புதிய பதிவுகள்
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 13:55

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 13:12

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
27 Posts - 34%
prajai
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
3 Posts - 4%
Jenila
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
86 Posts - 62%
ayyasamy ram
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
7 Posts - 5%
prajai
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
6 Posts - 4%
Jenila
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
4 Posts - 3%
Baarushree
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
3 Posts - 2%
Rutu
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
1 Post - 1%
manikavi
சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_m10சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82015
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 4 Jan 2024 - 19:29

சுந்தருக்கு ஏன் இன்னும் திருமணமாகவில்லை -சிறுகதை  Stv3jKX
-

சுந்தர், வயது முப்பது. பெயருக்கு ஏற்றாற்போல வசீகரமானத்
தோற்றம். பொறியியல் முடித்து, வணிக மேலாண்மை பட்டம்
பெற்று, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில்
இருக்கிறான். கை நிறைய சம்பளம். வேலை நிமித்தமாக உள்
நாட்டிலும்,வெளிநாட்டிலும் வலம் வருபவன்.

சுந்தர் வேலையில் சேர்ந்தவுடனேயே அவனுக்குத் தகுந்த
வாழ்க்கைத் துணைவியை பெற்றோர் தேட ஆரம்பித்தனர்.
கல்லூரியில் படிக்கும்போது நன்கு படித்து வாழ்க்கையில்
முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த சுந்தருக்கு
கனவுக் கன்னி என்று எவருமில்லை. அவனுடைய அறிவிலும்,
நடத்தையிலும் கவரப்பட்டு அவனிடம் பேச வரும்
பெண்களிடமிருந்து அவன் ஒதுங்கியே இருந்தான்.

குடும்பம் செல்வச் செழிப்பில் மிதந்துகொண்டிருந்தது.
தந்தையின் பெயர் கார்த்திக். அவருடைய பெயரைச் சொன்னாலே
பலருக்கும் தெரியும். சுந்தரின் நண்பர்கள் சொல்வதுண்டு.
“சுந்தர், உனக்கென்ன குறை? பார்க்க நன்றாக இருக்கிறாய். நல்ல
வேலை. கை நிறைய சம்பளம். உன் தந்தையோ ஊரறிந்த மனிதர்.
நீ செல்வந்தரின் ஒரே மகன். உனக்குப் பெண் கொடுக்க போட்டி
போட்டுக் கொண்டு வருவார்கள்.”

திருமணத் துணை தேட உதவும் பல மையங்களில் சுந்தரின் தாயார்
அவனுடைய விவரங்களைப் பதிவு செய்து வைத்திருந்தாள். அதைத்
தவிர நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாகவும்
முயற்சி செய்துவந்தார்கள்.

“நம்முடைய மகனின் விவரங்களைப் பார்த்தவுடன் வரம் கேட்டு
நிறைய மனிதர்கள் வருவார்கள்” என்பது தாயாரின் எதிர்பார்ப்பு.
“என் பெயரும் போட்டிருக்கிறாய் அல்லவா? அதைப் பார்த்தவுடன்
நம் குடும்பத்தின் சம்பந்தம் விரும்பி ஆவலுடன் வருவார்கள்”
என்றார் கார்த்திக்.

ஆனால், பல தகவல் மையங்களில் பதிவு செய்தும் எதிர்பார்த்த
அளவு வரன்கள் வரவில்லை. காரணம் தெரியவில்லை.

ஆனால், நடப்பது என்ன? மூன்று, நான்கு வருடங்களாகப் பெண்
பார்க்க ஆரம்பித்தும், அவனுக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை.
ஜாதகப் பொருத்தம் பார்த்து, ஆணும், பெண்ணும், பொதுவெளியில்
சந்தித்து, ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முயற்சித்துப் பின்னர்
நிச்சயதார்த்தம் செய்ய நாள் குறிக்க வேண்டும்...
எல்லாம் அமைந்தால்தானே?

வந்த சிலவற்றில் ஜாதகப் பொருத்தம் இருக்கவில்லை. பெண்ணின்
புகைப்படம் பார்த்து, வேண்டாம் என்று சிலவற்றை சுந்தர் ஒதுக்க,
அவன் புகைப்படத்தைப் பார்த்து சில பெண்கள் ஒதுக்கினார்கள்.
ஜாதகம் பொருந்திய சில பெண்களுடன் சுந்தர் பேசினான்.
தன்னுடைய எண்ண ஓட்டத்திற்கும், அந்தப் பெண்களின்
சிந்தனைக்கும் ஒத்துப் போகவில்லை என்று ஒதுக்கினான்.

கடைசியில் ஒரு பெண்ணுடன் இரண்டு, மூன்று முறை பேசிய பிறகு,
கருத்தொற்றுமை இருக்கிறது என்று அவர்களுக்குத் தோன்றியது.
அந்தப் பெண் தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி, மேற்கொண்டு
செய்ய வேண்டியதை முடிவு செய்யலாம் என்றாள். கடைசியில் எனக்கு
ஏற்றத் துணையைக் கண்டு பிடித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியில்
அம்மாவிடம் நல்ல செய்தி சொன்னான் சுந்தர்.

ஆனால், இரு நாட்களுக்குள் பெண்ணின் அம்மா கைபேசியில்
கூப்பிட்டு, “பெண்ணிற்கு இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லை”
என்று கூறி விட்டாள்.

பல ஜோஸ்யர்களைச் சென்று பார்த்தார்கள். ஜாதகத்தில் தோஷம்,
பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதைச் செய்தார்கள்.
நாக தோஷம் விலக காளஹஸ்தி, குலதெயவம் கோயிலுக்குச்
சென்று வழிபடுதல், திருமணப் பரிகாரத் தலங்கள் ஆன பாடி சிவன்
கோவில் திருமணஞ்சேரியில் வழிபாடு என்று எந்தப் பரிகாரம்
சொன்னாலும் தட்டாமல் செய்தார்கள். பலன் எதுவும்
கிடைக்கவில்லை.

சுந்தரைவிட குறைவாகப் படித்த நண்பர்களுக்கு எல்லாம் மணம்
முடிந்து வாழ்க்கையில் நிலைத்து விட்டார்கள். பாவம் சுந்தர்.
அவனுக்கும் காரணம் தெரியவில்லை. கார்த்திக் தன்னுடைய
நெருங்கிய நண்பரிடம் தன் மகனின் கல்யாணம் ஏன் கை கூடி
வருவதில்லை, என்று வருத்தப்பட்டார்.

நண்பர். “என்னுடைய நண்பர் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி
வருகிறார். அவரிடம் ரகசியமாக இதைப் பற்றி விசாரிக்கச்
சொல்கிறேன், உனக்கு விருப்பமிருந்தால்” என்றார்.

கார்த்திக் விரும்பவில்லை என்றாலும், காரணம் தெரிந்துகொள்வது,
மன நிம்மதிக்கு அவசியம் என்று உணர்ந்தார். சொன்னதைப் போலவே
கார்த்திக் நண்பர், துப்பறிவாளர் மூலம் விசாரித்து விவரத்தைச்
சொல்ல வீட்டிற்கு வந்தார்.

ஓவியம்: தமிழ்
“என்னுடைய மகனின் திருமணத் தடைக்கான காரணம் தெரிந்ததா?”
என்று ஆவலுடன் கேட்டார் கார்த்திக்.

“சுருங்கச் சொன்னால், உன்னுடைய மகனின் திருமணத் தடையின்
மூல காரணம் நீதான்” என்றார் நண்பர்.

“நான் எப்படிக் காரணமாக இருக்க முடியும்” என்று ஆச்சரியப்பட்டார்
கார்த்திக்.

“உன்னுடைய தொழில் என்ன?” என்று கேட்டார் நண்பர்.

“தொலைக்காட்சிக்குத் தொடர்கள் எழுதி இயக்கியும் வருகிறேன்.”
என்றார் கார்த்திக்.

“அதுதான் காரணம். உன்னுடைய தொலைக்காட்சித் தொடர்கள்
பெரும்பாலும் குடும்பக் கதைகள். மருமகளைக் கொடுமை படுத்தும்
மாமியார். தவறு செய்கிறாள் என்று தெரிந்தும் அவளைத் தட்டிக்
கேட்கத் துணிவில்லாத மாமனார். அம்மாவைக் கண்டு பயப்படும் மகன்.
இப்படி உன்னுடைய தொடரில் உள்ளதுபோல உன்னுடைய வீட்டிலும்
நிலைமை இருக்குமோ என்று பயந்து பெண் கொடுக்கத்
தயங்குகிறார்கள்.”

திகைத்து நின்றார் சுந்தரின் தந்தை கார்த்திக்.
-
நன்றி- கல்கி





T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 18 Jan 2024 - 20:02

அருமையான கற்பனை.

பற்பல TV சேனல்களில் மாமியார் -மருமகள் -நாத்தனார் கொடுமைகள் காண்பிக்கிறார்கள் 
ஒரே கதையில் 4 /5 வில்லிகள் கொடூரமான ஐடியாக்களுடன் செயல்படுவதை  காண்பிக்கிறார்கள். 
அதிலும் போலீசை மட்டம் தட்டுவது ( அரசு எப்பிடி இதையெல்லாம் அனுமதிக்கின்றது என்று பார்த்தால் 
90 % சேனல்கள் கட்சி தலைமை உறவுகள் ( ஆளும் கட்சி /ஆளா கட்சிகள்/ 
லெட்டர் பேட்  கட்சிகள் அவர்கள்தான் நடத்துகிறார்கள்.
நாட்டின் கலாச்சார சீரழிவிற்கு TV தன் காரணம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 21 Mar 2024 - 15:16

ஒரு புதிய கோணத்தில் அமைந்த கதை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக