புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
1 Post - 1%
Rutu
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
1 Post - 1%
Pradepa
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
231 Posts - 22%
sugumaran
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
18 Posts - 2%
prajai
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
8 Posts - 1%
Rutu
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தமிழன் வரலாறு Poll_c10தமிழன் வரலாறு Poll_m10தமிழன் வரலாறு Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் வரலாறு


   
   
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009
http://lcc_3678@yahoo.com

Postsantosh3678 Sat Jan 30, 2010 10:23 am

தமிழர் பங்கும் மொழி வளர்ச்சியும் ஹிராட்டஸின் ஆதாரங்கள் - ஒரு ஆய்வு ஹிராட்டஸின் வாழ்க்கைக் குறிப்பு ஹிராட்டஸ், உலக வரலாற்றின் ஆதி தந்தையாவார். உரைநடை என்ற ஒரு நடையை உலகிற்குக் காட்டிய முதல் மனிதன் இவரே! இவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மேதையாவார். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 484-408. ஹிராட்டஸ என்ற அம்மேதை இயற்றிய “வரலாறுகள்” என்ற வரலாற்று நூலின் வாயிலாக பாரசீகர், லிபியர் ஆகியோரின் அன்றைய, பழமைப் பழக்கவழக்கங்களையும், உண்மை நிலைமைகளையும் வெகு தெளிவாக அறிய முடிகிறது. அவருடைய படைப்புகள் அனைத்துமே அன்றைய வரலாற்றை உறுதிப்படுத்துகின்றன. திரு.வி.எஸ்.வி. இராகவன் இயற்றிய “ஹராட்டஸ்” என்ற வரலாற்று நூல் இன்னும் தெளிவுபடுத்தியது. உலகின் வரலாற்றை எழுதத் தொடங்கியவர்களில் ஹிராட்டஸே முதன்மையானவர் மட்டுமல்லாமல், கி.மு. 107 -43ல் சிசரோ - III என்னும் கிரேக்கப் பெருமகனால் “வரலாற்றின் உரைநடை என்ற ஒரு வடிவமைத்து வரலாறு படைத்தவர் இவரே! இங்கிலாந்து நாட்டு வரலாற்று மேதை சார்லஸ் டார்வினுக்குச் சமமானவர். இவர் ஹலிகார்னைஸ் என்னும் ஊரில் கி.மு. 484ல் பிறந்தார். இவர் கிரேக்க அரசால் நாடு கடத்தப்பட்ட ஒரு தளபதியாவார். இவர் கதை சொல்லுவதும் வரலாறு படைப்பதுமே முக்கியத் தொழிலாய்க் கொண்டார். கி.மு. 408ல் ஆதன்ஸ் நகரில் தனது எழுபத்தி ஆறாம் வயதில் காலமானார். வரலாற்று என்ற ஒன்று உருவாகக் காரணக்கர்த்தாவே ஹிராட்டஸ்தான். அவரே வரலாற்றுக்கு வித்திட்ட வித்தகனாவார். அவர் எழுதிய “வரலாறுகள்” என்ற நூல், வரலாற்றின் அவசியத்தையும், தேவையையும் சுட்டிக்காட்டி, வரலாறு எழுதப்பட வேண்டும் என அறிவுரைக்கிறது. வரலாற்று உலகின் முதல்படியே அவர் எழுதிய “வரலாறுகள்” என்னும் நூல்தான். இந்நூலின் வாயிலாக தமிழனின் உண்மை வரலாற்றை அறிய முடிகிறது. ஹிராட்டஸின் கூற்றின்படி தமிழரின் வரலாற்றை இனிக் காண்போம். தமிழனின் வரலாறு தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்மொழிக்கும் வரலாறு உண்டா? என்றால் உண்டு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே உண்டு என்கிறார் ஹிராடடஸ் அவர்கள். தொல் பழங்காலத்தில், குமரிக் கண்டமாகவும், பழந்தமிழ் நாடாகவும் சிறப்புற்று விளங்கிய பகுதியிலிருந்து சுமார் 4000 ஆண்டுகளக்கு முன்பே வரலாறு படைத்தவன் தமிழன் என உறுதியாக் கூறுகிறார். பழந் தமிழ்நாட்டில் தென்னை, பனை போன்ற மரமேறி வாழ்ந்த தமிழர்கள் உலிகின் பல பகுதிகளுக்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து வாழத் தொடங்கினார்கள் எனவும், அம்மரமேறித் தமிழர்களே பாமேசியர் என்றும் அப்பாமேசியர்களே பினீசியர்கள் எனப் பேரேற்று வாழ்ந்து வந்தனர் எனப் பறை சாட்டுகிறார் ஹிராடடஸ் அவர்கள், தாமியற்றிய வரலாற்று நூலில், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்மொழிக்கும் கிடைக்க முடியாத உண்மை வரலாற்றைப்படைத்துப் பெருமை கொள்ளச் செய்துள்ளார். வரலாறு காணா இருண்ட வாழ்க்கை படைத்து முதல் ஒளி ஏற்றிச் சிறப்பிக்கிறார். இந்தியாவைப் பற்றி, குறிப்பாகத் தமிழரைப் பற்றி, மேலை நாட்டவர் எழுதிய முதல் காவியம், முதல் ஓவியம், முதல் வரலாற்று நூல் ஹிராட்டஸ் எழுதிய “வரலாறுகள்” என்ற நூலே! உலக நாகரிகத்தின் முன்னோடி உலக நாடுகளில் உருவான நாகரிகங்களில் முன்னணி வகுப்பது தமிழர் நாகரிகமே! வரலாறு படைத்துக் கொண்ட மனித வர்க்கத்திற்கே ஆதியும் அந்தமுமாய் இருந்தவன் தமிழனே! இருந்த மொழி தமிழ்மொழியே! இருந்த நாகரிகம் தமிழ் நாகரிகமே என மார்தட்டிக் கூறுகிறார் ஹிராடடஸ் அவர்கள். தமிழ்மொழிச் சிறப்பு பண்டை உலக மொழிகள் அய்ந்தே, உலகில் முதன்முதலில் உருவான ஒலிமொழிகள், கிரேக்கம், எபிரேயம், தமிழ், சீனம், சமஸ்கிருதம் ஆகிய இவ்வைந்துமே! சமஸ்கிருத்த்தைத் தவிர மற்ற மொழிகள் வரிவடிவம் பெற்று எழுதப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவற்றில் தமிழும், கிரேக்கமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கலந்திருந்தன. இருவர் பண்பாடும் கலந்திருந்தன. இக்கலப்புக்கள் முற்காலத்தில் நடைபெற்ற வாணிகப் பரிமாற்றங்களின் காரணங்களால் ஏற்ட்டதே என்று கூறலாம். இக்கலப்பால், அன்றைய கிரேக்கர், தமிழர் வணிகத் தொடர்புகளையும், மொழித் தொடர்புகளையும், கலவைகளையும் இனிக்காண்க. கிரேக்கம் தமிழ் கிரேக்கம் தமிழ் ஆரம்(பொன்) ஆரம் தேபா தெப்பம் ஹேரா ஒரை நாரி நாரி(பெண்) ஆக்ஸிஸ் அச்சு நோஸ் நோய் அனிமா ஆன்மா பெர்ல் பரல் செஞ்சிம் இஞ்சி பலி(ஸ்) பள்ளி ஏனம் (பாத்திரம்) ஏனம் பாண்டஸ் பாண்டில்(வளைந்த) கேனா கனவு பில்லா பிள்ளை(பெண்) சண்டலம் சந்தனம் பெலி புலி கனல் அனல் ஹீரோ வீரா கேடா கேடு ஹீரோ (கிரேக்கதுர்க்கை) - வீரி (காளி) மற்றும் பிற மொழிக்கலவைகளும் நிறைய உண்டு. இம்மொழிகளின் கலவைகளால், நம்தமிழ் மொழியின் தொன்மையையும், பெருமைகளையும், சிறப்பையும் காணமுடிகிறது. அத்தோடு மட்டுமின்றி, நான்கு, அய்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகளாவப்பரவி, வீறு நடை போட்ட மொழி நம் தமிழ் மொழி என எண்ணி மகிழ வைக்கிறது. இப்பெரும் வரலாற்றை நமக்குத் தந்த வரலாற்று ஆதித்தந்தை ஹிராட்டஸ் அவர்களுக்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி கூறியே ஆக வேண்டும். தமிழன்தான், உண்மையிலேயே, உலகிற்கு நாகரிகங்களைக் கற்றுத் தந்த தந்தை, தமிழ்நாடுதான் உலக நாகரிகங்களை உருவாக்கித் தந்த கருவூலம். உலகிலேயே முதன்முதலாக வரலாறு படைத்த மாவீரன் தமிழனே! தமிழர் நாகரிகமே உலக நாகரிகத்தின் முன்னோடி என்று பல வராற்று மேதைகள் மெச்சுகின்றனர். வரலாறு படைத்துக் கொண்ட மனித வர்க்கத்திற்கே முதல்வன்தான் நம் தமிழன், இப் பெரும் பேரைப் பெற்றான். என அறிந்து நெஞ்சம் பூரிப்படைகின்றது. நினைத்து, நினைத்துப் பெருமிதம் அடைகிறது. ஆரியர்களின் வருகையால் உண்மைத் தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டு விட்டது. தமிழனின் உண்மையான வரலாறு நிலைக்கப்பட வேண்டுமானால், வரலாறுகள் எழுதப்பட வேண்டும். அவை உண்மை வரலாறாக இருத்தல் அவசியம். அப்பொழுதுதான், எதையும் எவரையும் எதிர்பாராமல், தமிழ் மரபுக் காத்து, தமிழ்ப் பரம்பரைக்கு விட்டுச் செல்ல முடியும். உலகெங்கும் தமிழன் உலா பண்டைத் தமிழ் நூல்களான அகநானூறு, புறநானூறு, சிறுபாணாற்றுப் படை, மதுரைக்காஞ்சி, நற்றிணை, சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலித்தொகை வாயிலாகவும், கிரேக்க நூல்களான, பிளினி, பெரிப்ளுஸ், தாலமி ஸ்டிராபோ, லெபனான், மெகஸ்தனிஸ் மற்றும் அரியன் இண்டிகா வாயிலாகவும் தமிழனின் வணிகத் தொடர்புள்ள நன்கு தெரிகின்றோம். தமிழ்நாட்டிற்கும், கிரேக்கம், ரோம், சீனா, எகிப்து போன்ற பிற உலக நாடுகளுக்கும் உள்ள நல்லுறவும், வணிக நட்பும் தொன்று தொட்டு பழங்காலம் முதல் இருந்து வந்த வரலாற்றை உணர்கிறோம். தமிழன் கடல் மார்க்கமாக கப்பல்களிலும், வாசனைப் பண்டங்கள், முத்து, பொன், மயிற்பீலி, மிளகு, சடாமாஞ்சி போன்ற பொருள்களை, அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றிச் சென்றான் என்றால், பெருமையே! பெருமை! வளரட்டும், தொடரட்டும் தமிழனின் சுற்றுலா. குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ்நாடு தென்னாப்பிரிக்காவையும், இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த நாடே பழந்தமிழ் நாடு அல்லது குமரிக்கண்டம் எனப் பேரறிஞர்கள், ஓல்டுகாம், எல்கேல், கிளேற்றர், காட்டு எலியட், தேவ நேயப்பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் எண்ணத்தையொத்தே ஹிராடடஸ் தம் கருத்தைக் கூறுகிறார். அதாவது தொலைமேற்கில் கிரேக்க நாடு, மேற்கில் எகிப்து, தொலை கிழக்கில் சீனா நாடு, இவற்றிற்கு மையத்தில் அமைந்திருந்த நாடே பழந்தமிழ் நாடு என்கிறார். அந்நாட்டில் வாழ்ந்தவன்தான் தமிழன். அவனுடைய வரலாறும், நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழியான, தமிழ்தான் உலகெங்கும் கொடிகட்டிப் பறந்தது. பரவியது. தமிழர்கள், பழந்தமிழ் நாட்டிலிருந்து கடல்வழியாகவும், தரை வழியாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர். இதனை இலமுரியா கண்டம், குமரிக்கண்டம், நாகநன்னாடு, எழுதெங்கு நாடு, எழுபனை நாடு என அழைப்பர். தமிழர்களின் உலகப் பயணம் எவ்வாறு பிற நாட்டவர் இந்தியாவில் ஊடுருவல் செய்தார்களோ, அதே போல் தமிழ் நாட்டவரும் உலகிலுள்ள பிறநாடுகளில் ஊடுருவல்களை மேற்கொண்டனர். வாணிகம் என்ற பெயரில், வியாபார நோக்கங்கொண்டு, விலை மதிக்க முடியாத பெரும் பொருட்களுடன் தன் நீண்ட பயணத்தை மேற்கொண்டனர். இவர்கள் இரு மார்க்கங்களைக் கையாண்டனர். ஒன்று தரைமார்க்கம், மற்றொன்று கடல்மார்க்கம். தமிழர்களின் முதல் கடல் வழி மற்றும் தரை வழிப்பயணம் பீனிசியர்களின் கடற்பயணம் (கி.மு.25000) தமிழர்களின் அமெரிக்கப் பிரவேசம் தரைவழிப் பயணம் (கி.மு. 25000) தரைவழி மார்க்கத்தில் தன் பயணத்தைத் தொடங்கிய தமிழன், தன் தாய்நாடாகிய தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டான். புறப்பட்ட தமிழன், தன் தாய்மொழியையும், தமிழ்0 கையாண்டு, பயணத்தில் வெற்றி பல பெற்ற, உலகெங்கும் உலாவந்து, பாரெங்கும் குடியேற்றங்களை அமைத்துக் குடியேறினான். 4000 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்க்கும், தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் வரலாறு உண்டா? இல்லையா? என்று எண்ணப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழர்கள் (பனையேறிகள்), தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு, தரைமார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் உலகின் பல பகுதிகளுக்குச் சென்று குடியேற்றங்களை அமைத்து வாழ்ந்து வரலாறு படைத்தனர். ஏழை பனைநாடு மற்றும் ஏழு தெங்குநாடு குமரிக்கண்டத்தை பழந்தமிழ்நாடு எனப் பல வரலாறுகள் செப்புகின்றன. அத்தமிழ்நாடு, ஏழு தெங்கு (தென்னை) நாடுகள் என இருபெரும் பிரிவுகளாக பிரித்திருந்தனர். இயற்கையைப் பயன்படுத்தி வாழ்ந்த காலம், சிலர் கடல் நீரில் வாழும் மீன்களையும், சிலர் மரங்களின் காய், கனி போன்றவைகளையும் உண்டு வாழ்ந்தனர். இன்னும் சிலர் விலங்குகளையும், பறவைகளையும், வேட்டையாடி இறைச்சியை உண்டு வாழ்ந்தனர். தென்னை, பனை, போன்ற நெடுமரங்களை அதிகம் கொண்டமையால் நெடும்பனை நாடு என்ற மற்றொன்றும் உண்டு. அந்த நெடும்பனை, தென்னை மரங்களில் ஏறி, அம்மரத்தைத் தன்வயமாக்கி அதிலிருந்து தேங்காய், நொங்கு, கள்(மாதுபானம்) பதநீர், பனைவெல்லம் போன்றவற்றைத் தயாரித்த தமிழனுக்குப் பெயர் மரமேறிகள். இவர்கள் வாழ்ந்த நாடு பனைநாடாகவும், அங்கு வாழ்ந்தவர்கள் பனையேறிகளாகவும் பெயர் பெற்று நிலைத்தனர். பனையேறிகளே பினீசியர்கள்! பழந்தமிழ் நாட்டிலுள்ள பல பிரிவினர்களில், ஏழு பனை நாடு, ஏழ தெங்கு (தென்னை) நாடு, நெடும் பனைநாடு, குறும்பனை நாடு போன்ற பகுதிகளில் வாழ்ந்தவர்கள் மரங்களின் உதவியுடன் கடல் பயணம் மேற்கொண்டனர், இந்தப் பனையேறிகள், பாமேசியர் என்றும், அம்பாமேசியர்களே பினீசியர்கள் எனப் பேரேற்று வாழ்ந்தனர். மரமேறிகள், பினிசியர்களாக மாறி ஒருங்கிணைந்து, உறவுப்பாலம் அமைத்து கொண்டனர். தமிழர்களின் பண்பாடும், நாகரீகமும் பினீசியர் என்ற பெயரில் பாரெங்கும் பரவத் தொடங்கின. வீரத்தமிழன் பினீசியர் என்ற மாற்றுப் பெயர் ஏற்றுச் சாதனை பல புரிகிறான். இச்செய்திகள் அஸ்ஸீரியான் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகிறது.பினீசியர்களின் நாணயமும் உதவுகிறது. பெயர்க்காரணம் இந்தியப் பெருங்கடலின் தென்கோடியிலிருந்து, தமிழ்நாடு, மலையாளக் கரையோரங்களில் தென்னை மற்றும் பனை மிக வளர்ச்சி பெற்றிருந்தது. அப்பகுதி மக்கள், தென்னை, பனைகளை வளர்த்தும், ஏறியும் வாழ்ந்தனர். இவர்கள் வாழ்ந்த பகுதி ஏழுபனை நாடு, ஏழு (தென்னை) நாடு எனப்படும். இங்கு வாழ்ந்த தமிழர்கள், அதாவது மரமேறிகள், தென்னை, பனை மரக்கட்டைகளைக் கடலில் நீந்தப் பயன்படுத்தினர். அவ்வாறே கடல் மார்க்கமாக உலகில் பல பகுதிகளைச் சென்றடைந்தனர். தாம் சென்றடைந்த புதிய நாட்டில் தென்னை பனை மரங்களைப் பயிரிட்டான் தமிழன். பனை நட்ட காரணத்தால் பனேசியர் என்று மரமேறிகள் அழைக்கப்பட்டனர். அப்பனேசியர்கள் என்ற சொல்லே, நாளடைவில் பனேசியர், பாமேசியர், பனீசியர் என்று திரிபுற்று இறுதியில் பினீசியர் என உருப்பெற்று விளங்கலாயிற்று. பினிசீய மக்கள் தமிழ்நாட்டிலிருந்து, பிற நாடுகள் சென்று குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்ட தமிழர்களே! பினீசியர்கள் கி.மு. 3000 ஆண்டு அளவிலேயே தமிழ்நாட்டிலிருந்து சென்று பிறநாடுகளில் குடியேறியவர்கள் தான் என முனைவர், S. Radhakrishna, (Our Heritage (Page-22) 44-லில்) தெளிவாக்க் கூறுகிறார். கி.மு. 3000 இல் தமிழர்களின் முதல் கடற்பயணம் 1. தமிழனின் முதற்கடற்பயணம் கி.மு. 3000இல் தொடங்கியது. அப்பயணம், தமிழ்நாட்டிலிருந்து புறப்பட்டு, செங்கடல் வழியாகச் சென்று கீதோன், தீரே ஆகிய துறைமுகங்களை அடைந்தது. (ஒரு பிரிவு) 2. கி.மு. 25000இல், பாரிகாஸாவிலிருந்து தொடங்கி கடற்கரை ஓரமாகவே சென்று செங்கடல் வழியாகத் தீரே, கீதோன் ஆகிய துறைமுகங்களை அடைந்தது. (மற்றொரு பிரிவு) பினீசியர்கள் கடற்பயணம் 1. கி.மு. 800இல், கீதோன், தீரே துறைமுகங்களிலிருந்து தொடங்கி இங்கிலாந்தைச் சுற்றி, அய்ஸ்லாந்தை அடைந்து, அங்கிருந்து வடஅமெரிக்காவின் வடசேலம் என்னும் துறைமுகத்தை அடைந்தனர். 2. கி.மு. 500இல் கீதோன், தீரே துறைமுகங்களிலிருந்து புறப்பட்டு நேர்வழியில் அமெரிக்காவிலுள்ள, வடசேலம் துறைமுகம் அடைந்தனர். 3. கி.மு. 300ல் கீதோன், தீரே துறைமுகங்களிலிருந்து புறப்பட்டு நேர்வழியில் மெகானிக்ஸ் பார்க்கை அடைந்தனர். 4. கி.மு. 150இல் கீதோன், தீரே துறைமுகங்களிலிருந்து புறப்பட்டு அமேஸான் ந்திக் கழிமுகத்தை அடைந்தனர். 5. கி.மு. 1800இல் தீரே, கீதோனிலிருந்து புறப்பட்டு, ஆப்பிரிக்காவைச் சுற்றிக் கொண்டு, செங்கடல் வரை வந்து, அங்கிருந்து நேராகத் தமிழ்நாட்டை அடைந்தனர். பினீசியர்கள் கல்வெட்டு (கி.மு.1600) பினீசியர்கள் வடஅமெரிக்க மேற்குக் கரையோரமாகச் சென்று, வடஅமெரிக்காவின் கீழைகடற் கரையிலும் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டனர். இப்பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள பினீசியர்கள் கல்வெட்டு, கி.மு. 1600அய்ச் சார்ந்தது. இது அமெரிக்காவிலுள்ள “ரோட்ஸ் தீவில்” கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டில் சிவலிங்கமும், ஓர் என்ற சொல்லையும் காணலாம். இதிலிருந்து நாம் என்ன உணருகிறோம்? அதாவது கடந்த 4000 ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவிலும், அதனருகிலுள்ளள ரோட்ஸ் தீவிலும் தமிழன் வாழ்ந்தான் என்பது தெளிவாகிறது. ஆதிதமிழன் சிவனை வழிப்பட்டான். சிவலிங்கங்களை உருவாக்கிப் பூசித்து வந்தான். ஓம் என்ற வார்த்தை, தெய்வ வழிபாட்டில் உச்சரிக்கும் தமிழ்ச் சொல், தமிழ் மொழி 4000 ஆண்டுகளுக்கு முன்றே அமெரிக்காவில் உச்சரிக்கப்பட்டது என்ற வரலாற்றை உணர்கிறோம். கல்வெட்டுகளில் செதுக்கப்படுகிறது என்றால், தமிழனின் நிலைமையும், தமிழ் மொழியின் வளர்ச்சியையும், தொன்மையும் நன்கு தெளிவாக உணர முடிகிறது. அப்பொலோ தெய்வம் அப்பல்லோ தெய்வம் அர்மிடஸ்தேவதை அப்பொலோ என்பது கிரேக்க புராணங்களில் தோன்றும் தெய்வங்களில் தலைமைத் தெய்வமாகும். எந்தக் கிரேக்க தெய்வமும் பெறாத பெரும்பேரைப் பெற்ற தெய்வம். இத்தெய்வம் இந்தியக் கடவுள்களாகிய இராமர், கிருஷ்ணர் இந்திரன், சூரியன் போன்றோர்களின் குணங்களையும், செயல்களையும் கொண்ட கடவுளாகச் சித்தரிக்கப்படுகிறது. அதாவது இந்தியத் தமிழர்களின் கலாச்சாரங்களை முழுமையாகப் புகுத்தி, தமிழர் கலாச்சாரத்தையும் பண்புகளையும் வலியுறுத்துகிறது. இதிலிருந்து கிரேக்கம், ரோம் போன்ற பகுதிகளில் தமிழர்களின் கலாச்சாரங்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்றே பரவியிருந்தது என்பதைத் தெரியலாம். பினீசியர்களின் கல்வெட்டு கி.மு. 1600 1. சிவலிங்கம் 2. “ஓம்” காணப்படுகிறது அர்டமிஸ் தேவதை அர்டமிஸ் என்பது, ரோமானியர்கள் வழிபடும் ஒரு பெண் தெய்வம். இதனை அர்டமிஸ் தேவதை அல்லது டயானா தேவதை என அழைப்பதுண்டு. அப்பொலோ, தெய்வத்தின் சகோதரி ஆவாள். அர்டமிஸ் திருவிழாவில் பெண்களே அதிகம் பங்கு பெறுவார்கள். இது தமிழ் நாட்டில் வழங்கி வரும் அல்லது நிகழ்ந்து வரும் திருப்பாவை, திருவெம்பாவை, வரலட்சுமி விரதம், நவராத்திரிக்கொழு போன்ற பாவை நோண்பாகும். இது பெண்களால் போற்றி நடத்தப்படும், பெண்களின் வழிபாடாகும். இத்தேவதை இந்தியத் தெய்வங்களாகிய இலட்சுமி, சரசுவதி, பார்வதி போன்றோர்களின் குணங்களையும், செயல்களையும் கொண்ட தேவதையாகச் சித்தரிக்கப்படுகிறது. சுருங்கக் கூறின் இந்தியத்தமிழ்ப் பெண்களின் கலாச்சாரங்கள் முழுமையாகத் திணிக்கப்பட்டு, மாற்றுரு பெற்ற தமிழ்த்தேவதையாக இயங்குகிறது. இதிலிருந்து தமிழர்களின் கலாச்சாரங்களும், பண்பாடுகளும் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பாரெங்கும் பரப்பிய தமிழ் முழக்கத்தில் பெருமிதம் கொள்கிறேன். பினீசியர்களின் நாணயங்கள்: ஆதியில் தமிழ்நாட்டுக் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த தமிழன் மீன் பிடிக்கும் தொழிலையும், மரமேறும் தொழிலையும் கையாண்டு வந்தான். அவன், கடலனில் செல்ல, பனை மற்றும் தென்னை மரங்களை ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் படகுகள் அமைத்து நீரில் மிதக்கும் கற்றிருந்தான். மரமேறிகளாகிய தமிழன் பினீசியர்கள் எனப்பேரேற்று பாரெங்கும் பரவினான். அவன் கடலைக் கடக்கப் படகுகளை (பரிசில்கள்) பயன்படுத்தினான். ஆண்டுகள் பல கடக்க, ஆற்றலும் பல பெற்றான், வளர வளர பாய்மரக்கப்பல்களைப் பயன்படுத்த முனைந்தான். மொத்தத்தில் கடல் கடந்து வழித்தடம் அதாவது கடல்மார்க்கத்தை நன்கு தெரிந்து கொண்டான். வணிகத்தைப் பிற நாடுகளுடன் பெருக்கினான். கடல்வழித் தடத்தைக் கண்டறிந்த பினீசியர் (தமிழன்) படகு பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட்டான். பினீசியர்களின் நாணயங்கள் கி.மு. 6 - ம் நூற்றாண்டு 1. குதிரை வண்டி பொறிக்கப்பட்ட நாணயம் 2. படகு சின்னம் பொறிக்கப்பட்ட நாணயம் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள பினீசியர்களின் நாணயத்தைச் சற்று உற்றுப்பாருங்கள். ஒன்றில் படகு இருப்பதையும், அதை ஒரு தமிழன் தலைப்பாகையுடன் உட்கார்ந்துகொண்டு மரத்துடுப்பால் தள்ளுவதையும் நன்கு அறிவீர்கள். அப்படகானது தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் கட்டப்படும் படகுகளையும், கட்டுமரங்களையும், ஒத்திருப்பது நன்கு புரியும். அப்படகில் சூலம் போன்ற ஒரு மீன்பிடி ஆயுதம் இருப்பதையும் காணுங்கள். ஒரு தமிழன், ஒரு படகில் தலைப்பாகையுடன் உட்கார்ந்து கொண்டு, துடுப்பால் படகைத் தள்ளிச் செல்வது, 4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் கடல்வழி உலகெங்கும் சென்று, தன் தாய்மொழித் தமிழையும், தன் கலாச்சாரப் பண்பாடுகளையும் பாரெங்கும் பரப்பி வரலாறு படைத்தான் என்ற உண்மை தெளிவாகும். மற்றொரு நாணயத்தில், தரைவழித் தடம் கண்டு உலகெங்கும் என்று பரவினான் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் ஒரு தமிழன் (பினீசியர்) சரக்கேற்றப்பட்ட குதிரை வண்டியில், தலைப்பாகையுடன் குதிரைகளை ஓட்டும் காட்சியையும், அவ்வண்டியில் பின்புறமாக பொருட்களை காவல் காத்துக் கொண்டு, ஆயுதபாணியாய் ஓர் தமிழன் நிற்பதையும் காணுங்கள். தரைவழியிலும் தமிழன் உலகாண்டான் என்ற உண்மையை இந்நாணயம் வெளிக்காட்டுகின்றது. இந்த நாணயங்களே, தமிழர், தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரைவழியாகவும், கடல் கடந்து, நாடு கடந்து உலகெங்கும் வரலாறு கண்டான் என்ற உண்மையை படம் பிடித்துக் காட்டுகிறது. மற்றும் அஸ்ஸியரின் கல்வெட்டுக்கள் தமிழனின் வரலாற்றிற்கு நற்சான்றாய் உள்ள செய்தி பல செப்புகின்றன. [You must be registered and logged in to see this image.]

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jan 30, 2010 10:52 am

நல்லதொரு வரலாறு [You must be registered and logged in to see this link.]

rajking
rajking
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 26/03/2009

Postrajking Sat Jan 30, 2010 11:42 am

1)உலக நாகரிகத்தின் முன்னோடி உலக நாடுகளில் உருவான நாகரிகங்களில் முன்னணி
வகுப்பது தமிழர் நாகரிகமே! வரலாறு படைத்துக் கொண்ட மனித வர்க்கத்திற்கே
ஆதியும் அந்தமுமாய் இருந்தவன் தமிழனே! இருந்த மொழி தமிழ்மொழியே! இருந்த
நாகரிகம் தமிழ் நாகரிகமே.

2)இந்திய நாட்டிலே நாம்(தமிழன்) அகதிகள் ..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 30, 2010 11:46 am

தமிழன் என்று கூறி தாழ்த்திக் கொள்ள வேண்டாம், தமிழர் என கூறுங்கள் சகோதரர்களே!!!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 30, 2010 11:53 am

சிவா wrote:தமிழன் என்று கூறி தாழ்த்திக் கொள்ள வேண்டாம், தமிழர் என கூறுங்கள் சகோதரர்களே!!!

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக