புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
3 Posts - 2%
jairam
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
1 Post - 1%
சிவா
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
16 Posts - 4%
prajai
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
7 Posts - 2%
Jenila
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
4 Posts - 1%
jairam
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
3 Posts - 1%
Rutu
வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_m10வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 30, 2020 6:14 am

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் Tamil_News_large_2468066

வண்ணக் கோலங்கள் நம் வீட்டு வாசலை அலங்கரிக்க அன்றாடம் பூத்துக் குலுங்கும் தரைப் பூக்கள். அசையாத வண்ணத்துப் பூச்சிகள். கோலம் காண நம் வாசலுக்கே விரைந்து வரும் முதல் ரசிகன் சூரியனே. அதிகாலைப் பொழுதில் கண்களுக்கு விருந்தாகவும் மனதிற்கு மருந்தாகவும் வாசலில் வீசும் தெய்வீக மணம்.

சிந்தையும் செயலும் சங்கமிக்கும் யோகம்.மன அழுத்தம் நீங்க, நிதானம் பழக, முன்னோர்கள் நமக்களித்த மந்திரம். ஒருநொடியில் நம் வீட்டினை கோவிலாக மாற்றிடும் வினோதக் கலை. கால் பதித்து நடக்கும் நிலத்திற்கு நாம் செலுத்தும் மரியாதை. சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திரு என சத்தமில்லாமல் சொல்லுமொரு சுகராகம் கோலம். மன விகாரங்களை நீங்கி மாதரை பணிவுடன் கைகூப்பி வணங்கச் செய்யும் அழகிய கவிதை.ஒரு நாளை மங்களகரமாகத் துவக்க வேண்டுமென இறைவன் நமக்கு கற்றுக் கொடுத்த முதல் பாடம். பாரதத்தின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் மவுன மொழி.அன்றாட வீட்டுச் சூழலை, உள்ளே ஊஞ்சலாடும் உணர்ச்சிகளை படம் பிடித்துக் காட்டும் அழகான வரைபடம். உலக வரைபடத்தில் காணமுடியாத அதிசயங்களை நம்முன் காட்டும் கண்ணாடி. அடுக்குமாடி கட்டடங்களாலும் அவசர வாழ்க்கையினாலும் நாம் தொலைத்து நிற்கும் அற்புத பொக்கிஷம்.


பாடங்கள் பல



ஏன் கோலங்கள் குறித்து இத்தனை சிந்தனைகள்? காரணம் அவை நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் பல. வாழ்க்கையை நாம் வாழ வேண்டிய முறையை நமக்கு உரைத்து மட்டுமல்ல உணர்த்திச் சொல்லும் வழிகாட்டி. கோலத்தை வேறொரு கோணத்திலிருந்து காண வேண்டும். ஒரு கை அசைவில் ஓசையின்றி விரைந்து பல புள்ளிகள் நடுவே புகுந்து புனிதம் கெடாது மீளும் வீர விளையாட்டே கோலம்.காண்பதற்கு பல நெளிவுகள், சுழிவுகள், சிக்கல்கள் தென்பட்டாலும் முதலும் முடிவும் மிக நேர்த்தியாக ஒன்று சேரும் விசித்திர வித்தை. கோலங்கள் என்றும் அழிவதில்லை. கோலம் ஈசனின் தெய்வீகக் கோலம்.


விதிமுறைகள்



வாழ்க்கையென்பதும் ஒரு அழகிய வண்ணக்கோலம்தான். வீர விளையாட்டுதான். அவ் விளையாட்டினை நாம் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கின்றோம். விதிமுறைகளின்றி விளையாட இயலாது. விதிமுறைகள் வெறும் சுவாரஸ்யத்திற்காக மட்டுமல்ல. அவை நம்மையும் நம் ஆற்றல்களையும் ஒழுங்குபடுத்தும் அதிசய மந்திரக் கோல். விதிமுறைகளில்லாத விளையாட்டு வெற்றுக் கூச்சலாகவும் பெருங் குழப்பமாகவும் முடியும்.வாழ்வில் சில விதிமுறைகளை நாம் பின்பற்றியே ஆகவேண்டும்; யாரும் விதிவிலக்கல்ல. ஏனெனில் இயற்கையின் நியதிகள் எல்லோருக்கும் பொதுவானது. எவருக்கும் அடிபணியாது. தன் பணியை இடையிடின்றி ஆற்றிக் கொண்டே இருக்கின்றது. இயற்கையின் இயக்கங்களை கூர்ந்து கவனித்தால் விதிமுறைகளை மீறாத ஒழுக்கமொன்றைக் காணலாம்.அவ்வியற்கை மனிதனுக்குள்ளும்,வெளியிலும் இயங்குகின்றது. அதை மதியாத போது அதன் எல்லைகளை மீறும் பொழுது அதன் விளைவுகளை சந்திக்கிறோம். தனிமனிதர்களுடைய பேராசைக்காக இயற்கை வளங்களை சூறையாடுகின்றோம். மாசு படுத்துகிறோம். அதன் மதிப்புணராது நகர்ந்து போகின்றோம். இயற்கையினுடைய பொறுமைக்கும் எல்லைகள் உண்டு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 30, 2020 6:14 am

ஐம்பெரும் சக்திகள்



இயற்கையை ஆகாயம், வாயு, அக்னி, நீர், நிலம் என ஐவகை சக்திகளாகப் பிரித்து தெய்வப் பெயர்களிட்டு வணங்குகிறோம். இந்த ஐந்தும் ஐம்பெரும் சக்திகளாகும். இவ்வுலகானது ஐம்பூதங்களையும் சார்ந்தே உள்ளது. இந்த இயற்கையை மதித்து போற்றி வழிபட்டால் அவை கைமாறாக அனைத்து வளங்களையும் கொடுக்கும். அவற்றை பகிர்ந்து வாழவேண்டும் என்கிறது பகவத்கீதை. வாழ்க்கையை வண்ணக் கோலமாக்கி வாழ இறைவன் நமக்கு வழங்கிய மூலப் பொருளே இயற்கை. அதை சிதைத்தால் வாழ்க்கை அலங்கோலமாகும். இச் சக்திகளைக் கொண்டே வாழ்க்கை என்னும் வண்ணக் கோலமிட வேண்டும். சரியாகக் கோலமிட்டால் முன்பு கோலம் குறித்துக் கூறியது தெளிவாய் புரியும். அத்தனை அனுபவங்களும் வண்ணக் கோலமாய் மின்னும். வாழ்க்கையெனும் விளையாட்டின் முதலும் முடிவுமாக உள்ள ஒரே விதிமுறை இயற்கையை அறிந்து அனுசரித்து அரவணைத்து வாழ்வதே. மற்ற விதிகளைத்தும் இதன் விரிவாக்கமே...


சாதனங்கள்



வெற்றி பெற வெறும் எண்ணங்களும் கனவுகளும் மட்டும் போதாது. செயல்படுத்துவதற்கு மாபெரும் ஆற்றல் தேவை. அவ்வாற்றல் நம்முள் இருப்பதை நாம் இனம் காண வேண்டும். இயற்கையின் ஆற்றல்கள் நம்மில் எவ்வாறு இயங்குகிறது; அதன் பயன் என்ன, அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் யாது என்பது குறித்து பள்ளிப் பாடங்களில் நாம் பயின்றதில்லை.வெற்றி பெறுவதற்கான பெரும் சாதனங்கள் யாது? முதலாவதாக ஐம்புலன்களுடன் கூடிய நம் உடல் (கண் செவி நாசி நாக்குமூவித ஆற்றல்களையும் ஒருங்கிணைத்து வெல்பவனே மாமனிதன்).உடலாய், மனதாய், மதியாய், இயங்குவது ஆகாயம் முதலிய ஐம்பெரும் சக்திகளே. புறத்தே நாம் காணும் பொருளனைத்தும் கூட ஐம் பூதங்களே. வெற்றி வேண்டுமெனில் முதலில் ஐம்புலன்களை ஆள வேண்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 30, 2020 6:15 am

புலனடக்கம்



புலனடக்கத்தையே பிரம்மச்சரியம் என்பர். பிரம்மசரியம் என்பது பார்க்காது, கேட்காது அல்லது இல்லற வாழ்கையை வாழாமல் இருப்பதல்ல. எல்லா செயல்பாடுகளிலும் ஓர் எல்லை மீறாத கட்டுக் கோப்பான வாழ்க்கையே பிரம்மசரியம். பண்டைய குருகுலங்களில் இதற்கென பயிற்சிகள் இருந்தன.நம் ஆற்றல்களை பயனில்லாத விஷயங்களில், எண்ணங்களில், விரயம் செய்யாதிருக்கப் பழகுதல் தவம். ஐம்புலன்கள் தன் வசமிருந்தால் உலகம் நம் காலடியிலிருக்கும். 'ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் வேண்டும்' என்பார் வள்ளுவர்.ஐந்து புலன்களும் கட்டுக்கடங்காத ஐம்பெரும் சக்திகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. அச் சக்திகளை கவனமாக கையாள வேண்டும். அவை ஆக்கத்தின் உச்சியில் மட்டுமல்ல அழிவின் விளிம்பிலும் கொண்டு செல்லும்.“மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய” விலங்கு போலாகும் மனம் என்கிறது திருவாசகம்.இன்றைய சூழலில் வயது வரம்பு பேதமின்றி அனைவரின் கவனத்தையும் புலன்களையும் சீரழிக்க பல சக்திகள் நம்மெதிர் நிற்கின்றன.


போர்க்களம்


புறச்சூழல் போர்க்களமாய் உள்ளது. ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி. மறுபுறம் ஐம்புலங்களை எல்லாத் திசைகளிலும் ஈர்த்து அரை நொடியில் அடிமையாக்கி ஆர்ப்பரிக்க காத்திருக்கும் புறப்பொருட்கள். ஆகவே நமக்கென சில விதிமுறைகளை விதித்துக் கொள்ள வேண்டும். நல்ல பழக்கங்கள் பழகுவது கடினம். விடுவது சுலபம். தீய பழக்கங்கள் பழகுவது சுலபம். விடுவது கடினம். கோலமிடும் இடத்தை முதலில் சுத்தம் செய்வது போல் நம் இருப்பிடம், நட்பு வட்டம், ஈடுபடும் விஷயங்கள் இவற்றை மிக கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். உயர் விஷயங்களில் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு வர வேண்டும். ஐம்புலனாற்றல்களை வீண் செய்யாது ஒன்று திரட்டி சேமித்தால் அவ்வாற்றல் வலிமை, உற்சாகம், ஊக்கம், பகுத்தறியும் தன்மை என பல தளங்களில் விரியும். நம்மைப் புதியதோர் மனிதராக்கி புத்துணர்வு கொடுக்கும்.

அடங்கிய புலனே அழியாத அரிய செல்வம்.
புலன்கள் வசப்பட்டால் மனம் ஒருமுகப்படும்
அறிவு தெளிவுறும். தெளிந்த அறிவால் வாழ்வு
வண்ணக் கோலமாகும்.


வாருங்கள்! வாழ்வை வண்ணக் கோலமாக்கி வாழ்வாங்கு
வாழ்வோம்

.-- சுவாமி சிவயோகாநந்தாசின்மயா மிஷன், மதுரை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 30, 2020 11:38 am

வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் 3838410834 வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் 103459460 வாழ்க்கை ஒரு வண்ணக்கோலம் 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக