புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
53 Posts - 47%
heezulia
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
3 Posts - 3%
jairam
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
2 Posts - 2%
சிவா
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
15 Posts - 4%
prajai
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
6 Posts - 2%
jairam
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10கழுகு - பறவைகளின் அரசன் Poll_m10கழுகு - பறவைகளின் அரசன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுகு - பறவைகளின் அரசன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 13, 2021 12:43 pm

கழுகு - பறவைகளின் அரசன் Y2GkyAf
கழுகு என்பது அக்சிபிட்ரிடே என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். பறவைகளின் அரசன் என்ற சிறப்பு பெறுகிறது கழுகு. அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

உலகம் முழுவதும் கழுகுகள் பரவலாகக் காணப்படுகின்றன. பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. கழுகுகளில் மொத்தம் 74 இனங்கள் உள்ளன. ஆனாலும், அவற்றுள் 60 இனங்கள் யூரேஷியா, ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன. பொதுவாக கழுகுகள் நான்கு வகையாக பிரிக்க படுகின்றன. அவை, 1. கடல் கழுகுகள் 2. கால் வரை ரோமம் உள்ள கழுகுகள் 3. பாம்பு உண்ணும் கழுகுகள் 4. ராட்சச காட்டு கழுகுகள்.

கழுகு இனத்தை சேர்ந்த பறவைகள் தமிழில் எழால், கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, கருடன், கிருஷண் பருந்து, செம்பருந்து, பூகம் வல்லூறு என அழைக்கப்படுகின்றன.

பறவை இனத்திலேயே கழுகு மட்டும்தான் 70 ஆண்டு ஆயுட்காலம் வாழக்கூடியது. பறவை இனத்தில் அதிக உயரம் பறக்க கூடியவை. பெண் கழுகு, ஆண் கழுகை விட சற்றுப் பெரிதாக இருக்கும். பெண் கழுகு, ஆண் கழுகின் மீது பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும்.

பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளும் முன், அந்த ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு காத்து கொண்டிருக்கும். நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழும்முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்க்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணி நேர பரீட்சை நடைபெறும். பெண் கழுகு, ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும், அது உறவு கொள்ள இடமளிக்கும்.

கழுகு மிக உயரமான முட்களை உடைய மரக்கிளைகளில் அல்லது மலைச்சரிவுகளில், பாறை பிளவுகளில், மற்ற உயிரினங்கள் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் கூடு கட்டும். இடம் தேர்வானதும் ஆண் கழுகு முள், குச்சி, புல், வேர்கள், சிறு கற்கல் மற்றும் வைக்கோல் வைத்து லாவகமாக கூடுகட்டும். பின் பெண் கழுகு முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும். ஒருமுறை இரண்டு முட்டைகள் இடுகின்றன. முதலில் பொரித்து வெளிவரும் அல்லது பெரிய குஞ்சு தன் இளவலைக் கொத்திக் கொன்றுவிடும். இவ்வாறாக ஆதிக்கம் செலுத்தும் குஞ்சானது பொதுவாகப் பெண்ணாக இருக்கும். ஏனெனில், பெண் குஞ்சு, ஆண் குஞ்சை விட பெரியது. இந்த படுகொலையைத் தடுக்க அவற்றின் பெற்றோர் கழுகுகள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. எதிரிகளைத் தாக்கவும், தன்னுடைய முட்டைகளைப் பாதுகாக்கவும் ஆபத்து நேரங்களில் உடலில் இருக்கிற கந்தக அமிலத்தைக் கழுகுகள் உமிழ்கின்றன. கந்தக அமிலம் எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும் கருகிவிடும்.

கழுகு குஞ்சுகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கூட்டில் வைக்கப்பட்டு, தாய் பறவை உணவு ஊட்டும். பிறகு மென்மையான கூட்டினை நீக்கி விட்டு முட்கள் குச்சுகளை குத்துவது போல வைக்கும். இதனால் கூட்டின் ஓரத்திற்கு வரும் குஞ்சுகளை, கீழே தள்ளிவிடும். குஞ்சுகள் நிலைதடுமாறி விழப்போகும்போது, இறக்கைகளை விரித்து பறக்கமுயலும். ஆனால் பறக்க முடியாது. குஞ்சுகள் கீழே விழுந்து அடிபடாமல் ஆண் கழுகு பறந்து சென்று, தன் முதுகில் தாங்கி, மீண்டும் கூட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும். இது போல் தொடர்ந்து பயிற்சியளிக்கப்பட்டு குஞ்சுகளை பறக்க வைத்து இரைத்தேடும்.

எலி, கோழி, மீன்கள், முயல், பாம்பு போன்றவற்றை விரும்பி உண்ணும் மாமிச உண்ணி கழுகு ஆகும். இறந்தவற்றை உண்ணாது. கழுகு புதிதான இரையினையே உண்ணும். இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், தரையில் ஓடும் ஒரு முயலைக் கண்டு வேட்டையாட முடியும்.

கழுகு தன் 40 வயதை அடையும்போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும். இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகள்.

இந்தக் காலத்தில், கழுகு உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை, தான் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின், புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.

கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களுக்கு மேலாக எளிதில் பறக்க முடிகிறது. கழுகுகள் மணிக்கு 32 கிலோமீட்டர் வேகம் பறக்கும் திறன் உடையவை. கழுகுகளின் இறக்கைகள் ஒரு ஆகாய விமானத்தின் இறக்கைகளை விட வலிமை வாய்ந்தது. குதிரைகள் நின்றுகொண்டுதூங்குவதுபோல, கழுகுகள் மரக்கிளையில் உட்கார்நது கொண்டே தூங்கும் திறன் கொண்டவை. கழுகுகள் மிகவும் புத்திசாலித்தனம் கொண்டவை. ஆமை, நத்தை போன்றவற்றை உண்ணும் போது அவற்றின் ஓடுகள் உடையும் வண்ணம், அவைகளை மலை உச்சியில் இருந்து பாறை மேல் வீசி எறிந்து, பின் உண்ணும். உலகின் மிகப்பெரிய கழுகான பிலிப்பைன்ஸ் நாட்டு கழுகுகளின் இறக்கை எட்டு அடி நீளம் உள்ளவை. அவை ஒரு ஆட்டையோ அல்லது ஒரு மானையோ தூக்கி செல்லும் திறன் உடையவை.

உலகில் கழுகு இனம் வெகுவேகமாக அழிந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசடைதலை தடுப்பதில் கழுகுகளுக்கு முக்கியமான இடமுண்டு. உலகில் இந்தியா உள்பட சில நாடுகளில் கழுகுகளைத் தெய்வமாகக் கருதி வழிபடுகின்றனர். காடுகளை அழித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, பயிர்ச்செய்கையை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக விவசாயிகள் நச்சுப் பொருட்களை உபயோகிக்கின்றனர். இவற்றை உண்ணும் கழுகுகள் நச்சுத் தாக்கத்துக்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது. இன்னொரு காரணம் மின்சாரக் கம்பிகள் அதிகரிப்பதாகும். அனேகமான கழுகுகள் மின் கம்பியில் மோதி அதன் தாக்கத்துக்குள்ளாகி இறக்கின்றன. இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்ததை அடுத்து அபாயத்தை எதிர்நோக்கும் உயிரினங்கள் பட்டியலில் கழுகும் சேர்க்கப்பட்டதோடு அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகளை சங்கத் தமிழ் நூல்கள் பாறு என்று குறிப்பிடுகின்றன. சென்னைக்கு அருகில் உள்ள திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு ஒரு ஜோடி பாறுக் கழுகுகள் 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, தினசரி வந்து இரை எடுத்துச் சென்றிருக்கின்றன. ஆனால், இப்போது வருவதில்லை. இந்த பாறு தற்போது நீலகிரியையும், அதைச்சுற்றிய பகுதிகளிலுமே எஞ்சியுள்ளது. இப்பறவைகளின் அழிவுக்கு அடிப்படைக் காரணம் டைக்ளோஃபினாக் எனப்படும் வலிநிவாரணி (மூட்டுவலி, தசைவலிகளுக்கு வெளியில் தடவும் மருந்தாக இப்போதும் இதை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்) எனக்கூறுகின்றனர். இந்த மருந்து கால்நடைகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

இந்து கடவுள்களில் பகவான் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறது. அத்துடன் முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது, கழுகு வானில் பறப்பதை கண்டால், நல்ல சகுனம் ஆகும். காரிய சித்தி உண்டாகும் என்று நம்பப்படுகிறது. கோவிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோவிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம்.

முனைவர் வே. ஞானப்பிரகாசம்,
முன்னாள் துணைவேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.




கழுகு - பறவைகளின் அரசன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 13, 2021 1:11 pm

கழுகு - பறவைகளின் அரசன் 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக