புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_m10ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 25, 2020 2:34 pm

பாடகர் எஸ்பிபி பாடி வெளியான கடைசிப் பாடல் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இளையராஜா இசையில் பாடலை எழுதியவர் கவிஞர் பழநிபாரதி. எஸ்பிபி தீவிர சிகிச்சையில் இருந்த நாட்களில் இந்தப் பாடலின் வரிகளைக் கேட்பது மிகவும் உருக்கமாக இருந்தது.

ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் 1601021633797
பாடல்பதிவின்போது எடுத்த படம்

நீதான் என் கனவு - மகனே
வா வா கண் திறந்து
தேயும் வான்பிறைதான் - மகனே
நாளை முழு நிலவு
மெதுவாய்... திடமாய்...
எழுவாய் என் மகனே

நீதான் என் கனவு - மகனே
வா வா கண் திறந்து
மழையாய்.. கருணை
பொழிவான் இங்கு அவனே

- நீதான் என் கனவு...

சரணம்

ஏறாது ஏழை சொல்
என்றும் பொதுவில்
இதுதான் நாம் கண்ட
உண்மை உலகில்

வலிகளை அறியாத
வாழ்க்கையில் சுவையில்லை
நீ வந்து விளையாடு - என்றும்
தோல்விகள் இனி இல்லை

தெய்வம் கைவிடுமா
எதும் இல்லாதான் வாழ்விலே

- நீதான் என் கனவு...

சரணம் 2

தீராத சோகங்கள்
தீரும் சில நாளில்
தீகூட ஒளி சேர்க்கும்
தேடும் விழியில்

கனவும் மெய்யாகும் - அது
கற்பனை கிடையாது
அழைத்திடும் திசையெங்கும் - இனி
நீ வந்து விளையாடு

காலம் வரும்போது
உனை நாடெல்லாம் போற்றுமே

- நீ தான் என் கனவு...

( நன்றி-புதியதலைமுறை)



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2020 4:56 pm

'கண்ணீரில் திரையுலகம்' - எஸ்.பி.பி. மறைவுக்கு சினிமா
பிரபலங்கள் இரங்கல்

-
சுமார் 50 ஆண்டுகளாக திரையுலகில் பல மொழிகளில்
40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய 'பாடும் நிலா'
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை
காலமானார். அவருக்கு வயது 74.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவினால்
திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

எஸ்.பி.பி. மறைவுக்கு திரையுலகினரின் இரங்கல் செய்தி:


ரஜினிகாந்த்:
இன்றைக்கு மிகவும் சோகமான நாள். கடைசி வரை உயிருக்குப் போராடி அவர் நம்மை விட்டு பிரிந்துள்ளார். அவரது மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எஸ்.பி.பி பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலே இல்லை. குரலைத் தாண்டி அவரை மக்கள் நேசிக்கக் காரணம் அவரது மனிதநேயம். பல மொழிகளில் பாடிய சிறப்பு அவருக்கே உரித்தானது. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். எனினும், அவர் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2020 4:57 pm

கமல் ஹாசன்:
வெகுசில கலைஞர்களுக்கே அவர் வாழும் காலத்தில் புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்.பி.பி. அவர்கள். நாடு தழுவிய புகழ் மழையில் அவரை வழியனுப்பி வைத்த அவருடைய அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களில் ஒருவனான என் வணக்கங்கள்.

அவர் நனைந்த மழையில் என்னையும் நனைய அனுமதித்த அண்ணனுக்கு நன்றி. அவர் குரலின் நிழல் பதிப்பாகப் பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. பல மொழிகளில் நாலு தலைமுறை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர். ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் பாடும்.

கவிஞர் வைரமுத்து:


ஆயிரம் காதல் கவிதைகள்
பாடிய உனக்குக்
கண்ணீர்க் கவிதை வடிக்க
வைத்துவிட்டதே காலம்;
இசையை இழந்த மொழியாய்
அழுகிறேன்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2020 4:58 pm

நடிகர் சிவக்குமார்:

அரை நூற்றாண்டுக்கும் மேலாக
எத்தனை ஆயிரம் பாடல்களை
எத்தனை மொழிகளில் பாடிய
உன்னதக்கலைஞன் !
மூச்சுக்காற்று முழுவதையும்
பாடல் ஓசையாக மாற்றியவன் !
இமயத்தின் உச்சம் தொட்டும்
பணிவின் வடிவமாக
பண்பின் சிகரமாக
இறுதி உரையிலும்
வெளிப்படுத்தியவன்…
இதுவரை மக்களுக்கு
பாடியது போதும்
இனி என்னிடம் பாட வா
என்று இறைவன்
அழைத்துக் கொண்டான்!
போய் வா தம்பி!
-
டி.ராஜேந்தர்:
தமிழகத்திற்கு மட்டுமல்ல; இந்திய திரையுலகத்திற்கே பேரிழப்பு. பாலுவின் குரல் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அவரது மறைவு வேதனையாக இருக்கிறது. பாலில் தேன் கலந்தது போல மண்ணுலகம் இருக்கும்வரை அவரது காந்தக்குரல் இருக்கும். தாங்கமுடியாத இழப்பு.

நடிகர் விவேக்:

பெரும் இழப்பு இசை உலகத்திற்கு பரந்து விரிந்த இந்த உலகமெல்லாம் பறந்து பறந்து 40,000 பாடல்களுக்கு மேல் பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது. சிலர் வாழ்வு சாதனை; சிலர் வாழ்வு சரித்திரம்; ஆனால் சிலர் வாழ்வோ சகாப்தம்! அப்படி ஒரு சகாப்தம் SPB. இன்னொரு SPB இனி என்றோ? எனப் பதிவிட்டுள்ளார்.

பாடகி ஷ்ரேயா கௌஷல்:

புகழ்பெற்ற எஸ்.பி.பி. காலமானசெய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் மீண்டு வருவார் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2020 5:00 pm

ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Eiv6uLoUcAAFeHh?format=jpg&name=small
-
நடிகர் தனுஷ்:

எஸ்.பி.பி. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடும்ப உறுப்பினர், அனைவரின் வீட்டிலும் எப்போதும் எதிரொலிக்கும் குரல். நீங்களும், உங்கள் குரலும் தொடர்ந்து பல தலைமுறைகளுடன் இருக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது இரங்கல்.
-
நடிகர் பார்த்திபன்:

பேச முடியவில்லை !
அழுகை என் குரலை அடைக்கிறது.
உலகைக் கவர்ந்தக் குரலையே இழந்துவிட்டு! ஊடகங்களிலிருந்து என் சோகத்தைப் பதிய
இடைவிடாத அழைப்பு. எப்படி பேச? என்ன பேச?
மீண்டும் வேண்டுகிறேன்-
அவர் குடும்பத்தாருக்கு(நமக்கும்)
சமாதானமடைய சக்தி கிடைக்க!

இயக்குனர் ஷங்கர்:

மிகச் சில பாடகர்கள் மட்டுமே தரம் மிகுந்த பாடகர்களாக இருக்கிறார்கள். ரசிகர்களை அடைவதற்கு முன்பே ஒரு பாடல் வெற்றி பெறுகிறது என்றால் அதில் எஸ்.பி.பி ஐயா முதலிடம். நாங்கள் அவரை இழந்தோம், அவருடைய குரலை அல்ல. எப்போதும் காற்றுடன் அவரது குரல் கலந்திருக்கும்.

எஸ்.பி.பியின் மறைவு இசை ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றம், வலி. எத்தனையோ பாடல்கள், எத்தனையோ இரவுகளுக்கு அவர் துணையாக இருந்திருக்கிறார். அவருடன் பணியாற்றியதில் நான் பெருமைகொள்கிறேன். அவரை என்றும் நினைவு கூர்கிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2020 5:01 pm

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்
-
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் Eiv6e9UU4AAuiDU

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 25, 2020 5:04 pm

ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் EiwUqAkU4AIUrFj
இன்று மாலை 4 மணியளவில் எஸ்.பி.பி-யின் உடல்
நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என மருத்துவமனை
சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி
செலுத்தலாம் என கூறப்பட்டிருந்தது.

அதன்படி, நுங்கம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள்
திரளானோர் அவருக்கு அஞ்சலி செலுத்த கூடியுள்ளனர்.

தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 25, 2020 5:41 pm

பாடும் நிலா மறைந்ததும் 
ஓடும் மேகங்கள் சிறிதே நின்று 
கண்ணீர் அஞ்சலி என தெளித்தது
நன்னீர் மழைத்துளிகளை   

ரமணியன் 

(மாம்பலத்தில் தூறல்)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 26, 2020 4:26 am

எஸ்பிபி மறைவு குறித்து அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
-
ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல் 583486

”எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவைப் பற்றிக் கேள்விப்பட்டு
ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்த ஊரடங்கு சமயத்தில்
இணையம் வழியாக நடந்த இசை நிகழ்ச்சிக்காக அவருடன்
நான் சில மாதங்களுக்கு முன்பு உரையாடியிருந்தேன்.

அவர் அன்று மிகவும் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாகக்
காணப்பட்டார். வாழ்க்கை உண்மையில் கணிக்க முடியாத
ஒன்று. அவரது குடும்பத்துக்கு எனது ஆறுதல்கள்,
இரங்கல்கள்".

இவ்வாறு அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
-
இந்து தமிழ் திசை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக