5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» லாஸ்லியாவிற்கு கிடைத்த உயரிய விருது ….!by ayyasamy ram Today at 11:12 am
» வெங்காய ஜிமிக்கி கம்மலை மனைவிக்கு பரிசாக அளித்த நடிகர்!
by ayyasamy ram Today at 11:11 am
» பெரிய மனசு
by ayyasamy ram Today at 11:10 am
» பொறுமைதான் உண்மையான திறமை..!
by ayyasamy ram Today at 11:08 am
» சான்றாண்மை
by ayyasamy ram Today at 11:07 am
» தமிழ்ச் செம்மல்! – பாராட்டுப் பாமாலை!
by ayyasamy ram Today at 11:06 am
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
by ayyasamy ram Today at 7:46 am
» பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி
by ayyasamy ram Today at 7:44 am
» சென்னையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்
by ayyasamy ram Today at 7:41 am
» இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:38 am
» சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா
by ayyasamy ram Today at 7:35 am
» வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe
by velang Today at 7:31 am
» குருவிக் கூட்டுக்கும், விதிகளுண்டு!
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» பெரியவா சரணம் !
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm
» பிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» வயிறு வாழ்த்தும்!
by krishnaamma Yesterday at 2:57 pm
» அந்திம கிரியை!
by krishnaamma Yesterday at 2:55 pm
» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» "வடநாட்டு மார்வாடிக்கு மகாபெரியவா இட்ட கட்டளை!"
by krishnaamma Yesterday at 2:29 pm
» திருமாலிரும் சோலை அழகர் !
by krishnaamma Yesterday at 2:17 pm
» "பேயனும், விளக்கெண்ணையும்"
by krishnaamma Yesterday at 2:04 pm
» பகீரதப் பிரயத்தனம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» மார்கழி மாதத்தின் மகத்துவம் !
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்ததே..!
by krishnaamma Yesterday at 1:23 pm
» 2 வருடங்கள் நிலாவையே பார்க்காமல் மறைந்து வாழ்ந்த பெண்மணி!
by krishnaamma Yesterday at 1:21 pm
» தெரிந்து கொள்வோம் {ஆன்மீகம்}
by krishnaamma Yesterday at 12:55 pm
» `அந்த விருதாவது ஞாபகமிருக்கிறதா சார்?’ -அமைச்சர் ஜெயக்குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» விஷ்ணு தீபம் - திருவேங்கடத்தில் மற்றும் ஸ்ரீரங்கத்தில் :)
by krishnaamma Yesterday at 12:50 pm
» ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் மதுரை இளம்பெண்: இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு விவசாயமும் பார்க்கிறார்
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» காசி விஸ்வநாதர் கோவிலின் கோடி தீபம்... photos
by krishnaamma Yesterday at 12:33 pm
» முக்தி தரும் காசி
by krishnaamma Yesterday at 12:20 pm
» ராதா பொருள் என்ன?
by krishnaamma Yesterday at 12:14 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» கிறிஸ்துமஸ் போனஸ் ரூ.70 கோடி! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்
by krishnaamma Yesterday at 11:38 am
» மார்கழி மாத ஆன்மீக தகவல்கள்
by krishnaamma Yesterday at 11:36 am
» திருவாதிரைக் களி
by ayyasamy ram Yesterday at 11:10 am
» சென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்: முழுப் பட்டியல்!
by krishnaamma Yesterday at 11:08 am
» பஞ்சாப்பைக் கலக்கும் சூப்!
by krishnaamma Yesterday at 10:39 am
» கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு!
by krishnaamma Yesterday at 10:38 am
» நேச நெஞ்சம்- சிறுகதை
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சினிதுளிகள்- குங்குமம்
by ayyasamy ram Yesterday at 10:28 am
» ஏழு விதமான ஆச்சரியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:20 am
» சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
by ayyasamy ram Yesterday at 9:15 am
» தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ஆறுமுகசாமி கமிஷன் என்ன ஆயிற்று ?
by ayyasamy ram Yesterday at 8:53 am
» நெட்டிசன் நோட்ஸ்: எனை நோக்கி பாயும் தோட்டா -அழகு
by ayyasamy ram Yesterday at 8:47 am
» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
by ayyasamy ram Yesterday at 8:37 am
» பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு 21 நாளில் தூக்கு தண்டனை: ஆந்திர அரசு சட்ட மசோதா
by ayyasamy ram Yesterday at 6:01 am
» தலைவி, குயினுக்குத் தடையில்லை: ஜெ. தீபாவின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 5:57 am
» பார்வையாளர்களிடம் தமிழில் பேசும் கவர்னர்
by ayyasamy ram Yesterday at 5:36 am
Admins Online
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!

இரண்டு நாட்களாக இந்த திருவிழாவின் வண்ணமயமான படங்கள் முகநூலில் பரவி அதில் காணப்படும் "நாடராசர் வழிபாடும் லிங்கவழிபாடும் நம் நெஞ்சங்களை நிறைத்து கண்களில் வழிய வைக்கிறது!!"
ஆஹா!! ஆஹா!! இவர் எங்கள் சாமி எங்கள் கூத்தர் இவருக்கு வெளிநாட்டு மக்களும் வேற்று கலாச்சாரத்து காரர்களும் விழா எடுக்கிறார்களா?? என்று நினைத்து நினைத்து மனம் ஏங்கி விம்முகிறது
"என்னே எம்பெருமானின் ஆட்கொள்ளும் கருணைத்திறன் இருந்தவாறு!?" என்று மனம் "ஆராவமுதே ஐயாறனே!! என்றென்றே அரற்றி நைகின்றது!!" ????????????
எங்கள் கச்சியேகம்பனுக்கு கடல்கடந்தும் விழா!!
எங்கள் வீதிவிடங்கனுக்கு வியட்நாம் அருகே விழா!!
எங்கள் தில்லை கூத்தருக்கு தேசங்கள் கடந்தும் தித்திக்க தித்திக்க விழா!! என்று எண்ணும் பொழுது கண்கள் நிறைந்து வழிவதை தடுக்க இயலவில்லை
அதுவும் திருவிழாவை சாதாரணமாகவா கொண்டாடுகிறார்கள்!?
தேசம் விளக்கும் தென்திசையாம் தமிழகத்தில் சிவனாருக்கு விழா எடுக்கும் பெருமாலயங்களில் வாழைமரம் இல்லை தோரணம் இல்லை, பேன்ட் சட்டை போட்டு திருப்பாதம் சுமக்கிறார்கள், ஆரூரில் தேரோட வீதியில்லை, ஆனைக்காவில் தெருவடச்சான் சப்பரம் கோணையாக நின்று பல்லிளிக்கிறது, கச்சியேகம்பத்தில் திருவிழாவுக்கு சாமியே புதியவரா!? பழையவரா!? நீதிமன்ற படிதாண்டி வருவாரா வரமட்டாரா?? என்ற விவாதம்!! பல ஆலயங்களில் திருவிழாக்கள் நடத்த ஆட்களே இல்லை, ஆட்கள் இழுக்க வேண்டிய தேர்களை டிராக்டர்கள் இழுக்கின்றன, விழாக்களுக்கு வரும் அடியார்களுக்கு மரியாதை இல்லை
என்று எங்கு போனாலும் வேதனை வேதனை என்று இருக்கும் பொழுது
"இறைவனுக்கு தாய்லாந்து காரர்கள் வண்ண வண்ணமாக அலங்கரித்து கொண்டு பாரம்பரியம் மாறாமல் விழா எடுப்பது கண்டு அடுத்த பிறவியை அந்த நாட்டில் பிறக்க வைத்து விடுங்கள் சுவாமி னு நினைக்க வைத்து விடுகிறது"
இந்த விழாவிற்கு
"வானவில் திருவிழா" என்று பெயர் வைத்துள்ளார்கள்
அங்குள்ஆலயம் சிவபரம்பொருளுக்கு சமர்பிக்கப் பெற்றுள்ளது அந்த ஆலயத்திற்கு "கெமர் கோயில் என்பது பெயராம்"
அங்கு அடுத்த முக்கிய மூர்த்தியாக மகாவிஷ்ணு இருக்கிறார் "எங்கள் ராஜா சிவன்" என்று ஒரு தாய்லாந்து பெண் இந்த விழா பற்றி பதிவு போட்டிருக்கிறார்.
நன்றி வாட்சப் !
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
Re: பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!

நேற்று (07/04/19/) வந்த பதிவில் "தாய்லாந்து அந்தணர் (உற்சவ ஆச்சார்யர்) கூத்தபிரானுக்கு திருமஞ்சனம் செய்வித்து நிவேதனம் செய்து மணியடித்து ஏகதீபம் காட்டி கெமர் மொழியில் இறைவனுக்கு பாடல் விண்ணப்பம் செய்து தேங்காய் உடைத்து உற்சவம் செய்யும் விடியோவும் விழாவில் இறைவனுக்கு பரிவாரங்களாக
குடை, சாமரம், பரிவட்டம், ஆலவட்டம் முதலியவை தாங்குபவர்கள், ஆடல் பாடல் அணங்குகள், இசைக்கருவிகள் இசைப்போர் காவல் புரிவோர் என்ற அனைவரும் தங்கநகைகள் பட்டாடைகள் மிளிர தோன்றும் வண்ணமயமான படங்களும் வெளியாகி இருந்தது
இன்றைக்கு (07/04/19) வெளியான பதிவில் இறைவனது திருமேனியை ஸ்ரீபாதம் தாங்குவோர் தாங்கி வர, முன்னதாக உற்சவ ஆச்சார்யார் சங்குமுழங்கி நடக்கிறார்
விதவிதமான ஆடை அணிகலன்களுடன ஆண்களும் பெண்களும் ஆடுகிறார்கள் இராஜ உபசார மாரியாதைகளுடன் இறைவன் வீதியுலா வருகிறார் (தமிழ் நாட்டில் கூட இப்படி ஒரு காட்சி கிடைக்கவில்லை இன்றைக்கு)
தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய பிரமுகர் (அரசர் என்று கருதுகிறோம்) அவர் ஊர்வலமாக வந்து "இறைவன் சிவலிங்க மூர்த்தமாக எழுந்தருளியிருக்கும் இடத்திற்கு வந்து அத்திருமேனிக்கு பால் மஞ்சனம் ஆட்டி வழிபாடு பண்ணுகிறார்"
தொடர்ந்து அரசிபோல் ஒருவர் பல்லக்கில் ஊர்வலமாக வந்து, இறைவனை வழிபாடு செய்கிறார்
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
Re: பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!

நம்ம ஊர் திருவிழாக்கள் போல கடைகள் எல்லாம் போட்டிருக்கிறார்கள் பார்க்கவே ஆனந்தமாக இருக்கும் இவ்விழாவினை பற்றி இணையத்தில் தேடினோம்
இவ்விழா "சங்கோரன் நாள்" என்ற நாளின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றதாம் "தோராயமாக ஏப்ரல் 14ஆம் தேதி இவர்களுக்கான புத்தாண்டு தொடங்குகின்றதாம் (நம்மைதான் இங்குள்ளவர்கள் குழப்புகிறார்கள் அவர்கள் ரொம்ப தெளிவு), இந்த "சங்கோரன் தினம்" என்பது சமஸ்கிருதத்தின் "சங்கராந்தி" என்ற சொல்லில் இருந்து பிறந்ததாக கருதுகிறார்களாம்
முதலில் சிவபரம்பொருள் எழுந்தருளி விழாக்காணுகின்றார், பின்னர் விஷ்ணுமூர்த்தி எழுந்தருளி விழா காணுகின்றார், "சிவபரம்பொருளின் திருவிழாவில் "ட்ரியம்பாவா" என்னும் தமிழ் திருவெம்பாவையையும் விஷ்ணுமூர்த்தியின் விழாவின் போது "ட்ரிபாவா" என்ற தமிழ் திருப்பாவையும் பத்து பத்து நாட்கள் ஓதி மகிழ்வார்களாம் அந்த திருவுடை பெருமக்கள்"
சிவபரம்பொருளுக்கு எடுக்கப்படும் பத்து நாள் திருவிழாவில் பத்து நாட்களும் இறைவனது திருமேனிக்கு பதில் பத்து நாட்களும் பத்து திக்குகளை காவல் செய்யும் "ஈசானன் முதல் குபேரன்" வரையிலான தேவாதிதேவர்களுக்கு விழா எடுத்து உற்சவம் செய்கிறார்கள்
அதிலும் அந்த தேவர்களுக்கு பதில் அவரவர்களின் வாகனங்களே உற்சவம் வருகின்றது, பத்தாம் நாளில் "பத்து திக்கு பாலகர்களின் வாகனங்களான காளை, அன்னம், மகரம், குதிரை, பூதம், எருமை உள்ளிட்டவைகள் புடை சூழ "ஸ்ரீமத் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக உலகாளும் சிவபரம்பொருள் எழுந்தருளி உற்சவம் காண்கின்றார்" இந்த உற்சவம்தான் இப்பொழுது இணையத்தில் வெளியாகி நம் நெஞ்சம் நெகிழ வைக்கிறது.
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
Re: பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!

இங்குள்ள அந்தணர்கள் பிறப்புரிமையின் மூலமன்றி பயிற்சியின் மூலமாக அந்தணர்களாக ஆகின்றனராம், ஆதிகாலத்தில் தமிழகத்தில் இருந்து இங்கு ஆச்சார்யராக வந்த அந்தணரின் வழியில் வந்த இராஜகுரு புதிய அந்தணர்களுக்கு தீட்சை செய்து பயிற்சி செய்கின்றார்
அந்தணர் பயிற்சி பெற்றவர்கள் எல்லோரும் சிவபூசை செய்து விட முடியாதாம், சிவபூசை செய்வதற்கு என்று தனிப்பட்ட நியமானுட்டானங்கள் உள்ளதாம் அதனை கடைபிடித்து ஒழுகுபவரை தேர்ந்து எடுத்தே ஆச்சார்யராக நியமிப்பார்களாம்
இப்படி ஒரு ஆச்சார்யரே "சகல ஆடை ஆபரணங்களுடன் பஞ்ச வஸ்திரம் தரித்து நடராஜப் பெருமானுக்கு உற்சவம் செய்வதனை காண்கின்றோம்"
விழாவில் கலந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் இராஜகம்பிரமாய் அழகாய் பக்தியுடன் இருக்கிறார்கள்
பழங்காலங்களில் "நம் அரசர்கள் முன்னின்று நிகழ்த்திய நம் ஆலயத் திருவிழாக்களும் இப்படித்தான் இருந்திருக்கும்" அப்போதெல்லாம் காவிரி தடையில்லாமல் ஓடியது, விவசாயம் மூன்று போகம் நடந்தது, நோய் நொடிகள் இல்லை, பேரழிவுகள் இல்லை அப்படி இருந்தாலும் மக்களை இறைவனும் அரசனும் காத்தார்கள்
அரசாட்சியை ஒழித்து மக்களாட்சி என்ற பெயரில் ஆளுக்கு ஒரு கட்சி தொடங்கி கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் வந்தது
பண்பாடு நாகரிகம் வழிபாடு எல்லாம் கெட்டு குட்டிச்சுவராய் போய் காவிரிக்கு கர்நாடகத்திடம் கையேந்துகிறோம்,
எங்கு பாத்தாலும் கொலை கொள்ளை வழிப்பறி கற்பழிப்பு என்று ஏதோதோ நிகழ்கிறது,
இதனைத்தான் "ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்று உதைத்தான் திருக் கோயில்கள் ஆனவை சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே" என்றும்
"முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும் கன்னங் களவு மிகுத்திடுங் காசினி என்னரு நந்தி எடுத்துரைத்தானே"
என்றும் பாடுகின்றார் திருமூலநாயனார்.
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
Re: பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!

தமிழகத்தை ஆண்ட பல்லவ, பாண்டிய, சேர, சோழ மன்னர்களில் "சோழ மன்னவர்கள் மட்டுமே வழிவழிச் சைவர்கள் அவர்கள் தோன்றியது முதல் வீழ்ச்சியுறும் வரை சிவவழிபாடு செய்து சிவபரத்துவம் பேணி சிவாலய பூசைகள் விழாக்களை முட்டாமல் பார்த்து கொண்டார்கள், சோழர்கள்தான் கடல்கடந்தும் தெற்காசியாவையே கட்டியாண்டார்கள்"
ஏனைய முக்குடியினரும் சமணம், பௌத்தங்களை மாறி மாறி பின்பற்றியவர்கள்தான்
"கடவுள் இல்லை என்று கிளம்பினாலே அழிவு நிச்சயம்தான், ஆனால் அதனை சொல்லி கொண்டுதான் தெய்வ தமிழகத்தை இன்னலில் இருந்து நீக்கப் போவதாக பலர் புறப்படுகிறார்கள்"
தமிழகத்திற்கு இன்றைய அவல நிலையில் இருந்து மீட்சி அடையச் செய்வது "சிவ வழிபாடும், திருவிழாக்கள் முறைப்படி நடப்பதும், பரார்த்த பூசைகள் பங்கம் இன்றி நடப்பதாலும்தான்" என்பதனை எப்போது மக்களும் ஆள்பவர்களும் உணர்கிறார்களோ அன்றுதான் அனைத்தும் சுபமாகும்.
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 59906
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12105
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|