புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
47 Posts - 46%
heezulia
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
1 Post - 1%
Guna.D
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
1 Post - 1%
Shivanya
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
248 Posts - 49%
ayyasamy ram
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
12 Posts - 2%
prajai
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
9 Posts - 2%
Jenila
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
4 Posts - 1%
jairam
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
போர்க்களத்தில் வாத்து! Poll_c10போர்க்களத்தில் வாத்து! Poll_m10போர்க்களத்தில் வாத்து! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க்களத்தில் வாத்து!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 01, 2022 5:44 am

போர்க்களத்தில் வாத்து! 241548241_2073419122805328_7653573327809801175_n.jpg?_nc_cat=104&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=o9mjppthHgcAX_5S6HZ&_nc_ht=scontent.fmaa3-2
-
ராணுவம் நகரத்துக்குப் பக்கத்தில் முகா மிட்டிருந்தது. தளபதி
தினமும் வீரர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.
அன்று பீரங்கியை இயக்கும் வீரரிடம், “பீரங்கி சரியான இடத்தில்
நிறுத்தப்பட்டுள்ளதா? நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?” என்று
கேட்டார்.
-
“ஆம்.”
“நகரின் மையப்பகுதியை இலக்காக வைத்து பீரங்கியைத்
திருப்புங்கள்.”
“அப்படியே செய்கிறேன்.”
“பீரங்கியில் குண்டை நிரப்புங்கள். நான் கட்டளை பிறப்பித்தவுடன்
நகரத்தின்மீது குண்டு வீசுங்கள்.”
“சொன்ன படியே செய்கிறேன்” என்றார் அந்த வீரர்.
பீரங்கியை ஆராய்ச்சி செய்தவர், தளபதியை நோக்கி ஓடினார்.
-
“பீரங்கியில் குண்டை நிரப்ப முடியாது.”
“ஏன் முடியாது?” என்று கோபத்தோடு கேட்டார் தளபதி.
“பீரங்கிக் குழாய்க்குள் ஒரு வாத்து இருக்கிறது” என்று தாழ்ந்த குரலில்
சொன்னார் அந்த வீரர்.
“வாத்தா? அது என்ன செய்துவிடும்?” என்று கூச்சலிட்ட தளபதி,
“வாத்தை வெளியேற்ற எவ்வளவு நேரமாகும்?” என்றார்.
“நான் முயற்சி செய்தேன்... ஆனால், அது முட்டைகளை அடைகாக்கிறது.”
-
“ஒரு சின்ன வாத்து, ராணுவத்தின் முயற்சிகளைத் தடுக்கும் அளவு
பலம் பெற்றதா? நான் அதற்குப் பாடம் புகட்டுகிறேன்” என்றவர்,
பீரங்கியின் எல்லாப் பக்கங்களையும் சோதித்தார். கீழே குனிந்து
குழாய்க்குள் பார்த்தார். இரண்டு சிறிய கண்கள் அவரைத் திரும்பிப்
பார்த்தன.

“இதோ அந்தக் குறும்புக்கார வாத்து.”

வாத்து ‘க்வாக்... க்வாக்...’ என்று குரல் எழுப்பியது. ஆனால், இருந்த
இடத்தை விட்டு நகரவில்லை.

தளபதியின் முகம் சிவந்தது. “வெளியே வா, இல்லை என்றால் உன்னைக்
கொன்று விடுவேன்” என்று கூச்சலிட்டார்.

வாத்து அமைதியாக இருந்தது.

அருகில் இருந்த வீரர், “வாத்தை அப்படியே உள்ளே வைத்து பீரங்கியை
இயக்கலாமே?” என்றார்.

“இல்லை, அதெல்லாம் கூடாது. நாம் பீரங்கிப் பயன்பாட்டைச் சிறிது காலம்
நிறுத்தி வைப்போம்” என்றார் தளபதி.

தன்னிடமிருந்த எல்லாப் பதக்கங்களையும் அணிந்து கொண்டு மன்னரைச்
சந்தித்தார். வாத்து பிரச்சினை குறித்துத் தெரிவித்தார்.

“நாம் அடுத்த மூன்று வாரங்களுக்குப் போரைத் தள்ளி வைக்கலாம்.
அதற்குள் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவந்துவிடும்” என்றார்
மன்னர்.

நல்ல யோசனை என்று ஏற்றுக்கொண்ட தளபதி, முகாமுக்குத் திரும்பினார்.
போர் நிறுத்தச் செய்தியைக் கேட்ட வீரர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 01, 2022 5:45 am

ஒரு வாரம் கழித்து, தளபதி மற்றொரு சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தது.
மீண்டும் மன்னரைச் சந்தித்தார்.

“படைவீரர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனாலும் சம்பளம்
எதிர்பார்க்கிறார்கள்.”

மன்னர், “வேலை எதுவும் செய்யாத வீரர்களுக்கு எப்படிச் சம்பளம் தருவது?
சரி, அதோ நம் நகரைத் திரும்பிப் பாருங்கள். தெருக்கள் பொலிவிழந்து
விட்டன. அடுத்த இரண்டு வாரங்களுக்குப் படைவீரர்களுக்கான பணி தயார்.
நகரில் உள்ள கட்டிடச் சுவர்களை வண்ணம் தீட்டி அழகாக்கச் சொல்லுங்கள்”
என்றார்.

“நல்ல யோசனை” என்ற தளபதி, கிளம்பிச் சென்றார்.

இப்போது வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஆரவாரம் எழவில்லை. ஆனாலும்,
நகருக்கு வண்ணம் தீட்ட ஒப்புக் கொண்டனர்.

மறுநாள் காலை வீரர்கள் சீருடைக்குப் பதிலாகப் பழைய ஆடைகளை
அணிந்து கொண்டு, முகாமிலிருந்து வெளியேறினர்.

தளபதி பீரங்கிக்கு அருகில் சென்றார். வாத்து இன்னும் அங்கேயே இருந்தது.

அன்று முதல் முகாமில் அமைதி நிலவியது. மன்னர் அவ்வப்போது
ஜன்னலைத் திறந்து நகரத்தைப் பார்த்தார். நகரம் கொஞ்சம் கொஞ்சமாக
அழகானது.

மூன்றாவது வார முடிவில், முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளியே
வந்தன. ‘க்வாக்- க்வாக்- க்வாக்’ சத்தம் காதுகளைத் துளைத்தது.

தளபதி முழு பலத்தையும் திரட்டி ஆராய்ச்சி மணியை அடித்தார்.
உடனே, படைவீரர்கள் முகாமுக்குத் திரும்பினார்கள்.

பீரங்கிக் குழாய்க்குள் இருந்து முதல் வாத்துக் குஞ்சு வெளியே வந்தது.

தளபதி மிகவும் கவனமாக அதைத் தரையில் இறக்கி விட்டார். மொத்தம்
எட்டுக் குஞ்சுகள். தளபதியின் கால்களைச் சுற்றி விளையாடின.
கடைசியாக வெளியே வந்த அம்மா வாத்து, படைவீரர்களைப் பார்த்துச்
சத்தமாக, ‘க்வாக்... க்வாக்...’ என்று கத்தியது. பிறகு குஞ்சுகளை
அழைத்துக் கொண்டு புல் தரையில் அணிவகுத்துச் சென்றது.

“ஹேய்... வாத்துகளுக்கு வாழ்த்துச் சொல்வோம்” என்று கூச்சலிட்ட
வீரர்கள், தலையிலிருந்த தொப்பிகளைக் காற்றில் பறக்க விட்டனர்.

“இப்போது நம்மால் பீரங்கியைப் பயன்படுத்த முடியும். மறுபடியும்
போருக்குத் தயாராவோம்” என்றார் தளபதி.
வீரர்களின் ஆரவாரம் முடிவுக்கு வந்தது. அமைதியானார்கள்.

“தளபதியாரே, தயவுசெய்து இந்தப் போரை நிறுத்துங்கள். ஒன்றை
உருவாக்குவது கடினம், அழிப்பது எளிது என்பதை நகரைச் சுத்தம் செய்யும்
போது அறிந்து கொண்டோம். தேவையற்ற இந்தப் போரைத் தவிர்ப்போம்”
என்றார் ஒரு வீரர்.
“ஆம்” என்று மற்ற வீரர்களும் ஆமோதித்தார்கள்.

தளபதிக்கும் அது சரி என்று பட்டது. மன்னரிடம் சென்று தகவலைச்
சொன்னார். “எனக்கும் போர் செய்யும் மனநிலை இப்போது இல்லை.
நகரத்தைச் சுத்தம் செய்யும் பணி தொடரட்டும்” என்றார் மன்னர்.

சில நாட்களில் நகரமே அழகாகக் காட்சியளித்தது. போருக்குச் செலவு
செய்ய இருந்த பணத்தைக் கொண்டு, ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்தார்
மன்னர். அந்த விழாவில் ராணுவ அணிவகுப்புக்குப் பின்னால், அம்மா
வாத்தும் அதன் எட்டுக் குஞ்சுகளும் அணிவகுத்துச் சென்ற காட்சி
எல்லோரையும் கவர்ந்தது.
கதை: ஜாய் கோவ்லி
-------------------------------
தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ
நன்றி : தமிழ் ஹிந்து
முகநூல் - லட்சம் கதைகள்
போர்க்களத்தில் வாத்து! End_ba10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக