புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_m10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10 
30 Posts - 50%
heezulia
ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_m10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_m10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_m10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10 
72 Posts - 57%
heezulia
ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_m10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_m10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_m10ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 02, 2023 3:25 pm

ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை K5AGlox


ஹரியானாவின் மேவாத்தில் திங்களன்று நடந்த வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமின் 57 வது செக்டரில் உள்ள ஒரு மசூதிக்கு நள்ளிரவில் தீவைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

"இந்த தாக்குதலில் மசூதியின் இமாம் முகமது சாத் உயிரிழந்துவிட்டார்," என்று மசூதியின் நிர்வாகக் குழுவின் தலைவர் அஸ்லம் கான் கூறினார்.

குருகிராமின் டிசிபி(கிழக்கு) நிதீஷ் அகர்வால், இந்த தாக்குதலை உறுதிப்படுத்தினார்.

“மசூதியின் நாயப் இமாம் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

“மசூதி தாக்கப்பட்ட நேரத்தில் போலீஸ் படைகள் அங்கு ​​​​பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தன. ஆனால் தாக்குதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை போலீசார் சேகரித்துவருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று டிசிபி மேலும் கூறினார்.

முன்னதாக திங்களன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள மேவாத் பகுதியில் சமய யாத்திரையின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 20 பேர் காயமடைந்தனர் மற்றும் இரண்டு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.

நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்திற்குப்பிறகு குருகிராம் முழுவதிலும் இருந்து வகுப்புவாத வன்முறை பற்றிய வேறு எந்தச்செய்தியும் இல்லை என்று டிசிபி தெரிவித்தார்.

"என் சகோதரரின் முகத்தை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. நாங்கள் இப்போது சவக்கிடங்கில் இருக்கிறோம். கடந்த ஏழு மாதங்களாக இந்த மசூதியின் இமாமாக எனது சகோதரர் இருந்தார். அவரின் வயது வெறும் 22 மட்டுமே,” என்று இமாம் சாத்தின் சகோதரர் ஷதாப் அன்வர் பிபிசியிடம் கூறினார்.

நேற்று இரவு சுமார் 11:30 மணிக்கு சாதிடம் ஷதாப் பேசினார்.

​​”எங்களது பூர்வீகம் பீகார். இன்று என் சகோதரர் வீடு திரும்புவதாக இருந்தது. அவரிடம் டிக்கெட் இருந்தது. நான் அவரை தொலைபேசியில் அழைத்து இப்போது நிலைமை சரியில்லை என்று விளக்கினேன். நிலைமை சீராகும் வரை மசூதியை விட்டு வெளியே வரவேண்டாம் என்றேன். இதுதான் நான் அவருடன் கடைசியாகப்பேசிய வார்த்தைகள்,” என்று ஷதாப் குறிப்பிட்டார்.

’பாதுகாப்பு அளிப்பதாக காவல்துறை உறுதி'


மேவாத்தில் நடந்த வன்முறைக்குப் பிறகு, திங்கள்கிழமை மாலை ஒரு போலீஸ் குழு எங்களை அணுகி எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக நம்பிக்கை அளித்தது," என்று மசூதியை நிர்வகிக்கும் ஹரியானா அஞ்சுமன் அறக்கட்டளையின் தலைவர் முகமது அஸ்லம் கான் தெரிவித்தார்.

“உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் குழு எங்களிடம் வந்தது. மசூதியின் பாதுகாப்பை போலீஸார் செய்வார்கள் என்று எங்களிடம் கூறினர். போலீஸ் குழு மசூதியிலேயே இருக்கும் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. மசூதியின் இமாம் மற்றும் இங்கு வசிக்கும் இரண்டு ஊழியர்களைப் பற்றி நாங்கள் பேசியபோது, ​​​​கவலைப்பட ஒன்றுமில்லை என்று போலீசார் தெரிவித்தனர்,” என்கிறார் அஸ்லம் கான் .

​​மசூதி கமிட்டியிடம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக டிசிபி நிதிஷ் அகர்வாலும் தெரிவித்தார்.

”மக்ரீப் தொழுகையை முடித்துவிட்டு நாங்கள் மசூதியிலிருந்து திரும்பியிருந்தோம். போலீசாரும் உடனிருந்தனர். நள்ளிரவு 12 மணி முதல் 12.30 மணிக்கு இடையே மசூதி திடீரென தாக்கப்பட்டது. முதலில் மசூதியின் கேமராக்கள் உடைக்கப்பட்டன. பின்னர் தீ வைக்கப்பட்டது,” என்று அஸ்லம் கான் கூறினார்.

மேவாத்தில் நடந்த வன்முறை


“பீகாரை சேர்ந்த மசூதியின் இமாம் சாத், தாக்குதல் நடத்தியவர்களால் கொல்லப்பட்டார். குர்ஷித் என்ற நபர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். மேலும் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டில் ஹரியாணா அரசு குருகிராமில் 17 கோவில்கள், 2 குருத்வாராக்கள், ஒரு தேவாலயம் மற்றும் ஒரு மசூதி கட்டுவதற்கு நிலம் ஒதுக்கியது.

இந்த மசூதி அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. நியூ குருகிராமில் உள்ள ஒரே மசூதி இதுவாகும். அருகில் வசிக்கும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த இங்கு வருகிறார்கள்.

“போலீசார் எங்களை மசூதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. தாக்குதல் நடந்ததற்கான தடயங்கள் இங்கு தெளிவாகத் தெரிகிறது. மசூதி கட்டிடம் நிறைய சேதம் அடைந்துள்ளது” என்று தாக்குதலுக்குப் பிறகு மசூதியை அடைந்த ஒரு செய்தியாளர் கூறினார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் இணைந்து திங்கள்கிழமை மேவாத்தில் சமய யாத்திரை மேற்கொண்டன. இந்த யாத்திரையின் போது ​​இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் பல இடங்களில் வன்முறை வெடித்தது.

குருகிராமில் உள்ள சோஹ்னா பகுதியிலும் திங்கள்கிழமை மாலை வன்முறை ஏற்பட்டது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கடைகள் குறிவைக்கப்பட்டன.

“சோஹ்னாவில் உள்ள சாலைகளில் தற்போது போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். சாலையின் இருபுறமும் தள்ளு வண்டிகளும், முஸ்லிம்களின் கடைகளும் எரிக்கப்பட்டுள்ளன. ’தி அர்பன் க்ரோசர்’ என்ற கடையும் கொளுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து இன்னும் புகை வெளியேறுவதை பார்க்க முடிகிறது,” என்று அபினவ் கோயல் கூறுகிறார்.

“சாலையின் இருபுறமும் எரிந்துபோன வாகனங்கள் மற்றும் கடைகள் காணப்படுகின்றன. சில கடைகளில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது,” என்றார் அவர்.

"நேற்று மதியத்திற்குப் பிறகு, இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடைகளைத் தாக்கி தீவைக்கத் தொடங்கினர்." என்று பேசிய சோஹ்னாவில் வசிக்கும் ஜெம்ஷெத் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் ஜெம்ஷெத்தின் சித்தப்பா பலத்த காயம் அடைந்தார். “அவரது தலையில் பதினைந்துக்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன. சம்பவத்திற்குப் பிறகு அவர் சோஹ்னாவை விட்டு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டார்,” என்று ஜெம்ஷெத் கூறினார்.

திங்கள்கிழமை மாலை சோஹ்னாவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதில் தனக்குத் தெரிந்த பலர் காயமடைந்துள்ளதாகவும் ஜெம்ஷெத் கூறுகிறார்.

சோஹ்னாவிலிருந்து நூஹ் நோக்கிச்சென்றால் ​​சாலைகள் முற்றிலுமாக வெறிச்சோடி காணப்படுகின்றன.

“சாலைகள் முற்றிலும் வெறிச்சோடி உள்ளன, ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கு பிறகும் போலீஸ் தடுப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் சாலைகளில் காணப்படுகின்றன. நூஹ் பகுதியில் மத்திய ரிஸர்வ் போலீஸ் படையினர் காணப்படுகின்றனர்,” என்று செய்தியாளர் அபினவ் கோயல் கூறுகிறார்.

சோஹ்னாவிலிருந்து நூஹ் நோக்கிச்சென்றால் ​​சாலைகள் முற்றிலுமாக வெறிச்சோடி காணப்படுகின்றன.

எங்களுடைய ஆட்கள் தாக்கப்பட்டனர்: வி.எச்.பி


விஷ்வ ஹிந்து பரிஷத் திங்கள்கிழமையன்று மேவாத்தில் ஒரு சமய யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பேரணியின் மீது அப்பகுதியைச் சேர்ந்த ஜிகாதி விஷமிகள் திடீரென தாக்குதல் நடத்தியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.

“எங்கள் அமைப்பைச் சேர்ந்த பலர் காயமடைந்துள்ளனர். சில உயிரிழப்புகள் பற்றிய செய்திகளும் வந்துள்ளன. இருப்பினும் நாங்கள் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தரவுகளை சேகரித்து வருகிறோம்,” என்று விஷ்வ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சல் தெரிவித்தார்.

​​“நன்கு திட்டமிட்ட சதியின் ஒரு பகுதியாக எங்கள் யாத்திரை மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஏராளமான மக்கள் அங்கு சிக்கிக்கொண்டனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது நள்ளிரவு வரை தொடர்ந்தது,” என்றார் வினோத் பன்சல்.

“எங்கள் ஆட்கள் யாரும் இப்போது அங்கு சிக்கியிருக்கவில்லை. நிர்வாகமும், காவல்துறையும் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டனர்” என்று வினோத் பன்சல் குறிப்பிட்டார்.

மசூதி மீதான தாக்குதல் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த பன்சல், “எங்களுக்கு இதுபற்றித் தெரியாது. அது நடந்திருந்தால் அது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இதன் பின்னணியில் சதி உள்ளதா என நிர்வாகம் விசாரிக்க வேண்டும்,” என்றார்.

மறுபுறம் ஹரியாணாவில் நடந்த வன்முறைக்குப் பிறகு பேசிய மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், “இந்த அளவுக்கு நடந்துள்ள வன்முறை, திடீரென்று நடந்தது அல்ல. இரு சமூகத்தினரும் நூஹ் பகுதியில் நீண்ட காலமாக அன்புடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு யாரோ விஷத்தை விதைத்துள்ளனர். சிலர் திட்டமிட்டு சதி செய்துள்ளனர். நுழைவாயில் மற்றும் கூரைகளில் கற்கள், ஆயுதங்கள், தோட்டாக்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருந்ததை பார்க்கும்போது இது திடீரென்று நிகழ்ந்து அல்ல என்றே தோன்றுகிறது,” என்று கூறினார்.

பிபிசி




ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 02, 2023 6:23 pm

அரியானா கலவரத்தை கண்டித்து விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள ஆர்வலர்கள் போராட்டம்



ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை 1925650-protest

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் விஸ்வஇந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது. கலவரத்தில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் கலவரம் அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்துக்கும் பரவியது. அங்கு வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அங்கு ஒருவர் பலியானார். இதன் காரணமாக அரியானா வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

நேற்று பகலில் வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு சில இடங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கியது.

நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. என்றாலும் நேற்று இரவு சில இடங்களில் கடைகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.

குருகிராம் 70-வது செக்டார் பகுதிகளிலும் நேற்று இரவு பல கடைகள் சூறையாடப்பட்டன. கலவரம் தொடர்பாக இரு மாவட்டங்களிலும் 90 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரியானா கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தை சேர்ந்த ஆர்வலர்கள் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் எதிரொலியால், டெல்லியில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

மேலும், ஆர்வலர்களின் போராட்டத்தால் கிழக்கு டெல்லி முதல் நகரத்தின் மத்திய பகுதிகளை இணைக்கும் விகாஸ் மார்க் பகுதியில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமையை கண்காணிக்க போலீசார் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, டெல்லி போக்குவரத்து போலீசார் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, " நிர்மான் விஹார் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள ரெட் லைட் பகுதியில், இன்று காலை 8 மணி முதல், விகாஸ் மார்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. காசியாபாத் அல்லது டெல்லி-மீரட் இ-வே வழியாக வரும் பயணிகள் ஐடிஓ தேசிய நெடுஞ்சாலை-24 ஐ வழியாக செல்கின்றனர். விவேக் விஹாரிலிருந்து வருபவர்கள் ஐடிஓக்கு நாலா சாலை வழியே செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியை ஒட்டியுள்ள அரியானாவின் சில மாவட்டங்களில் நடந்த வன்முறையைக் கருத்தில் கொண்டு, டெல்லியின் அனைத்து முக்கிய இடங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேவைப்படும் இடங்களில் கூடுதல் போலீஸ் படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



ஹரியானா வன்முறை: மசூதி எரிப்பு, இமாம் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக