புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகை காஜல் அகர்வாலை சந்திக்கும் ஆசையில் ரூ.60 லட்சத்தை இழந்த ராமநாதபுரம் வாலிபர் - சினிமா தயாரிப்பாளர் கைது
Page 1 of 1 •
நடிகை காஜல் அகர்வாலை சந்திக்கும் ஆசையில் ரூ.60 லட்சத்தை இழந்த ராமநாதபுரம் வாலிபர் - சினிமா தயாரிப்பாளர் கைது
#1301513-
ராமநாதபுரம்,
நடிகை காஜல் அகர்வாலை சந்திப்பதற்காக ரூ.60 லட்சத்தை ராமநாதபுரம் வாலிபர் இழந்துள்ளார். இணையதளம் மூலம் ஆசை காட்டி மோசடி செய்ததுடன், மிரட்டலும் விடுத்த சினிமா தயாரிப்பாளர் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ராமநாதபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகனான 27 வயது வாலிபர், சில மாதங்களுக்கு முன்பு கம்ப்யூட்டரில் இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இணையதள முகவரிக்குள் சென்ற போது இடையில் சில ஆபாச படங்கள் வந்துள்ளன. அதனை அகற்ற முயன்றபோது மற்றொரு இணையதள பக்கம் திறந்துள்ளது.
அந்த இணையதளத்தில் நடிகைகளின் கவர்ச்சி படங்கள் இருந்ததுடன், யாராவது விருப்பப்பட்டால் அந்த நடிகைகளை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதை பார்த்ததும் அந்த தொழில் அதிபரின் மகன் அந்த பக்கத்திற்குள் சென்று தனது விவரங்களை பதிவு செய்ய தொடங்கி இருக்கிறார். தனது செல்போன் எண்ணை பதிவு செய்த அடுத்த நிமிடமே சில நடிகைகளின் படங்கள் தோன்றி, அவர்களில் யாரை சந்திக்க வேண்டும் என்ற தகவலை கேட்டுள்ளது.
நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க விரும்பிய அந்த வாலிபர், அந்த படத்தின் மீது ‘கிளிக்’ செய்துள்ளார். இதனை உறுதி செய்ய ரூ.50 ஆயிரம் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தகவல் வந்துள்ளது.
அதன்படி, அந்த வாலிபர் தனது வங்கி கணக்கு மூலம் பணத்தினை செலுத்தி உள்ளார். சற்றுநேரத்தில் அவரின் செல்போன் எண்ணுக்கு உறுதிசெய்யப்பட்ட எஸ்.எம்.எஸ். வந்தது.
இதன் மூலம் நடிகை காஜல் அகர்வாலை சந்தித்து விடலாம் என்றும், அவரை தன்னுடைய இல்லத்துக்கும் அழைத்து வரலாம் என்று அந்த வாலிபர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் இதுபற்றிய தகவலை அப்போது அவர் யாரிடமும் கூறவில்லை என தெரிகிறது.
இதற்கிடையே இணையதளத்தில் பதிவு செய்த தகவலைக் கொண்டு அவரிடம் ரூ.50 ஆயிரத்தை கறந்தவர்கள் மேலும் பணத்தை பறிக்க அந்த வாலிபர் யார், அவரது பின்னணி என்ன? என்பது குறித்து ரகசியமாக விசாரித்துள்ளனர். அந்த வாலிபர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதையும் உறுதி செய்துள்ளனர். எனவே அவரை ஏதாவது ஒரு வழியில் சிக்க வைத்து, அதன் மூலம் மிரட்டி தொடர்ந்து பணம் பறிக்கலாம் என்றும் திட்டமிட்டுள்ளனர்.
சில நாட்களில் மேலும் ஒரு வங்கி கணக்கில் பணம் செலுத்தினால் நடிகை காஜல் அகர்வாலை சொல்லும் இடத்திற்கு அழைத்து வந்து சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் அனுப்பி உள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் உஷாரான அந்த வாலிபர், இது ஏமாற்று வேலை என்று உணர்ந்து பணம் அனுப்ப முடியாது என மறுத்துள்ளார்.
அதற்கு பின்னர்தான் அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அடுத்த சிலநிமிடங்களில் அந்த வாலிபரின் செல்போன் எண்ணிற்கு அவரையும் சில பெண்கள் மற்றும் நடிகைகளை இணைத்து, மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களையும், வீடியோக்களையும் அனுப்பி உள்ளனர்.
உடனே அந்த வாலிபர் அந்த படங்களை அழித்து விடுமாறு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். தாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் அந்த ஆபாச புகைப்படங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பிவிடுவதுடன், சமூக வலைத்தளங்களிலும் பரவ விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
குடும்ப கவுரவத்தை கருத்தில் கொண்டு அந்த வாலிபர், அந்த மோசடி பேர்வழிகளின் வலையில் விழுந்துவிட்டார். வேறு வழியின்றி அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 3 தவணைகளாக ரூ.60 லட்சத்தை அனுப்பி உள்ளார்.
இந்த பணத்தை எடுத்துக்கொண்ட அவர்கள், அவர் ‘பொன்முட்டையிடும் வாத்து’ என்று நினைத்து தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால், நடந்ததை வெளியே சொல்ல முடியாமல் அந்த வாலிபர் தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளார்.
ஒரு கட்டத்தில் தற்கொலை என்ற விபரீத முடிவையும் எடுத்துள்ளார். பின்னர் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறினார்.
பாசமாக வளர்த்த மகனை காணாமல் அந்த தொழில் அதிபரும், குடும்பத்தினரும் பரிதவித்தனர். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் கடைசியில் போலீசாரின் உதவியை நாடினர்.
போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொல்கத்தாவில் வைத்து அந்த வாலிபரை மீட்டனர். அவரிடம் விசாரித்த பின்னர்தான், நடிகை குறித்து ஆசையால், இணையதளம் மூலம் ரூ.60 லட்சத்தை இழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
ஓம்பிரகாஷ் மீனா கூறியதாவது:-
தொழில் அதிபரின் மகனை காணவில்லை என்று புகார் வந்த பின்னர் அவரை தீவிரமாக தேடினோம். இந்த நிலையில் அந்த வாலிபர் தனது தந்தையை செல்போனில் அழைத்து, தன்னை தேடவேண்டாம் என்றும், தனக்கு வாழ பிடிக்காததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.
எனவே அந்த வாலிபரின் செல்போன் அழைப்பு வந்ததை வைத்து விசாரித்த போது அவர் கொல்கத்தாவில் தங்கி இருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து, வாலிபர் தங்கியிருந்த விடுதியில் அதிரடியாக நுழைந்து அவரை மீட்டு, அங்குள்ள போலீசார் எங்களிடம் ஒப்படைத்தனர். வாலிபரிடம் விசாரித்த பின்னர்தான், இணையதளம் மூலம் நடந்த மோசடி பற்றிய முழு விவரம் தெரிந்தது.
இதனை தொடர்ந்து அவர் பணம் செலுத்திய வங்கி கணக்கினை வைத்து விசாரித்தோம். அது, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பாவனாகோட்டை மணிகண்டன் என்பவருடையது என்று தெரிந்ததால், அவரிடம் விசாரித்தோம். அப்போது மணிகண்டன் கூறுகையில், “என்னுடைய நண்பர் கோபாலகிருஷ்ணன் என்ற சரவணக்குமார் (37), சினிமா தயாரித்து வருகிறார்.
படதயாரிப்புக்கு ஒருவர் உனது வங்கிக்கணக்கில் பணம் அனுப்புவார்.
அவர் பணம் அனுப்பும் போது எல்லாம் என்னிடம் எடுத்துக் கொடுக்க
வேண்டும் என கூறினார்.
அவர் சொன்னபடி பணம் வந்தது. நானும் சரவணக்குமாரிடம் எடுத்துக்கொடுத்தேன்” என்று தெரிவித்தார்.
அவர் அளித்த தகவலின் படி, சென்னை அசோக் நகர் பகுதியில் தங்கியிருந்த சரவணக்குமாரை மடக்கி பிடித்தோம். அவர் ராமநாதபுரம் தொழில் அதிபர் மகனை மிரட்டி பணம் பறித்ததும், மிரட்டி வந்ததும் தெரியவந்தது.
எனவே சரவணக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தோம். இந்த சம்பவத்தில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சரவணக்குமார் இதுபோன்று பல நபர்களிடம்
மோசடி செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தொழில்
அதிபர் மகனிடம் ரூ.60 லட்சம் பறித்து இருந்தாலும், சரவணகுமாரிடம்
இருந்து ரூ.9 லட்சத்தை மட்டுமே மீட்க முடிந்தது. மற்ற தொகையை
அவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் செலவழித்துவிட்டதாக கூறியுள்ளார்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா கூறினார்.
நடிகையை சந்திக்கும் ஆசையால் அவசரப்பட்டு, சில நொடிகளில் இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்ததால் ஏற்பட்ட
விளைவு, ஒரு வாலிபரை தற்கொலை முடிவு எடுக்கும் நிலைக்கு
தள்ளியதுடன், பணம் பறிபோகவும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.
போலீசார் சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கையால் அவர்
மீட்கப்பட்டுள்ளார். எனவே சினிமா, இணையதளம் மீது அதீத
மோகம் கொண்டவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம் ஆகும்.
-
தினத்தந்தி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|