நகந்து நின்னு பாத்தா, அவுந்துபோன மூட்டைக்குள்ளருந்து குத்தவச்சு ஒக்காந்த மேனிக்குக் கும்புட்டு அழுகுறா சொர்ணக்கிளி; அவ சாகல.
ஒடம்புல ஒரு ஒட்டுத்துணியில்லாம, கூந்தல எடுத்து அங்கங்க மூடிக்கிட்டு, கும்புட்டுக்கிட்டே மார்ப மூடிக்கிட்டு "நடந்தது நடந்துபோச்சு; என்னிய விட்ரு மாமா"ன்னு சாரைசாரையா அவ அழுகறதக் கண்டா ஓநாய் புலி பேயாயிருந்தாலும் 'போயிட்டு வா தாயி!'ன்னு போயிரும்.
பேயி பிசாசு மிருகம் மனுசன்னு எதுலயும் சேக்க முடியாது இவன.
"அடியே சொர்ணம்! ஒரு வகைக்கு நீ செத்தது நல்லது. எனக்கு சாட்சியிருக்காது. இப்ப நீ பொழச்சது கெட்டது. ஒன்னிய இப்படியே விட்டா, நான் காடு கடக்கு முன்ன என்னியப் பொணமாக்கிப்பிடுவானுக ஒங்கப்பன்மாருக. அதுனால, நீ செத்தது செத்ததாவே இருக்கட்டும்."
இடுப்புல சூரியத் தேடினான்; காணோம். பதட்டத்துல எங்கேயோ விழுந்துபோச்சு.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வரப்புமேட்ல கெடந்துச்சு ஒரு கத்திக்கல்லு. அந்தக் கல்ல மண்ணோட பேத்தெடுத்த கொலகாரப்பாவி, கும்புட்டுக் கெடந்தவ தலையில நச்சுநச்சுன்னு குத்தி ரத்தம் ஒழுகவிட்டான்.
அவ கத்திக் கதறி ஊர்ச்சாமி பேரையெல்லாம் கூப்பிட்டு அழுதுபார்த்தா; ஒரு சாமியும் வரல; உண்மையாவே செத்துப்போனா. திரும்பவும் அவளச் சாக்குல போட்டு, பொணம் சொமந்து கருவேலங்காட்டுக்குக் கெழக்க இருக்குற பாங்கெணத்துல போட்டுட்டுப் போயிட்டான்.
ராத்திரியோட ராத்திரியா அப்பன்மாருக ஆளுக்கொரு தெசையா அலைஞ்சதும், விடிஞ்சு பொணம் கண்டுபுடிச்சு மாடுக மாதிரி கதறி அழுததும், கம்பங்காட்ல கெடந்த சூரிய வச்சு இதச் செஞ்சவன் செயில்ராசுதான்னு கண்டுபுடிச்சு, அருவா வேல்கம் போட அவன ஆளாளுக்குத் தேடுனதும், இது தெரிஞ்சு அவன் சிறுமலையில மருந்து குடிச்சுச் செத்துக்கெடந்ததும், அன்னைக்கிருந்து மாறுகண்ணுத்தேவர் பேச்சு நின்னுபோனதும் ஊருக்கே தெரியும். ஆனா, மாறுகண்ணுத் தேவர் கடைசியாச் சொல்லிட்டுச் செத்தது சடையத்தேவருக்கு மட்டுந்தான் தெரியும்.
"அண்ணந்தம்பி ஏழு பேர் பெறந்து, இப்ப நீயும் நானுந் தான் இருக்கமடா தம்பி. இப்ப நானும் போயிச் சேந்திருவேன் போலிருக்கு. ஒண்ணே ஒண்ணு சொல்லிட்டுச் சாவேன். செய்வியா?" "சொல்லுண்ணே..."
"நம்ம ஆச மக சொர்ணக்கிளியக் கொண்டு புட்டான்ங்க. நம்ம வம்ச வெளக்க அழிச்ச குடும்பத்துல என்னைக்காச்சும் ஒரு ஒச்சம் உண்டாக்காட்டி செத்துச் சுடுகாடு போனாலும் என் ஆவி அடங்காதுடா தம்பி, செய்வியா?"
"செய்றண்ணே!" இது நடந்து பதினஞ்சு வருசத்துக்கப்புறம் சடையத்தேவருக்கு மகனா வந்து பெறக்குறான் கட்டையன். அதுக்கு அங்கிட்டு அஞ்சு வருசம் கழிச்சுப் பெரியமூக்கிக்கு மகளா வந்து பெறக்குறா கருவாச்சி.
வஞ்சத்தையும் சாராயத் தையும் ஊத்தி ஊத்தி வளக்கிறாரு சடையத்தேவரு, கட்டையன. பொண்ணு கேக்குற மாதிரி கேட்டு, கல்யாணம் முடிக்கிற மாதிரி முடிச்சு அவளச் சீரழிச்சுச் சின்னாபின்னமாக்கி, "ஓஞ்சதடீயாத்தா ஓங் கத... தீந்ததடியாத்தா எங்க பழி"ன்னு வீட்லயே போயி விட்டுட்டு வந்துட்டான்ங்க. பஞ்சாயத்தக் கூட்டித் தீத்துக்கட்டவும் திட்டம் போட்டுட்டாங்க.
கரிச்சாம்பாறையில கருவாச்சியப் போட்டு வறுத்தெடுத்து, அவ குடுமிக்கு அடியில கையக்கோத்து இறுக்கிக்கிட்டு, சொர்ணக்கிளி கதையக் கட்டையன் சொல்லச் சொல்ல, பூரான் பாம்பு தேளெல்லாம் புகுந்து கொடஞ்சிருச்சு கருவாச்சி புத்திக்குள்ள. அந்தக் கொடச்சலும், ஒடம்புபட்ட ஒலச்சலும் எதையும் வெளிய சொல்லாம மனசுக்குள்ளயே போட்டு அமுக்கி வைக்கிற கொணமும் சேந்துதான் அவளப் பேயாடவச்சுப் பெருங்கூத்துப் பண்ணிருச்சு.
கருவாச்சி மூலியமா சொர்ணக்கிளி தன் கதையச் சொல்லச் சொல்ல, அழுது மூஞ்சி வீங்கிப்போச்சு ஆணும் பொண்ணும்.
அவ கத்திக் கதறி ஊர்ச்சாமி பேரையெல்லாம் கூப்பிட்டு அழுதுபார்த்தா; ஒரு சாமியும் வரல; உண்மையாவே செத்துப்போனா. திரும்பவும் அவளச் சாக்குல போட்டு, பொணம் சொமந்து கருவேலங்காட்டுக்குக் கெழக்க இருக்குற பாங்கெணத்துல போட்டுட்டுப் போயிட்டான்.
ராத்திரியோட ராத்திரியா அப்பன்மாருக ஆளுக்கொரு தெசையா அலைஞ்சதும், விடிஞ்சு பொணம் கண்டுபுடிச்சு மாடுக மாதிரி கதறி அழுததும், கம்பங்காட்ல கெடந்த சூரிய வச்சு இதச் செஞ்சவன் செயில்ராசுதான்னு கண்டுபுடிச்சு, அருவா வேல்கம் போட அவன ஆளாளுக்குத் தேடுனதும், இது தெரிஞ்சு அவன் சிறுமலையில மருந்து குடிச்சுச் செத்துக்கெடந்ததும், அன்னைக்கிருந்து மாறுகண்ணுத்தேவர் பேச்சு நின்னுபோனதும் ஊருக்கே தெரியும். ஆனா, மாறுகண்ணுத் தேவர் கடைசியாச் சொல்லிட்டுச் செத்தது சடையத்தேவருக்கு மட்டுந்தான் தெரியும்.
"அண்ணந்தம்பி ஏழு பேர் பெறந்து, இப்ப நீயும் நானுந் தான் இருக்கமடா தம்பி. இப்ப நானும் போயிச் சேந்திருவேன் போலிருக்கு. ஒண்ணே ஒண்ணு சொல்லிட்டுச் சாவேன். செய்வியா?" "சொல்லுண்ணே..."
"நம்ம ஆச மக சொர்ணக்கிளியக் கொண்டு புட்டான்ங்க. நம்ம வம்ச வெளக்க அழிச்ச குடும்பத்துல என்னைக்காச்சும் ஒரு ஒச்சம் உண்டாக்காட்டி செத்துச் சுடுகாடு போனாலும் என் ஆவி அடங்காதுடா தம்பி, செய்வியா?"
"செய்றண்ணே!" இது நடந்து பதினஞ்சு வருசத்துக்கப்புறம் சடையத்தேவருக்கு மகனா வந்து பெறக்குறான் கட்டையன். அதுக்கு அங்கிட்டு அஞ்சு வருசம் கழிச்சுப் பெரியமூக்கிக்கு மகளா வந்து பெறக்குறா கருவாச்சி.
வஞ்சத்தையும் சாராயத் தையும் ஊத்தி ஊத்தி வளக்கிறாரு சடையத்தேவரு, கட்டையன. பொண்ணு கேக்குற மாதிரி கேட்டு, கல்யாணம் முடிக்கிற மாதிரி முடிச்சு அவளச் சீரழிச்சுச் சின்னாபின்னமாக்கி, "ஓஞ்சதடீயாத்தா ஓங் கத... தீந்ததடியாத்தா எங்க பழி"ன்னு வீட்லயே போயி விட்டுட்டு வந்துட்டான்ங்க. பஞ்சாயத்தக் கூட்டித் தீத்துக்கட்டவும் திட்டம் போட்டுட்டாங்க.
கரிச்சாம்பாறையில கருவாச்சியப் போட்டு வறுத்தெடுத்து, அவ குடுமிக்கு அடியில கையக்கோத்து இறுக்கிக்கிட்டு, சொர்ணக்கிளி கதையக் கட்டையன் சொல்லச் சொல்ல, பூரான் பாம்பு தேளெல்லாம் புகுந்து கொடஞ்சிருச்சு கருவாச்சி புத்திக்குள்ள. அந்தக் கொடச்சலும், ஒடம்புபட்ட ஒலச்சலும் எதையும் வெளிய சொல்லாம மனசுக்குள்ளயே போட்டு அமுக்கி வைக்கிற கொணமும் சேந்துதான் அவளப் பேயாடவச்சுப் பெருங்கூத்துப் பண்ணிருச்சு.
கருவாச்சி மூலியமா சொர்ணக்கிளி தன் கதையச் சொல்லச் சொல்ல, அழுது மூஞ்சி வீங்கிப்போச்சு ஆணும் பொண்ணும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 14
|
|