புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போபால் சமஸ்தானம்
Page 1 of 1 •
நவாப் சுல்தான் ஜஹான் பேகம்
போபால் சமஸ்தானத்தின் வரலாற்றைச் சற்றே நோக்கினால், இங்குள்ள பெண் ஆட்சியாளர்கள் ஆண்களால் செய்ய முடியாத அனைத்தையும் சாதித்தார்கள்.
போபால் சமஸ்தானத்தின் அஸ்திவாரம் சர்தார் தோஸ்த் முகமது கான் என்பவரால் ஃபதேகர் கோட்டையில் போடப்பட்டது. ஆனால் இந்த இடத்தின் பேகம் நவாப்களால் அதற்கு முறையான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
சுமார் 107 ஆண்டுகள் நீடித்த குத்சியா பேகம் காலம் தொட்டு இந்த ஆட்சி தொடங்குகிறது. அதிகாரம் 1819 முதல் 1926 வரை பேகத்தின் கைகளில் இருந்தது.
குத்சியா பேகம் தான் முதல் பெண் நவாப் ஆவார். அவர் கௌஹர் பேகம் என்றும் அழைக்கப்படுகிறார். 1819 இல் அவரது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவர் 18 வயதில் நவாப் ஆனார்.
அவர் படிப்பறிவில்லாதவளாக இருந்தாலும் வரலாற்றாசிரியர்கள் அவரை தன் காலத்தைத் தாண்டிய ஒரு பெண் என்றே புகழ்கிறார்கள். அவர் தன் படையுடன் பல போர்களையும் சந்தித்துள்ளாள்.
அவர் கட்டிய கௌஹர் மஹால் இன்றும் பெரிய குளத்தின் கரையில் உள்ளது. அவர் போபாலின் ஜமா மசூதியையும் கட்டினாள்.
சைஃபியா கல்லூரியின் வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான அசார் கித்வாய் விளக்குகிறார், "இன்றும் மக்கள் பெண்களைத் தங்களை விட உயர்வான இடத்தில் பார்க்க விரும்பவில்லை. ஆனால் பெண்கள் ஆட்சி செய்து முழு மாநிலத்தையும் எல்லா வகையிலும் முன்னெடுத்துச் சென்ற ஒரு மாகாணமாக போபால் இருந்தது."
மேலும், "இந்தப் பெண்கள் ஆட்சி செய்தது மட்டுமின்றி, இந்துக்களையும், முஸ்லிம்களையும் ஒன்றாகப் பயணிக்கச் செய்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், முஸ்லிம்களும் அமைச்சர்களாக பதவி வகித்தனர்."
இரண்டாவதாக ஆண்ட சிக்கந்தர் ஜஹான் பேகத்திற்கும் சவால்கள் குறையவில்லை என்கிறார் அசார் கித்வாய். அப்போது அவருக்கு உதவியாக அவரது தாய் மாமா ஃபவுஜ்தார் முகமது கானும் அமைச்சராக்கப்பட்டார். ஆனால் இதன் காரணமாக நிர்வாகத்தை நடத்துவதில் அவர் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டார். கடைசியில் ஃபவுஜ்தார் முகமது கான் பதவி விலக வேண்டியதாயிற்று.
சிக்கந்தர் ஜஹான் பேகத்தின் சிறப்பு என்னவென்றால், அவர் குதிரையில் அமர்ந்து முழு சமஸ்தானத்தையும் சுற்றிப்பார்வையிடுவது வழக்கம்.
டெல்லி ஜமா மசூதியை ஆங்கிலேயர்களிடம் இருந்து முஸ்லிம்களிடம் திரும்பப் பெற்றுத் தருவதில் பெரும் பங்கு வகித்தார் அவர். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு ஜமா மஸ்ஜித் மூடப்பட்டது. முஸ்லிம்கள் மசூதியில் கூடித் தங்களுக்கு எதிராகச் சதி செய்யலாம் என்று ஆங்கிலேயர்கள் கருதினர்.
கித்வாய் விளக்குகிறார், "சிகந்தர் ஜஹான் பேகம் தனது சமஸ்தானத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அனைத்தையும் வரைபடமாக்கினார். இந்த வரைபடம் கையால் செய்யப்பட்டது, அதில் எல்லாம் எழுதப்பட்டது. சமஸ்தானத்தில் மலைகள், நீர் ஆதாரங்கள் எங்கே இருக்கின்றன என்பது தெளிவாக வரையப்பட்டது.
அந்த காலகட்டத்தில் முதல் முறையாக ஒரு நவாப் இந்த வேலையைச் செய்தார் என்று அவர் கூறுகிறார்.
சிக்கந்தர் ஜஹான், கல்விக்காகவும் நிறையப் பணிகளைச் செய்தார், மேலும் கல்வியை மேம்படுத்த வெளியில் இருந்து அறிஞர்களையும் அழைத்தார்.
மற்றொரு வரலாற்றாசிரியர் டாக்டர் ஷம்புதயாள் குரு, 'சிகந்தர் ஜஹான் பேகம் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்தினார், மேலும் அவரது திறமையின் காரணமாக, போபால் சமஸ்தானத்தின் 30 லட்சம் கடனை எளிதாகத் திருப்பிச் செலுத்தினார்,’ என்று பதிவிடுகிறார்.
அப்போது ஒப்பந்த முறையில் வசூலிக்கப்பட்ட வருவாய் வசூலை சிக்கந்தர் ஜஹான் பேகம் ஒழித்துவிட்டார்” என்கிறார் அவர்.
பெண் நவாப்களின் வரிசையில் மூன்றாவதாக ஷாஜகான் பேகத்தின் பெயர் வருகிறது. ஷாஜஹான் பேகமும் இரண்டு நவாப்களின் பணியை முன்னெடுத்துச் சென்றார், ஆனால் அவர் கட்டடங்கள் கட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.
ஆக்ராவைப் போலவே போபாலில் ஷாஜஹான் பேகத்தால் கட்டப்பட்ட தாஜ்மஹால் என்ற கட்டடமும் உள்ளது என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். இதனுடன், தாஜுல் மஸ்ஜித் கட்டும் பணியையும் அவர் தொடங்கினார், ஆனால் அதை முடிக்க முடியவில்லை.
தாஜுல் மஸ்ஜித் நாட்டின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகும். அவரது மரணத்திற்குப் பிறகுதான் அது முடிந்தது.
அதே நேரத்தில், ஷாஜஹானி மசூதி என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் முதல் மசூதியையும் அவர் கட்டினார். ஷாஜஹான் பேகம் ஒரு திறமையான நிர்வாகி என்பதைத் தவிர, ஒரு நல்ல எழுத்தாளராகவும் இருந்தார். உருது மொழியில் பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.
ஹிந்துக்களின் பாதுகாப்பிற்காகவும் பல சட்டங்களை இயற்றியதாகப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இந்துக்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக இந்து சொத்து அறக்கட்டளை ஒன்றையும் நிறுவினார்.
அவர் முஸ்லிம் பெண்களின் கல்விக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார், ஆனால் குர்ஆன் மற்றும் தீன் ஆகியவை அங்கு கற்பிக்கப்பட்டன. இந்து பெண்கள் அங்கு படிக்க முடியாததால், இந்து பெண்களுக்காக ஒரு பெண்கள் பள்ளியைத் தொடங்கினார்.
போபாலின் கடைசி பெண் நவாப் சுல்தான் ஜஹான் பேகம் ஆவார். 1901இல் அரியணையை கைப்பற்றியவர். சுல்தான் ஜஹான் பேகமும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
போபாலை நவீனமயமாக்கிய பேகம்
கல்வி பற்றிப் பேசும்போதெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் பெண்கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பது பற்றியே அவர் கூறியதாக கித்வாய் கூறுகிறார்.
அந்தக் கால கட்டத்தில், தனது சமஸ்தானத்தில் நவீன விஷயங்களைக் கொண்டுவர வலியுறுத்திய பெண்ணாக கித்வாய் இவரைக் கருதுகிறார்.
அவர் காஸ்ர்-இ-சுல்தானி அரண்மனையைக் கட்டினார், இது இப்போது போபாலில் அகமதாபாத் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. இதனுடன், அவர் மிண்டோ ஹால் என்ற ஒன்றையும் கட்டினார். பின்னர் அது நீண்ட காலமாக மத்தியப் பிரதேச சட்டமன்றமாகப் பயன்படுத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், சுல்தானியா பெண்கள் பள்ளியையும் அப்போது கட்டியெழுப்பினார், அது இன்னும் இயங்கி வருகிறது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தராகவும், அகில இந்திய கல்வி மாநாட்டின் முதல் தலைவராகவும் அவர் இருந்தார்.
போபாலின் நவாபி காலத்துக் கட்டடக்கலை குறித்துப் பல ஆய்வுகளை மேற்கொண்ட ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சர் பேராசிரியர் சவிதா ராஜே கூறுகையில், போபாலில் இந்த பேகம்கள் கட்டிய அரண்மனைகள் மற்றும் பிற பொருட்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்கிறார்.
"நாட்டில் உள்ள மற்ற அரண்மனைகளில் பெண்கள் மற்றும் ஆண்களின் தனித்தனி பகுதிகளைக் காணலாம். ஆனால் இங்கே, போபால் நகரத்தில் பெண்களே ஆண்கள் போல வேலை செய்கிறார்கள்” என்கிறார்.
இங்குள்ள அரண்மனைகளின் இந்த சிறப்பே அதை வேறுபடுத்திக் காட்டுகிறது என்று ராஜே கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் யாத்-இ-பேகமாத் நிகழ்ச்சியை நடத்தும் பர்கத்துல்லா இளைஞர் மன்றத்தின் போபால் ஒருங்கிணைப்பாளர் அனஸ் அலி கூறுகையில், “இந்தப் பெண் நவாப்கள் நகரத்திற்கு வித்தியாசமான அடையாளத்தைக் கொடுத்தனர். கடைசிப் பெண் நவாப் சுல்தான் ஜஹான் பேகம் போபாலில் கிங் ஜார்ஜ் மருத்துவமனையைக் கட்டினார், இது இப்போது ஹமிதியா மருத்துவமனை என்று அழைக்கப்படும் இது, நகரத்தின் மிக முக்கியமான மருத்துவமனையாகும்.”என்றார்.
மேலும், “இந்தப் பெண்கள் கட்டடங்கள் கட்டினார்கள், அமைதியை நிலைநாட்டினார்கள், தொழிற்சாலைகள் அமைத்தார்கள், பெண் குழந்தைகளின் கல்விக்காகப் பள்ளிகளைத் திறந்தார்கள். இப்படிப்பட்ட புகழ்பெற்ற வரலாற்றை நினைவுகூருவதும், அதைத் திரும்பத் திரும்பச் சொல்வதும் நமது கடமை" என்கிறார் அனஸ் அலி.
பிபிசி தமிழ்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
“இந்துக்களையும், முஸ்லிம்களையும் ஒன்றாகப் பயணிக்கச் செய்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், முஸ்லிம்களும் அமைச்சர்களாக பதவி வகித்தனர்."”-
இன்றைய ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும்!
இன்றைய ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Dr.S.Soundarapandian wrote: “இந்துக்களையும், முஸ்லிம்களையும் ஒன்றாகப் பயணிக்கச் செய்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், முஸ்லிம்களும் அமைச்சர்களாக பதவி வகித்தனர்."”-
இன்றைய ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும்!
மக்கள் மதங்களாலும் ஜாதிகளாலும் பிரிந்து கிடப்பதையே இன்றைய அரசியல்வாதிகள் விரும்புகின்றனர். காரணம் மக்கள் ஒன்றாக இருந்துவிட்டால் அவர்களால் பதவிக்கு வர முடியாது.
அதனால் தான் சூழ்ச்சி செய்து மதங்களையும் ஜாதியையும் பிரித்து வைத்துள்ளார்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|