புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_c10வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_m10வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_c10 
21 Posts - 66%
heezulia
வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_c10வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_m10வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_c10வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_m10வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_c10 
58 Posts - 62%
heezulia
வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_c10வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_m10வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_c10வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_m10வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_c10வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_m10வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 31 May 2023 - 5:27



இதுவரை நாம் கேள்விப்பட்டிராத அதிர்ச்சி சம்பவம் – கரூரில் வருமான வரி சோதனை நடத்தச் சென்ற அலுவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி நடக்குமா? என்னதான் நடக்கிறது..?

இந்தியாவில், பொருளாதாரப் புலனாய்வு அமைப்புகள் பல உள்ளன. வருமான வரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அமலாக்கத் துறை உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும், லஞ்ச ஊழல் தடுப்புத் துறை உள்ளிட்டவை மாநில அரசின் கீழும் செயல்படுகின்றன. இவற்றில் ‘மென்மையான’ புலனாய்வு அமைப்பு என்றால் ஐயத்துக்கு இடமின்றி அது வருமான வரித் துறைதான்.

வருமான வரி சட்டம் 1961 பிரிவு 132 மற்றும் 133ஏ ஆகியன சோதனைக்கு வழி வகுக்கின்றன. வணிக நிறுவனங்களில் செய்யப்படும் ஆய்வுகள் பி-133-ன் கீழும், பரபரப்பாக பேசப்படும் ‘திடீர் சோதனை’ பி-132-ன் கீழும் நடைபெறுகின்றன.

இவை எதுவுமே திடீரென்று முடிவு செய்யப்படுவது இல்லை. தெளிவான ஆய்வுகள், ஆழமான ஆலோசனைகள், தீவிரப் பரிசீலனைகள் ஆகியவற்றின் முடிவில், செயல் திட்டம் வகுத்து, புலனாய்வு ஆணையரிடம் சமர்ப்பித்து அவரின் அனுமதி அல்லது ஆணையின் படியே சோதனைமேற்கொள்ள முடியும். பல சமயங்களில் இந்த நடைமுறைகளை எல்லாம் நிறைவேற்றிய பிறகும் கூட, உண்மைத் தன்மையை மேலும் உறுதி செய்து கொள்ள வேண்டி, சோதனைக்கான ஆணையரின் அனுமதி கிடைக்காமல் போகலாம். இவை எதுவும் வீணாய் போகாது. எப்போதேனும் எங்கிருந்தேனும் இது தொடர்பாக மேலும் சில நம்பத்தகுந்த தகவல் கிடைக்கலாம்; கசியலாம். அப்போதுசோதனை நடைமுறை மீண்டும் உயிர் பெறலாம்.

ஒருவர் ஆய்வாளராக இருந்து தகவல் சேகரித்துத் தந்த சில வழக்குகள், அவர் அலுவலராகப் பதவி உயர்வு பெற்ற பிறகு சோதனையில் முடிவதை சாதாரணமாகப் பார்க்கலாம். வேறு ஒன்றுமில்லை; மிக முக்கியமான ‘சிறு பொறி’ முன்னர் கிடைக்காமல் போய் இருக்கலாம்; இப்போது அதுவாகவே தேடி வந்து இருக்கலாம்! உலகம் முழுக்க புலனாய்வு அமைப்புகளில் நிலவும் நடைமுறைதான் இது.

வருமான வரியைப் பொறுத்த மட்டில்,புலனாய்வுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுவிட்டது. உயர் மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளில் நிரந்தரக் கணக்கு எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம் ஆகி விட்டது. எனவே எவரும் தப்புவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. வங்கிகள், பத்திரப் பதிவுத்துறை, போக்குவரத்து அலுவலகங்கள், ஜிஎஸ்டி உள்ளிட்ட துறைகள் மூலம் வருமான வரித் துறைக்கு வரும் தகவல்கள்; இத்துடன், இத்றையின் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் மற்றும் பிறர் தருகிற ரகசியத் தகவல்கள் சோதனையை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வருமான வரித் துறையின் ஆய்வு அல்லது சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத அல்லது முறையாக வருமான வரி விதிப்புக்கு உட்படாத வருமானம் ஏதும் கண்டறியப்பட்டால் அதன் மீதுவரி, வட்டி மற்றும் அபராதத் தொகையைசெலுத்தி விட்டால் வழக்கு முடிந்து போகிறது. வருமான வரித் துறை குறிப்பிடும் வருமானம், வரி, வட்டி, அபராதம் சரியில்லை என்று தோன்றினால், முறையீடு, மேல் முறையீடு என்று, சட்டப்படியான வழிகளில் சென்று சரிசெய்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன.

எத்தனை சோதனைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டோம்.. ஒன்றில்கூட முடிவுதெரியவில்லையே… என்னதான் ஆயிற்று..? இந்தக் கேள்வி எழுவது நியாயமே. ஆனால் இது குறித்த தகவல்கள் எதையும் வருமான வரித் துறை வெளியிட இயலாது. காரணம், வருமான வரி விதிப்புஎன்பது துறைக்கும் வரி செலுத்துவோருக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம். இது குறித்த விவரங்களை வெளியிட, துறைக்கு அதிகாரம் இல்லை.

முக்கியமான செய்தி: – எந்தத் தனிநபர் அல்லது நிறுவனம் செலுத்தும் வருமான வரி பற்றி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழும் கூட கேட்டுப் பெற முடியாது. பிரத்யேக நீதிமன்ற ஆணைப்படி, ஒருவரின் வருமான வரி விவரங்களை நீதிமன்றம் மூலம் மட்டுமே பெற முடியும். ஆனால் தனிநபர் அல்லது நிறுவனம் இது குறித்த தகவல்களை தாமாக முன்வந்து அறிவிக்கலாம். எந்தத் தடையும் இல்லை. அதாவது ‘சோதனைக்குப் பிறகு என்னவாயிற்று..?’ என்கிற கேள்விக்கான விடையை, சோதனைக்கு உள்ளானவரிடம் கேட்டுப் பெறலாம்!

சோதனைக்கு வரும் அரசு அலுவலர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்வதில் என்ன தவறு..? நிச்சயமாகத் தவறு இல்லை. அது ஒருவரின் உரிமையும் கூட. சோதனைக்காக ஓரிடத்தில் நுழையும் முன்பாக அலுவலர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது அவரது கடமை. ஆனால் அடையாளத்தைக் கோர வேண்டியவர் யார்..? யாரிடம் சோதனை அலுவலர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டும்..? இடையூறு எற்படுத்தி பணி செய்ய விடாமல் தடுக்க முயற்சிக்கும் கும்பல், அடையாள அட்டையை காட்டச் சொல்வது, வெளிப்படையான அச்சுறுத்தல் அன்றி வேறில்லை.

கரூரில் நடந்த அசம்பாவிதம் பற்றி சிலர்கூறும் விளக்கம் விந்தையானது. சோதனைதொடர்பாக காவல் துறைக்கு சொல்லப்படவில்லை என்கின்றனர். ஆமாம். உண்மை. காவல்துறை மட்டுமன்று; யாருக்குமே இந்தத் தகவல் சொல்லப்படுவதில்லை. வெளியாட்களை விடுங்கள்; சோதனைக்குச் செல்கிற வருமான வரி அலுவலர்களுக்குமே கூட, சோதனைப் பணி தொடங்குகிற அந்த நொடி வரை, தாம் எங்கு போகிறோம், என்ன தேடப் போகிறோம் என்கிற விவரம் தெரியாது. சோதனையை முன்னின்று நடத்துகிற மிகச் சிலர் மட்டுமே அறிந்த ரகசியம் அது. இந்த அளவுக்கு ரகசியம் பாதுகாக்கப் படுவதால்தான் மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைகள் வெற்றி பெறுகின்றன.

உரிய முறையில் காவல்துறைக்குச் சொல்லாமல் அரசு அலுவலர்கள் பணிசெய்யச் செல்வது ஆபத்தானது என்று ஒப்புக் கொள்வது போல் இந்த விளக்கம் அமைந்துள்ளதே.. கவனிக்கத் தவறிவிட்டார்களோ..?

சோதனைக்குச் செல்கிற வருமான வரி அலுவலர்களுக்குமே கூட, சோதனைப் பணி தொடங்குகிற அந்த நொடி வரை, தாம் எங்கு போகிறோம், என்ன தேடப் போகிறோம் என்கிற விவரம் தெரியாது.

இந்து தமிழ் திசை


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 31 May 2023 - 22:28

Code:
சோதனைக்குச் செல்கிற வருமான வரி அலுவலர்களுக்குமே கூட, சோதனைப் பணி தொடங்குகிற அந்த நொடி வரை, தாம் எங்கு போகிறோம், என்ன தேடப் போகிறோம் என்கிற விவரம் தெரியாது.

முற்றிலும் உண்மை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 2 Jun 2023 - 22:04

கரூரில் வருமான வரித்துறை சோதனை நிறைவு: சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு.!



கரூரில் வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றதாகவும் வருமான வரித்துறை அலுவலகர்களால் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கரூரில் கடந்த 8 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு இன்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 20 இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காவல்துறை பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக